Arab Tamil Daily

  • Home
  • Arab Tamil Daily

Arab Tamil Daily Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Arab Tamil Daily, News & Media Website, Kanyakumari, Nagercoil, Tamil Nadu, India, .

www.arabtamildaily.com
|N0.1 Tamil News Updater from Gulf 2,55,000+Followers|

Instagram PAGE
https://instagram.com/arabtamildaily/

Whatsapp CHANNEL
https://whatsapp.com/channel/0029VaAIgiZ1dAw9udibpW3J

Facebook CHANNEL
https://m.me/j/AbbF8ACkR8tXxmwQ/ நமது தளம் கடந்து வந்த பாதை பற்றிய குறிப்பு உங்களின் புரிதலுக்காக.....

அரபு தமிழ் டெய்லி என்ற இந்த செய்த தளம் கடந்த 2013-டிசம்பரில் முதல் முறையா

க "குவைத் தமிழ் பசங்க" என்ற பெயரில் குவைத் நாட்டின் செய்திகளை தமிழில் முக்கியத்துவம் கொடுத்து வழங்கும் முகத்திரை பக்க தளமாக தன்னுடைய பயணத்தை தொடங்கியது. நேர்மையாக செய்திகளை உடனுக்குடன் வழங்கி வரும் நிலையில் பத்து வருடங்களை நெருங்கும் நமது தளம் மக்களின் பெரும் ஆதரவால் இன்று 2,20,000+ உறவுகளுடன் வளைகுடா நாடுகளில் அதிக மக்கள் பின்தொடரும் தமிழ் செய்தி தளமாக தொடர்ந்து "முதலிடத்தில்" இருந்து வருகின்றன.

மக்களின் பெரும் ஆதரவால் "குவைத் தமிழ் பசங்க" என்ற இந்த தளம் தற்போது "அரபு தமிழ் டெய்லி" என்ற பெயரில் வளைகுடா,சிங்கப்பூர் மற்றும் மலேசியா ஆகிய தமிழ் மக்கள் அதிகமாக வசிக்கின்ற நாடுகளின் செய்திகளை வழங்கும் செய்தி தளமாக உருமாற்றம் பெற்று இணைய தளம் மற்றும் மக்கள் தினசரி பயன்படுத்தும் பிரபலமான சமூக ஊடகங்கள் அனைத்தின் வழியாக தற்போதும் செய்திகளை தொடர்ந்து வழங்கி வருகின்றன. நீங்கள் எங்களை இணையம் தளம் மற்றும் அனைத்து சமூக ஊடகங்களில் என்ற பெயரில் பின்தொடரலாம். மேலும் நமது தளத்தில் விளம்பரங்கள் வெளியீட மற்றும் பிற விபரங்களை அறிய "[email protected]" என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளலாம்.

மேலும் வளைகுடா,சிங்கப்பூர், மலேசியா மற்றும் தமிழ் மக்கள் வசிக்கின்ற எங்கும் நடக்கும் தமிழ் மக்கள் சார்ந்த செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பிற தகவல்களை தளத்தின் WhatsApp +91 9486443352 எண்ணுக்கு அனுப்பலாம், அவை தளத்தில் பதிவு செய்யப்படும்.

விதிமுறை:

1) நிகழ்ச்சிகள் என்ற அதன் விபரங்கள் செய்தியாக எழுத்து வடிவில் மற்றும் முக்கியமான ஓரிரு புகைப்படங்களுடன் பொறுப்பாளர் சம்பந்தப்பட்ட அமைப்பில் உங்களுடைய பொறுப்பு மற்றும் பெயர் ஆகியவற்றை இணைத்து அனுப்பலாம். தளத்தில் பதிவு செய்யும் விதத்தில் இருக்கும் அணைத்து செய்திகளும் உடனுக்குடன் பதிவு செய்யப்படும்.

2) தமிழ் மக்கள் சார்ந்த இறப்பு, பாதிப்பு இதுபோன்ற பிற செய்திகள் எதுவாக இருந்தாலும் அதன் தெளிவான விபரங்கள் மற்றும் புகைப்படம் உள்ளிட்டவை இருந்தால் அவற்றையும் மற்றும் அது சம்பந்தபட்ட தகவல்(செய்தி) ஆகியவற்றுடன் அனுப்பும் நபரின் பெயர் மற்றும் தொலைபேசி எண் ஆகியவற்றுடன் அனுப்பினால் பக்கத்தில் பதிவு செய்யப்படும்.

