Athirvu - அதிர்வு

Athirvu - அதிர்வு பலதும் பத்தும்

பூமிக்கிண்ணத்தில்,சொட்டிக்கொண்டேயிருக்கும்காலத்துளிகளின் ஓசைகள்.ஒவ்வொரு துளியும் ஒரு கதை சொல்லும்,கடந்த காலத்தின் ஏடுகளை...
20/08/2025

பூமிக்கிண்ணத்தில்,
சொட்டிக்கொண்டேயிருக்கும்
காலத்துளிகளின் ஓசைகள்.

ஒவ்வொரு துளியும் ஒரு கதை சொல்லும்,
கடந்த காலத்தின் ஏடுகளைப் கவனமாக புரட்டும்.
சிலநேரம் சிரிப்பும் வரும் அழுகையும் கலந்து வரும்,
இது வாழ்க்கை என்னும் நதியின் வற்றாத ஓட்டம்.

சில துளிகள் மெதுவாக விழும்,
விழுந்து சாதனைகளின் சாட்சியாக தெறிக்கும்.
சில துளிகள் வேகமாய் விழும்,
விழுந்து வேதனைகளின் நீட்சியாக தெறிக்கும்.

காலம் ஒரு மாயாஜாலம்,
மாற்றங்களை உருவாக்கும்.
இன்று இருக்கும் நிலை நாளை மாறும்,
இதுவே இயற்கையின் நியதி ஆகும்.

துளிகளின் ஓசை கேட்கும் வரை,
வாழ்க்கை பயணம் தொடரும்.
நம்பிக்கை என்னும் ஒளியை ஏற்றி,
நாளை நமக்காக விடியும்.

- RK
20/08/2025

சமூக வலைத்தளங்கள் முழுவதும் மிக மோசமான எதிர்மறைகள் நிறைந்து கிடக்கின்றன. வன்மம், பொறாமை, பழியுணர்ச்சி,காழ்ப்பு, என வாழ்வ...
20/08/2025

சமூக வலைத்தளங்கள் முழுவதும் மிக மோசமான எதிர்மறைகள் நிறைந்து கிடக்கின்றன.

வன்மம், பொறாமை, பழியுணர்ச்சி,காழ்ப்பு, என வாழ்வில் நாம் தவிர்க்க வேண்டும் என்று விரும்புகின்ற அத்தனையும் கொட்டிக் கிடக்கின்றன.

முன்பு சின்னத்திரைகள் தான் இவற்றை எங்கள் வீட்டிற்குள் கொண்டு வந்து கொட்டுவதாக நாம் கவலைப்பட்டுக் கொண்டிருந்தோம்.

ஆனால் இப்போது இவை எல்லாம் நம் அன்றாடமாகிப் போய் நிற்கின்றன.

மிக நல்ல நோக்கங்களுக்காக ஆரோக்கியமான உறவுப் பிணைப்புகளுக்காக ஆக்கபூர்வமான முன்னெடுப்புகள் மற்றும் கருத்துப் பரிமாற்றங்களுக்கான இருக்க வேண்டிய சமூகவலைத் தளங்களை இன்று நாம் போர்களங்களாக, இயற்கைப் பேரிடர் கடந்த கலவர பூமியாக மாற்றிவிட்டிருக்கின்றோம்.

ஓன்று மாறி ஒன்றாக எதோ ஒரு பேசு பொருள் அல்லது யாரோ ஒருவர் மாட்டிக் கொள்ள எல்லாப் பாதைகளும் ரோமை நோக்கியது போல எல்லோருடைய பக்கங்களும் எதிரும் புதிருமாக களமாடிக் கொண்டிருக்கின்றன.

துரதிஸ்டவசமாக நாம் பேசுவதும் வாதிப்பதும் சம்பந்தப்பட்ட தரப்பில் ஒரு சிறு அதிர்வினையும் உண்டுபண்ணப் போவதில்லை என்பதை நாம் உணர தவறிவிடுகின்றோம்.

எமது கருத்தை ஒரு பதிவில் பகிர்ந்து விட்டு கடந்து செல்வதை தவிர்த்து அதையே மீண்டும் மீடும் கொத்திக் கிளறி எங்கள் ஆற்றல்களையும் நேரத்தையும் வீணடித்துக் கொண்டிருக்கின்றோம்.

