திருக்குர்ஆன் நற்செய்தி மலர்

  • Home
  • India
  • Bangalore
  • திருக்குர்ஆன் நற்செய்தி மலர்

திருக்குர்ஆன் நற்செய்தி மலர் இறைவனின் நற்செய்திகள் எளிய தமிழில் அனைத்து மக்களுக்கும்...

20/08/2025

| சென்னையில் நாய் கடித்து படுகாயமடைந்த நபர் உயிரிழப்பு - பிட்புல் ரக நாயை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்துச் சென்று காப்பகத்தில் அடைத்தனர்

| |

19/08/2025

| சென்னையில் நாய் கடித்து ஒருவர் உயிரிழப்பு!

| | |

19/08/2025

| தெருநாய் கடி - 4 வயது சிறுமி பலி!

| |

 #ஒன்றே_குலம்_ஒருவனே_இறைவன் இஸ்லாம்  மூன்று நம்பிக்கைகளை மனித மனங்களில் ஆழமாக விதைப்பதன் மூலம் மனிதனை பாவங்களில் ஈடுபடுவ...
19/08/2025

#ஒன்றே_குலம்_ஒருவனே_இறைவன்
இஸ்லாம் மூன்று நம்பிக்கைகளை மனித மனங்களில் ஆழமாக விதைப்பதன் மூலம் மனிதனை பாவங்களில் ஈடுபடுவதில் இருந்து தடுத்து கட்டுப்பாடு மிக்கவனாக ஆக்குகிறது. மேலும் மூடநம்பிக்கைகளில் இருந்தும் பிரிவினை வாதங்களில் இருந்தும் விடுவித்து உலகளாவிய சகோதரத்துவத்தையும் மனித சமத்துவத்தையும் ஒற்றுமையையும் நிலைநாட்டுகிறது.
1. #ஒன்றே_குலம்:
மனிதர்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! அவரிலிருந்து அவரது துணையைப் படைத்தான். அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும்,பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான். (திருக்குர்ஆன் 4:1)
(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்குத் தகுதி வாய்ந்த ஒரே இறைவன் என்று பொருள்)

அதாவது நிறம், இனம், நாடு, மொழி, செல்வம், கல்வி, அந்தஸ்து, பதவி போன்றவை மூலம் உண்டாகும் வேற்றுமைகளைத் தாண்டி சக மனிதன் தன் சகோதரனே என்பதோடு அவர்கள் ஒவ்வொருவருக்கும் இந்த பூமியில் உரிமைகள் உள்ளன என்றும் அவற்றை அனைவரும் மதித்து வாழவேண்டும் என்று கற்பிக்கிறது இஸ்லாம்.

2.. #ஒருவனே_இறைவன்:
சொல்வீராக: இறைவன் ஒருவனே, அவன் தேவைகள் அற்றவன் அவன் யாரையும் பெற்றெடுக்கவும் இல்லை. அவனையும் யாரும் பெற்றெடுக்கவும் இல்லை. அவனுக்கு நிகராக யாரும் எதுவும் இல்லை. (திருக்குர்ஆன் 112:1-4)

