திருக்குர்ஆன் நற்செய்தி மலர்

  • Home
  • India
  • Bangalore
  • திருக்குர்ஆன் நற்செய்தி மலர்

திருக்குர்ஆன் நற்செய்தி மலர் இறைவனின் நற்செய்திகள் எளிய தமிழில் அனைத்து மக்களுக்கும்...

*6 நூல்கள் வாங்குங்கள்! ஆங்கிலக் (English) குர்ஆனை அன்பளிப்பாகப் பெறுங்கள் !*= ரூ.340 மதிப்புள்ள 6 புத்தகங்கள் ரூ 290 க்...
06/11/2025

*6 நூல்கள் வாங்குங்கள்! ஆங்கிலக் (English) குர்ஆனை அன்பளிப்பாகப் பெறுங்கள் !*
= ரூ.340 மதிப்புள்ள 6 புத்தகங்கள் ரூ 290 க்கு
= கூடவே இலவசமாக Tamil Quran Hard bind (Arabic-Tamil) பெறுங்கள்!*
= மிகவும் உறுதியான பைண்டிங் - உறுதியான அட்டை- அரபி தெளிவான கொட்டை எழுத்துக்களில்- அன்றாட பயன்பாட்டுக்கும் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்பதற்கும் மிகவும் உகந்தது. தள்ளுபடி மற்றும் STOCK CLEARANCE SALE!
*1. #உலகம்_இப்படித்தான்_அழியும்* (pages 101)
சாட்ஜிபிடி துணையோடு ஆதாரங்களுடன்
- மகத்தான் யதார்த்தத்தை எதிர்கொள்ள துணை செய்யும் தெளிவான நூல்!
*2. #நாம்_ஏன்_பிறந்தோம்?* (pages 32)
நம் வாழ்க்கைக்கு பின்னால் நோக்கம் உள்ளதா அல்லது வீணுக்காக நாம் உள்ளோமா? தெளிவை ஏற்படுத்தும் சிறு நூல்!
*3. #தவறான_புரிதல்கள்* (pages 258)
- இஸ்லாததின் மீது தொடுக்கப்படும் குற்றச்சாட்டுகளும் அவற்றுக்கான தெளிவான பதில்களும்.
4. * #இல்லறத்தை_நல்லறமாய்_துவங்கிடவே* .. (p 24)
-- இஸ்லாமிய திருமணம், வழிமுறைகள், ஒழுங்குகள், வாழ்க்கைத் துணை தேர்வு, வரதட்சணைக்கு மாற்றாக வதுதட்சனை, திருமண விருந்து, இன்னும் இவை பற்றிய புத்தகம்.
(திருமண அழைப்பிதழோடு அன்பளிப்பாக கொடுக்கத் தகுந்த புத்தகம்)
*5. #அமைதிக்கு_வழி* (p 32)
- தனி மனித மற்றும் சமூக அமைதிக்கான வழி இஸ்லாம்தான் என்பதை தெளிவாக விளக்கும் நூல்.
6. *மது - தீமைகளின் தாய்!* - குடும்பங்களில் கலகம் , உற்பத்தித் திறன் குறைவு, சாலை விபத்துக்கள், இன்னும் இவைபோன்ற அனைத்து தீமைகளுக்கும் தாயாக விளங்கும் மதுவை எப்படி உறுதியான முறையில் ஒழிப்பது? இஸ்லாம் எவ்வாறு உலகில் நான்கில் ஒரு பங்கு மக்களை மதுவின் தீமையில் இருந்து பாதுகாக்கிறது போன்ற விவரங்கள் அடங்கிய சிறு நூல்!
=========
தேவைப்படுவோர் *9886001357* என்ற நம்பருக்கு '6BQ' என்று வாட்சப் மெசேஜ் அனுப்புங்கள்!

