PMT MEDIA

PMT MEDIA சமூகத்தில் நடக்கும் உண்மை நிகழ்வுகளை மக்களுக்கு எடுத்து கூறுவோம். மற்றவைகளை மக்கள் முடிவு செய்து கொள்ளட்டும்.

உயிரைக் காக்கும் உன்னத பணி! 🩸ஸ்ரீவைகுண்டம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சகோதரி இசக்கியம்மாள் @ இந்து அவர்களுக்க...
13/05/2026

உயிரைக் காக்கும் உன்னத பணி! 🩸

ஸ்ரீவைகுண்டம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சகோதரி இசக்கியம்மாள் @ இந்து அவர்களுக்கு AB+ இரத்தம் தேவை என்ற தகவல் அறிந்தவுடன்,

PMT கட்சித் தலைவர் உயர்திரு. K. இசக்கிராஜா தேவர் அவர்களின் ஆணைக்கிணங்க, உடனடியாக நேரில் சென்று குருதி தானம் வழங்கிய PMT கட்சி நிர்வாகி "குருதி தான கொடை வள்ளல்" அண்ணன் ஆதி பாண்டியன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

"இரத்த தானம் செய்வோம்... உயிர்களைக் காப்போம்!" 🤝

#சமூகப்பணி #இரத்ததானம் #குருதிதானம்

13/05/2026

சாதிய விவாதத்தை விசிக வன்னியரசு தொடங்கிட்டாரு | விஜய் கவனமா இருக்கனும் | இசக்கி ராஜா தேவர் | PMT



PMT Esakkiraja Chief Minister of Tamil Nadu Actor Vijay

2026 நீட் தேர்வு ரத்து: வீழ்ந்து கிடக்கும் மருத்துவக் கல்வியை மீட்க முதல்வர் ஜோசப் விஜய் அவர்களுக்கும் PMT கட்சி முன்வைக...
13/05/2026

2026 நீட் தேர்வு ரத்து: வீழ்ந்து கிடக்கும் மருத்துவக் கல்வியை மீட்க முதல்வர் ஜோசப் விஜய் அவர்களுக்கும் PMT கட்சி முன்வைக்கும் 'இரட்டை அடுக்கு' தீர்வு வரைவோலை!

"நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்"

ஒரு நோயின் தன்மையையும், அதற்கான காரணத்தையும், அதைத் தீர்க்கும் வழியையும் ஆராய்ந்து செயல்பட வேண்டும் என்கிறார் தெய்வப்புலவர் திருவள்ளுவர். மருத்துவக் கல்விச் சேர்க்கையில் நிலவும் நோயான 'தற்போதைய நீட் தேர்வு முறைக்கு', வெறும் உணர்ச்சிவசப்பட்ட அரசியல் எதிர்ப்பை மட்டும் பதிவு செய்யாமல், முதிர்ச்சியான மாற்றுத் தீர்வை முன்வைக்க வேண்டிய வரலாற்றுச் சூழலில் நாம் இருக்கிறோம்.

மே 3 அன்று நடந்து, தற்போது மத்திய அரசால் ரத்து செய்யப்பட்டுள்ள 2026-ஆம் ஆண்டு நீட் தேர்வில் நடந்த பிரம்மாண்ட முறைகேடுகள், ஒட்டுமொத்த தேசத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. வாட்ஸ்அப் மூலம் முன்கூட்டியே கசிந்த 410 கேள்விகளில், 120 கேள்விகள் அப்படியே தேர்வில் எதிரொலித்துள்ளது அம்பலமாகியுள்ளது. இது மையப்படுத்தப்பட்ட தேர்வு அமைப்பான NTA-வின் நம்பகத்தன்மையைக் கடுமையாகச் சீர்குலைத்துள்ளது. தற்போது உத்தரவிடப்பட்டுள்ள சிபிஐ (CBI) விசாரணை என்பது வெறும் கண்துடைப்பே அன்றி, இது நோய்க்கான நிரந்தரத் தீர்வல்ல.

