
02/10/2025
இஸ்லாமிய பிரச்சார பேரவை வடசென்னை மேற்கு மாவட்டத்தில் இனிதே நடைபெற்ற தர்பியா வகுப்பு
வடசென்னை மேற்கு மாவட்ட இஸ்லாமிய பிரச்சாரப் பேரவை (IPP) சார்பில் நிர்வாகிகளுக்கான தர்பியா வகுப்பு கொளத்தூர் நசீர் மாவட்ட தலைவர்(பொ) தலைமையில் நடைபற்றது.
மாவட்ட விழி அணி செயலாளர் அஹமதுகபீர் கிராத் ஓதினார், மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் ஜமாலியாஅப்துல் காதர் வரவேற்புரை ஆற்றினார்.
சிறப்புரை குணங்குடி முஹைதீன் அவர்கள்
இயக்கவாதிகளின் பண்புகள் என்ற தலைப்பிலும்,
மதார்ஷா பிர்தவ்ஷி அவர்கள் பர்கத் பெறுவதற்கான வழி முறைகள் தலைப்பிலும், தர்வேஷ் ஹசினி
தலைமைக்கு கட்டுபடுதல் என்ற தலைப்பிலும் தர்பியா வகுப்பு எடுத்தனர்.
இதில் மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்கள்
வியாசை ஹனிபா, இ.சௌக்கத் அலி
மாவட்ட துணை செயலாளர்கள் கொளத்தூர் ஷாக்கீர், பாருக், தாம்பரம் ஹமீது, இஸ்லாமிய பிரச்சார பேரவை செயலாளர் முஹம்மது யூசுப்,இளைஞர் அணி செயலாளர் அப்துல்லா,
Smi செயலாளர் ஜமால் அஷிக், MTS செயலாளர் காதீர், MVS பொருளாளர் அப்துல் காதர், மகளிர் பேரவை மாவட்ட செயலாளர் ரெஜினா பேகம், மாவட்ட மகளிர் பேரவை பொருளாளர் யாஸ்மீன் மற்றும் அனைத்து பகுதி நிர்வாகிகள், அனைத்து வட்ட நிர்வாகிகள்.
மகளிர் பேரவையினர் திரளாக கலந்து கொண்டனர்.
பொறுப்பு குழு உறுப்பினர் கொளத்தூர் சாகுல் நன்றியுடன் முடிவுற்றது.