6 நூல்கள் மற்றும் திருக்குரான் பெற கீழ்கண்ட லிங்க்கை கிளிக் செய்து ஆர்டர் செய்யுங்கள்
https://www.tayyib-hope.in/.../3071.../Islamic-Books-Combo-1

05/11/2025
அந்த சம்பவத்தை நிகழ்த்திய அந்த அறுவரையும் பேட்டி கண்டாம்..‘ஏன் நீங்கள் இதைச் செய்தீர்கள்?’கேள்வியைக் கேட்டதுதான் தாமதம்....
05/11/2025

அந்த சம்பவத்தை நிகழ்த்திய அந்த அறுவரையும் பேட்டி கண்டாம்..

‘ஏன் நீங்கள் இதைச் செய்தீர்கள்?’

கேள்வியைக் கேட்டதுதான் தாமதம். பதில்கள் சரமாரியாக வந்து விழுந்தன.

= நாங்கள் இளைஞர்கள். எங்களுக்கு எங்கள் உணர்வுகளைத் தீர்க்க வேண்டும் என்று தோன்றியது. அதற்கான சூழ்நிலை அமைந்து வந்ததால் அவ்வாறு செய்தோம்.

= பெண் என்பவள் ஆணின் இச்சையைத் தீர்க்கத்தானே படைக்கப் பட்டிருக்கிறாள். அவளாகவே இணங்கியிருந்தா விபரீதமான ஏதும் நிகழ்ந்திருக்காது.

= அந்தப் பெண்ணின் ஆடை எங்களைத் தூண்டியது. அவ்வளவு செக்ஸியாவா டிரெஸ் உடுத்துவது. அதுவே எங்களை அழைப்பது போல இருந்துச்சு . அழைப்பை ஏற்றது தப்பா சார்?

= அவள் வேறு ஒரு பையன்கூட கொஞ்சும்போது எங்களுக்கும் இணங்கினா என்ன தப்பு சார்?

= டேக் இட் ஈசி சார், இது என்ன நாட்டில நடக்காத ஒண்ணா? ஒவ்வொரு வீட்டிலும் நடக்கிறதுதானே!

= நாட்டில பரவலா சினிமாவிலும் டிவியிலும் பூங்காக்களிலும் பொது இடங்களிலும் தினமும் ‘டெமோ’ செய்து காட்டுகிறாங்களே அதையெல்லாம் பார்த்துட்டு சும்மா இருக்க முடியுமா? என்ன கேள்வி சார் இது?

= சின்ன வயசுலே இருந்து தேக்கி வெச்ச ஆசைகளை பின்னே எப்போதுதான் நிறைவேற்றுவது?

நாம் அடுத்த கேள்வியைக் கேட்டோம்.

‘ஏம்பா, ஏன் அடுத்தவன் பெண்ணை நாடுகிறீர்கள்? இந்த வயதில் திருமணம் செய்து விட்டு அமைதியாக அனுபவித்து விட்டுப் போகவேண்டியதுதானே!”

அதற்கும் முண்டியடித்துக் கொண்டு பதில் சொன்னார்கள் அவர்கள்.

= இந்த விலைவாசியில் கல்யாணமா? யோசிக்கவே முடியாதே!

= பொண்ணுக எல்லாம் வேலைக்குப் போறாங்க. படிப்பு ஜாஸ்த்தி. திமிர் ஜாஸ்த்தி. அவங்களுக்கு அடங்கி நடக்க முடியுமா?

= கல்யாணம் பண்ணினால் இந்தக் காலத்திலே அவங்க விசுவாசமா நடப்பங்களா? யாருடைய பிள்ளைக்கோ நான் தந்தையாகணுமா?

Click to continue

உங்களைப் படைத்தவன் தரும் தீர்வுகள் இவை..

