Tmmkmedianorthchennai-page

Tmmkmedianorthchennai-page தமுமுக-மமக வடசென்னை மேற்கு மாவட்டத்தின் அதிகாரபூர்வ முகநூல் பக்கம்

தலைமையில் மனிதநேய மக்கள் கட்சி தலைவரை சந்தித்த வடசென்னை மேற்கு மாவட்ட நிர்வாகிகள்30/07/2025 இன்று மனித நேய மக்கள்கட்சி  ...
30/07/2025

தலைமையில் மனிதநேய மக்கள் கட்சி தலைவரை சந்தித்த வடசென்னை மேற்கு மாவட்ட நிர்வாகிகள்

30/07/2025 இன்று மனித நேய மக்கள்கட்சி தலைமையகத்தில் மனிதநேய மக்கள் கட்சி மாநில தலைவர் எம் எச் ஜவாஹிருல்லா MLA அவர்களை சந்தித்து தனது இல்ல திருமணத்திற்கான அழைப்பிதழை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை பொதுக்குழு உறுப்பினர் அஜ்மல் அவர்கள் வழங்கினார்கள்.

இதில் மத்திய சென்னை வடக்கு மாவட்ட தலைவர் L.தாஹா நவீன்,வடசென்னை மேற்கு மாவட்ட துணை செயலாளர் வியாசை ஹனிபா, தமுமுக துணை செயலாளர் E.சௌக்கத் அலி மற்றும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

மாவட்ட ஆலோசனை கூட்டம் வடசென்னை மேற்கு மாவட்டம் தமுமுக மற்றும் மமக மாவட்ட நிர்வாக குழு இன்று மாவட்ட செயலாளர் கொளத்தூர் நச...
30/07/2025

மாவட்ட ஆலோசனை கூட்டம்

வடசென்னை மேற்கு மாவட்டம் தமுமுக மற்றும் மமக மாவட்ட நிர்வாக குழு இன்று மாவட்ட செயலாளர் கொளத்தூர் நசீர் தலைமையில் நடைபெற்றது

ஆகஸ்ட் 24 அன்று மாவட்டம் சார்பில் திருவிக நகர் பகுதியில் தமுமுகவின் 31ஆம் ஆண்டு துவக்கவிழா நிகழ்வினை பொதுமக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கி பொதுக்கூட்டம் நடத்துவது என முடிவுசெய்யப்பட்டது. இதில் மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

வடசென்னையில் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் நடைப்பெற்ற மதுரை மாநாட்டின் தீர்மான விளக்க கூட்டம்வடசென்னை மேற்கு மாவட்டம...
25/07/2025

வடசென்னையில் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் நடைப்பெற்ற மதுரை மாநாட்டின் தீர்மான விளக்க கூட்டம்

வடசென்னை மேற்கு மாவட்டம் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் பெரம்பூர் பகுதியில் உள்ள எம்கேபி நகரில் “மதுரை மாநாட்டின் தீர்மான விளக்ககூட்டம்” ஆனது மாவட்ட தலைவர் குணங்குடி முஹைதீன் தலைமையிலும், மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையிலும் நடைப்பெற்றது.

கூட்டத்தினை பெரம்பூர் பகுதி தமுமுக துணை செயலாளர் ஹாபிழ் அப்துல் கரீம் கிராத் ஓதி துவங்கி வைத்தார். மமக மாவட்ட செயலாளர் கொளத்தூர் நசீர் வரவேற்புரை ஆற்றினார். மதுரை மாநாட்டின் தீர்மானத்தை மமக மாவட்ட துணை செயலாளர் வியாசை அனிபா, மாவட்ட துணை செயலாளர் ஜாகீர் உசேன், மாவட்ட துணை தலைவர் கொடுங்கை நாகூர், தமுமுக மாவட்ட துணை செயலாளர் சௌக்கத் அலி, மாவட்ட துணை செயலாளர் மாஷா அல்லா பாரூக், மாவட்ட SMI செயலாளர் ஆஷிக், மாவட்ட துணை செயலாளர் தாம்பரம் ஹமீது, தகவல் தொழில் நுட்ப அணி மாவட்ட செயலாளர் ஊடகதுறை இம்ரான் கான், தமுமுக மாவட்ட செயலாளர் கொளத்தூர் சாகுல், மாவட்ட பொருளாளர் (பொ) ஜமாலியா அப்துல் காதர் உள்ளிட்டோர் வாசித்தனர்.

