Home Maruthuvam "Sam"

Home Maruthuvam "Sam" படித்தேன் பகிர்ந்தேன்
https://chat.whatsapp.com/LaoJkuTLvFTGCO9ADLr3Mm
(1)

18/01/2026
18/01/2026
படித்ததில் பிடித்தது *விரதம்* 🎣உண்ணாவிரதம் என்பது மனித இனம் தோன்றிய காலம்தொட்டே இருந்திருக்கிறது. வேட்டையாடிப் பிழைத்த க...
18/01/2026

படித்ததில் பிடித்தது

*விரதம்*

🎣உண்ணாவிரதம் என்பது மனித இனம் தோன்றிய காலம்தொட்டே இருந்திருக்கிறது.

வேட்டையாடிப் பிழைத்த காலத்தில் இருந்த மனிதர்கள்,
(hunters and gatherers ) வேட்டையாடி பகிர்ந்துண்ணும் குழுக்களாக சேர்ந்து வாழ்ந்தனர்.

🏹வேட்டை சிக்கிய நாள் மட்டுமே உணவு உண்பார்கள். வேட்டை இல்லாத நாட்களில் பட்டினி தான்.
மரக்கொட்டைகள்(nuts), சில கிழங்குகள் தான் சில நாட்கள் கிடைக்கும். எஞ்சிய நேரம் முழுப்பட்டினி தான்.

இப்படித்தான் லட்சோப லட்சம் வருடங்கள் கழிந்தன.
ஒரு நாள் வயிறுமுட்ட உணவு என்றால்
மறுநாள் பட்டினி

🛝ஒடிக்கொண்டேயிருந்த நாடோடி இனமான நாம்.
பனியுகம் (ice age) முடிந்த பின்னர்,
ஐஸ் மலைகள்(glaciers) உருக ஆரம்பித்து, உலகில் பல்வேறு பகுதிகளில் இருந்த மலை முகடுகளில் இருந்து ஆறுகள் தோன்றின.

🏸அதுவரை நாடோடிகளாத் திரிந்த இனம்,
அந்த ஆறுகளின் கரைகளில் தங்க ஆரம்பித்தது.
ஏரி, குளம், குட்டை என நீரைத் தேக்கி, விவசாயம் செய்யக் கற்றுக்கொண்டான்.

🪀தானியங்கள் விளைவித்தான்.
தானியங்களை உண்ண ஆரம்பித்தாலும் இன்று நாம் உண்பதைப் போன்று மூன்று வேளை உண்ணவில்லை.

🎲மனித சமுதாயம் தோன்றி , கடந்த முப்பது வருடங்களுக்கு முன்பு உணவுப் புரட்சி வரும் வரை நம் முன்னோர்கள் சாப்பிட்டது ஒரு வேலை உணவு தான். பல நாட்களில் அதுவும் இருக்காது.

🎯மழையின்றி வறட்சியால் ஏற்பட்ட பஞ்சங்கள்.
தொடர்ச்சியான போர்களால் மனிதனால் உண்டாக்கப்பட்ட செயற்கைப் பஞ்சங்கள் என மனித சமுதாயம் தொடர்ச்சியாக பஞ்சங்களை பார்த்துவருகிறது.

ஆகவே உண்ணாவிரதம் என்பது நமது முன்னோர்களின் வாழ்வியலில் இரண்டறக்கலந்த ஒன்று.

🎸உலகில் கடந்த பத்து நூற்றாண்டுகளில் தோன்றிய பல்வேறு சமயங்களும் உண்ணாநோன்பை வலியுறுத்துகின்றன.

🎺இந்து சமயத்தில் ஏகாதசி, பிரதோஷம் போன்ற நாட்களிலும்
பிரதி திங்கள் அன்று சிவபக்தர்கள், பிரதி வியாழன் அன்று விஷ்ணு பக்தர்களும் விரதம் இருப்பர்.

