08/05/2017
சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் உளறுவது நமக்கு வாடிக்கையாகிவிட்டது. முதலில் ஆடை விசயங்களைப் பற்றிப் பேசி மருத்துவ நுழைவுத் தேர்வு எனும் அராஜகத்தைப் பற்றி நாம் தகவல்களைத் தேடுவதையே விட்டுவிட்டோம். கவனம் திசை திருப்பப்பட்டுக் கொண்டே இருக்கிறது.
இந்தத் தேர்வின் தேவை என்னவென்று யாரும் படிக்கவே மாட்டேன் என்று சொல்கிறார்கள். நீதிமன்றங்களின் தீர்ப்புகளின் சாரத்தைப் பார்த்தீர்களா?
நேற்று சின்னவனுக்குக் கதை சொன்னேன். ஒரு ஊரில் ஒரு முட்டாள் அரசன் என்று துவங்கினேன். இசை இடையில் புகுந்து, நம்ம மோதி மாதிரியாப்பா? என்றான். அவனுடைய அம்மா என்னை முறைத்தார். பிள்ளைகளுக்கும் கண்டதை சொல்லிக் கொடுங்க என்று கோபித்துக் கொண்டார்.
மருத்துவ நுழைவுத் தேர்வுகளை திட்டமிட்டு தேசிய அரசியல் கையில் எடுத்தது. சல்லிக்கட்டு போராட்டத்திலும் நீதிமன்றமும் மோதி அரசும் கூட்டுக் களவாணித்தனம் செய்தார்கள். சரியாக நடக்க இருக்கும் நேரத்தில் நீதிமன்றத்தில் முட்டுக் கட்டை போடும் விதமாக ஒரு தரவை சமர்ப்பிக்கிறேன் என்று தடை வாங்குவார்கள். ஜனாதிபதிக்கு ஒரு ஒப்புப் பெறாத கடிதம் எழுதுவார்கள். அந்த குறிப்பு சட்டப்படி செல்லாதபடி பார்த்துக் கொள்வார்கள். இப்படி இழுத்தடித்த போது தான் சல்லிக்கட்டுப் போராட்டம் அடிவயித்தில் அடி கொடுத்தது. அந்த போராட்டத்தை ஒட்டியே இப்போது நடக்கும் அரசியல் கூத்துகளை கோபத்தோடு செய்து கொண்டிருக்கிறார்கள். அந்தப் போராட்டத்தின் போதும் நீங்கள் கவனித்தால் தெரியும் மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு எதிரான பதாகைகள் உதய்க்கு எதிரான பதாகைகள் காவேரி மேலாண்மை பதாகைகள் கூடங்குள எதிர்ப்பு பதாகைகள் மீத்தேன் எதிர்ப்பு பதாகைகள் இருந்தன. லெக்கின்ஸ் போட்ட முட்டாள் ராஜா இன்னொரு போராட்டம் வரக் கூடாது என்று மருத்துவ நுழைவுத் தேர்வு அவசர சட்டத்தை முடக்கினார்.
மாநில உரிமைகள் என்று இனி பேசிக் கொண்டிருப்பது வீண் வேலை. ஆக வேண்டிய காரியத்தைப் பார்க்கணும். சேதாரமில்லாமல் விலக வேண்டும்.
நீதிமன்றங்களை கேலிக் கூத்தாக்கிவிட்டார்கள். தன்னாட்சி அமைப்பு என்பது அரசியல் படியாமல் இருக்க நீதிமன்றங்களுக்குக் கொடுக்கப்பட்ட வாய்ப்பு. ஆனால் அவர்கள் அதை தவறாக பயன்படுத்தி நீதிமன்றங்களை சீரழித்துவிட்டார்கள் . தென்னாடு ஒரு கூட்டமைப்பை உருவாக்கி இந்திய இந்தி வலது சாரி அரசியலை முறியடிக்க பணிகளைத் துவக்க வேண்டும்.
இனி மேல் சட்டத்தின் ஆட்சி நடக்க வாய்ப்பில்லை. மோதி என்கிற முட்டாளைப் போல போல பல முகங்கள் கண்ணுக்குத் தெரிகிறது. ஒரு நாள் கண்ணாடி முன்னால் நின்றால் நாமும் முட்டாள் மோதியாக தெரிய வாய்ப்பிருக்கிறது. இது ஆவுறதில்லை. ஆளை விடுங்க கவ் பெல்ட் முட்டாள்களா.