#இறைவனை_இடைத்தரகர்_இன்றி_வணங்கு
இறைவனின் தன்மைகளை இவ்வாறு புரிந்துகொண்டு இடைத்தரகர்களுக்கோ மூடநம்பிக்கைகளுக்கோ வீண் சடங்குசம்பிரதாயங்களுக்கோ இடம் கொடாமல் அவனை நேரடியாக வணங்க வேண்டும் என்று கற்பிக்கிறது இஸ்லாம்.
(நபியே!) என்னுடைய அடியார் என்னைப் பற்றி உம்மிடம் கேட்டால் நிச்சயமாக நான் அவர்களுக்கு மிகச் சமீபமாக உள்ளேன். என்னை அழைத்தால் அழைப்பவரின் அழைப்பிற்கு நான் பதிலளிக்கிறேன். அவர்கள் நேர்வழி பெறுவதற்காக என்னையே அழைக்கட்டும், என்னையே விசுவாசம் கொள்ளட்டும். (திருக்குர்ஆன் 2:186)
#பாவம்_பெருகுவதை_தடுப்போம்!
படைத்தவனைத்தவிர மற்றவை அனைத்தும் படைப்பினங்களே. எனவே அந்த இறைவனுக்கு பதிலாக படைப்பினங்களை - அவை உயிருள்ளவை ஆயினும் சரி உயிரும் உணர்வுமற்ற உருவங்களாயினும் சரி – அவற்றை வணங்குவதோ அல்லது கடவுள் என்று கற்பிப்பதோ மோசடியும் பாவமும் ஆகும் என்கிறது இஸ்லாம். இச்செயல் இறைவனைச் சிறுமைப்படுத்துவதுடன் மனித மனங்களில் இறைவனைப்பற்றி அலட்சியப் போக்கை உண்டாக்கி விடுகிறது. அதனால் மேற்கூறியவாறு நல்லொழுக்கத்தைப் பேணுவதற்கு மிகப்பெரும் தடையாகிறது. சமூகத்தில் பாவங்கள் பெருக காரணமாகிறது. மேலும் இவ்வாறு மனிதர்கள் வெவ்வேறு விதமாக கடவுளைக் கற்பனை செய்து வணங்க முற்படும்போது ஒரே மனித குலம் பிளவுபட்டு ஒருவரையொருவர் அடித்துக்கொண்டு மாய்வது, இடைத்தரகர்கள் இறைவனின் பெயரால் மக்களை ஏய்த்துப் பிழைப்பது என்பனவும் நிகழ்கின்றன. பல குழப்பங்களுக்கும் தீமைகளுக்கும் காரணமாகும் இப்பாவத்தை மட்டும் இறைவன் மன்னிப்பதே இல்லை என்கிறது திருக்குர்ஆன்.

#இறுதித்தீர்ப்பு_நாள் #வாழ்க்கையின்_நோக்கம்
ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்; அன்றியும் - இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்;. எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ. அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்;.இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை. (திருக்குர்ஆன் 3:185)

அதாவது இவ்வுலகம் ஒருநாள் முழுமையாக அழிக்கப்பட்டு மீண்டும் இறைவனின் கட்டளை வரும்போது அனைத்து மனிதர்களும் இறுதி விசாரணைக்காக உயிர்கொடுத்து எழுப்பப்படுவார்கள். புண்ணியவான்களுக்கு அளவிலா இன்பங்கள் நிறைந்த சொர்க்கமும் பாவிகளுக்கு கடும் வேதனைகள் நிறைந்த நரகமும் நிரந்தர இருப்பிடங்களாக வழங்கப்படும்.
ஆக இந்த தற்காலிக வாழ்க்கை என்பது ஒரு பரீட்சையாகவும் இவ்வுலகம் அதற்கான பரீட்சைக் கூடமாகவும் படைக்கப்பட்டுள்ளது என்பதே இஸ்லாம் நினைவூட்டும் உண்மையாகும். இதை மறந்து வாழ்வதே மனித குலத்தின் அமைதியின்மைக்குக் காரணமாகும்.

நடைமுறை வழிகாட்டுதல்
மேற்படி நம்பிக்கைகளை வெறும் போதனையோடு நிறுத்திவிடாது அவற்றில் மனிதன் வாழ்நாள் முழுக்க நிலைத்திருக்க அவனுக்கு தெளிவான ஒரு வாழ்க்கைத் திட்டத்தையும் வழிகாட்டுதலையும் தனது இறுதி வேதமாம் திருக்குர்ஆன் மூலமும் தனது இறுதித்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை முன்மாதிரி மூலமும் வழங்குகியுள்ளான் இறைவன். மனித வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் வழிகாட்டுபவையாக அவை அமைந்துள்ளதை ஆராய்வோர் அறியலாம்.
==============
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
http://quranmalar.blogspot.com/2012/11/blog-post_24.html
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!
http://quranmalar.blogspot.com/2015/07/blog-post_25.html
இதைப் படிக்காவிட்டால் இழப்பு! பேரிழப்பு!
http://quranmalar.blogspot.com/2012/10/blog-post_31.html
நாம் ஏன் பிறந்தோம்?
http://quranmalar.blogspot.com/2014/05/blog-post_15.html
இதயங்களை வென்ற இறைத்தூதர்
http://quranmalar.blogspot.com/2016/01/blog-post_5.html

என்ன பயன்?  “நாமிருவர் நமக்கு மூவர்’’ என்று தொடங்கி மூவர் இருவராகி இறுதியில் “நாமிருவர் நமக்கு ஒருவர்” என்று சுருக்கினர்...
17/08/2025