மாணவர்களின் உளவியல் சிதைவு: உயிரைப் பலிவாங்கும் குரூர அமைப்பு :

இரவு பகலாகப் படித்து, தங்கள் இளமையின் சிறு சிறு மகிழ்ச்சிகளைக் கூடத் தியாகம் செய்து தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களின் கனவுகளை இந்த ஊழல் அமைப்பு சுக்குநூறாக உடைக்கிறது. "பணம் கொடுத்தால் வினாத்தாள் கிடைக்கும்" என்ற யதார்த்தம், பல ஆண்டுகள் நேர்மையாகப் படிக்கும் கிராமப்புற மாணவனின் நெஞ்சில் ஈட்டியை இறக்குகிறது. தேர்வு ரத்து, மறுதேர்வு, நீதிமன்ற வழக்குகள் என நீளும் இந்த நிச்சயமற்ற தன்மை, இளம் பிஞ்சுகளை மீள முடியாத மன அழுத்தத்திற்கும் (Depression), சில நேரங்களில் தற்கொலை போன்ற கொடிய விபரீதங்களுக்கும் தள்ளுகிறது. நீட் தேர்வு என்பது இன்று மாணவர்களின் அறிவைச் சோதிக்கும் களமாக இல்லை; மாறாக, தேசத்தின் எதிர்காலத் தூண்களான நமது பிள்ளைகளின் மனநிலையைச் சிதைத்து, அவர்களின் உயிரைக் குடிக்கும் ஒரு குரூரமான எந்திரமாக மாறிவிட்டது ஒட்டுமொத்த தேசத்திற்கும் பெருத்த அவமானம். எங்கள் பிள்ளைகளின் கண்ணீருக்கும், உடைந்த மனதிற்கும் யார் பதில் சொல்வது?

85% மாநில உரிமை: சட்டப் போராட்டங்களும், வரலாற்றுப் பின்னணியும் மாநில நிதியில் கட்டப்பட்ட மருத்துவக் கல்லூரிகளில் 85% இடங்களை மாநிலங்களே நிரப்பிக்கொள்ளும் உரிமைக்கான போராட்டம் நீண்ட நெடியது.

• நீதிபதி ஏ.கே. ராஜன் கமிட்டி அறிக்கை: நீட் தேர்வு எவ்வாறு கிராமப்புற, ஏழை மற்றும் நடுத்தர மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைத்து, சமூக நீதிக்கு உலை வைக்கிறது என்பதைத் தரவுகளோடு நிரூபித்தது.
• நீதிமன்றத்தின் அன்றைய பார்வையும், இன்றைய யதார்த்தமும்: கடந்த காலங்களில் உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற சட்டப் போராட்டங்களில், "மருத்துவக் கல்வியில் இந்தியா முழுவதும் 'ஒரே தரம்' (Uniform Standard) இருக்க வேண்டும்" என்ற வாதம் முன்வைக்கப்பட்டது. ஆனால், 2026-ன் தற்போதைய சூழல், அந்த நிலைப்பாடுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியத்தை உருவாக்கியுள்ளது.

PMT கட்சி முன்வைக்கும் இரட்டை அடுக்கு மாற்றுத் தீர்வு (The Dual-Track Blueprint)

இந்தச் சட்டச் சிக்கல்களை உடைத்து, மாணவர்களின் மன உளைச்சலைத் தடுத்து அவர்களைக் காக்க, பி.எம்.டி கட்சி முன்வைக்கும் நடைமுறைச் சாத்தியமான "இரட்டை அடுக்குத் தேர்வு முறை"யை மத்திய அரசும், தமிழக அரசும் உடனடியாகப் பரிசீலிக்க வேண்டும்:

1. 85% மாநில இடங்களுக்கு 'மாநில அளவிலான மருத்துவச் சேர்க்கை முறை': மாநில நிதியில் இயங்கும் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 85% இடங்களுக்கு, தேசிய தரநிலைகளுக்கு உட்பட்டு, மாநில அரசுகளுக்கு அதிகப்படியான அதிகாரம் வழங்கப்பட வேண்டும். இதனை 'மாநில அளவிலான மருத்துவத் தகுதித் தேர்வு' அல்லது அறிவியல் பூர்வமான தரநிலைப்படுத்தல் (Normalization) முறையுடன் கூடிய +2 பொதுத்தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மாநில அரசு மேற்கொள்ள வேண்டும்.