3) வேலை தேடும் உறவுகளுக்காக வேலை வாய்ப்பு செய்திகள் Clint Interview என்றால் மட்டும் தகவலை அனுப்புங்கள் தளத்தில் பதிவு செய்யப்படும் ஏஜென்சி வழியான வேலை வாய்ப்பு செய்திகள் எக்காரணத்தை கொண்டும் தளத்தில் பதிவு செய்யப்பட மாட்டாது.

-Arabtamildaily Team.

கத்தாரில் இருந்தபடி மனைவியின் Cell-ஐ  ஒட்டுகேட்ட டெக்கி கணவர்...கூலிப்படையை ஏவி கும்மாங்குத்து...என்ன பிரச்சனை என்பதை இங...
01/08/2025

கத்தாரில் இருந்தபடி மனைவியின் Cell-ஐ ஒட்டுகேட்ட டெக்கி கணவர்...கூலிப்படையை ஏவி கும்மாங்குத்து...என்ன பிரச்சனை என்பதை இங்கு பார்ப்போம்:

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சுப்பிரமணியபுரம், நான்காவது வீதியில் வசித்து வருபவர் சாமி அய்யா. இவர், கத்தார் நாட்டில் கடந்த 30 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்துள்ளார். வருடத்திற்கு 5 முறை சொந்த ஊருக்கு வந்து சாதி சனத்தை பார்த்து விட்டு செல்வது வழக்கம். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வெளிநாட்டில் இருந்து காரைக்குடிக்கு வந்தவர், சொந்த ஊரான ஆவுடையார் கோவிலில் உள்ள அவரது அம்மாவை பார்க்க சென்று விட்டு திரும்பியுள்ளார். அப்போது, தென்கரை என்ற இடத்தில் வரும்போது இவரது காரை வழி மறித்த திமுக பிரமுகர் சதீஷ் மற்றும் பத்துக்கு மேற்பட்டோர் தாக்கியதோடு, பின்பு அவர்களது காரில் கடத்திச் சென்று ஒரு கிரவுண்ட்டில் வைத்து சாமி அய்யாவின் மனைவி மற்றும் மகனையும் அழைத்து அவர்கள் முன்பு வைத்து தாக்கியுள்ளனர்.

இந்த என்ன பிரச்சனை? என கேட்டபோது, சாமி அய்யா கூறும் தகவல்கள் அதிர்ச்சி அடைய வைக்கின்றன. சாமி அய்யா, கடந்த 30 ஆண்டுகளாக கத்தார் நாட்டில் வேலை பார்த்து வருவதாகவும் திமுகவைச் சேர்ந்த சதீஷ் தனக்கு மகன் முறை என்பதால், தனது வீட்டில் நம்பிக்கையாக சென்று வர அனுமதித்ததாகவும் ஆனால், தனது மனைவியுடன் திருமணத்தை தாண்டிய உறவு வைத்திருப்பதாகவும் குற்றம்சாட்டுகிறார். மேலும், 20 வருடங்களாகவே சதீஷுக்கும் தனது மனைவிக்கும் நட்பு ஏற்பட்டதாகவும் ஆனால், கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்புதான் தனக்கு தெரிய வந்தது என கூறியவர், மனைவியை கண்டித்து வைத்ததாகவும் அதன் பின்பு வெளிநாடு சென்று விட்டு, கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு ஊருக்கு வந்து தூங்கிக் கொண்டிருக்கும்போது, மனைவி, தனது காலில் கட்டையை வைத்து தாக்கியதில் காயமடைந்தாகவும் குற்றம்சாட்டுகிறார்.

