Lanka1st

Lanka1st News

சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தராக பதவியுயர்வு பெற்றார் ஏ.எல். தௌபீக்(எம்.எஸ்.எம்.ஸாகிர்)அம்பாறை மாவட்ட கலாசார ஒருங்கிணைப்பு ...
04/06/2026

சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தராக பதவியுயர்வு பெற்றார் ஏ.எல். தௌபீக்

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

அம்பாறை மாவட்ட கலாசார ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் ஏ.எல்.தௌபீக் அவர்கள் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின்
"சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தராக" (MN - 7- SUPRA GRADE) 2023.01.01 முதல் அமுலுக்கு வரும் வகையில் கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவினால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவருக்கான பதவியுயர்வு நியமனக் கடிதம் 2026.06.01 ஆம் திகதி கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் வைத்து கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகரவினால் வழங்கி வைக்கப்பட்டது. ஆளுநரின் செயலாளர் பீ.வாகீசன், கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் கே.குணநாதன் மற்றும் பண்பாட்டலுவல்கள் திணைக்கள மாகாணப் பணிப்பாளர் திருமதி மேனகா புவிக்குமார் ஆகியோர் அருகில் காணப்படுகின்றனர்.

இப்பதவியுயர்வானது கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் கடமையாற்றும் சுமார் 45 கலாசார உத்தியோகத்தர்களில் விண்ணப்பிக்கத் தகுதியான கலாசார உத்தியோகத்தர்கள் தரம் I ஐ சேர்ந்தவர்கள் மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவுவினால் கோரப்பட்ட விண்ணப்பங்களுக்கு அமைய விண்ணப்பித்து அதற்கமைவாக நடாத்தப்பட்ட நேர்முகப்பரீட்சை மூலம் மாகாணத்தில் இருவர் மாத்திரமே நியமனம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. அதில் ஒருவர்தான் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த ஏ.எல்.தௌபீக். மற்றையவர் திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஐ.ஆர்.ஜீ. நிமல்சிறி பண்டார என்பது குறிப்பிடத்தக்கது.

பேராதனைப் பல்கலைக்கழக கலைப் பட்டதாரியான இவர், அரச சேவையில் நிகழ்ச்சித்திட்ட உதவியாளராக, ஆசிரியராக மற்றும் அதிபராக எட்டு வருடங்கள் சேவையாற்றிய நிலையில், போட்டிப் பரீட்சை மூலம் கலாசார உத்தியோகத்தராக நியமனம் பெற்று 2000 ஆம் ஆண்டு முதல் அம்பாறை மாவட்டத்தின் இறக்காமம், அட்டாளைச்சேனை மற்றும் அக்கரைப்பற்று பிரதேச செயலகங்களில் கடமையாற்றிய நிலையில், 2009 இல் இருந்து அம்பாறை மாவட்ட கலாசார ஒருங்கிணைப்பு உத்தியோகத்தராக நியமனம் பெற்று அம்பாறை மாவட்ட செயலகம் மற்றும் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட காரியாலயங்களில் 17 வருடங்கள் மாவட்ட மட்ட கலாசார வேலைத்திட்டங்களை
எல்லோரது மனங்களையும் கவரும் வண்ணம் இன, மத வேறுபாடின்றி மேற்கொண்டு வந்த நிலையில், அவருக்கான இப்பதவியுயர்வு கிடைத்திருப்பது மாகாண மற்றும் மாவட்ட மூவின கலைஞர்களது மனங்களிலும் மட்டில்லா மகிழ்வைத் தருகின்றது.

கடந்த இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக கலாசாரப் பணிகளை மிகவும் சிறப்பாக செய்துவருகின்ற இவர், கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் பல பணிப்பாளர்களுடன் கடமையாற்றிய அனுபவங்களையும் ஆற்றல்களையும் பெற்றுள்ளார்.