🫟கிறிஸ்தவ சமயத்தில் , சாம்பல் புதன்கிழமையைத் தொடர்ந்து வரும் நாற்பது நாட்களை "லென்ட் விரதம்" அனுஷ்டிக்கின்றனர்.

🪇இஸ்லாமிய சமயத்தில் , ரமலான் மாதத்தின் முப்பது நாட்கள் விரதம் இருப்பது கட்டாய கடமையாகும்.

🧘‍♂️புத்த மதத்தில் "வினயா" என்ற பெயரில் விரதம் அனுஷ்டிக்கின்றனர். அதில் மதிய உணவோடு அதற்கு மேல் உண்ணமாட்டார்கள்.

🐦‍🔥சமணர்கள் சவ்விஹார் உபவாஸ் ( நீர்/ உணவு இரண்டையும் உண்பதில்லை) என்றும் திவிஹார் உபவாஸ் ( நீரை மட்டும் குடிப்பர்)என்றும் விரதம் அனுஷ்டிக்கின்றனர்.

*❕விரதத்தின் போது உடலில் என்ன மாற்றங்கள் நேருகின்றன?*

நாம் உண்ணும் உணவு செரிமானமாக நமது உடல் நான்கில் இருந்து ஐந்து மணிநேரத்தைச் செலவழிக்கிறது.

🍄‍🟫உணவு உண்ட பின் குறைந்தபட்சம் 8-12 மணிநேரம் கழித்து உடல் சீரான நிலையை அடைகிறது.
முக்கியமான ஹார்மோன்கள் (தைராக்சின், இன்சுலின் முதலியன குறைந்தபட்ச அளவில் இருக்கின்றன.. இதை basal rate என்போம்)

நமது இயக்கங்கள் யாவும் சீராகிறது.

🎋அடிக்கடி உணவு உண்டு கொண்டிருப்பதை விட இடையிடையே விரதம் இருப்பது நமது உடலை வலிமையாக்கவல்லது.

🪴உண்ணாவிரதத்தின் நன்மையை அறிய நாம் நம் உடலின் இயங்குவியலை அறிய வேண்டும்

🥑பொதுவாக மாவுச்சத்தை உண்ணும் ஒருவருக்கு அவரது தசைகள் (muscle) மற்றும் கல்லீரலில்(liver) மாவுச்சத்து க்ளைகோஜெனாக சேமிக்கப்படும். இப்படி 300 - 500 கிராம் க்ளைகோஜென் நமக்கு ஸ்டாக் இருக்கும்

🍲அந்த அளவுக்கு மீறி உண்ணப்படும் மாவுச்சத்து நமது தோலுக்கு அடியிலும், வயிற்றிலும் தொப்பைக் கொழுப்பாக மாறி ஸ்டோர் செய்யப்படும்.

🦋ஒருவர் உண்ணாவிரதம் இருக்கையில் அவரது க்ளைகோஜென் ஸ்டோரை முதலில் உடல் உபயோகிக்கும் .

பிறகு, தனது தேவைக்கு உடலின் கொழுப்பை எரிக்க ஆரம்பிக்கும். இதுவே lipolysisஎனப்படும்.

🍃மூளைக்கு எப்போதும் க்ளூகோஸ் சென்று கொண்டே இருக்க வேண்டும்.
ஆகவே தேவையான க்ளூகோசை உடல் புரதச்சத்தையும், கொழுப்பையும் கரைத்து க்ளூகோசாக மாற்றும். இது
"க்ளூகோநியோஜெனசிஸ்" எனப்படும்(gluconeogenesisgluco- glucose ; neo- new ; genesis ; giving birth)

🧩இதன் வழி நம் உடல் உள்ளுறுப்புகளில் மண்டிக்கிடக்கும் கொழுப்பான visceral fats கரைக்கப்படும்.
உள்ளுறுப்புகள் சிறப்பாக இயங்கும்

🥚அமெரிக்க கேன்சர் இன்ஸ்டிட்யூட் கூறுகிறது "கேன்சருக்கு அளிக்கப்படும் கீமேதெரபியுடன் உண்ணாநோன்பையும் சேர்த்து இருப்பது நோயாளிகளுக்கு நன்மை பயக்கிறது. புற்று நோய் கட்டியின் அளவுகளைக் குறைக்கிறது " என்று(Lee C, Longo VD (2011). "Fasting vs dietary restriction in cellular protection and cancer treatment: from model organisms to patients". Oncogene (Review). 30 (30): 3305–16) கூறுகிறது.

