Arankal Media

Arankal Media அருப்புக்கோட்டை மற்றும் சுற்றுப் பகுதி மக்களின் நலனும் அக்கறையும் எங்கள் பிரதான நோக்கம்.

ஆதலால் நாம் அருப்புக்கோட்டை அரண்கள்
(357)

நாடு முழுவதும் இன்று முதல் ரயில் கட்டணம் உயர்வு நடைமுறைக்கு வருகிறது.
01/07/2025

நாடு முழுவதும் இன்று முதல் ரயில் கட்டணம் உயர்வு நடைமுறைக்கு வருகிறது.

வலிப்பு ஏற்பட்டு அஜித்குமார் இறப்பு: முதல் தகவல் அறிக்கை
30/06/2025

வலிப்பு ஏற்பட்டு அஜித்குமார் இறப்பு: முதல் தகவல் அறிக்கை

30/06/2025

திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், நிலகிரி, கோவை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, சென்னை, செங்கல்பட்டு, வேலூர், விருதுநகர் மற்றும், கன்னியாகுமரி ஆகிய 13 மாவட்டங்களில் இன்று இரவு 8:30 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

தண்ணீர் கேட்டும் கொடுக்கவில்லை - காவல் விசாரணையில் உயிரிழந்த அஜித்குமாரின் சகோதரர் நவீன்
30/06/2025

தண்ணீர் கேட்டும் கொடுக்கவில்லை - காவல் விசாரணையில் உயிரிழந்த அஜித்குமாரின் சகோதரர் நவீன்

அஜித் குமார் உடலில் 18 இடங்களில் காயம் -  5 மணி நேரம் நடைபெற்ற பிரேதப்பரிசோதனை
30/06/2025

அஜித் குமார் உடலில் 18 இடங்களில் காயம் - 5 மணி நேரம் நடைபெற்ற பிரேதப்பரிசோதனை

சிவகங்கை அருகே காவல்துறை விசாரணையில் இளைஞர் மரணமடைந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவ...
30/06/2025

சிவகங்கை அருகே காவல்துறை விசாரணையில் இளைஞர் மரணமடைந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். இவ்வழக்கில் தொடர்புடைய 6 காவலர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது விசாரணையும் மாற்றப்பட்டுள்ளது.

விசாரணையின் போது பலிநீதிபதி நேரில் ஆய்வு
30/06/2025

விசாரணையின் போது பலி
நீதிபதி நேரில் ஆய்வு

அஜித்குமார் என்ன தீவிரவாதியா? - காவல் துறைக்கு உயர் நீதிமன்றம் சரமாரி கேள்விமதுரை: ‘மடப்புரம் கோயில் காவலரை சாதாரண சந்தே...
30/06/2025

அஜித்குமார் என்ன தீவிரவாதியா? - காவல் துறைக்கு உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி

மதுரை: ‘மடப்புரம் கோயில் காவலரை சாதாரண சந்தேக வழக்கில் விசாரணைக்கு அழைத்துச் சென்று தாக்கியது ஏன்? அவர் என்ன தீவிரவாதியா?’ என உயர் நீதிமன்றம் மதுரை அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது.

உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியகிளாட் முன்பு அதிமுக வழக்கறிஞர்கள் மாரீஸ்குமார், ராஜராஜன், பாஜக வழக்கறிஞர் அருண் சுவாமிநாதன் ஆகியோர் இன்று (ஜூன் 30) காலை நேரில் ஆஜராகி, மடப்புரம் காளி கோயில் காவலர் அஜித்குமார் போலீஸ் காவலில் இறந்த விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்
எனக் கோரிக்கையை முன்வைத்தனர்

அப்போது அவர்கள், ‘மடப்புரம் காளி கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த பெண் ஒருவரின் காரில் இருந்த நகைகள் திருடப்பட்டதாக திருப்புவனம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில், கோயில் காவலரான அஜித்குமாரை போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். விசாரணையின்போது போலீஸார் அஜித்தை கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் அவர் உயிரிழந்தார்.

இதுபோன்ற சட்டவிரோத காவல் மரணங்களை ஏற்க முடியாது. இது தொடர்பாக உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’ என்றனர்.

இதையடுத்து, மடப்புரம் கோயில் காவலர் மரணம் வழக்கு தொடர்பாக உரிய விசாரணை நடத்தவும், போலீஸார் மீது கொலை வழக்கு பதிவு செய்யவும் கோரி அதிமுக வழக்கறிஞர் பிரிவு மாநில துணைச் செயலாளர் மாரீஸ்குமார் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நாளை (ஜூலை 1) விசாரணைக்கு வருகிறது.

முன்னதாக, நகை திருட்டு புகாரின் பேரில் தனிப்படை போலீஸார் நடத்திய விசாரணையின்போது மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி உயிரிழந்தார். இது தொடர்பாக தனிப்படை காவலர்கள் 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

பள்ளிகளில் வாட்டர் பெல் திட்டம்: அமலுக்கு வந்ததுதமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் மாணவ, மாணவிகள் தண்ணீர் அருந்துவதை உறுதி செ...
30/06/2025

பள்ளிகளில் வாட்டர் பெல் திட்டம்: அமலுக்கு வந்தது

தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் மாணவ, மாணவிகள் தண்ணீர் அருந்துவதை உறுதி செய்யும் 'வாட்டர் பெல்' திட்டம் இன்று நடைமுறைக்கு வந்தது. அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் தண்ணீர் குடிப்பதை உறுதி செய்யும் வகையில், ஒவ்வொரு நாளும் காலை 11 மணிக்கு, பகல் 1 மணிக்கு, பிற்பகல் 3 மணிக்கு என 3 முறை வாட்டர் பெல் அடிக்கப்படும், அப்போது மாணவர்கள் தண்ணீர் அருந்த வேண்டும்.

