Vetri Bala

Vetri Bala வாழ்க வளமுடன்

ஒரு சிறந்த கொள்கை அறிமுக / அறிவிப்பு கூட்டம். அதை மாபெரும் மாநாடாக வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கும் Actor Vijay அவர்க...
27/10/2024

ஒரு சிறந்த கொள்கை அறிமுக / அறிவிப்பு கூட்டம். அதை மாபெரும் மாநாடாக வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கும் Actor Vijay
அவர்கள். உண்மையிலேயே Commendable job.

யாருமே எதிர்பார்க்காத நேரத்தில், பாஜகவையும் திமுகவையும் நேரடியாக surgical strike செய்துள்ளார்.

தன்னை முதல்வர் வேட்பாளராக அழுத்தம் திருத்தமாக பதிவு செய்திருக்கிறார். அத்தோடு பிற கட்சிகளுடன் கூட்டணிக்கும் அதிகார பகிர்வுக்கும் தயார் என்றும் அறிவித்திருக்கிறார்.

Algebraically so-called இரண்டாவது பெரிய கட்சியாம் அதிமுகவை எந்த இடத்தில் வைத்திருக்கிறார் என்பதையும் சொல்லாமல் செய்துவிட்டு இருக்கிறார்.

ஜெயக்குமார்,
திண்டுக்கல் செல்லூர் போன்ற Toxicகளை விட்டு பதில் சொல்லாமல் All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)
அடித்து விளையாட வேண்டிய கட்டாயத்திற்கு வந்திருக்கிறது. No other choice.

கொள்கை, செயல்திட்டங்கள் யாவும் சராசரி இயக்கங்களை விட சிறப்பாகவே உள்ளன

இவரது #செயல் பேசினால், உண்மையாலேயே பாராட்டப்பட வேண்டிய ஒன்று தான்.

வாங்க. முடிச்சுஉடுங்க விஜய் 🤣😂

 பாலில் இருந்து பிரிந்த தயிர், மோர், வெண்ணெய், நெய் ஆகிய நான்கும் தனித்தனி பாத்திரத்தில் அமர்ந்திருந்தன.அப்போது வெண்ணெய்...
21/10/2024


பாலில் இருந்து பிரிந்த தயிர், மோர், வெண்ணெய், நெய் ஆகிய நான்கும் தனித்தனி பாத்திரத்தில் அமர்ந்திருந்தன.

அப்போது வெண்ணெய் சொல்லுச்சாம்! "என்னை பால் குடும்பம் என்றால் கெட்ட கோபம் வரும்" 🤣 அதற்கு கோமியம் குதூகுலமாக கைதட்டிச்சாம்.

யார் அந்த வெண்ணெய்?
யார் அந்த கோமியம்?

சாம்சங் தொழிலாளர்கள் போராட்டமும் - சந்தை பொருளாதாரமும்🔺 #சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்துக்கும், சென்ற ஆட்சியின் போது நட...
11/10/2024

சாம்சங் தொழிலாளர்கள் போராட்டமும் - சந்தை பொருளாதாரமும்

🔺 #சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்துக்கும், சென்ற ஆட்சியின் போது நடைபெற்ற #ஸ்டெர்லைட் போராட்டத்துக்கும் நெருங்கிய ஒற்றுமை: இரண்டுமே அரசியல்ரீதியாக, ஆட்சி மாற்றத்திற்கான விதைகளை தன்னுள் கொண்டது.

🔺சாம்சங் போராட்டத்தில் நிறுவனம் வென்றால், தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளுக்கான நம்பகத்தன்மை உறுதியாகும்.
🔺ஊழியர்கள் வென்றால், சாம்சங் வேறு மாநிலத்திற்கு செல்லும்
🔺அப்படியானால் ஊழியர்கள் போராடக்கூடாதா? தொடர் சுரண்டலுக்கு ஆளாகத்தான் வேண்டுமா? அப்படி ஒன்றும் இல்லை. சுவர் இருந்தால் தான் சித்திரம். இதை விளங்கிக்கொள்ள பொருளாதாரம் பற்றிய அடிப்படை புரிதல் அவசியம்