🫚இயற்கையாகவே உண்ணாவிரதம் மூலம் நமது கெட்ட கொழுப்புகளான ட்ரைகிளசரைடுகள் குறைகின்றன.
இதயத்தைக் காக்கும் நல்ல கொழுப்பு கூடுகிறது.

🌳உண்ணாவிரதம் மூலம் பல மூளை சம்பந்தப்பட்ட வலிப்பு நோய் பிரச்சனைகள் சரியாகின்றன .
மனத்தாழ்வு நிலை ( depression) இந்த விரதம் மூலம் சரியாகிறது என்கிறது ஒரு ஆய்வு( Fond G, Macgregor A, Leboyer M, Michalsen A (2013). "Fasting in mood disorders: neurobiology and effectiveness. A review of the literature". Psychiatry Res (Review). 209 (3): 253–8.)

🌾விரதம் இருப்பதால் brain neuro peptides எனும் ரசாயன அளவு அதிகமாகிறது. அதனால் மூளையின் ஆற்றல் அதிகமாகிறது. கவனம் சிதறாமல் இருக்கிறது.

🥝இடையிடையே விரதம் (intermittent fasting) இருப்பது மிகச்சிறந்த நோய் நிவாரணியாகவும் நமது எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தக்கூடியதாகவும் இருக்கிறது. நோய் எதிர்ப்பு சக்திக்குத் தேவையான வெள்ளை அணுக்கள் தங்களைத் தாங்களே விரதத்தின் போது புணரமைத்துக்கொள்கின்றன.
பல பழைய செல்கள் இறந்து புதிய செல்கள் பிறக்கின்றன. இதற்குப் பெயர் "ஆட்டோஃபேஜி".

ஜீரண மண்டலம் சம்பந்தப்பட்ட நோய்களான இரிட்டபிள் பவல் சின்ட்ரோம் (irritable bowel syndrome) விரதம் இருப்பதால் சீராகின்றன.

🍒பெண்களுக்கு மாதவிடாய் கோளாறை ஏற்படுத்தும் பாலி சிஸ்டிக் ஓவரி நோய் (PCOD) , மலட்டுத்தன்மையை ஏற்படுத்தக்கூடியதாகும். அதற்கு காரணம் "இன்சுலின் ரெசிஸ்டெண்ஸ்" தான்.
விரதத்தின் மூலம் இன்சுலின் நன்றாக வேலை செய்கிறது. PCOD குணமாகின்றது .

*❗விரதத்திற்கும் புற்றுநோய்க்கும் என்ன சம்பந்தம்?*

விரதம் இருக்கும் போது நமது உடலில்
செல் வளர்ச்சிக்கு உதவும்
இன்சுலின்
இன்சுலின் லைக் க்ரோத் ஃபேக்டர் -1
ஆகியன குறைவாக சுரக்கின்றன.
இதன் விளைவாக, புற்று செல்கள் அதிமதிகம் பல்கிப் பெருகுவது தடுக்கப்படுகிறது.

🌴விரதத்தால் ஏற்படும் எரிபொருள் போதாமை மற்றும் க்ளூகோஸ் போதாமை நிலையில் நல்ல நிலையில் இருக்கும் செல்கள் தாக்குப் பிடிக்கின்றன
ஆனால் புற்று செல்களுக்கு அதிகமான எரிபொருள் தேவை இருப்பதாலும் க்ளூகோஸ் தேவை இருப்பதாலும் அவற்றால் விரதம் தரும் அசாதாரண நிலையில் கொஞ்சம் திக்குமுக்காடிப் போகின்றன.

