Dina Vanigam

Dina Vanigam தமிழின் முதல் வணிக நாளிதழ்

தமிழின் முதல் வணிக நாளிதழ் உங்களுக்காக எளிய தமிழில் உலக வணிகம் படித்து பகிர்ந்து மகிழுங்கள்.

தினந்தோறும் இ -பேப்பரை இலவசமாக உங்கள் மின் அஞ்சலில் பெற சந்தா (Subscribe) செய்யவும்.

ரேசன் கடைகளில் விநியோகம் செய்ய2,600 டன் அரிசி நாமக்கல் வந்ததுநாமக்கல்:ரேசன் கடைகளில் விநியோகம் செய்ய நாமக்கல், ரயில்வே ஸ...
11/08/2017

ரேசன் கடைகளில் விநியோகம் செய்ய
2,600 டன் அரிசி நாமக்கல் வந்தது

நாமக்கல்:

ரேசன் கடைகளில் விநியோகம் செய்ய நாமக்கல், ரயில்வே ஸ்டே­னுக்கு, 2,600 டன் ரே­ன் அரிசி வந்தது. நாமக்கல், ரயில்வே ஸ்டே­னுக்கு, பல்வேறு மாவட்டங்களில் இருந்து அத்தியாவசிய பொருட்களான அரிசி, கால்நடை தீவன பொருட்கள் வரவழைக்கப்படுகின்றன. அதன்படி, மாவட்டத்தில் செயல்படும் ரே­ன் கடைகளில், பயனாளிகளுக்கு வினியோகம் செய்வதற்காக, தெலுங்கானா மாநிலத்தில் இருந்து, 41 பெட்டிகள் கொண்ட சரக்கு ரயில் மூலம், 2,600 டன் ரே­ன் அரிசி, நாமக்கல் வந்தது. அவை, லாரிகள் மூலம் ஏற்றிச் செல்லப்பட்டு, சம்பந்தப்பட்ட நுகர்பொருள் வாணிப கிடங்கு குடோன்களில் இருப்பு வைக்கப்பட்டன.

'VALAR TAMIL' ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷனுக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து டவுண்லோடு செய்து கொள்ளுங்கள்.https://play.google...
04/03/2015

'VALAR TAMIL' ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷனுக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து டவுண்லோடு செய்து கொள்ளுங்கள்.
https://play.google.com/store/apps/details?id=com.valartamil

02/03/2015

பொது மன்னிப்பு திட்டம் கிடையாது
கறுப்பு பணம் குறித்த தகவல் தெரிவிக்க
கடைசி சந்தர்ப்பம் அளிக்கப்படும்
மத்திய அமைச்சர் தகவல்

புது தில்லி, மார்ச் 3

வெளிநாட்டு வங்கிக் கணக்குகளில் கறுப்பு பணம் வைத்திருக்கும் இந்தியர்கள் தங்களது கணக்கு விவரங்கள் குறித்து தெரிவிப்பதற்கு இறுதி சந்தர்ப்பம் ஒன்றை அளிக்கப் போவதாகவும் ஆனால் அவர்களுக்கு பொது மன்னிப்பு திட்டம் எதுவும் அறிவிக்கப்படமாட்டாது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

வருமானத்தை மறைப்பவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அளிக்க வகை செய்யும் கடுமையான சட்டம் கொண்டு வரப்படும் என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி தமது பட்ஜெட்டில் அறிவித்ததைத் தொடர்ந்து, வெளிநாட்டு வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் தங்களது கணக்குகள் மற்றும் சொத்துக்கள் குறித்த விவரங்களை தெரிவிப்பதற்கு இறுதி சந்தர்ப்பம் அளிக்கப் போவதாக அரசு கூறியது.

இங்கு செய்தியாளர்களிடம் பேசிய நிதித்துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹா, வெளிநாடுகளில் வைத்திருக்கும் சொத்துக்கள் குறித்து தெரிவிக்கத் தவறினால் 7 ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனையும் தங்களது வருவாயை மறைப்பவர்களுக்கு 10 வருடம் வரை கடுங்காவல் தண்டனையும் விதிக்க வகை செய்யப்படும் என்றார்.

கறுப்பு பண தீமையை கட்டுப்படுத்துவதற்காக நாடாளுமன்ற நடப்புக் கூட்டத் தொடரில் கொண்டு வர அரசு திட்டமிட்டு வரும் மசோதாவில் இந்த ­ரத்துக்கள் இடம் பெறவுள்ளன.

இந்த ­ரத்துக்களின் கீழ் வரும் குற்றங்கள் ஒன்றாக சேர்க்க கூடியதல்ல என்று அருண் ஜேட்லி கூறியிருந்த நிலையில், இது பற்றி விவரித்த சின்ஹா, வெளிநாட்டு வருமானத்தை மறைப்பது மற்றும் வரிஏய்ப்பு செய்வதற்கு 10 ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை விதிக்கக்கூடிய வகையில் வழக்குத் தொடரப்படும் என்றார்.

வெளிநாடுகளில் வைத்திருக்கும் சொத்துக்கள் குறித்து வருமான வரி அறிக்கை தாக்கல் செய்யாமலிருப்பது அல்லது போதியளவு தகவல் தெரிவிக்காமல் அறிக்கை தாக்கல் செய்வது ஆகியவற்றுக்கு 7 ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும் என்றார் சின்ஹா.

அத்தகைய வருவாய் அல்லது சொத்துக்களை மறைப்பதற்கு 300 சதம் என்ற அளவில் வரி விதிக்கப்படும் என்றார் அவர்.

இதற்கு பொது மன்னிப்பு திட்டம் எதுவும் கொண்டு வரப்பட மாட்டாது என்றும் கூறிய அவர், வெளிநாடுகளில் கணக்கில் காட்டப்படாத சொத்துக்கள் மற்றும் வங்கிக் கணக்குகள் வைத்திருப்பவர்கள் அவற்றை தெரிவிக்க வேண்டும் என தாங்கள் எதிர்பார்ப்பதாக மிகவும் தெளிவாக கூறியிருக்கிறோம் என்றார்.

அதை செய்வதற்கான கடைசி சந்தர்ப்பத்தை தாங்கள் உருவாக்கியுள்ளதாகவும் ஆனால் அது பொது மன்னிப்பு அல்ல என்றும் நீங்கள் என்ன வைத்திருக்கிறீர்களோ அதை தெரிவித்தாக வேண்டும் என்றும் அதற்காக உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட காலஅவகாசம் தரப்படும் என்றும் அதற்குள் தெரிவிக்காவிட்டால் 7 ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனைக்கு ஆளாகுவீர்கள் என்றும் சின்ஹா தெரிவித்தார்.

மேலும், இத்தகைய கணக்கு வைத்திருப்பவர்கள் தங்களது வருமான வரி அறிக்கையில் வெளிநாட்டு வங்கிக்கணக்கு துவங்கிய தேதி குறித்த விவரங்களை குறிப்பிடுவது கட்டாயம் என்றும் அவர் கூறினார்.

இதற்கான புதிய சட்டம் இயற்றுவதை தவிர, பினாமி பரிவர்த்தனை சட்டத்தில் மாற்றங்கள் செய்யப்படும் என்றும் ரியல் எஸ்டேட் பரிவர்த்தனைகளில் ரூ.20,000க்கு மேல் ரொக்கமாக முன் பணம் பெறுவதற்கு கட்டுப்பாடுகளும் கொண்டு வரப்பட்டுள்ளது.

நமது நாட்டுக்கு சட்டப்பூர்வமாக சொந்தமான அன்னிய சொத்துக்களை கண்டறிவதும் திரும்ப கொண்டு வருவதும் நம் நாட்டுக்கு நாம் செய்ய வேண்டிய கடமைகள் என்று தமது பட்ஜெட்டில் அருண் ஜேட்லி தெரிவித்திருந்தார்.

இதற்காக, நடப்பு கூட்டத்தொடரிலேயே மசோதா ஒன்றை கொண்டு வர தாம் உத்தேசித்திருப்பதாகவும் இத்தகைய குற்றங்களில் ஈடுபடும் தனிப்பட்டவர்கள், நிறுவனங்கள், வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்கள், யாராக இருந்தாலும் தண்டனைக்கும் அபராதம் செலுத்தவும் உள்ளாவார்கள் என்றார்.

2015‡16ல் நபார்டு வங்கிக்குரூ.300 கோடி மூலதன நிதிபுது தில்லி, மார்ச் 3தேசிய விவசாயம் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி (நபார்டு...
02/03/2015

2015‡16ல் நபார்டு வங்கிக்கு
ரூ.300 கோடி மூலதன நிதி

புது தில்லி, மார்ச் 3

தேசிய விவசாயம் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி (நபார்டு) தனது மூலதன கட்டமைப்பை அதிகரித்து கொள்வதற்காக 2015‡16ம் ஆண்டில் அவ்வங்கிக்கு ரூ.300 கோடி நிதி வழங்க மத்திய அரசு உத்தேசித்துள்ளது.

நபார்டு வங்கிக்கு பங்கு மூலதனம் வழங்குவதற்காக இந்த தொகையை பட்ஜெட் ஒதுக்கியுள்ளதாக அதிகாரப்பூர்வ ஆவணம் தெரிவித்தது.

நடப்பு நிதியாண்டிலும் இந்த ஊரக வளர்ச்சி வங்கிக்கு இதே அளவு நிதி வழங்குவதற்கு அரசு ஒதுக்கீடு செய்திருந்தது.

ரூ.100 கோடி துவக்க மூலதனத்துடன் கடந்த 1982ம் ஆண்டு நபார்டு வங்கி துவங்கப்பட்டது.