இவரிடம் காணப்படும் பல திறமைகளின் பலனாகவும், மேலும் இவரின் அர்ப்பணிப்பு சேவைக்காகவும், இப்பதவி உயர்வுக்கான தரப்புள்ளிகள் தெரிவில் முதல் இடத்திற்கு தெரிவானார் என்பதனை தகவலறிந்த கலைஞர்கள் வட்டங்களில் பரவலாக சிலாகித்து பேசப்படுகிறது. அத்துடன் அம்பாறை மாவட்டத்தின் இன மத வேறுபாடின்றிய கலாசார விடயங்களை மேலோங்க இவர் ஆற்றி வருகின்ற பங்களிப்புகளுக்காக மூவின அனைத்து கலைஞர்களும் இவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

இந்த புதிய பொறுப்பிலும் தௌபீக் அவர்கள் மேலும் சிறப்பாகப் பணியாற்றி, கிழக்கு மாகாணத்தின் கலாசார மேம்பாட்டிற்கு மேலும் தனது பங்களிப்பினை வழங்குவார் என்பதுடன் அவரது எதிர்காலப் பணி சிறக்கவும், உடல் ஆரோக்கியத்துடனும் மன நிம்மதியுடனும் நீண்ட காலம் பணியாற்ற வேண்டுமெனவும் கலை உலகத்தினர் இவருக்கு
வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

இன்றைய வானிலை 2026.06.04தென்மேல் பருவப் பெயர்ச்சி வலுவடைந்து காணப்படுவதன் காரணமாக நாட்டின் தென்மேற்குப் பிராந்தியத்தில் ...
04/06/2026

இன்றைய வானிலை
2026.06.04

தென்மேல் பருவப் பெயர்ச்சி வலுவடைந்து காணப்படுவதன் காரணமாக நாட்டின் தென்மேற்குப் பிராந்தியத்தில் அடுத்துவரும் சில தினங்களுக்கு அதிகரித்த மழைவீழ்ச்சி காணப்படும்.

இதன் அடிப்படையில்
சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை , கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும்.

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 mm வரையிலான பலத்த மழை பெய்யக்கூடும்.

மத்திய மலைப் பிராந்தியத்தின் மேற்கு சரிவுகளிலும் , வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அத்துடன் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு சுமார் 40 - 50 km வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக் கூடும். இதேவேளை நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 - 40 km வேகத்தில் அடிக்கடி ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும்.

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

கடல் பிராந்தியங்களில்
**************************

புத்தளம் தொடக்கம் கொழும்பு, காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 - 40 km வேகத்தில் தென் மேற்குத் திசையில் இருந்து காற்று வீசும்.

முல்லைத்தீவு தொடக்கம் காங்கேசன்துறை, மன்னார், புத்தளம், கொழும்பு, ‌காலி ஹம்பாந்தோட்டை ஊடாக ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 - 60 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பாகக் காணப்படும்.

ஆனால் ‌ இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.

சிரேஸ்ட வானிலை அதிகாரியும் ஊடகவியலாளருமான
மொஹமட் சாலிஹீன்.

அம்பாறையில் அரசின் "ஆயிரம் கிராமங்களில் ஆயிரம் வேலைத்திட்டங்கள்"  ஆரம்பித்து வைப்பு(எம்.எஸ்.எம்.ஸாகிர்)அரசாங்கத்தின் "ஆய...
03/06/2026

அம்பாறையில் அரசின் "ஆயிரம் கிராமங்களில் ஆயிரம் வேலைத்திட்டங்கள்" ஆரம்பித்து வைப்பு

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

அரசாங்கத்தின் "ஆயிரம் கிராமங்களில் ஆயிரம் வேலைத்திட்டங்கள்" என்ற பிரஜாசக்தி வேலைத்திட்டங்கள் அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேச செயலகங்களில் நேற்று (02) செவ்வாய்க்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அபிவிருத்தியில் வரலாற்றுச் சாதனையாக ஒரே நாளில் 46.8 கோடி (468M) ரூபா பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்படது.

அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசத்தின் வரலாற்றுச் சாதனை மிக்க சுயதொழில், கூட்டு வியாபாரமுயற்சி மற்றும் தொழில் வாய்ப்பு அபிவிருத்திக்காக அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசத்திலுள்ள அனைத்து ஊர்களிலுள்ள பயனாளிகளுக்கும் 46.8 கோடி (468M) ரூபா பெறுமதியான மூலதனப் பொருட்கள், பொறிகள் மற்றும் இயந்திரங்களுக்கான சான்றிதழ்கள் என்பன அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை அரசியலமைப்பு பேரவை உறுப்பினரும் அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசங்களின் அபிவிருத்தி குழுக்களின் தலைவருமான அபூவக்கர் ஆதம்பாவாவினால் கீழ் குறிப்பிடப்படும் ஊர்களில் வழங்கி வைக்கப்பட்டது.

கல்முனை - 3.6கோடி (36M), கல்முனை வடக்கு - 3.4 கோடி (34M), நாவிதன்வெளி - 3.2 கோடி (32M), சாய்ந்தமருது - 2.1 கோடி (21M), காரைதீவு - 2.1 கோடி ( 21M), சம்மாந்துறை - 7.1 கோடி (71M), நிந்தவூர் - 2.9 கோடி ( 29M), அட்டாளைச்சேனை 4.5 கோடி ( 45M), அக்கறைப்பற்று - 3.7 கோடி (37M), ஆலையடி வேம்பு - 3 கோடி (30M), இறக்காமம் - 2.7 கோடி (27M), திருக்கோவில் - 3.9 கோடி (39M), பொத்துவில் - 4.6 கோடி (46M) என ஒரே நாளில் 46.8 கோடி (468M) ரூபா வழங்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க அனைத்து நிகழ்வுகளிலும் பாராளுமன்ற உறுப்பினரோடு பிரதேச செயலாளர்கள், பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்புச் செயலாளர், தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள், தேசிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தர்கள், பிரஜா சக்தி தவிசாளர்கள், அரச உத்தியோகத்தர்கள் மற்றும் பயனாளிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இவ்வாறானதொரு பெரும் தொகை நிதி ஒதுக்கீடு சுயதொழில் கூட்டு வியாபார முயற்சி மற்றும் தொழில் வாய்ப்புக்காக அம்பாறை கரையோர மாவட்டத்தில் நடைபெற்றது அபிவிருத்தியில் வரலாற்று சாதனைக்கான ஒரு நிகழ்வாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹெரோயின் மற்றும் போதை மாத்திரைகளை பாடசாலை பல்கலைக்கழக மாணவர்களுக்கு விநியோகித்த இருவர்  கைதுகைது செய்ய சென்ற பொலிஸாரும் ...
03/06/2026

ஹெரோயின் மற்றும் போதை மாத்திரைகளை பாடசாலை பல்கலைக்கழக மாணவர்களுக்கு விநியோகித்த இருவர் கைது

கைது செய்ய சென்ற பொலிஸாரும் காயம்-சம்மாந்துறையில் சம்பவம்

பாறுக் ஷிஹான்-

நீதிமன்றத்தினால் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டிருந்த பல குற்றச்சாட்டுடன் தொடர்புடைய சந்தேக நபர் தலைமறைவாகி இருந்த நிலையில் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் சந்தேக நபராக கைது செய்யப்பட்டதுடன் மற்றுமொருவரும் போதை மாத்திரைகளுடன் சம்மாந்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.

இச்சம்பவமானது செவ்வாய்க்கிழமை(3) இரவு அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரு வேறு இடங்களில் இடம்பெற்றுள்ளதுடன் போதைப் பொருளுடன் நடமாடிய 2 சந்தேக நபர்கள் இதன் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்மாந்துறை பொலிஸ் நிலைய ஊழல் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய குறித்த சோதனை மேற்கொள்ளப்பட்டதுடன் நீதிமன்றத்தினால் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டிருந்த சந்தேக நபர் தலைமறைவாகி இருந்த நிலையில் ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த நிலையில் பொலிஸார் தமது உயிரை பணயம் வைத்து அச்சந்தேக நபரை கைது செய்திருந்தனர்.குறித்த 36 வயதுடைய சந்தேக நபரை கைது செய்ய சென்ற நிலையில் சந்தேக நபர் பொலிஸாரை தாக்க முற்பட்டதுடன் பொலிஸாரின் பிடியில் இருந்து தப்பி சென்றிருந்தார்.பின்னர் நீண்ட தேடுதலின் மீண்டும் அச்சந்தேக நபர் கைதானார்.இதன்போது இச்சம்பவத்தில் சம்மாந்துறை பொலிஸ் நிலைய ஊழல் ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி என்.றிபாய்டீன் இடது காலில் காயமடைந்ததுடன் மற்றுமொரு பொலிஸ் உத்தியோகத்தரும் காயமடைந்திருந்தார் என எமது செய்தியாளர் பாறுக் ஷிஹான் தெரிவித்தார்.