🌿24-48 மணிநேரங்கள் விரதம் இருக்கும் போது ஆட்டோஃபேஜி எனும் முறையில் நமது உடலில் தேவையற்று இருக்கும் செல்கள், வயதான செல்கள் தானாக வளர்சிதை மாற்றத்துக்கு உள்ளாகி உடலால் கிரகித்துக் கொள்ளப்படுகின்றன.

*❕எனினும் புற்று நோய் ஏற்பட்டவர்களுக்கு விரதத்தை சிகிச்சையாக பரிந்துரை செய்ய முடியுமா?*

🫐தற்போது வரை கிடைத்திருக்கும் ஆய்வுகளின் தரவுகளின் அடிப்படையில்
விரதத்தை புற்றுநோய்க்கான தனி சிகிச்சையாக அங்கீகரிக்க இயலாது.

🧄புற்று நோய் சிகிச்சையில் கீமோ தெரபி தேவைப்படுபவர்களுக்கு விரதமுறை கொண்டு சோதனை செய்ததில் கீமோ தெரபி மூலம் வரும் பக்கவிளைவுகள் குறைந்து காணப்பட்டது பதிவு செய்யப்பட்டுள்ளது.
எனவே, புற்று நோய் சிகிச்சை அளிக்கும் நிபுணர் பரிந்துரைக்கும் உணவு முறையை புற்று நோய் இருப்பவர்கள் கடைபிடிப்பது நல்லது


💥இதற்குக் காரணம்
புற்று நோய் பாதிப்பு இருப்பவர்களுக்கு
ஏற்கனவே பசி குறைவாக இருக்கும். கூடவே சாப்பாடு குறைவாகவே உள்செல்லும். மெலிந்து போய் எலும்பும் கூடுமாக இருப்பார்கள். இதை புற்று நோய் தரும் உடல் பலகீனம் (CANCER CACHEXIA) என்போம். இந்நிலையில் ஏற்கனவே புரதச்சத்து குறைபாடுடன் தசைகள் உருகிப் போய் இருப்பவர்களுக்கு விரதம் இருக்கச் சொன்னால் தசை இழப்பு அதிகமாகிடக்கூடும். புரத இழப்பு ஓரளவுக்கு மேல் போனால் உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்படும்.
எனவே, புற்று நோய் இருப்பவர்களுக்கு விரதம் சிகிச்சை ஆகாது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

*❕யாரெல்லாம் நீண்ட விரதம் இருப்பது நல்லதல்ல?*

*❗யாரெல்லாம் நீண்ட விரதத்தை மருத்துவப் பரிந்துரையின்றி இருக்கக்கூடாது?*

1. மாத்திரைகளால் சர்க்கரை அளவுகளை கட்டுப்படுத்தும் நீரிழிவு நோயாளிகள்
2. இன்சுலின் ஊசி போடும் டைப் 1 மற்றும் டைப் 2 நீரிழிவு நோயாளிகள்
3. மிக அதிக ரத்த அழுத்தம் இருந்து அதற்கான மாத்திரை எடுப்பவர்கள்
4. இதய நோயாளிகள்
5. சிறுநீரக/கல்லீரல் நோயாளிகள்
6. கர்ப்பிணிகள்
7. தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்கள்
8. 18 வயதுக்கு உட்பட்டவர்கள்
9. 60 வயதுக்கு மேற்பட்டவர்கள்
10. கீமோ தெரபியில் இருக்கும் கேன்சர் நோயாளிகள்
11.வயிறு மற்றும் குடல் சார்ந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டவர்கள்
12.வயிற்றுப்புண்(gastric ulcer) இருந்து அதற்கு சிகிச்சை எடுப்பவர்கள்
13. மனநல சிகிச்சை எடுப்பவர்கள்
14. குழந்தைப்பேறுக்கு முயல்பவர்கள்
15. நீண்ட தூர வண்டி ஓட்டுநர்கள்

🍑இவையல்லாமல் இருக்கும் ஆண் பெண் இருபாலரும் விரதத்தை இருக்கலாம்.

12 மணிநேர உணவு + 12 மணிநேர விரதம்
10 மணிநேர உணவு + 14 மணிநேர விரதம்
8 மணிநேர உணவு + 16 மணிநேர விரதம்
24 மணிநேர விரதம்
அதற்கு மேல் நீளும் விரதமுறை
என்று பல வகைகள் உண்டு.

🐦‍🔥ஆட்டோஃபேஜி உள்ளிட்ட நன்மைகளை அதிகமாகப் பெற 24-48 மணிநேர - நீர் மட்டும் அருந்தும் விரதம் தேவையாகிறது.

🪸விரதம் என்பது ஆரோக்கியமான விஷயம்
அதன் மூலமாக உடலுக்கு நன்மைகள் நேர்வது உண்மை.
புற்று நோய் தடுப்பில் விரதத்திற்கு பங்குண்டு என்று மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன. எனினும் விரதமே இருந்தாலும்
விரதத்தை விடும் போதும் உண்ணும் போதும் சரியான உணவு முறையில் இருக்க வேண்டும். விரதம் இருந்து விட்டு, அதிக மாவுச்சத்து + இனிப்புச் சத்து + எண்ணெயில் பொரித்த பண்டங்கள் + மது புகை என்று இருந்தால் பெரிய பலன் இராது.

🍒 புற்று நோய் சிகிச்சையில் விரதத்தை தனியாக அதை நம்பி கடைபிடித்து விடக்கூடாது. புற்று நோய்க்கு முறையான புற்றுநோய் சிகிச்சை மருத்துவரை ( ஆண்காலஜிஸ்ட்) சந்தித்து அவர் கூறும் பரிந்துரைப்படி சிகிச்சை + உணவு உட்கொள்ள வேண்டும்.

*நன்றி*

*_🫁தங்கள் நலங்கருதி

18/01/2026

படித்ததில் பிடித்தது

*தீராத வாயு தொல்லை நிரந்தரமாக நீங்க மூலிகை ரசம்*

*மூலிகை ரசம் செய்ய தேவையான பொருட்கள்:*

1.கற்பூரவள்ளி இலை – 10
2.ஓமம் – 2 டீஸ்பூன்
3.சீரகம் – 2 டீஸ்பூன்
4.தனியா – 2 டீஸ்பூன்
5.மிளகு – 4
6.இஞ்சி – ஒரு துண்டு
7.பூண்டு – 4 பல்
8.பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை
9.வெற்றிலை – 2
10.நெய் & உப்பு தேவையான அளவிற்கு

*மூலிகை ரசம் செய்முறை விளக்கம்:*

🫟முதலில் அடுப்பை பற்ற வைத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு வாணலி ஒன்றை வைத்துக் கொள்ளுங்கள்.

🫟அதில் ஒரு டீஸ்பூன் அளவிற்கு நெய் விட்டு, கற்பூரவள்ளி இலை, வெற்றிலை ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். அதன் பிறகு மற்றொரு வாணலியில் கொஞ்சமாக நெய் சேர்த்து காய விடுங்கள்.

🫟பின்னர் அதில் சீரகம், தனியா, மிளகு, சோம்பு, ஓமம், பூண்டு, பெருங்காயத்தூள் ஆகியவற்றை சேர்த்து லேசாக வதக்கி பின்னர் வதக்கி வைத்துள்ள கற்பூரவல்லி இலை மற்றும் வெற்றிலையும் சேர்த்து கொள்ளுங்கள்.

🫟பின் அதனுடன் 2 கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும். கொதித்து சூப் பதத்துக்கு வந்ததும் அடுப்பை அணைத்து பரிமாற வேண்டியது தான்.

