Namma Annachi

Namma  Annachi நேர்மை உண்மை தெளிவு தரும் செய்திகளை தரும் ஊடகம்

" புத்தளம் எனும் புண்ணிய பூமி காக்க போவது யாரு சாமி"பிஸ்லியா பூட்டோ ( புத்தளம் பிரதேச சபை,உறுப்பினர் , சமூக ஆர்வலர்)புத்...
11/25/2025

" புத்தளம் எனும் புண்ணிய பூமி காக்க போவது யாரு சாமி"

பிஸ்லியா பூட்டோ ( புத்தளம் பிரதேச சபை,உறுப்பினர் , சமூக ஆர்வலர்)

புத்தளம் உப்பைத் தளமாகக் கொண்டு வந்தோரை வாழ வைத்துக் கொண்டிருக்கும் இயற்கை அன்னையின் செல்வத்தால் அனைத்து வளங்களையும் தன்னகத்தே கொண்ட மண்ணாகும். இது சுமார் 3,072 சதுர கிலோமீட்டர் பரப்பளவுடையது. 2012 ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி மொத்த சனத்தொகை 762,396 ஆகும். இம் மண்ணில் சொந்த ஊர் மக்கள் மாத்திரமல்லாது 1990ம் ஆண்டு வடக்கு யுத்தத்தால் விடுதலைப்புலிகள் சுமார் 1 இலட்சத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம் மக்கள் வெளியேற்றினர். வெளியேற்றப்பட்ட அம் மக்களுக்கு அடைக்களம் கொடுத்த அன்னை பூமியும் புத்தளமாகும்.

அப்படிப்பட்ட மண் இப்போது அழிவை எதிர் நோக்கி வருகின்றது. காரணம் புத்தளத்தைச் சூழ அமைந்துள்ள மற்றும் அமைக்கவுள்ள தொழிற்சாலைகள்தான்.

தன்னை இழந்து வரும் புத்தளம்......

அதனடிப்படையில் புத்தளம் கல்லடிப் பகுதியில் அமைந்துள்ள சீமெந்தது தொழிற்சாலை. சீமெந்து தொழிற்சாலையினால் ஏற்படும் சூழல் பாதிப்புகள் பலராலும் கவனிக்கப்படுகின்றன. இது சுற்றியுள்ள கிராம மக்கள், விவசாயிகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றை பல தசாப்த காலங்கள் பாதிப்பிற்குள்ளாக்கிக் கொண்டு வருகின்றது.

சீமெந்து உற்பத்தியின் போது அதிக அளவிலான தூசித் துகள்களை (dust particles), கார்பன் டயாக்ஸைடு (CO₂), நைட்ரஜன் ஒக்சைடுகள் (NOx), சல்பர் ஒக்சைடுகள் (SOx) ஆகியவற்றை வெளியிடுகிறது. இந்த வாயுக்கள் சுவாசிக்கும் காற்றை மாசுபடுத்தி மனிதனுக்கு அஸ்துமா, மூச்சுத்திணறல், சிறுநீரக பாதிப்பு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. அது மட்டுமல்லாது நில மாசுபாடு (Soil Pollution)தூசித்துகள் மற்றும் கழிவுகள் அருகிலுள்ள நிலத்தில் படிந்து, விவசாயத்தில் பயிர்களின் வளர்ச்சியை பாதிப்புக்குள்ளாக்குகின்றது. மேலும் நிலத்தில் heavy metals சேர்ந்து நிலத்தின் இயல்பை மாற்றுகிறது. இதனால் நிலத்தடி நீர் (குடிநீரும்) பாதிக்கப்படுகின்றது. இப்படி கூறிக் கொண்டே போகலாம்.

அடுத்து புத்தளம் மாவட்டத்தில் சுண்ணக்கல் (Limestone) அகழ்வு முக்கியமான (பனிக்கற்கள் அகழ்வுப்) பணிகளில் ஒன்றாகும். இது சிமெந்து தொழிற்சாலைகள் மற்றும் கட்டிடம் தொடர்பான உற்பத்திக்காக பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் குறைதல் மற்றும் நீரின் இயல்பு மாற்றம், மண்ணின் தரம் குறைதல் மற்றும் மரங்களும் பசுமையும் அழிவடைந்து வருகின்றது. அத்தோடு விலங்குகளின் வாழ்விடமும் அழிக்கப்படுகின்றது.