மேலும் மமக தலைமை நிலைய செயலாளர் வழக்கறிஞர் ஜெய்னுல் ஆபிதீன் மற்றும் தலைமை கழக பேச்சாளர் கோவை செய்யது ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். அதனை தொடர்ந்து மனிதநேய ஜனநாயக கட்சியினரான அப்துல் ரசீது தாய்கழகமான தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தில் மாநில நிர்வாகிகள் முன்னிலையில் தன்னை இணைத்துக் கொண்டார்.

மேலும் தலைமை நிலைய செயலாளர் மற்றும் தலைமை கழக பேச்சாளருக்கு பெரம்பூர் பகுதி 35-வட்டம் சார்பில் நினைவு பரிசு வழங்கப்பட்டது. மேலும் 37-வட்டத்தின் சார்பில் தலைமை நிர்வாகிகளுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இறுதியாக பெரம்பூர் பகுதி தலைவர் பஷீர் அஹமது நன்றியுரையுடன் கூட்டம் இனிதே நிறைவடைந்தது.

இந்நிகழ்வில் மாநில அணி நிர்வாகிகளான வண்ணை ஜாகிர் மற்றும் பொதக்குடி ரியாஸ், மாநில செயற்குழு உறுப்பினர் தமீம் அன்சாரி, வடசென்னை கிழக்கு மாவட்ட தலைவர் இராயபுரம் அலி உள்ளிட்ட கிழக்கு மாவட்ட நிர்வாகிகள், வடசென்னை மேற்கு மாவட்டத்தின் அனைத்து நிலை நிர்வாகிகள், பகுதி மற்றும் வட்டங்களின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

✍🏻
இம்ரான் கான்.H,
மாவட்ட செயலாளர்,
மமக தகவல் தொழில்நுட்ப அணி,
வடசென்னை மேற்கு மாவட்டம்.
Date:25/07/2025

25/07/2025

வடசென்னை மேற்கு மாவட்டம் மனிதயே மக்கள் கட்சியின் சார்பில் மதுரை மாநாட்டின் தீர்மான விளக்க கூட்டம் நேரலை - பெரம்பூர் பகுதி MKB நகரிலிருந்து…

மனிதநேய மக்கள் கட்சியினர் கோரிக்கையை ஏற்று மையவாடி சீரமைப்புவடசென்னை மேற்கு மாவட்டம் பெரம்பூர் பகுதி 37-வது வட்டம்  முல்...
23/07/2025

மனிதநேய மக்கள் கட்சியினர் கோரிக்கையை ஏற்று மையவாடி சீரமைப்பு

வடசென்னை மேற்கு மாவட்டம் பெரம்பூர் பகுதி
37-வது வட்டம் முல்லை நகரில் உள்ள ஜன்னத்துல் பிர்தௌஸ் மைய வாடி நீண்ட நாளாக சீரமைப்பு இல்லாமல், சுற்றுசுவர் இடிந்து காணப்பட்டது.

மைய வாடியை சீர் செய்து தருமாறு 37-வட்டம், பகுதி நிர்வாகிகள், 37 வது வட்ட மாநகராட்சி கவுன்சிலர் J.டில்லிபாபு அவர்களிடம் கோரிக்கை வைத்தனர். அதனை தொடர்ந்து கோரிக்கை ஏற்று இன்று அதற்கான வேலை துவங்கப்பட்டுள்ளது.

✍🏻
இம்ரான் கான்.H,
மாவட்ட செயலாளர்,
மமக தகவல் தொழில்நுட்ப அணி,
வடசென்னை மேற்கு மாவட்டம்.
Date:23/05/2025

தமுமுக தலைமையகத்தில் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி தமுமுகவின் இஸ்லாமிய பிரச்சாரப் பேரவையின் சார்பில் இஸ்லாமிய சொற்பொழிவு ...
20/07/2025

தமுமுக தலைமையகத்தில் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி

தமுமுகவின் இஸ்லாமிய பிரச்சாரப் பேரவையின் சார்பில் இஸ்லாமிய சொற்பொழிவு நிகழ்ச்சியானது இன்று (20-7-25) சென்னை தமுமுக தலைமையகத்தில் தமுமுக மாநில செயலாளர் சிவகாசி முஸ்தபா தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் மௌலவி N.அலி அக்பர் உமரீ குர்ஆன் கூறும் வரலாற்றில் “ஹுத் நபியும், ஆது கூட்டமும்”என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்

மேலும் இந்நிகழ்வில் இயக்கத்தின் தோழர்கள் பெரும்திரளில் பங்கேற்று பயனடைந்தனர்.

தலைமை பிரதிநிதியும் மத்திய சென்னை தெற்கு மாவட்ட பொறுப்பாளருமான தைமியா அவர்களின் நன்றியுரையோடு நிகழ்வு இனிதே நிறைவடைந்தது. மேலும் இந்நிகழ்வில் வடசென்னை மேற்கு மாவட்ட தலைவர் குணங்குடி முஹைதீன், மமக மாவட்ட செயலாளர் கொளத்தூர் நசீர், மாவட்ட பொருளாளர் (பொ) ஜமாலியா அப்துல் காதர், மமக துணை செயலாளர் வியாசை அனிபா, தமுமுக தகவல் தொழில் நுட்ப அணி மாவட்ட செயலாளர் ஊடக துறை இம்ரான் கான் உள்ளிட்ட நிர்வாகிகள் உட்பட சென்னை மண்டல நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.


வடசென்னை மேற்கு மாவட்டத்தின் செயற்குழு18/07/2025 அன்று வடசென்னை மேற்கு மாவட்ட செயற்குழு மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட தலைவர...
19/07/2025

வடசென்னை மேற்கு மாவட்டத்தின் செயற்குழு

18/07/2025 அன்று வடசென்னை மேற்கு மாவட்ட செயற்குழு மாவட்ட அலுவலகத்தில்
மாவட்ட தலைவர் குணங்குடி முஹைதீன்
தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது.

இதில் வரும் 25/07/2025 அன்று பெரம்பூர் பகுதி 36 வது வட்டத்தில் மதுரை மாநாடு தீர்மான விளக்க
மாபெரும் தெரு முனை கூட்டம் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.

இதில் மாவட்ட தமுமுக செயலாளர் சாகுல் ஹமீது (பொறுப்பு), மமக செயலாளர் கொளத்தூர் நசீர், பொருளாளர். ஜமாலியா அப்துல் காதர் (பொறுப்பு) மற்றும் மாவட்ட நிர்வாகிகள், அனைத்து பகுதி நிர்வாகிகள், அனைத்து வட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

வடசென்னை மேற்கு மாவட்ட ஆலோசனை கூட்டம்வடசென்னை மேற்கு மாவட்ட ஆலோசனை கூட்டம்மாவட்ட தலைவர் தலைமையில், 15/7/25 அன்று மாவட்ட ...
16/07/2025

வடசென்னை மேற்கு மாவட்ட ஆலோசனை கூட்டம்

வடசென்னை மேற்கு மாவட்ட ஆலோசனை கூட்டம்
மாவட்ட தலைவர் தலைமையில், 15/7/25 அன்று மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் மதுரை மாநாட்டில் பெருந்திரளான கலந்து கொண்டு சிறப்பித்த அனைத்து நிலை நிர்வாகிகளுக்கும் மாவட்டத்தின் சார்பில் நன்றிகள் தெரிவிக்கப்பட்டது.

