05/11/2025
ஏன் இஸ்லாம் தேவை என்பதற்கான 12 காரணங்கள்
💥 1- தெளிவான கடவுள் கொள்கை
இஸ்லாம் கடவுளைப் பற்றிய தர்க்கரீதியான மற்றும் எளிமையான கொள்கையை வழங்குகிறது - அவன் ஒரு முழுமையான கடவுள் - அவன் ஒரு மனிதனோ அல்லது மனிதனின் மகனோ அல்லது ஒரு சிலையோ அல்லது ஒரு மூவரில் ஒருவனோ (திரித்துவம்) அல்லது வரையறுக்கப்பட்டவனோ அல்லது உருவாக்கப்பட்டவனோ அல்ல! - அவன் முற்றிலும் ஒப்பிடமுடியாதவன், தனித்துவமானவன். அனைத்து நல்ல குணங்கள், பெயர்கள், பண்புக்கூறுகள் மற்றும் ஏகத்துவம் ஆகியவற்றைக் கொண்டவன்.
நபியே நீர் கூறுவீராக! “அல்லாஹ் அவன் ஒருவனே. அவன் தேவைகள் ஏதும் இல்லாதவன். அவன் எவரையும் பெற்றெடுக்கவில்லை அவனையும் யாரும் பெற்றெடுக்கவில்லை. அன்றியும் அவனைப்போல் எவரும் எதுவும் இல்லை.” (திருக்குர்ஆன் 112: 1-4)
💥2- அனைத்து இறைத் தூதர்களையும் ஏற்றுக்கொள்ளுதல்
இஸ்லாம் இறைவனின் அனைத்து தூதர்களையும் நபிமார்களையும் ஏற்றுக்கொள்கிறது - சுமார் 124000 தூதர்கள் மற்றும் நபிமார்கள், (அவர்கள் அனைவருக்கும் சாந்தி உண்டாகட்டும்.)
இஸ்லாத்தில், நாம் இறைவனின் அனைத்து தீர்க்கதரிசிகளையும் நேசிக்கிறோம், அவர்களில் எவரையும் நாம் மறுக்க முடியாது - உதாரணமாக யூத மதம் போன்ற மற்ற மதங்களில் - அவர்கள் இயேசுவையும் முஹம்மதுவையும் நிராகரிக்கிறார்கள் - கிறிஸ்தவத்தில் அவர்கள் முஹம்மதுவை நிராகரிக்கிறார்கள், ஆனால் இஸ்லாத்தில் அனைத்து தீர்க்கதரிசிகளும் பாகுபாடு இல்லாமல் நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.
💥 3- இடைத்தரகர் இல்லை
இஸ்லாத்தில் மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையில் இடைத்தரகர் இல்லை -- நீங்கள் நேரடியாக இறைவனை வணங்கவும் இறைவனிடம் பிரார்த்திக்கவும் செய்யலாம் - இடையில் ஒரு இறைத்தூதரோ, புண்ணியவான்களோ என யாரும் தேவையில்லை. நீங்கள் கடவுளுடன் நேரடியாக தொடர்பு கொள்கிறீர்கள்.
(நபியே!) என்னுடைய அடியார் என்னைப் பற்றி உம்மிடம் கேட்டால் நிச்சயமாக நான் அவர்களுக்கு மிகச் சமீபமாக உள்ளேன். என்னை அழைத்தால் அழைப்பவரின் அழைப்பிற்கு நான் பதிலளிக்கிறேன். அவர்கள் நேர்வழி பெறுவதற்காக என்னையே அழைக்கட்டும், என்னையே விசுவாசம் கொள்ளட்டும். (திருக்குர்ஆன் 2:186)
💥 4- இஸ்லாம் என்பது பண்பின் பெயர்
இஸ்லாம் ஏதேனும் ஒரு நபரின் அல்லது குலத்தின் அல்லது கோத்திரத்தின் அல்லது ஒரு நாட்டின் அல்லது குழுவின் பெயரால் அறியப்படவில்லை. இஸ்லாம் என்ற வார்த்தையின் பொருள் உண்மையான ஏக இறைவனுக்கு அடிபணிதல் என்பதாகும். யாரேனும் எந்த நேரத்திலும் உண்மையான இறைவனுக்கு மட்டுமே பணிந்து வாழ்ந்தால் அவர் ஒரு ஒரு முஸ்லிம் (கீழ்படிபவர்) என்று அழைக்கப்படுகிறார். கீழ்படிந்து வாழும்வரைதான் அவர் முஸ்லிம். கீழ்படிவதை நிறுத்திவிட்டால் அவர் முஸ்லிம் அல்ல.
