Tmmkmedianorthchennai-page

Tmmkmedianorthchennai-page தமுமுக-மமக வடசென்னை மேற்கு மாவட்டத்தின் அதிகாரபூர்வ முகநூல் பக்கம்

இஸ்லாமிய பிரச்சார பேரவை வடசென்னை மேற்கு மாவட்டத்தில் இனிதே நடைபெற்ற தர்பியா வகுப்புவடசென்னை மேற்கு மாவட்ட இஸ்லாமிய பிரச்...
02/10/2025

இஸ்லாமிய பிரச்சார பேரவை வடசென்னை மேற்கு மாவட்டத்தில் இனிதே நடைபெற்ற தர்பியா வகுப்பு

வடசென்னை மேற்கு மாவட்ட இஸ்லாமிய பிரச்சாரப் பேரவை (IPP) சார்பில் நிர்வாகிகளுக்கான தர்பியா வகுப்பு கொளத்தூர் நசீர் மாவட்ட தலைவர்(பொ) தலைமையில் நடைபற்றது.

மாவட்ட விழி அணி செயலாளர் அஹமதுகபீர் கிராத் ஓதினார், மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் ஜமாலியாஅப்துல் காதர் வரவேற்புரை ஆற்றினார்.
சிறப்புரை குணங்குடி முஹைதீன் அவர்கள்
இயக்கவாதிகளின் பண்புகள் என்ற தலைப்பிலும்,
மதார்ஷா பிர்தவ்ஷி அவர்கள் பர்கத் பெறுவதற்கான வழி முறைகள் தலைப்பிலும், தர்வேஷ் ஹசினி
தலைமைக்கு கட்டுபடுதல் என்ற தலைப்பிலும் தர்பியா வகுப்பு எடுத்தனர்.

இதில் மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்கள்
வியாசை ஹனிபா, இ.சௌக்கத் அலி
மாவட்ட துணை செயலாளர்கள் கொளத்தூர் ஷாக்கீர், பாருக், தாம்பரம் ஹமீது, இஸ்லாமிய பிரச்சார பேரவை செயலாளர் முஹம்மது யூசுப்,இளைஞர் அணி செயலாளர் அப்துல்லா,
Smi செயலாளர் ஜமால் அஷிக், MTS செயலாளர் காதீர், MVS பொருளாளர் அப்துல் காதர், மகளிர் பேரவை மாவட்ட செயலாளர் ரெஜினா பேகம், மாவட்ட மகளிர் பேரவை பொருளாளர் யாஸ்மீன் மற்றும் அனைத்து பகுதி நிர்வாகிகள், அனைத்து வட்ட நிர்வாகிகள்.
மகளிர் பேரவையினர் திரளாக கலந்து கொண்டனர்.
பொறுப்பு குழு உறுப்பினர் கொளத்தூர் சாகுல் நன்றியுடன் முடிவுற்றது.

வடசென்னை மேற்கு மாவட்டம் சார்பில் கொளத்தூர் பகுதியில் கலந்தாய்வு ஆலோசனை கூட்டம்வடசென்னை மேற்கு மாவட்டத்தில்2/10/ 2025 அன...
01/10/2025

வடசென்னை மேற்கு மாவட்டம் சார்பில் கொளத்தூர் பகுதியில் கலந்தாய்வு ஆலோசனை கூட்டம்

வடசென்னை மேற்கு மாவட்டத்தில்
2/10/ 2025 அன்று மாவட்டத்தின் சார்பில் நடைபெறவிருக்கும் நிர்வாகிகளுக்கான தர்பியா நிகழ்வு பற்றிய கலந்தாய்வு ஆலோசனை கூட்டம் கொளத்தூர் பகுதியில், பகுதி தலைவர் தமீம் அன்சாரி தலைமையில், பொறுப்பு மாவட்டத் தலைவர் கொளத்தூர் நசீர் முன்னிலையில் நடைபெற்றது.

இதில் கொளத்தூர் பகுதியில் அனைத்து கிளை நிர்வாகிகளையும் மாவட்ட நிர்வாகிகள் சென்று கலந்தாய்வு செய்தனர். தர்பியாவிற்கான அழைப்பு விடுத்து, தர்பியாவிற்கு அதிகப்படியான நிர்வாகிகளை அழைத்து வரவேண்டும் என்று வலியுறுத்தினர். அவர்களும் அதிகப்படியான ஆட்களை அழைத்து வருவது என்று வாக்குறுதி அளித்துள்ளனர்.

இதில் மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்கள் ஜமாலியா அப்துல் காதர், கொளத்தூர் சாகுல்
வியாசை ஹனிபா, சௌக்கத் அலி ஆகியோரும், மாவட்டத் துணைச் செயலாளரும் பகுதி பொறுப்பாளருமான பாருக், மாவட்ட துணை செயலாளர் ஜாகீர், மாவட்ட அணி நிர்வாகிகள் அஹ்மத் கபீர், அத்தாவுல்லா, பகுதி செயலாளர் சாகுல் ஹமீது உள்ளிட்ட பகுதி நிர்வாகிகள்
ஆகியோர் உடன் இருந்தனர்.

பெரம்பூர் பகுதியில் தர்பியா நிகழ்வு பற்றிய கலந்தாய்வு ஆலோசனை கூட்டம் வடசென்னை மேற்கு மாவட்டத்தில் அக்டோபர் 2 அன்று மாவட்...
30/09/2025

பெரம்பூர் பகுதியில் தர்பியா நிகழ்வு பற்றிய கலந்தாய்வு ஆலோசனை கூட்டம்

வடசென்னை மேற்கு மாவட்டத்தில் அக்டோபர் 2 அன்று மாவட்டத்தின் சார்பில் நடைபெறவிருக்கும் நிர்வாகிகளுக்கான தர்பியா நிகழ்வு பற்றிய கலந்தாய்வு ஆலோசனை கூட்டம் பெரம்பூர் பகுதிதலைவர் பசீர்அகமது தலையில் பொறுப்பு மாவட்டத் தலைவர் கொளத்தூர் நசீர் முன்னிலையில் நடைபெற்றது.

இதில் பெரம்பூர் பகுதியில் அனைத்து கிளைகளிலும் மாவட்ட நிர்வாகிகள் சென்று கலந்தாய்வு செய்தனர். தர்பியாவிற்கான அழைப்பு விடுத்து, தர்பியாவிற்கு அதிகப்படியான நிர்வாகிகளை அழைத்து வரவேண்டும் என்று வலியுறுத்தினர். அவர்களும் அதிகப்படியான ஆட்களை அழைத்து வருவது என்று வாக்குறுதி அளித்துள்ளனர்.

இதில் மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்கள்
வியாசை ஹனிபா, சௌக்கத் அலி ஆகியோரும் மாவட்டத் துணைச் செயலாளரும் பகுதி பொறுப்பாளருமான தாம்பரம் ஹமீது, மாவட்ட துணை செயலாளர் பாருக்,பகுதி தமுமுக செயலாளர் நூருல்லாஹ் மற்றும் பகுதி நிர்வாகிகள் ஆகியோர் உடன் இருந்தனர்.

வடசென்னை மேற்கு மாவட்ட வழக்கறிஞர் ஆலோசனை கூட்டம்வடசென்னை மேற்கு மாவட்ட வழக்கறிஞர் ஆலோசனை கூட்டம் zoom மூலம் மாவட்ட பொறுப...
29/09/2025

வடசென்னை மேற்கு மாவட்ட வழக்கறிஞர் ஆலோசனை கூட்டம்

வடசென்னை மேற்கு மாவட்ட வழக்கறிஞர் ஆலோசனை கூட்டம் zoom மூலம் மாவட்ட பொறுப்பு தலைவர் கொளத்தூர் நசீர் தலைமையில், மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் அத்தாவுல்லா, மாவட்ட பொருளாளர் சர்புதீன், மாவட்ட துணை செயலாளர் ரபிக் ஆகியோருடன் ஆலோசனை நடைபெற்றது.

