19/09/2025
தமிழ்மொழித் தகுதித் தேர்வு என்பது, தமிழ்நாடு அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில் பங்கேற்கும் நபர்களுக்கு தமிழ் மொழியின் மீது உள்ள அறிவையும், திறனையும் மதிப்பிடுவதற்காக நடத்தப்படும் ஒரு கட்டாயத் தகுதித் தாள் ஆகும். இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுவது, தேர்வர்களின் ஒட்டுமொத்த மதிப்பெண்ணில் சேர்க்கப்படாமல், அத்தேர்வில் தகுதிபெற மட்டுமே பயன்படும். ஆனால் இத்தேர்வில் 40% மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றால் மட்டுமே தேர்வு எழுதுவோரின் முதன்மைப் பாடத்திற்கான விடைத்தாளைத் திருத்தத்திற்கு எடுத்துக் கொள்வர். தற்போது தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் (TN-TRB) நடத்தப்படும் ஆசிரியர் நியமனத் தேர்வுகளிலும் தமிழ் மொழித் தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அனைத்துப் பாடப் பிரிவினரும் இத்தேர்வை எழுதுதல் வேண்டும்.
முக்கிய நோக்கங்கள் / தமிழ் மொழி அறிவை உறுதி செய்தல்:
தமிழ் மொழியைப் பயன்படுத்துபவர்கள், அதன் இலக்கணம், இலக்கியம் மற்றும் பொது அறிவில் தேர்ச்சி பெற்றுள்ளார்களா என்பதை உறுதி செய்தல்.
தேர்வு முறை:
• இது ஒரு தகுதித் தாள் (Qualifying Paper) ஆகும்.
• பத்தாம் வகுப்பு தரம் (SSLC Standard) மற்றும் பொது அறிவு (பட்டப்படிப்புத் தரம்) ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்தத் தேர்வு நடத்தப்படும்.
• இரண்டு மதிப்பெண் வினாக்கள்
இருபது, ஒரு மதிப்பெண் வினாக்கள் – பத்து என மொத்தம் ஐம்பது மதிப்பெண்களுக்குத் தேர்வு நடைபெறும். அதில் இருபது மதிப்பெண்கள் கட்டாயம் எடுக்க வேண்டும்.
• அந்த இருபது மதிப்பெண்களைப் பெற்று உங்களின் முதன்மைப் பாட விடைத்தாளை அடுத்தகட்ட மதிப்பீட்டுக்குக் கொண்டு செல்லத் துணை நிற்பது இந்நூல்.