என்ன பயன்?
“நாமிருவர் நமக்கு மூவர்’’ என்று தொடங்கி மூவர் இருவராகி இறுதியில் “நாமிருவர் நமக்கு ஒருவர்” என்று சுருக்கினர். இன்னும் சில சமூகப் பொறுப்பில்லாத கயவர்கள் “நாமே இருவர், நமக்கு ஏன் இன்னொருவர்?” என்று சிந்திக்கவும் செயல்படுத்தவும் செய்தனர். அப்படி இருக்கும்போது அந்த ஒருவர் பெண்ணாய் வந்துவிட்டால் என்ன நடக்கும்? அனைவருக்கும் தெரிந்ததே! ஆம், பெண் இனம் பல்வேறு விதமாக கொன்றொழிக்கப்பட்டது. பிறக்கும் முன்பே மருத்துவ மனைகளில் அவளைக் கொன்றார்கள், தப்பித் தவறி பிறந்துவிட்டால் கள்ளிப் பாலும் அரிசிமணிகளும் அவளைப் பதம் பார்த்தன! இவ்வாறு எந்தக் குற்ற உணர்வும் இல்லாமல் இந்த கூட்டக் கொலைகள் நாடு எங்கும் நிறைவேறின. இன்னும் நிறைவேறிக் கொண்டுவருகின்றன. நாட்டில் வனவிலங்குகளும் கால்நடைகளும் அழிவது கண்டு முதலைக்கண்ணீர் வடித்த “மனிதாபிமானிகளுக்கு’ தன் இனம் அழிவது கண்டு அழுகை வரவில்லை! என்ன ஆச்சரியம்! #இஸ்லாம்_ஒன்றே_தீர்வு www.quranmalar.com/2014/09/blog-post_10.html

ுகம் | உலகில் குறைந்து வரும் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க AGI உதவும் - OpenAI CEO சாம் ஆல்ட்மேன்!

| |

16/08/2025

#அமைதிக்கு_வழி
#நாட்டுப்பற்று_என்றால்_என்ன?
எவ்வாறு தீமைகளைக் களைவது?
தீமைகளை எவ்வாறு சமூகத்தில் இருந்து களைவது என்பதையும் அதை மீறி அந்தத் தீமைகள் சமூகத்தில் உடலெடுத்து தலைவிரித்து ஆடும்போது அவற்றை எவ்வாறு கட்டுக்குக் கொண்டுவருவது என்பதையும் எல்லாம் வல்ல இறைவனே நமக்குக் கற்றுத் தருகிறான்.
#ஒழுக்கம்_விதைப்பது_முதல்_படி!
தட்டிக் கேட்க யாரும் இல்லை என்ற உணர்வு மக்களிடையே மேலோங்கி இருப்பதால் நாட்டில் ஒழுக்க சீர்கேடுகளும் குற்றங்களும் கட்டுக்கடங்காமல் பெருகி வருகின்றன. இலஞ்சம், ஊழல், மோசடி, கொள்ளை, பாலியல் வன்முறைகள், சிசுக்கொலைகள், முதியோர் கருணைக் கொலைகள், நம்பிக்கை துரோகம், போன்ற அனைத்து தீமைகளையும் ஒழிக்க தனிமனிதன் திருந்தினால்தான் முடியும். தனிமனிதன் திருந்தவேண்டும் என்றால் மனிதனுக்குள் உண்மையான இறைநம்பிக்கை விதைக்கப்பட வேண்டும். படைத்த இறைவனைப் பற்றிய உண்மையான நம்பிக்கையை பகுத்தறிவு ஏற்றுக்கொள்ளும் விதத்தில் விதைக்க வேண்டும்.
அதாவது இவ்வுலகத்தைப் படைத்து பரிபாலித்து வரும் அந்த சர்வவல்லமை கொண்ட அந்த இறைவன் ஒரே ஒருவனே. அவன் மட்டுமே வணக்கத்துக்கு உரியவன். அவன் இவ்வுலகை ஒரு பரீட்சைக் கூடமாக ஆக்கியுள்ளான் இந்த தற்காலிக வாழ்வில் மனிதர்கள் செய்யும் பாவங்களுக்கு தண்டனையாக நரகமும் புண்ணியங்களுக்குப் பரிசாக சொர்க்கமும் மறுமையில் கிடைக்கும் என்ற உண்மையை மக்களுக்கு சிறுவயது முதலே ஊட்டி வளர்க்க வேண்டும். அப்போதுதான் உண்மையான இறையச்சம் உருவாகும்.
==============
#திருக்குர்ஆன்_நற்செய்தி_மலர்
#இஸ்லாம்_என்றால்_என்ன? #முஸ்லிம்_என்றால்_யார்?
http://quranmalar.blogspot.com/2012/10/blog-post_25.html
#அல்லாஹ்_என்றால்_யார்?
http://quranmalar.blogspot.com/2012/10/blog-post_8.html
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
http://quranmalar.blogspot.com/2012/11/blog-post_24.html
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!
http://quranmalar.blogspot.com/2015/07/blog-post_25.html
இதைப் படிக்காவிட்டால் இழப்பு! பேரிழப்பு!
http://quranmalar.blogspot.com/2012/10/blog-post_31.html
நாம் ஏன் பிறந்தோம்?
http://quranmalar.blogspot.com/2014/05/blog-post_15.html
இதயங்களை வென்ற இறைத்தூதர்
http://quranmalar.blogspot.com/2016/01/blog-post_5.html