வரும் 2/10/2025 அன்று நடைபெறவிருக்கும் மாநில வழக்கறிஞர் அணி ஆலோசனை கூட்டத்தில் மாவட்டத்தின் சார்பில் என்னென்ன கோரிக்கைகள் வைக்க வேண்டும் என்று விவாதிக்கப்பட்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

வடசென்னை மேற்கு மாவட்டம் தர்பியா நிகழ்வு பற்றிய கலந்தாய்வு ஆலோசனை கூட்டம்வடசென்னை மேற்கு மாவட்டத்தில் அக்டோபர் 2 அன்று, ...
29/09/2025

வடசென்னை மேற்கு மாவட்டம் தர்பியா நிகழ்வு பற்றிய கலந்தாய்வு ஆலோசனை கூட்டம்

வடசென்னை மேற்கு மாவட்டத்தில் அக்டோபர் 2 அன்று, மாவட்டத்தின் சார்பில் நடைபெறவிருக்கும் நிர்வாகிகளுக்கான தர்பியா நிகழ்வு பற்றிய கலந்தாய்வு ஆலோசனை கூட்டமானது, திரு.வி.நகர் பகுதியில்,
பகுதி தலைவர் ஷாயின்ஷா தலைமையில் பொறுப்பு மாவட்டத் தலைவர் கொளத்தூர் நசீர் முன்னிலையில் நடைபெற்றது.

இதில் திருவிக நகர் பகுதி அனைத்து கிளைகளுக்கும் சென்று மாவட்ட நிர்வாகிகள் சென்று கலந்தாய்வு செய்தனர் மேலும் தர்பியாவிற்கான அழைப்பு விடுத்து தர்பியாவிற்கு அதிகப்படியான நிர்வாகிகளை அழைத்து வரவேண்டும் என்று வலியுறுத்தினர்.அவர்களும் அதிகப்படியான ஆட்களை அழைத்து வருவது என வாக்குறுதி அளித்துள்ளனர்.

இதில் மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்கள் ஜமாலியா அப்துல் காதர் கொளத்தூர் சாகுல் ஹமீது வியாசை ஹனிபா ஆகியோரும் மாவட்டத் துணைச் செயலாளரும் பகுதி பொறுப்பாளருமான ஷேக் ஹபிபுல்லா பகுதி மமக செயலாளர் ஜப்பார் ஆகியோர் உடன் இருந்தனர்.

வடசென்னை மேற்கு மாவட்ட ஆலோசனை கூட்டம்வடசென்னை மேற்கு மாவட்ட ஆலோசனை கூட்டம் மாவட்ட பொறுப்பு குழு தலைவர் கொளத்தூர் நசீர் த...
24/09/2025

வடசென்னை மேற்கு மாவட்ட ஆலோசனை கூட்டம்

வடசென்னை மேற்கு மாவட்ட ஆலோசனை கூட்டம் மாவட்ட பொறுப்பு குழு தலைவர் கொளத்தூர் நசீர் தலைமையிலும், மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையிலும் நடைபெற்றது.

இதில் அக்டோபர் 2ம் தேதி நடைபெற உள்ள தர்பியா நிகழ்ச்சிக்கு, அனைத்து பகுதி நிர்வாகிகளையும் வட்ட நிர்வாகிகளின் சந்தித்து அழைப்பு கொடுப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

இதில் மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்கள் ஜமாலியா அப்துல் காதர், வியாசை அனிபா சௌகத் அலி, துணைச் செயலாளர்கள் பாருக், தாம்பரம் ஹமீது, கொளத்தூர் ஜாகிர், அணி நிர்வாகிகள் முஹம்மது யூசுப், ஷேக் தாவூத், காதிர்,அஹமது கபீர், அப்துல் காதர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

✍🏻
இம்ரான் கான்.H,
மாவட்ட செயலாளர்,
தமுமுக தகவல் தொழில்நுட்ப அணி,
வடசென்னை மேற்கு மாவட்டம்.
Date: 23/09/2025

காசா படுகொலைக்கு எதிராக போராட்டத்தில்  கண்டனத்தை பதிவு செய்த பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா MLAபாலஸ்தீன மக்களை இனப்படுக...
19/09/2025

காசா படுகொலைக்கு எதிராக போராட்டத்தில் கண்டனத்தை பதிவு செய்த பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா MLA

பாலஸ்தீன மக்களை இனப்படுகொலை செய்யும் இஸ்ரேலை கண்டித்து பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் மாபெரும் பேரணி நடைபெற்றது. மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா MLA கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்..

மேலும் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன், திரைப்பட துறை கலைஞர்கள் வெற்றிமாறன் , பிரகாஷ்ராஜ்,சத்யராஜ்,அமீர் உள்ளிட்ட தோழமைக் கட்சியை நிர்வாகிகள் ஆகியோர் கண்டனத்தை பதிவு செய்தார்கள் .

