Natarajan Natarajan S

Natarajan Natarajan S FORMAL RADIO JOCKEY SURYAN FM PUDHUCHERY - KNOWN SOME MUSIC INSTRUMENTS KEYBAORD, TABLA, MIRUTHANGAM ETC

01/11/2024

மச்சி,உன்னோட நல்ல மனசு புரியாம தீவாளிக்கு முதல்நாள் மசுரு மட்டைன்னு உன்ன திட்டிட்டேன் சாரிடா.

(வருணபகவானை தான் சொல்றேன்)

இளையராஜாவின் சில பாடல்கள், அதிலும் குறிப்பாக பாடும் நிலா பாலுவின் பாடல்கள், நான் கேட்ட பாட்டு எதுன்னா புது புது அர்த்தங்...
23/10/2024

இளையராஜாவின் சில பாடல்கள், அதிலும் குறிப்பாக பாடும் நிலா பாலுவின் பாடல்கள், நான் கேட்ட பாட்டு எதுன்னா புது புது அர்த்தங்கள் படத்தில் வரும் கேளடி கண்மணி.

இது மாதிரியான பாடல்களை சில சேனல்களின் மியூசிக் ப்ரோகிராம்களில் பாடிய யாரோ ஒரு கத்துக்குட்டி பாடகரின் வீடியோவில், அதே tempo, scale-ல் பாடுவதால், டி வி ஷோக்களில் பாடிய வீடியோவில் ஒரிஜினல் பாடலை வைத்து வீடியோ போடுகிறார்கள் இன்ஸ்ட்டா அது இதுவென,

இப்படியான ஒரு மானங்கெட்ட வேலையை இனி செய்யாதீர்கள்.

இசைஞானியின் பாடல்கள் எல்லாம் மொசார்ட்,பீத்தோவன் போன்ற வெளிநாட்டு மேதைகளின் இசைக்கோர்வைகள் போன்ற கம்போஸிஷன்கள், அதை எல்லாம் உங்கள் வயித்து பொழப்புக்காக இப்டி கேடுகெட்ட தனம் பண்னாதீங்க.

சிலர் என் கிட்ட கேப்பாங்க, என்னங்க இந்த வீடியோவ பாருங்களேன், அப்டியே பாடுறாரு, அப்டியே வாசிக்கிறாங்க, அப்டியே ஒரிஜினலா இருக்குன்னு, ஏண்டா ஒரிஜினல் ஆடியோவை இந்த வீடியோவில் போட்டா அப்டியே இல்லாம கோணிகிட்டா இருக்கும்.

ஏதோ நீங்க ஒரு இயற்கை சூழலில் அமர்ந்து அந்த பாட்டுக்கு வாயசைச்சு நடிச்சு டிக் டாக் மாதிரி போட்டுங்கன்னா கூட பரவால்ல.

எவனோ ஒருத்தன் அப்டியே SPB மாதிரி பாடுகிறான் என்பது போல ஒரு பொய்யான பிம்பத்தை ஏற்படுத்தி அப்டி என்ன உங்க வீடியோவை வைரலாக்கி, கருமம், அதுக்கு வேற எதாச்சும் செய்யலாமே.

எப்படி எப்படி சமைஞ்சது எப்படி, அழகிய லைலா, ஏ ஷப்பா ஏ ஷப்பா, எருக்கன் செடியோரம் இறுக்கி அணைச்ச என் மாமா மாதிரி பாடல்கள் இருக்கு, அதை எல்லாம் எதாச்சும் செஞ்சிக்கோங்க யாரு கேக்க போறா.

நல்ல பாடல்களை இப்படி எல்லாம் செய்யாதீங்க ப்ரோ.

எங்க பாண்ஷ்ஷேரி போலீஸும் , ரவுடி குற்றவாளிகளை  ”தென்னமரக்குடி”   பண்ணுவாங்கன்னு நெனைக்கும் போது ரெம்ப பெருமயாக்குதுபா.ரா...
18/10/2024

எங்க பாண்ஷ்ஷேரி போலீஸும் , ரவுடி குற்றவாளிகளை ”தென்னமரக்குடி” பண்ணுவாங்கன்னு நெனைக்கும் போது ரெம்ப பெருமயாக்குதுபா.

