தமிழ் சந்தி

தமிழ் சந்தி நாட்டின் செய்திகளை உடனுக்குடன் அறிய எங்களுடன் இணையுங்கள்

Join us for instant news update on country news.

🍀🍀🍀 #இன்றைய_ராசிப்பலன்🍀🍀🍀    ( 24/;09/ 2025 )   #புரட்டாசி  - 08 / #புதன்கிழமை  /   #வளர்பிறை  /💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢...
24/09/2025

🍀🍀🍀 #இன்றைய_ராசிப்பலன்🍀🍀🍀
( 24/;09/ 2025 ) #புரட்டாசி - 08 /
#புதன்கிழமை / #வளர்பிறை /
💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢
💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢

🍀🍀🍀 #இன்றைய_ராசிப்பலன்🍀🍀🍀
💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢

#மேஷம் - Aries
24/09/2025 புதன்கிழமை

வாழ்க்கைத் துணையால் செலவுகள் ஏற்படும். அதனால் மகிழ்ச்சியே உண்டாகும். நேரத்துக்குச் சாப்பிட முடியாதபடி ஒன்று மாற்றி ஒன்று ஏதேனும் வேலை இருந்த படியிருக்கும். மற்றவர்களுடன் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை. தந்தையுடன் இணக்கமாக நடந்துகொள்ளவும். வியாபாரம் வழக்கம் போல் இருக்கும்.
💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢

#ரிஷபம் - Ta**us
24/09/2025 புதன்கிழமை

முன் கோபத்தை குறையுங்கள். தனிப்பட்ட வேலையை மாறுபட்ட அணுகுமுறையால் முடித்துக் காட்டுவீர்கள். சிலவற்றிற்கு உங்கள் அவசர முடிவுகள் தான் காரணம் என்பதை உணர்வீர்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை ஓரளவு குறையும் . திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் வெற்றி பெறும் நாள்.
💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢

#மிதுனம் - Gemini
24/09/2025 புதன்கிழமை

குடும்பத்தினரை அனுசரித்துப் போங்கள். வெளிவட்டாரத்தில் யாரையும் விமர்சிக்க வேண்டாம். உறவினர், நண்பர்களுடன் நெருடல்கள் வந்து நீங்கும். வியாபாரத்தில் வேலையாட்களிடம் விவாதம் வேண்டாம். உத்யோகத்தில் மறைமுக தொந்தரவுகள் வந்து நீங்கும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.
💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢

#கடகம் - Cancer
24/09/2025 புதன்கிழமை

குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். நினைத்தது நிறைவேறும் நாள்.
💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢

#சிம்மம் - Leo
24/09/2025 புதன்கிழமை

கணவன்-மனைவிக்குள் அனுசரித்து போவது நல்லது. ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். உறவினர்களால் சங்கடங்கள் வரும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. சிலருக்கு லேசாக தலை வலிக்கும். கண் சம்மந்தமான பிரச்சனைகளில் அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்சனைகள் வரக்கூடும். உத்தியோகத்தில் முக்கிய பொறுப்புகள் அதிகரிக்கும். தடைகளைத் தாண்டி முன்னேறும் நாள்.
💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢

#கன்னி - Virgo
24/09/2025 புதன்கிழமை

குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். பரிசு பாராட்டு கிடைக்கும் நாள்.
💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢

#துலாம் - Libra
24/09/2025 புதன்கிழமை

கொஞ்சம் அலைச்சலும் சிறுசிறு ஏமாற்றமும் வந்து நீங்கும். அடுத்தவர்களை குறைக் கூறிக் கொண்டு இருக்காமல் உங்களை மாற்றிக் கொள்ளப் பாருங்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைவார்கள். இடம், பொருள், ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.
💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢

#விருச்சிகம் - Scorpio
24/09/2025 புதன்கிழமை

குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். புது நட்பு மலரும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். மனசாட்சிப்படி செயல்படும் நாள்.
💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢

#தனுசு - Sagittarius
24/09/2025 புதன்கிழமை

சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்ற போராட வேண்டியிருக்கும். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்தியோகத்தில் மறைமுக அவமானம் வந்து நீங்கும். பொறுமைத் தேவைப்படும் நாள்.
💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢

#மகரம் - Capricorn
24/09/2025 புதன்கிழமை

பழைய பிரச்சனைகளுக்கு சுமுகத் தீர்வு காண்பீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். மகளுக்கு நல்ல வரன் அமையும். எதிர்பாராத செலவுகள் வந்தாலும் எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வந்து சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் மனத் திருப்தி உண்டாகும். உழைப்பால் உயரும் நாள்.
💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢

#கும்பம் - Aquarius
24/09/2025 புதன்கிழமை

கம்பீரமாகப் பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்களால் பயனடைவீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். அரசியல் ஆதாயம் உண்டு. வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். தைரியமுடன் செயல்படும் நாள்.
💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢

#மீனம் - Pisces
24/09/2025 புதன்கிழமை

கணவன்-மனைவிக்குள் இருந்த மனஸ்தாபங்கள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியின் மதிப்பு உண்டாகும். மகிழ்ச்சி ஏற்படும் நாள்.
💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢

24/09/2025

தீயணைப்பு பணியில் ஈடுபடுத்தப்படும் ட்ரோன்கள்

துபாய்ல அல் பர்ஷாவில் உள்ள ஒரு கட்டிடத்தில் ஏற்பட்ட தீயை அணைக்க ‘Shaheen’ ட்ரோனை பயன்படுத்திய துபாய் சிவில் பாதுகாப்பு அமைச்சகம்.

துபாய் சிவில் பாதுகாப்புத் துறை, 1,200 லிட்டர் கொள்ளளவு கொண்ட தொட்டியுடன் கூடிய புதிய தலைமுறை ‘ஷாஹீன்’ ட்ரோன்களை சேவையில் இணைத்துள்ளது. இந்த ட்ரோன் 200 மீட்டர் உயரம் வரை உள்ள உயரமான கட்டிடங்களில் ஏற்படும் தீ விபத்துகளை விரைவாகவும், பாதுகாப்பாகவும் அணைக்க பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

காத்தான்குடி மாணவர்கள் செய்த தரமான செயல்செய்தி கருத்து பகுதியில்
23/09/2025

காத்தான்குடி மாணவர்கள் செய்த தரமான செயல்

செய்தி கருத்து பகுதியில்

23/09/2025

அமெரிக்காவில் ஜனாதிபதி அநுர!
வரவேற்றனர் இலங்கை தூதரக அதிகாரிகள்

ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்துகொள்வதற்காக நாட்டிலிருந்து நேற்றிரவு புறப்பட்டுச் சென்ற ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அமெரிக்காவை சென்றடைந்தார். நாளை கூட்டத்தொடரில் உரையாற்றவுள்ளார்

23/09/2025

அனுர அரசின் கீழ் எரிபொருள் விலைகள், ஆகஸ்ட் 31, 2025 வரையான காலத்தில்
92 ஒக்டேன் பெட்றோல் ரூ33;
95 ஒக்டேன் பெட்ரோல்: ரூ36; சாதாரண டீசல்: ரூ24; சூப்பர் டீசல்: ரூ39; மண்ணெண்ணெய்: ரூ17 என குறைந்துள்ளன - அமைச்சர் நளிந்த

வரலாற்றுச் சிறப்புமிக்க  #பாண்டிருப்பு ஸ்ரீ  #திரௌபதை அம்மன் ஆலய மகோற்சவம் இன்று ஆரம்பமானது
23/09/2025

வரலாற்றுச் சிறப்புமிக்க #பாண்டிருப்பு ஸ்ரீ #திரௌபதை அம்மன் ஆலய மகோற்சவம் இன்று ஆரம்பமானது

சவூதி அரேபியாவின் தேசிய நாள் இன்றைய தினம் (23) வெகு சிறப்பாக அனுட்டிக்கப்பட்டது
23/09/2025

சவூதி அரேபியாவின் தேசிய நாள் இன்றைய தினம் (23) வெகு சிறப்பாக அனுட்டிக்கப்பட்டது

23/09/2025

அம்பாறையில் #சலவைத்தூள் என்ற போர்வையில் ஏமாற்றும் கும்பல் - பொதுமக்கள் அவதானம்

சலவைத்தூள் என்ற போர்வையில் குறைந்த எடையுடன் மலிவு விலையில் விற்பனை செய்து பொதுமக்களை ஏமாற்றிய கும்பல் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு நுகர்வோர் அதிகார சபையின் புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அம்பாறை மாவட்ட நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை பொறுப்பதிகாரி சாலிந்த பண்டார நவரத்ன மற்றும் நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் புலன்விசாரணை அதிகாரிகளுக்கு பொதுமக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற தொலைபேசி மூலமான முறைப்பாட்டிற்கமை அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை நுகர்வோர் அதிகார சபையின் புலனாய்வு அதிகாரிகள் சுற்றி வளைத்து சோதனை மேற்கொண்டிருந்தனர்.

