கந்தர்வகோட்டை செய்திகள்

கந்தர்வகோட்டை செய்திகள் முழுக்க கந்தர்வகோட்டை மக்களின் செய்தி news for gandarvakottai people GANDARVAKOTTAI NEWS

நாளை தச்சங்குறிச்சியில் நடைபெறும் ஜல்லிக்கட்டு நிகழ்வில் பத்திரிக்கையாளர்களுக்கான கேலரி போதுமான அளவுக்கு இருக்காது என பு...
02/01/2026

நாளை தச்சங்குறிச்சியில் நடைபெறும் ஜல்லிக்கட்டு நிகழ்வில் பத்திரிக்கையாளர்களுக்கான கேலரி போதுமான அளவுக்கு இருக்காது என புதுக்கோட்டை மாவட்ட பத்திரிக்கையாளர்கள் கோரிக்கை...
இதனை விரிவு படுத்த வேண்டும் என வேண்டுகோள்

அந்தக்கால மனிதர்கள் கந்தர்வகோட்டையில் அன்றும் இன்றும் என்றும் சைக்கிளை மறப்பதில்லை...படம் 2.1.2026
02/01/2026

அந்தக்கால மனிதர்கள் கந்தர்வகோட்டையில் அன்றும் இன்றும் என்றும் சைக்கிளை மறப்பதில்லை...

படம் 2.1.2026

50 மேற்பட்ட அரசுப்பணியாளர்களை உருவாக்கிய உடற்கல்வி ஆசிரியர் செழியன் தன்னுடைய மாணவர்களில் பலரையும் தேசிய அளவிலும் , மாநில...
01/01/2026

50 மேற்பட்ட அரசுப்பணியாளர்களை உருவாக்கிய
உடற்கல்வி ஆசிரியர் செழியன்

தன்னுடைய மாணவர்களில் பலரையும் தேசிய அளவிலும் , மாநில , மாவட்ட அளவிலும்தனி நபர் , குழு விளையாட்டுப்போட்டிகளில் பங்கேற்க செய்து வெற்றி பெற்று சாதனை புரிய வைத்தவர்.

இவருடைய மாணவர்களில் 50 க்கும் மேற்பட்டவர்கள், காவல்துறை ,இரயில்வே இராணுவம் உள்ளிட்ட பல துறைகளில் பணி வாய்ப்பை பெற்று பணியில் உள்ளனர்.

தற்போது கந்தர்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக மாறுதல் பெற்று பணியேற்றுள்ள நிலையில் இங்கு மாணவர்களை தயார்படுத்துவதற்காக நேற்று குறு வட்ட அளவில் போட்டிகளை நடத்தி மாணவர்களை தேர்வு செய்து வருகிறார்.... மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் அருகாமை பள்ளிகளில் இருந்து இவருடைய பயிற்சியை பெறுவதற்காக இப்பள்ளியில் சேர ஆர்வம் காட்டுகின்றனர்.

இன்று பிறந்த நாள்
காணும் வருங்கால சமூகத்தை கட்டமைக்கும் உடற்கல்வி ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்...

கந்தர்வக்கோட்டை செய்திகள் தளம் உங்களது பணி சிறக்கட்டும் என வாழ்த்தி மகிழ்கிறது

பட்ஜெட் விலையில் நீடித்து உழைக்கும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் எது? 🛵⚡​புதிதாக எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கத் திட்டமிடுபவர்களுக்...
01/01/2026

பட்ஜெட் விலையில் நீடித்து உழைக்கும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் எது? 🛵⚡

​புதிதாக எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கத் திட்டமிடுபவர்களுக்கு, விலை குறைவாகவும் இருக்க வேண்டும், அதே சமயம் பல வருடங்கள் உழைக்க வேண்டும் என்பதே பெரிய எதிர்பார்ப்பு.

உங்களின் தேடலை எளிதாக்க, ரூ. 80,000 முதல் 1 லட்சம் விலைக்குள் கிடைக்கும் சிறந்த தேர்வுகள் இங்கே:

​✅ பஜாஜ் சேத்தக் (Bajaj Chetak 2901)
​தரம்: இது முழுக்க முழுக்க மெட்டல் பாடி கொண்டது. மற்ற பிளாஸ்டிக் பாடி வண்டிகளை விட பல வருடங்கள் உறுதியாக உழைக்கும்.

​சிறப்பு: இரும்பு உடல் வாகு என்பதால் பராமரிப்பு எளிது, நீண்ட கால பயன்பாட்டிற்கு மிகவும் சிறந்தது.