உணவுக்கு பின் இரவு தோறும் எடுக்கலாம்.

*_🫁தங்கள் நலங்கருதி.._*

18/01/2026

படித்ததில் பிடித்தது .

தேக்கு மரத்தின் பூக்கள் (Teak Tree Flowers) பாரம்பரிய சித்த மருத்துவத்தில் பல காலமாக பயன்படுத்தப்பட்டவை. இதில் இருக்கும் இயற்கை மருத்துவக் கூறுகள் உடலின் வெப்பத்தை குறைத்து, நுரையீரலின் செயல்பாட்டை சீராக்க உதவும்.

தேக்கு மர பூக்களை தண்ணீரில் நன்றாகக் கொதிக்க வைத்து அதில் பனங்கற்கண்டு சேர்த்து குடித்தால்,

நீண்ட நாட்களாக இருக்கும் இருமல் குறையும்

மார்பில் சளி அடைப்பு தளர்ந்து வெளியேறும்

நுரையீரலில் உள்ள நோய் கிருமிகள் குறைய உதவக்கூடும்

சளியுடன் இரத்தம் கலந்த இருமல் (Blood-stained sputum) இருக்கும் நிலையில் கூட நிவாரணம் கிடைக்கலாம்.

இந்த கலவை உடலை குளிர்வித்து, மார்பு நெருப்பை குறைத்து சுவாசத்தை சீராக்கும் தன்மை கொண்டதாக கூறப்படுகிறது.

முக்கிய குறிப்பு :

இதனை மருத்துவரின் ஆலோசனையில்லாமல் கடுமையான நுரையீரல் பிரச்சனைகளில் பயன்படுத்த வேண்டாம்.
அஸ்துமா, TB, நிமோனியா )

18/01/2026
18/01/2026
18/01/2026
18/01/2026

படித்ததில் பிடித்தது.. ..

மூலிகை தகவல்*

*வாதநாராயணன்*

1.*மூலிகையின் பெயர்*: வாதநாராயணன்.

2. *தாவரப் பெயர்*: DELONIX ELATA.

3. *தாவரக்குடும்பம்*: CAESAL PINIOIDEAE.

4. *வேறு பெயர்கள்*: வாதரக்காட்சி, ஆதிநாராயணன், வாதரசு, தழுதாழை வாதமடக்கி எனவும் ஆங்கிலத்தில் TIGER BEAM, WHITE GULMOHUR என்றும் அழைப்பர்.

5. *பயன் தரும் பாகங்கள்*: இலை, பட்டை, வேர், சேகு மரம் ஆகியவை.

6. *வளரியல்பு*: வாதநாராயணன் தாயகம் காங்கோ, எகிப்து, கென்யா, சூடன், உகண்டா, எத்தோபியா, போன்ற நாடுகள். பின் இந்தியா, ஸ்ரீலங்கா, பாக்கீஸ்தான், சாம்பியா ஆகிய நாடுகளிக்குப் பரவியது. மரவகையைச் சேர்ந்தது. செம்மண்ணில் நன்கு வளரும். ஆற்றங்கறைகளில் அதிகம் காணப்படும். இது பத்தடி முதல் 45 அடி வரை வளரக்கூடியது. தமிழகமெங்கும் வளரக்கூடியது. வெப்ப நாடுகளில் ஏராளமாகப் பயிராகும். வீடுகளிலும், தோட்டங்களிலும், பூங்காக்களிலும் இதனை வளர்ப்பார்கள். இதன் இலை பார்பதற்கு புளியிலைகளைப் போன்று சிறிதாக இருக்கும். கால்நடைகளுக்கு நல்ல தீவனம். இரு சிறகான சிறு இலைகளையுடைய கூட்டிலை 10-14 ஜதைகளாகவும் உச்சுயில் பகட்டான பெரிய பூக்களையும் தட்டையான காய்களையும் உடைய வெளிர் மஞ்சள் சிவப்பு நிறமுடைய மரம். பூக்கள் பூத்துக்கொண்டே இருக்கும். மே, ஜூன் மாதங்களில் காய்கள் விடும். இது விதை மூலமும், கட்டிங் மூலமும் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. விதைகளை விதைக்கும் மூன்பு 24 மணி நேரம் ஊரவைக்க வேண்டும்.

