Arab Tamil Daily

Arab Tamil Daily Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Arab Tamil Daily, News & Media Website, Kanyakumari, Nagercoil.

www.arabtamildaily.com
|N0.1 Tamil News Updater from Gulf 2,40,000+Followers|

Instagram PAGE
https://instagram.com/arabtamildaily/

Whatsapp CHANNEL
https://whatsapp.com/channel/0029VaAIgiZ1dAw9udibpW3J

Facebook CHANNEL
https://m.me/j/AbbF8ACkR8tXxmwQ/ நமது தளம் கடந்து வந்த பாதை பற்றிய குறிப்பு உங்களின் புரிதலுக்காக.....

அரபு தமிழ் டெய்லி என்ற இந்த செய்த தளம் கடந்த 2013-டிசம்பரில் முதல் முறையா

க "குவைத் தமிழ் பசங்க" என்ற பெயரில் குவைத் நாட்டின் செய்திகளை தமிழில் முக்கியத்துவம் கொடுத்து வழங்கும் முகத்திரை பக்க தளமாக தன்னுடைய பயணத்தை தொடங்கியது. நேர்மையாக செய்திகளை உடனுக்குடன் வழங்கி வரும் நிலையில் பத்து வருடங்களை நெருங்கும் நமது தளம் மக்களின் பெரும் ஆதரவால் இன்று 2,20,000+ உறவுகளுடன் வளைகுடா நாடுகளில் அதிக மக்கள் பின்தொடரும் தமிழ் செய்தி தளமாக தொடர்ந்து "முதலிடத்தில்" இருந்து வருகின்றன.

மக்களின் பெரும் ஆதரவால் "குவைத் தமிழ் பசங்க" என்ற இந்த தளம் தற்போது "அரபு தமிழ் டெய்லி" என்ற பெயரில் வளைகுடா,சிங்கப்பூர் மற்றும் மலேசியா ஆகிய தமிழ் மக்கள் அதிகமாக வசிக்கின்ற நாடுகளின் செய்திகளை வழங்கும் செய்தி தளமாக உருமாற்றம் பெற்று இணைய தளம் மற்றும் மக்கள் தினசரி பயன்படுத்தும் பிரபலமான சமூக ஊடகங்கள் அனைத்தின் வழியாக தற்போதும் செய்திகளை தொடர்ந்து வழங்கி வருகின்றன. நீங்கள் எங்களை இணையம் தளம் மற்றும் அனைத்து சமூக ஊடகங்களில் என்ற பெயரில் பின்தொடரலாம். மேலும் நமது தளத்தில் விளம்பரங்கள் வெளியீட மற்றும் பிற விபரங்களை அறிய "[email protected]" என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளலாம்.

மேலும் வளைகுடா,சிங்கப்பூர், மலேசியா மற்றும் தமிழ் மக்கள் வசிக்கின்ற எங்கும் நடக்கும் தமிழ் மக்கள் சார்ந்த செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பிற தகவல்களை தளத்தின் WhatsApp +91 9486443352 எண்ணுக்கு அனுப்பலாம், அவை தளத்தில் பதிவு செய்யப்படும்.

விதிமுறை:

1) நிகழ்ச்சிகள் என்ற அதன் விபரங்கள் செய்தியாக எழுத்து வடிவில் மற்றும் முக்கியமான ஓரிரு புகைப்படங்களுடன் பொறுப்பாளர் சம்பந்தப்பட்ட அமைப்பில் உங்களுடைய பொறுப்பு மற்றும் பெயர் ஆகியவற்றை இணைத்து அனுப்பலாம். தளத்தில் பதிவு செய்யும் விதத்தில் இருக்கும் அணைத்து செய்திகளும் உடனுக்குடன் பதிவு செய்யப்படும்.

2) தமிழ் மக்கள் சார்ந்த இறப்பு, பாதிப்பு இதுபோன்ற பிற செய்திகள் எதுவாக இருந்தாலும் அதன் தெளிவான விபரங்கள் மற்றும் புகைப்படம் உள்ளிட்டவை இருந்தால் அவற்றையும் மற்றும் அது சம்பந்தபட்ட தகவல்(செய்தி) ஆகியவற்றுடன் அனுப்பும் நபரின் பெயர் மற்றும் தொலைபேசி எண் ஆகியவற்றுடன் அனுப்பினால் பக்கத்தில் பதிவு செய்யப்படும்.

3) வேலை தேடும் உறவுகளுக்காக வேலை வாய்ப்பு செய்திகள் Clint Interview என்றால் மட்டும் தகவலை அனுப்புங்கள் தளத்தில் பதிவு செய்யப்படும் ஏஜென்சி வழியான வேலை வாய்ப்பு செய்திகள் எக்காரணத்தை கொண்டும் தளத்தில் பதிவு செய்யப்பட மாட்டாது.

-Arabtamildaily Team.

அமீரகம் குழந்தையை கொன்றுவிட்டு தாய் தற்கொலை செய்த துயரமான செய்தி தற்போது வெளியாகியுள்ளது:
10/07/2025

அமீரகம் குழந்தையை கொன்றுவிட்டு தாய் தற்கொலை செய்த துயரமான செய்தி தற்போது வெளியாகியுள்ளது:

அமீரகத்தின் அபுதாபி எமிரேட்டில் இந்தியாவை சேர்ந்த இளம் பெண் ஒருவர் தன்னுடைய ஒன்றரை வயது குழந்தையை கொன்றுவிட்...

குவைத்தில் கடந்த 60 நாட்களில் குடியிருப்பு மற்றும் தொழிலாளர் சட்டங்களை மீறியதற்காக 6,300 வெளிநாட்டினர் நாடு கடத்தப்பட்டன...
10/07/2025

குவைத்தில் கடந்த 60 நாட்களில் குடியிருப்பு மற்றும் தொழிலாளர் சட்டங்களை மீறியதற்காக 6,300 வெளிநாட்டினர் நாடு கடத்தப்பட்டனர்:

குவைத்திலிருந்து கடந்த இரண்டு மாதங்களில் குடியிருப்பு மற்றும் தொழிலாளர் சட்டங்களை மீறியதற்காக சுமார் 6,300 வெளிநாட்டினர் நாடு கடத்தப்பட்டதாக உள்துறை அமைச்சகத்தை மேற்கோள் காட்டி தினசரி செய்தித்தாள் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. மே மற்றும் ஜூன் மாதங்களில் இவ்வளவு பேரின் நாடுகடத்தல் செயல்முறை நிறைவு செய்யப்பட்டதாக உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள நாடுகடத்தல் துறை அறிவித்துள்ளது.

குடியிருப்பு மற்றும் தொழிலாளர் சட்டங்களை மீறிய மற்றும் நீதிமன்ற தீர்ப்புகளுக்கு உட்பட்ட வெளிநாட்டினரை விரைவாக அவர்களுடைய சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்புவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சகம் மேலும் விளக்கம் அளித்துள்ளது. நாட்டில் வேலைக்காக வந்து குடியிருப்பு மற்றும் தொழிலாளர் சட்டங்களை மீறிய மற்றும் நீதிமன்ற தீர்ப்புகளுக்கு உட்பட்ட வெளிநாட்டினர் நாடுகடத்தல் மையங்களுக்கு அனுப்பப்படுகிறார்கள், இதில் நாடு முழுவதும் பாதுகாப்பு சோதனைகளின் போது பிடிபட்ட சட்டவிரோத தொழிலாளர்களும் அடங்குவர்.