சமூக ஊடகங்களில் மக்கள் எதிர்மறையான கருத்துக்கள் முக்கியம் பெறுவதற்கு அல்லது அதன் மீதான ஈடுபாடு அதிகரித்திருப்பதற்கு
பொதுவான சில காரணிகளை உளவியலாளர்கள் குறிப்பிடுகின்றார்கள்

⭕️ நாசீசிசம்(Narcissism): சிலர் தங்கள் தன்முனைப்பினை மேலும் அதிகரிப்பதற்கு அதிகளவான எதிர்மறையான கருத்துக்களைச் சொல்வதன் மூலமாக தங்களை திருப்திப்படுத்துகின்றார்கள்.இது போன்ற எதிர்மiறை கருத்துக்ள் மூலமாக மற்றவர்களை வீழ்த்;தி தம்மை உயர்வானவர்களாக நிரூபிப்பதற்கு அவர்கள் விரும்புகின்றார்கள். நாசிச மனநிலை படைத்தவர்களே அதிகளவான எதிர்மறைக் கருத்துக்களை தொடர்ந்தும் பகிர்வதாக உளவியலாயர்கள் கண்டறிந்துள்ளார்கள்.

⭕️ அதிகார மோகம் (Power Seekers):சமூக ஊடகங்களில் எதிர்மறையான கருத்துக்களை வெளியிடுவதன் மூலம் தம்மிடம் அதிகாரங்கள் வந்து சேரும் என்று சிலர் நம்புகின்றனர். எதிர்மறைக் கருத்துக்ள மூலம் மற்றவர்களை கட்டுப்படுத்தலாம் அவர்கள் மீது அதிகாரம் செலுத்தலாம் என்று அவர்கள் எண்ணுகின்றனர்.

⭕️ ஒப்பீடு(Comparison ): மனிதர்களிடையிலான ஒப்பீடுகளை சமூக ஊடகங்கள் தூண்டுகின்றன. சிலர் தங்களை பற்றிய உயர்வான விம்பத்தை ஏற்படுத்துவதற்கான தன்னைச் சுற்றியுள்ளவர்கள் மீது அதீதமான எதிர்மறை விமர்சனங்களை முன்வைக்கின்றார்கள். அதன் மூலம் மற்றவர்களை விட தாங்கள் உயர்வானர்கள் என்ற உணர்வைப் பெற்றுக் கொள்ள அவர்கள் விரும்புகின்றார்கள். தாம் உயர்வாக தெரிய வேணடுமானல் தம்மைவிட உயர்வானவர்களை கீழே விழுத்த வேண்டும் என்பதே அவர்களின் பிரதான நோக்கமாக அமைகின்றனது.

⭕️ கவனஈர்ப்பு( Attention-seeking): சிலர் சமூகத்தின் கவனத்தை தம்மை நோக்கி திருப்புவதற்காக எதிர்மறையான கருத்துக்களைச் சொல்கிறார்கள். அவர்கள் தங்கள் நிஜ வாழ்க்கையில் தோல்வி அடைந்த மனிதர்காக அல்லது சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட மனிதர்களாகவோ இருப்பார்கள். தம் மீதான கவனத்தை எற்படுத்துவதற்கு சமூக ஊடகங்களில் எதிர்மறையான கருத்துக்களைச் சொல்வதை ஒரு தெரிவாக அவர்கள் கொண்டுள்ளார்கள்

⭕️ இயலாமை(Inability): மக்கள் தங்கள் பாதுகாப்பின்மை அல்லது எதிர்மறையான உணர்வுகளை மற்றவர்கள் மீது வெளிப்படுத்துவதற்கு எதிர்மறையான கருத்துக்களைச் பகிர்ந்து கொள்கின்றார்கள். இவ்வாறு எதிர்மறையான கருத்துக்களைச் சொல்வதன் மூலம், அவர்கள் தங்கள் தங்கள் இயலாமை அல்லது குறைகளில் இருதுந்து மற்றவர்களின் கவனத்தைத் திசைதிருப்புவதற்கு முயல்கின்றார்கள்.