ராயல் சல்யூட் போலீஸ்க்கார்.

வெவசாயம் பன்றவன் எங்கயோ இருக்கான், ஊர் முழுக்க ஏரிய வெட்டி வச்சிகிட்டு காத்துகிட்டு இருக்கவன் எங்கயோ இருக்கான், மானம் பா...
16/10/2024

வெவசாயம் பன்றவன் எங்கயோ இருக்கான், ஊர் முழுக்க ஏரிய வெட்டி வச்சிகிட்டு காத்துகிட்டு இருக்கவன் எங்கயோ இருக்கான், மானம் பார்த்த பூமின்னு மானத்தையே பார்த்துகிட்டு இருக்கவன் எங்கயோ இருக்கான்,

மழை, தண்ணீர் சேமிப்பு,மழைநீர் சேமிப்பு,மழையின் அவசியம் இத பத்தில்லாம் 1% கூட விருப்பம் இல்லாதவன் கிட்ட போயி வருஷா வருஷா நீ ஏன் தொங்கி கிட்டு நிக்கிறன்னு ஒண்ணும் புரில.

இனி உன்னை சேமிக்க அவன் ஏரி கட்ட போறது இல்ல, செலவு செஞ்சி குழாய்களை பதிச்சு உன்னை இழுத்து கொண்டு உப்பு தண்ணில உடுறதுக்கு வேணும்ன்னா வேலைகளை செய்வான், ஏன்னா அவண்ட்ட உன்னை சேமிக்க இடம் இல்ல,

அத்தனை ஏரிகளையும் கபலீகரம் செஞ்சி வீடு,ஃபேக்டரி,கல்லூரி,பள்ளி அது இதுன்னு கட்டிட்டான் இனி அதை எல்லாம் இடிக்கவும் முடியாது.

அதனால நீயா பார்த்து அடுத்த அடுத்த வருஷங்களிலாவது, புதுக்கோட்டை,ராமநாதபுரம்,திருநெல்வேலி சுத்துவட்டாரம் அங்க இங்கன்னு மானம் பார்த்த பூமிகள் பக்கம் பெய்றதுக்கு வழிய பாரு.

மானம் பார்த்து நிற்கும் உன் அருமை தெரிந்தவனை விட்டு விட்டு, நீ ஏன் வர்ரன்னு உன்னை காரி துப்புபவனிடம் போய் நீ ஏன் ”மானத்தை” விட்டு இறங்கி நிக்கிற.

மரத்தை எல்லாம் வெட்டி எறிஞ்சிட்டு வீட்டுக்கு நாலு ஏஸி வச்சி செயற்கை வெப்பத்தை ஏற்படுத்துறான், காடுகளை அழித்து காங்ரீட்களை செழிக்க வைக்கிறான், ஒரு சின்ன நகரத்துல நாலு ஜட்டியை வச்சி விக்கிற ஒரு ஜட்டிக்கடைகாரன் தன் கடை போர்டு மறைக்குதுன்னு வாசலில் இருந்த விலைமதிப்பில்லாத ஆக்ஸிஜனை அள்ளி அள்ளி தரும் மரத்தை வெட்டுறான். இந்த இடத்தில் இந்த கடை இருக்கும்ன்னு தெரிவிக்க எவ்ளோவோ டெக்னாலஜி இருக்கு, வாட்ஸப்,ஃபேஸ்புக்,கூகுள் மேப், விளம்பர யுக்திகள்னு, எவனாச்சும் ரோடுல நடந்து போறப்பா, ஆஹா இதோ ஒரு ஜட்டி கடை இருக்கு ஒரு ஜட்டியை வாங்கி போட்டுக்குவோம்ன்னு ரோட்டுலயே நின்னு ஜட்டி போட்டுக்குவானா. ஜட்டி வாங்கனும்ன்னு நெனைக்கிறவன் தான் உன் கடைக்கு வருவான். ஏன் ஜட்டி மரம்ன்னு இதுல குறிப்பிட்டுருக்கேன்னா ஒரு இடத்துல வெட்டப்பட்ட மரைத்தை பார்த்தேன் அதான். மழைலேர்ந்து மரம் ஜட்டின்னு பதிவின் தடம் மாறுது, அதனால இத்தோட நிப்பாட்டு. மெட்ராஸ்ல பெய்யிறத நீ நிப்பாட்டு.