ஏன் இஸ்லாம் தேவை என்பதற்கான 12 காரணங்கள்💥 1- தெளிவான கடவுள் கொள்கை  இஸ்லாம் கடவுளைப் பற்றிய தர்க்கரீதியான மற்றும் எளிமைய...
05/11/2025

ஏன் இஸ்லாம் தேவை என்பதற்கான 12 காரணங்கள்
💥 1- தெளிவான கடவுள் கொள்கை
இஸ்லாம் கடவுளைப் பற்றிய தர்க்கரீதியான மற்றும் எளிமையான கொள்கையை வழங்குகிறது - அவன் ஒரு முழுமையான கடவுள் - அவன் ஒரு மனிதனோ அல்லது மனிதனின் மகனோ அல்லது ஒரு சிலையோ அல்லது ஒரு மூவரில் ஒருவனோ (திரித்துவம்) அல்லது வரையறுக்கப்பட்டவனோ அல்லது உருவாக்கப்பட்டவனோ அல்ல! - அவன் முற்றிலும் ஒப்பிடமுடியாதவன், தனித்துவமானவன். அனைத்து நல்ல குணங்கள், பெயர்கள், பண்புக்கூறுகள் மற்றும் ஏகத்துவம் ஆகியவற்றைக் கொண்டவன்.
நபியே நீர் கூறுவீராக! “அல்லாஹ் அவன் ஒருவனே. அவன் தேவைகள் ஏதும் இல்லாதவன். அவன் எவரையும் பெற்றெடுக்கவில்லை அவனையும் யாரும் பெற்றெடுக்கவில்லை. அன்றியும் அவனைப்போல் எவரும் எதுவும் இல்லை.” (திருக்குர்ஆன் 112: 1-4)

💥2- அனைத்து இறைத் தூதர்களையும் ஏற்றுக்கொள்ளுதல்

இஸ்லாம் இறைவனின் அனைத்து தூதர்களையும் நபிமார்களையும் ஏற்றுக்கொள்கிறது - சுமார் 124000 தூதர்கள் மற்றும் நபிமார்கள், (அவர்கள் அனைவருக்கும் சாந்தி உண்டாகட்டும்.)
இஸ்லாத்தில், நாம் இறைவனின் அனைத்து தீர்க்கதரிசிகளையும் நேசிக்கிறோம், அவர்களில் எவரையும் நாம் மறுக்க முடியாது - உதாரணமாக யூத மதம் போன்ற மற்ற மதங்களில் - அவர்கள் இயேசுவையும் முஹம்மதுவையும் நிராகரிக்கிறார்கள் - கிறிஸ்தவத்தில் அவர்கள் முஹம்மதுவை நிராகரிக்கிறார்கள், ஆனால் இஸ்லாத்தில் அனைத்து தீர்க்கதரிசிகளும் பாகுபாடு இல்லாமல் நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.

💥 3- இடைத்தரகர் இல்லை
இஸ்லாத்தில் மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையில் இடைத்தரகர் இல்லை -- நீங்கள் நேரடியாக இறைவனை வணங்கவும் இறைவனிடம் பிரார்த்திக்கவும் செய்யலாம் - இடையில் ஒரு இறைத்தூதரோ, புண்ணியவான்களோ என யாரும் தேவையில்லை. நீங்கள் கடவுளுடன் நேரடியாக தொடர்பு கொள்கிறீர்கள்.
(நபியே!) என்னுடைய அடியார் என்னைப் பற்றி உம்மிடம் கேட்டால் நிச்சயமாக நான் அவர்களுக்கு மிகச் சமீபமாக உள்ளேன். என்னை அழைத்தால் அழைப்பவரின் அழைப்பிற்கு நான் பதிலளிக்கிறேன். அவர்கள் நேர்வழி பெறுவதற்காக என்னையே அழைக்கட்டும், என்னையே விசுவாசம் கொள்ளட்டும். (திருக்குர்ஆன் 2:186)

💥 4- இஸ்லாம் என்பது பண்பின் பெயர்
இஸ்லாம் ஏதேனும் ஒரு நபரின் அல்லது குலத்தின் அல்லது கோத்திரத்தின் அல்லது ஒரு நாட்டின் அல்லது குழுவின் பெயரால் அறியப்படவில்லை. இஸ்லாம் என்ற வார்த்தையின் பொருள் உண்மையான ஏக இறைவனுக்கு அடிபணிதல் என்பதாகும். யாரேனும் எந்த நேரத்திலும் உண்மையான இறைவனுக்கு மட்டுமே பணிந்து வாழ்ந்தால் அவர் ஒரு ஒரு முஸ்லிம் (கீழ்படிபவர்) என்று அழைக்கப்படுகிறார். கீழ்படிந்து வாழும்வரைதான் அவர் முஸ்லிம். கீழ்படிவதை நிறுத்திவிட்டால் அவர் முஸ்லிம் அல்ல.

