07/06/2026
சிட்னி சிவிக் பூங்காவில் திருவள்ளுவர் சிலை சேதம் – உடனடி நடவடிக்கை கோரிக்கை
சிட்னி சிவிக் பூங்காவில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை சேதமடைந்துள்ளதாக சமூக வட்டாரங்களில் கவலை வெளியிடப்பட்டுள்ளது. சிலை உடைக்கப்பட்டதா அல்லது இயற்கையாக விழுந்ததா என்பது இதுவரை உறுதியாகத் தெரியவில்லை.
தமிழ் மொழி, அறம் மற்றும் பண்பாட்டின் அடையாளமாக கருதப்படும் திருவள்ளுவர் சிலை இவ்வாறு சேதமடைந்திருப்பது சமூகத்தில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள், உள்ளூராட்சி நிர்வாகம் மற்றும் இதனை சரிசெய்யக்கூடிய அமைப்புகள் உடனடியாக தலையிட்டு தேவையான ஆய்வு மற்றும் பழுது பார்க்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என சமூகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவள்ளுவர் சிலை பாதுகாப்பாக மீண்டும் நிறுவப்படுவதுடன், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.