Town News - No 1 Neighbourhood Newspaper

Town News - No 1 Neighbourhood Newspaper Know Your Neighbourhood

 #மின்னொளியில் ஜொலிக்கும் கோவை-அவிநாசி சாலை மேம்பாலம்......................................................................
08/10/2025

#மின்னொளியில் ஜொலிக்கும் கோவை-அவிநாசி சாலை மேம்பாலம்...
................................................................
முக்கிய செய்திகளை, உள்ளூர் தகவல்களை, உடனுக்குடன் தெரிந்து கொள்ள
*Follow the ° :
https://whatsapp.com/channel/0029Va9f05S05MUl1hxxwV2V.................................................................
For...
NEWS Around YOU... BUSINESS Around YOU...
Town News...
OFFICIAL_facebookPAGE👇
https://www.facebook.com/Town-News-No-1-Neighbourhood-Newspaper-150016135358589/

 #"16 ஆண்டுகளாக ராணுவத்தின் ஒரு பகுதியாக இருக்கிறேன்" - மோகன்லாலைக் கௌரவித்த இந்திய ராணுவம் #சமீபத்தில் நடிகர் மோகன்லாலு...
08/10/2025

#"16 ஆண்டுகளாக ராணுவத்தின் ஒரு பகுதியாக இருக்கிறேன்" - மோகன்லாலைக் கௌரவித்த இந்திய ராணுவம்

#சமீபத்தில் நடிகர் மோகன்லாலுக்கு தாதா சாகேப் பால்கே விருது கிடைத்திருந்தது. பெருமைமிகு இந்த அங்கீகாரத்தைப் பெற்ற இந்த சூப்பர் ஸ்டார் நடிகருக்கு இந்திய திரையுலகமே வாழ்த்துகளைத் தெரிவித்தது.

#மலையாள சினிமாவிலிருந்து இந்த விருதைப் பெறும் இரண்டாவது நபர் மோகன்லால். அதே நேரம், மே 2009-லிருந்து இந்திய ராணுவத்தில் கௌரவ லெப்டினன்ட் கர்னல் பதவியையும் வகிக்கிறார்.

#ஆகஸ்ட் 2024-ல் கேரளாவின் வயநாடு நிலச்சரிவின் போது கர்னலாக அவர் மேற்கொண்ட நிவாரண பணிகள் பாராட்டப்பட்டது.

#இந்த நிலையில், நடிகர் மோகன்லால் இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதியைச் நேற்று டெல்லியில் சந்தித்தார்.

அப்போது ராணுவத் தலைமைத் தளபதி, தாதா சாகேப் பால்கே விருது பெற்ற மோகன்லாலுக்கு 7 தளபதிகள் முன்னிலையில்பாராட்டு சான்றிதழ்வழங்கி கௌரவித்தார்.

இந்தச் சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மோகன்லால், ``ராணுவத் தளபதியிடமிருந்து பாராட்டுகளைப் பெறுவது ஒரு சிறந்த அங்கீகாரம்.

இந்தப் பாராட்டுக்கு தாதாசாகேப் பால்கே விருதும் ஒரு காரணம். கடந்த 16 ஆண்டுகளாக ராணுவத்தின் ஒரு பகுதியாக, TA பட்டாலியனில் செயல்திறனை எப்படி அதிகரிப்பது, நாட்டிற்கு நாம் என்ன செய்ய முடியும் என்பது குறித்து நாங்கள் உரையாடல்களை நடத்தினோம்.

இந்திய ராணுவத்தை மையமாகக் கொண்ட படங்களில் பணியாற்ற ஆவலுடன் இருக்கிறேன்" எனக் குறிப்பிட்டார்.
................................................................
முக்கிய செய்திகளை, உள்ளூர் தகவல்களை, உடனுக்குடன் தெரிந்து கொள்ள
*Follow the ° :
https://whatsapp.com/channel/0029Va9f05S05MUl1hxxwV2V.................................................................
For...
NEWS Around YOU... BUSINESS Around YOU...
Town News...
OFFICIAL_facebookPAGE👇
https://www.facebook.com/Town-News-No-1-Neighbourhood-Newspaper-150016135358589/

 #தீபாவளிக்கு 20,378 பஸ்கள்... #தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அக்., 16-ம் முதல் 19-ம் தேதி வரை சென்னையில் இருந்து தினமும...
08/10/2025

#தீபாவளிக்கு 20,378 பஸ்கள்...

#தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அக்., 16-ம் முதல் 19-ம் தேதி வரை சென்னையில் இருந்து தினமும் செல்லும் 2,0 92 பஸ்களுடன் 5,900 சிறப்பு பஸ்கள் என மொத்தமாக 14,268 பஸ்கள் இயக்கப்படும். பிற ஊர்களில் இருந்து மேற்கண்ட நாட்களுக்கு 6,110 சிறப்பு பஸ்கள் என மொத்தம் 20,378 பஸ்கள் இயக்கப்படும். கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் பஸ் முனையங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் புறப்படும். கிளாம்பாக்கத்தில் 10 முன்பதிவு மையங்கள் செயல்படும். TNSTC செயலி மற்றும் www.tnstc.in இணையம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
................................................................
முக்கிய செய்திகளை, உள்ளூர் தகவல்களை, உடனுக்குடன் தெரிந்து கொள்ள
*Follow the ° :
https://whatsapp.com/channel/0029Va9f05S05MUl1hxxwV2V.................................................................
For...
NEWS Around YOU... BUSINESS Around YOU...
Town News...
OFFICIAL_facebookPAGE👇
https://www.facebook.com/Town-News-No-1-Neighbourhood-Newspaper-150016135358589/

 #ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலித்தால் புகார் அளிக்கலாம்... #தீபாவளியை முன்னிட்டு ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலித்...
08/10/2025

#ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலித்தால் புகார் அளிக்கலாம்...

#தீபாவளியை முன்னிட்டு ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலித்தால் போக்குவரத்து துறையிடம் புகார் அளிக்கலாம். 1800 425 6151 என்ற கட்டணமில்லா எண்ணிலும், 044-24749002, 044-2628 0445, 044-2628 1611 ஆகிய எண்களிலும் புகார்களை பதிவு செய்யலாம் என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
................................................................
முக்கிய செய்திகளை, உள்ளூர் தகவல்களை, உடனுக்குடன் தெரிந்து கொள்ள
*Follow the ° :
https://whatsapp.com/channel/0029Va9f05S05MUl1hxxwV2V.................................................................
For...
NEWS Around YOU... BUSINESS Around YOU...
Town News...
OFFICIAL_facebookPAGE👇
https://www.facebook.com/Town-News-No-1-Neighbourhood-Newspaper-150016135358589/

08/10/2025

#நோயாளிகள் அல்ல மருத்துவப் பயனாளிகள்...

#மருத்துவமனைகளை நாடி வருகின்றவர்களை நோயாளிகள் என அழைப்பதற்கு பதில்
மருத்துவ பயனாளர்கள் என அழைக்க வேண்டும்.

#முதல்வர் ஸ்டாலின் உத்தரவின்படி தமிழக அரசு அரசாணை வெளியீடு.
................................................................
முக்கிய செய்திகளை, உள்ளூர் தகவல்களை, உடனுக்குடன் தெரிந்து கொள்ள
*Follow the ° :
https://whatsapp.com/channel/0029Va9f05S05MUl1hxxwV2V.................................................................
For...
NEWS Around YOU... BUSINESS Around YOU...
Town News...
OFFICIAL_facebookPAGE👇
https://www.facebook.com/Town-News-No-1-Neighbourhood-Newspaper-150016135358589/

08/10/2025

#ரூ.90,000-ஐ கடந்தது தங்கம் விலை...

#சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ஒரு சவரன் ரூ.90,400-க்கு விற்பனை.

#கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,300-க்கு விற்பனை.

 #ஆவடி வட்டார பள்ளிகள் அருகேபுகையிலை  விற்பனையை தடுக்க புது திட்டம்... #ஆவடியில் பள்ளிகள் அருகே புகையிலை பொருட்களை விற்ப...
07/10/2025

#ஆவடி வட்டார பள்ளிகள் அருகே
புகையிலை விற்பனையை தடுக்க புது திட்டம்...