இந்நிகழ்வில் தமுமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் ஜெ.ஹாஜா கனி தலைமை நிர்வாக்குழு உறுப்பினர் குணங்குடி ஆர்.எம்.அனீபா, மமக மாநில துணைப் பொதுச்செயலாளர் தாம்பரம் யாக்கூப் M.C,தலைமை நிலையச் செயலாளர் வழ.ஜைனுல் ஆபிதீன், தமுமுக மாநிலச் செயலாளர்.சிவகாசி முஸ்தபா,மமக மாநில அமைப்புச் செயலாளர் புழல் சேக் தலைமை பிரதிநிதி தைமியா ,அபிராமம் அப்துல் காதர் மத்திய சென்னை வடக்கு மாவட்டத்தலைவர் எல்.தாஹா நவீன் M.C மத்திய சென்னை தெற்கு மாவட்டத்தலைவர் இ.எம்.ரசூல்
வட சென்னை கிழக்கு மாவட்டத்தலைவர் இராயபுரம் அலி,வடசென்னை மேற்கு மாவட்டத்தலைவர் (பொ) கொளத்தூர் நசீர், தென் சென்னை கிழக்கு மாவட்டத் தலைவர் பனையூர் யூசுப்,திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்தலைவர் அப்துல் காதர் மற்றும்
இளைஞர் அணி மாநில செயலாளர் தாம்பரம் அன்சாரி , மருத்துவ சேவை அணி மாநில செயலாளர் கலீல் ரஹ்மான், சுற்றுசூழல் அணி மாநில செயலாளர் செங்குன்றம் காஜா, வழக்கறிஞர் அணி மாநில துணைச்செயலாளர் வழ.செய்யது சமூக நீதி மாணவர் இயக்க மாநில துணைச் செயலாளர்கள் வழ.முஹம்மது,பொதக்குடி ரியாஸ்,மற்றும் மாவட்ட துணை அணி நிர்வாகிகள்,பகுதி,வட்ட நிர்வாகிகள் என நூற்றுக்கணக்கான தமுமுக -மமக நிர்வாகிகள் பெருமளவில் கலந்துக் கொண்டனர்.


வடசென்னை மேற்கு மாவட்ட நிர்வாக குழு ஆலோசனை கூட்டம் வடசென்னை மேற்கு மாவட்ட நிர்வாக குழு ஆலோசனை கூட்டமானது, மாவட்ட பொறுப்ப...
16/09/2025

வடசென்னை மேற்கு மாவட்ட நிர்வாக குழு
ஆலோசனை கூட்டம்

வடசென்னை மேற்கு மாவட்ட நிர்வாக குழு
ஆலோசனை கூட்டமானது, மாவட்ட பொறுப்புத் தலைவர் கொளத்தூர் நசீர் தலைமையிலும், மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையிலும் நடைபெற்றது.

இதில் நிர்வாக கட்டமைப்பு கிளை மற்றும் பகுதி நிர்வாகிகள் கணக்கெடுப்பு மற்றும் நிர்வாகிகளுக்கான தர்பியா வகுப்பு அக்டோபர் மாதம் இரண்டாம் தேதி நடத்துவதென்றும்,
SIR (சிறப்பு வாக்காளர் திருத்தப் பணி) விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்துவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதில் மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர்கள் கொளத்தூர் சாகுல், ஜமாலியா அப்துல் காதர் வியாசை அனிபா, சௌக்கத் அலி,மாவட்ட துணைத் தலைவர் கொடுங்கை நாகூர், தாம்பரம் ஹமீது பாரூக் கொளத்தூர் ஜாகீர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

✍🏻
இம்ரான் கான்.H,
மாவட்ட செயலாளர்,
தமுமுக தகவல் தொழில்நுட்ப அணி,
வடசென்னை மேற்கு மாவட்டம்.
Date: 16/09/2025

மமக வழக்கறிஞர் அணியின் சென்னை மண்டல ஆலோசனைகூட்டம் மனிதநேய வழக்கறிஞர்கள் சங்கத்தின் சென்னை மண்டல ஆலோசனைக் கூட்டம் இன்று ம...
16/09/2025