மேலும் வெளியிட்டுள்ள செய்தியில் நாடுகடத்தல் செயல்முறை முடியும் வரை தற்காலிகமாக நாடுகடத்தல் மையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் அனைத்து தேவைகளையும் மனிதாபிமான அடிபடையில் உறுதி செய்வது வருவதாக நாடுகடத்தல் துறை வட்டாரங்கள் உறுதிப்படுத்தின.

ஷார்ஜாவில் மகளைக் கொன்று இந்தியாவை சேர்ந்த இளம் பெண் தற்கொலை செய்ததாக செய்தி வெளியாகியுள்ளது:ஷார்ஜாவில் இந்தியா,கேரளா மா...
10/07/2025

ஷார்ஜாவில் மகளைக் கொன்று இந்தியாவை சேர்ந்த இளம் பெண் தற்கொலை செய்ததாக செய்தி வெளியாகியுள்ளது:

ஷார்ஜாவில் இந்தியா,கேரளா மாநிலத்தை சேர்ந்த இளம் பெண்ணும் அவரது ஒன்றரை வயது மகளும் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டனர்.கொல்லம் மாவட்டத்தில் உள்ள கேரளபுரத்தைச் சேர்ந்த நிதீஷ் என்பவருடைய மனைவி விபஞ்சிகா(33) மற்றும் அவருடைய குழந்தை வைபவியுமே சடலமாக மீட்கப்பட்டனர். முதல்கட்ட அறிக்கைப்படி தற்கொலை செய்த கயிற்றை போட்டு முதலில் ஒரு முனையில் குழந்தையை தொங்க விட்ட பிறகு மறுமுனையில் விபஞ்சிகா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக சந்தேகிக்கப்படுவதாக,பெண்ணின் கழுத்தில் தற்கொலைக்கான தெளிவான அறிகுறிகள் காணப்பட்டதாகக் சம்பவ இடத்தைப் பரிசோதித்த மருத்துவர் கூறினார்.

குழந்தையின் மரணத்திற்கு தாயே காரணம் என்பது ஆரம்ப கட்ட தடயங்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை மதியம் ஷார்ஜாவின் அல் நஹ்தாவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் நடந்தது. துபாயில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தின் மனிதவளத்துறையில் பணிபுரியும் விபஞ்சிகாவும், துபாயில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வசதி வாரிய பொறியாளரான நிதிஷுக்கும் இடையே கடந்த சிறிது காலமாக நல்லுறவில் இல்லை எனவும், இருவரும் தனித்தனி இடங்களில் வசித்து வந்தனர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

வரதட்சணை கேட்டு விபாஞ்சிகாவை நிதிஷ் தொடர்ந்து மனரீதியாக துன்புறுத்தி வந்ததாகவும், விவாகரத்து பெற அழுத்தம் கொடுத்ததாகவும் அவர்களது உறவினர்கள் தெரிவித்தனர். இருப்பினும், விபாஞ்சிகாவுக்கு விவாகரத்து
செய்வதில் ஆர்வம் இல்லை. விவாகரத்து செய்தால் உயிருடன் வாழ மாட்டேன் என்று அந்தப் பெண் தனது வேலைக்காரியிடமும் தாயிடமும் கூறி வந்தாள். விவாகரத்து தொடர்பாக விபாஞ்சிகாவுக்கு வழக்கறிஞரின் நோட்டீஸ் நேற்று பிற்பகுதியில் வந்ததாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, அந்தப் பெண் தனது மகளைக் கொன்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக நம்பப்படுகிறது.

