10/09/2026
ரவி மோகனை குறிவைத்து ஆர்த்தி ரவியின் காட்டமான பதிவு வைரல்!
நடிகர் ரவி மோகனுடனான விவாகரத்து சர்ச்சைக்குப் பின்னர் ஆர்த்தி ரவி வெளியிடும் பதிவுகள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி வருகின்றன.
இந்நிலையில், அவர் வெளியிட்டுள்ள புதிய பதிவில், “சூர்யா, அஜித், விக்ரம், கமல்... இவங்க எல்லாரையும் விட என் லைஃப்ல வந்த ஒருத்தன் நடிச்சானே நடிப்பு. ஆஸ்கர் அவார்ட்ஸ்கூட கொடுக்கலாம்” என குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பதிவு ரவி மோகனை மறைமுகமாகக் குறிப்பிட்டு வெளியிடப்பட்டதாக இணையவாசிகள் கருத்து தெரிவித்து வரும் நிலையில், தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.
ரவி மோகன் – ஆர்த்தி ரவி இருவருக்கும் இடையிலான விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. தங்களது பிரிவுக்கு பாடகி கெனிஷா காரணம் என ஆர்த்தி தரப்பில் கூறப்பட்டு வரும் நிலையில், ரவி மோகன் அதனை மறுத்து, தனக்கான மரியாதையும் சுதந்திரமும் பறிக்கப்பட்டதாலேயே பிரிந்ததாக தெரிவித்துள்ளார்.
மேலும், இருதரப்பும் விவாகரத்து வழக்கு நிலுவையில் இருக்கும் காலத்தில் சமூக வலைதளங்களில் தனிப்பட்ட கருத்துகளை வெளியிடக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், ஆர்த்தி ரவியின் இந்த புதிய பதிவு மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது.