Home Maruthuvam "Sam"

Home Maruthuvam "Sam" படித்தேன் பகிர்ந்தேன்
https://chat.whatsapp.com/LaoJkuTLvFTGCO9ADLr3Mm
(1)

26/10/2025
26/10/2025

I got over 1,000 reactions on my posts last week! Thanks everyone for your support! 🎉

25/10/2025
25/10/2025

படித்ததில் பிடித்தது

நீர்க்கட்டி பிரச்சனை குணமாக வீட்டு‌ வைத்தியம்

கழற்சிக்காய்

நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும். இந்த கழற்சிக்காய் காயாகவும் கிடைக்கும், சில கடைகளில் பொடியாகவும் கிடைக்கும்.

கழற்சிக்காய் சிறிய கோலிகுண்டு அளவில் பச்சையாகவும் அல்லது வெளிர் பச்சை நிறத்திலும் இருக்கும்.

கழற்சிக்காயின் உள்ளே முந்திரிபருப்பு போன்று ஒரு பருப்பு இருக்கும். கழற்சிக்காயை
உடைத்து இந்த பருப்பை எடுப்பது மிக மிக கடினம்.

கழற்சிக்காயின் வெளி ஓடு அவ்வளவு கடினத்தன்மை உடையதாகும். பெரிய சுத்தியல் வைத்து அடித்து உடைக்கலாம். கழற்சிக்காயை

பக்கவாட்டில் அடித்து உடைத்தால் உள்ளிருக்கும் பருப்பு உடையாமல் எடுக்கலாம்.

காலையும் மாலையும் ஒரு கழற்சிக்காய் பருப்புடன், 3 அல்லது 4 மிளகு சேர்த்து வாயில் போட்டு மென்று சாப்பிட்டு வர வேண்டும்.

இது பச்சை பாகற்காயை மெல்வது போன்று அவ்வளவு கசப்பாக இருக்கும். மிகவும் கசப்பாக இருந்தால் நன்றாக மென்று முடித்ததும் மோர் குடிக்கலாம்.

முன்பே குறிப்பிட்டது போல் வேறு எந்த மருத்துவத்தையும் பார்க்காமல் ஒரு மாதம் ஒரு நாள் கூட கைவிடாமல் இந்த கழற்சிக்காய் மருந்தை உண்டு வந்தால் நீர்க்கட்டி பிரச்சனை முற்றிலும் குணமாகும்.

மோர், பச்சிலை

வீட்டில் அன்றாடம் நாம் பயன்படுத்தும் பொருள் மோர்.

இதனுடன் பச்சிலை எனப்படும் மூலிகையை கலந்து குடித்து வர நீர்க்கட்டி குணமாகும். பச்சிலை என்பது வீட்டில் எளிதாக வளரக்கூடிய மூலிகை ஆகும்.

இது துளசியை ஒத்த மனமும் குணமும் கொண்டது. அன்றாடம் இந்த கலவையை அருந்தி வர நல்ல வித்தியாசத்தை காணலாம்.

கச்சக்காய்

நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் கச்சக்காயை உண்டு வர நீர்க்கட்டிகள் கரையும். இந்த காய்க்கு உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றும் குணம் உண்டு.

வெந்தயம்

நீர்க்கட்டி உள்ள பெண்களுக்கு கணையத்தால் சுரக்கப்படும் இன்சுலின் ஹார்மோன் சரியாக பயன்படுத்தப்படுவதில்லை

இதனால் அவர்களுக்கு உடல் பருமன் போன்ற உபாதைகள் ஏற்படுகின்றன.

வெந்தயமும் வெந்தய கீரையும் இன்சுலின் அளவை அளவாக வைக்க உதவுகின்றன.

வெந்தயத்தை இரவில் தண்ணீரில் ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் உண்ண வேண்டும்.

பின்பு மதிய உணவிற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்பும் இரவு உணவிற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்பும் எடுத்துக்கொள்ள வேண்டும். வெந்தய கீரையை சமைத்தும் உண்ணலாம்.

இலவங்கப்பட்டை

இலவங்கப்பட்டை இன்சுலின் செயல்பாட்டை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. அதனால் பட்டையை உணவில் சேர்த்துக்கொண்டால் நீர்க்கட்டியினால் உண்டாகும் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.

இலவங்கப்பட்டையை பொடியாகி கொண்டு தேவையான போது பயன்படுத்தலாம். காலையில் தேனீர் அல்லது காபி குடிக்கும் பொழுது அதில் கொஞ்சம் இலவங்கப்பட்டையை தூவி கொள்ளலாம்.

இலவங்கப்பட்டை தூளை தயிர் அல்லது மோரில் கலந்தும் குடிக்கலாம்.

ஆளி விதைகள்

இந்த விதைகளில் ஒமேகா சத்து மற்றும் புரத சத்து நிரம்பி உள்ளது. உடலில் உள்ள குளுகோஸ் பயன்பாட்டிற்கு மிகவும் உதவுகிறது.

ஆளி விதைகளை பொடி செய்து கொண்டு நீரிலோ,
பழச்சாறிலோ கலந்து குடிக்கலாம். உடல் பருமனுக்கும் இந்த ஆளிவிதைகள் பரிந்துரைக்கப்படுகிறது.

துளசி

நீர்க்கட்டி உள்ள பெண்களுக்கு ஆன்றோஜென் எனப்படும் ஆண்களின் ஹார்மோன் அதிகம் சுரக்கும் என்பதை அறிவோம்.

துளசி ஆன்றோஜென்களின் அளவையும் இன்சுலின் அளவையும் கட்டுப்பாட்டில் வைக்கிறது.

தினமும் காலையில் வெறும் வயிற்றில் எட்டு துளசி இலைகளை மென்று சாப்பிடலாம். அல்லது துளசியுடன் கொதிக்க வைத்த நீரையும் அருந்தலாம்.

தேன் மருத்துவம்

உடற்பருமனும் பாலி சிஸ்டிக் ஓவரியன் சின்றோமும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது.

உடல் எடையை குறைத்தால் நீர்க்கட்டி தானாக குறைந்து விடும். உடல் எடையை கட்டுக்குள் வைக்க ஒரு அருமையான மருந்து தேன்.

தேனை காலையில் வெறும் வயிற்றில் இளஞ்சூடான நீரில் சிறிது எலுமிச்சம்பழ சாறு கலந்து அருந்த உடல் எடை குறையும். உடல் எடை குறைந்தால் நீர்க்கட்டி தானாக மறைந்து விடும்.

நெல்லிக்காய்

நெல்லிக்காய் உடலின் இன்சுலின் அளவை கட்டுக்குலள் வைக்க உதவுவதோடு உடல் எடை குறையவும் பயன்படுகிறது.

நெல்லிக்காய் சாறை இளஞ்சூடான நீரில் கலந்து அருந்த உடல் எடை குறையும். அதோடு இன்சுலின் அளவும் கட்டுக்குள் வரும்.

பாகற்காய்

பாகற்காய் இன்சுலின் அளவை கட்டுக்குள் வைக்க பெரும்பங்கு வகிக்கிறது. இன்சுலின் அளவு கட்டுக்குள் இருந்தால் அன்றோஜென் அளவு கட்டுக்குள் கொண்டு வரப்படும்.

இதனால் நீர்க்கட்டி அறிகுறிகள் குறைய தொடங்கும். பாகற்காயை வாரத்தில் ஐந்து நாட்கள் சமைத்து உண்ண வேண்டும்.

🫁தங்கள் நலங்கருதி..

25/10/2025

படித்ததில் பிடித்தது

நெஞ்சு சளி

தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைக்கவும். பின் ஆற வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.

தலைவலி

ஐந்தாறு துளசி இவைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம் சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

தொண்டை கரகரப்பு

சுக்கு, பால் மினகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.

தொடர் விக்கல்

நெல்லிக்காய் இடித்துச் சாறு பிழிந்து. தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.

வாய் நாற்றம்

சட்டியில் படிகாரம் போட்டு காய்ச்சி ஆறவைத்து அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும்.

உதட்டு வெடிப்பு

கரும்புச் சக்கையை எடுத்து எரித்து சாம்பலாக்கி, அதனுடன் வெண்ணெய்

கலந்து உதட்டில் தடவி வர உதட்டு வெடிப்பு குணமாகும்.

அஜீரணம்

ஒரு டம்ளர் தண்ணீரில் கறிவேப்பிலை, இஞ்சி, சீரகம் முன்றையும் கொதிக்க வைந்து ஆறவைத்து, வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.

குடல்புண்

மஞ்சளை தணலில் இட்டு சாம்பல் ஆகும் வரை எரிக்க வேண்டும். மஞ்சன கரி சாம்பலை தேன் கலந்து சாப்பிட குடல் புண ஆறும்.

வாயு தொல்லை

வேப்பம் பூவை உலர்த்தி,தூளாக்கி வெந்தீரில் போட்டு உட்கொள்வதினால் வாயுத்தொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப் புண் நீங்கும்.

வயிற்று வலி

வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.

மலச்சிக்கல்

செம்பருத்தி இலைகளை தூள் செய்து தினமும் இருவேளை சாப்பிட்டு வர மலச்சிக்கல் தீரும்.

🫁தங்கள் நலங்கருதி..

25/10/2025

படித்ததில் பிடித்தது

கொட்டைக்கரந்தை மூலிகையின் மருத்துவ பயன்கள்.!

கொட்டைக்கரந்தை உடலை பலப்படுத்தும் குளிர்ச்சியுண்டாக்கும்; வாதத்தைக் குணமாக்கும், மலமிளக்கும். இலை, பூக்கள்,
உடலை பலப்படுத்தும்; குடல் புண்களை
ஆற்றும். விதை, வேர், பசியைத் தூண்டும் குடல் புழுக்களைக் கொல்லும்.

கொட்டைக்கரந்தை முழுத்தாவரம் கசப்பு சுவையும், வெப்பத்தன்மையும் கொண்டது. இது பற்களுள்ள, நறுமணம் கொண்ட இலைகளை மாற்றடுக்கில் அடர்த்தியாகக் கொண்ட சிறு செடி வகைத் தாவரம். சிறு பந்து போன்ற, உருண்டையான, சிவப்பும்,
பச்சையும் கலந்த பூங்கொத்தினை நுனியில்கொண்டது.

இது தென்னிந்தியாவிற்கே உரிய மூலிகை தோட்டங்களிலும், வயல் நிலங்களில் அறுவடைக்குப் பின்னர் இயல்பாக வளர்கின்றது. இதிலிருந்து
மருத்துவத்திற்குப் பயனாகும் ஒருவித
எண்ணெய் பெறப்படுகின்றது. நறுங்கரந்தை என்கிற மாற்றுப் பெயரும் உண்டு. இலை, பூ விதை, வேர், வேர்ப்பட்டை போன்றவை மருத்துவப் பயன் கொண்டவை.

தோல்நோய்கள் குணமாகும்:-

இலைத்தூள் வேளைக்கு ½ தேக்கரண்டி வீதம், தினமும் இரண்டு வேளைகள் சாப்பிட்டு வர வேண்டும்.

கொட்டைக்கரந்தைத் தைலம்:-

முடிவளர்ச்சிக்கும் முடி கருமையடையவும்
கொட்டைக் கரந்தை தைலம் பயன்படும்.
கொட்டைக் கரந்தை இலைச்சாறு, தேங்காய் எண்ணெய், சம அளவாக எடுத்துக் காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொண்டு தலைக்கான எண்ணெயாகப் பயன்படுத்திவர வேண்டும்.

வெள்ளைப்படுதல் குணமாக:-

இலைகளை உலர்த்தித்தூள் செய்து வைத்துக் கொண்டு ஒரு தேக்கரண்டி அளவு, வெந்நீரில் கலந்து
குடித்துவர வேண்டும். தினமும் 3 தடவை 10 நாட்களுக்குக் குடிக்கலாம்.

இரத்த மூலம் சரியாகும்:-

இதன் வேர்ப்பட்டையை அரைத்து, எலுமிச்சம்பழ அளவு வெண்ணெயில் கலந்து சாப்பிட வேண்டும்.

குடல் புழுக்கள் வெளியாக விதைகளைச் சேகரித்து, உலர்த்தி, தூள் செய்து, ஒரு தேக்கரண்டி அளவு, தேனில் குழைத்துச் சாப்பிட வேண்டும்.

மூளை, இதயம், நரம்புகள் பலமடைய:-

பூக்காத செடிகளை வேருடன் பிடுங்கி,
நிழலில் உலர்த்தி, பொடி செய்து
பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும். இதில் ஒரு தேக்கரண்டி அளவு, இரவில் பாலுடன் சாப்பிட வேண்டும். 6 மாதங்கள் வரை தொடர்ந்து சாப்பிட்டு வரலாம்.

25/10/2025

படித்ததில் பிடித்தது

உப்பு கட்டு

சித்தர்கள் நாம் அன்றாடம் பயன்படுத்தும் உப்பு மற்றும் புளியினால் ஏற்படும் விளைவை அறிந்து அவற்றை கற்பமாக மாற்றம் செய்து பயன்படுத்தினர்.

இதை அறியாமல் நாம் "உப்பால் நரை புளியால் திரை " கூற்றுக்கு இணங்க அவற்றை அதிகம் சுத்தம் செய்யாமல் பயன்படுத்தி துன்பத்திற்கு விழைகின்றோம்.

இதில் சித்தர்கள் கல்லுப்பபை பயன்படுத்தும் முறையைப் பார்ப்போம்

திருமூலர் கருக்கிடை வயித்தியம் 600

கல்லுப்பு என்று கூறியவுடன் என்னமோ ஏதோ, என்று மலைக்காதே. இதுவே கடற்பத்தினின் நாதமாகும். அதாவது கடலினுள் உப்பானது கரையாமல் கட்டிகளாய் நிற்கும். இந்த கல்லுப்பால் வாதம் என்ற வார்த்தையே வளர்ந்தது

பாடல்

வளர்ந்திடும் உப்பை வளமாகக் கட்டிட
உளந்து திரிந்தாலும் ஒருவாகக் கட்டாது
வறிந்து இதைக்கட்ட வறிந்தோர்க்கு எல்லாஞ்சாம்
துலைந்திடா மாத்திரை சொர்னக் குருவாமே (418)

கல்லுப்பைக் கட்டுவதென்பது மிகவும் கடினமாகும். இதை கட்டுவதற்கு மூலிகை தேடி காடு மலை சென்றாலும் பலிதமாகாது முறையாக எவர் இக்கல்லுப்பை கட்டுகிறார்களோ அவர்களுக்கே எல்லா சரக்குகளையும் மடியச் செய்து குரு மருந்தாக மாற்றும் தன்மையும் தங்கமும் சித்தியாகும்

பாடல்

ஒக்குமே வாதம் முகம்பார்த்து சித்திக்கும்
தக்குமோ தேகம் சதாகோடி காலமும்
உக்குமோ மேனி உறுவாம் பிறப்பது
தொக்குமா வாதஞ்சொல் ஆதிக் கல்லுப்பே (416)

யோகம் பார்த்தவர்க்கு வாதமும் சதாகோடிகாலம் வாழும் தன்மையும் உண்டாகும். அதுமட்டுமின்றி மீண்டும் இப்பூமியில் பிறவாமல் போவான். வாதம் என்ற சொல்லுக்கு பிறப்பிடமே கல்லுப்புத்தான்

கல்லுப்போ வென்று கசடரே எண்ணாதே
நல்லுற்ற வாரிதி நாயகி நாதங்காண்
வெல்லுற்ற நீரில் உருப்பட்டு பாரைபோல்
வல்லுற்ற உப்பால் வளர்ந்தது வாதமே.

வள்ளலார் அருளிய எளிய முறை

இவ்வளவு கஷ்டமா என மலைக்க வேண்டாம் .. கருணையே வடிவான வள்ளல் பெருமானார் இதை நமக்கு மிகவும் எளிமை படுத்தி தந்துள்ளார்

வள்ளலார் உரைநடை பகுதியில் ( மருத்துவ குறிப்பு ) 3-4 முறைகள் குறிப்பாக கொடுக்க பட்டுள்ளது.

வள்ளலார் உபதேசக் குறிப்புகள் :

தேக நஷ்டஞ் செய்வது உப்பு. உப்பைக் கட்டி யாகாரத்திற் சேர்ப்பது சித்தமார்க்கம்.

இதை செய்யும் முறை

பெரிய அகண்ட இரும்பு (அ) மண் சட்டியில் கல்லுப்பு
கல்லுப்பு அளவில் பாதி அளவு குப்பைமேனி (அ ) முருங்கை இலை
இவற்றை நன்கு வறுக்க வேண்டும். நன்கு வெடித்து உப்பில் உள்ள பிசுபிசுப்பு தன்மை போகும்

பின்பு இவற்றை நன்கு சுத்தம் செய்து கண்ணாடி (அ ) பீங்கான் பாத்திரத்தில் வைத்து பயன்படுத்த வேண்டும்

இதை நாம் நடைமுறை படுத்தி இன்புற்று வாழ்வோமாக

🫁தங்கள் நலங்கருதி..

25/10/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

25/10/2025

படித்ததில் பிடித்தது

உப்பு கட்டு

சித்தர்கள் நாம் அன்றாடம் பயன்படுத்தும் உப்பு மற்றும் புளியினால் ஏற்படும் விளைவை அறிந்து அவற்றை கற்பமாக மாற்றம் செய்து பயன்படுத்தினர்.

இதை அறியாமல் நாம் "உப்பால் நரை புளியால் திரை " கூற்றுக்கு இணங்க அவற்றை அதிகம் சுத்தம் செய்யாமல் பயன்படுத்தி துன்பத்திற்கு விழைகின்றோம்.

இதில் சித்தர்கள் கல்லுப்பபை பயன்படுத்தும் முறையைப் பார்ப்போம்

திருமூலர் கருக்கிடை வயித்தியம் 600

கல்லுப்பு என்று கூறியவுடன் என்னமோ ஏதோ, என்று மலைக்காதே. இதுவே கடற்பத்தினின் நாதமாகும். அதாவது கடலினுள் உப்பானது கரையாமல் கட்டிகளாய் நிற்கும். இந்த கல்லுப்பால் வாதம் என்ற வார்த்தையே வளர்ந்தது

பாடல்

வளர்ந்திடும் உப்பை வளமாகக் கட்டிட
உளந்து திரிந்தாலும் ஒருவாகக் கட்டாது
வறிந்து இதைக்கட்ட வறிந்தோர்க்கு எல்லாஞ்சாம்
துலைந்திடா மாத்திரை சொர்னக் குருவாமே (418)

கல்லுப்பைக் கட்டுவதென்பது மிகவும் கடினமாகும். இதை கட்டுவதற்கு மூலிகை தேடி காடு மலை சென்றாலும் பலிதமாகாது முறையாக எவர் இக்கல்லுப்பை கட்டுகிறார்களோ அவர்களுக்கே எல்லா சரக்குகளையும் மடியச் செய்து குரு மருந்தாக மாற்றும் தன்மையும் தங்கமும் சித்தியாகும்

பாடல்

ஒக்குமே வாதம் முகம்பார்த்து சித்திக்கும்
தக்குமோ தேகம் சதாகோடி காலமும்
உக்குமோ மேனி உறுவாம் பிறப்பது
தொக்குமா வாதஞ்சொல் ஆதிக் கல்லுப்பே (416)

யோகம் பார்த்தவர்க்கு வாதமும் சதாகோடிகாலம் வாழும் தன்மையும் உண்டாகும். அதுமட்டுமின்றி மீண்டும் இப்பூமியில் பிறவாமல் போவான். வாதம் என்ற சொல்லுக்கு பிறப்பிடமே கல்லுப்புத்தான்

கல்லுப்போ வென்று கசடரே எண்ணாதே
நல்லுற்ற வாரிதி நாயகி நாதங்காண்
வெல்லுற்ற நீரில் உருப்பட்டு பாரைபோல்
வல்லுற்ற உப்பால் வளர்ந்தது வாதமே.

வள்ளலார் அருளிய எளிய முறை

இவ்வளவு கஷ்டமா என மலைக்க வேண்டாம் .. கருணையே வடிவான வள்ளல் பெருமானார் இதை நமக்கு மிகவும் எளிமை படுத்தி தந்துள்ளார்

வள்ளலார் உரைநடை பகுதியில் ( மருத்துவ குறிப்பு ) 3-4 முறைகள் குறிப்பாக கொடுக்க பட்டுள்ளது.

வள்ளலார் உபதேசக் குறிப்புகள் :

தேக நஷ்டஞ் செய்வது உப்பு. உப்பைக் கட்டி யாகாரத்திற் சேர்ப்பது சித்தமார்க்கம்.

இதை செய்யும் முறை

பெரிய அகண்ட இரும்பு (அ) மண் சட்டியில் கல்லுப்பு
கல்லுப்பு அளவில் பாதி அளவு குப்பைமேனி (அ ) முருங்கை இலை
இவற்றை நன்கு வறுக்க வேண்டும். நன்கு வெடித்து உப்பில் உள்ள பிசுபிசுப்பு தன்மை போகும்

பின்பு இவற்றை நன்கு சுத்தம் செய்து கண்ணாடி (அ ) பீங்கான் பாத்திரத்தில் வைத்து பயன்படுத்த வேண்டும்

இதை நாம் நடைமுறை படுத்தி இன்புற்று வாழ்வோமாக

கீரைகள்
24/10/2025

கீரைகள்

படித்ததில் பிடித்தது
24/10/2025

படித்ததில் பிடித்தது

Address

Chennai

Alerts

Be the first to know and let us send you an email when Home Maruthuvam "Sam" posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category