மரணம் குறித்து மேலும் விசாரணை நடத்த அமீரக அதிகாரிகளிடம் கேட்போம் என்று உறவினர்கள் தெரிவித்தனர். பணிப்பெண் வந்து நீண்ட நேரமாக அழைத்தும் கதவு உட்பட்கமாக பூட்டப்பட்டு இருந்ததால் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்த பிறகு, அவசரகாலப் மீட்பு குழுவினர் மற்றும் காவல்துறை உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்தனர். பெண்ணின் உடல் மதியம் 2 மணியளவில் மருத்துவமனைக்கும், பின்னர் பிரேத பரிசோதனைக்காக தடயவியல் ஆய்வகத்திற்கும் மாற்றப்பட்டது. இந்த சம்பவம் குறித்து அல் புஹைரா போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

10/07/2025

சவுதியில் ஓட்டுநரின் கட்டுபாட்டை இழந்ததாக நம்பப்படும் விபத்தின் அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது:

ஒரு டிரெய்லர் டிரக் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து(பிரேக் செயலிழந்ததாக நம்பப்படுகிறது) அவர் சென்ற பாதையை விட்டு விலகி தாறுமாறாக ஓடிய காட்சிகள் வெளியாகியுள்ளது.

ரியாத்துக்கு கிழக்கே,தமாம் சாலையில் உள்ள வனிக வளாகத்தின் கட்டிடத்தில் மோதி வாகனம் நின்றது. நேற்று முதல் இந்த காட்சிகள் சவுதியின் முக்கியமான பல சமூக வலைத்தள பக்கங்களில் வைரலாக பரவி வருகின்றன.

குவைத்திலுள்ள வெளிநாட்டு தொழிலாளர்கள் நாட்டை விட்டு வெளியேற Exit Permit என்ற சட்டம் தொடர்பான குழப்பங்களுக்கு தெளிவான விள...
09/07/2025

குவைத்திலுள்ள வெளிநாட்டு தொழிலாளர்கள் நாட்டை விட்டு வெளியேற Exit Permit என்ற சட்டம் தொடர்பான குழப்பங்களுக்கு தெளிவான விளக்கம்:

குழப்பத்தில் உள்ள உங்கள் நண்பர்களுக்கு இந்த பதிவை பகிர்வு செய்யுங்கள்.

குவைத்தில் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு இந்த மாதம் முதல்(ஜூலை-1,2025) தேதி முதல் அமல்படுத்தப்பட்ட வெளியேறும்(Exit Permit) அனுமதிச் சட்டம், வீட்டுப் பணியாளர்களுக்கும் அமல்படுத்தப்படும் என்று பரவும் செய்தி தவறானது என்று மனிதவள மேம்பாட்டு குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இப்படிப்பட்ட முக்கியமான அரசு அறிவிப்புகளின் உண்மை தன்மையினை அறிய அரசின் அதிகாரப்பூர்வ ஆதாரங்களில் இருந்து வெளியிடப்படும் செய்திகளை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் நாட்டிற்கு வெளியே பயணம் செய்யும்போது வெளியேறும் அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றும், அதை முதலாளி அங்கீகரிக்க வேண்டும் என்றும் விதிக்கும் புதிய சட்டம், இந்த மாதம் முதல் தேதி முதல் அமலுக்கு வந்தது குறிப்பிடதக்கது.

எனவே இதன் மூலம் வீட்டுப் பணியாளர்கள் நாட்டை விட்டு வெளியேற Exit Permit வேண்டும் என்ற சட்டம் இதுவரையில் நடைமுறையில் இல்லை என்பது உறுதியாகியுள்ளது.

உங்கள் புரிதலுக்காக வீட்டு பணியாளர்கள் விசா வகையினை 20 நம்பர் எனவும், தனியார் துறை தொழிலாளர்கள் விசா வகையினை 18 நம்பர் எனவும், அரசு துறை தொழிலாளர்கள் விசா வகையினை 17 நம்பர் எனவும் குறிப்பிடுவர். இதில் 17 நம்பர் விசா உள்ளவர்களுக்கு Exit Permit என்பது முன்னரே நடைமுறையில் உள்ளது குறிப்பிட தக்கது.