மேலும் தான் வெளிநாட்டில் பலபேரை வைத்து தன்னுடைய தொழில் செய்து வருவதாலும், பிள்ளைகளின் நலன் கருதியும் புகார் கொடுக்கவில்லை என கூறும் சாமி அய்யா, மனைவியால் தாக்கப்பட்ட காயம் ஆறியபிறகு மீண்டும் கத்தார் நாட்டுக்கு வேலைக்கு சென்றதாக கூறினார் அதாவது, தனது மனைவியின் செல்ஃபோனில் ஓட்டு கேட்கும் 'ஆப்' ஐ பொருத்தியதாகவும் அதனால், மனைவியும் சதீஷும் பேசும் அத்தனை ஆடியோக்களும் தனக்கு வந்துவிட்டதாகவும் டெக்கி சாமி அய்யா தெரிவித்தார். மனைவியும் சதீஷும் தினந்தோறும் பேசும் அந்தரங்க, ஆபாச பேச்சுகளை எல்லாம் வெளிநாட்டிலிருந்தபடியே எடுத்து வைத்துக்கொண்டதாகக் கூறும் சாமி அய்யா, அதுகுறித்து தனது சொந்த ஊரிலுள்ள பெரியவர்களிடம் கூறி, "இனி பிள்ளைகளுக்காகத்தான் வாழப்போகிறேன். என் மனைவியை டைவர்ஸ் செய்யப்போகிறேன்" என ஊர் பெரியவர்களிடம் பஞ்சாயத்து பேசச் சொன்னதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில்தான், சாமி அய்யாவை தொடர்பு கொண்ட மனைவி மற்றும் அவரது நண்பர் சதீஷ் ஆகியோர் "நீ எப்போ ஊருக்கு திரும்புவ...? ஊருக்கு வா... உன்னை கொலை செய்கிறோம்" என மிரட்டியதாகவும் அதையும் மீறி கடந்த வாரம் காரைக்குடி வந்துவிட்டு, அங்கிருந்து காளையார் கோயில் உள்ள அவரது அம்மாவைப் பார்க்க காரில் சென்று விட்டு திரும்பி வரும்போது தனது மனைவி, சதீஷ் உள்ளிட்டோர் ஏவிய கூலிப்படை தன்னை தாக்கியதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். காரைக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சாமி அய்யா மேலும் கூறும்போது, 30 ஆண்டுகளாக கத்தார் நாட்டில் வேலை பார்த்து, தான் சம்பாதித்த சுமார் 6 கோடி ரூபாய் பணம் மற்றும் 350 சவரன் தங்க நகை, கார் பைக் ஆகியவற்றை சதீஷ், தனது மனைவியுடன் எல்லை தாண்டிய நட்பை ஏற்படுத்திக் கொண்டு ஏமாற்றி வாங்கிக் கொண்டதாகவும் தவறான தகவல்களைக்கூறி தனது பிள்ளைகளையே தனக்கு எதிராக திருப்பி விட்டுவிட்டதாகவும் குற்றம் சாட்டுகிறார்.

மேலும், இடம் வாங்கி தருகிறேன் என 35 லட்ச ரூபாய் பணத்தையும் வாங்கிக் கொண்டு அதையும் தரவில்லை என்றும் தனது உயிருக்கு ஆபத்து உள்ளது என்றும். இந்தியன் எம்பசியில் புகார் அளித்துள்ளதாகவும் அதையும் பொருட்படுத்தாமல் இவர்கள் தன்னை கடத்திச் சென்று தாக்கி உள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். தனது மனைவியுடன் கூடா நட்பில் உள்ள சதீஷ், தான் திமுகவில் உள்ளேன், தன்னை எதுவும் செய்யமுடியாது என மிரட்டுவதாகவும் சாமி அய்யா தெரிவித்ததோடு, முதலமைச்சர் அவர்கள், சதீஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட திமுகவில் பொறுப்பு வகிக்கும் சதீஷை, சாக்கோட்டை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும், சாமி அய்யாவின் மனைவியும் உடந்தையாக இருந்த மகனும் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. சாமி அய்யாவின் மனைவியும் சதிஷும் பேசும் ஆடியோக்களை வெளிநாட்டில் இருந்தபடி, அந்த ஆடியோக்களை எல்லாம் அவர் எப்படி இத்தனை நாட்கள் கேட்டுக்கொண்டிருந்தார் என்பதே ஆச்சர்யமாக உள்ளது. தனது அம்மா மீது தவறு இருந்தும் தனது அப்பாவை அம்மா காலை அடித்து உடைப்பதையும் கூலிப்படையை ஏவி தாக்குதல் நடத்துவதையும் அவரது மகன், மகளும் ஏன் எதிர்க்கவில்லை? தடுக்கவில்லை? தனது அப்பாவின் பக்கம் ஏன் நிற்கவில்லை என்பதும் கேள்விக்குறியாக உள்ளது. அதே நேரத்தில் வேகத்தில் செய்தாலும், மோகத்தில் செய்தாலும் குற்றம் கேடு தரும்.

