Pa Ranjith Fans Club

Pa Ranjith Fans Club என் மக்கள் இன்னும் விழித்துக் கொள்ளவில்லை,அதனால் தான் நான் விழித்துக் கொண்டிருக்கின்றேன்.
பாபாசாகேப்
(5)

தமிழக அரசே சாதிய ஆணவப் படுகொலைக்கு எதிரான தனிச் சட்டம் உடனே இயற்றுக!
30/07/2025

தமிழக அரசே சாதிய ஆணவப் படுகொலைக்கு எதிரான தனிச் சட்டம் உடனே இயற்றுக!

30/07/2025
ஆழமாகச் சிந்தித்தால் இந்தியாவுக்கு சுயாட்சி எவ்வளவு அவசியமோ, தீண்டத்தகாதவர்களுக்கு மதமாற்றம் அவ்வளவு அவசியம் என்பதை எல்ல...
27/07/2025

ஆழமாகச் சிந்தித்தால் இந்தியாவுக்கு சுயாட்சி எவ்வளவு அவசியமோ, தீண்டத்தகாதவர்களுக்கு மதமாற்றம் அவ்வளவு அவசியம் என்பதை எல்லோரும் ஒப்புக் கொள்வார்கள். இந்தியாவுக்கு சுயாட்சி முக்கியமானால் தீண்டத்தகாதவருக்கு மதமாற்றம் முக்கியம். சுயாட்சி மற்றும் மதமாற்றம் இரண்டின் இலக்கும் ஒன்றுதான் - சிறு வேறுபாடும் கிடையாது விடுதலை.
#ஜெய்பீம் 🌸
#அம்பேத்கர்

வேட்டுவம் படப்பிடிப்பு தளத்தில் ❤️
24/07/2025

வேட்டுவம் படப்பிடிப்பு தளத்தில் ❤️

எல்லோருமே தங்களுக்காகவே வாழ்கிறார்கள். யாருமற்றவர்கள் கடவுளின் கருணைக்கு கையளிக்கப்படுகிறார்கள். நீங்களாகவே எழுந்து நிற்...
23/07/2025

எல்லோருமே தங்களுக்காகவே வாழ்கிறார்கள். யாருமற்றவர்கள் கடவுளின் கருணைக்கு கையளிக்கப்படுகிறார்கள். நீங்களாகவே எழுந்து நிற்க வேண்டும், யாரும் உங்களுக்கு உதவ வர மாட்டார்கள் என்பதே சமூகத்தின் இன்றைய நிலை.
#ஜெய்பீம் 🌸
#அம்பேத்கர்

🌸💙
21/07/2025

🌸💙

15/07/2025

நீலம் ப்ரொடக்‌ஷன்ஸ்
கண்ணீர் அஞ்சலி

ஜூலை 13 ஆம் தேதி காலை தமிழ்நாட்டின் நாகப்பட்டிணம் மாவட்டத்தில் நடைபெற்று வந்த “வேட்டுவம்” படப்பிடிப்பு தளத்தில், திறமையான சண்டைக் கலைஞரும், எங்களுடன் நீண்ட காலம் பணியாற்றியவருமான திரு. மோகன் ராஜ் அவர்களை நாங்கள் எதிர்பாரா விதத்தில் இழந்தோம். அவரின் மனைவி, குழந்தைகள்,குடும்பம் மற்றும் அவரை சக பணியாளராக, நண்பராக அறிந்த அனைவரையும் தேற்றும் வழியறியாது எங்கள் உள்ளம் கலங்குகிறது.