சுண்ணக்கல் அகழ்வு புத்தளத்தில் ஒரு முக்கியமான தொழில்துறை நடவடிக்கையாக இருந்தாலும், இது சுற்றுச்சூழலுக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றது.

அடுத்து நுரைச்சோலையில் அமைந்துள்ள அனல்மின் நிலையம். அனல்மின் நிலையத்தில் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்காக நிலக்கரியை எரிப்பதனால் வெளியேறும் சல்பர்டைஒக்சைடு (SO2), நைட்ரஜன் ஒக்சைட்கள் (NOx), சாம்பல் மற்றும் சிறுதுகல்கள் (PM2.5, PM10) காற்றை மாசுபடுத்துகின்றன.

PM2.5 மற்றும் PM10 என்பது காற்றில் உள்ள மைக்ரோ நிலைத்த தூசிக் கருக்களில் (particulate matter) உள்ள அளவைக் குறிக்கும். PM10 விட்டம் 10 மைக்ரோமீட்டர் அல்லது அதற்கு குறைவாக இருக்கும். தூசித் துகள்கள். (மண்ணில் பரவலாக உருவாகும் தூசி) PM2.5 – விட்டம் 2.5 மைக்ரோமீட்டர் அல்லது அதற்கு குறைவாக இருக்கும். மிகவும் நுண்ணிய துகள்கள். (வாகன புகை, எரிவாயு)
இவை இரண்டும் காற்றின் தரத்தை பாதிக்கக்கூடியவையாகும். PM2.5 மிகவும் ஆபத்தானது, ஏனெனில் அது நம்முடைய நுரையீரலுக்குள் நுழைந்து சுவாசத் தொற்றுகள், ஹார்ட் அட்டாக், கேன்சர் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும் ஆபத்து அதிகம். இவை பருவநிலை மாற்றம், தொழிற்துறைகள், வாகனங்கள், எரிப்பு முறைகள் போன்றவற்றால் அதிகரிக்கின்றன.

மேலும் மண் மற்றும் நீர் மாசுபாடு. அதாவது தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் சாம்பல் கழிவுகள் மற்றும் இரசாயனக் கழிவுகள் நிலத்திற்கும் அருகிலுள்ள கடலுக்குள் செல்வதாலும் தாக்கம் ஏற்படுத்துகின்றன. சாம்பல்க்கிடங்கு மற்றும் நீர்வெளியீடு மூலம் நிலத்தடி நீர் மற்றும் கடலோரப் பகுதிகள் பாதிக்கப்படுகின்றன.
அனல்மின் நிலையத்தில் இருந்து வெளியேறும் வெதும்பிய நீர் கடலில் வீழ்வதால் மீன்களின் வாழ்விடங்கள் அழிக்கப்படுகின்றன. இதனால் சிறு மீன்பிடித் தொழில் குறைந்து மீனவர்களின் வாழ்வாதாரம் இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளது.

மேலும் நிலத்தடி நீர் மாசுபடுத்தப்பட்டு அப்பகுதி மக்கள் இப்போது அன்றாடம் குடிப்பதற்காகப் பயன்படுத்தும் நீரைக் கூட விலை கொடுத்து வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அது மட்டுமல்ல சுவாசக் கோளாறுகள் ஆஸ்துமா, தலைவலி, உடற் சோர்வு போன்ற உடல்நலக் குறைகள் அதிகரித்து வருகின்றன.

அடுத்து புத்தளத்தில் அமைந்துள்ள காற்றாலை (Wind Power Plant) மின்சார உற்பத்தி நிலையம். பொதுவாக ஒரு பசுமை (green) மற்றும் சூழலுக்கு உகந்த ஆற்றல் மூலமாகக் கருதப்படுகிறது. ஆனால், இதன் மூலம் பாதிப்புகள் உள்ளன. ஒலி மாசுபாடு (Noise Pollution) காற்றாலை சுழலும் போது சுழற்சி அடிப்படையில் தொடர்ந்து உண்டாகும் ஒலி, அருகிலுள்ள குடியிருப்புகளுக்கு சிரமங்களை ஏற்படுத்துகின்றன. தொடர்ச்சியான ஒலியினால் உறக்கம் குறைதல், மனஅழுத்தம், மனநிலை மாற்றங்கள் போன்ற தாக்கங்கள் ஏற்படுகின்றன.