ஆனாலும் ஒண்ணு இப்டில்லாம் மழை இல்லன்னா நிலத்தடில நீர் இருக்காது, வருஷம் முழுக்க நீ குளிக்க முடியாது,குடிக்க முடியாது.

அதனால மழைநீரை எப்படி சேமிக்கிறது, அதை எப்படி வீணாக்காமல் பூமிக்குள் அனுப்புவது என்பதற்கான வழியை யோசிங்க மெட்ராஸ்க்காரன்ஸ்.

ரிக்‌ஷாக்காரன் பாட்டு போடுவாங்க...ரிக்‌ஷாக்காரனுக்கும் முன்னாடி மணப்பாறை மாடுகட்டி பாட்டும், நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ...
15/10/2024

ரிக்‌ஷாக்காரன் பாட்டு போடுவாங்க...

ரிக்‌ஷாக்காரனுக்கும் முன்னாடி மணப்பாறை மாடுகட்டி பாட்டும், நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு பாட்டும் போட்டாங்க...

14/10/2024

நள்ளிரவு 2 மணி.இப்போ நீ இருக்க அமைதிய பாத்தா காலைல வச்சி பொளக்கபோறன்னு நெனைக்கேன். மழை

14/10/2024

என்ன மழ, வரவர நீ செய்றது சரியில்லியே, லீவுன்னு அரசு அறிவிச்ச பிறகும் பேயுற என்னாச்சு உனக்கு, அறிவிப்பு உன் காதுல உழலியா

நேற்றிரவு முதல் ரத்தன் டாட்டாவை பற்றிய செய்திகள், தகவல்களை படித்து படித்து அடடா இப்டி பட்ட ஒரு மனிதரையா நாம் இழந்திருக்க...
10/10/2024

நேற்றிரவு முதல் ரத்தன் டாட்டாவை பற்றிய செய்திகள், தகவல்களை படித்து படித்து அடடா இப்டி பட்ட ஒரு மனிதரையா நாம் இழந்திருக்கின்றோம் என்ற ஆச்சர்யம்.

ரத்தன் டாட்டா தன் வாழ்நாளில் நன்கொடை அளித்த தொகை 103 பில்லியன்.

அதென்ன பில்லியன், அப்டி ஒரு தொகையின் பேரை நம் வாழ்நாளில் பார்க்கவோ,தெரிந்துகொள்ளவோ, ஏன் அது பற்றி பேசவோ கூட வாய்ப்பில்லை.

அது இருக்கட்டும் 103 பில்லியன்னா எவ்ளோ தான்னு தெரிஞ்சிப்போமேன்னு கூகிளிடம் கேட்டேன், அதில் வந்த எண்ணை எப்படி படிப்பதென்றே தெரியாமல் என் கம்ப்யூட்டர் மானிட்டரில் இடது புறம் தொடங்கி வலது புறத்தில் முடிந்திருந்தது தொகையின் விபரம்.

அட இத எப்டிடா படிக்கிறதுன்னு யோசிச்சு, ஒரு படித்த நண்பரிடம் ஒரு பில்லியனுக்கு எத்தனை ரூபாய்ன்னு கேட்டேன் 100 கோடி என்றார்கள்.

அப்படி என்றால் ரத்தன் டாட்டா இந்திய மக்களுக்காக அளித்த நன்கொடையின் தொகை பத்தாயிரத்து முன்னூறு கோடி.

நம்மூர்ல ஒரு கோடி வச்சிருந்தா அவரு பெரிய கோடீஸ்வரர் அப்டிதான் திமிரா நடந்துக்குவாருன்னு நாம சொல்லி நாமலே அந்த கோடீஸ்வரனின் திமிருக்கு அங்கீகாரமும் வழங்கி விடுவோம்.