16/08/2025

#அமைதிக்கு_வழி
#நாட்டுப்பற்று_என்றால்_என்ன?
எவ்வாறு தீமைகளைக் களைவது?
தீமைகளை எவ்வாறு சமூகத்தில் இருந்து களைவது என்பதையும் அதை மீறி அந்தத் தீமைகள் சமூகத்தில் உடலெடுத்து தலைவிரித்து ஆடும்போது அவற்றை எவ்வாறு கட்டுக்குக் கொண்டுவருவது என்பதையும் எல்லாம் வல்ல இறைவனே நமக்குக் கற்றுத் தருகிறான்.

#ஒழுக்கம்_விதைப்பது_முதல்_படி!
தட்டிக் கேட்க யாரும் இல்லை என்ற உணர்வு மக்களிடையே மேலோங்கி இருப்பதால் நாட்டில் ஒழுக்க சீர்கேடுகளும் குற்றங்களும் கட்டுக்கடங்காமல் பெருகி வருகின்றன. இலஞ்சம், ஊழல், மோசடி, கொள்ளை, பாலியல் வன்முறைகள், சிசுக்கொலைகள், முதியோர் கருணைக் கொலைகள், நம்பிக்கை துரோகம், போன்ற அனைத்து தீமைகளையும் ஒழிக்க தனிமனிதன் திருந்தினால்தான் முடியும். தனிமனிதன் திருந்தவேண்டும் என்றால் மனிதனுக்குள் உண்மையான இறைநம்பிக்கை விதைக்கப்பட வேண்டும். படைத்த இறைவனைப் பற்றிய உண்மையான நம்பிக்கையை பகுத்தறிவு ஏற்றுக்கொள்ளும் விதத்தில் விதைக்க வேண்டும்.
அதாவது இவ்வுலகத்தைப் படைத்து பரிபாலித்து வரும் அந்த சர்வவல்லமை கொண்ட அந்த இறைவன் ஒரே ஒருவனே. அவன் மட்டுமே வணக்கத்துக்கு உரியவன். அவன் இவ்வுலகை ஒரு பரீட்சைக் கூடமாக ஆக்கியுள்ளான் இந்த தற்காலிக வாழ்வில் மனிதர்கள் செய்யும் பாவங்களுக்கு தண்டனையாக நரகமும் புண்ணியங்களுக்குப் பரிசாக சொர்க்கமும் மறுமையில் கிடைக்கும் என்ற உண்மையை மக்களுக்கு சிறுவயது முதலே ஊட்டி வளர்க்க வேண்டும். அப்போதுதான் உண்மையான இறையச்சம் உருவாகும்.
==============
#திருக்குர்ஆன்_நற்செய்தி_மலர்
#இஸ்லாம்_என்றால்_என்ன? #முஸ்லிம்_என்றால்_யார்?
http://quranmalar.blogspot.com/2012/10/blog-post_25.html
#அல்லாஹ்_என்றால்_யார்?
http://quranmalar.blogspot.com/2012/10/blog-post_8.html
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
http://quranmalar.blogspot.com/2012/11/blog-post_24.html
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!
http://quranmalar.blogspot.com/2015/07/blog-post_25.html
இதைப் படிக்காவிட்டால் இழப்பு! பேரிழப்பு!
http://quranmalar.blogspot.com/2012/10/blog-post_31.html
நாம் ஏன் பிறந்தோம்?
http://quranmalar.blogspot.com/2014/05/blog-post_15.html
இதயங்களை வென்ற இறைத்தூதர்
http://quranmalar.blogspot.com/2016/01/blog-post_5.html