💥 5- அனைத்து நற்செயலும் வழிபாடே!
இஸ்லாத்தில் வணக்கம் அல்லது வழிபாடு என்பது வெறும் சடங்குகளைப் பற்றியது அல்ல. இறைவன் பொருந்திக்கொள்ளும் எந்தவொரு செயலையும் உள்ளடக்கிய ஒரு விரிவான சொல். எல்லா நற்செயல்களும் வழிபாட்டின் வகைகளாகும்: புன்னகை, வேலையில் அல்லது வியாபாரத்தில் நேர்மையாக இருத்தல், நல்ல வார்த்தைகளைக் கூறுதல், தன் துணையை மென்மையாக நடத்துதல், குடும்பத்துக்காக உழைத்தல், குடும்பத்துக்காக சமையல் செய்தல், துணி துவைத்தல் இவை போன்ற அனைத்தும் இறைவனால் பெரிதும் மதிக்கப்படுகின்றன. புண்ணியங்களாகப் பதிவு செய்யப்படுகின்றன. மாறாக இறைவன் பொருந்திக்கொள்ளாத எந்தவொரு செயலும் பாவங்களாகப் பதிவு செய்யப்படுகின்றன. பொய் சொல்வது, அவதூறு பேசுதல், புறம்பேசுதல், ஏமாற்றுவது, அப்பாவி மக்களை தாக்குதல், திருட்டு, விபச்சாரம், சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிப்பது போன்ற அனைத்தும் பாவச்செயல்களே!
💥 6- தெளிவான பாவமன்னிப்புக் கொள்கை
இஸ்லாத்தைப் பொறுத்தவரையில் பாவம் செய்தவர்கள், செய்த பாவத்தை இறைவனிடம் வருந்தி நேரடியாக முறையிட்டு அவனிடம் அதை மன்னிக்குமாறு கோருவது ஒன்றே பாவங்கள் மன்னிக்கப் படுவதற்கான வழி. வேறு குறுக்கு வழிகள் கிடையாது. ஏதேனும் ஒரு இறைத்தூதரை அல்லது மகானை விசுவசிப்பதாலோ, ஏதேனும் புண்ணிய நீரில் நீராடுவதாலோ, அதை உடலில் தடவிக் கொள்வதாலோ, ஏதேனும் புண்ணியத்தலங்களுக்கு காணிக்கை அல்லது அர்பணிப்புகள் செய்வதாலோ பாவமன்னிப்பு என்பது கிடைக்காது.
இறைவன் எப்போதும் மன்னிப்பவனாக உள்ளான் - நீங்கள் எப்போதும் மனந்திரும்பினால் (மரணத்திற்கு முன்). நீங்கள் எவ்வளவு பெரிய பாவங்கள் செய்தாலும் அவன் உங்களை ஏற்றுக்கொள்கிறான். அவன் தன் கிருபையால் நம்மை மன்னிக்கிறான் - அவன் மன்னிக்க எந்த விலையும் கொடுக்கப்படாது. எந்த ஒரு மனிதரின் அல்லது இறைத்தூதரின் அல்லது புண்ணியாத்மாவின் இரத்தமும் பாவமன்னிப்புக்கு
விலைபேசப்படுவது இஸ்லாமிய கொள்கைக்கு எதிரானது. (மீதியை வாசிக்க க்ளிக் செய்யுங்கள்) https://www.quranmalar.com/2024/08/12.html
=================
இஸ்லாம் என்றால் என்ன? முஸ்லிம் என்றால் யார்?
http://quranmalar.blogspot.com/2012/10/blog-post_25.html
அல்லாஹ் என்றால் யார்?
http://quranmalar.blogspot.com/2012/10/blog-post_8.html
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
http://quranmalar.blogspot.com/2012/11/blog-post_24.html
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!
http://quranmalar.blogspot.com/2015/07/blog-post_25.html
இதைப் படிக்காவிட்டால் இழப்பு! பேரிழப்பு!
http://quranmalar.blogspot.com/2012/10/blog-post_31.html
நாம் ஏன் பிறந்தோம்?
http://quranmalar.blogspot.com/2014/05/blog-post_15.html