Tamil Anglers

Tamil Anglers 🎣 மீன் பிடிச்சா மனசு பறக்கும்! Catching Big Dreams across Tamil Nadu. Whats up guys!

Fishing | Ocean, River & Lake Adventures

Subscribe on YouTube
https://www.youtube.com/
https://www.instagram.com/tamil_anglers Tamil Anglers - The Ultimate Fishing Experience in Tamil! 🎣🌊

Welcome to Tamil Anglers, the home of passionate fishing enthusiasts! We bring you exciting fishing adventures, expert tips, and unforgettable moments from lak

es, rivers, and deep-sea fishing. Whether you love catch and cook, bait fishing, or big game fishing, we’ve got something for you! We are Tamil Anglers and this channel is dedicated to fishing, diving, cooking and being outdoors. Whether you are here for the fishing tips, the catch and cooks, or enjoy the big game fishing, there is something for you! As always, I'll be seeing all of you in the next video!

🔥 What You’ll Find on This Channel:
✅ Fishing Tips & Tricks 🎣
✅ Big Catch Adventures 🐟
✅ Catch & Cook Recipes 🍳
✅ River, Lake & Deep-Sea Fishing 🌊
✅ Fishing Gear Reviews 🏕️

Join our growing Tamil fishing community and explore the thrill of fishing like never before! Don’t forget to Subscribe and hit the 🔔 Bell Icon for the latest videos!

📌 Follow Us for More Updates:
👉 Instagram: https://www.instagram.com/tamil_anglers
👉 Facebook: https://www.facebook.com/TamilAnglers
👉 Youtube: https://www.youtube.com/

🎣 Keep Fishing, Keep Exploring! 🎣

tips !

27/09/2024

பெற்றோர்கள், பெற்றோர்களாகவே இருங்கள், ஒரு போதும் நண்பராகாதீர்கள்...!

பணி முடிந்து வெகு தொலைவு பயணம் செய்து களைப்புடன் திரும்பிய நான் என் மனைவியை கடும் காய்ச்சலுடன் படுக்கையில் படுத்திருக்கக் கண்டேன்.

எனக்காக அந்த ஜுரத்திலும் சமையல் செய்து உணவை ட்ரேயில் வைத்து மூடி வைத்திருந்தாள்.

நான் வழக்கமாக உண்ணும் எல்லாவற்றையும் சமைத்து வைத்திருந்தாள்.

அவளுக்கு தான் என் மேல் எவ்வளவு கரிசனம். உடல் நலம் சரியில்லாத நேரத்தில் கூட எனக்காக சமைத்து வைத்திருக்கிறாளே.

சாப்பிட அமர்ந்த பின் தான் ஏதோ குறைவதை உணர்ந்தேன்.

டிவி பார்த்துக் கொண்டிருந்த என் வளர்ந்த மகளிடம், செல்லம் என் மாத்திரையையும் தண்ணீரும் எடுத்துக் கொண்டு வா என்று கூறினேன்.

அவளை நான் தொந்தரவு செய்ததை விரும்பாமல் கண்ணை உருட்டி அவள் அதிருப்தியைத் தெரிவித்து விட்டு நான் கேட்டதைக் கொண்டு வந்து கொடுத்தாள்.

ஒரு நிமிடம் கழித்து சாம்பாரில் உப்பு குறைவாக இருந்ததால் அவளை எடுத்துக் கொண்டு வரப் பணித்தேன்.

அவள் சை என்று கூறிக் கொண்டே காலை அழுத்தமாக வைத்து நடந்து போய்க் கொண்டு வந்து கொடுத்தாள்.

அவ்வாறு அவள் செய்தது நிச்சயம் நான் அவளைத் தொந்தரவு செய்ததை அவள் விரும்பவில்லை என்று எனக்குத் தெரிந்தது.

நான் சில நிமிடம் கழித்து மீண்டும் செல்லம் என்று அழைத்த போது அவள் கையில் இருந்த டிவி ரிமோட்டை பட்டென்று மேஜையில் வைத்து விட்டு...

அப்பா உங்களுக்கு இப்போது என்ன வேண்டும் ?

