Channel Red Sea

Channel Red Sea செய்திகளின் பின் உள்ள அரசியலை அலசும் களம்

பெல்டின் விலை ரூ. 86000. பாஜக அமைச்சரின் எளிமை?!
04/02/2026

பெல்டின் விலை ரூ. 86000. பாஜக அமைச்சரின் எளிமை?!

இயக்குநர் லெனின் பாரதி காட்டம்!துப்பரவு தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளுக்காக ரிப்பன் பில்டிங் வாசலில் போராடிக்கொண்டிருந்த ப...
04/02/2026

இயக்குநர் லெனின் பாரதி காட்டம்!

துப்பரவு தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளுக்காக ரிப்பன் பில்டிங் வாசலில் போராடிக்கொண்டிருந்த போதெல்லாம் எங்கு இருந்தீர்கள்
அவர்களே.. உங்கள் பெருந்தன்மை வெங்காயத்தைக் காட்ட அவர்களை சீருடையோடுதான் அடையாளப்படுத்துவீர்களா?

ஜனநாயகத்தின் நான்காவது தூணாகச் செயல்படும் ஊடகவியலாளர்கள் மீது ஸ்ரீரங்கம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் திரு. பழனியாண்...
04/02/2026

ஜனநாயகத்தின் நான்காவது தூணாகச் செயல்படும் ஊடகவியலாளர்கள் மீது ஸ்ரீரங்கம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் திரு. பழனியாண்டி நடத்திய தாக்குதல் கடும் கண்டனத்திற்கு உரியது.

குவாரி தொடர்பாகச் செய்தி சேகரிக்கச் சென்ற நியூஸ் தமிழ் 24X7 செய்தித் தொலைக்காட்சி ஊடகவியலாளர்கள் மீது ஸ்ரீரங்கம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் திரு. பழனியாண்டி கொடூரமாகத் தாக்குதல் நடத்திய வீடியோ, அண்மையில் வெளியானது. அதற்குப் பிறகும் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்காமல், வேடிக்கை பார்க்கும் நிலையில்தான் முதல்வர் அவர்கள் இருக்கிறார் என்பது வெட்கக் கேடானது.

பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி, பொதுவெளியில் இவ்வளவு மோசமாகச் செயல்படுவது, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து கிடக்கிறது என்பதற்கு இன்னுமொரு சான்றாகும்.

ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்திய சட்டமன்ற உறுப்பினர் மீது வழக்குப் பதிவு செய்து, உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு உரிய நீதி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

தமிழ்நாடே பாதுகாப்பின்றிப் பதைபதைத்து இருக்கையில், தூக்கத்தில் இருக்கும் முதல்வரால் மக்கள் துயரத்தில் இருக்கின்றனர். இப்படிப்பட்ட ஆட்சியை மக்கள், வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தூக்கி எறிவது உறுதி! உறுதி! உறுதி!

- விஜய், தவெக தலைவர்.

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி மீது காலணி வீச்சா? ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர் என்பதால் தொடர்ந்து அவருக்கு அவமதிப்பு...
07/10/2025

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி மீது காலணி வீச்சா?

ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர் என்பதால் தொடர்ந்து அவருக்கு அவமதிப்புகள் செய்யப்படுவதா?

நீதித்துறையை அச்சுறுத்தும் சனாதனவாதிகளின் அராஜகம்!
---------------------------------------------------------

இன்று உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமர்வில் விசாரணை நடந்துகொண்டிருக்கும் போது, மாண்பமை தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அவர்கள் மீது காலணி வீச முயற்சிக்கப்பட்டுள்ளது.

காலணி வீச முயன்ற வழக்குரைஞர் ராகேஷ் கிஷோர் என்பவர் “சனாதன தர்மத்துக்கு இழுக்கு ஏற்படுவதை அனுமதிக்க முடியாது” என்று கூச்சலிட்டபடி இச் செய்கையில் ஈடுபட்டுள்ளார்.