இவ்வங்கியில் அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் பங்கு மூலதன விகிதம் உயர்த்தப்பட்டதையடுத்து 2013ம் ஆண்டு மார்ச் 31ந் தேதி நிலவரப்படி செலுத்தப்பட்ட மூலதனம் ரூ.4000 கோடியாக இருந்தது. இதில் மத்திய அரசின் பங்கு ரூ,3980 கோடியும் (99.50 சதம்) மற்றும் ரிசர்வ் வங்கியின் பங்கு ரூ.20 கோடியும் (0.5 சதம் ) ஆகும்.

சிரமமில்லாத மற்றும் திறன்மிக்க விவசாயக்கடன் வழங்குவதன் மூலம் வேளாண் தொழிலுக்கு ஆதரவளிக்க நபார்டு வங்கியால் நிறுவப்பட்டுள்ள ஊரக உள்கட்டமைப்பு வளர்ச்சி நிதியத்துக்கு ரூ.25,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய 2015‡16ம் ஆண்டு பட்ஜெட் உத்தேசித்துள்ளது.

இதுதவிர, நீண்டகால ஊரக கடன் வழங்கும் நிதியத்துக்கு ரூ.15,000 கோடி ஒதுக்கவும் குறுகிய கால கூட்டுறவு ஊரக கடன் மறு நிதிவசதி நிதியத்துக்கு ரூ.15,000 கோடி ஒதுக்கவும் பட்ஜெட் உத்தேசித்துள்ளது.

Download our Dina Vanigam news app
28/01/2015

Download our Dina Vanigam news app

http://dinavanigam.net/home/readnews/2664
31/12/2014

http://dinavanigam.net/home/readnews/2664

புது தில்லி, டிச. 31 நடப்பு 2014ஆம் ஆண்டில் இந்திய நிறுவன உலகில் இணைத்தல், கையகப்படுத்துதல் மற்றும் தனியார் பங்கு முதலீட்டு நடவடிக்கைகளின் மொத்த மதிப்பு 26 சதவீதம் அதிகரித்து 4,800 கோடி டாலராக உயர்ந்துள்ளது. இது, 2013?ஆம் ஆண்டில் 3,800 கோடி டாலராக இருந்தது என கிராண்டு தார்ன்ட்டன் நிறுவனம் தெரிவித்து…

31/12/2014

புது தில்லி, டிச. 31 அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் குழுமம் தொடங்கத் திட்டமிட்டுள்ள வங்கியில் ஜப்பானைச் சேர்ந்த சுமிடோமோ மிட்ஸூயி டிரஸ்ட் வங்கிக்கு 10 சதவீதப் பங்கு அளிப்பது பற்றிப் பரிசீலித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக ரிலையன்ஸ் கேபிடல் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஸூம் கோ…

அன்னியச் செலாவணி கையிருப்பு 314.18 பில்லியன் டாலராக சரிவு
07/10/2014

அன்னியச் செலாவணி கையிருப்பு 314.18 பில்லியன் டாலராக சரிவு

மும்பை, அக்.4 அமெரிக்க டாலர் அல்லாத கரன்சிகளின் மதிப்பு கடு மையாக சரிந்ததன் காரணமாக செப்டம்பர் 26ந் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் இந்தி யாவின் அன்னியச் செலா வணி கையிருப்பு 1.415 பில்லி யன் டாலர் குறைந்து 314.180 பில்லியன் டாலரானது. இது தொடர்ந்து 4வது வாரமாக ஏற்பட்ட சரிவாகும். முந்தைய வாரத்தில் நாட்…

25/07/2013

குழந்தைகளுக்கு(0-10 Yrs) இருதய அறுவை சிகிச்சை இலவசமாக செய்ய .. தொடப்புக்கொள்க ... 080-28411500.

நீங்கள் செய்யும் ஷேர் ஒரு உயிரை காப்பாற்ற உதவலாம் ....

हार्ट सर्जरी के बच्चों (0-10 साल) पीएचडी के लिए नि: शुल्क: 080-28411500.

अपना हिस्सा कम से कम एक बच्चे के जीवन में मदद मिलेगी ..!

గుండె శస్త్రచికిత్స పిల్లలు (0-10 Yrs) Ph కోసం ఉచితంగా: 080-28411500.

మీ వాటా కనీసం ఒక పిల్లవాడిని జీవితం సహాయం చేస్తుంది ..!

HEART surgery free of cost for children (0-10 Yrs) Ph: 080-28411500.

your share will help atleast one kid's life..!

Happy Republic Day..........
26/01/2013

Happy Republic Day..........

செய்திகள் 31.10.2012
31/10/2012

செய்திகள் 31.10.2012

Address

5, Kannadasan 2nd Street, S. S. Colony
Madurai
625010

Alerts

Be the first to know and let us send you an email when Dina Vanigam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dina Vanigam:

Share