⭕️ வலிந்த தாக்குதல் (Painful Attack) : மக்கள் தங்களுக்கு பிடிக்காதவர்கள் அல்லது பிடிகாதவை மீதான கோபத்தையம் விரக்தியினையும் வெளிப்படுததும் வாய்ப்பினை சமூக ஊடகங்கள வழங்குகின்றன. தங்களுக்குள் மறைந்திருக்கும் உணர்ச்சிகளை வெளியிட ஒரு வழியாக எதிர்மறையான கருத்து nவிளப்பாட்டை பயன்படுத்துகின்றனர்.

⭕️ அநாமதேயம் ( Anonymity): சமூக ஊடக தளங்கள் மக்களை அநாமதேயமாக இருக்க அனுமதிக்கின்றன, இதனால் அவர்கள் எதிர்மறையான கருத்துகளை வெளியிட அதிக வாய்ப்பு ஏற்படுகின்றது. தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்த வேண்டிய அவசியம் இல்லாதவர்கள் நேரில் சொல்லாத விஷயங்களைச் சொல்ல தயங்கும் விடயங்களை முகமூடி அணிந்து கொண்டு பகிர்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

⭕️ தவறான புரிதல்கள்(Misunderstandings): சில சமயங்களில், சமூக ஊடகங்களில் சிலர் எதிர்மறையான கருத்துக்களைச் சொல்வதற்கு காரணம் தவாறன புரிதல். ஒரு விடயத்தை அலலது ஒருவரி வெளிப்படுத்திய கருத்தின் சரியான நோக்கத்தை புரிந்து கொள்ளாமல் எழுந்தமானமான ஒரு புரிதலோடு எதிர்மறைக் கருத்துக்களை சிலர் முன்வைக்கின்றார்கள்.

சமூக வலைதளங்களில் வரும் எதிர்மறையான கருத்துக்களை எவ்வாறு கையாள்வது? இது தான் இன்று பலரிடமும் உள்ள கேள்வி.

❌ புறக்கணிப்பு ( Don't respond) சமூக வலைதளங்களில் எதிர்மறையான கருத்துக்கள் முன்வைக்ப்டும் போது அவற்றை கண்டுகொள்ளாமல் புறக்கணிப்பதே சிறந்த தெரிவாக அமையும். ஏதிர்மறை விமர்சனங்களுக்கு அல்லது கருத்துக்களையும் பதிலளிப்பது பெரும்பாலும் நலமையினை மோசமாக்கும். ஆல்லது அந்த கருத்தை வெளிப்படுத்தும் நபருக்கு இணையாக நாம் தரமிறங்கிச் செல்லும் நிலையை உருவாக்கிவிடும். இதனால் நன்மைகளை பிட பாதிப்புகளே அதிகம்.

❌ ஓய்வு ( Break/Rest ): எதிர்மறையான கருத்துகளால் நீங்கள் அதிகமாக மன உழைச்சலை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படலாம். ஆதில் இருந்து மீண்டு வரவதற்கு உங்களுக்கு ஆரோக்கியமான ஓய்வு அவசியம். சமூக ஊடகங்களில் இருந்தும் ஏனைய அனாவசியமான தொடர்பாடல்களில் இருந்தும் ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். உங்களுககான நேரம் என்பது மிகவும் அவசியமானது. அது உங்களை புத்துணர்வு நிலைக்கு கொண்டு வரும். நீங்கள் யார் என்பதையும் எதிர்மறை கருத்துக்களால் உங்களை ஒன்றும் செய்ய முடியாது என்பதையும் உணர்வதற்கு இந்த ஓய்வு மிக முக்கியமானது

❌ தடுக்கவும் (Report or block): பெரும்பாலான சமூக ஊடக தளங்களில் பயனர்கள் எதிர்மறையான கருத்துகளைப் புகாரளிக்க அல்லது தடுக்க உங்களை அனுமதிக்கும் அம்சங்கள் உள்ளன. யாரோ ஒருவர் தனது எல்லைக் கோட்டைக் கடப்பதாக நீங்கள் உணர்ந்தால், இந்த அம்சங்களைப் பயன்படுத்துங்கள். அது பயனுள்ளதாக அமையும்.