மேலும் நீண்ட காலமாக பாடசாலை மாணவர்கள் பல்கலைக்கழக மாணவர்களுக்கு போதை மாத்திரைகளை சூட்சுமமாக விநியோகத்து வந்த மற்றுமொரு 25 வயதுடைய சந்தேக நபரை பொலிஸார் அன்றைய தினம் இரவு கைது செய்துள்ளனர்.

அத்துடன் கைதான குறித்த 2 சந்தேக நபர்களையும் சட்ட நடவடிக்கைக்காக பொலிஸார் சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்த கைது நடவடிக்கையானது மேலும் குறித்த சோதனை நடவடிக்கையானது கிழக்குப் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜெயசுந்தரவின் பணிப்பரைக்கமைய அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்லவின் உத்தரவிற்கமைய அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராய்ச்சி வழிநடத்திலில் கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் இப்னு அசார் நெறிப்படுத்தலில் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என். நிசாந்த பிரதீப் குமாரவின் ஆலோசனைக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் பொலிஸ் நிலைய ஊழல் ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி என்.றிபாய்டீன் தலைமையிலான பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

03/06/2026
இன்றைய வானிலை 2026.06.02நாட்டின் தென்மேற்குப் பிராந்தியத்தில் இன்று மாலை முதல் மழையுடனான வானிலை அதிகரித்துக் காணப்படும்....
02/06/2026

இன்றைய வானிலை
2026.06.02

நாட்டின் தென்மேற்குப் பிராந்தியத்தில் இன்று மாலை முதல் மழையுடனான வானிலை அதிகரித்துக் காணப்படும்.

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை , கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும். இப் பிராந்தியங்களின் சில இடங்களில் 75 mm இலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.

ஊவா மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களிலும் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.

மத்திய மலைப் பிராந்தியத்தின் மேற்கு சரிவுகளிலும் , வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை மாவட்டத்திலும் மணித்தியாலத்திற்கு சுமார் 30 - 40 km வேகத்தில் அடிக்கடி ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும்.

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

கடல் பிராந்தியங்களில்
**************************

புத்தளம் தொடக்கம் கொழும்பு, காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 - 40 km வேகத்தில் தென் மேற்குத் திசையில் இருந்து காற்று வீசும்.

காங்கேசன்துறை தொடக்கம் மன்னார் ஊடாக சிலாபம் வரையான அத்துடன் ‌காலி தொடக்கம் ஹம்பாந்தோட்டை ஊடாக ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 - 60 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பாகக் காணப்படும்.

நாட்டைச் சூழ உள்ள ஏனைய பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 km இலும் கூடிய வேகத்தில் இடைக்கிடையே காற்று அதிகரித்து வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

ஆனால் ‌ இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.

சிரேஸ்ட வானிலை அதிகாரியும் ஊடகவியலாளருமான
மொஹமட் சாலிஹீன்.