இதன் போது, மோசடி செய்யப்பட்டு கவர்ச்சிகரமான பொதி செய்யப்பட்ட நிலையில் சலவைத்தூள் என்ற பெயரில் 1 கிலோ 300 ரூபாவிற்கு பொதுமக்களுக்கு மலிவாக விற்பனை செய்யப்பட்டுள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணையிலிருந்து தெரிய வந்துள்ளது.

இன்று (23) கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் இது குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. இச்சலவைத்தூள்கள் 1 கிலோ என கூறப்பட்ட போதிலும் அதனை ரூபா 300 கொடுத்து வாங்கிச்சென்றவர்கள் நிறையின் அளவு குறைவாக இருப்பதைக்கண்டறிந்துள்ளனர்.

மேலும், அம்பாறை மாவட்டம், சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சந்தைப்பகுதியில் தற்காலிக கூடாரமொன்று அமைத்து குறித்த கும்பல் போலியான விளம்பரப்படுத்தலுடன் குறித்த விடயத்தை அரங்கேற்றியுள்ள நிலையில், சுமார் 197க்கும் அதிகமான எடை குறைக்கப்பட்ட சலவைத்தூள் 880 கிராம், 750 கிராம், 800 கிராம், 670 கிராம் பெட்டிகள் இவ்வாறு மீட்கப்பட்டிருந்தன.

இது தவிர, இச்சலவைத்தூள் நற்பிட்டிமுனை, காரைதீவு, பாண்டிருப்பு, மருதமுனை, பெரிய நீலாவணை பகுதிகளிலும் இவ்வாறு விற்பனை செய்யப்பட்ட நிலையில் பொதுமக்கள் அவற்றை மீண்டும் குறித்த ஏமாற்றுக்கும்பலிடம் திருப்பிக்கொடுத்து மீண்டும் தங்களது பணத்தைப் பெற்றுச்சென்றுள்ளனர்.

இவ்வாறான நிலையில் குறித்த மோசடிக்கும்பலின் சலவைத்தூளினை விற்பனை செய்வதற்கும் அதனை விளம்பரப்படுத்துவதற்கும் சில ஊடகங்களில் கடமையாற்றும் அறிவிப்பாளர்கள் ஊடகவியலாளர்கள் சுயாதீன செய்தியாளர்களும் உடந்தையாக இருப்பதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இவ்விடயம் தொடர்பில் தற்போது சட்ட நடவடிக்கைக்காக கல்முனை நீதிவான் நீதிமன்றில் வழங்குத்தாக்கல் செய்துள்ளதாக அம்பாறை மாவட்ட நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை தெரிவித்துள்ளதுடன், பொதுமக்கள் இவ்வாறான ஏமாற்றுக்கும்பலிடமிருந்து அவதானமாக இருக்குமாறு அம்பாறை மாவட்ட நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை தெரிவித்துள்ளது.

அண்மைக்காலமாக உடுதுணிகளை சுத்தமாக கழுவும் தூள் என விளம்பரங்கள் பரவலாக செய்யப்பட்டு கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பல்வேறு முக்கிய சந்திகள் வீதியோரங்களில் சலவைத்தூள்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

களுத்துறை வஸ்கடுவ பகுதியில் ரயிலுடன் மோதி சிதைந்து போன கார்👉 முழு விபரம் கருத்துப்பகுதியில்
23/09/2025

களுத்துறை வஸ்கடுவ பகுதியில் ரயிலுடன் மோதி சிதைந்து போன கார்

👉 முழு விபரம் கருத்துப்பகுதியில்

23/09/2025

களுத்துறை வஸ்கடுவ பகுதியில் ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளான கார் .

CCTV காட்சி

23/09/2025

மட்டக்களப்பு கருவப்பங்கேணியை சேர்ந்த தந்தையும் 22 வயது மகனும் ஐஸ் போதைப்பொருளுடன் கைது.

23/09/2025

இந்திய வான்வெளியில் பாகிஸ்தான் விமானங்கள் பறப்பதற்கான தடை அக்டோபர் 24 வரை நீட்டிப்பு!!

Address

London

Alerts

Be the first to know and let us send you an email when தமிழ் சந்தி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share