❌ நேர்மறையில் கவனம் செலுத்துங்கள்(Focus on the positive) எதிர்மறையான கருத்துக்கள் சமூக ஊடகங்களின் ஒரு சிறிய பகுதி என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே அதற்கு பதிலாக, மற்றவர்களுடன் உங்கள் நேர்மறையான தொடர்புகளில் கவனம் செலுத்துங்கள், எதிர்மறையான கருத்துக்கள் உங்களையும் உங்கள் இலட்சியங்களையும் வீழ்ததுவதற்கு அனுமதிக்காதீர்கள்.

❌ ஆதரவைத் தேடுங்கள்(Seek support) எதிர்மறையான கருத்துகளால் நீங்கள் அதிகமான பாதிக்கப்பட்டுள்ளதாக உணர்ந்தால் நம்பகமான நண்பர் அல்லது குடும்ப உறுப்பினரோடு மனம்விட்டு பேசுங்கள். ஒருவரிடம் பேசுவது உங்கள் உணர்வுகளைச் விளப்படுத்துவதற்கான வடிகால அமையும்.
அத்துடன் எதிர்மறையான கருத்துகளைச் கையாள்வதற்கும் அதனை எதிர்கொள்வதற்கான சரியான மூலோயத் திட்டத்தை உருவாக்கவும் உதவும்.

💥சமூக ஊடகங்களில் வெளிப்படுத்தப்படும் எதிர்மறையான கருத்துக்கள் மக்கள் மனங்களை மிக மோசமாக புண்படுத்தும் என்பதோடு அவை மக்களின் உள ஆரோக்கியத்தையும் கடுமையாக பாதிக்கும் என்பதை உளவியல் நிபுணர்கள் உறுதியாக நம்புகின்றார்கள்.

சமூக ஊடகம் தானே எனக் கடந்து செல்ல முடியாத படி அது நம்வாழ்வின் அங்கமாகிப் போயுள்ளதால் அதனை கவனமாகக் கையள வேண்டியது மிக மிக அவசியமானது.

(பிரதி செய்யப்பட்டது)

நன்றி ரமணன் சந்திரசேகரமூர்த்தி.

அறியாத தேசம் நான் அன்றொருநாள் வந்தபோது,அவமதிப்புகள் என்னை அளவின்றிச் சூழ்ந்தன!அன்பை மட்டும் அள்ளித்தந்து என்னை அடிமையாக்...
16/08/2025

அறியாத தேசம் நான் அன்றொருநாள் வந்தபோது,
அவமதிப்புகள் என்னை அளவின்றிச் சூழ்ந்தன!
அன்பை மட்டும் அள்ளித்தந்து என்னை அடிமையாக்கினர் சிலர்;
ஆற்றல் அற்றவன் என அகதியாக்கினார் பலர்;
ஒன்றுக்கும் உதவாதவன் என முத்திரை குத்தினர் இன்னும் சிலர்!

வாழ்க்கை என்னை சாய்த்த கணம்,
அழிந்தது இவன் கனவு என்று
ஆடிப்பாடி மகிழ்ந்தனர் சிலர்!
அவ்வளவு தான் இவன் கதை என
ஆர்ப்பரித்து திரிந்தனர் பலர்;
விழுந்த நான், மீண்டும் எழுந்தேன்
பெரு விருட்சமாக நிமிர்ந்து நின்றேன்!

என் பெற்றவர்களும், பரியோவானும்
என் நிலை தாழ விடவில்லை;
என்ன உற்றவளும் என் உதிரத்தில் உதிர்த்தவர்களும்
என் தலை வீழ விடவேயில்லை!
துன்பச் சுமையை சுமந்து நடந்தேன்;
வேதனைக் கோட்டையை தகர்த்து நின்றேன்!

செய்வினை வென்றேன்;
செயற்பாட்டு வினை கண்டேன்!
பள்ளிக்கூடம் செல்லாதவன் கூட என்னை பல்லிளிக்க பார்த்தான்;
என் நிழலில் பாடம் பயின்று, என் முதுகை குதிப்போனான்!

மச்சான் நீயடா என்று, மதிமயக்கும் வார்த்தை வீசியொருவன் தன்கருமம் தீர்த்துப் போனான்;
இழந்தது நான் அல்ல!
கொடுத்தவன் எவரும் கெட்டொழிந்த வரலாறில்லை;
வஞ்சகன் எவரும் நீண்ட காலம் வாழ்ந்ததாக சரித்திரமும் இல்லை!