சனாதன ஹிந்துத்துவக் கும்பலின் செயல்கள் எவ்வளவு கீழிறக்கத்துக்கும் செல்லும் என்பது நமக்குப் புதிதல்ல. ஆனால், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாகப் பதவியேற்றது முதல் மாண்பமை பி.ஆர்.கவாய் மீது வன்மத்தைக் கக்கியபடியே இருக்கின்றனர். ஒடுக்கப்பட்ட சமூகத்தவராகவும், முற்போக்குச் சிந்தனை படைத்தவராகவும் திகழும் மாண்பமை நீதிபதி பி.ஆர்.கவாய் அவர்கள் பதவியேற்ற பின் முதல்முறையாக மகாராஷ்டிரத்துக்குப் போயிருந்தபோதும், அரசு முறைப்படி அவருக்குத் தரப்பட வேண்டிய மரியாதையைத் தராமல் அவமதித்தனர்.

அவர் முறையாக அரசியலமைப்புச் சட்டப்படி நடக்கிறார் என்றதும் ஹிந்துத்துவ பாசிச சக்திகளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அந்தக் காலணி அவர் மீது மட்டும் வீசப்பட்ட காலணி அல்ல; இந்திய நீதித்துறையை அச்சுறுத்துவதற்காக வீசப்பட்ட காலணி ஆகும்.

தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அவர்கள் அடுத்த மாதம் ஓய்வு பெறவிருக்கிறார். அவருக்குப் பின்னும் வருவோரை அச்சுறுத்தவே இந்த முயற்சி!

நீதிபதிகளே ஆயினும் தங்கள் ஆதிக்கத்துக்கு எதிராக எதையும் நீதிமன்றங்கள் செய்தால், அவர்களை அவமானப்படுத்துவோம் என்று அச்சுறுத்தும் இந்தச் செயல் தனிப்பட்டது அல்ல; இதன் பின்னணியில் இருக்கும் அமைப்புகள் யார் என்பதைக் கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆனால், மிகுந்த பெருந்தன்மையுடனும், பொறுமையுடனும் “கவனத்தைச் சிதறவிடாதீர்கள்; இது என்னைப் பாதிக்காது” எனக் கூறி எந்த பரபரப்பும் இன்றி வழக்குரைஞர்களிடம் வாதங்களைத் தொடருமாறு கேட்டுக்கொண்ட பக்குவமும் பெருந்தன்மையும், எத்தனையோ அவமதிப்புகளைச் சந்தித்து, உயர்ந்த நிலைக்கு வந்திருப்பவர் அவர் என்பதற்குச் சான்று ஆகும்.

’சனாதன அவமதிப்பு’ என்ற கூக்குரல் மூலம் இதன் பின்னணியில் எந்தத் தத்துவம் இருக்கிறது என்பது மிக வெளிப்படையாகத் தெரிந்துவிட்டது.
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியின் மீதான இந்த அவமதிப்பு முயற்சி கடும் கண்டனத்துக்கு உரியதாகும். நீதித் துறையை அச்சுறுத்தும் போக்கு ஒரு போதும் பொறுத்துக் கொள்ள முடியாதது.

இந்த அநாகரிக, ஜாதித் திமிர் பிடித்த சனாதனவாதிகளை மக்கள் அடையாளம் கண்டு ஒதுக்கித் தள்ள வேண்டும்.

- கி.வீரமணி,
தலைவர்,
திராவிடர் கழகம்

06.10.2025
சென்னை

சம்பம் செய்த தமிழக அரசும்... யூ டர்ன் அடித்த மோடி அரசும்!!!தமிழகத்தின் விழிப்புணர்வே உயிர் காக்கும் வலிமை!ஒரு வாரமாக, கர...
07/10/2025

சம்பம் செய்த தமிழக அரசும்... யூ டர்ன் அடித்த மோடி அரசும்!!!

தமிழகத்தின் விழிப்புணர்வே உயிர் காக்கும் வலிமை!