🔺சந்தைப் பொருளாதாரத்தில் வேலைவாய்ப்புக்கான அடிப்படைக்கோட்பாடு: வேலையாட்கள் தங்கள் விருப்பம்போல நிறுவனங்களை தேர்ந்தெடுக்கலாம். அதே போல நிறுவனங்களும் தங்கள் தொழில் வணிகச் சூழலுக்கு ஏற்ப பணியாளர்களை மாற்றிக் கொள்ளலாம்
🔺சாம்சங்-கைவிட மிக அதிக பணிச்சுமை கொண்ட நிறுவனங்களில் இதைவிட மிகக்குறைவான பணிப்பயன்கள் மட்டுமே பெற்று பணியாற்றிவருகிறார்கள் என்பதை உணரவேண்டும்.
🔺அப்படியானால் பணிப்பாதுகாப்பு? இதற்கு #நோக்கியா நிறுவனத்தின் உதாரணத்தை நாம் கருத்தில் கொள்ளவேண்டும். சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு, முதல் தலைமுறை செல்போன் உற்பத்தியில் அசைக்க முடியாத இடத்தில் இருந்தது நோக்கியா. இன்று அது எத்தனையாவது இடம் என்று நாம் நன்கு அறிவோம்.
🔺நோக்கியாவின் நிறுவனர்கள் போண்டியாகி, Nokia-வின் பெயரை (Brand) வேறொரு நிறுவனம் கையகப்படுத்தி இன்று ஏதோ ஒப்பேற்றி வருகிறது.
🔺அப்படியானால், அங்கே வேலை பார்த்தவர்கள் கதி? சுவர் இருந்தால் தான் சித்திரம். அவர்கள் வேறு பணிகளை தேடிக்கொண்டனர்
🔺சரி! அவ்வளவு சம்பாரிக்கும் சாம்சங், தன் ஊழியர்களுக்கு கொஞ்சம் கூட்டிக் கொடுத்தால் குறைந்தா போய்விடுவார்கள்? இதற்கு பதில், "மொபைல்போன் ஹார்டுவேர் சந்தையின் நிச்சயமற்றதன்மை".
🔺நாளொரு Model பொழுதொரு Feature என்று சீன மொபைல் நிறுவனங்கள் சூறாவளியாக சுழன்றடித்ததுக் கொண்டிருக்கின்றன. கரணம் தப்பினால் மரணம் என்கிற நிலையில் தான் மொபைல் போன் உற்பத்தியாளர்களின் நிலை
🔺சாம்சங்-காவது நமது ஊரில் இத்தனை நேரடி & மறைமுக வேலைகளையும், மாநிலத்தில் பணப்புழக்கத்தையும் ஏற்படுத்தி வருகிறது. அதன் போட்டியாளர்கள் நமக்கு எந்த வழியில் உதவுகிறார்கள்?
🔺சரி, சாம்சங் தமிழகத்தின் தொழில்வளர்ச்சியில் பங்காற்றுவதால், நாம் சாம்சங் தவிர வேறு பொருட்களையே நாடுவதில்லையா?
🔺நமக்கான சீன, தைவானியா பயன்பொருட்களை நாம் பார்த்து பார்த்து குறைந்தவிலையில் Amazon, Flipkartல் Big Salesல் அள்ளும் போது, சாம்சங் மட்டும் தன் நிதியில் இருந்து அள்ளிக்கொடுத்து நஷ்டமாக வேண்டுமா?
🔺 ஊழியர்கள் போராட்டம் முற்றுப் பெறவில்லை என்றால், குஜராத், உ.பி, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்கள் சாம்சங் நிறுவனத்துக்கு ரத்தினக்கம்பளம் விரிக்க ஏற்கனவே பேச்சுவார்த்தைகளை துவங்கிவிட்டனர். அந்த மாநில அரசுகளின் வரிப்பணத்தில், சாம்சங்-ன் மூலதன செலவுகளையும் (Capex) ஈடுகட்ட காத்திருக்கிறார்கள்
🔺இந்த அடிமுட்டாள் அரசியல் கட்சிகளின் பேச்சைக் கேட்டு தமிழ்நாடு நாசமாக வேண்டுமா?