விசுவாசம் என்றைக்கும் வீணாக போனதில்லை;
நேர்மை கொண்ட வாழ்க்கை - என்றும்
நீர்த்தொழிந்து மாய்ந்ததில்லை!
அன்பின் பால் அடிமையானோர் வாழ்வு - என்றும் அவதியில் முடிந்ததில்லை!

எவரையும் குறைவாக மதிப்பிடல் கூடாது;
திறமை கண்டால், தோள் கொடுத்து தூக்கிவிடல் மாறாது!
தட்டிக் கொடுக்காவிடினும் எப்பொழும் - பாழ் கிணற்றில் தள்ளிவிடா என் தர்மம்.
எனக்கு வாய்த்த துயரங்கள் - இனி
என்னை சார்ந்த ஒருவருக்கும் வரலாகா சாபங்கள்!
இதுவே என் தாகம்,
வெளிநாட்டு வாழ்வில் வாழ்ந்து முடிக்கப்படா என் ஏக்கம்!

- RK
16/08/2025

உண்மையின் பக்கம் நான் என்றும் நிற்பேன்,பொய்மை கண்டால் பொங்கியே எழுவேன்!அநீதி இழைத்தால் அஞ்ச மாட்டேன்,தர்மத்தை காக்க தலை ...
16/08/2025

உண்மையின் பக்கம் நான் என்றும் நிற்பேன்,
பொய்மை கண்டால் பொங்கியே எழுவேன்!
அநீதி இழைத்தால் அஞ்ச மாட்டேன்,
தர்மத்தை காக்க தலை வணங்கவும் மாட்டேன்!

துரோகம் செய்தால் துவம்சம் செய்வேன்,
நம்பிக்கை காட்டினால் என் உயிர் கூட கொடுப்பேன்!
உள்ளொன்று வைத்து புறமொன்று பேசேன்,
மனசாட்சிக்கு விரோதமாய் என்றும் வாழவும் மாட்டேன்!

உழைப்பின் பலனை உயர்வாய் கொள்வேன்,
சோம்பேறித்தனம் என்றும் கொடிதென வெறுப்பேன்!
ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்பேன்,
வஞ்சகரின் முகத்தில் காறி உமிழ்ந்து போவேன்!

நட்புக்கு நான் உயிர் மொண்டு கொடுப்பேன்,
துரோகத்திற்கு நான் சாவு மணி அடிப்பேன்!
நல்லவர் கண்ணீர் கைகொண்டு துடைப்பேன்,
கெட்டவர் கதையை கணப்பொழுதில் முடிப்பேன்!

நன்றியை மறந்தால் மன்னிக்க மாட்டேன்,
பார்வையில் நெருப்பாவேன்!
நல்லவர் வீட்டில் நாய் போல் உழைப்பேன்,
காலுக்கு செருப்பாவேன்!

- RK
16/08/2025

கொஞ்சி வரும் கிளிகளெல்லாம்,கொடும் பாம்பாய் மாறுதடா!கொத்தி விட்டு புத்தனைப் போல்,சத்தியமாய் வாழுதடா!!நம்பிக்கை துளிர்த்த ...
16/08/2025

கொஞ்சி வரும் கிளிகளெல்லாம்,
கொடும் பாம்பாய் மாறுதடா!
கொத்தி விட்டு புத்தனைப் போல்,
சத்தியமாய் வாழுதடா!!

நம்பிக்கை துளிர்த்த மனமெல்லாம்,
நொடியில் கருகிப் போகுதடா!
அன்பென்று சொன்ன உதடுகளே,
அரிவாளாய் இங்கே வீசுதடா!!

உண்மையின் முகமூடி அணிந்து,
பொய்மைதான் உலகை ஆளுதடா!
நீதியின் கண்களைக் நன்கு கட்டி,
அநியாயம் தலை விரித்தாடுதடா!!

கனவுகள் எல்லாம் கானல் நீராய்,
கண்களில் கறை படிந்ததடா!
வாழ்க்கை பெரும் நாடக மேடையாக,
பலர் வேஷம் முதன்மையாய் ஆனதடா!!

