JE TV

JE TV JE TV – A Tamil Christian page sharing Bible stories, quizzes, songs & games to grow in God’s love

“உங்கள் குறைவையெல்லாம் இயேசு நிறைவாக்குவார்.”கர்த்தாவே,இன்று என் வாழ்வில் உள்ள குறைகளைக் கண்டு கலங்காமல், உம்மை நம்பி ஒப...
19/09/2025

“உங்கள் குறைவையெல்லாம் இயேசு நிறைவாக்குவார்.”

கர்த்தாவே,
இன்று என் வாழ்வில் உள்ள குறைகளைக் கண்டு கலங்காமல், உம்மை நம்பி ஒப்படைக்கிறேன்.

1.உலகம் என்னை விட்டு விலகினாலும்,
2.மனிதர்கள் உதவ மறுத்தாலும்,
3.வாய்ப்புகள் மூடப்பட்டாலும்,

என் தேவையை அறிந்து, என் குறைகளை பூர்த்தி செய்வார் என்ற உமது வாக்குறுதி எனக்கு ஆறுதல் தருகிறது. 🙏

இன்று என் குடும்பம், வேலை, உடல்நலம், மன அமைதி—எதிலும் குறை இருந்தாலும், இயேசுவே நீர் பூர்த்தி செய்வீர்.
என் தேவைகள் அனைத்தையும் உமது கிருபையினால் நிறைவாக்கும் அன்பான தேவனே, உமக்கே மகிமை .

அன்பானவர்களே,
உங்கள் குறைகள் எதுவாக இருந்தாலும் இன்று அதை இயேசுவிடம் ஒப்படையுங்கள். அவர் உங்களை நிறைவான வாழ்வில் நடத்துவார்.

🌸 Have a Spirit-filled Blessed Day 🌸

“கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்; அவர் என் வலதுபாரிசத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கப்படுவேதில்லை...
16/09/2025

“கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்; அவர் என் வலதுபாரிசத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கப்படுவேதில்லை.”

விளக்கம்:
“கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்”
அதாவது, என் வாழ்க்கையின் ஒவ்வொரு முடிவிலும், சூழ்நிலையிலும், சோதனைகளிலும் தேவனை முதன்மைப்படுத்துகிறேன். அவர் என்னுடைய வழிகாட்டியாக இருக்கிறார்.

“அவர் என் வலதுபாரிசத்தில் இருக்கிறபடியால்”
வலது பக்கம் என்பதில் அர்த்தம் – பாதுகாப்பு, பலம், துணை, காப்பு. தேவன் எப்போதும் அருகில் இருப்பவர், நம்மை விட்டு பிரியாதவர்.

“நான் அசைக்கப்படுவேதில்லை”
எவ்வளவு சிரமம் வந்தாலும், எதிரிகள் எழுந்தாலும், சோதனைகள் வந்தாலும் நான் வீழ்வதில்லை, மனம் குலையாது. ஏனெனில், என்னுடன் நின்று காக்கும் கர்த்தர் என் பலமாக இருக்கிறார்.

நம் பார்வை தேவனை நோக்கி நிலைத்திருந்தால், எந்தத் துன்பமும், பயமும் நம்மை குலைக்க முடியாது.

Prayer:
“கர்த்தாவே, என் வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்திலும் உம்மை முன்னிலைப்படுத்த நான் கற்றுக்கொள்ள உதவி செய்க. நீர் எனக்கு வலது பக்கமாய் இருக்கிறீர் என்பதால், எந்த சோதனையிலும் நான் அசையாமல் நிற்கச் செய்க. ஆமென்.”

வாழ்க்கைப் பயன்பாடு:

நாம் எதைச் செய்தாலும் முதலில் தேவனை நினைத்துக் கொண்டு தொடங்க வேண்டும்.

சிரமங்கள் வந்தாலும், தேவன் நம்மோடு இருக்கிறார் என்பதை நினைத்தால் மனம் குலையாது.

“நான் தனியாக இல்லை, கர்த்தர் என் பக்கத்தில் இருக்கிறார்” என்ற நம்பிக்கையுடன் வாழ வேண்டும்.

இந்த வசனம் நம்மை தேவனை மையமாக வைத்து உறுதியுடன் வாழக் கற்றுக்கொடுக்கிறது.ஆமென்

“ஜீவமார்க்கத்தை எனக்குத் தெரியப்பண்ணுவீர். உம்முடைய சமுகத்தில் பரிபூரண ஆனந்தமும், உம்முடைய வலது பக்கத்தில் நித்திய பேரின...
12/09/2025

“ஜீவமார்க்கத்தை எனக்குத் தெரியப்பண்ணுவீர். உம்முடைய சமுகத்தில் பரிபூரண ஆனந்தமும், உம்முடைய வலது பக்கத்தில் நித்திய பேரின்பமும் உண்டு.” – சங்கீதம் 16:11

விளக்கம்:

இந்த வசனம் நம்முடைய நம்பிக்கை மற்றும் ஆனந்தத்தை வெளிப்படுத்துகிறது.