குவைத்தில் மேன்ஹோலில் தவறி விழுந்த இரண்டு தொழிலாளர்கள் காப்பாற்றப்பட்டனர்:குவைத்தின் சபா அல்-அஹ்மத் பகுதியிலுள்ள பணியிடத...
09/07/2025

குவைத்தில் மேன்ஹோலில் தவறி விழுந்த இரண்டு தொழிலாளர்கள் காப்பாற்றப்பட்டனர்:

குவைத்தின் சபா அல்-அஹ்மத் பகுதியிலுள்ள பணியிடத்தில் ஒரு மேன்ஹோலில்(சாக்கடை குழியில்) இரண்டு தொழிலாளர்கள் தவறி விழுந்த சம்பவம் நேற்று(08/07/25) செவ்வாய்க்கிழமை இரவு நடந்துள்ளது.

தகவல் அறிந்து விரைந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் அவர்களை மீட்டனர். இதையடுத்து அவசர சிகிச்சைக்காக இரண்டு தொழிலாளர்களையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

குவைத்தின் அப்தலியில் கண்ணிவெடியில் சிக்கிய  மூன்று பேர் கவலைக்கிடம்:குவைத் பாதுகாப்பு வட்டாரம் வெளியிட்டுள்ள செய்தியில்...
08/07/2025

குவைத்தின் அப்தலியில் கண்ணிவெடியில் சிக்கிய மூன்று பேர் கவலைக்கிடம்:

குவைத் பாதுகாப்பு வட்டாரம் வெளியிட்டுள்ள செய்தியில் நேற்று(07/07/25) திங்கட்கிழமை மாலையில் உள்துறை அமைச்சகத்தின் கட்டுபாட்டு அறைக்கு அப்தலியில் கண்ணிவெடி வெடிப்பில் சிக்கி 3 பேர் படுகாயமடைந்தனர் என்ற தகவல் கிடைத்தன எனவும், ஈராக் படையெடுப்பின் போது புதைக்கப்பட்டவையாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது என்று அமைச்சகம் விளக்கம் அளித்தனர். தகவல் கிடைத்ததும் விரைந்து சென்ற மீட்பு குழுவினர் ஏர் ஆம்புலன்ஸ் மூலம் 3 பேரையும் ஜஹரா மற்றும் அல்-சபா மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர் எனவும், கண்ணிவெடியில் சிக்கியவர்கள் 42,31 மற்றும் 30 வயதுகளை உடையவர்கள் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆனால் எந்த நாட்டவர்கள் என்ற விபரங்கள் வெளியாகவில்லை

இவர்கள் கை விரல்களை இழந்தனர், கால்கள் சிதைந்தன எனவும் தலையிலும் காயங்கள் ஏற்பட்டதாக வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குவைத்தின் மீதான கொடூரமான ஈராக்கின் படையெடுப்பு நடத்து 30 ஆண்டுகளுக்கு மேலாகியும் இடையில் இது போன்ற கண்ணிவெடி வெடிப்புகள் நிகழ்வது மிகவும் வருத்தமான நிகழ்வாகும் என்றும் அமைச்சகம் தெரிவித்தன. இதற்கு முன்னரும் ஆடு மேய்க்கும் தொழிலாளர்கள் உட்பட பாலைவன பகுதயில் வேலை செய்கின்ற பலரும் இப்படி புதைக்கப்பட்ட கன்னிவெடியில் சிக்கி பலியாவது வேதனையாக தொடர்கிறது.

எனவே பாலைவன பகுதியில் செல்பவர்கள் மிகவு‌ம் எச்சரிக்கையாக செல்ல வேண்டும். குவைத்தில் மழை காலத்தில் இப்படி புதைக்கப்பட்ட கன்னிவெடிகள் நாட்டின் பல இடங்களில் மண்ணுக்கு வெளியே தெரியும் நிகழ்வுகளும், வெடிகுண்டு நிபுணர்கள் அதை அகற்றி அழிக்கும் நிகழ்வுகளும் குவைத்தில் பலமுறை நடந்துள்ளததை பார்க்க முடிந்துள்ளது குறிப்பிடதக்கது.

