Yuka Voice

Yuka Voice தமிழர் எழுச்சியை நோக்கி
(5)

வாழ்த்துக்கள் RCB❤
31/05/2026

வாழ்த்துக்கள் RCB❤

31/05/2026

திமுக உபிஸ் என்னம்மா கூவுராங்க😜

அண்ணாமலை புதிய கட்சி அறிவிப்பு?  தமிழக பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைர் அண்ணாமலையின் பிறந்தநாளான ஜூன் 4ஆம் தேதி நெருங்கி ...
31/05/2026

அண்ணாமலை புதிய கட்சி அறிவிப்பு?

தமிழக பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைர் அண்ணாமலையின் பிறந்தநாளான ஜூன் 4ஆம் தேதி நெருங்கி வரும் சூழலில், தமிழக அரசியல் களம் திடீர் பரபரப்பில் தொற்றிக் கொண்டுள்ளது. ஜூன் முதல் வாரத்தில் பாஜக-வின் தேசியத் தலைமையைச் சந்திக்க அண்ணாமலை நேரம் கேட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதே நேரத்தில், மற்றொரு புறம் 'அண்ணாமலை நற்பணி மன்ற' நிர்வாகிகளைத் தீவிரமாகச் செயல்படத் தொடங்குமாறு ரகசிய அறிவுறுத்தல்கள் பறந்துள்ளன. இதனால், அவர் புதிய கட்சி தொடங்கப் போகிறாரா அல்லது பாஜகவிலேயே தொடரப் போகிறாரா என்ற இரண்டு விதமான அரசியல் யூகங்களும் இறக்கை கட்டிப் பறக்கின்றன.

அண்ணாமலையின் ஆதரவாளர்கள் மற்றும் நற்பணி மன்றங்களின் தற்போதைய சுறுசுறுப்பு, அவர் ஒரு புதிய மாநிலக் கட்சியை அறிவிக்கலாம் என்ற விவாதத்தை பலப்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அண்ணாமலை நற்பணி மன்ற நிர்வாகிகளை மக்கள் நலப் பணிகளில் தீவிரமாக ஈடுபடவும், பூத் லெவலில் பலத்தை அதிகரிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஜூன் 4-ஆம் தேதி அவரது பிறந்தநாளன்று, தனது அடுத்தகட்ட அரசியல் பயணமாக புதிய மாற்றுப் சக்திக்கான அடித்தளத்தை அவர் அறிவிக்க வாய்ப்புள்ளதாக ஒரு தரப்பு நம்புகிறது. அண்மைய தேர்தல் நகர்வுகளில் நிலவிய சில உட்கட்சி பூசல்களால் இந்த முடிவு எடுக்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது.

ஜூன் முதல் வாரத்தில் அண்ணாமலை டெல்லி செல்லவிருப்பது, தனது புதிய கட்சி முடிவை மேலிடத்திற்குத் தெரிவித்து, சுமூகமாக விடைபெறுவதற்காகக் கூட இருக்கலாம் என்று அவரது ஆதரவாளர்களால் ரகசியமாகப் பேசப்படுகிறது. அதே நேரத்தில், அண்ணாமலை பாஜக-விலிருந்து விலக மாட்டார், மாறாகப் பெரிய பொறுப்புடன் கட்சியை வலுப்படுத்துவார் என்ற மாற்று வாதமும் பலமாக உள்ளது.

இன்னொரு பக்கம் "அண்ணாமலை எப்போதும் பாஜக-வின் சித்தாந்தத்தோடு பயணிப்பவர். நற்பணி மன்றங்களைச் செயல்படச் சொன்னது கட்சியை அடிமட்ட அளவில் வலுப்படுத்துவதற்காகவே தவிர, புதிய கட்சி தொடங்குவதற்காக அல்ல" என அவருக்கு நெருக்கமான மாநில பாஜக நிர்வாகிகள் உறுதியாகத் தெரிவிக்கின்றனர்.

புதிய கட்சித் தொடக்கமா? அல்லது டெல்லி சந்திப்புக்குப் பிறகு பாஜகவில் புதிய விஸ்வரூபமா? என்ற அனைத்துக் கேள்விகளுக்கும் ஜூன் முதல் வாரத்தில் அண்ணாமலை மேற்கொள்ளும் டெல்லி பயணமும், அவரது பிறந்தநாள் நகர்வுகளும் விடை கொடுத்துவிடும். இதனால் அண்ணாமலையின் முடிவு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

31/05/2026

பிரேமலதா துணை முதல்வரா?

2026ல் IPL கப் யாருக்கு?
31/05/2026

2026ல் IPL கப் யாருக்கு?