01/08/2025

துயரம்||😭குவைத்தில் தாயகம் செல்ல இருந்த இந்திய இளைஞர் திடீரென உயிரிழந்தார்

விரிவான செய்தி Comment யில் இணைக்கப்பட்டுள்ளது

குவைத்திலுள்ள முக்கிய அடையாளமான டவர்கள் அதிகாரப்பூர்வமாக அரபு பாரம்பரிய பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன குவைத் நாட்டின் மு...
31/07/2025

குவைத்திலுள்ள முக்கிய அடையாளமான டவர்கள் அதிகாரப்பூர்வமாக அரபு பாரம்பரிய பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன

குவைத் நாட்டின் முக்கிய அடையாளமான டவர்கள்(கோபுரங்கள்) அதிகாரப்பூர்வமாக அரபு பாரம்பரிய பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன என்று புதன்கிழமை பெய்ரூட்டில் நடந்த 9-வது அரபு கட்டிடக்கலை மற்றும் நகர்ப்புற பாரம்பரிய ஆய்வக பிராந்திய மன்ற பொதுக்கூட்டத்தின் முடிவில் அறிவித்தனர்.

நாட்டின் முக்கிய அடையாளமான இந்த கோபுரங்கள் நவீன கட்டிடக்கலை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளன. குவைத்தின்
National Council for Culture, Arts and Literature(NCCAL) துறையானது கோபுரங்களை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கலாச்சார சொத்துக்களாக பரிந்துரைத்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த ஆண்டு அரபு பாரம்பரிய பட்டியலில் சேர்க்கப்பட்ட மொத்த முக்கிய இடங்களின் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது.

உடன் வேலை செய்த நண்பரின் துரோகம்;நாளை சவுதிக்கு செல்ல இருந்தவர் மயிரிழையில் தப்பித்து கொண்ட அதிசயம் நிகழ்ந்துள்ளது:கேரளா...
31/07/2025

உடன் வேலை செய்த நண்பரின் துரோகம்;நாளை சவுதிக்கு செல்ல இருந்தவர் மயிரிழையில் தப்பித்து கொண்ட அதிசயம் நிகழ்ந்துள்ளது:

கேரளா மாநிலம் கண்ணூரை சேர்ந்தவர் விடுமுறை முடித்து நாளை(01/8/25) வெள்ளிக்கிழமை சவுதிக்கு செல்ல இருந்த நிலையில் மற்றொரு நண்பனுக்காக எடுத்துச் செல்ல பக்கத்து வீட்டுக்காரர் கொடுத்த ஊறுகாய் பாட்டிலில் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்ட அதிர்ச்சி செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கண்ணூர் சக்கரக்கல், கனயனூர், இரிவேரியில் உள்ள மிதிலாஜ் என்பவருடைய வீட்டில் பக்கத்து வீட்டுக்காரர் கொடுத்த ஊறுகாய் பாட்டிலில் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. ஊறுகாய் பாட்டிலில் எம்.டி.எம்.ஏ மற்றும் ஹாஷிஷ் சிறிய சிறிய பொட்டலங்களாக கட்டி மறைத்து வைக்கப்பட்டிருந்தன. இந்த சம்பவம் தொடர்பாக சக்கரக்கல் போலீசார் மூன்று பேரை கைது செய்தனர்.