குவைத்தில் பணியிடத்தில் ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக இந்திய இளைஞர் இன்று மரணமடைந்தார்:குவைத்தில் இன்று(08/07/25) செவ்வாய்க்...
08/07/2025

குவைத்தில் பணியிடத்தில் ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக இந்திய இளைஞர் இன்று மரணமடைந்தார்:

குவைத்தில் இன்று(08/07/25) செவ்வாய்க்கிழமை கேரளா மாநிலம், மலப்புரம் அடுத்த வாணியம்பலம் பகுதியைச் சேர்ந்த ரிஷாத்(29) என்ற இளைஞரே மாரடைப்பால் மரணமடைந்தார் என்ற செய்தி தற்போது வெளியாகியுள்ளது. தனது வேலையின் ஒரு பகுதியாக தோட்டத்தில் செடிகளுக்கு தண்ணீர் நனைத்து கொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

அவர் இரண்டு ஆண்டுகளாக குவைத்தில் வேலை செய்து வந்தார். அடுத்த வாரம் விடுமுறைக்கு தாயகம் செல்ல விமான பயணச்சீட்டு எடுத்திருந்தார் என்ற துயரமான தகவலும் வெளியாகியுள்ளது.

ஒமானின் ஹைமா என்ற இடத்திற்கு அருகே உள்ள ஆதாமில் தூசிக்காற்றில் சிக்கிய வாகன விபத்தில் 4 வயது இந்திய குழந்தை பரிதாபமாக உய...
07/07/2025

ஒமானின் ஹைமா என்ற இடத்திற்கு அருகே உள்ள ஆதாமில் தூசிக்காற்றில் சிக்கிய வாகன விபத்தில் 4 வயது இந்திய குழந்தை பரிதாபமாக உயிரிழந்தார் என்ற துயரமான செய்தி தற்போது வெளியாகியுள்ளது:

ஒமானின் ஹைமா என்ற இடத்திற்கு அருகே உள்ள ஆதாமில் தூசிக்காற்றில் சிக்கிய வாகன விபத்தில் 4 வயது இந்திய குழந்தை பர.....

ஒமானில் தூசிக்காற்றில் சிக்கிய வாகன விபத்தில் 4-வயது இந்திய குழந்தை பரிதாபமாக உயிரிழந்தார்:ஒமானின் ஹைமா என்ற இடத்திற்கு ...
07/07/2025

ஒமானில் தூசிக்காற்றில் சிக்கிய வாகன விபத்தில் 4-வயது இந்திய குழந்தை பரிதாபமாக உயிரிழந்தார்:

ஒமானின் ஹைமா என்ற இடத்திற்கு அருகே உள்ள ஆதாமில் நடந்த சாலை விபத்தில் இந்திய சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். கேரளா மாநிலம் , கண்ணூர் மாவட்டம், மட்டனூரைச் சேர்ந்த நான்கு வயது சிறுமி ஜாசா ஹைரா என்பது தெரியவந்துள்ளது. அவரது தந்தை நவாஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் சலாலாவிலிருந்து திரும்பி வரும் வழியில் ஆதாமில் வைத்து விபத்துக்குள்ளானார்கள்.

இன்று(07/07/25) திங்கட்கிழமை அதிகாலை 1 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. பலத்த தூசிக்காற்று காரணமாக வாகனம் கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து நிகழ்ந்தது. வாகனத்திலிருந்து தெறித்து வெளியே விழுந்த ஜாசா ஹைரா பரிதாபமாக சம்பவ இடத்திலேயே இறந்தார். மற்றவர்களுக்கு ஏற்பட்ட காயங்கள் பெரிய அளவில் இல்லை, அனைவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் நடைமுறைகள் முடிந்ததும் உடல் இன்று மாலையில் இந்தியா கொண்டு செல்லப்படும் என்று KMCC அமைப்பு நிர்வாகிகள் தெரிவித்தனர்.