1. ஜீவமார்க்கம் – நம்மை நித்திய ஜீவனுக்கு அழைத்து செல்லும் சரியான பாதை. அதை நமக்குக் காட்டுபவர் தேவன் மட்டுமே.

2. உம்முடைய சமுகத்தில் பரிபூரண ஆனந்தம் – உலகத்தில் கிடைக்கும் சந்தோஷங்கள் தற்காலிகமானவை. ஆனால் தேவனுடைய சந்நிதியில் மட்டுமே முழுமையான, நிலையான ஆனந்தம் இருக்கிறது.

3. உம்முடைய வலதுபக்கத்தில் நித்திய பேரின்பம் – தேவனோடு சேர்ந்திருக்கும் வாழ்க்கை நித்திய பேரின்பமும் அமைதியையும் தருகிறது.

தேவன் தான் நமக்குச் சரியான வழியைக் காட்டுபவர்.

அவரின் சந்நிதி தான் நம்முடைய சந்தோஷமாகும்.

அவரோடு இருப்பது நித்திய பேரின்பத்தைத் தருகிறது.
ஆமென்

தேவன் விரும்பும் தலைமைத் தன்மைகள்”(How a Leader Should Be – Biblical Model)I. தலைவன் தேவனுக்குப் பயப்படுகிறவராக இருக்க வ...
04/09/2025

தேவன் விரும்பும் தலைமைத் தன்மைகள்”
(How a Leader Should Be – Biblical Model)

I. தலைவன் தேவனுக்குப் பயப்படுகிறவராக இருக்க வேண்டும்
II. ஞானம் & ஆலோசனை
III. தலைவன் சோதனைகளில் உறுதியாய் நிற்பவன்.
IV. தலைவன் எளிமையுடனும், சுயலாபமின்றியும் இருக்க வேண்டும்
V. தலைவன் மக்களை தேவனிடமே நடத்த வேண்டும்
---

I. தலைவன் தேவனுக்குப் பயப்படுகிறவராக இருக்க வேண்டும்

📖 யாத்திராகமம் (Exodus)18:21 –

ஜனங்கள் எல்லாருக்குள்ளும் தேவனுக்குப் பயந்தவர்களும் உண்மையுள்ளவர்களும் பொருளாசையை வெறுக்கிறவர்களுமான திறமையுள்ள மனிதரைத் தெரிந்துகொண்டு, அவர்களை ஆயிரம்பேருக்கு அதிபதிகளாகவும், நூறுபேருக்கு அதிபதிகளாகவும், பத்துபேருக்கு அதிபதிகளாகவும் ஏற்படுத்தும்.
யாத்திராகமம் 18:21

👉 ஒரு நல்ல தலைமை தேவபயத்திலிருந்தே தொடங்குகிறது.

---

II. ஞானம் & ஆலோசனை

📖 நீதிமொழிகள் 11:14 –
ஆலோசனையில்லாத இடத்தில் ஜனங்கள் விழுந்துபோவார்கள்;: அநேக ஆலோசனைக்காரர் உண்டானால் சுகம் உண்டாகும்.
நீதிமொழிகள் 11:14

“ஆலோசனையின்மையால் ஜனங்கள் விழுந்துபோகிறார்கள்.”

📖 2 நாளாகமம் 1:10
இப்போதும் நான் இந்த ஜனத்திற்கு முன்பாகப் போக்கும் வரத்துமாயிருக்கத்தக்க ஞானத்தையும் அறிவையும் எனக்குத் தந்தருளும், ஏராளமாயிருக்கிற இந்த உம்முடைய ஜனத்தை நியாயம் விசாரிக்கத்தக்கவன் யார் என்றான்.

சாலொமோன் தேவனிடம் ஞானமும் & அறிவும் கேட்டான்.

👉 தலைவன தேவ ஞானத்தின்படி ஆலோசனை தருவான்.

---

III. தலைவன் சோதனைகளில் உறுதியாய் நிற்பவன்.

📖 தானியேல் 6:10 – தடை இருந்தாலும் தானியேல் ஜெபம் செய்வதை விடவில்லை .

தானியேலோவென்றால், அந்தப் பத்திரத்துக்குக் கையெழுத்து வைக்கப்பட்டதென்று அறிந்தபோதிலும், தன் வீட்டுக்குள்ளேபோய், தன் மேல் அறையிலே எருசலேமுக்கு நேராகப் பலகணிகள் திறந்திருக்க, அங்கே தான் முன் செய்துவந்தபடியே, தினம் மூன்று வேளையும் தன் தேவனுக்கு முன்பாக முழங்காற்படியிட்டு ஜெபம்பண்ணி, ஸ்தோத்திரம் செலுத்தினான்.
தானியேல் 6:10

📖 யாக்கோபு 1:12 – சோதனையில் நிலைத்திருப்பவன் பாக்கியவான்.