ஜிசின் என்பவர் ஊறுகாய் பாட்டிலை மிதிலாஜின் வீட்டிற்கு கொண்டு வந்து நேற்று இரவு வழங்கியதாக கூறப்படுகிறது. அவர் நாளை சவுதி அரேபியா செல்கிறார். ஊறுகாய் பாட்டில் மிதிலாஜுடன் பணிபுரியும் ஒருவருக்கு வழங்குமாறு சொல்லி ஒப்படைக்கப்பட்டது. ஊறுகாய் பாட்டிலில் சீல் இல்லாததால் குடும்ப உறுப்பினரான மிதிலாஜின் மாமனாருக்கு
சந்தேகம் ஏற்டடடது. பின்னர் ஊறுகாயை வேறொரு பாட்டிலுக்கு கொஞ்சம் கொஞ்சமாக மாற்றியபோது, போதைப்பொருள் சிறிய சிறிய பிளாஸ்டிக் கவரில் மறைத்து வைக்கப்பட்டிருப்பதைக் கண்டறிந்தனர். சந்தேகமடைந்த குடும்பத்தினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் வந்து பரிசோதித்தபோது, அதில் எம்.டி.எம்.ஏ 2.6 கிராமும், 3.4 கிராம் ஹாஷிஷும் இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக சக்கரக்கல்லைச் சேர்ந்த அர்ஷத்(31), ஸ்ரீலால்(24) மற்றும் ஜிசின் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் போதை பொருள் குறைந்த அளவில் இருந்ததால் மிதிலாஜினை வேண்டுமென்றே சிக்க வைக்க இப்படி செய்தார்களா என்பது உள்ளிட்ட கோணங்களில் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

எப்போதும் சொல்வது தான் வளைகுடா செல்லும் போதும் திரும்ப ஊருக்கு வரும் போதும் எப்படிப்பட்ட எவ்வளவு நெருக்கமான தெரிந்த நபராக இருந்தாலும் எதாவது பொருட்களை உங்களிடம் தந்து விடுவதாக கூறினால் எதாவது காரணத்தை கூறி எடுத்து செல்வதை தவிர்த்து விடுங்கள் அல்லது எடுத்து செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுமாயின், அதை உங்களிடம் கொடுக்கும் நபர் பார்சல் செய்து தந்தால் கண்டிப்பாக அந்த பார்சலை பிரித்து ஒருமுறைக்கு இருமுறை நன்றாக சோதனை செய்து பாருங்கள்.

அதிஷ்டவசமாக அந்த போதை பொருள் வீட்டிலே வைத்து கண்டு பிடிக்கப்பட்ட காரணத்தால் அவர் தப்பித்து கொண்டார், சவுதி விமான நிலையத்தில் சிக்கி இருந்தால் வாழ்க்கை அவ்வளவு தான், அவர் எப்படி தான் தவறு செய்யவில்லை என்பதை நிருபிக்க முடியும். இது முதல் முறையல்ல இப்படிப்பட்ட பல சம்பவங்கள் தொடர்ந்து நடக்கின்றன. சில வருடங்களுக்கு முன்னர் கூட நமது தமிழ் நண்பர் ஒருவருக்கு அவருடன் வேலை செய்கின்ற மற்றொருவர் ஊரில் இருந்து வளைகுடா எடுத்து செல்ல கொடுத்த மிச்சர் பாக்கெட்டில் கஞ்சா மறைத்து வைத்திருந்த வீடியோ நமது தளத்தில் பதிவு செய்திருந்தோம் நினைவிருக்கலாம்.

சவுதியில் 360 டிக்கிரி மின்சார ஊஞ்சல் முறிந்து விழுந்த விபத்தில் 23 பேர் வரையில் படுகாயமடைந்தனர்:சிலரது நிலை கவலைக்கிடம்...
31/07/2025

சவுதியில் 360 டிக்கிரி மின்சார ஊஞ்சல் முறிந்து விழுந்த விபத்தில் 23 பேர் வரையில் படுகாயமடைந்தனர்:

சிலரது நிலை கவலைக்கிடம்.......

சவுதி அரேபியாவில் தாயிஃப் அருகே ஹடா பகுதியில் உள்ள கிரீன் மவுண்டன் பூங்காவில் நேற்று(30/07/25) இரவு ஏற்பட்ட இந்த பயங்கரமான விபத்தில் 23 பேர் படுகாயம், இதில் 3 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூடுதல் தகவலும் வெளியாகியுள்ளது.

விபத்தின் வீடியோ Link Comment யில் இணைக்கப்பட்டுள்ளது.

31/07/2025

சவுதியில் 360 டிக்கிரி மின்சார ஊஞ்சல் முறிந்து விழுந்த விபத்தில் 23 பேர் வரையில் படுகாயமடைந்தனர்:

சிலரது நிலை கவலைக்கிடம்.......