07/08/2025

| கேரளாவில் அரசு மருத்துவர்கள் பணி நீக்கம் - அமைச்சரின் அதிரடி உத்தரவு

| |

04/08/2025

அதிரடி விலைக்கு ஏழு நூல்கள்!
ரூ.340 மதிப்புள்ள 7 புத்தகங்கள் ரூ 200 க்கு
தள்ளுபடி மற்றும் STOCK CLEARANCE SALE!
1. #உலகம்_இப்படித்தான்_அழியும் (pages 101)
சாட்ஜிபிடி துணையோடு ஆதாரங்களுடன்
- மகத்தான் யதார்த்தத்தை எதிர்கொள்ள துணை செய்யும் தெளிவான நூல்!
2. #நாம்_ஏன்_பிறந்தோம்? (pages 32)
நம் வாழ்க்கைக்கு பின்னால் நோக்கம் உள்ளதா அல்லது வீணுக்காக நாம் உள்ளோமா? தெளிவை ஏற்படுத்தும் சிறு நூல்!
3. விண்ணியல் பாதை வெற்றிப் பயணம் (p 24)
- விண்வெளியின் ஆச்சரியம் மிக்க உண்மைகளும் அவற்றில் மனிதன் பெறவேண்டிய படிப்பினைகளும்
4. #தவறான_புரிதல்கள் (pages 258)
- இஸ்லாததின் மீது தொடுக்கப்படும் குற்றச்சாட்டுகளும் அவற்றுக்கான தெளிவான பதில்களும்.
5. #நபிகள்_நாயகம் - வாழ்க்கை, போதனைகள், சாதனைகள், விமர்சனங்கள். (p 72)
- தலைப்பில் கூறப்படும் அனைத்து விஷயங்களையும் விளக்கும் தெளிவான நூல.
6. #அமைதிக்கு_வழி (p 32)
- தனி மனித மற்றும் சமூக அமைதிக்கான வழி இஸ்லாம்தான் என்பதை தெளிவாக விளக்கும் நூல்.
7 . #இல்லறத்தை_நல்லறமாய்_துவங்கிடவே .. (p 24)
-- இஸ்லாமிய திருமணம், வழிமுறைகள், ஒழுங்குகள், வாழ்க்கைத் துணை தேர்வு, வரதட்சணைக்கு மாற்றாக வதுதட்சனை, திருமண விருந்து, இன்னும் இவை பற்றிய புத்தகம்.
(திருமண அழைப்பிதழோடு அன்பளிப்பாக கொடுக்கத் தகுந்த புத்தகம்)
=========
அனைத்து நூல்களும் நல்லிணக்கம் கருதி உங்கள் மாற்றுமத நண்பர்களுக்கும் குடும்பங்களுக்கும் நூலகங்களுக்கும் அன்பளிப்பாக வழங்க உகந்தவை.

 #அமைதிக்கு_வழி *திருக்குர்ஆன் நற்செய்திமலர்* உங்கள் இல்லம்தேடி வர இந்த லிங்கை நீங்கள் க்ளிக் செய்து சந்தாதாரர் ஆகலாம் இ...
31/07/2025

#அமைதிக்கு_வழி
*திருக்குர்ஆன் நற்செய்திமலர்* உங்கள் இல்லம்தேடி வர இந்த லிங்கை நீங்கள் க்ளிக் செய்து சந்தாதாரர் ஆகலாம் இன்ஷாஅல்லாஹ் https://www.tayyib-hope.in/product/30713872/Thiru-Quran-Narcheithi-Malar-1-Year-Subscription

மது தீமைகளின் தாய்

Address

Tayyib Stores
Bangalore
560017

Alerts

Be the first to know and let us send you an email when திருக்குர்ஆன் நற்செய்தி மலர் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to திருக்குர்ஆன் நற்செய்தி மலர்:

Share

Category