எப்போதும் போலவே கிராஷ் காட்சியை எடுக்கும் முன்பு செய்யும் தெளிவான திட்டமிடல், பாதுகாப்பு ஏற்பாடுகள், எங்களின் வேண்டுதல்கள், வாழ்த்துக்கள் என எல்லாம் இருந்தன. சண்டைக்காட்சிகளை திட்டமிடுவதில், செயல்படுத்துவதில் தெளிவும், நேர்த்தியும் கொண்டிருந்த நிகரற்ற கலைஞரான அவருடைய வழிகாட்டுதலையும், எங்கள் ஸ்டண்ட் இயக்குனர் திலீப் மாஸ்டரின் விளக்கமான திட்டமிடலையும், பாதுகாப்பு தயாரிப்புகளையும் அனைவரும் பெரிதும் மதித்தோம்; தவறாமல் பின்பற்றினோம்.
ஆனால், அந்த நாள் அண்ணன் மோகன் ராஜ் உயிரழப்பில் முடிந்தது என்பது தாங்கொணா அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. மோகன் ராஜ் அண்ணன் அவர்கள், தன் ஸ்டண்ட் டீம், எங்களது குழு, என அனைவரின் மரியாதையையும், அன்பையும் பெற்றவர்.
செழுமையான அனுபவமும், சாதனைகளும் கொண்டு தன் நேர்த்தியான வேலையால் தன் குடும்பத்தை, சக ஸ்டண்ட் வீரர்களை, இயக்குனர்களை பெருமைப்படுத்திய கலைஞர் அவர். எங்கள் ஒவ்வொருவரின் மரியாதையும், அன்பும், வந்தனங்களும் என்றென்றென்றும் அவருக்கு சமர்ப்பணம்.

இது எங்கள் அனைவரையும் உலுக்கியிருக்கும் பேரிழப்பு. ஒரு கணவராக, தந்தையாக, பிரமாதமான சண்டைக் கலைஞராக, நேர்த்தியான மனிதராக வாழ்ந்த மோகன் ராஜ் அண்ணாவின் இறப்பிற்கு எங்களின் ஆழ்ந்த இரங்கல்கள். ஆகச்சிறந்த ஸ்டண்ட் கலைஞராய் அறியப்பட விரும்பிய அவரை என்றும் அப்படியே நாங்கள் நினைவில் போற்றுவோம்.

'தாதா'வா? 'தாத்தா'வா?தாதா என்றால் என்ன?அதற்கிருப்பது எதிர்மறையான அர்த்தம் தான். உடனடியாக கேட்டால் கெட்டவர்,கொள்ளை கூட்டத...
07/07/2025

'தாதா'வா? 'தாத்தா'வா?

தாதா என்றால் என்ன?அதற்கிருப்பது எதிர்மறையான அர்த்தம் தான். உடனடியாக கேட்டால் கெட்டவர்,கொள்ளை கூட்டத்தின் தலைவன் என்றெல்லாம் சொல்லி விடுவோம்.

ஆனால் "தமிழ் வளர்த்த இருவர் "என்று பாண்டித்துரை தேவரையும் பெ.ம.மதுரை பிள்ளையையும் பாராட்டும்போது அவர்களை தாதாக்கள் என்று குறிப்பிடுகிறார் அயோத்திதாசர்.
அதாவது தாதா என்ற சொல் எதிர்மறை அர்த்தத்தில் அல்லாமல் நேர்மறை அர்த்தத்தில் அவரால் பயன்படுத்தப்பட்டுள்ளது.

தமிழில் பல சொற்கள் உச்சரிப்பில் ஒன்றே போலிருந்தாலும்,காலத்தால் அர்த்தம் மாறி வந்திருப்பதை பலரும் எழுதியிருக்கிறார்கள்.அதிலும் ஒரு காலத்தில் கொள்ளப்பட்ட அர்த்தத்திற்கு தலைகீழான இன்னொரு அர்த்ததிற்கே கூட சொற்கள் வந்தடைந்திருக்கின்றன. இவை மொழியில் நடைபெறும் மாற்றமல்ல. சமூகத்தில் நடைபெறும் மாற்றம் மொழியின்வழியே பிரதிபலிக்கிறது என்றே கொள்ள வேண்டியுள்ளது.