சவுதி அரேபியாவில் தாயிஃப் அருகே ஹடா பகுதியில் உள்ள கிரீன் மவுண்டன் பூங்காவில் நேற்று(30/07/25) இரவு ஏற்பட்ட இந்த பயங்கரமான விபத்தில் 23 பேர் படுகாயம், இதில் 3 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூடுதல் தகவலும் வெளியாகியுள்ளது.

குவைத் தினாரின் மதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு உயர்வு,இந்தியர்கள் வீட்டுக்கு பணத்தை அனுப்ப தகுந்த நேரம்:இந்திய ரூபாயின் ...
31/07/2025

குவைத் தினாரின் மதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு உயர்வு,இந்தியர்கள் வீட்டுக்கு பணத்தை அனுப்ப தகுந்த நேரம்:

இந்திய ரூபாயின் மதிப்பில் ஏற்பட்ட கடுமையான சரிவைத் தொடர்ந்து, குவைத் தினாருக்கு இணையான இந்திய ரூபாயின் பணப்பரிமாற்ற(Exchange Rate) விகிதம் கடந்த(30/07/25) தினம் இதுவரையில் இல்லாத அளவுக்கு கடுமையாக உயர்ந்துள்ளது. நேற்று ஆன்லைன் பணப்பரிமாற்ற விகிதம் ஒரு குவைத் தினாருக்கு ரூ.286.46 க்கு மேல் இருந்தது.

அமெரிக்க ஏற்றுமதிகளுக்கு அதிக வரிகளை விதிக்கும் சாத்தியக்கூறு குறித்த கவலையே இந்த ரூபாயின் மதிப்பு சரிவுக்கு முக்கிய காரணம். உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வும் இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையான சரிவை சந்திக்க காரணமாக அமைந்ததாக பொருளாதார வல்லுநர்களும் மதிப்பிடுகின்றனர்.

இதையடுத்து இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி குவைத்திலுள்ள இந்திய சமூகத்தினர் பெரும்பாலானவர்கள் நேற்றைய தினம் பணத்தை வீட்டிற்கு அனுப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்றைய தினமும் இதே மதிப்பு தொடர்கிறது பணம் கைவசம் உள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்

குவைத்தில் நிலவும் கடுமையான வெப்ப அலை மற்றும் புழுதி புயல் வெள்ளிக்கிழமை வரை தொடரும் என்று பிரபல வானிலையாளர் அறிவிப்பு:க...
30/07/2025

குவைத்தில் நிலவும் கடுமையான வெப்ப அலை மற்றும் புழுதி புயல் வெள்ளிக்கிழமை வரை தொடரும் என்று பிரபல வானிலையாளர் அறிவிப்பு:

குவைத்தில் தற்போது நிலவி வருகின்ற வெப்ப அலைகள் மற்றும் புழுதி புயல்கள் தொடரும் எனவும், இதன் தாக்கம் குறிப்பாக திறந்த பகுதிகளில் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வுத்துறையின் இயக்குனர் தரார் அல்-அலி இன்று(30/07/25) தெரிவித்தார். இந்த நிலைமை நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை வரை தொடரும் எனவும் அவர் அறிவித்தார். வெள்ளிக்கிழமை காற்றின் வேகம் படிப்படியாகக் குறைந்து வானிலை மேம்படும் என்று அல்-அலி கூறினார்.

அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இன்று முதல் வெள்ளிக்கிழமை வரை, பகலில் மிகக் கடுமையான வெப்பமாகவும், இரவில் வெப்பமாகவும் இருக்கும். மாலையில் புழுதி புயல்கள் படிப்படியாக அதிகரிக்கும் என்று அவர் கூறினார். இந்த நாட்களில் நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை 48 முதல் 51 டிகிரி வரை இருக்கும் என்றும், இரவில் குறைந்தபட்ச வெப்பநிலை 34 முதல் 36 டிகிரி வரை இருக்கும் என்றும் அவர் கூறினார்..