ஆனால் தான் உழைத்த, தன் சம்பாத்தியத்தில் பத்தாயிரத்து முன்னூறு கோடியை நன்கொடையாக கொடுத்த ரத்தன் டாட்டா தன் சொந்தத்திற்கு பெரும்பாலும் பயன்படுத்தியது தன் கம்பெனியின் தயாரிப்பிலேயே மிகக்குறைந்த விலை கார் டாட்டா நானோவில் தான்.

ஒன்றிற்கு பக்கத்தில் ஒன்பது ஸீரோ வருவது தான் ஒரு பில்லியன்.

தான் ஒரு ஆள் எண் ஒன்றாக நின்று தனக்கு பக்கத்தில் பல நூறு பூஜ்ஜியங்களை போல் நினைத்து சம்பாதித்து, இந்திய தேசத்தின் தொழிற்துறையின் ராஜ்ஜியமாய் வாழ்ந்து சென்றிருக்கின்றார் ரத்தன் டாட்டா.

இன்றைய தினம் இந்திய தேசம் மட்டுமின்றி உலகையே தன் தான தர்மத்தினால் ஓர் அதிர்வலையை ஏற்படுத்தி சென்றிருக்கின்றார் ரத்தன் டாட்டா.

சென்று வாருங்கள் tata bye bye டாட்டா அவர்களே...

காரைக்கால் நடராஜன் @ சுபராஜன் காரைசுப்பையா.

TATA வாகனங்கள், குறிப்பாக சின்னயானை என செல்லமாக அழைக்கப்படும் TATA ACE வைத்திருப்பவர்கள் டாட்டாவின் புகைப்படத்தை தங்கள் ...
09/10/2024

TATA வாகனங்கள், குறிப்பாக சின்னயானை என செல்லமாக அழைக்கப்படும் TATA ACE வைத்திருப்பவர்கள் டாட்டாவின் புகைப்படத்தை தங்கள் வாகனத்தில் ஒட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தி பெருமை படுத்துங்கள். அவர் ஒரு சராசரி முதலாளி வர்க்கத்தை சேர்ந்தவர் அல்ல இந்திய மக்களுக்காக வாரி வாரி வழங்கிய கொடை வள்ளல்.

ஏழைத்தொழிலாளிகளின் ரத்தத்தை உறிஞ்சி மில்லியனில் சம்பாதித்து பதுக்கும் பணக்காரர்கள் மத்தியில்இந்திய தேச மக்களின் நலன் ஒன்...
09/10/2024

ஏழைத்தொழிலாளிகளின் ரத்தத்தை உறிஞ்சி மில்லியனில் சம்பாதித்து பதுக்கும் பணக்காரர்கள் மத்தியில்

இந்திய தேச மக்களின் நலன் ஒன்றையே முழுமூச்சாக கொண்டு
தன் ரத்தத்தின் ஒவ்வொரு அணுவிலும் இந்திய மக்களின், குறிப்பாக ஏழைமக்களுக்கு கார் மற்றும் வாகனங்கள் எளிதில் கிடைக்க என்னவெல்லாம் செய்யலாம் என சிந்தித்து சிந்தித்து செயலாற்றிய மாமனிதர் ரத்தன் டாட்டா.

அது ஃபெயிலியர் மாடல், இது ஃபெயிலியர் மாடல் என்று டாட்டாவின் சில பல தயாரிப்புகளை போட்டியாளர்கள் மக்களிடையே அவதூறு பரப்பினாலும், ஒருவேளை அந்த பரப்புரை உண்மையாகவே இருந்தாலும் கூட டாட்டாவின் இந்திய தயாரிப்பு இந்திய மக்களின் பயன்பாட்டில் ஒரு நாளும் குறைந்ததே இல்லை.

மன்னர்கள் மட்டுமே யானை வைத்திருந்தார்கள், வளர்த்தார்கள். யானை வளர்ப்பிற்கு ஓர் கிராமத்து சொல்லாடல் உண்டு, அய்யயே இத வச்சிக்கிட்டு மெயிண்ட்டெய்ன் பன்றது யானைய கட்டி தீனி போடுற மாதிரின்னு, ஏனென்றால் யானை வளர்ப்பு அத்தகைய காஸ்ட்லியானது.