அமைச்சர் பேச்சை கண்டித்த நடிகர் தனுஷ் தந்தை இயக்குனர் கஸ்தூரிராஜா
31/05/2026

அமைச்சர் பேச்சை கண்டித்த நடிகர் தனுஷ் தந்தை இயக்குனர் கஸ்தூரிராஜா

31/05/2026

விசிகவை சீண்டிய பிரேமலதா!
சோபா செட்டுக்கும் பெட்டிக்கும் விலைபோகவில்லை என பேச்சு

31/05/2026

தொகுதி மக்கள் காரி துப்புறாங்க!
கொதிக்கும் அதிமுக தொண்டர்

ஒரே நாளில் 5,000 பேர்  ஓய்வு! 5 லட்சத்தைக் கடந்த  அரசுத்துறை காலிப் பணியிடங்கள்- உடனே நிரப்பிஇளைஞர்களுக்கு  அரசு வேலை வழ...
31/05/2026

ஒரே நாளில் 5,000 பேர் ஓய்வு!
5 லட்சத்தைக் கடந்த அரசுத்துறை காலிப் பணியிடங்கள்- உடனே நிரப்பி
இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும்!

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்!
----------

மே மாதத்தின் கடைசி பணி நாளான நேற்று மட்டும் தமிழக அரசுத் துறைகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணி ஓய்வு பெற்றுள்ளனர். அதனால் ஏற்பட்ட காலியிடங்களையும் சேர்த்து அரசுத் துறைகளில் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 5 லட்சத்தைக் கடந்து விட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அரசுத் துறைகளில் 41.7% பணியிடங்கள் காலியாக இருப்பது அரசு நிர்வாகத்தை நிலைகுலையச் செய்து விடும்.

தமிழ்நாட்டில் அரசுத் துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றில் 12 லட்சத்திற்கும் கூடுதலான பணியிடங்கள் உள்ளன. அவற்றில் கடந்த காலங்களில் ஏற்பட்ட காலியிடங்களை நிரப்ப ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்காததன் விளைவாகத் தான் காலியிடங்களின் எண்ணிக்கை இந்த அளவுக்கு உயர்ந்திருக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 50 ஆயிரம் அரசுப் பணியிடங்கள் காலியாகின்றன. ஆனால், அவற்றில் 10 ஆயிரம் பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்படுகின்றன. இதனால் கடந்த 20 ஆண்டுகளாகவே காலியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறதே தவிர குறையவில்லை. அரசுப் பணிகளுக்கு போதிய எண்ணிக்கையில் ஆட்கள் தேர்வு செய்யப்படாததால், படித்த இளைஞர்களுக்கு அரசு வேலை என்பது எட்டாக் கனியாகிவிட்டது.

2021-ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த திமுக மொத்தம் 5.50 லட்சம் பேருக்கு அரசு வேலைவாய்ப்புகளை வழங்கப் போவதாக வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், ஐந்தாண்டுகளில் ஒட்டுமொத்தமாகவே வெறும் 50 ஆயிரம் பேருக்கு மட்டுமே அரசு வேலைகளை வழங்கியது. தற்காலிக, பகுதி நேர ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களை பணி நிலைப்பு செய்வதாக அளித்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை.

தமிழ்நாட்டில் தற்போது ஆட்சிக்கு வந்துள்ள முதலமைச்சர் விஜய் அவர்கள் தலைமையிலான த.வெ.க. அரசுத்துறைகளில் உள்ள அனைத்து காலியிடங்களும் நிரப்பப்படும் என்று வாக்குறுதி அளித்திருக்கிறது. பல ஆண்டுகளாக அரசு வேலை கிடைக்காததால் லட்சக்கணக்கான இளைஞர்கள் விரக்தியில் வாடிக் கொண்டிருக்கும் நிலையில், அவர்களின் வாட்டத்தைப் போக்கும் வகையில் அரசுத் துறை காலியிடங்களை நிரப்பி இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தவெக + மதிமுக கூட்டணியா?மதிமுக பொதுசெயலாளர் வைகோ மற்றும் திருச்சி MP துரை வைகோ ஆகியோர் தொடர்ச்சியாக விஜய் அவர்களை ஆதரித்...
31/05/2026

தவெக + மதிமுக கூட்டணியா?

மதிமுக பொதுசெயலாளர் வைகோ மற்றும் திருச்சி MP துரை வைகோ ஆகியோர் தொடர்ச்சியாக விஜய் அவர்களை ஆதரித்து பேசி வருவது அரசியல் வட்டாரத்தில் கவனிக்கபடுகிறது!

திமுக கூட்டணியில் இருந்து எப்போது வேண்டுமானாலும் மதிமுக விலகலாம்!
உதயசூரியனில் நின்று வென்ற 2 MLAக்கள் ராஜினாமா செய்து தவெக கூட்டணியில் தேர்தலை சந்திக்கவும் வாய்ப்பிருக்கு

Address

Middle Strret
Chidambaram
BHUVANAGIRI

Website

Alerts

Be the first to know and let us send you an email when Yuka Voice posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Yuka Voice:

Share