💥 5- அனைத்து நற்செயலும் வழிபாடே!
இஸ்லாத்தில் வணக்கம் அல்லது வழிபாடு என்பது வெறும் சடங்குகளைப் பற்றியது அல்ல. இறைவன் பொருந்திக்கொள்ளும் எந்தவொரு செயலையும் உள்ளடக்கிய ஒரு விரிவான சொல். எல்லா நற்செயல்களும் வழிபாட்டின் வகைகளாகும்: புன்னகை, வேலையில் அல்லது வியாபாரத்தில் நேர்மையாக இருத்தல், நல்ல வார்த்தைகளைக் கூறுதல், தன் துணையை மென்மையாக நடத்துதல், குடும்பத்துக்காக உழைத்தல், குடும்பத்துக்காக சமையல் செய்தல், துணி துவைத்தல் இவை போன்ற அனைத்தும் இறைவனால் பெரிதும் மதிக்கப்படுகின்றன. புண்ணியங்களாகப் பதிவு செய்யப்படுகின்றன. மாறாக இறைவன் பொருந்திக்கொள்ளாத எந்தவொரு செயலும் பாவங்களாகப் பதிவு செய்யப்படுகின்றன. பொய் சொல்வது, அவதூறு பேசுதல், புறம்பேசுதல், ஏமாற்றுவது, அப்பாவி மக்களை தாக்குதல், திருட்டு, விபச்சாரம், சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிப்பது போன்ற அனைத்தும் பாவச்செயல்களே!

💥 6- தெளிவான பாவமன்னிப்புக் கொள்கை
இஸ்லாத்தைப் பொறுத்தவரையில் பாவம் செய்தவர்கள், செய்த பாவத்தை இறைவனிடம் வருந்தி நேரடியாக முறையிட்டு அவனிடம் அதை மன்னிக்குமாறு கோருவது ஒன்றே பாவங்கள் மன்னிக்கப் படுவதற்கான வழி. வேறு குறுக்கு வழிகள் கிடையாது. ஏதேனும் ஒரு இறைத்தூதரை அல்லது மகானை விசுவசிப்பதாலோ, ஏதேனும் புண்ணிய நீரில் நீராடுவதாலோ, அதை உடலில் தடவிக் கொள்வதாலோ, ஏதேனும் புண்ணியத்தலங்களுக்கு காணிக்கை அல்லது அர்பணிப்புகள் செய்வதாலோ பாவமன்னிப்பு என்பது கிடைக்காது.
இறைவன் எப்போதும் மன்னிப்பவனாக உள்ளான் - நீங்கள் எப்போதும் மனந்திரும்பினால் (மரணத்திற்கு முன்). நீங்கள் எவ்வளவு பெரிய பாவங்கள் செய்தாலும் அவன் உங்களை ஏற்றுக்கொள்கிறான். அவன் தன் கிருபையால் நம்மை மன்னிக்கிறான் - அவன் மன்னிக்க எந்த விலையும் கொடுக்கப்படாது. எந்த ஒரு மனிதரின் அல்லது இறைத்தூதரின் அல்லது புண்ணியாத்மாவின் இரத்தமும் பாவமன்னிப்புக்கு
விலைபேசப்படுவது இஸ்லாமிய கொள்கைக்கு எதிரானது. (மீதியை வாசிக்க க்ளிக் செய்யுங்கள்) https://www.quranmalar.com/2024/08/12.html
=================
இஸ்லாம் என்றால் என்ன? முஸ்லிம் என்றால் யார்?
http://quranmalar.blogspot.com/2012/10/blog-post_25.html
அல்லாஹ் என்றால் யார்?
http://quranmalar.blogspot.com/2012/10/blog-post_8.html
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
http://quranmalar.blogspot.com/2012/11/blog-post_24.html
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!
http://quranmalar.blogspot.com/2015/07/blog-post_25.html
இதைப் படிக்காவிட்டால் இழப்பு! பேரிழப்பு!
http://quranmalar.blogspot.com/2012/10/blog-post_31.html
நாம் ஏன் பிறந்தோம்?
http://quranmalar.blogspot.com/2014/05/blog-post_15.html