இந்த விஷயத்தில்
ஆகியோரின் நிலைப்பாட்டை ஆதரிப்பதை தவிர ஆகச்சிறந்த வழி ஏதுமில்லை

இது திமுக அரசுக்கான ஆதரவு பதிப்பல்ல. தமிழ்நாட்டு மக்களின் நலனை கருத்தில் கொண்ட நடுநிலைப் பதிவு.

 #வரிக்குதிரைகளும்_வறியவர்களும்.GST வரிகளுக்கு பின் உள்ள சூழ்ச்சி அரசியலை அறிமுகப்படுத்தப்பட்ட போதே நிபுணர்கள் எச்சரித்த...
19/09/2024

#வரிக்குதிரைகளும்_வறியவர்களும்.

GST வரிகளுக்கு பின் உள்ள சூழ்ச்சி அரசியலை அறிமுகப்படுத்தப்பட்ட போதே நிபுணர்கள் எச்சரித்தனர். ஆயினும் அன்றைய அரசின் மிருக பலத்திற்கு முன், அது அமல் ஆவதை யாராலும் தடுக்க முடியவில்லை.

இந்த GST, மாநிலங்களை நசுக்கி, வரிகளை மத்திய அரசிடம் குவிக்கிறது. இதில் உள்ள Tracking mechanism நேரடி வரிகளையும் (Income tax) சிந்தாமல் சிதறாமல் வழித்தெடுத்து, வரிசெலுத்தும் அப்பாவி தொழிலாளர்கள் மற்றும் நிறுவனங்களின் இரத்தத்தை உறிஞ்சி, விரைவில் நோஞ்சான் ஆக்குகிறது.

முன்பு பாஜக ஆட்சியில் நிதி அமைச்சராக இருந்த திரு. ஜஸ்வந்த் சிங் அவர்கள் சொன்னது இது தான். "மக்களின் கைகளில் சேமிப்பு இருந்துகொண்டே இருக்க வேண்டும். அதுவே மக்களுக்கு பாதுகாப்பு உணர்வையும் அமைதியான நலவாழ்வையும் அளிக்கும்."

தொடர்ந்து வரி, வரிக்கு வரி, செஸ் என்று போட்டுக்கொண்டு இருந்தால், அதை சமாளிக்க மனித இயந்திரங்கள் வரிச்சுழலில மாட்டி இன்னும் அதிகமாக Stress ஆகி உழைத்து, அதிகப்‌பொருள் ஈட்டி, அதிக வரி கட்டி மடிகின்றன.

வரிகள் இல்லாமல் அரசு இயங்காது, மறுக்கவில்லை!

ஆனால் Role of State Governments என்பது சுருங்கிக் கொண்டே வருகிறது மிகவும் கவலைக்குரிய விஷயம். "ஒரு நாடு ஒரு வரி" என்பது மாநிலங்களுக்கான இயற்கையான சம நீதியை ஒழித்து, ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள தனித்தன்மை, வளங்கள், ஏற்றத்தாழ்வுகள் ஆகியவற்றை புறக்கணித்து, எல்லாருக்கும் ஒரு உணவு, ஒரே மொழி, ஒரு கல்வி, ஒரே கடவுள் என்று ஆக்கிட வழிவகுக்கிறது. ஏற்கனவே இதில் பாதிக்கனவு நிறைவாகி விட்டது.

முதலில் இந்த ஒரே நாடு என்பது கலாச்சார ரீதியாக சாத்தியமா என்று யோசிக்க வேண்டும்.

நமது நாட்டின் பன்முகத்தன்மை (Diversity) தான் சகிப்புத்தன்மைக்கு(Tolerance)க்கு அடிப்படை. Diversity வலுவிழந்தால், ஒவ்வொரு மனதரும் தன் இனம் மொழி மதம் சாதி என்று சிந்தனை குறுகி, சகிப்புத்தன்மை காணாமல் போகும். உள்நாடு காடாகும். ஒவ்வொரு மாநிலத்துக்குமான இயல் சூழல் சீர்குலைந்து (மத்திய அரசு) முதலாளி Vs (மாநிலங்கள்) அடிமை அளவுக்கு, மாநிலங்களை நசுக்கி கையேந்த, பிச்சை எடுக்க வைத்ததன் விளைவு, மாநிலங்கள் தங்கள் நிதி ஆதாரங்களை பெருக்க அவர்கள் பங்குக்கு மறைமுக வரிகளை போடுகிறார்கள் .

