11/05/2026
அனைவருக்கும் வணக்கம் 🙏
சமீபத்தில் நான் கண்ட ஓர் கசப்பான உண்மையை பகிர
விரும்புகிறேன்.
இந்த பதிவின் நோக்கம் யாரின் தொழிலையோ வியாபாரத்தையோ கெடுக்கம் பொருட்டில் உருவாக்கப்பட்டதல்ல என்பதை முதலில் தெரியப்படுத்திக்கொள்கிறேன்.
இயற்கையை தேடிச்செல்பவர்கள் கவனமாக செயல்பட
இது ஒரு விழிப்புணர்வு பதிவாக அமையும் என நம்புகிறேன்.
சர்கரை உடலுக்கு தீங்கு என்பதால் அதற்கு மாற்றாக நாட்டு சர்க்கரை பக்கம் திரும்பி இருக்கும் மக்களுக்கு இது அதிர்ச்சியை தரலாம்.
முதலில் நாட்டு சர்க்கரை தயாரிக்கும் ஆலையை காண நேரில் சென்றபோது எங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
நாட்டு சர்க்கரை தயாரிப்பில் வெள்ளை சர்க்கரை, செயற்கை நிறம், மோசமான கேன்சர் ஏற்படுத்தும் ரசாயன்கள் சேர்க்கப்படுவதால் எங்களுக்கு இயற்கையான நாட்டு சர்க்கரை செய்து தருமாறு கேட்டபொழுதுதான் அந்த ரகசியம் வெளியே வந்தது.
ஒரு கிலோ ரசாயனமில்லா நாட்டு சர்க்கரை தயாரிக்க ஆகும் செலவு ரூபாய். 270/-
ஒரு கொப்பரைக்கு சுமார் 300 கிலோ வருமாம்.
தங்களுக்கு தேவைப்பட்டால் 300 கிலோவையும் வாங்கிக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்கள்.
அடுத்து எங்கள் மனதில் எழுந்த முதல் கேள்வி கிலோ
65/- ரூபய்க்கு விற்க்கப்படுவது நாட்டு சர்க்கரையா?
வெள்ளை சர்க்கரையின் ஆலை விலை இனைய தகவல் படி 35/- ரூபாய் முதல் கிடைக்கிறது என்பதை இங்கு தெரிவித்துக்கொள்கிறேன்.
இப்பொழுது உங்களுக்கு புரிந்திருக்கும் நீங்கள் எதை கரைத்து குடித்துக்கோண்டிருக்கிறீர்கள் என்று.
இன்னொரு முக்கியத் தகவல்
65/- ரூபாய் நாட்டு சர்க்கரை போலி என்பதால் கிலோ 300/- ரூபாய்க்கு கிடைக்கும் நாட்டு சர்க்கரை நல்ல இயற்கையானது என்று நம்புவது அடி முட்டாள்தனம்.
“மின்னுவதெல்லாம் பொன்னல்ல”
100% இயற்கை என்று சொல்வதெல்லாம் இயற்கையானது அல்ல.
இயற்கையை தேடிச்செல்கிறேன் என்ற பெயரில் அடுத்தவரை நம்பி உங்கள் பணத்தை வீணாக்காதீர்கள்.
ஐயா நம்மாழ்வார் கூறியது போல இயற்கையான
உணவு வேண்டுமெனில் அதை நாம்தான் உற்பத்தி செய்யவேண்டும், பையை தூக்கிக்கொண்டு சந்தைக்குச் செல்லக்கூடாது.
🙏
என்றும் அன்புடன் ❤️
🍯மண் பானை குழு