எத்தனை முறை தான் என்னை எழுப்புவீர்கள்?

நானும் தான் நாள் முழுதும் வேலை பார்த்து விட்டு வந்திருக்கிறேன்.

எனக்கும் களைப்பாக தான் இருக்கிறது என்று கூறினாள்.

நான் ஸாரிம்மா என்று சொல்லி விட்டு சாப்பிட்ட பாத்திரங்களை எடுத்து சமையலறை சிங்க்கில் போட்டுவிட்டு என் கண்களில் இருந்து உருண்டோடிய கண்ணீரைத் துடைத்துக் கொண்டேன்.

என் இதயம் அழுதது...

நான் அவ்வப்போது எனக்குள் கேட்டுக் கொள்ளும் கேள்வி இது தான்.

இந்தக் கால இளைய தலைமுறையினர் ஏன் இது போல் நடந்து கொள்கிறார்கள் ?

நாம் அவர்களுக்கு அளவுக்கு அதிகமாக சுதந்திரம் கொடுத்தது தவறோ ?

அவர்களுக்கு நல்லொழுக்கத்தையும் பண்பாட்டையும் கற்றுக் கொடுக்கத் தவறி விட்டோமோ ?

நாம் அவர்களை நண்பர்கள் போல் நடத்தியது தவறோ ?

அவர்களுக்கு வாழ்க்கையில் ஆயிரம் நண்பர்கள் கிடைப்பார்கள்...

ஆனால் பெற்றோர்கள் நாம் மட்டும் தானே !!!

பெற்றோருக்கான கடமையை நாம் செய்யாவிட்டால் வேறு யார் செய்யப் போகிறார்கள் ?

இன்று பிறந்த குழந்தைக்குக் கூட சுயமரியாதை இருப்பதைப் பற்றிக் கவலைப் படுகிறது இந்த உலகம்.

ஆனால் பெற்றோர்களுக்கு மட்டும் சுயமரியாதை இல்லையா ???

அவர்கள் தங்கள் குழந்தைகளின் ஈகோக்களை வளர்த்து விட்டுக் கொண்டே இருக்க வேண்டுமா ?

இன்றைய பெரும்பாலான பெற்றோர்கள் கூறுவது இதைத்தான்...

இந்தக் காலத்தில் எந்தக் குழந்தைகள் பெற்றோருக்குக் கீழ்படிகிறார்கள் ?

இதற்குக் காரணம் என்ன ?

இதேபோல் தான் அன்று ஒரு பார்ட்டியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த போது, என் 50 வயது நண்பர் தன் கார் சாவியை மறந்து போய்க் காரிலேயே விட்டு விட்டு வந்து விட்டதால் தன் டீன் ஏஜ் பெண்ணை எடுத்துக் கொண்டு வரப் பணித்தார்.

அவள் நான் என்ன உனக்கு வேலைக்காரியா ?

நீயே போய் எடுத்துக் கொள் என்றாள்.

அவரும் சிரித்துக் கொண்டே இல்லை மா நான் தான் உனக்கு வாழ்நாள் முழுவதும் சேவகன் என்று கூறிக் கொண்டே போய் கார் சாவியை எடுத்துக் கொண்டு வந்தார்.

இதுவே இன்று சமுதாயத்தில் நடக்கிறது.

இதற்குக் காரணம் என்ன ?

நாம் நமது குழந்தைகளுக்கு தன்னம்பிக்கையைப் பற்றியும், சுயமரியாதையைப் பற்றியும் கற்றுக் கொடுக்க விரும்பினால் முதலில் இதைக் கற்றுக் கொடுக்க வேண்டும்.

அவர்கள் வாழ்க்கையில் எவ்வளவு பணக்காரர்களாகவும், புகழ் பெற்றவர்களாகவும் இருந்தாலும்...

அவர்களுடைய பெற்றோர்கள் என்றும் பெற்றோர்கள் தான் !!!

அவர்கள் என்றுமே, அவர்கள் பெற்றோருக்கு சமமாக மாட்டார்கள்.

பெற்றோருக்கு நான் சொல்ல விரும்புவது இது தான்.