அபூபக்கர் ஆதம்பாவா எம்.பி. யினால் கல்முனை (கல்முனைக்குடி) மண்ணில் தூக்கமில்லாது தொடரும் மக்கள் பணி: கடந்த ஒன்றரை வருட கா...
01/06/2026

அபூபக்கர் ஆதம்பாவா எம்.பி. யினால் கல்முனை (கல்முனைக்குடி) மண்ணில் தூக்கமில்லாது தொடரும் மக்கள் பணி: கடந்த ஒன்றரை வருட கால சாதனைப் பயணம்

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

கல்முனைத் தொகுதியின், குறிப்பாக கல்முனைக்குடி பிரதேச மக்களின் நீண்டகாலத் தேவைகளை இனங்கண்டு, கடந்த ஒன்றரை வருட குறுகிய காலப்பகுதியில் பல மில்லியன் ரூபாய் செலவில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அபிவிருத்திப்பணிகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளதென பாராளுமன்ற உறுப்பினர் ஏ. ஆதம்பாவா வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மக்களின் சுகாதாரம், கல்வி, உட்கட்டமைப்பு, வாழ்வாதாரம் மற்றும் விளையாட்டுத்துறை என அனைத்துப் பிரிவுகளையும் உள்ளடக்கிய திட்டங்களின் தொகுப்பு தொடர்பாக வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கல்முனையின்
சுகாதாரத்துறைப் புரட்சி

அரச மருந்தக கூட்டுத்தாபன கிளை (SPC); கல்முனை பிரதேச மக்களின் மிக முக்கிய தேவையாகக் காணப்பட்ட அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் புதிய கிளை கொண்டுவரப்பட்டுள்ளது.

அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை; கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் நீண்டகாலமாகத் தடைப்பட்டிருந்த 1120மில்லியன் நிதிப் பங்களிப்பு, பாராளுமன்ற உறுப்பினரின் தீவிர முயற்சியால் மீண்டும் வைத்தியசாலைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

முன்னோடி வீதிப் புனரமைப்புகள் மற்றும் வடிகான் அமைப்புகள்

சாஹிராக் கல்லூரி வீதி,
34 மில்லியன் ரூபாய் பெரும் செலவில் நிலக்கீழ் வடிகான் (Underground Drainage) அமைக்கப்பட்டு, காபட் (Carpet) இட்டு முழுமையாகப் புனரமைக்கப்பட்டுள்ளது.

பள்ளி வீதி
9.5 மில்லியன் ரூபாய் செலவில் காபட் இடப்பட்டு புனரமைக்கப்பட்டுள்ளது.

ஆர்.கே.எம். வீதி (R.K.M Road) மக்களின் போக்குவரத்து வசதிக்காகக் காபட் இடப்பட்டு நவீனமயமாக்கப்பட்டுள்ளது.

யாசீன் ஜி.எஸ். வீதி
2 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைப்புப் பணிகள் செய்யப்பட்டுள்ளன.

வீட்டுத்திட்டம் மற்றும் வாழ்வாதார உதவி

ஒரு கிராம சேவகர் பிரிவுக்கு ஒரு வீடு; தலா 1 மில்லியன் ரூபாய் பெறுமதியான 20 புதிய வீடுகள் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

பகுதியளவு சேதமடைந்த வீடுகளைப் புனரமைப்பதற்காக
1.85 மில்லியன் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.

கட்டார் சேரிட்டி (Qatar Charity) இல்லம்

4 மில்லியன் ரூபாய் செலவில் வீட்டுத்திட்டப் பணிகள்

இஸ்லாமாபாத் சுனாமி வீட்டுத்திட்டம்; நீண்டகாலப் பிரச்சினையாக இருந்த கழிவு முகாமைத்துவப் (Waste Management) பிரச்சினைக்கு முறையான தீர்வு காணப்பட்டுள்ளது.

இயற்கைப் பேரிடர் தடுப்பு

கடலரிப்புக் கட்டுப்பாடு கடற்கரைப்பள்ளி மற்றும் தர்கா பள்ளிவாயலுக்கு முன்னால் ஏற்பட்ட பாரிய கடலரிப்பைத் தடுப்பதற்காக 20 மில்லியன் ரூபாய் செலவில் அவசர மற்றும் நிரந்தர ஏற்பாடுகள் செய்யப்படுகின்றது.