​✅ பியூர் இவி எகான்ஃப்ட் (Pure EV ePluto 7G)
​தரம்: கிளாசிக் டிசைன் மற்றும் சிறந்த பேட்டரி மேனேஜ்மென்ட் கொண்டது.
​சிறப்பு: பார்ப்பதற்கு 'வெஸ்பா' ஸ்டைலில் இருக்கும். இதன் ரெட்ரோ லுக் மற்றும் இலகுவான எடை பெண்களுக்கும் முதியவர்களுக்கும் ஓட்டுவதற்கு மிக எளிதாக இருக்கும்.

​✅ ஒகினாவா பிரைஸ் புரோ (Okinawa Praise Pro)
​தரம்: கரடுமுரடான சாலைகளைத் தாங்கும் வலிமை கொண்டது.
​சிறப்பு: இதில் டிஸ்க் பிரேக் மற்றும் சிறப்பான கிரவுண்ட் கிளியரன்ஸ் உண்டு. கிராமப்புற அல்லது மேடு பள்ளம் நிறைந்த சாலைகளுக்கு இது ஒரு சிறந்த பட்ஜெட் தேர்வு.

​✅ டிவிஎஸ் ஐ-கியூப் (TVS iQube)
​தரம்: இந்தியாவின் முன்னணி நிறுவனமான டிவிஎஸ்-ன் தயாரிப்பு என்பதால் இதன் பாகங்கள் மிகத் தரமானவை.
​சிறப்பு: ஒரு பெட்ரோல் வண்டி ஓட்டுவது போன்ற நம்பகத்தன்மை இருக்கும். தமிழகம் எங்கும் சிறந்த சர்வீஸ் வசதி கொண்டது.

​✅ ஹீரோ விடா வி1 (Hero Vida V1 Plus)
​தரம்: ஹீரோ நிறுவனத்தின் தரக்கட்டுப்பாட்டில் உருவானது.
​சிறப்பு: இதில் உள்ள பேட்டரியைக் கழற்றி வீட்டிற்குள் எடுத்துச் சென்று சார்ஜ் செய்யலாம். சார்ஜிங் பாயிண்ட் வசதி இல்லாதவர்களுக்கு இது மிகச்சிறந்த வசதி.

​✅ ஓலா எஸ்1 எக்ஸ் (Ola S1 X - 3kWh)
​தரம்: பட்ஜெட் விலையில் அதிக வசதிகள் கொண்டது.
​சிறப்பு: குறைந்த பட்ஜெட்டில் அதிக மைலேஜ் (120+ கி.மீ) தரும் வண்டி இதுதான். நவீன தொழில்நுட்பம் மற்றும் வேகம் விரும்புவோருக்கு ஏற்றது.

​💡 குறிப்பு: எலக்ட்ரிக் வண்டி வாங்கும் போது நம் பகுதியில் எந்த நிறுவனத்தின் சர்வீஸ் சென்டர் அருகில் உள்ளது என்பதைப் பார்த்து முடிவெடுப்பது புத்திசாலித்தனம்.

​இந்த தகவல் உங்கள் நண்பர்களுக்குப் பயன்படும் என நினைத்தால் பகிருங்கள்!

​ #எலக்ட்ரிக்ஸ்கூட்டர் #பட்ஜெட்வண்டி

2026 - ல் சுயப் பராமரிப்பும் மனநலமும்உறக்கமும் மனநலமும்: ஒருவரின் மனநலத்திற்கு உறக்கம் இன்றியமையாதது.  நினைவாற்றல், கவனம...
01/01/2026

2026 - ல்
சுயப் பராமரிப்பும் மனநலமும்

உறக்கமும் மனநலமும்:
ஒருவரின் மனநலத்திற்கு உறக்கம் இன்றியமையாதது. நினைவாற்றல், கவனம் செலுத்தும் திறன் மற்றும் முடிவு எடுக்கும் திறனை மேம்படுத்துகிறது..

நல்ல தூக்கம் மனதை அமைதியாக வைத்துக் கொண்டு, உணர்ச்சி சமநிலையை பாதுகாக்க உதவுகிறது. போதிய அளவு உறங்கினால் மனஅழுத்தம், கவலை, மனச்சோர்வு போன்ற பிரச்சினைகள் குறையும்.

உடல் உழைப்பும் மனநலமும்:
சீரான உடற்பயிற்சி நடைப்பயிற்சி உடல் உழைப்பு மனநலத்தை மேம்படுத்தும்.

நடைபயிற்சி, ஓட்டம், விளையாட்டுகள், அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாக செயல்படுவது போன்ற உடலுக்கான பயிற்சிகள் “எண்டார்ஃபின்” ஹார்மோன்களின் சுரப்பை அதிகரிக்கின்றன.