நீங்கள் உங்கள் குழந்தைகளை நண்பர்களாக நடத்தாதீர்கள்...

அவர்களுக்கு வாழ்க்கையில் ஆயிரம் நண்பர்கள் கிடைக்கலாம்.

ஆனால் பெற்றோர்கள் நீங்கள் மட்டுமே !!!

அதனால் அவர்களை நீங்கள் வளர்ப்பதற்கு விதிமுறைகளை வகுப்பதற்கும், அந்த விதிமுறைகளை அவர்கள் மதிப்பதற்கும், அவர்களைக் கட்டாயப் படுத்துவதற்கு ஒரு போதும் அஞ்சாதீர்கள்...!!!

பகிர்வு :- INFOSYS - திரு.நாராயண மூர்த்தி.

  Hit like if you agree
17/09/2024

Hit like if you agree

16/09/2024

தலைவர் 73 வயசு,மஞ்சுவாரியர் 46 வயசு...இந்த காசு பணம் இதெல்லாம் தாண்டி இயல்பாகவே நாம நம்மலோட உடல் ஆரோக்கியத்துக்கும் Fitn...
16/09/2024

தலைவர் 73 வயசு,
மஞ்சுவாரியர் 46 வயசு...

இந்த காசு பணம் இதெல்லாம் தாண்டி இயல்பாகவே நாம நம்மலோட உடல் ஆரோக்கியத்துக்கும் Fitness -க்கும்
முக்கியத்துவம் தர வேண்டியது ரெம்ப அவசியம்...

சும்மா நடிகன் நடிகை எத்தனை வயசானாலும் அப்படியே இருக்காங்கன்னு சொல்றமே தவிற,நாம ஏன் அப்படி இல்லன்னு யோசிக்குறது இல்ல...

முதல்ல இந்த மேக்கப் அந்த Concept குள்ளவே போகாதிங்க,
காசு இருக்கு எப்படி வேணா இருப்பாங்க,
கேமரா அப்படி காட்டுதுன்னும் நினைக்காதிங்க...

என்ன இருந்தாலும் இது எல்லாத்துக்கும் உடல் ஒத்துழைக்குதுல...

முப்பது வயசு மேல பாதி தூரம் நடந்தாலே நமக்குலாம் மூச்சு வாங்குது,
எழுபது வயசுல இப்படி ஆடனும்ல..?!
காரணம் உடல் ஆரோக்கியம் தான்.

குண்டா இருக்கவுங்க,
ஒல்லியா இருக்கவுங்க,
கருப்பா இருக்கவுங்க,
கலரா இருக்கவுங்கன்னுலாம் பிரிச்சி பாக்காம,
நாம நம்மோட உடல் நம்ம ஆரோக்கியம்னு பாருங்க.
Self care ரெம்ப ரெம்ப முக்கியம்...

நடிகர்,நடிகைகள் அப்படியே இருக்க காரணம் அவர்கள் அவர்களுடைய அழகுக்கும்,ஆரோக்கியத்திற்கும் தரும் முக்கியத்துவம் தான்...

நாமலும் நம்மல அழகா காட்டிக்கனும்னு நினைக்குறதுல தப்பே இல்ல அதும் ஒரு தன்னம்பிக்கை ...

See இதுல அழகுன்றது நிறம் சார்ந்தோ,முகம் சார்ந்தோ,
உருவம் சார்ந்தோ இல்ல...

நம்ம கண்ணுக்கு நாம ஆரோக்கியமா அழகா தெரிஞ்சாலே அதுவே பெரிய Confident...

உடை தேர்வு,
சரும பராமரிப்பு,
உடற்பயிற்சி,
யோகா,
நடை பயிற்சி,
உணவு கட்டுப்பாடு இவை எல்லாத்துக்கும் கண்டிப்பா முக்கியத்துவம் குடுக்கனும்...

இருக்குற நம்மல நாம அப்படியே இன்னும் மெருகேற்றி கொள்வதில் தவறே இல்லை...

இந்த வயசுல இது தேவையா..??
ஆமா கல்யாணம் ஆச்சு குழந்தை பிறந்தாச்சுன்னு நீங்களே உங்கள
குறைச்சு மதிப்பீடு செய்யாதிங்க...