2. 15% தேசிய இடங்களுக்கு மட்டும் 'அகில இந்திய தேர்வு': எஞ்சியுள்ள 15% அகில இந்திய ஒதுக்கீடு மற்றும் மத்திய அரசு நிறுவனங்களுக்கு மட்டும், மத்திய அரசு ஒரு தேசிய நுழைவுத் தேர்வை நடத்திக் கொள்ளலாம். இதன் மூலம் இந்தியா முழுவதிலும் உள்ள எந்தவொரு மாணவருக்கும் தமிழகம் போன்ற மாநிலங்களில் படிக்கும் சம வாய்ப்பு உறுதி செய்யப்படுகிறது.

3. 'ஒரே நாடு, ஒரே கட்டணம்' (Uniform Fee Regulation): நீட் தேர்வு தனியார் கட்டணக் கொள்ளையைத் தடுத்துவிட்டது என்பது ஒரு மாயை. குறைந்த மதிப்பெண் எடுத்தாலும் வசதியுள்ள மாணவர்கள் மருத்துவக் கல்வியைப் பெறுவதை நிறுத்த, அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களுக்கான கட்டணத்திற்கு உரிய ஒழுங்குமுறை அமைப்புகள் மூலம் உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட வேண்டும்.

மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு PMT கட்சியின் கோரிக்கை:
• தமிழக முதல்வர் மாண்புமிகு ஜோசப் விஜய் அவர்களுக்கு: தமிழக அரசு இந்த விவகாரத்தில் வெறும் கண்டன அறிக்கைகளோடு நின்றுவிடாமல், நடைமுறைக்குச் சாத்தியமான தீர்வுகளை நோக்கி நகர வேண்டும். மாணவர்களின் உயிரைக் காக்கவும், 2026-ன் குளறுபடிகளை அடிப்படையாகக் கொண்டும், மாநில உரிமையை வலுப்படுத்தும் வகையில் பி.எம்.டி கட்சி முன்மொழியும் இந்த "இரட்டை அடுக்கு முறை" குறித்த புதிய சட்டப் போராட்டத்தை அரசு உடனடியாக முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
• மத்திய அரசுக்கு: அதிகார மையப்படுத்தலைக் குறைத்து, கூட்டாட்சித் தத்துவத்திற்கு மதிப்பளித்து, மாநிலங்களுக்கு அதிகாரப் பரவலை உறுதி செய்யும் சட்ட மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும்.
மாணவர்களின் எதிர்காலம் என்பது அரசியல் பிடிவாதத்தின் போர்க்களமல்ல; அது அறிவார்ந்த கொள்கை மாற்றத்தின் மையமாக இருக்க வேண்டும். உயிர்களைப் பலிகொடுத்து நாம் பெறும் எந்தக் கல்வியும் சிறந்த கல்வி ஆகாது!

இப்படிக்கு
K.N இசக்கி ராஜா தேவர்
தலைவர், PMT கட்சி

மாற்றம் என்ற ஒற்றைச் சொல்லின் வெளிப்பாடு! புதிய முதல்வருக்கு எங்களின் வாழ்த்துகளும், ஆழமான கோரிக்கைகளும்!தமிழக அரசியல் வ...
10/05/2026

மாற்றம் என்ற ஒற்றைச் சொல்லின் வெளிப்பாடு! புதிய முதல்வருக்கு எங்களின் வாழ்த்துகளும், ஆழமான கோரிக்கைகளும்!

