07/05/2026
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்திற்கு, ஆட்சி அமைக்க ஆளுநர் உடனடியாக அழைப்பு விடுக்க வேண்டும். இதுவே ஜனநாயகத்தின் மாண்பு.
ஆனால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு கட்சிக்கு, அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமையை மறுக்கும் ஆளுநரின் செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. ஆளுநரின் இந்தத் தாமதம் தமிழக மக்களின் தீர்ப்பை அவமதிப்பதாகும்.
எனவே, தமிழக ஆளுநர் காலம் தாழ்த்தாமல் தவெக-வை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும். மேலும், இந்த ஜனநாயக விரோதச் செயலுக்குப் பின்னால் இருக்கும் ஆளுநரையும், அவருக்குத் துணை நிற்கும் ஒன்றிய பாஜக அரசையும், தவெக தலைவர் விஜய் அவர்கள் மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்த வேண்டும்.
V.M.S.முகம்மது முபாரக்
மாநில தலைவர், SDPI கட்சி தமிழ்நாடு.
| |