எப்படி ஓடி ஓடி சம்பாதிக்குறிங்களோ,
அதுல பாதிய உங்க உடலுக்கும்,ஆரோக்கியத்துக்கும் நேரம் ஒதுக்குங்க...

வாழ்க்கைய அழகா என்றும் இளமையா வாழுங்க...
எல்லாத்துக்கும் மனசுதான் காரணம்...!!
❤❤❤

12/09/2024

பிள்ளைகள் பெண்ணாய்
பிறந்து விட்டதே
தங்கம் வாங்கிச் சேர்க்கவேண்டும்
நிலம் வாங்கி சேர்க்க வேண்டும்
செலவை குறைத்து
சேமித்த பணத்தை
வங்கியில் சேர்கனும் என்று
ஏங்கித் தவிக்காதீர்கள்
தூக்கம் மறந்து துவழாதீர்கள்
துக்கம் கொள்ளாதீர்கள்

நீங்கள் ஆற்ற வேண்டியது
ஒன்றே ஒன்று தான்
பெண் பிள்ளைகளுக்கு
நல்ல கல்வியைக் கொடுங்கள்

எதையும் எதிர்த்து
ஏறி மிதித்து வாவென்று
தன்னம்பிக்கையை கொடுங்கள்
விரும்பிய படிப்பை படிக்க வையுங்கள்
இசை பயில நடனம் பயில
தற்காப்பு கலைகள் பழக ஆர்வமாயிருந்தால்
அதற்கான வழிகளை செய்து கொடுங்கள்

இன்னொரு வீடு
இல்லத்தரசியாய் வாழப் போறவள் என்று
சமையல் பழக்குவதை விடவும்
சட்டி பானை கழுவப் பழக்குவதை விடவும்
தையல் பழக்குவதை விடவும்

பிரச்சனைகளின் போது
எப்படி மீள வேண்டும்
பிரிவுகளின் போது
தனித்து எப்படி வாழ வேண்டுமென்று
தையிரியத்தை சொல்லிக் கொடுங்கள்

அதட்ட வேண்டிய நேரம்
அதட்டி வளவுங்கள்
தட்டிக் கொடுக்க வேண்டிய நேரம்
தட்டிக் கொடுங்கள்

பெண்ணுக்கு அறிவை விடவும்
தங்கமோ நிலமோ பெரியதில்லை
படிப்பிருந்தால்
தங்கமும் நிலமும் பணமும்
தானாய் வந்து கதவு தட்டும்

உங்கள் வளர்ச்சியைக் கண்டு
உலகம் கைகள் தட்டும்

சிறப்புடன் வாழ
சிரிப்புடன் வாழ வைப்போம்

10/09/2024

07/09/2024


Happy Vinayaka Chaturthi
07/09/2024

Happy Vinayaka Chaturthi


06/09/2024

அறிவின் விளக்காய் நின்று விடியலை சொல்லும்,  அன்பின் செழிப்பாய் மாணவன் வாழ்வை நிரப்பும்,  ஆசிரியர் நீர் ஒவ்வொரு நாளும் வா...
05/09/2024

அறிவின் விளக்காய் நின்று விடியலை சொல்லும்,
அன்பின் செழிப்பாய் மாணவன் வாழ்வை நிரப்பும்,
ஆசிரியர் நீர் ஒவ்வொரு நாளும் வாழ்த்தப்படும்
உங்களின் பணியே உலகம் முழுதும் போற்றப்படும்!

கற்றல் கற்று வளர்க்கும் நல் மனிதர் நீர்,
கருத்துக் கொடுத்து பல விதம் நெறி கற்று,
வாழ்வின் பாதையில் வெற்றியைச் சுடரும்,
ஆசிரியர் தினம் வாழ்த்துக்கள் மாலை உதிரும்!

Happy Teachers day #2024
05/09/2024

Happy Teachers day
#2024

Address

Chennai

Website

https://instagram.com/Tamil_Anglers

Alerts

Be the first to know and let us send you an email when Tamil Anglers posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tamil Anglers:

Share

Category