வெயிலின் தாக்கத்தால் குழந்தைகளிடையே நீர்ச்சத்து குறைபாடு ஏற்படுவதைத் தடுக்கவும் நீர்ச்சத்துக் குறைபாடால் மாணவர்களின் கற்றல் திறன் பாதிக்கப்படுவதைத் தடுக்கவும் இந்த திட்டம் கொண்டுவரப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்தது. இந்த நிலையில், இந்த திட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

இதன்படி, காலை 11 மணி, பிற்பகல் 1 மணி, மாலை 3 மணி என பள்ளிகளில் மணி ஒலிக்கும்போது மாணவர்கள் தவறாது தண்ணீர் அருந்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.வகுப்புச் சூழல் பாதிக்கப்படாத வகையில், பள்ளிகளில் 2 - 3 முறை வாட்டர் பெல் அடிக்க பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளிகளில் இந்த புதிய நடைமுறை பெற்றோர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

மருத்துவர்களின் சேவையை பாராட்டி மாட்டு வண்டியில் வந்த சீர்வரிசை... தஞ்சையில் நெகிழ்ச்சி சம்பவம்மருத்துவர்களின் சேவையை பா...
30/06/2025

மருத்துவர்களின் சேவையை பாராட்டி மாட்டு வண்டியில் வந்த சீர்வரிசை... தஞ்சையில் நெகிழ்ச்சி சம்பவம்
மருத்துவர்களின் சேவையை பாராட்டி நெல், வாழை, மா, பலா என 101 வகையான பொருட்களுடன் தஞ்சை மக்கள் தடபுடலாக சீர்வரிசை கொண்டு சென்ற நிகழ்வு பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது

தஞ்சாவூர்: தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவர்களின் மகத்தான சேவையை பாராட்டி, அப்பகுதி மக்கள் மாட்டு வண்டி பூட்டி, சீர்வரிசை எடுத்து வந்து பாராட்டிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

மருத்துவர்களை கடவுளுக்கு நிகராகவே மக்கள் பார்க்கின்றனர். அந்த வகையில், மக்களின் நலனை காக்க மகத்தான சேவை புரியும் மருத்துவர்களை போற்றும் விதமாக, முன்னாள் மேற்கு வங்க மாநில முதலமைச்சரும், சுதந்திரப் போராட்ட தியாகியுமான டாக்டர் பி.சி. ராய்-யின் பிறந்தநாளான ஜூலை 1ஆம் தேதி தேசிய மருத்துவர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது

இந்த நிலையில், தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்களின் சேவையை பாராட்டும் விதமாகவும், தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டும் அப்பகுதி மக்கள் ஒரு நெகிழ்ச்சிகரமான செயலை செய்துள்ளனர்.
அதவாது, நேற்று (ஜூன் 27) அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்தவர்கள் மற்றும் அவர்களின் உறவினர்கள் என 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒன்று சேர்ந்து மாட்டு வண்டி பூட்டி சீர்வரிசை எடுத்து வந்தனர்.

பின்னர், அந்த சீர்வரிசை பொருட்களை மருத்துவமனைக்குள் கொண்டு சென்று, அங்கிருந்த மருத்துவர்களுக்கு ஆரத்தி எடுத்தும், சால்வை அணிவித்தும் பாராட்டுக்களை தெரிவித்தனர். அதனைக் கண்ட மருத்துவர்கள் மகிழ்ச்சியில் பூரித்தனர்.

இந்த நிகழ்வு குறித்து தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் கூறியதாவது; மருத்துவர்களான நாங்கள் எங்கள் பணியை சிறப்பாக செய்து வருகிறோம். இதுபோல, பொதுமக்கள் சீர்வரிசை எடுத்து வந்து பாரட்டுவது என்பது, தங்களது பணியை மேலும் சிறப்பாக செய்ய ஊக்குவிக்கும் வகையில் உள்ளது என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

சென்னையில் இன்று முதல் இயக்கப்பட உள்ள தாழ்தள மின்சார பேருந்தின் சிறப்பம்சங்கள்..
30/06/2025

சென்னையில் இன்று முதல் இயக்கப்பட உள்ள தாழ்தள மின்சார பேருந்தின் சிறப்பம்சங்கள்..

அருப்புக்கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து புதிய பேருந்து நிலையம் செல்ல மினி பஸ்கள் இயக்கப் படுகின்றன.தினமும் காலையில் தா...
30/06/2025

அருப்புக்கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து புதிய பேருந்து நிலையம் செல்ல மினி பஸ்கள் இயக்கப் படுகின்றன.

தினமும் காலையில் தாம்பரம் - செங்கோட்டை ரயில், காலை மாலை வேளைகளில் வந்து செல்லும் பாசெஞ்செர் ரயில்கள் ஆகியவற்றில் வந்து செல்லும் பயணிகள் பயன்பெறும் வகையில் காலை 5 மணி, 7 மணி மற்றும் 20:30 மணிக்கு இப்பேருந்து ரயில் நிலையம் வந்து செல்கிறது

Address

1-1-33 Ramson Complex, Madurai Road
Aruppukkottai
626101

Website

Alerts

Be the first to know and let us send you an email when Arankal Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category