Kavin Publications

  • Home
  • Kavin Publications

Kavin Publications Get your books published at an affordable cost and at high quality impression with international standard

08/06/2026

📖 திருப்புகழ்த் திருமணம் | Thiruppugazh Thirumanam

திருப்புகழ் என்பது பாடல்களின் தொகுப்பு மட்டுமல்ல; அது தமிழின் ஆன்மிக மரபையும், வாழ்வியல் ஞானத்தையும் தாங்கி நிற்கும் அரிய பொக்கிஷமாகும்.

More than a collection of verses, Thiruppugazh stands as a timeless spiritual treasure that continues to inspire generations through its wisdom, devotion, and literary excellence.

இந்த சிறப்பு காணொளியில், பட்டிமன்றப் பேச்சாளர் சிவா சதீஷ்குமார் அவர்கள் அருணகிரிநாதரின் திருப்புகழின் மகத்துவத்தையும், ஏன் ஒவ்வொரு தமிழ் வாசகரும் திருப்புகழ்த் திருமணம் நூலை வாசிக்க வேண்டும் என்பதையும் பகிர்ந்து கொள்கிறார்.

Published by Kavin Publications.

(Thiruppugazh Thirumanam, திருப்புகழ்த் திருமணம், Thiruppugazh, திருப்புகழ், Arunagirinathar, அருணகிரிநாதர், Tamil Literature, Tamil Books, Spiritual Books, Murugan Devotion, Tamil Heritage, Tamil Culture, Tamil Readers, Devotional Literature, Kavin Publications)

#திருப்புகழ்

 #சிந்துவெளி
19/03/2026

#சிந்துவெளி

23.01.2026 வெள்ளிக் கிழமை அன்று கவின் பப்ளிகேசன்ஸ் மற்றும் ஏ.ஜே.கே கலை அறிவியல் கல்லூரி, இலங்கை நாட்டின் கிழக்கு பெரு வள...
25/01/2026

23.01.2026 வெள்ளிக் கிழமை அன்று கவின் பப்ளிகேசன்ஸ் மற்றும் ஏ.ஜே.கே கலை அறிவியல் கல்லூரி, இலங்கை நாட்டின் கிழக்கு பெரு வளாகம் இணைந்து நடத்திய ஒருநாள் கருத்தரங்கில்,
" செவ்வியல் இலக்கியங்களில் பண்பாட்டுக் கூறுகள் " எனும் ஆய்வுக்கோவை வெளியீடு. துணைநின்ற தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் மா. ஜாஸ்மின் பிரியா, முனைவர் ரூ.கிறிஸ்டோபர், திருமதி. ப.உஷாராணி ஆகியோருக்கு எம் மனமார்ந்த நன்றி

proceedings

கொங்குமண்டலம் மற்றும் இங்குவாழும் மக்களைப் பற்றிய சமகால வெளிநாட்டு ஆய்வாளர் பிரண்டா பெக் எழுதிய நூலை திரு.அப்பணசாமி அவர்...
17/01/2026

கொங்குமண்டலம் மற்றும் இங்குவாழும் மக்களைப் பற்றிய சமகால வெளிநாட்டு ஆய்வாளர் பிரண்டா பெக் எழுதிய நூலை திரு.அப்பணசாமி அவர்கள்‌ மொழி பெயர்த்துள்ளார். கொங்குநாடு குறித்து ஆய்வு செய்பவர்களுக்கு மிகவும் பயனுள்ள நூல் இது

தமிழ்மொழித் தகுதித் தேர்வு என்பது, தமிழ்நாடு அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில் பங்கேற்கும் நபர்களுக்கு தமிழ் மொழிய...
19/09/2025

தமிழ்மொழித் தகுதித் தேர்வு என்பது, தமிழ்நாடு அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில் பங்கேற்கும் நபர்களுக்கு தமிழ் மொழியின் மீது உள்ள அறிவையும், திறனையும் மதிப்பிடுவதற்காக நடத்தப்படும் ஒரு கட்டாயத் தகுதித் தாள் ஆகும். இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுவது, தேர்வர்களின் ஒட்டுமொத்த மதிப்பெண்ணில் சேர்க்கப்படாமல், அத்தேர்வில் தகுதிபெற மட்டுமே பயன்படும். ஆனால் இத்தேர்வில் 40% மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றால் மட்டுமே தேர்வு எழுதுவோரின் முதன்மைப் பாடத்திற்கான விடைத்தாளைத் திருத்தத்திற்கு எடுத்துக் கொள்வர். தற்போது தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் (TN-TRB) நடத்தப்படும் ஆசிரியர் நியமனத் தேர்வுகளிலும் தமிழ் மொழித் தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அனைத்துப் பாடப் பிரிவினரும் இத்தேர்வை எழுதுதல் வேண்டும்.
முக்கிய நோக்கங்கள் / தமிழ் மொழி அறிவை உறுதி செய்தல்:
தமிழ் மொழியைப் பயன்படுத்துபவர்கள், அதன் இலக்கணம், இலக்கியம் மற்றும் பொது அறிவில் தேர்ச்சி பெற்றுள்ளார்களா என்பதை உறுதி செய்தல்.
தேர்வு முறை:
• இது ஒரு தகுதித் தாள் (Qualifying Paper) ஆகும்.
• பத்தாம் வகுப்பு தரம் (SSLC Standard) மற்றும் பொது அறிவு (பட்டப்படிப்புத் தரம்) ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்தத் தேர்வு நடத்தப்படும்.
• இரண்டு மதிப்பெண் வினாக்கள்
இருபது, ஒரு மதிப்பெண் வினாக்கள் – பத்து என மொத்தம் ஐம்பது மதிப்பெண்களுக்குத் தேர்வு நடைபெறும். அதில் இருபது மதிப்பெண்கள் கட்டாயம் எடுக்க வேண்டும்.
• அந்த இருபது மதிப்பெண்களைப் பெற்று உங்களின் முதன்மைப் பாட விடைத்தாளை அடுத்தகட்ட மதிப்பீட்டுக்குக் கொண்டு செல்லத் துணை நிற்பது இந்நூல்.