சில சொற்கள் முன்பே மாறியுள்ளன.சில சொற்கள் நூறாண்டுகளுக்குள் கூட மாறியிருக்கின்றன.அவ்வாறு அர்த்தம் மாறிய சொல் தான் தாதா.நேர்மறை அர்த்தத்தில் கையாளப்பட்டு வந்த சொல் நூறாண்டு காலத்திற்குள் எதிர்மறை அர்த்தத்திற்கு மாறியிருக்கிறது.

பாண்டித்துரை தேவருக்கும்,மதுரை பிள்ளைக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. இருவருமே தமிழ் வளர்ச்சியில் வள்ளல்களாக திகழ்ந்தார்கள். அயோத்திதாசரும் வள்ளல்கள் என்பதை குறிப்பதற்கே தாதா என்ற சொல்லை கையாள்கிறார். எனவே இங்கு வள்ளல் என்பது தாதாவுக்கு ஒப்பானதாகிறது.

நாமதீப நிகண்டு தாதா என்ற பெயரால் வள்ளலைக் குறிப்பிடுகிறது.ஏன் இருபதாம் நூற்றாண்டில் வந்த நா.கதிரைவேற் பிள்ளையின் தமிழ்மொழி அகராதி கூட தாதா என்ற சொல்லுக்கு ஈகையாளன் என்ற அர்த்தத்தையே தருகிறது.

வள்ளல் என்பதால் அவர் பெரியோனாகவும், மதிக்கத்தக்கவனாகவும் பார்க்கப்படுகிறான்.எனவே ஏதோவொரு வகையில் ஊரில்/குழுவில் /குடும்பத்தில் மூத்தோனாக -அதனால் வழிகாட்டுபவனாக இருப்பவனும் தாதாவாக பார்க்கப்பட்டிருக்கிறான். தலைவன் கூட தாதா தான்.

இந்த அர்த்தம் தான் (எதிர்மறையாக இருந்தாலும்) இன்றைக்கு பிறரை அடக்கி அடக்கியாளுபவனையும் , கூட்டத்தின் தலைவனையும் குறிப்பதாகியிருக்கிறது.

இந்த பெரியோனை குறிக்கும் தாதா என்பதிலிருந்து தான் தாத்தா என்ற சொல் வந்திருக்கிறது.தாதா அல்லது தாத்தா என்ற உச்சரிப்புடன் கூடிய சொல் பாலி மொழியில் இருக்கிறது.பாலியில் தாதா என்ற சொல்லுக்கு தந்தை,பிக்கு என்று பொருளுரைக்கப்
படுகின்றன.

தந்தையின் தந்தையையும் குறிப்பதாக அச்சொல் வளர்ந்திருக்கிறது.ஏனெனில் குடும்பத்தில் அவர் பெரியவர்.தன் அனுபவம் காரணமாக வழிகாட்டுகிற பெரியோனாக இருக்கிறார்.
நா.கதிரைவேற் பிள்ளையின் தமிழ்மொழி அகராதி பாட்டன்,பிதா என்கிற இரண்டு சொற்களை பொருளாக தருவதையும் பார்க்க வேண்டும்.இவ்வாறு மெல்ல மெல்ல ஒன்றிற்கு மற்றொன்று மாற்று என்று வழங்கப்பட்டு இருக்கிறது.

இவ்வாறு ஒரே அர்த்தத்தில் வழங்கப்பட்ட இரண்டு சொற்கள் இருபதாம் நூற்றாண்டு மொழி வளர்ச்சியில் இருவேறு விஷயங்களை குறிப்பதாக மாறிப் போயிருக்கிறது.இரண்டில் ஒன்று (தாத்தா) நேர்மறை பொருளிலும், மற்றொன்று (தாதா) எதிர்மறை பொருளிலும் மாறியிருக்கின்றன. இரண்டு சொற்களுக்கிடையே அர்த்த வேறுபாட்டை உருவாக்குவது 'த்' என்ற ஒரு எழுத்து தான்.