பிரஜா சக்தி மற்றும் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீடுகள்

பிரஜா சக்தி திட்டம் (18 மில்லியன் ரூபாய்); இதன் கீழ் சந்தைக் கட்டிட மீள்நிர்மாணம் (Market Building), சமூக மண்டபம் (Community Hall) மற்றும் மினி கார்மெண்ட் (Mini கார்மெண்ட்) திட்டங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

பன்முகப்படுத்தப்பட்ட நிதி; 3.2 மில்லியன் ரூபாய் செலவில் பல்வேறு மக்கள் நலன்சார் அபிவிருத்தித் திட்டங்கள்

விளையாட்டுத்துறை மேம்பாடு

சந்தாங்கேணி உள்ளக விளையாட்டு அரங்கம்; விளையாட்டு வீரர்களின் நலன் கருதி 104 மில்லியன் ரூபாய் பிரம்மாண்ட செலவில் மீள்நிர்மாணம் செய்யப்பட்டுள்ளது.

சந்தாங்கேணி நீச்சல் தடாகம்; சுமுகமான செயற்பாட்டிற்காக 30 மில்லியன் ரூபாய் பெறுமதியான மின்சார இணைப்பு (Electricity Connection) வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

"மக்களுக்கான பணி, என்றும் மகத்தான பணி!"

மக்களின் தேவைகளை உணர்ந்து, கல்முனை மண்ணை நோக்கிப் பல நூறு மில்லியன் கணக்கான அபிவிருத்தி நிதிகளைக் கொண்டுவந்து சேர்த்து, தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயலாற்றுவோம் என பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு நட்புறவு ஒன்றியத்தின் (EFO) புதிய செயலக கட்டட அடிக்கல் நடும் நிகழ்வு (எம்.எஸ்.எம்.ஸாகிர்)கிழக்கில் மாகாணத்தில் ச...
01/06/2026

கிழக்கு நட்புறவு ஒன்றியத்தின் (EFO) புதிய செயலக கட்டட அடிக்கல் நடும் நிகழ்வு

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

கிழக்கில் மாகாணத்தில் சமூக சேவை மேற்கொள்வதையே இலக்காகக் கொண்டு
1995 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கிழக்கு நட்புறவு ஒன்றியத்தின் புதிய செயலக (EFO) கட்டடத்தின் அடிக்கல் நடும் நிகழ்வு ஒன்றியத்தின் தவிசாளரும் பொறியியலாளருமான எம்.எம். நஸீர் தலைமையில் நேற்று (31) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

பிரதேசத்தின் முன்னணி கல்விமான்கள், திணைக்களத்தலைவர்கள், ஓய்வுபெற்ற உயர் அதிகாரிகள், உயர் பதவிகளில் உள்ள அரச அதிகாரிகள் மற்றும் தொழிலதிபர்கள் எனச் சமூகப் பொறுப்புமிக்க முக்கிய ஆளுமைகளை அங்கத்தவர்களாகக் கொண்டு கடந்த 30 வருடங்களுக்கு மேல் EFO நிறுவனம் மிகச் சிறப்பாக இயங்கி வருகிறது.

"நட்புறவின் மூலம் மனிதநேயமிக்க சமத்துவமான சமுதாயத்தை உருவாக்குதல்" எனும் தூரநோக்கினை அடைவதற்காக இப்பிராந்தியத்தில் இருக்கின்ற வறுமை மற்றும் கஷ்டமான நிலையில் வாழும் குடும்பங்கள் மற்றும் தனிநபர்களை ஒன்றியத்தின் உறுப்பினர்கள் (நண்பர்கள்) மூலமாக நேரடியாக அடையாளம் கண்டு, அவர்களின் கல்வி, கலாசாரம், சமூகம் மற்றும் பொருளாதார நிலைமைகளை விருத்தி செய்வதற்குத் தேவையான முடிந்த பணிகளை மேற்கொண்டு வருகின்றது.

EFO உறுப்பினர்கள் மற்றும் கொடையாளர்கள், அரச அரசசார்பற்ற நிறுவனங்களின் தாராளமான உதவிகளைப் பெற்று, அந்தந்த குடும்பங்களின் தேவைகளுக்குப் பொருத்தமான வேலைத்திட்டங்களை காலத்துக்கேற்ற விதத்தில் ஒன்றியம் மிக நேர்த்தியாகச் செயற்படுத்தியும் வருகின்றது.