உள்ளும் தகைமை இனிப் பிறவேறுளவே   உழை மான் மறிக்கன்றுதுள்ளும் கரத்தார் அணி பணியின்   சுடர் சூழ் மணிகள் சுரநதி நீர்தெள்ளும...
15/01/2025

உள்ளும் தகைமை இனிப் பிறவேறுளவே
உழை மான் மறிக்கன்று
துள்ளும் கரத்தார் அணி பணியின்
சுடர் சூழ் மணிகள் சுரநதி நீர்
தெள்ளும் சடையார் தேவர்கள்
தம்பிராட்டி உடனே சேரமிசைக்
கொள்ளும் சின மால் விடைத் தேவர்
குலம் அன்றோ இச் சுரபி குலம்.

சிறிய பெண்மானின் கன்று துள்ளிடும் திருக் கைகளை உடையவரும், அழகிய பாம்பின் மணிகளைக் கங்கை நீரானது எற்றிட விளங்கிடும் சடையை உடையவருமாய சிவ பெருமான், தேவர்களுக்குத் தலைவியாய பெருமாட்டியுடனே எழுந்தருளும் ஆனேற்றின் குலம் அன்றோ இப்பசுக்கள் குலம்? இவ்வகையில் எண்ணத்தக்க சிறப்புகள் வேறு பிறவும் உளவோ? இல்லை.

இனிய தைத்திருநாள் வாழ்த்துகள்
14/01/2025

இனிய தைத்திருநாள் வாழ்த்துகள்

31/12/2024
கொங்கு இரத்தினங்கள் நூல் பிரபல வழக்கறிஞரும் தலைசிறந்த அரசியல்வாதியுமான முனைவர் கார்வேந்தன் அவர்களால் எழுதப்பட்ட நூல் இதன...
01/09/2024

கொங்கு இரத்தினங்கள் நூல் பிரபல வழக்கறிஞரும் தலைசிறந்த அரசியல்வாதியுமான முனைவர் கார்வேந்தன் அவர்களால் எழுதப்பட்ட நூல் இதன் தொடர்ச்சியாக கொங்கு மாமணிகள் என்ற நூலினையும் சமூக நீதி என்ற நூலினையும் எழுதியுள்ளார் கொங்கு நாட்டில் வாழ்ந்த 14 ஆளுமைகள் குறித்து விவரிக்கின்றது. பல பதிப்புகள் கண்ட இந்நூலினைக் கவின் பதிப்பகம் வெளியிடுவதில் மகிழ்ச்சி கொள்கின்றது. தவத்திரு பேரூர் அடிகளார், பாரத்ரத்னா சி சுப்பிரமணியம் பத்மபூஷண் திரு பெரியசாமித் தூரன், பத்மஸ்ரீ கே.பி.சுந்தராம்பாள், முதலமைச்சர் பி.சுப்பராயன் போன்றோரின் வாழ்க்கையை
விவரிக்கின்றது இந்நூல்.

இந்நூலினை ஆன்லைனில் வாங்கிட www.kavinpublications.in/book/kongu-rathinangal/

கொங்குநாட்டினை உலகறியச்செய்த சான்றோர்களில் 14 பெருமக்களின் வாழ்க்கை வரலாறு குறித்து கார்வேந்தன் ஐயா அவர்கள் .....

Address

Somu Complex, 1 Union School Road

641001

Opening Hours

Monday 10:00 - 17:00
Tuesday 10:00 - 17:00
Wednesday 10:00 - 17:00
Thursday 10:00 - 17:00
Friday 10:00 - 17:00
Saturday 10:00 - 17:00

Telephone

+917395866699

Alerts

Be the first to know and let us send you an email when Kavin Publications posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kavin Publications:

  • Want your business to be the top-listed Media Company?

Share