ஒரு வாரமாக, கரூர் நெரிசல் விபத்தும், நடிகர் விஜயின் அரசியல் வருகையும் செய்தி தலைப்புகளில் இடம் பிடித்துக் கொண்டிருந்தபோது—ஒரு அமைதியான, ஆனால் உயிர் காக்கும் நடவடிக்கை தமிழகத்தில் நடந்தது. அது அரசியலோ, பிரபலங்களோ அல்ல — அரசு நிர்வாகத்தின் துல்லியமும் தன்னடக்கமும் பற்றியது.

அக்டோபர் 1 — அரசு விடுமுறை நாள். ஆனால், அந்த நாளே மத்தியப் பிரதேசத்திலிருந்து வந்த ஒரு கடிதம் தமிழக மருந்து கட்டுப்பாட்டுத் துறையின் அலுவலகத்தில் இறங்குகிறது. ஒன்பது சிறு உயிர்கள் மரணமடைந்துள்ளன. அவர்களுக்கு கொடுக்கப்பட்ட ‘Coldrif Syrup’ குறித்தே சந்தேகம் எழுந்துள்ளது.

அந்தச் செய்தி வருகிறதும், விடுமுறை நாளாக இருந்தாலும் தமிழக அரசு அலுவலர்கள் உடனடியாக எழுந்து நிற்கின்றனர். நண்பகலுக்குள் ஆய்வாளர்கள் காஞ்சிபுரம் தொழிற்சாலையை அடைகின்றனர். ஆய்வகம் திறக்கப்படுகிறது. சோதனை தொடங்குகிறது. மொத்தம் 39 கடுமையான மீறல்கள், 325 முக்கியமான விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன என்று கண்டறியப்படுகிறது.

மாதிரிகள் எடுக்கப்படுகின்றன. அவை Diethylene Glycol மற்றும் Ethylene Glycol கலப்புகள் உள்ளதா எனச் சோதனைக்கு அனுப்பப்படுகின்றன.
அடுத்த 24 மணி நேரத்திலேயே — முடிவு!
அந்த மருந்து “தரமற்றது” என அறிவிக்கப்படுகிறது. 48.6 சதவீதம் Diethylene Glycol கலந்துள்ளது. இது குழந்தைகளின் கல்லீரல், சிறுநீரகங்களை சேதப்படுத்தும் ஒரு Industrial solvent!

அங்கேயே நிற்காமல், தமிழக அரசு அடுத்த கட்டத்திற்குச் செல்கிறது.
மாநிலம் தழுவிய எச்சரிக்கை.
விற்பனை, விநியோகத்துக்கு தடை.
மொத்த, சில்லறை நிலையங்களில் உள்ள stock-ஐ freeze செய்ய உத்தரவு.
ஒடிசா, புதுச்சேரி அரசுகளுக்கும் தகவல் பகிர்வு.

அனைத்தும்—விடுமுறை நாளில், ஒரே இரவில், 24 மணி நேரத்திற்குள்!

அக்டோபர் 3 அன்று, நிறுவனத்துக்கு உற்பத்தி நிறுத்த உத்தரவு. உரிமம் ரத்து செய்ய Show Cause Notice. பொதுமக்களுக்கு எச்சரிக்கை. இதுதான் நிர்வாகம். இது தான் துரிதமும் தீர்மானமும் சேர்ந்த நல்லாட்சி.

மத்தியப் பிரதேசத்தில் குழந்தைகள் இறந்தபோதும், அந்த அரசு அக்டோபர் 4 ஆம் தேதி தான் தடை உத்தரவை பிறப்பித்தது. அதுவும் ஒன்றிய சுகாதார அமைச்சகத்தின் உறுதிப்படுத்தலுக்குப் பின்.

இதுதான் வித்தியாசம்.
ஒரு அரசு தகவல் பெற்றவுடன் உயிர் காப்பதற்காக ஓடுகிறது;
மற்றொன்று படிவங்கள், அனுமதிகள், மடல்கள் என உயிரை இழக்கச் செய்கிறது.