சவுதியிலிருந்து சொந்த ஊருக்கு வரவிருந்த நிலையில் தவறி விழுந்து கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் உயிரிழந்த துயரமான செய்...
06/07/2025

சவுதியிலிருந்து சொந்த ஊருக்கு வரவிருந்த நிலையில் தவறி விழுந்து கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் உயிரிழந்த துயரமான செய்தி மனைவி குழந்தைகள் மற்றும் குடும்பத்தார் உள்ளிட்டவர்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது:

சவுதியிலிருந்து சொந்த ஊருக்கு வரவிருந்த நிலையில் தவறி விழுந்து கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் உயிரிழந்.....

சவுதியில் ஊருக்கு வரவிருந்த நிலையில் தவறி விழுந்து தமிழர் உயிரிழந்த துயரமான செய்தி வெளியாகியுள்ளது:கன்னியாகுமரி மாவட்டம்...
06/07/2025

சவுதியில் ஊருக்கு வரவிருந்த நிலையில் தவறி விழுந்து தமிழர் உயிரிழந்த துயரமான செய்தி வெளியாகியுள்ளது:

கன்னியாகுமரி மாவட்டம் அருமனையை அடுத்த மஞ்சாலுமூடு பகுதியை சேர்ந்தவர் சசி(52). இவருக்கு திருமணமாகி கலா என்ற மனைவியும், ஒரு மகளும், மகனும் உள்ளனர். சசி கடந்த 25 ஆண்டுகள் தொடர்ச்சியாக சவுதியில் வேலை செய்து வந்தார். பிறகு சொந்த ஊருக்கு திரும்பிய சசி சில வருடங்கள் ஊரில் இருந்தார். பின்னர் மீண்டும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சவுதி அரேபியாவுக்கு வேலைக்கு சென்று உள்ளார். அவருடைய அண்ணணும் அங்கு வேலை செய்து வருவதாக தெரிகிறது.

இந்த நிலையில் சசி உறவினர் ஒருவர் திருமண நிகழ்ச்சி இருந்ததாலும், சென்று இரண்டு ஆண்டு கடந்ததாலும் சொந்த ஊருக்கு அடுத்த ஓரிரு நாட்களில் திரும்ப திட்டமிட்டு இருந்தார். இது தொடர்பாக மனைவி மற்றும் மக்களிடம் தகவல் தெரிவித்து இருந்தார். இந்நிலையில், சசி தங்கியிருந்த இடத்தில் மாடிப்படியில் ஏறிய போது விழுந்து படுகாயம் அடைந்து உயிரிழந்ததாக அண்ணன் ஊருக்கு தகவல் தெரிவித்தார்.

இதைக்கேட்டு அவரது மனைவி,குழந்தைகள் மற்றும் குடும்பத்தார் கதறி அழுதனர். வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்ற சசி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சட்ட நடவடிக்கைகள் முடித்து சசியின் சடலத்தை விரைவாக ஊருக்கு கொண்டு வர மத்திய வெளியுறவுத்துறையும், மாநில அரசும் மற்றும் மாவட்ட மக்கள் பிரதிநிதிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Address

Kanyakumari
Nagercoil
629001

Alerts

Be the first to know and let us send you an email when Arab Tamil Daily posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Arab Tamil Daily:

Share

About Kuwait tamil pasanga

உறவுகள் கவனத்திற்கு...... எங்களுக்கு அதிகாரபூர்வமாக இந்த முகத்திரை பக்கம்(page) மட்டுமே. எங்களுக்கு வேறு எந்த விதமான முகத்திரை பக்கமோ(page), முகத்திரை குழுமமோ(Facebook group), வாட்சப் குழுமமோ(Whats app group) இல்லை. நன்றி.... ஏமாறாதீர்கள்..... ஏமாற்றாதீர்கள்...... Regards, Kuwait Tamil Pasanga Team.