இங்கு உரையாற்றிய ஒன்றியத்தின் தவிசாளரும் பொறியியலாளருமான எம்.எம். நஸீர், இன்றைய நாள் எமது EFO வின் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாளாகும். எமது நீண்ட காலக் கனவு, நமது நண்பர்கள் அனைவரினதும் கூட்டு முயற்சியால் இன்று நனவாகியுள்ளது. இன்றைய தினம் எங்களது கிழக்கு நட்புறவு ஒன்றியத்திற்குச் சொந்தமாக ஒரு புதிய கட்டிடத்தை நிர்மாணிப்பதற்கு அடிக்கல் நாட்டியுள்ளோம். இறைவனின் உதவியுடன் எங்களது அங்கத்தவர்கள், நலன் விரும்பிகளின் பங்களிப்புடன் இதனை நிர்மாணிக்க முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு.

நமது இந்தப் புதிய கட்டிடம் "ஒற்றுமையின் சின்னம்" நாம் அனைவரும் ஒன்றிணைந்து உழைத்தால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு இதுவே சான்று. நமது எதிர்கால சந்ததியினருக்கு EFO விட்டுச்செல்லும் ஒரு வலுவான அடித்தளமே இன்றைய அடிக்கல் நாட்டு விழாவாகும்.

நமது பிரதேசத்தின் அனைத்து சமூக, கலாசார மற்றும் அபிவிருத்தி பணிகளையும் ஒருங்கிணைக்கும் ஒரு மையமாக இது எதிர்காலத்தில் செயற்படும். இந்தக் கட்டிடம் வெறும் செங்கற்களால் ஆனது மட்டுமல்ல; இது எமது அமைப்பின் நம்பிக்கை, விடாமுயற்சி மற்றும் இலட்சியத்தின் சின்னம்.

இந்த புதிய கட்டிடத்தை குறுகிய காலத்திற்குள் கட்டி முடிக்க நாம் அனைவரும் கைகோர்க்க வேண்டும். இதற்கு உங்கள் ஒவ்வொருவரின் தொடர்ச்சியான ஆதரவும், பங்களிப்பும் மிகவும் அவசியம். நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயற்படுவோம், இந்த புதிய கட்டிடத்தை மிகச்சிறப்பாக கட்டி முடிப்போம்.

இந்த நன்னாளில், நமது ஒன்றியத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த எம்மை விட்டு பிரிந்த முன்னோடிகளையும், இந்த கட்டிட அடிக்கல் நாட்டு விழாவை சாத்தியமாக்கிய EFO நண்பர்கள் அனைவரையும் மீண்டும் ஒருமுறை மனதாரப் பாராட்டுகிறேன் என்றும் தெரிவித்தார்.