சத்தியம் தொலைந்த வாழ்க்கையிலே,
சந்தோஷம் காணாமல் போகுதடா!
மனிதத்தின் முகத்தினை கிழித்து,
மிருகக் குணம் தலை தூக்குதடா!!

நல்லவர் எல்லாம் ஏமாளியாக,
கெட்டவன் அரசு கோலோச்சுதடா!
பலரின் மௌனத்தில் மூழ்கும் மன சாட்சியிலே,
இங்கே சாவது பெண்கள் வாழ்க்கையடா!!

- RK
16/08/2026

ஓர் இலையை அந்த மரம் உதிர்த்துவிட்ட பிறகு,அந்த மரத்தின் அடியிலே கிடக்க வேண்டிய அவசியம்அந்த இலைக்கு இல்லை.விடுதலை பெற்ற பற...
16/08/2025

ஓர் இலையை அந்த மரம்
உதிர்த்துவிட்ட பிறகு,
அந்த மரத்தின் அடியிலே கிடக்க வேண்டிய அவசியம்
அந்த இலைக்கு இல்லை.

விடுதலை பெற்ற பறவையாய்,
விண்ணில் பறக்கலாம்;
வேரின் பிணைப்பறுத்து,
வேறு திசை நோக்கலாம்.

மண்ணில் மட்கிப் போகவோ,
புழுக்களுக்கு இரையாகவோ,
காத்திருக்கத் தேவையில்லை;
காலம் உனக்காகக் காத்திருக்கவில்லை.

புதிய கிளைகள் தேடிப் போ,
புதிய வானம் நோக்கிப் போ,
உனக்கான பாதையை நீயே வகு,
உனக்கான உலகத்தை நீயே உருவாக்கு.

நினைவுகளின் சுமையோடு நீ நின்றால்,
நிகழ்காலம் உனக்குப் புரியாது;
கடந்த காலத்தின் நிழல் நீங்கி,
எதிர்காலத்தை நோக்கிப் பார்.

உதிர்ந்தாலும் உன் அடையாளம் அழியாது,
உன் பயணம் ஒருபோதும் முடியாது.
விழுந்தாலும் எழுந்து வா,
வெற்றி உனக்காகக் காத்திருக்கு வா!

புதிய வேர்களைத் தேடிப் பார்,
புதிய வானில் நீ பறந்து பார்;
உனக்கான வாழ்க்கை இங்கேதான்,
உனக்கான வெளிச்சம் எங்கேனும் ஒளிந்திருக்கும் பார்!

- RK
16/08/2025

தனிமையில் இருத்தல் எனும் கலை,தன்னுள் ஒளிந்திருக்கும் உண்மை நிலை.புறத்தில் தேடும் அமைதியின் தேடல்,அகத்தில் அடங்கும் ஆனந்த...
15/08/2025

தனிமையில் இருத்தல் எனும் கலை,
தன்னுள் ஒளிந்திருக்கும் உண்மை நிலை.
புறத்தில் தேடும் அமைதியின் தேடல்,
அகத்தில் அடங்கும் ஆனந்த ஊடல்.

கூட்டத்தின் ஆரவாரத்தில் தொலைந்தோம்,
குரல்களின் சங்கமத்தில் கரைந்தோம்.
தனிமை என்னும் தீவில் ஒதுங்கி,
தன்னிலை உணர்ந்து நிமிர்ந்து எழுந்தோம்.

எண்ணங்கள் அலைகளாய் மோதும்,
ஏகாந்தம் என்னும் நதியில் ஆடும்.
மனதின் ஆழத்தில் மூழ்கி முத்தெடுக்க,
தனிமை ஒரு வரமே நமக்கு.

உலகம் ஒரு மாயத் தோற்றம்,
உள்ளம் ஒன்றே நிஜத்தின் ஊற்று.
தனிமையில் மலரும் ஞானத்தின் வாசம்,
வாழ்வின் அர்த்தம் புரியும் நேசம்.

- RK
15/08/2025

காலம் உங்கள் பிணங்களைக் கூடத்தோண்டியெடுத்துத் தூக்கில் போடும்;சாவுக்கும் அஞ்சாத வீரர்களின்சரித்திரத்தை மாற்றி எழுதும்.கு...
15/08/2025

காலம் உங்கள் பிணங்களைக் கூடத்
தோண்டியெடுத்துத் தூக்கில் போடும்;
சாவுக்கும் அஞ்சாத வீரர்களின்
சரித்திரத்தை மாற்றி எழுதும்.