குவைத்தில் சிவில் ஐடியில் உங்களுடைய புதிய புகைப்படத்தை ஆன்லைன் வழியாக மாற்றும் வசதி இன்று அறிமுகம் செய்யபட்டன:குவைத்தில்...
30/07/2025

குவைத்தில் சிவில் ஐடியில் உங்களுடைய புதிய புகைப்படத்தை ஆன்லைன் வழியாக மாற்றும் வசதி இன்று அறிமுகம் செய்யபட்டன:

குவைத்தில் சிவில் ஐடி அட்டையில் உள்ள உங்களுடைய தனிப்பட்ட புகைப்படங்களைச் சேர்ப்பதும் புதுப்பிப்பதும் இப்போது ஒரே கிளிக்கில் செய்யலாம். சிவில் தகவலுக்கான பொது ஆணையம்(PACI) அறிமுகப்படுத்திய புதிய மின்னணு சேவையின் உதவியுடன், குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினரான நாமும் அரசு அலுவலகங்களுக்குச் செல்லாமல் இந்த புதிதாக அறிமுகம் செய்யபட்ட சேவை வசதியை பயன்படுத்தலாம்.

இந்த சேவை குவைத்தின் அதிகாரப்பூர்வ மொபைல் செயலியான ‘சஹேல்’ மூலம் வழங்கப்படுகிறது. இந்த புதிய ஆன்லைன் வசதியின் நோக்கம் நடைமுறைகளை எளிதாக்குவதும் மற்றும் சேவையின் வேகத்தை அதிகரிப்பதும் ஆகும். சிவில் ஐடியில் உங்களுடைய புதிய புகைப்படத்தை ஆன்லைன் வழியாக மாற்றுவதற்கான விண்ணப்பத்தை நான்கு படிகளில் சமர்ப்பிக்க வேண்டும். இதற்காக நீங்கள் உங்கள் கைபேசியில் உள்ள ‘சஹேல்’ செயலை Open செய்து உள்நுழையவும்

1.Log in to the "Sahel" app and select "Personal Services"
(சஹேல் செயலியை Login செய்து “Personal Services” பிரிவைத் தேர்ந்தெடுக்கவும்)

2.Choose the option to add or update a profile photo.
(புகைப்பட புதுப்பிப்பு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்)

3.Upload the required documents, Including a recent personal photograph and a copy of the Civil ID.
(கேட்கப்படும் ஆவணங்களைப் பதிவேற்றவும்,புதிய புகைப்படம் மற்றும் உங்களின் தற்போதைய சிவில் ஐடியின் நகலை இணைக்கவும்)

4. Submit the application and receive a transaction number for tracking.
(விண்ணப்பத்தைச் சமர்ப்பித்து tracking எண்ணைப் பெறுங்கள்)

பயனர்களால் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் அவர்களின் தகுதியின் அடிப்படையில் மதிப்பாய்வு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்படும் அல்லது நிராகரிக்கப்படும் என்றும், அதன் முடிவு பின்னர் PACI யின் குறுந்தகவல் வசதி வழியாக உங்களுக்கு அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. இதன் தெளிவான விளக்க படம் first Comment யில் இணைக்கப்பட்டுள்ளது.

 || ஏமன் சிறையில் உள்ள நிமிஷா பிரியாவின் மரண தண்டனையை ரத்து செய்ய பாதிக்கப்பட்ட நபரின் குடும்பத்தினர் ஒப்புதல் அளித்ததாக...
28/07/2025

|| ஏமன் சிறையில் உள்ள நிமிஷா பிரியாவின் மரண தண்டனையை ரத்து செய்ய பாதிக்கப்பட்ட நபரின் குடும்பத்தினர் ஒப்புதல் அளித்ததாக செய்தி வெளியாகியுள்ளது:

ஏமன் நாட்டு குடிமகன் தலால் அப்தோ மஹ்தி எனும் நபரை கொலை செய்த வழக்கில் கேரளாவை சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு ஏமன் நாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட வழக்கில், கேரளாவைச் சேர்ந்த மத போதகர் காந்தபுரம் அபூபக்கர் முஸ்லியார் தலையீடு நடத்தி நிமிஷா பிரியாவை காப்பாற்ற ஏமனில் உள்ள பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் தொடந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட நபரின் குடும்பத்தினர் மரண தண்டனையை ரத்து செய்ய ஒப்புதல் அளித்ததாக காந்தபுரம் அபூபக்கர் முஸ்லியார் அவர்களின் அலுவலகம் அதிகாரப்பூர்வமாக சற்றுமுன் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இரத்தபணம் தொடர்பாக நடத்தப்பட்ட மற்ற விஷயங்களின் கூடுதல் விபரங்கள் வெளியாகவில்லை.