தமிழக அரசியல் வரலாற்றில் மக்கள் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளனர். நீண்ட நாட்களாக புதைந்து கிடந்த ‘மாற்றம்’ என்ற விதை, மக்களின் வாக்குகளால் இன்று விருட்சமாகி நிற்கிறது.

குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கும் உலகு
(பொருள்: தன் நாட்டு மக்களை அன்போடு அரவணைத்து, நேர்மையான முறையில் ஆட்சி செய்யும் தலைவனின் அடியை உலகமே போற்றி நிற்கும்.)

இந்தத் திருக்குறளுக்கு ஏற்ப, புதிதாகப் பொறுப்பேற்றுள்ள மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. C. ஜோசப் விஜய் அவர்களுக்கு, நமது முக்குலத்தோர் சமூக மக்களின் சார்பாகவும், பசும்பொன் மக்கள் தேசம் (PMT) கட்சியின் சார்பாகவும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒரு சிறிய கதை...

ஒரு சிற்பி ஒரு பெரிய பாறையை உளியால் தொடர்ந்து செதுக்கிக் கொண்டிருந்தார். 99 முறை கடுமையாக அடித்தும் அந்தப் பாறை உடையவில்லை. ஆனால் 100-வது முறை உளியால் அடித்தவுடன் பாறை இரண்டாகப் பிளந்தது. 100-வது அடியில் தான் பாறை உடைந்தது என்று கூறிவிட முடியாது; அதற்கு முந்தைய 99 அடிகளின் வலியும், சோர்வடையாத உழைப்பும் தான் அந்த மாற்றத்தை சாத்தியமாக்கியது.

அதுபோல தான், பல ஆண்டுகளாக தமிழக மக்கள் ஊழல், ஏற்றத்தாழ்வு, வளங்கள் கொள்ளையடிக்கப்படுதல் என பல்வேறு வலிகளைத் தாங்கி, இன்று ‘மாற்றம்’ என்னும் 100-வது அடியை தேர்தல் மூலமாக கொடுத்துள்ளனர்.

உடைந்த பாறையை வெறும் கல்லாக விடாமல், அதை ஒரு கலைநயமிக்க சிற்பமாக மாற்ற வேண்டிய பொறுப்பு இப்போது புதிய முதலமைச்சரின் கைகளில் உள்ளது.

பசும்பொன் மக்கள் தேசம் (PMT) கட்சியின் நிறுவனர்-தலைவர் என்ற முறையில், நமது மக்களின் உரிமைகளுக்காகவும், நல்வாழ்விற்காகவும் புதிய அரசிடம் நான் முன்வைக்கும் அரசியல் முதிர்ச்சியுடனான முக்கியக் கோரிக்கைகள்:

ஊழலற்ற நேர்மையான நிர்வாகம்:
வெளிப்படைத்தன்மையும் நேர்மையும் மட்டுமே ஒரு மாநிலத்தின் ஆணிவேரை வலுப்படுத்தும். கறைபடியாத கரங்களுக்குச் சொந்தமான நிர்வாகத்தை மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

சாதி, மதப் பேதமற்ற சமத்துவ அரசு:
அனைவரையும் சமமாகப் பாவிக்கும் உண்மையான சமூக நீதியை நிலைநாட்டும் அரணாக இந்த அரசு திகழ வேண்டும்.

கனிமவளக் கொள்ளைக்கு நிரந்தர முற்றுப்புள்ளி:
நமது மண்ணின் இயற்கை வளங்கள் நம் வருங்கால சந்ததியினரின் சொத்து. அவை எக்காரணம் கொண்டும் அரசியல் அல்லது அதிகார பலத்தால் சூறையாடப்படுவதை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும்.

வெறும் தேர்தல் வாக்குறுதிகளாக அல்லாமல், நீங்கள் முன்வைத்த ‘மாற்றத்தை’ முழுமையாக நம்பி வாக்களித்த மக்களின் நம்பிக்கையை எவ்வித சமரசமுமின்றி காப்பாற்றுங்கள். மாற்றம் என்பது மேடைப் பேச்சுகளில் அல்ல, களப்பணியில் நிரூபிக்கப்பட வேண்டும்.

உங்களின் இந்த புதிய அரசியல் பயணம், தமிழகத்தின் பொற்காலமாக அமைய பசும்பொன் மக்கள் தேசம் (PMT) கட்சியின் சார்பாக மீண்டும் ஒருமுறை வாழ்த்துகிறேன்!

இப்படிக்கு,
KN இசக்கி ராஜா தேவர்
நிறுவனர் - தலைவர்
பசும்பொன் மக்கள் தேசம் (PMT) கட்சி

08/05/2026

தாக்குனது அவங்க.. ஆனா கைது செஞ்சது நம்ம ஆட்களையா? ராமச்சந்திராபுரம் விவகாரம் உண்மையை உடைக்கும் PMT

#ராமசந்திராபுரம்_அநீதி #காவல்துறை_ஒருதலைப்பட்சம் ்சி ்கிராஜா #தேவர்_சமூகம் #முக்குலத்தோர் #தென்காசி_விவகாரம் #அப்பாவிகள்_கைது #நீதி_வேண்டும்

Tenkasi District Police District Collector Tenkasi

மாபெரும் கண்டனப் பதிவு: திருச்செந்தூரில் பக்தர்களிடம் பகல் கொள்ளை!திருச்செந்தூரில் இருக்கும் நெருக்கடிக்கு வெளியூர்காரர்...
08/05/2026

மாபெரும் கண்டனப் பதிவு: திருச்செந்தூரில் பக்தர்களிடம் பகல் கொள்ளை!

திருச்செந்தூரில் இருக்கும் நெருக்கடிக்கு வெளியூர்காரர்கள் தெரியாமல் லாட்ஜ் இடத்தில் பார்க்கிங் செய்ததற்காக "வெளியூர்க்காரன் கேட்டைத் தாண்ட முடியாது... பாத்துக்கிடுவோம்..." - மன நிம்மதிக்காகச் சாமி கும்பிட வரும் எளிய மக்களிடம் திருச்செந்தூர் 'பாரத் லாட்ஜ்' ஓனரும் அவரோட ஆட்களும் பேசுன அராஜக வார்த்தைகள் இதெல்லாம்!

பார்க்கிங் போர்டு வைக்கல, கேட்டா பில்லும் தர மாட்டாங்க.. ஆனா வண்டியைத் தடுப்பு வச்சுப் பூட்டி சிறைப்பிடிச்சுக்கிட்டு நியாயமான பார்க்கிங் கட்டணம் கூட கேட்காமல் 500 ரூபாய் குடுன்னு அடியாட்கள் மாதிரி வழிமறிச்சு மிரட்டுறாங்க. கொஞ்சம் நியாயம் கேட்டா, "10 கோடி ரூபாய் கொடுத்து இடத்தை வாங்கியிருக்கேன், என்ன வேணா பண்ணுவேன்" னு அப்பட்டமா திமிரா பேசுறாங்க.

பணம் வச்சிருக்கோம்ங்குற அகம்பாவத்துல வெளியூர்ல இருந்து வர்ற அப்பாவி முருகப் பக்தர்களை மிரட்டிப் பணம் பறிக்கிற இதுக்கு பேரு லாட்ஜ் வியாபாரம் கிடையாது... அப்பட்டமான பகல் கொள்ளை! கட்டாய வசூல்! பில் ரசிது கொடுக்காமல் வசூலிக்கும் ஒவ்வொரு ரூபாயும் அரசை ஏய்க்கும் வரி ஏய்ப்புதான்! இதை வருமான வரித்துறை கவனிக்குமா?