25/10/2025

ஒரே மண்ணிலிருந்து உருவாகி, ஒரே தாய் தந்தையில் இருந்து உருவான நமது மானிடக் குடும்பத்தின் அங்கத்தினர்கள் உலகெங்கும் பல்கிப் பெருகிப் பரவி உள்ளோம். ஆனால் இன்று நாட்டின் பெயராலும், இனத்தின் பெயராலும் மொழியின் பெயராலும் ஜாதிகளின் பெயராலும் ஒருவரை ஒருவர் பயங்கரமான முறைகளில் தாக்கிக் கொண்டு நம்மை நாமே அழித்துக் கொண்டு வருகிறோம்.
இந்நிலைமை ஏற்படுவதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று மனிதனிடம் குடிகொண்டுள்ள குழப்பம் நிறைந்த கடவுள் கொள்கைகளும் மூட நம்பிக்கைகளுமே!
பூமியில் மீணடும் தர்மம் நிலைநாட்டப்பட வேண்டுமானால் மனித இதயங்களில் கடவுளைப் பற்றியும் இவ்வுலக வாழ்க்கையைப் பற்றியும் தெளிவான மற்றும் அறிவார்ந்த நம்பிக்கை விதைக்கப் பட வேண்டும்.
அதாவது என்னைப் படைத்து பரிபாலித்து வரும் இறைவன் ஒருவன் உள்ளான். அவன் சர்வ வல்லமை உள்ளவன். இந்த தற்காலிக வாழ்க்கையை முடித்துக் கொண்டு அவனிடமே நான் திரும்ப வேண்டியுள்ளது. அவன் நான் செய்த புண்ணியங்களுக்கு பரிசு தருவான். அதே போல் நான் பாவங்கள் செய்தால் தண்டிக்கவும் செய்வான் என்ற அடிப்படை உணர்வு ஒவ்வொரு மனித மனங்களுக்குள்ளும் ஆழமாக விதைக்கப் பட வேண்டும். அப்போதுதான் மனிதன் பாவம் செய்யாமல் இருப்பான், புண்ணியங்கள் செய்வதற்கு ஆர்வம் கொள்வான்.
இந்த அடிப்படையை மக்களுக்கு போதிக்க இறைவன் அவ்வப்போது தனது தூதர்களை அனுப்பினான். ஒவ்வொரு காலத்திலும் இவ்வுலகின் பல பாகங்களுக்கும் இறைவன் புறத்திலிருந்து வந்த இறைத்தூதர்கள் மிகத்தெளிவான கடவுள் கொள்கையையே போதித்தார்கள். “இவ்வுலகைப் படைத்து உங்களைப் பரிபாலித்து வரும் இறைவன் ஒரே ஒருவனே. அவனை மட்டுமே வணங்குங்கள். அவனை விட்டு விட்டு படைப்பினங்கள் எதையும் வணங்காதீர்கள். அவன் அல்லாத எதையும் இறைவன் என்று சொல்லாதீர்கள், அவனுக்கு உருவங்கள் எதையும் சமைக்காதீர்கள், ஏனெனில் அவனைப் போல் எதுவுமே இங்கு இல்லை. அவனை யாரும் நேரடியாக அணுகலாம். அவனை வணங்குவதற்கு இடைத் தரகர்கள் தேவை இல்லை.”