இவ்வாறு மாறிவிட்ட பின்னால்,முன்னர் நேர்மறையான அர்த்தத்தில் தாதா என்று அழைத்து வந்த வார்த்தையை அதே உச்சரிப்பில் அழைக்க முடியாமல் புதிய அர்த்தத்திற்கு ஏற்ப தாத்தா என்ற சொல்லாகவே ஆக்கியிருக்கின்றனர்.

மதுரை பிள்ளையையும் பாண்டித்துரை தேவரையும் இக்காலத்தில்
புகழ வேண்டியிருந்திருக்குமானால் தாதா என்று சொல்லியிருக்க முடியாது.தாதா என்ற அர்த்தத்தையேப,தாத்தா என்றாக்கி அழைப்பதால் யாரும் பிரச்சினையாக பார்த்திருக்க மாட்டார்கள்.

இவ்விடத்தில் தான் அரசியலில் இரட்டைமலை சீனிவாசனையும் புலமையுலகில் உவேசாவையும் தாத்தா என்றழைக்கும் மரபை சந்திக்கிறோம்.

உண்மையில் இவர்கள் தாதாக்களா? தாத்தாக்களா? ஆரம்பத்திலிருந்தே தாத்தா என்று தான் அழைக்கப்பட்டார்களா?

ஏனெனில் இருவருமே தாதா என்ற சொல் நேர்மறை பொருளில் இருந்த காலத்திலேயே வாழ்ந்தவர்கள்.இதன்படி பார்த்தால் இவர்கள் தாதா என்று தான் அழைக்கப்பட்டிருக்க வாய்ப்பிருக்கிறது.

தாதா என்றழைக்கப்பட்டு மொழி மாற்றம் காரணமாக காலப்போக்கில் தாத்தா என்றாகியிருப்பதாகவே தோன்றுகிறது.மேற்கொண்டு ஆராய வேண்டியவை என்றாலும் இவ்வாறும் பார்க்க வேண்டியிருக்கிறது.

தமிழ்த்தாத்தா என்னும் பட்டத்தால் உவேசாவை அழைத்தவர் கல்கி என்று கூறப்படுகிறது.அவர்
தமிழ்த்தாத்தா என்ற பொருளில் -உச்சரிப்பில் தான் குறிப்பிட்டு உள்ளார். ஆனால் இவ்வாறு சிறப்புப் பெயர் சூட்டும் போது கல்கிக்கு தாதா என்ற பெயரும் நினைவுக்கு வந்திருக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

டாக்டர்
சாமிநாதையரவர்கள் சதாபிஷேக வரலாறு என்ற மலரில் 12.2.1935ஆம் நாளில் ஆனந்த விகடன் இதழில் உவேசா பற்றி கல்கி எழுதிய கட்டுரை எடுத்தாளப்பட்டுள்ளது. மூன்று சிறுசிறு பகுதிகளாக எழுதப்பட்டுள்ள அக்கட்டுரையின் தலைப்பு
'தாத்தா -தாதா!'

"மேற்படி பட்டத்திலுள்ள (தாத்தா) இரண்டு 'த்'க்களையும் நீக்கிவிட்டால்,தாங்கள் தமிழ் தாதா ஆகிறீர்கள். நமது நாட்டின் பரம்பரை வழக்கத்தை ஒட்டி அகப்பட்ட நூல்களையெல்லாம் ஒளித்து வைக்காமல் அச்சிட்டு வெளியாக்கிப் பதினாயிரக்காணவர்களுக்குப்
பயன்படும்படி செய்த தங்களை,தமிழ் தாதா என்று சொல்லாமல் வேறு யாரைச் சொல்வது?" என்று கூறிவிட்டு அவ்வாறு அழைப்பது சிலேடை நயத்தால் என்றும் கல்கி கூறியிருக்கிறார்.