#ஆவடியில் பள்ளிகள் அருகே புகையிலை பொருட்களை விற்பனை செய்வதை தடுக்க "100 யார்ட்ஸ்" என்ற திட்டம் திங்கள்கிழமை அமலுக்கு வந்தது. பட்டாபிராம், தண்டுரை பகுதி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் புதிய திட்டத்தை ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் தொடங்கி வைத்தார். அப்போது பள்ளி மாணவ, மாணவியர் போதை பழக்கத்துக்கு எதிரான உறுதிமொழியை ஏற்றனர்.
"ஆவடி வட்டார பள்ளிகளுக்கு அருகே உள்ள கடைகளில் புகையிலை பொருட்களை விற்பனை செய்யக்கூடாது. பள்ளிகள் அருகே சாலையின் இருபுறமும் வெள்ள நிறத்தில் மைய கோடு போடப்பட்டு உள்ளது. இந்த பகுதிகளில் விதிகளை மீறி செயல்படும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கமிஷனர் சங்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 #கிளாம்பாக்கம், கோயம்பேட்டுக்கு150 இணைப்பு பஸ்கள்.. #தீபாவளியை முன்னிட்டு கிளாம்பாக்கம், கோயம்பேட்டில் இருந்து தமிழகம் ...
07/10/2025

#கிளாம்பாக்கம், கோயம்பேட்டுக்கு
150 இணைப்பு பஸ்கள்..

#தீபாவளியை முன்னிட்டு கிளாம்பாக்கம், கோயம்பேட்டில் இருந்து தமிழகம் முழுவதும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. எனவே பயணிகள் வசதிக்காக கிளாம்பாக்கம், கோயம்பேடு பஸ் முனையங்களை இணைக்கும் வகையில் 150 இணைப்பு பஸ்கள் 24 மணி நேரமும் இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

 #வேளச்சேரி- பரங்கிமலை இடையேநவம்பரில் பறக்கும் ரயில் சேவை தொடக்கம்... #சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரி வரை பறக்கும்...
07/10/2025

#வேளச்சேரி- பரங்கிமலை இடையே
நவம்பரில் பறக்கும் ரயில் சேவை தொடக்கம்...

#சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரி வரை பறக்கும் ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் வழித்தடத்தை வேளச்சேரியில் இருந்து பரங்கிமலை வரை நீட்டிக்கும் திட்டம் மிக நீண்ட காலமாக இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. பல்வேறு சிரமங்களுக்கு இடையே தண்டவாள, ரயில் நிலைய பணிகள் நிறைவடைந்துள்ளன. வரும் நவம்பரில் பரங்கிமலை வரை பறக்கும் ரயில் சேவை நீட்டிக்கப்படும் என்று தெற்கு ரயில்வே பயண ஆலோசனைக் குழு உறுப்பினர் ஜாபர் அலி தெரிவித்துள்ளார்.
பறக்கும் ரயில் சேவை விரைவில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துடன் இணைக்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

07/10/2025

#மழைநீர் வடிகால் பணிகள்
அக். 15-க்குள் நிறுத்தம்...

#பருவமழைக் காலத்தை எதிர்கொள்ள சென்னை மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன்படி அக். 15-ம் தேதிக்குள் சாலை தோண்டும் பணிகளை நிறுத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும் மழைநீர் வடிகால்கள் அமைக்கும் அமையும் அக். 15-ம் தேதிக்குள் நிறுத்தப்படும். பருவமழை காலத்துக்கு பிறகு மீண்டும் பணிகள் தொடங்கப்படும் என்று சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.

07/10/2025

#பறக்கும் ரயிலில் திருவல்லிக்கேணி ரயில் நிலையத்தில் மர்ம நபர்கள் அவசர செயினை இழுத்து விட்டு சென்றதால் ரயில் 10 நிமிட தாமதம்.

Address

Chennai

Opening Hours

Monday 9:30am - 6:30pm
Tuesday 9:30am - 6:30pm
Wednesday 9:30am - 6:30pm
Thursday 9:30am - 6:30pm
Friday 9:30am - 6:30pm
Saturday 9:30am - 6:30pm

Telephone

+918012080120

Alerts

Be the first to know and let us send you an email when Town News - No 1 Neighbourhood Newspaper posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Town News - No 1 Neighbourhood Newspaper:

Share

Category