ஒரு கட்சியின் மாவட்ட நிர்வாகிகளுக்கே இந்த நிலைமைன்னா, சாதாரண பாமர பக்தர்களோட நிலைமை என்ன?

சம்பந்தப்பட்ட பாரத் லாட்ஜ் உரிமையாளர் மேலயும், கொலை மிரட்டல் விடுத்த ஊழியர்கள் மேலயும் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் உடனே FIR போட்டுச் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கணும்! இல்லைன்னா வெளியூர்ல இருந்து திருச்செந்தூர் வரும் ஒவ்வொரு பக்தரோட பாதுகாப்பும் பெரும் கேள்விக்குறியாகிடும்!

முருகப் பக்தர்களை அச்சுறுத்தும் இந்த அராஜகத்தை உடனடியாக இரும்புக் கரம் கொண்டு தடுத்து நிறுத்து!
Collector Thoothukudi Thoothukudi District Police Tiruchendur Temple

07/05/2026

திருச்செந்தூரில் சாமி கும்பிட வரும் பக்தர்களிடம் பகல் கொள்ளை! அடியாட்களை மிஞ்சும் அடாவடி லாட்ஜ் ஓனர்!

"வெளியூர்க்காரன் இந்த கேட்டைத் தாண்டிப் போக முடியாது, பாத்துக்கிடுவோம்..." - இது ஏதோ சினிமா ரவுடிகள் பேசும் வசனம் இல்லை. திருச்செந்தூர் 'பாரத் லாட்ஜ்' (Bharath Residency) உரிமையாளர் மற்றும் ஊழியர்கள், வெளியூரில் இருந்து சாமி கும்பிட வரும் எளிய பக்தர்களைப் பார்த்து வீசும் திமிர்ப் பேச்சு!

நடந்தது என்ன?

நேற்று தஞ்சையிலிருந்து திருச்செந்தூருக்கு சாமி தரிசனம் செய்வதற்காக வந்திருந்த பக்தர்கள் சிலர், கோவிலுக்குச் செல்லும் வழியில் இருந்த 'பாரத் லாட்ஜ்' கார் பார்க்கிங் போர்டு அருகே தங்களது காரை நிறுத்திவிட்டுச் சென்றனர். எந்தவொரு கட்டண அறிவிப்புப் பலகையும் அங்கு இல்லை.

சாமி கும்பிட்டுவிட்டு வந்து பார்த்தால், காரை எடுக்க முடியாதபடி தடுப்புகளை வைத்துப் பூட்டி சட்டவிரோதமாகச் சிறைப்பிடித்து வைத்துள்ளனர் விடுதி ஊழியர்கள். காரை எடுக்க வேண்டும் என்றால் ₹500 கொடுக்க வேண்டும் என அராஜகமாக மிரட்டியுள்ளனர்.

கேள்வி கேட்டால் கொலை மிரட்டல்:
"போர்டும் வைக்கல, 500 ரூபாய் கேக்குறீங்க, சரி பரவால்ல முறையான பில் (Bill) கொடுங்க" என்று நியாயம் கேட்டதற்கு, பணத்தைத் தூக்கி மூஞ்சியில் எறிந்துவிட்டு, "வெளியூர்க்காரன் நீ.. இந்த கேட்டைத் தாண்ட முடியாது" என வரவேற்பாளர் (Receptionist) ஒருமையில் வசைபாடி மிரட்டுகிறார்.

அங்கே வந்த லாட்ஜ் ஓனர் (வெள்ளை சட்டை), "நாங்க கார் பார்க்கிங்கே நடத்தல.. 10 கோடி ரூபாய் போட்டு இந்த எடம் வாங்கியிருக்கேன். உன்கிட்ட 1000 ரூபாய் கேட்டிருக்கணும், கேட்காம விட்டுட்டோம்" என்று அப்பட்டமாக பகல் கொள்ளையை நியாயப்படுத்துகிறார். பில்லும் கிடையாது, முறையான பதிலும் கிடையாது. வேறு வழியின்றி, ஊருக்குத் திரும்ப வேண்டும் என்ற கட்டாயத்தில், மிரட்டலுக்குப் பயந்து அவர்கள் கேட்ட 500 ரூபாயை அபராதமாகக் கட்டிவிட்டு காரை மீட்டு வந்துள்ளனர் அந்தப் பக்தர்கள்.