7. *மருத்துவப் பயன்கள்*: வாதயாராயணன் பித்த நீர் பெருக்குதல், நாடி நடையை மிகுத்து உடல் வெப்பம் தருதல், உடலில் இருக்கிற வாதம் அடக்கி மலத்தை வெளிப்படுத்தும். வாய்வைக் குறைக்கும். பித்தம் உண்டாக்கும். வீக்கம் கரைக்கும். குத்தல் குடைச்சல் குணமாகும். நாடி நரம்புகளைப் பலப்படுத்தும். ஆடாதொடை போல இழுப்பு சன்னியைக் குணமாக்கும். பல ஆண்டுகளான சேகு மரத்தை தண்ணீரில் ஊர வைத்து கெட்டியாக்கி தேக்கு மரம் போன்று உபயோகப்படுத்துவார்கள்.

இதன் இலையை எள் நெய்யில் வதக்கி, உளுந்துப் பருப்பு, பூண்டு, இஞ்சி, கருவேப்பிலை, கொத்துமல்லி, மிளகாய், உப்பு, புளி சேர்த்து துவையல் அரைத்து வாரம் ஒருமுறை உணவில் சாப்பிட பேதியாகும். வாத நோய் தீரும்.

இலையை இடித்துப் பிழிந்த சாறு 500 மி.லி. சிற்றாமணக்கு நெய் 500 மி.லி. பூண்டு 100 கிராம், சுக்கு, மிளகு, திப்பிலி வகைகு 30 கிராம், வெள்ளைக் கடுகு 20 கிராம் எல்லாம் ஒன்றாகச் சேர்த்துக் காய்ச்சி, பதத்தில் வடித்து வைத்து, இதில் 5 -10 மில்லி உள்ளுக்குக் கொடுத்து வெந்நீர் அருந்த பேதியாகும். அனைத்து வாத நோய்களும் குணமாகும். மேல் பூச்சாக பூசலாம். கீல் வாதம், முடக்கு வாதம், நரம்பு தளர்ச்சி, கை கால் குடைச்சல், மூட்டு வீக்கம், இடுப்பு வலி, இளம்பிள்ளை வாதம், இழப்பு, சன்னி, மேகநோய் யாவும் குணமாகும். மலச்சிக்கல் முழுவதும் குணமாகும்.

சொறி சிரங்கிற்கு இதன் இலையுடன் குப்பைமேனி இலை, மஞ்சள் இரண்டையும் சேர்த்து அரைத்து மேலே தடவி, குளிர்ந்த நீரில் குளித்து வர அவை நீங்கும்.

மேக நோயால் அவதிப்படுபவர்கள் இதன் இலையை நன்கு உலர்த்திப் பொடி செய்து காலை, மாலை 1 கிராம் வீதம் வெந்நீருடன் கலந்து அருந்தி வர குணமாகும்.

இரத்த சீதபேதிக்கு வாதநாராயணன் வேரை அரைத்து எருமைத் தியிருடன் கலந்து அருந்த குணம் தெரியும்.

இலையைப் போட்டுக் கோதிக்க வைத்துக் குளிக்க உடம்பு வலி தீரும்.

நகச்சுத்தி, கடுமையான வலியுடன் நகக்கண்ணில் வீக்கம் வரும். இதற்கு பிற மருந்துகள் எதுவும் கேட்பதில்லை. இதன் தளிரை மைபோல் அரைத்து வெண்ணெயில் மத்தித்து வைத்துக் கட்ட இரு நாளில் குணமாகும். வலி உடனே நிற்கும்.