மனஅழுத்தத்தை குறைத்து, மகிழ்ச்சி உணர்வை அதிகரிக்கும்.

உடல் உழைப்பு மனச்சோர்வு மற்றும் மனபதற்றத்தை கட்டுப்படுத்த உதவுகிறது.

மேலும், தன்னம்பிக்கையை உயர்த்தி, சமூக உறவுகளை மேம்படுத்துகிறது.

தன்னுடைய உணர்வுகளை அடையாளம் கண்டு, அவற்றை மேலாண்மை செய்தல்: Emotional Self Care*ன

ஒருவர் தன்னுடைய உணர்வுகளை (மகிழ்ச்சி, சோகம், கோபம், பயம், கவலை போன்றவை) சரியாக அடையாளம் காண்பதும், அவற்றை முறையாக மேலாண்மை செய்வது முக்கியம்.

தன்னுடைய உணர்வுகளை உணர்ந்து கொள்வதன் மூலம் ஒருவர் தன்னைப் பற்றி நன்றாக புரிந்து கொள்ள முடியும்.

எத்தகைய சூழலில் சூழலில் எத்தகைய உணர்வுகள் ஏற்படுகிறது என்பதை அறிந்தால், அதனை சரியாக கையாளலாம். அவசரமான அல்லது தவறான முடிவுகளை எடுக்காமல் தற்காத்துக்கொள்ளமுடியும் .

மேலும், உணர்வுகளை புரிந்து கொண்டு வெளிப்படுத்துவது, உணர்வுகளை கையாள உதவி கேட்பது மனஅழுத்தத்தை குறைக்க உதவுகிறது.

உணர்வுகளை மேலாண்மை செய்யும் திறனை வளர்த்துக்கொண்டால் நல்-ஆதரவை பெற முடியும். இதன் மூலம் ஒருவர் வாழ்க்கையை நேர்மறையாக எதிர்கொள்ளும் வலிமையை பெறுகிறார்

மனநலத்திற்கு உறவுசார்ந்த சுய பராமரிப்பின் (Relational Self-Care) முக்கியத்துவம்* –

உறவுசார்ந்த சுய பராமரிப்பு என்பது குடும்பம், நண்பர்கள், சக ஊழியர்கள் மற்றும் சமூகத்துடன் உள்ள உறவுகளை ஆரோக்கியமாக பராமரிப்பதைக் குறிக்கும்.

மனிதன் ஒரு சமூக உயிர்(Social Being) என்பதால், நல்ல உறவுகள் மனநலத்தை பாதுகாக்கவும் மேம்படுத்தவும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

நல்ல உறவுகள் மனஅழுத்தம், தனிமை மற்றும் மனச்சோர்வு போன்ற பிரச்சினைகளை குறைக்க உதவுகின்றன. நம்பிக்கையுடன் பேசக் கூடிய ஒருவர் இருப்பது மனதிலுள்ள சுமைகளை பகிர்ந்து கொள்ள வாய்ப்பளிக்கிறது.

இதனால் மனம் இலகுவாகி, மனஅமைதி கிடைக்கிறது. உணர்வுகளை புரிந்து கொண்டு ஏற்றுக் கொள்ளும் உறவுகள் தன்னம்பிக்கையையும் பாதுகாப்பு உணர்வையும் வளர்க்கின்றன.

பரஸ்பர மரியாதை, அன்பு, புரிதல் மற்றும் ஆதரவு கொண்ட உறவுகள் கோபம், ஏமாற்றம் போன்ற எதிர்மறை உணர்வுகளை கட்டுப்படுத்த உதவுகின்றன. மேலும், சமூக உறவுகள் வாழ்க்கையில் அர்த்தம் மற்றும் மகிழ்ச்சி உணர்வை அதிகரித்து, மனவலிமையை, உளவியல் மீள்-திறனை(Resilience) வளர்க்கின்றன.

நலமான மனசு; வளமான எதிர்காலம்..

நீண்ட கால பிரச்சினையை தீர்த்து வைக்க தமிழ்நாடு அரசு முடிவு
01/01/2026

நீண்ட கால பிரச்சினையை தீர்த்து வைக்க தமிழ்நாடு அரசு முடிவு

மண்ணின் பெருமை - மகுடம் சூட்டும் கந்தர்வக்கோட்டை! 👑🌾​"பாசத்திற்குப் பெயர் போனவர்கள்... பண்பிற்கு இலக்கணம் வகுப்பவர்கள்!"...
01/01/2026

மண்ணின் பெருமை - மகுடம் சூட்டும் கந்தர்வக்கோட்டை! 👑🌾

​"பாசத்திற்குப் பெயர் போனவர்கள்... பண்பிற்கு இலக்கணம் வகுப்பவர்கள்!"