அது மட்டுமல்ல காற்றாளை மின்விசிறிகளில் சில புத்தளத்தில் உள்ள குபா எனும் கிராமத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ளதால், ஆரம்பத்தில் விசிறிகள் திடீர் என தீப்பற்றி எறிவதும் அவை அருகில் உள்ள குடிசைகளில் வீழ்வதும் இடம்பெற்று வந்துள்ளது. இதனால் அப்பகுதி கிராம மக்கள் அவ்விடத்தை விட்டு வேறு இடங்களுக்கு கட்டாய இடப்பெயர்வு செய்ய வேண்டிய சூழலுக்கு ஆளக்கப்பட்டனர்.

மேலும் தரையமைப்புப் பாதிப்பு (Land Use Impact) பெரிய அளவில் நிலம் இதை அமைப்பதற்கு தேவையாகும். மேலும் இவற்றுள் அதிகமானவை மக்கள் பயன்பாட்டு நிலப்பகுதிகளிலே அமையப்பெற்றுள்ளதால் மீன்பிடி, விவசாயம் போன்றவற்றின் நிலப்பகுதியும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் சில சமயங்களில் காற்றின் இயல்பு பாதிக்கப்படுவதாக சில கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

ஏற்கனவே இவைகள் ஒன்றினைந்து நஞ்சூட்டப்பட்ட புத்தள சூழலை உருவாக்கிக் கொண்டிருக்க, அடுத்த நாசகார செயலாக அருவக்காடு குப்பைத் திட்டத்தை 2014ம் ஆண்டு கோட்டாபய ராஜபக்ஸ பாதுகாப்புச் செயலாளராக இருக்கும் போது ஆரம்பிக்கப்பட்டது. இத்திட்டம் ஆரம்பிக்கப்படுமாக இருந்தால், அருவக்காடு அருகில் கடலோரம் இருப்பதால், குப்பையின் கழிவுகள் கடலுக்குச் செல்லும் வாய்ப்பு அதிகமுள்ளது. அப்படிக் கடலுடன் கழிவுகள் கலக்கப்பட்டால் கடலியல் உயிரினங்கள் மற்றும் மீன்வளத்தையும் பாதிக்கக்கூடும்.

மேலும் பெரும் அளவில் குப்பைகள் கொண்டு வரப்படுமேயானால் சுற்றியுள்ள கிராமப்புறங்கள் வாழ்விட சீர்கேடு, நிலத்தின் மதிப்பு குறைதல், நிலத்தடி நீர் பாதிப்பு ஏற்பட்டு அது குடிநீரையும் சேர்த்து பாதிப்புக்குள்ளாக்கும். தொடர்ந்து மக்கள் குடியிருப்பு பிரச்சினை போன்றவற்றோடு, அருவக்காடு பகுதியில் இயற்கை வனங்கள் மற்றும் நீர்வாழ் உயிரினங்கள் உள்ளன. குப்பைகளின் நச்சு, கழிவுகள் அவற்றின் வாழ்விடத்தை அழித்துவிடும். குப்பைகளை எரித்தால் துர்நாற்றம், விஷவாயுக்கள் (பொலிதீன், பிளாஸ்டிக் எரிப்பின் மூலம்) காற்று மாசுபடுத்தப்படும். இது அந்தப் பகுதி மக்களுக்கு சுவாசப் பிரச்சினை, ஆஸ்துமா மற்றும் தொற்று நோய்களையும் ஏற்படுத்தும்.

இவை அனைத்தாலும் புத்தள மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை. மாறாக பொதுவான பிரச்சினைகளாக இயற்கை தன்னைத் தானே தற்கொலை செய்து கொள்ளும் இதனால் காலப்போக்கில் புத்தளம் ஒரு மயான பூமியாக மாறிவிடும்.

புத்தளத்தின் ஒவ்வொரு தொழிற்சாலை உருவாக்கத்தின் போதும் மக்கள் போராடத போராட்டமே இல்லை. சில போராட்டங்களின் போது உயிர்கள் கூட பரிபோயுள்ளன. ஒவ்வொரு அரசும் நாட்டின் இயற்கை வளங்களை பாதுகாத்து எம் நாட்டை செழுமையாக்குவோம் என்ற வாக்குறுதியுடனேயே ஆட்சி பீடம் ஏறுகின்றனர்.

