08/10/2021
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அன்னூர் ரோடு புது காய்கறி மார்க்கெட் எதிரே உள்ளபகுதியில் நெடுஞ்சாலை ஓரங்களில் ஏராளமான மரங்கள் பல வருடங்களாக தன்னார்வலர்கள் மூலம் பராமரிக்கப்பட்டு பச்சைப் பசேல் என்று வளர்ந்து அப்பகுதி பொதுமக்களுக்கும் சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கு நிழல் தந்து வந்தது ஏழை சுமை தூக்கும் தொழிலாளர்கள் அந்த மரத்தின் நிழலில் தங்களின் உடல் வலியை களைய இளைப்பாறி வந்தனர்
இந்நிலையில் இன்று காலை அப்பகுதிக்கு வந்த தொழிலாளர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது அவர்களை வெயிலிலிருந்து பாதுகாத்து அவர்களுக்கு பயன் தந்து வந்த மரங்கள் அருகே உள்ள தனியார் பெட்ரோல் பங்க் நிறுவனத்தினரால் நெடுஞ்சாலைத் துறையினருக்கு சொந்தமான இடத்தில் நெடுஞ்சாலைத் துறையினர் வைத்திருந்த எச்சரிக்கை பலகை மற்றும் பத்திற்கு மேற்பட்ட மரத்தை வேருடன் வெட்டி சாய்க்கப்பட்டு உள்ளது இதனைப் பார்த்த இந்த மரங்களைப் பராமரித்து வந்த தொழிலாளர்களும் பொதுமக்களும் வேதனை அடைந்தனர் இன்று 75வது சுதந்திர தினத்தன்று அப்பகுதியில் பொது மக்களுக்கு பயன்தரும் வகையில் நெடுஞ்சாலை பகுதிகளில் அந்த தொழிலாளர்கள் 75 மரக்கன்றுகள் வைக்கவும் திட்டமிட்டிருந்தார்கள் என்பது தான் வேதனையின் உச்சம்
நம் தமிழ்நாட்டில் மரங்களின் இரு கண்களாக கருதப்படுவது, மரம் தான்.ஆனால் அவை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து நாம் கட்டடங்களாக மாற்றிவிட்டதின் விளைவே இவை.“கிளி வளர்த்தேன் பறந்து விட்டது”,”அணில் வளர்த்தேன் ஓடிவிட்டது”,மரம் வளர்த்தேன் இரண்டும் வந்துவிட்டது,என்றார் மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல்கலாம் கூறினார்.அதனை நாம் கடைபிடித்தே ஆகவேண்டும்.மரங்களை, பயன்களை தெரிந்து பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் அனைவரும் ஆர்வமாக . சமீப காலமாக மரம் வளர்த்து வருகிறார்கள் ஆனால் ஒரு சிலர் நெடுஞ்சாலை துறையினருக்கு சொந்தமான பகுதிகளில் உள்ள மரங்களை கூட வேருடன் வெட்டி சாய்த்து விடுகிறார்கள் அவர்கள் மீது பெரும்பாலும் அரசு அதிகாரிகள் பெரிய அளவு எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை இதனால் தன்னிச்சையாக பல தனியார் நிறுவனத்தினர் அரசு நிலத்தில் உள்ள மரங்களை வேருடன் அப்புறப்படுத்தி விடுகிறார்கள் தன்னார்வலர்கள் கஷ்டப்பட்டு வளர்த்தும் மரங்களை இனியேனும்
வெட்டாதவாறு அரசும் அதிகாரிகளும், பாதுகாத்து மரங்களை வெட்டுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதோடு சமூக ஆர்வலர்கள் மரம் நடுவதற்கு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் மேலும் மேட்டுப்பாளையம் அன்னூர் ரோட்டில் உள்ள புது காய்கறி மார்க்கெட் எதிரே உள்ள வெட்டப்பட்ட மரங்களை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் மேலும் ஒரு மரத்தை வெட்டினால் 10 மரங்களை நட வேண்டும் என்று நீதிமன்றம் தமிழக அரசிற்கு அறிவுறுத்தி உள்ளது என்பதையும் நாம் நினைவூட்டுகிறோம்.