தமிழகம் 100 மடங்கு முன்னே.
அது வெறும் அரசியல் கோஷம் அல்ல — நிர்வாக நாகரிகத்தின் அடையாளம்.
தமிழகம் எப்போதும் போல, நல்லாட்சியின் நிழலல்ல, அதன் ஒளியாக மீண்டும் திகழ்கிறது.

“மக்களின் நலனுக்காகச் செயல்படும் அரசாங்கம் தான் உண்மையான ஜனநாயகத்தின் முகம்.”

* இதன் சாட்சியாக அக்டோபர் 1, 2025 நினைவில் நிற்கும் நாள்!

- Social justice forum.

இவர்களை எப்படி தேற்ற?'போக வேணாம்னு சொன்னேன், மகளோட போகறேன்னு சொன்னாங்க.. நடுவுல போன் பண்ணிக் கேட்டேன்.. கூட்டமா இருந்தா ...
29/09/2025

இவர்களை எப்படி தேற்ற?

'போக வேணாம்னு சொன்னேன், மகளோட போகறேன்னு சொன்னாங்க.. நடுவுல போன் பண்ணிக் கேட்டேன்.. கூட்டமா இருந்தா வந்திடுங்கன்னு சொன்னேன்... அனுப்புன மெசேஜ் அவங்க பார்க்கல... அப்புறமா போன் எடுக்கல.. போலீசம்மா ஒருத்தங்க எடுத்தாங்க.. ஆஸ்பத்திரி போக சொன்னாங்க...நண்பர் ஒருத்தர பார்த்தேன்... கவலையா போய் உள்ள பாக்க சொன்னாரு.. பாதி வாழ்க்கைக்கு அப்புறமா சன்னியாசியா வாழமுடியுமா... மகளையும் மனைவியையும் பறிகொடுத்துட்டேன்..' என்றவரிடம் என்ன ஆறுதல் சொல்ல?
மகள், பேத்தி இருவரையும் இழந்த அவரது வயதுபோன பெற்றோரை எப்படி தேற்ற?..

கரூருக்கு வெளியே உள்ள ஏமூர் எனும் சிற்றூரில் மட்டும் 5 பேர் மரணமடைந்திருக்கிறார்கள்.

மகன் பிறந்த பின், பிரிந்து சென்ற கணவன் பிறிதொரு திருமணம் செய்து கைவிட்டு போய்விட, வைராக்கியத்துடன் வளர்த்த 10 வயது மகனை பறிகொடுத்த பெண்ணிற்கு எப்படி ஆறுதல் சொல்ல?.. 'வேலைக்கு போயிருந்தேன், வர்ரதுக்குள்ள போய் சேர்ந்துட்டாங்க.?' என மனைவியை பறிகொடுத்தவரின் கையை பிடித்து தேற்றுவதற்கு நமக்கு வார்த்தைகள் எப்படி வரும்?

'அவங்க போனதே எனக்கு தெரியாதுங்க, திடீர்னு வாட்ஸப்புல அவங்க போட்டோவை அனுப்பி ஆஸ்பத்திரி வரச் சொல்லி சேதி சொல்லிட்டாங்க, இனி எப்படி இருப்பேன்?' என அதிர்ச்சியில் இருந்து மீளாத 65 வயது கணவர். பலியான, காயம்பட்ட பெரும்பாலோனோர் அன்றாடம் உழைத்து பிழைக்கும் சாமானிய குடியானவர்கள்.

காயம்பட்டவர்களை மருத்துவமனையில் சந்தித்தோம். பழங்குடி சமூகத்தை சேர்ந்த முதியவர் மகளுடன் செய்வதறியாது நின்றிருந்தார். வெண்டிலேட்டரில் போராடும் தாயின் அருகில் கவலையோடு மகன். கழுத்தில் மிதித்த காயத்துடன் தனது 14 வயது குழந்தைக்கு அருகில் கவலையுடன் இசுலாமிய தாய். பாதுகாப்பு பணிக்கு வந்து நெரிசலில் நசுக்கப்பட்ட ஹோம்கார்ட் பெண்மணி என பலரையும் சந்தித்து உண்மைத் தன்மை அறிந்தோம். அசம்பாவிதம் நடந்த இடத்தை நேரில் சென்று பார்த்தோம். அதிகாரிகளிடத்தில் உரையாடினோம். அங்கிருந்து இரவு பகல் பாராது உழைத்த மருத்துவர்கள், செவிலியர், ஆம்புலன்ஸ் பணியாளர்கள், காவலர்கள்
ஆகியோருடனும் பேசினோம்.