ஆனால் இந்திய மக்களில் பெரும்பாலானவர்களுக்கு யானையை வழங்கி யானை வளர்ப்பை எளிமைப்படுத்தி, அந்த யானையால் ஏழை மக்களுக்கு கோடானு கோடி நன்மைகளை தந்தவர் ரத்தன் டாட்டா.

ஆம் அது தான் டாட்டா மக்களுக்கு வழங்கிய குட்டியானை என்று செல்லமாக அழைக்கப்படும் வாகனமான டாட்டா ஏஸ் (TATA ACE).
புளி விற்பவர், புண்ணாக்கு விற்பவர்,பழைய இரும்பு விற்பவர், வெல்லம் கருப்பட்டி விற்பவர்,வெங்காயம் விற்பவர்,தென்னங்குருத்து விற்பவர்,ஜல்லிக்கட்டுக்கு காளை கொண்டு செல்வோர்,மாற்றுத்திறானளிகளின் இசைக்குழு என டாட்டா ஏஸை பயன்படுத்தாதவர்களே இருக்க முடியாது.
அது சராசரி வாகனம் அல்ல, ஏழைகளும் வாகனம் வாங்கனும் என ரத்தன் டாட்டா இந்திய மக்களுக்காகவே சிந்தித்து வழங்கிய ஓர் உதவி.

இன்றும் பல ஏழைக்குடும்பத்தில் ஓடிக்கொண்டிருக்கும் டாட்டா இண்டிக்கோ என ஏழை எளிய மக்களும் கார் வாங்க வேண்டும் என யோசித்து கார் தயாரித்தவர் டாட்டா.

ரத்தன் டாட்டாவை பற்றி நுட்பமான ஆயிரமாயிரம் விஷயங்கள் இருந்தாலும், இது போன்று எல்லோருக்கும் புரியும் சிலவற்றை நினைவுகூர்ந்து டாட்டாவை பெருமை படுத்துவதில் பெருமிதம் கொள்கின்றேன்.

தன் லாபத்தின் பெரும் பங்கினை சமூக சேவைக்காக அள்ளி வழங்கியவர் ரத்தன் டாட்டா.

கோரோனா பேரிடர் காலங்களில் மில்லியன்களை வாரி வாரி வழங்கியவர் ரத்தன் டாட்டா.

மிக அதிக வயது மரணங்களை கிராமத்தில் கல்யாண சாவு என சொல்வார்கள்.
ஆயிரம் பிறை கண்டவர் என சொல்வார்கள். தன் நிறுவனங்களின் வேலை வாய்ப்பினாலும், தன் சேவையாலும் கோடானு கோடி மக்களின் வாழ்வில் நிலவை தந்தவர் ரத்தன் டாட்டா.

மறைந்து போக வேண்டிய நிறைந்த வயது தான் என்றாலும், மக்கள் மனதெல்லாம் நிறைந்திருக்கும் ரத்தன் டாட்டா மறைந்த நிகழ்வு இந்திய தேசத்தின் ஈடு செய்ய முடியாத இழப்பு.

சென்று வாருங்கள்! தேசத்தின் ரதமே,ரத்தமே, ரத்தினமே, ரத்தன் டாட்டாவே !

காரைக்கால் நடராஜன் @ சுபராஜன் காரைசுப்பையா

எடுக்குறது தமிழ் படம், ஓட ப்போறது தமிழ்நாட்டுல, அப்டியே அது மத்த மொழிக்கு டப்பிங் செய்யப்பட்டாலும், அது அதுக்குன்னு உள்ள...
08/10/2024

எடுக்குறது தமிழ் படம், ஓட ப்போறது தமிழ்நாட்டுல, அப்டியே அது மத்த மொழிக்கு டப்பிங் செய்யப்பட்டாலும், அது அதுக்குன்னு உள்ள மொழிக்காரர்களால் அந்தந்த மொழிக்கு மொழிமாற்றம் செய்யப்படும்.