ஏதோவொரு வகையில் தலைமையானவரை தாத்தா என்று அழைக்கும் வழக்கம் நிலைபெற்று விட்ட காலத்தில் தான் உவேசாவுக்கு தமிழ்த்தாத்தா பட்டம் வழங்கப்பட்டுள்ளது.எது எவ்வாறு இருப்பினும் தாதாவையும் தாத்தாவையும் இணையாக குறிப்பிடும் நிலை இருந்திருக்கிறது என்பதை கல்கியின் இக்குறிப்பு மூலம் தெரிந்து கொள்கிறோம்.

இவ்வாறு தான் இரட்டைமலை சீனிவாசனுக்கும் நடந்திருக்கிறது. அவருக்கு எக்காலத்திலிருந்து தாத்தா என்ற பெயர் நிலைத்தது என்றுத் தெரியவில்லை.உவேசாவுக்கு போல அப்பெயர் அவருக்கு பட்டமாகவும் வழங்கப்பட்டதாக தெரியவில்லை. பிரிட்டீஷ் அரசிடமிருந்து ராவ்பகதூர் உள்ளிட்ட பட்டங்களையும், உள்ளூரில் திராவிடமணி பட்டத்தையும் பெற்றார். பின்னாளில் ஏதோவொரு தருணத்திலேயே இப்பெயர் தொடர்பு நடந்திருக்கிறது.அவருக்கிருந்த மதிப்புக்கு அவர் தாதா என்றழைக்கப் பட்டிருக்க வேண்டும்.அதுவே பின்னர் தாத்தாவாகியிருக்க வேண்டும் என்றுத் தோன்றுகிறது.

அண்மையில் வீ.வே.முருகேச பாகவதர் எழுதி 1960 ஆம் ஆண்டு வெளியிட்ட தமிழமுதம் நூலில் இரட்டைமலை சீனிவாசன் மேல் பாடப்பட்ட கவிதையை வாசிக்க முடிந்தது.அதன் கடைசி பகுதி கீழ்கண்டவாறு முடிகிறது.

"தாழ்த்தப்பட் டார்பொது வாழிடங்கள் செல்ல /சட்டமன்றுள் போராட்டம் செய்தார் !கீழே /
வீழ்ந்துற்ற தம் மினத்தார் வாழ்வுக் கன்றே /
வித்திட்ட தாதாவை வாழ்த்தி வாழ்வாம்"

இக்கவிதையில் தாதா என்ற சொல் மேலான அர்த்தத்தில் கையாளப்பட்டிருப்பதை பார்க்கிறோம்.உரைநடை தமிழில் இருந்ததோ இல்லையோ 1960 வரை கவிதையில் இச்சொல்
கையாளப்பட்டிருக்கிறது.இரட்டைமலை சீனிவாசனை அவர் உயிரோடு இருந்த போது தாத்தா என்றழைத்ததாக தெரியவில்லை.பின்னாளில் தான் வழங்கப்பட்டிருக்கிறது.இவ்வாறான கவிதையிலிருந்து கூட நீட்சி பெற்று தாத்தாவாதியிருக்கலாம் என்று யூகிக்க தோன்றுகிறது.

எது எப்படியிருப்பினும் தாதா என்ற பெயர் நேர் பொருளில் இருந்தது என்பதும் அதற்கு மாற்றாக தாத்தா வந்தமைந்தது என்பதும் உண்மை.

இதன்படி தாத்தா இரட்டைமலை சீனிவாசனை,தாதா இரட்டைமலை சீனிவாசன் என்று அழைத்தாலும் பொருத்தம் கிடைக்கும் போலிருக்கிறதே.
-Stalin Rajangam

 #ஜெய்பீம்இன்று சகோதரர் இளவரசன்நினைவு தினம்.நீல வணக்கம் செலுத்துவோம்..!!
04/07/2025

#ஜெய்பீம்
இன்று சகோதரர் இளவரசன்
நினைவு தினம்.
நீல வணக்கம் செலுத்துவோம்..!!

Address

Madurai

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pa Ranjith Fans Club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share