இதன் இலைச்சாறு 1 லிட்டர், மஞ்சள் கரிசலாங்கண்ணி, குப்பை மேனி, கறுப்பு வெற்றிலை இவற்றின் சாறு வகைக்குக் கால் லிட்டர் வேப்பெண்ணெய், விளக்கெண்ணெய், நல்லெணெணெய வகைக்கு அரை லிட்டர், சுக்கு, மிளகு, திப்பிலி, கருஞ்சீரகம், சீரகம், மஞ்சள் வகைக்கு 20 கிராம் பொடித்து அரைத்து அரை லிட்டர் பசும் பாலுடன் கலக்கிப் பதமாகக் காய்ச்சி 21 வெள்ளெருக்கம் பூ நசுக்கிப் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி மேற்பூசாகத் தடவிப் பிடித்து விடப் பக்க வாதம், பாரிச வாயு, நரம்பு இழப்பு முக இசிவு, முகவாதம், கண், வாய், நாக்கு, உதடு, இழப்பு ஆகியவை தீரும்.

வாத நோய் எண்பது என்கின்றனர். இதன் இலை, பட்டை, வேர்பட்டை ஆகியன சூரணமாகவோ, குடி நீராகவோ, தைலமாகவோ சாப்பிட எல்லா வகையான வாதமும் தீரும்.

இதன் இலையின் சூரணத்தை 500 கிராம் அளவு வெந்நீரில் கலந்து குடிநீராக குடிக்க வாய்வுத் தொல்லை, வயிற்று வலி குணமாகும்.

“சேர்ந்த சொறி சிரங்கு, சேர்வாதம் எண்பதும் போம்
ஆர்ந்தெழுமாம் பித்தம் அதிகரித்த மாந்தமறும்-
ஐய்யின் சுரந்தணியும், ஆனதழுதாழைக்கே
மெய்யின் கடுப்பும் போம்விள்” —

15/01/2026

*தீராத வாயு தொல்லை நிரந்தரமாக நீங்க மூலிகை ரசம்*

*மூலிகை ரசம் செய்ய தேவையான பொருட்கள்:*

1.கற்பூரவள்ளி இலை – 10
2.ஓமம் – 2 டீஸ்பூன்
3.சீரகம் – 2 டீஸ்பூன்
4.தனியா – 2 டீஸ்பூன்
5.மிளகு – 4
6.இஞ்சி – ஒரு துண்டு
7.பூண்டு – 4 பல்
8.பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை
9.வெற்றிலை – 2
10.நெய் & உப்பு தேவையான அளவிற்கு

*மூலிகை ரசம் செய்முறை விளக்கம்:*

🫟முதலில் அடுப்பை பற்ற வைத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு வாணலி ஒன்றை வைத்துக் கொள்ளுங்கள்.

🫟அதில் ஒரு டீஸ்பூன் அளவிற்கு நெய் விட்டு, கற்பூரவள்ளி இலை, வெற்றிலை ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். அதன் பிறகு மற்றொரு வாணலியில் கொஞ்சமாக நெய் சேர்த்து காய விடுங்கள்.

🫟பின்னர் அதில் சீரகம், தனியா, மிளகு, சோம்பு, ஓமம், பூண்டு, பெருங்காயத்தூள் ஆகியவற்றை சேர்த்து லேசாக வதக்கி பின்னர் வதக்கி வைத்துள்ள கற்பூரவல்லி இலை மற்றும் வெற்றிலையும் சேர்த்து கொள்ளுங்கள்.

🫟பின் அதனுடன் 2 கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும். கொதித்து சூப் பதத்துக்கு வந்ததும் அடுப்பை அணைத்து பரிமாற வேண்டியது தான்.

உணவுக்கு பின் இரவு தோறும் எடுக்கலாம்.

*_🫁தங்கள் நலங்கருதி.._*

Address

Chennai

Alerts

Be the first to know and let us send you an email when Home Maruthuvam "Sam" posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category