சில பல ஹீரோக்களுக்கே அந்தந்த மாநிலத்துக்காரன் எவனோ குடுப்பான்.

உதாரணத்திற்கு கமலின் பல படங்களுக்கு, பல அல்ல அத்தனை படங்களுக்குமே தெலுங்கிற்கு பாடும் நிலா பாலு தான் டப்பிங் பேசியதாக தகவல்.

ஆனா தமிழ் படத்தில் 98% பேர் அவரவர் குரல் தான். அந்த 2% மோகனுக்கு சுரேந்தர் மாதிரி ஒரு சிலர்.

இத எதுக்கு சொல்ல வர்ரேன்னா, ரெண்டு மூனு லோ பட்ஜெட் ஆர்ட்டிஸ்ட்டுகளை வைத்து வெற்றிப்படங்களை தந்த ஏதோ சில இயக்குநர்கள் மேல் நம்ப்பிக்கை வைத்து, ஒரு பெரிய செலப்ரிட்டியை, ஸ்ட்டாரை வைத்து ஒரு படம் எடுத்துட்டாம் அவர்களை தமிழ் பிரபல யூ ட்யூப் சேனல்கள் பேட்டி எடுக்கும் போது, தத்து புத்துன்னு ஒரே இங்கிலீஷ்.

ஏன் பாஸ் இங்கிலீஷ்ல பேசுனா தான் நீங்க இப்போ இருக்குற ட்ரெண்டிங் டைரக்ட்டர்னு நெனைப்பாங்களா.

அந்த தமிழ் சேனலை பார்க்க போற அத்தனை பேரும் தமிழன் தான்.

தமிழ் மேல் பற்றுல எல்லாம் நான் சொல்லலை. அதென்ன கருமம் கெக்கே பிக்கேன்னு பாதி தமிழ், பாதி இங்கிலீஷ், பாதி தங்கிலீஷ் கலந்து.

அட் தட் ட்டைம் சார் டக்குன்னு செட் வாட் ஆர் யூ டூயிங் ராமசாமின்னு. நான் அப்டியே மெய் மறந்து ஃப்ரீஸ் ஆகி சார் உங்கள நான் இந்த படத்துல ஒரு நியூ ஆங்கிள்ல எடுக்கனும் சார்னு சொன்னப்ப சார் சொன்ன அந்த வேர்ட் ரியலி தட் கூஸ் பம்ப் மொமெண்ட்.

பன்மொழி படிக்கனும், பன் மொழி பேசனும், பன்மொழி கத்துக்கனும், ஆனா தமிழ் மொழி படம் எடுத்து உங்கள தமிழ்ல பேட்டி எடுக்குறப்ப தாய்மொழில அழகா பேசுங்க.

பேட்டி எடுக்குறவன் தமிழ்ல கேக்குறப்போ நீன்க்க பன்மொழில பேசாதீங்க. அதுக்காக நான் சுந்தரத்தமிழ்ல பேச சொல்லல. ஒவ்வொரு வார்த்தைகளில் ஆங்கிலம் கலக்கலாம் தப்பில்ல. காஃபிய கொட்டை வடிநீர்ன்னு எல்லாம் சொல்ல வேணாம்.

டெபுட்டேசன்ல வந்து தமில் கத்துகிட்டு நான் தமில் பேசுறேன், நீ தமிழ்நாட்டுக்காரன் இங்கிலீஷ்ல பேசுனா தமில் எப்டிய்யா வாழும்ன்னு பல்ராம் நாயுடு கேக்குறப்ப, விடுங்க உங்கள மாதிரி யாராச்சும் தெலுங்குலேர்ந்து வந்து வாழ வைப்பாங்கன்னு கமல் சொல்லுவாரு.

தமிழ் வாழனும்ன்னு உங்கள தமிழ்ல பேச சொல்லலை, புரியல ஒரு மண்ணும்.

காரைக்கால் நடராஜன்

Address

Karaikal
609602

Website

Alerts

Be the first to know and let us send you an email when Natarajan Natarajan S posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share