ஆனால் குறிப்பிட்ட காலத்தின் பின்னர் அதை மறந்து மக்களை ஏமாற்ற ஆரம்பித்து விடுகின்றனர்.
அபிவிருத்தி என்ற பெயரில் மக்களின் இருப்புக்களுக்கு அச்சுறுத்தலாக மாறும் போது,
நாம் வாழும் சமூகம் நம் கண் முன்னே மாண்டு போவதற்கு இடமளிக்கக் கூடாது.

நாவலப்பிட்டியில் தரவுகளை மீள புதுப்பிப்பதற்காக வரிசைகளில் காத்திருக்கும் அஸ்வெசும பயனாளர்கள் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்...
11/25/2025

நாவலப்பிட்டியில் தரவுகளை மீள புதுப்பிப்பதற்காக
வரிசைகளில் காத்திருக்கும் அஸ்வெசும பயனாளர்கள்

சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ளும் communication centers.

நாடளாவிய ரீதியில் அஸ்வெசும பயனாளர்களின் விபரங்களை புதுப்பிக்கும் திட்டம் சுமார் ஒன்றரை வருடத்துக்கு பிறகு தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. எனினும் இது தொடர்பான போதிய விளக்கமின்மையால் மலையகத்தின் பெரும்பாலான தோட்டப் பகுதிகளில் தெரிவான பயனாளர்கள் அஸ்வெசும நிவாரணம் கிடைப்பதாக எண்ணி நகர்புறங்களிலுள்ள தொடர்பாடல் நிலையங்களில் அதிகாலை முதல் நீண்ட வரிசையில் காத்திருப்பதை அவதானிக்க முடிகிறது.

அஸ்வெசும பயனாளர்களின் தரவுகளை புதுப்பிக்கும் இத்திட்டமானது சுமார் ஒன்றரை வருடக்காலத்துக்கு பிறகு முன்னெடுக்கப்படுகின்ற நிலையில் கிராம சேவகர்களால் இதுதொடர்பான உரிய விளக்கம் அளிக்கப்படாமல் அஸ்செசும விண்ணப்பங்களை நிரப்புமாறு தமக்கு வலியுறுத்தப்பட்டதாகவே மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக நாவலப்பிட்டி நகரை அண்டிய பகுதிகளில் தெரிவு செய்யப்பட்ட அஸ்வெசும பயனாளர்கள் அதிகாலை முதல் தொடர்பாடல் நிலையங்களில் மணிக்கணக்கில் வரிசைகளில் நிற்பதையும் நேர தாமதம் காரணமாக இரண்டு மூன்று நாட்கள் வேலைகளுக்கு செல்லாமல் இதற்காக தாம் சிரமப்படுவதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர். இந்த மீள் புதுப்பித்தல் நடவடிக்கைக்காக நகர்புறங்களிலுள்ள தொடர்பாடல் நிலையங்களில் விண்ணப்பத்தை தரவிறக்கம் செய்வதற்காக 100 ரூபாவும் அதனை நிரப்பிக் கொடுப்பதற்காக 150 ரூபா வீதமும் அறவிடுவதாக கவலைத் தெரிவிக்கின்றனர்.

இதேபோன்று இரண்டாம் கட்ட கொடுப்பனவுக்காக தெரிவானோர் தமது அஸ்வெசும வங்கிக்கணக்கை ஆரம்பிப்பதற்காக அதிகாலை முதல் வங்கிகளுக்கு முன்பாக வரிசைகளில் காத்திருந்து அவஸ்தைக்குள்ளான சம்பவம் ஒருபுறமிருக்க தற்போது தரவுகளை மீள்புதுப்பித்தல் தொடர்பான தெளிவின்மையால் மீண்டும் அஸ்வெசும பயனாளர்கள் வீதிகளில் வரிசைகளில் காத்திருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

A.நிவேதிதா ( சிரேஷ்ட ஊடகவியலாளர்)

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வள அமைச்சராக கடமைகளை பொறுப்பேற்றார் இராமலிங்கம் சந்திரசேகர்அவருக்கு எம் வாழ்த்துக்கள்
11/19/2024

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வள அமைச்சராக கடமைகளை பொறுப்பேற்றார் இராமலிங்கம் சந்திரசேகர்

அவருக்கு எம் வாழ்த்துக்கள்

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் உறுப்பினராக ரஞ்சித் மத்தும பண்டார நியமனம்! இதற்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்...
11/19/2024

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் உறுப்பினராக ரஞ்சித் மத்தும பண்டார நியமனம்! இதற்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதுவரை ஒருவரே அந்த கட்சியில் நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்னும் 4 பேரின் பெயர்கள் நியமிப்பதில் இழுப்பறி நிலவுகிறது.

ஜனாதிபதி அலுவலகத்தை பார்வையிட்ட மாணவர்கள்!!!இரத்தினபுரி கரவிட்ட மத்திய கல்லூரி, புனித அந்தோனியார் பெண்கள் கல்லூரி மற்றும...
11/19/2024

ஜனாதிபதி அலுவலகத்தை பார்வையிட்ட மாணவர்கள்!!!

இரத்தினபுரி கரவிட்ட மத்திய கல்லூரி, புனித அந்தோனியார் பெண்கள் கல்லூரி மற்றும் ருவன்வெல்ல இராஜசிங்க மத்திய கல்லூரி மாணவிகள் ஜனாதிபதி அலுவலகத்தை பார்வையிட்டனர்.

இரத்தினபுரி கரவிட்ட மத்திய கல்லூரி, புனித அந்தோனியார் பெண்கள் கல்லூரி மற்றும் ருவன்வெல்ல இராஜசிங்க மத்திய கல்லூரி மாணவிகள், ஜனாதிபதி அலுவலகத்தை பார்வையிடுவதற்காக இன்று (19) வருகை தந்திருந்தனர்.

ஜனாதிபதி அலுவலகம், கல்வி அமைச்சு மற்றும் பாராளுமன்ற மக்கள் தொடர்பாடல் பிரிவு ஆகியன இணைந்து செயற்படுத்தும் இந்த வேலைத்திட்டத்தின் ஊடாக, ஜனாதிபதி அலுவலகம், ஜனாதிபதி மாளிகை, கொழும்பு துறைமுக நகரம் மற்றும் பாராளுமன்றம் ஆகியவற்றை பார்வையிடுவதற்கு மாணவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகத்திற்கு வருகை தந்த மாணவர்களுக்கு பாராளுமன்ற வரலாறு குறித்தும் தெளிவுபடுத்தப்பட்டது.

இதனை முன்னிட்டு அந்தந்த பாடசாலைகளின் அதிபர்களும் மாணவர்களும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிற்கு நினைவுப் பரிசுகளை வழங்கி வைத்ததுடன், ஜனாதிபதி செயலகத்தினால் அந்தந்த பாடசாலைகளில் நடுவதற்கு பெறுமதியான மரக் கன்றுகளும் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டன.

பின்னர் ஜனாதிபதியின் செயலாளர் பாடசாலை மாணவர்களுடன் சிநேகபூர்வமாக கலந்துரையாடினார்.

ஜனாதிபதி அலுவலக பணிப்பாளர் நாயகம் (சட்டம்) சட்டத்தரணி ஜே. எம். பண்டாரவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு
19-11-2024

வர்த்தக ,வாணிபம் ,உணவுப்பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சராக கடமைகளை பொறுப்பேற்றார் வசந்த சமரசிங்க
11/19/2024

வர்த்தக ,வாணிபம் ,உணவுப்பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சராக கடமைகளை பொறுப்பேற்றார் வசந்த சமரசிங்க

11/19/2024

இலங்கையில் சாதாரண உழைப்பாளி ஒருவர் மதிய நேர பசியை போக்க சோறு சாப்பாட்டிற்கு செலவழிக்கும் தொகை எவ்வளவு?

உங்கள் ஊரில் பகல் சாப்பாட்டின் விலை என்ன?

11/19/2024

தியத்தலாவையில் ரயில் தடம்புரண்டதால் மலையக மார்க்க ரயில் போக்குவரத்திற்கு இடையூறு - ரயில்வே திணைக்களம்

கண்டியில் இருந்து பதுளை நோக்கி பயணித்த புகையிரதம் தியத்தலாவ புகையிரத நிலையத்தில் சற்று முன்னர் தடம் புரண்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் மலையகப் புகையிரத சேவைகள் தாமதமாகலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

🔴 ஆளுங்கட்சியின் சபை முதல்வராக  அமைச்சர் பிமல் ரத்னாயக்க நியமனம்!✔️அரச ஊடக பேச்சாளராக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ ந...
11/19/2024

🔴 ஆளுங்கட்சியின் சபை முதல்வராக அமைச்சர் பிமல் ரத்னாயக்க நியமனம்!

✔️அரச ஊடக பேச்சாளராக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ நியமனம்

Address

Chestermere, AB

Alerts

Be the first to know and let us send you an email when Namma Annachi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share