மமக வழக்கறிஞர் அணியின் சென்னை மண்டல ஆலோசனைகூட்டம்

மனிதநேய வழக்கறிஞர்கள் சங்கத்தின் சென்னை மண்டல ஆலோசனைக் கூட்டம் இன்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஜும்ஆ தொழுகைக்கு பிறகு வழக்கறிஞர் அணியின் மாநிலச் செயலாளர் அண்ணன் முஜிபுர் ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் எதிர்வரும் அக்டோபர் 2ம் தேதி கிருஷ்ணகிரியில் நடைபெற உள்ள வழக்கறிஞர் அணியின் மூன்றாவது மாநில செயற்குழு கூட்டம் சம்பந்தமாக விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இந்நிகழ்வில் வழக்கறிஞர் அணியின் பொறுப்பாளரும் தலைமை நிலைய செயலாளருமான அண்ணன் ஜைனுல் ஆபிதீன் அவர்கள் கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்கள்.

மேலும் இந்நிகழ்வில் வழக்கறிஞர் அணியின் மாநில பொருளாளர் உசேன் சார், வழக்கறிஞர் அணியின் மாநில துணைச் செயலாளர் செய்யது அபுதாஹிர், மற்றும் வழக்கறிஞர் அணியின் கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் சோயப், திருவள்ளூர் (கி) வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர் முகமது மதார் மைதீன், செங்கல்பட்டு வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர் பாதுஷா, வடசென்னை (கி) மாவட்ட வழக்கறிஞர் அணி மாவட்ட பொருளாளர் சிராஜ், காஞ்சி வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர் பாரூக் அப்துல்லா, வடசென்னை (மே) வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர் அத்தாவுல்லா, சென்னை உயர்நீதிமன்ற சங்க செயலாளர் பெரோஷா ஷிபான் அன்சாரி, வடசென்னை (கி) வழக்கறிஞர் அணியின் மாவட்ட துணை செயலாளர் சையத் இப்ராஹிம், வடசென்னை (மே) வழக்கறிஞர் மாவட்ட துணைச் செயலாளர் ஜுனைத்ரபி மற்றும் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் நஸ்லின் ,மோகன், லீலாவதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

✍🏻
இம்ரான் கான்.H,
மாவட்ட செயலாளர்,
மமக தகவல் தொழில்நுட்ப அணி,
வடசென்னை மேற்கு மாவட்டம்.
Date: 12/09/2025

தமுமுகவின் 31வது ஆண்டு துவக்க விழா மற்றும் மனிதநேய விருது வழங்கும் நிகழ்வு!சென்னை இராஜா அண்ணாமலை மன்றத்தில் தமிழ்நாடு மு...
11/09/2025

தமுமுகவின் 31வது ஆண்டு துவக்க விழா மற்றும் மனிதநேய விருது வழங்கும் நிகழ்வு!

சென்னை இராஜா அண்ணாமலை மன்றத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் 31வது ஆண்டு துவக்க விழா மற்றும் சிறந்த சமூக செயற்பாட்டாளர்களுக்கு விருது வழங்கும் நிகழ்வு தமுமுக தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது

மமக பொதுச்செயலாளர் ப.அப்துல்சமது MLA, வரவேற்புரை ஆற்றினார் தமுமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் ஜெ.ஹாஜாகனி தொகுப்புரை நிகழ்த்தினார், தொடக்கமாக இறை வசனத்தை தலைமை நிர்வாக குழு உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் உமரி உரை நிகழ்த்தினார்.

இந்த நிகழ்வில் பாலபிரஜாபதி அடிகளார் அவர்கள் சார்பில் அவர்களுடைய மருமகனார் திரு ரமேஷ் சமூக நல்லிணக்கத்திற்கான மனிதநேய விருதையும்

