MADS creators

MADS creators Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from MADS creators, News & Media Website, Nagercoil.

01/11/2023

அடுக்குமாடி குடியிருப்பு மின் கட்டணத்தை குறைப்பது தொடர்பாக அரசாணை வெளியீடு.

மின் கட்டண குறைப்பு இன்று அமலுக்கு வரும் நிலையில், தமிழக அரசு அரசாணை வெளியீடு.

அடுக்குமாடி குடியிருப்பு மின் கட்டணம் யூனிட்டுக்கு ரூ.8லிருந்து ரூ.5.50ஆக குறைக்கப்படுகிறது.

23/10/2023

கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறப்பு 1710 கன அடியாக குறைப்பு

கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு இன்று காலை, நீர்வரத்து 2365 கன அடி, உபரிநீர் வெளியேற்றம் 1410 கன அடி

அணையின் முழு கொள்ளளவு 124.80 அடியில் தற்போதைய நீர்மட்டம் 100.04 அடி
---------------
கபிணி அணைக்கு இன்று காலை, நீர்வரத்து 210 கன அடி, நீர்வெளியேற்றம் 300 கன அடி

அணையின் முழு கொள்ளளவு 84.00 அடியில் தற்போதைய நீர்மட்டம் 74.30 அடி

கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபிணி அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் நேற்று 2033 கன அடியாக இருந்த நிலையில் இன்று காலை 1710 கன அடியாக குறைப்பு.

22/10/2023

வேலைவாய்ப்பு
/
வேலை தேடுபவர்களுக்கு குட் நியூஸ்.. 40,000 ஃபிரஷ்ஷர்களை வேலைக்கு எடுக்கவுள்ள டிசிஎஸ் நிறுவனம்..
வேலை தேடுபவர்களுக்கு குட் நியூஸ்.. 40,000 ஃபிரஷ்ஷர்களை வேலைக்கு எடுக்கவுள்ள டிசிஎஸ் நிறுவனம்..
TCS Freshers Recruitment : ஃபிரெஷ்ஷர்களை வேலைக்கு எடுக்கவுள்ளதாக டிசிஎஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
விளம்பரம்

அசத்தலான வேலை வாய்ப்பு.!
ஐடி நிறுவனங்களில் மேற்கொள்ளப்படும் பணிநீக்கம் ஒவ்வொரு கால கட்டத்தில், தொடர்ந்து நடைபெற்று வருகிறது. உலக அளவில் லட்சக்கணக்கான ஊழியர்களுடன் இயங்கி வரும் பல நிறுவனங்களும் கடந்த சில மாதங்களில் கணிசமான எண்ணிக்கையில் ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது. இது கூகுள், அமேசான், மைக்ரோசாப்ட், டிசிஎஸ், விப்ரோ இன்று அனைத்து நிறுவனங்களுமே அடங்கும்.

ஊழியர்கள் தொடர்ந்து பணிநீக்கம் செய்யப்பட்டு வருவது ஒரு பக்கம் பிரச்னையாக இருந்து வரும் நிலையில், மற்றொரு பக்கத்தில் ஃபிரெஷ்ஷர்களை வேலைக்கு எடுப்பதும் குறைந்திருக்கிறது. ஏற்கனவே கேம்பஸ் தேர்வில் வேலைக்கு தேர்வு செய்யப்பட்ட ஃபிரெஷ்ஷர் மாணவர்களுக்கு வேலைக்கான ஆர்டர் வழங்கப்படாமல், பணியில் சேராமல் நிலுவையில் இருக்கிறது என்று ஏகப்பட்ட தகவல் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. இந்த நிலையில் டிசிஎஸ் நிறுவனம் மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

22/10/2023

நேற்று கைது செய்யப்பட்ட திரு.அமர்பிரசாத் ரெட்டி அவர்களின் முதல் தகவல் அறிக்கை இது. இதில் பல்வேறு முரணான தகவல் பதியப்பட்டுள்ளது.விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவின் மாநில தலைவர் என்பதற்கு பதிலாக இளைஞரணி தலைவர் என பதியப்பட்டுள்ளது . இவரின் கைது கொடி கம்பம் குறித்தான வழக்கிற்காக தானே தவிர மற்ற எந்த வழக்கிற்க்காகவும் இல்லை என்பதை தெளிவுப்படுத்துகிறோம்

Address

Nagercoil

Website

Alerts

Be the first to know and let us send you an email when MADS creators posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MADS creators:

Share