தமிழ்த்தேசிய கூட்டணியின் தோழமை இயக்க தோழர்களுடன், மே17 இயக்கத்தின் தோழர்களும் சென்றிருந்தோம். தமிழர் ஆட்சிக் கழகம் தலைவர் தோழர் எஸ்.ஆர்.பாண்டியன் அவர்கள் கே.எம். சரீப் அவர்களின் தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் பொறுப்பாளர் தோழர் சண்முகராஜா, அன்சர்மில்லத் ஆகியோருடன் கரூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதலும் ஆதரவும் தெரிவித்தோம். கரூர், திருப்பூர், திருச்சி, ஈரோடு, கோவை மாவட்டத்தின் மே17 இயக்க தோழர்கள் உடன் வந்திருந்தனர். தொடர்ந்து மக்களை சந்தித்து இயன்ற அளவில் தகவல்களை சேகரித்து மக்களுக்கு தெரியப்படுத்த முயல்கிறோம்.

எந்த இடர்பாட்டிலும் சாமானிய மக்களுடன் களத்தில் மே17 இயக்க தோழர்கள் நிற்பார்கள். ஊகங்களாக இல்லாமல் களத்தில் கண்டறிந்ததை மக்களுக்கு சொல்வோம்.

செய்தி: டாலருக்கு நிகரான மதிப்பு இந்திய ரூபாயின் மதிப்பு 88.15 ஆக உயர்ந்தது.
30/08/2025

செய்தி: டாலருக்கு நிகரான மதிப்பு இந்திய ரூபாயின் மதிப்பு 88.15 ஆக உயர்ந்தது.

29/08/2025

கேரளாவில் கனரா வங்கியின் பிராந்திய மேலாளராக பணியாற்றும் ,பீகாரை சேர்ந்த ஒருவர், வங்கி ஊழியர்களிடம் யாரும் அலுவலகத்தில் மாட்டிறைச்சி சாப்பிடக்கூடாது என்று உத்தரவிட்டார்.

மறுநாள் அலுவலக ஊழியர்கள் மாட்டிறைச்சி விழாவைக் கொண்டாடியுள்ளனர்.

உலகமயமாகிறார் பெரியார் - முதலமைச்சர் பெருமிதம்!"ஆதிக்கம்தான் என் எதிரி" என முழங்கிச் சாதியாலும் பாலினத்தாலும் ஒடுக்கப்பட...
29/08/2025

உலகமயமாகிறார் பெரியார் - முதலமைச்சர் பெருமிதம்!

"ஆதிக்கம்தான் என் எதிரி" என முழங்கிச் சாதியாலும் பாலினத்தாலும் ஒடுக்கப்பட்டோரின் விடுதலைக்காகச் சுற்றிச் சுழன்று பரப்புரை செய்த தந்தை பெரியார் அவர்கள் உலகம் முழுமைக்குமானவர்!

சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டினையொட்டி உலகப்புகழ் பெற்ற பல்கலைக்கழகத்தில், செப்டம்பர் 4 அன்று நடைபெறும் கருத்தரங்கினில் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் உருவப்படத்தினைத் திறந்து வைத்து, தென்னக மயக்கம் தீர்த்த சுயமரியாதை இயக்கம் குறித்த இரு நூல்களையும் பன்னாட்டு அறிஞர் பெருமக்கள் முன்னிலையில் வெளியிடுகிறேன்.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்; பெரியாரியம் உலகத்தவர் அனைவருக்கும்!

Address

No: 15/5
Nehru Nagar
600049

Alerts

Be the first to know and let us send you an email when Channel Red Sea posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share