இங்கு உரையாற்றிய முன்னாள் பிரதேச செயலாளரும் கிழக்கு நட்புறவு ஒன்றியத்தின் சிரேஷ்ட ஆலோசகருமான ஏ.எல்.எம். சலீம், சுனாமிக்கு பிற்பட்ட காலத்தில் இருந்து சமூகம் சார் செயற்பாடுகளில் ஈடுபட்டு வரும் EFO நிறுவனமானது கல்வி சார் செயற்பாடுகளில் குறிப்பாக, உயர் தரப் பிரிவில் அனைத்து துறைகளிலும் கற்கும் நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு புலமைப் பரிசில்களை வழங்கி வருகின்றது. கல்வி சார்ந்த நடவடிக்கைகளை மேலும் விரிவுபடுத்த வேண்டும் என்ற நோக்கத்துக்காகவும் இந்த கட்டடம் பயன்படுத்தப்பட வேண்டி இருக்கின்றது. மேலும் இந்த அரசாங்கம் போதைப்பொருள் சம்பந்தமான விடயங்களில் தீவிரமாக ஈடுபாடு காட்டி வருகின்றது. அந்த வகையில் போதைப் பொருளுக்கு அடிமையானவர்களை மீள் புனருத்தாபனம் செய்வதற்கான வேலைத்திட்டத்தையும் இந்தக் கட்டிடத்தில் ஏற்பாடு செய்திருக்கின்றோம். வறுமைக்கோட்டீன் கீழ் வாழ்கின்ற பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள், ஏனைய வறுமைக்கோட்டின் கீழ் வாழுகின்ற குடும்பங்களுக்கான சுய தொழில் முயற்சிகளை மேற்கொள்வதற்கான வேலைத்திட்டத்தையும் இக்கட்டத்தில் ஆரம்பிக்க இருக்கின்றோம். அத்தோடு, இளைஞர்களுக்கு பல்வேறு தொழில் வழிகாட்டுதல்களை வழங்குவதற்கான பல்வேறு வேலைத்திட்டங்களையும் மற்றும் இன்னோரன்ன வேலைத்திட்டங்களையும் மேற்கொள்ள இருக்கின்றோம். இப்பிராந்தியத்தில் அரச சார்பற்ற நிறுவனமாக செயற்பட்டு வரும் EFO நிறுவனம் சமூகம் சார் பல்வேறு செயற்பாடுகளை மக்களுக்கு வழங்கும் நோக்கில் இப்பாரிய வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளதனால், இதில் உதவ முடியுமான அன்பளிப்பாளர்கள் பலரது உதவியையும் எதிர்பார்க்கின்றோம். இரண்டு வருடங்களுக்குள் இந்தக் கட்டிடத்தைக் கட்டி முடிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதனால், அதற்குள் உதவ முடியுமான அன்பளிப்பாளர்கள் (Doners) தங்களால் முடியுமான எல்லா வகையான உதவிகளையும் வழங்கலாம் என்றும் தெரிவித்தார்.

54 அங்கத்தவர்களைக் கொண்டு பல்வேறு சமூகம் சார் செயற்பாடுகளில் ஈடுபட்டு வரும் EFO ஒன்றியத்தின் உறுப்பினர்கள் சிலர் கடந்த காலங்களில் மரணித்துள்ளதனால் 10 உறுப்பினர்களை சென்ற வருடம் புதிதாக இணைத்துள்ளனர். மேலும் எதிர்காலத்தில் வருடா வருடம் மூன்று மாவட்டங்களில் இருந்தும் 10 தொடக்கம்15 உறுப்பினர்களை இணைத்துக் கொள்ளவும் தீர்மானித்துள்ளதும் அதிலும் இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

01/06/2026

அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை பிரதேசத்தில் வாடகைக்கு வீடு இருந்தால் தொடர்பு கொள்ளவும்
0755103901

இன்றைய வானிலை 2026.06.01சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல்  மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை , கண்டி மற்றும் நுவரெலியா ம...
01/06/2026

இன்றைய வானிலை
2026.06.01

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை , கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும்.

ஊவா மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களிலும் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.

மத்திய மலைப் பிராந்தியத்தின் மேற்கு சரிவுகளிலும் , வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை மாவட்டத்திலும் மணித்தியாலத்திற்கு சுமார் 30 - 40 km வேகத்தில் அடிக்கடி ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும்.

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

கடல் பிராந்தியங்களில்
**************************

புத்தளம் தொடக்கம் கொழும்பு, காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 - 40 km வேகத்தில் தென் மேற்குத் திசையில் இருந்து காற்று வீசும்.

முல்லைத்தீவு தொடக்கம் காங்கேசன்துறை, மன்னார் ஊடாக சிலாபம் வரையான அத்துடன் ‌காலி தொடக்கம் ஹம்பாந்தோட்டை ஊடாக ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 55 - 60 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பாகக் காணப்படும்.

நாட்டைச் சூழ உள்ள ஏனைய பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 km இலும் கூடிய வேகத்தில் இடைக்கிடையே காற்று அதிகரித்து வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

ஆனால் ‌ இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.

சிரேஸ்ட வானிலை அதிகாரியும் ஊடகவியலாளருமான
மொஹமட் சாலிஹீன்.

Address

Abu Dhabi

Alerts

Be the first to know and let us send you an email when Lanka1st posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Lanka1st:

Share