இதில் #மக்கள்சார்ந்தநிர்வாகம் மரித்து ஏற்கனவே அடக்கம் செய்யப்பட்டுவிட்டது.

சரி! இவ்வளவு வரி போட்டு என்ன செய்கிறார்கள்?

உதாரணமாக, தமிழகத்தில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்ட 6.18 கோடி மக்களில் சுமார் 90% மக்களுக்கு (5.60 கோடி) 😲😳 முத்ரா கடன் தந்ததாக மத்திய நிதியமைச்சர் சொல்கிறார். அத்தனை பேர் முத்ரா கடன் வாங்கி தொழில் செய்கிறார்களா? 10ல் ஒன்பது பேர் தமிழ்நாட்டில் கடன் வாங்கி தொழில் செய்யவதாக சொன்னால் நம்ப முடியவில்லை. அதிர்ச்சியாக உள்ளது. ஒரு ரூபாய் வரி குறைந்தாலும் குதிக்கும் அரசு, இத்தனை லட்சம் கோடிகளை எப்படி எளிமையாக வாரி இறைக்கிறது? யாருடைய பணம் இது? இது மனித இனம் காணாத மாபெரும் பொருளாதார விஞ்ஞான ஊழல்.

மக்களை கசக்கி பிழிந்து வரி வசூலித்து அதை FREE யாக மானியமாக, முத்ரா கடனாக தரும் ஓட்டு வங்கி அரசியல் கேவலத்தை, சர்வ வல்லமை பொருந்திய மகா யோக்கிய மத்திய அரசு செய்வது ஏன்?

மொத்தத்தில் மக்களிடம் திருடி வழிப்பறி செய்வது கிரிமினல்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகள் என்கிற தனிநபர்கள் என்றால் நீதிமன்றம் மூலம் தண்டிக்கலாம்.

மகா வல்லமை கொண்ட மத்திய அரசே ஒரு Organised திருட்டு வழிப்பறி நடத்தினால் பிறகு யாரை நீங்கள் அறிவுறுத்துவீர்கள்? யார், யாருக்கு ஒழுக்கம் போதிப்பீர்கள்?

சங்கிகள் மாபெரும் கிருமிகளாக உருவெடுத்து நாட்டை விழுங்கும் மலைப்பாம்புகளாக உருவாகிவிட்டார்கள் என்பது வேதனை.

மாநிலக் கட்சிகள் யோக்கியர்களா என்றால் அதை அந்த கட்சிகளின் நிர்வாகிகள் Defend செய்து கொள்ளட்டும். ஆனால் சிறு குழந்தைக்கும் கடைக்கோடி மனிதனுக்கும் உண்மை தெரியும்.

ஆனால், இந்த Hub & Spoke ஜனநாயகத்தில் மத்திய அரசே ஊழல் அராஜகம் பழிவாங்கல் அதிகார துஷ்பிரயோகம் ஆகியவற்றின் மையம் (Hub) ஆக மாறி சீரழிந்த பின் Spokes என்கிற மாநில குறுக்குக் கம்பிகளை யார் கேள்வி கேட்க முடியும்.

மக்களாகிய நாம், நமது மொழி மத சாதி உணர்வுகளை தங்கள் நாடக நாக்கால் தடவிக் கொடுக்கும் அரசியல் கட்சிகளை "நல்லவர்கள்" என்று மனதுக்கேற்ப சப்பைக்கட்டு கட்டி, மகிழ்ந்து, விவாதித்து, சாகவேண்டியது தான். வேறு வழி?

Address

Chennai

Website

Alerts

Be the first to know and let us send you an email when Vetri Bala posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Vetri Bala:

Share