மேலும் வக்பு திருத்த சட்ட மசோதாவிற்கு எதிராக மாநாட்டில் கொண்டுவரப்பட்ட தீர்மானங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக தெருமுனை கூட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

மனிதநேய தொழிலாளர் சங்கம் சார்பில் மாபெரும் உறுப்பினர் சேர்க்கை முகாம்வடசென்னை மேற்கு மாவட்ட மனிதநேய தொழிலாளர் சங்கம் சார...
16/07/2025

மனிதநேய தொழிலாளர் சங்கம் சார்பில் மாபெரும் உறுப்பினர் சேர்க்கை முகாம்

வடசென்னை மேற்கு மாவட்ட மனிதநேய தொழிலாளர் சங்கம் சார்பில் மாபெரும் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் தமிழ்நாடு அரசு அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்யும் நிகழ்ச்சி 15/07/25 கொளத்தூர் பகுதி அலுவலகத்தில் மாவட்ட மனித நேய தொழிலாளர் சங்க செயலாளர் கதிர் தலைமையிலும்,
மாவட்ட தலைவர் குணங்குடி முஹைதீன், மாவட்ட மமக செயலாளர் கொளத்தூர் நசீர், மாவட்ட தமுமுக செயலாளர் கொளத்தூர் சாகுல்ஹமீது (பொறுப்பு) முன்னிலையிலும் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக மனிதநேய தொழில் சங்கத்தின் மாநிலச் செயலாளர் சாதிக் பாஷா கலந்து கொண்டு சிறப்பித்தார். இதில் மாவட்ட
துணை செயலாளர் பாருக், மாவட்ட நிர்வாகிகள் முன்னாள் மாவட்ட பொருளாளர் காஜாமைதீன் மற்றும் கொளத்தூர் பகுதி நிர்வாகிகள் வட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மதுரை மண்ணில் மனிதநேய மக்கள் கட்சியின் பிரமாண்டமான எழுச்சிப் பேரணி மற்றும் மாநாடுலட்சக்கணக்கான கருப்பு வெள்ளை போராளிகள் ...
16/07/2025

மதுரை மண்ணில் மனிதநேய மக்கள் கட்சியின் பிரமாண்டமான எழுச்சிப் பேரணி மற்றும் மாநாடு

லட்சக்கணக்கான கருப்பு வெள்ளை போராளிகள் ஒன்று கூடல்.

மதுரையில் ஜீலை 6 (2025)மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் இரட்டைக் கோரிக்கை வலியுறுத்தி வஃக்பு திருத்த சட்ட மசோதாவை ரத்து செய்யக் கோரியும், முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்திற்கு ஏற்ப ஊராட்சி மன்றம் முதல் நாடாளுமன்றம் வரை விகிதாச்சார அடிப்படையில் பிரதிநிதித்துவம் கோரியும், வரலாற்று சிறப்புமிக்க மாபெரும் எழுச்சிப் பேரணி மற்றும் மாநாடு தலைவர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா MLA தலைமையில் நடைபெற்றது

இம்மாநாட்டில் மனிதநேய மக்கள் கட்சி பொதுச்செயலாளர் ப.அப்துல்சமது MLA, தமிழ்மையம் நிறுவனர் அருட்தந்தை முனைவர் ஜெகத் கஸ்பர் ராஜ்,ஜோதிமலை இறைபணி திருக்கூடம் நிறுவனர் திருவடிக்குடில் சுவாமிகள் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினார்கள்.

இந்நிகழ்வில் மக்கள் கண்காணிப்பகம் அமைப்பின் செயல்பட்டாளர் திரு.ஹென்றி திபேங்,மக்கள் விடுதலை கட்சி தலைவர் சு.க.முருகவேல் ராஜன் இம்மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்..

இப் பேரணியும்,மாநாடும் ஆண்களாலும்,
பெண்களாலும், ஜமாத்தார்களாலும் கழகத்தின் அனைத்து நிலை நிர்வாகிகளாலும், தொண்டர்களாலும் இறையருளால் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.

எல்லாப் புகழும் இறைவனுக்கே.

#மமகமாநாடு #மதுரைமாநாடு

https://www.youtube.com/live/p4kAXPGhnrE?si=oR1dklpeIeVIR02r
06/07/2025

https://www.youtube.com/live/p4kAXPGhnrE?si=oR1dklpeIeVIR02r

மதுரையில் மனிதநேய மக்கள் கட்சி நடத்தும் எழுச்சிப் பேரணி மற்றும் மாநாடு நேரலை | TMMK MEDIA TV Tamil Tamil Na...

Address

NORTH CHENNAI WEST
Chennai
600118

Alerts

Be the first to know and let us send you an email when Tmmkmedianorthchennai-page posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tmmkmedianorthchennai-page:

Share