இது தனியார் தங்கும் விடுதியா? அல்லது கட்டப்பஞ்சாயத்து நடத்தும் கூடாரமா? சாமி கும்பிட வரும் வெளியூர் பக்தர்களை, அநாதைகள் என நினைத்து மிரட்டிப் பணம் பறிக்கும் இந்த அராஜகக் கூட்டத்தை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும்!

அப்பட்டமான மோசடி, கட்டாய வசூல் (Extortion) மற்றும் கொலை மிரட்டல் விடுத்த 'பாரத் லாட்ஜ்' உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் மீது காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முறையான அறிவிப்புப் பலகை மற்றும் ரசீது இல்லாமல் கட்டணக் கொள்ளையில் ஈடுபடும் இதுபோன்ற தனியார் விடுதிகள் மீது மாவட்ட ஆட்சியர் மற்றும் நகராட்சி நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்தக் காணொளியை அனைவரும் பகிருங்கள்! திருச்செந்தூர் வரும் ஒவ்வொரு எளிய பக்தரின் பாதுகாப்புக்கும் இது ஒரு எச்சரிக்கை பதிவு!

சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு:

Tamil Nadu Police Collector Thoothukudi Thoothukudi District Police Tiruchendur Temple

05/05/2026

சாத்தூர் மக்கள் அளித்த 11,602 வாக்குகள்! - நெஞ்சார்ந்த நன்றி கூறும் PMT இசக்கி ராஜா தேவர்

| | | | | #சாத்தூர் | #இசக்கிராஜாதேவர் | #2026தேர்தல் #நன்றி

🙏 சாத்தூர் தொகுதி வாக்காளப் பெருமக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்! 🙏பணபலம், அதிகார பலம் மற்றும் சூழ்ச்சிகளைத் தாண்டி, அண்ண...
05/05/2026

🙏 சாத்தூர் தொகுதி வாக்காளப் பெருமக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்! 🙏

பணபலம், அதிகார பலம் மற்றும் சூழ்ச்சிகளைத் தாண்டி, அண்ணன் K.N. இசக்கி ராஜா தேவர் அவர்களின் நேர்மைக்கும் உழைப்பிற்கும் மதிப்பளித்து, 'தென்னந்தோப்பு' சின்னத்திற்கு வாக்களித்த 11,602 ஜனநாயக தெய்வங்களுக்கு எங்கள் சிரம் தாழ்ந்த நன்றிகள்.

நீங்கள் அளித்த இந்த ஒவ்வொரு வாக்கும், உண்மையான மக்கள் பணிக்கான மிகப்பெரிய அங்கீகாரம்! பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் சாத்தூர் மக்களின் பாதுகாவலனாக, உங்கள் உரிமைக்காகத் தொடர்ந்து குரல் கொடுக்கும் முதல் ஆளாக அண்ணன் இசக்கி ராஜா தேவர் என்றும் களத்தில் நிற்பார்.

எங்கள் மீது நீங்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு என்றென்றும் விசுவாசமாக இருப்போம். மக்கள் பணி தொடரும்! ✊

KN இசக்கி ராஜா தேவர்
நிறுவனர் - தலைவர்
பசும்பொன் மக்கள் தேசம் (PMT) கட்சி

சாத்தூர் தொகுதி இறுதி நிலவரம்.
04/05/2026

சாத்தூர் தொகுதி இறுதி நிலவரம்.

Address

Saraswathy Nagar
Nagar
627357

Alerts

Be the first to know and let us send you an email when PMT MEDIA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to PMT MEDIA:

Share