குருதி தோய்ந்த கரங்களால் நீங்கள்
குவித்த செல்வக் குவியல்களை,
அழுகிய உங்கள் ஆணவத்தை,
அநியாயத்தின் அஸ்திவாரத்தை,

உழைப்பின் வியர்வை காய்வதற்குள்
உரிமை பறிக்கும் திருடர்களை,
நிழலின் அருமை தெரியாமல்
நித்தம் அழிக்கும் கொடுங்கோலரை,

மண்ணின் வாசம் மறந்தவராய்
மனசாட்சி விற்ற கயவர்களை,
அதிகாரம் போதை தலைக்கேறி
ஆட்டம் போடும் அரக்கர்களை,

உங்கள் கல்லறைகள் சாட்சியாகும்,
கதறும் உங்கள் சந்ததிகளே
காலத்தின் கோபம் புரியாமல்
கதிகலங்கி நிற்கும் சாபங்களே

காலம் சும்மா விடாது; அது
கணக்கு கேட்கும் நேரம் வரும்;
பிணமென்றாலும் விடாது அது
தூக்கில் ஏற்றித் தீர்ப்பு தரும்.

- RK
15/08/2025

யாழ் போதனா வைத்தியசாலையின் புகழ்பெற்ற சத்திரசிகிச்சை நிபுணர் வெங்கடாசலம் சுதர்ஷன் மாரடைப்பால் காலமானார். அவரது மறைவு தமி...
15/08/2025

யாழ் போதனா வைத்தியசாலையின் புகழ்பெற்ற சத்திரசிகிச்சை நிபுணர் வெங்கடாசலம் சுதர்ஷன் மாரடைப்பால் காலமானார்.

அவரது மறைவு தமிழ் சமூகத்தை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

Dr. Sutharshan Vengadasalam is a renowned surgeon in Sri Lanka with expertise in general surgery, particularly in minimally invasive and digital surgery.

Here are some key highlights about him:


- MBBS (Col): Bachelor of Medicine, Bachelor of Surgery from the University of Colombo
- MS (Col): Master of Surgery from the University of Colombo
- MRCSEng, MRCSEd, FCSSL: Fellow of the College of Surgeons of Sri Lanka and Member of the Royal College of Surgeons of England and Edinburgh
- FMAS: Fellow in Minimal Access Surgery from TGO University, India.


- Minimally Invasive Surgery: Expertise in laparoscopic procedures, including common bile duct exploration and hernia repair
- Endoscopic Procedures: Skilled in colonoscopy, sigmoidoscopy, and gastroscopy
- General Surgical Emergencies and Trauma: Experienced in managing acute surgical conditions and trauma cases
- Elective General Surgical Operations: Performs various elective surgeries, including hernia repair, scrotal pathologies, and cholecystectomy


- Association of General Surgeons of Sri Lanka: Member and past president
- Sri Lanka Association of Minimal Access and Digital Surgeons (SLAMADS): Council member and past president
- College of Surgeons of Sri Lanka: Fellow and council member¹ ² ³ ⁴


- Research Papers: Published several research papers on thyroid disorders, esophageal carcinomas, and laparoscopic surgery
- Textbook Author: Authored a surgical textbook titled "Clinical Surgery Made Easy"

அதிகமாக முக்கியத்துவத்தை கொடுத்து ஒரு கழுதையை சிங்கமாக்கி விட்டிருக்கிறோம் 😜
12/08/2025

அதிகமாக முக்கியத்துவத்தை கொடுத்து ஒரு கழுதையை சிங்கமாக்கி விட்டிருக்கிறோம் 😜

நல்லவனாக இரு!அதனை நிரூபிப்பதற்குஉன்னுடைய நேரத்தை விரயம் செய்யாதே!! fans
12/08/2025

நல்லவனாக இரு!
அதனை நிரூபிப்பதற்கு
உன்னுடைய நேரத்தை விரயம் செய்யாதே!!

fans

Address

London

Alerts

Be the first to know and let us send you an email when Athirvu - அதிர்வு posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share