“படைப்பினங்களைப் பாருங்கள். பகுத்தறிவைப் பயன்படுத்தி படைத்தவனை உணருங்கள். அவனது அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துங்கள். அவனது கட்டளைகளுக்கு கீழ்படிந்து வாழுங்கள். அவ்வாறு வாழ்ந்தால் அதற்குப் பரிசாக மறுமை வாழ்க்கையில் சொர்க்கத்தை வழங்குவான். நீங்கள் செய்நன்றி கொன்று அவனுக்கு மாறு செய்தால் அதற்க்கு தண்டனையாக உங்களை நரகத்தில் நுழைவிப்பான்’ என்றெல்லாம் போதித்தார்கள்

ஆனால் இறைத்தூதர்களின் மறைவுக்குப் பிறகு பிற்கால மக்கள் ஷைத்தானின் தூண்டுதலால்..
Click to continue
https://www.quranmalar.com/2012/11/blog-post_7422.html
#இஸ்லாம்_ஒன்றே_தீர்வு
#இஸ்லாம்_ஏன்_எதிர்ப்புக்குள்ளாகிறது?
#இஸ்லாம்_என்றால்_என்ன?

 #சிலைவழிபாட்டில்_என்ன_சிக்கல் கடவுளைப் புரிந்து கொள்ளாமையால் மனித இனம் சந்திக்கும் இழப்புகள்
25/10/2025

#சிலைவழிபாட்டில்_என்ன_சிக்கல்
கடவுளைப் புரிந்து கொள்ளாமையால் மனித இனம் சந்திக்கும் இழப்புகள்

உங்களைப் படைத்தவன் தரும் தீர்வுகள் இவை..

 #பாவமும்_புண்ணியமும்இவை நமது மொழிவழக்கில் உள்ள வார்த்தைகளேயானாலும் இவற்றையும் பெரும்பாலான மக்கள் தவறாகவே புரிந்து வைத்த...
19/10/2025

#பாவமும்_புண்ணியமும்
இவை நமது மொழிவழக்கில் உள்ள வார்த்தைகளேயானாலும் இவற்றையும் பெரும்பாலான மக்கள் தவறாகவே புரிந்து வைத்துள்ளனர். ஒரு சிலர் பெற்றோர்கள் அல்லது முன்னோர்கள் எதை செய்யக் கூடாது என்று கற்பித்தார்களோ அதையே பாவம் என்று கருதுகின்றனர். சிலர் நாட்டு மக்கள் அல்லது பெரும்பான்மை எதை தீமை என்று தீர்மானிக்கிறார்களோ அதையே பாவம் என்று கருதுகின்றனர். இன்னும் சிலர் தங்களது மனோ இச்சை எதை தீமை என்று சொல்கிறதோ அதையே பாவம் என்பர். இவ்வாறே புண்ணியத்தையும் தீர்மானிக்கின்றனர். ஆனால் நாம் புரிந்துகொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால் இந்த உலகத்துக்கு உரிமையாளனும் பரிபாலகனும் ஆன இறைவன் அவனுக்கு மட்டுமே பாவம் எது புண்ணியம் எது என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் உள்ளது என்பதே. அவனே அனைத்துப் படைப்பினங்களின் நுணுக்கங்களையும் தேவைகளையும் முழுமையாக அறிந்தவனும் அவை ஒவ்வொன்றினதும் உரிமைகளை பங்கிடக் கூடியவனும் அவனே. எல்லாவற்றையும் விட முக்கியமாக மறுமையில் இறுதித்தீர்ப்பு நாளன்று நமது வினைகளை விசாரித்து தீர்ப்பு வழங்க உள்ளவனும் அவனே. எனவே இறைவன் எதை செய்யாதே என்று தடுக்கிறானோ அதுவே பாவம்! எதை நம்மை செய் என்று ஏவுகிறானோ அதுவே அதுவே புண்ணியம்!

உங்களைப் படைத்தவன் தரும் தீர்வுகள் இவை..

Address

Tayyib Stores
Bangalore
560017

Alerts

Be the first to know and let us send you an email when திருக்குர்ஆன் நற்செய்தி மலர் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to திருக்குர்ஆன் நற்செய்தி மலர்:

Share

Category