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான். அவன் உத்தமனென்று விளங்கினபின்பு கர்த்தர் தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணின ஜீவகிரீடத்தைப் பெறுவான்.
யாக்கோபு 1:12

---

IV. தலைவன் எளிமையுடனும், சுயலாபமின்றியும் இருக்க வேண்டும்

📖 1 சமுவேல் 15:17 – “நீ சிறியவனாய் இருந்தபோது தேவன் உன்னை ராஜாவாக்கினார்.”

அப்பொழுது சாமுவேல்: நீர் உம்முடைய பார்வைக்குச் சிறியவராயிருந்தபோது அல்லவோ இஸ்ரவேல் கோத்திரங்களுக்குத் தலைவரானீர். கர்த்தர் உம்மை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம் பண்ணுவித்தாரே.
1 சாமுவேல் 15:17

📖 பிலிப்பியர் 2:3-5 – “சுயலாபத்தினாலும் வீண்பெருமையினாலாவது செய்யாதீர்கள்.”

ஒன்றையும் வாதினாலாவது, வீண்பெருமையினாலாவது செய்யாமல், மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக்கடவீர்கள்.
பிலிப்பியர் 2:3

அவனவன் தனக்கானவைகளையல்ல, பிறருக்கானவைகளையும் நோக்குவானாக.
பிலிப்பியர் 2:4

கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது.
பிலிப்பியர் 2:5

உண்மையான தலைமைக்கு அழகு பணிவும் எளிமையும் தான்.

V. தலைவன் மக்களை தேவனிடமே நடத்த வேண்டும்

📖 1 கொரிந்தியர் 11:1 – “நான் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறதுபோல நீங்கள் என்னைப் பின்பற்றுங்கள்.”

📖 எபிரெயர் 13:17 – “உங்கள் தலைவர்களுக்கு கீழ்ப்படியுங்கள்; உங்களை நடத்துகிறவர்கள், உங்கள் ஆத்துமாக்களுக்காக உத்தரவாதம்பண்ணுகிறவர்களாய் விழித்திருக்கிறவர்களானபடியால், அவர்கள் துக்கத்தோடே அல்ல, சந்தோஷத்தோடே அதைச் செய்யும்படி, அவர்களுக்குக் கீழ்ப்படிந்து அடங்குங்கள். அவர்கள் துக்கத்தோடே அப்படிச் செய்தால் பிரயோஜனமாயிருக்கமாட்டாதே.
எபிரேயர் 13:17

உண்மையான தலைவன் மக்களைத் தன்னிடமல்ல, தேவனிடமே நடத்துகிறவன்.

✝️ முடிவுரை

தேவபயம் → அடிப்படை

ஞானம் → ஆலோசனை தரும் தன்மை

விசுவாசம் → சோதனையில் உறுதியாக நிற்பது.

பணிவு → சுயலாபமின்றி
எளிமையாக இருப்பது.

மேய்ப்பன் மனம் → மக்களை தேவனிடமே நடத்துவது.

இயேசு கிறிஸ்துவே சிறந்த தலைவர். அவருடைய வழியைப் பின்பற்றினால், நம்முடைய தலைமை ஆசீர்வாதமாகவும், சாட்சியாகவும் இருக்கும்.

“கர்த்தர் தம்முடைய ஜனத்தின் நியாயத்தை விசாரித்து, தம்முடைய ஊழியக்காரர்கள்மேல் பரிதாபப்படுவார்.”விளக்கம்:கர்த்தர் நியாயமா...
21/08/2025

“கர்த்தர் தம்முடைய ஜனத்தின் நியாயத்தை விசாரித்து, தம்முடைய ஊழியக்காரர்கள்மேல் பரிதாபப்படுவார்.”

விளக்கம்:

கர்த்தர் நியாயமானவர் – அவர் தம்முடைய ஜனங்களுக்கு நீதி செய்வார். யாரும் அநியாயம் செய்தாலும், கடவுள் அதை காண்கிறார், மற்றும் அவர் சரியான நியாயத்தை நடத்துகிறார்.

தம்முடைய ஊழியக்காரர்கள்மேல் இரக்கம் – தேவனை விசுவாசித்து சேவிக்கிறவர்களை அவர் விட்டுவிட மாட்டார்; அவர்கள்மேல் கருணையையும் இரக்கத்தையும் காட்டுவார்.

இந்த வசனம் நம்மை ஊக்குவிப்பது என்னவெனில் – நாம் விசுவாசமாகக் கர்த்தரைச் சேவிக்கும்போது, தேவன் நம்முடைய நியாயத்தையும், நம்முடைய துயரத்தையும் கவனித்து நியாயப்படுத்துவார்.

📖 அதாவது, தேவனை நம்புகிறவர்களின் வாழ்க்கையில் அவர் நியாயமும் கருணையும் காட்டுபவர் என்பதை இந்த வசனம் உறுதி செய்கிறது.

21/08/2025
21/08/2025

Address

Chennai

Website

Alerts

Be the first to know and let us send you an email when JE TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share