இதற்கிடையே இந்த அறிவிப்பு வெளியான பிறகு மத்திய அரசு இதுவரை இந்த விஷயத்தில் அதிகாரப்பூர்வமான எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை, அரசுமுறை உத்தரவு அதிகாரப்பூர்வமாக ஏமான் அரசிடமிருந்து இந்திய அரசுக்கு கைமாற்றம் செய்த பிறகு அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் இனிமேல் மரணதண்டனை நிறைவேற்றப்படாது என்பது உறுதியாகியுள்ளது:

ஆனால் குடும்பத்தினர் மன்னிப்புக்கு ஒப்புதல் அளித்துள்ள அதே நேரம் இரத்தபணம் பெற்று விடுதலைக்கு வழிவகை செய்யுமா....?? அல்லது ஆயுள்காலம் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டுமா ...??? என்பது உள்ளிட்ட கூடுதல் விபரங்கள் இனிவரும் நாட்களில் தெரியவரும்.

தீர்ப்பு என்றால் இது அல்லவா;பணிப்பெண் கொலையில் குவைத்தி தம்பதிகளுக்கு குவைத் நீதிமன்றம் இன்று மரணதண்டனை விதித்தது:குவைத்...
28/07/2025

தீர்ப்பு என்றால் இது அல்லவா;பணிப்பெண் கொலையில் குவைத்தி தம்பதிகளுக்கு குவைத் நீதிமன்றம் இன்று மரணதண்டனை விதித்தது:

குவைத்தில் வீட்டு வேலைக்காரியை கொடூரமாக கொலை செய்ததற்காக குவைத் குடிமகனுக்கும் அவரது மனைவிக்கும் குற்றவியல் நீதிமன்றம் இன்று(28/07/25) திங்கட்கிழமை மரண தண்டனை விதித்துள்ளது. பணிப்பெண்ணை உடல் ரீதியாகத் தாக்கி கொலை செய்தல், சட்டவிரோதமாக தடுத்து வைத்தல், மருத்துவ உதவியை வழங்க மறுத்தல் மற்றும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் அவளை வேலை செய்ய கட்டாயப்படுத்துதல் ஆகிய குற்றச்சாட்டுகள் இவர்கள் இருவரின் மீதும் அரசு வழக்கறிஞர் சுமத்தியிருந்தார்.

முன்னதாக, பிலிப்பைன்ஸ் பணிப்பெண்ணைக் கொலை செய்த குற்றச்சாட்டில், தம்பதியரை 21 நாட்கள் காவலில் வைக்க பொது வழக்கறிஞர் உத்தரவிட்டிருந்தார். பின்னர் இருவரும் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டு, மரண தண்டனை கிடைக்க காரணமான முன்கூட்டியே திட்டமிட்டு கொலை செய்ததாக குற்றம் இருவர் மீது சுமத்தப்பட்டு, அது ஆதாரங்களின் அடிபடையில் நிருபணம் ஆனதாக செய்தி வெளியாகியுள்ளது.

இந்த வழக்கில், குற்றவாளி இருவரும் பணிப்பெண்ணை வேண்டுமென்றே மீண்டும் மீண்டும் அடித்ததாகவும், இறுதியில் அவளின் மரணத்திற்கு இந்த மனிதாபிமானமற்ற கொடூரமான தாக்குதல் வழிவகுத்ததாகவும் கூறி, அதிகபட்ச தண்டனையான மரணதண்டனை வழங்க அரசு தரப்பு கோரியது குறிப்பிடத்தக்கது.

Address

Kanyakumari, Nagercoil, Tamil Nadu, India

629001

Alerts

Be the first to know and let us send you an email when Arab Tamil Daily posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Arab Tamil Daily:

  • Want your business to be the top-listed Media Company?

Share

About Kuwait tamil pasanga

உறவுகள் கவனத்திற்கு...... எங்களுக்கு அதிகாரபூர்வமாக இந்த முகத்திரை பக்கம்(page) மட்டுமே. எங்களுக்கு வேறு எந்த விதமான முகத்திரை பக்கமோ(page), முகத்திரை குழுமமோ(Facebook group), வாட்சப் குழுமமோ(Whats app group) இல்லை. நன்றி.... ஏமாறாதீர்கள்..... ஏமாற்றாதீர்கள்...... Regards, Kuwait Tamil Pasanga Team.