வழக்கறிஞர் ஹென்றி திஃபேன் அவர்களுக்கு
மனித உரிமைக் காப்பாளருக்கான மனிதநேய விருதையும், பேர்ணாம்பேட் பொறியாளர் பீ.கே.சபீர் அஹ்மத் அவர்கள் சார்பில் அவர்களுடைய
மகனார் ஹாமி அவர்கள் கல்விப் பணிக்கான மனிதநேய விருதையும், ஊடகவியாளர் திரு.வீரபாண்டியன் அவர்களுக்குஊடகப் பணிக்கான மனிதநேய விருதையும், பேராசிரியர் ஜெயராமன் அவர்களுக்கு சுற்றுச்சூழல் காப்பாளருக்கான மனிதநேய விருதையும், தி புரொபஷனல் கூரியர் நிறுவனர் S.அகமதுமீரான் அவர்களுக்கு சமுதாய தொண்டின் கண்ணிய செல்வர் மனிதநேய விருதையும், "ST கூரியர் நிறுவனர் K. அன்சாரி அவர்களுக்கு சமுதாய தொண்டின் கண்ணிய செல்வர் மனிதநேய விருதையும் தமுமுகவின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா MLA அவர்கள் வழங்கினார்கள்.

மேலும் இந்நிகழ்வில் மாநில பொருளாளர் N.ஷபியுல்லாஹ்கான் மமக மாநில பொருளாளர் E.உமர் ஹாஜியார் மற்றும் தலைமை நிர்வாகிகள் மற்றும் மாநில நிர்வாகிகளும் மாவட்டங்களின் பல்வேறு கட்ட நிர்வாகிகளும் கலந்து சிறப்பித்தனர். மேலும் வடசென்னை மேற்கு மாவட்ட நிர்வாகிகள் உட்பட சென்னை மண்டல நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர்.

#தமுமுக31

10/09/2025

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் 31 ஆம் ஆண்டு தொடக்கம் மனிதநேய விருதுகள் வழங்கும் விழா..
👇👇👇
https://www.facebook.com/share/v/17N5cg6hmP/

தமுமுக தகவல் தொழில்நுட்ப அணி

வடசென்னை மேற்கு மாவட்டம் தமுமுக மற்றும் மமகவின் செயல்வீரர்கள் கூட்டம் வடசென்னை மேற்கு மாவட்டத்தின் செயல்வீரர்கள் கூட்டமா...
05/09/2025

வடசென்னை மேற்கு மாவட்டம் தமுமுக மற்றும் மமகவின் செயல்வீரர்கள் கூட்டம்

வடசென்னை மேற்கு மாவட்டத்தின் செயல்வீரர்கள் கூட்டமானது, மாலை 8 மணி அளவில் ஜமாலியாவில் நடைபெற்றது. இதில் மாவட்ட பொறுப்பு குழு தலைவர் கொளத்தூர் நசீர் தலைமை தாங்கினார். பெரம்பூர் பகுதி அப்துல் கரீம் அவர்கள் கிராத் ஓதி தொடங்கி வைத்தார். மாவட்ட பொறுப்புகுழு தலைவர், மாவட்ட பொறுப்புகுழு உறுப்பினர் வியாசை அனிபா, முன்னாள் மாவட்ட பொருளாளர் காஜாமைதீன், வழக்கறிஞர் அணி செயலாளர் அதாவுல்லா ஆகியோர் சிற்றரையாற்றினார்கள்.

தலைமைச் செயற்குழு உறுப்பினர் உஸ்மான் அலி இயக்கத்தின் கட்டமைப்பு மற்றும் நம்முடைய இயக்க வளர்ச்சி அமைப்பில் நிர்வாகிகள் பங்களிப்பு பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.இறுதியாக திரு.வி.க நகர் பகுதி தலைவர் ஷாயின்ஷா நன்றியுரையுடன் இனிதே கூட்டம் நிறைவடைந்தது.

இதில் மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்கள் கொளத்தூர் சாகுல், சௌக்கத் அலி, மாவட்ட துணை செயலாளர்கள் தாம்பரம் ஹமீது, பாருக் , ஷேக் ஹபிபுல்லாஹ் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள், அணி செயலாளர்கள், பொருளாளர்கள், அனைத்து பகுதி நிர்வாகிகள் மற்றும் அனைத்து வட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

✍🏻
இம்ரான் கான்.H,
மாவட்ட செயலாளர்,
தமுமுக தகவல் தொழில்நுட்ப அணி,
வடசென்னை மேற்கு மாவட்டம்.
Date:06/09/2025

Address

NORTH CHENNAI WEST
Chennai
600118

Alerts

Be the first to know and let us send you an email when Tmmkmedianorthchennai-page posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tmmkmedianorthchennai-page:

Share