​🔹 மஞ்சள் நீரை விட மாறாத அன்பு:
கந்தர்வக்கோட்டைக்காரர்களிடம் நீங்கள் ஒருமுறை பழகிப் பார்த்தால் தெரியும், அவர்கள் காட்டும் அன்பு எவ்வளவு ஆழமானது என்று.
முகம் தெரியாத நபராக இருந்தாலும், இன்முகத்தோடு வரவேற்று உபசரிப்பதில் இவர்களுக்கு நிகர் இவர்களே!

​🔹சாயங்காலம் ஆனாப்போதும் கந்தர்வக்கோட்டைல ஒரு டீ குடிக்க ஒன்பது கிலோ மீட்டர் சைக்கிள் மிதிச்சு வரது ஒரு தனி சுகம் இவங்களுக்கு..

​🔹உழைப்பே உயிர்மூச்சு:
விவசாயத்தையும், உழைப்பையும் இரு கண்களாகக் கருதுபவர்கள். வெயிலிலும் மழையிலும் தளராத உறுதியோடு உழைக்கும் இவர்களின் உழைப்புதான் இப்பகுதியின் முதுகெலும்பு.

​🔹 வஞ்சகம் இல்லாத வெள்ளை உள்ளம்:
சுள்ளுனு கோவப்பட்டாலும் அடுத்த நிமிசம் அரவணைக்கும் வெள்ளை மனசு நம்மூருக்காரங்க குணம்,
உள்ளொன்று வைத்து புறமொன்று பேசத் தெரியாத வெள்ளை உள்ளம் படைத்தவர்கள். மனதில் பட்டதை வெளிப்படையாகப் பேசும் இவர்களின் குணம், பார்ப்பதற்கு சற்றே முரடாகத் தெரிந்தாலும், அதில் பொய் கலக்காத உண்மை மட்டுமே இருக்கும்.

​🔹 உதவி என்று வந்தால் ஓடி வருவார்கள்:
யாருக்காவது ஒரு கஷ்டம் என்றால், "நான் இருக்கிறேன்" என்று முதலில் கைகொடுப்பது கந்தர்வக்கோட்டைக்காரர்களாகத்தான் இருக்கும். சாதி, மதம் கடந்து ஊர் ஒற்றுமைக்கு முன்னுதாரணமாகத் திகழ்பவர்கள்.

​🔹 பாரம்பரியத்தைப் போற்றும் பண்பு:
திருவிழாக்களாக இருக்கட்டும், வீட்டு விசேஷங்களாக இருக்கட்டும்... நம் மண்ணின் கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும் சிதையாமல் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்வதில் இவர்கள் மிகவும் கவனமானவர்கள்.

​"கந்தர்வக்கோட்டைக்காரன்" என்று சொல்லிக்கொள்வதே ஒரு தனிப் பெருமைதான்! இந்த மண்ணின் மைந்தனாக இருப்பதில் பெருமிதம் கொள்வோம். ❤️
​ #கந்தர்வக்கோட்டை

வணிக சிலிண்டர் விலை உயர்வு அமுலாகிறது
01/01/2026

வணிக சிலிண்டர் விலை உயர்வு அமுலாகிறது

கடைநிலை ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு 2024-2025ஆம் ஆண்டிற்கான 'சி' மற்றும் 'டி' பிரிவு பணியாளர்...
01/01/2026

கடைநிலை ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு

2024-2025ஆம் ஆண்டிற்கான 'சி' மற்றும் 'டி' பிரிவு பணியாளர்களுக்கு மிகை ஊதியம்; 'சி' மற்றும் 'டி' பிரிவைச் சார்ந்த ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் மற்றும் முன்னாள் கிராம அலுவலர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கிட ரூ. 183.86 கோடி ஒதுக்கீடு செய்து மாண்புமிகு முதலமைச்சர் M. K. Stalin அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

புத்தாண்டு காட்சிகள் கந்தர்வக்கோட்டை பெரிய கடைவீதி
01/01/2026

புத்தாண்டு காட்சிகள் கந்தர்வக்கோட்டை பெரிய கடைவீதி

புத்தாண்டு காட்சிகள் - கந்தர்வக்கோட்டை கடைவீதி
01/01/2026

புத்தாண்டு காட்சிகள் - கந்தர்வக்கோட்டை கடைவீதி

இன்று - புத்தாண்டு காட்சிகள்
01/01/2026

இன்று - புத்தாண்டு காட்சிகள்

Address

Gandarvakottai
Gandarvakottai
613301

Website

Alerts

Be the first to know and let us send you an email when கந்தர்வகோட்டை செய்திகள் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category