நம்ம புதூர்.

நம்ம புதூர். 📍 புதூர்.V முதல்நிலை பேரூராட்சி
📍 விளாத்திகுளம் வட்டம்
📍 தூத்துக்குடி மாவட்டம் - 628 905
புதூர் மற்றும் புதூர் சுற்றுவட்டார பகுதி தகவல்களுக்கு.....

வி.புதூர் பேரூராட்சி சவுண்டம்மன் கோவில் தெருவில் அட்டகாசம் செய்துவரும் குரங்குகளை பிடிக்கும் முயற்சியில் வனத் துறையினர் ...
31/08/2025

வி.புதூர் பேரூராட்சி சவுண்டம்மன் கோவில் தெருவில் அட்டகாசம் செய்துவரும் குரங்குகளை பிடிக்கும் முயற்சியில் வனத் துறையினர் தீவிரம்....

#நம்ம_புதூர்

29/08/2025



தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் வட்டம் முத்துலாபுரம் மற்றும் கருப்பூர் பகுதியில் ( இனாம் அருணாச்சலபுரம் கிராமமாக இருக்க வாய்ப்புகள் அதிகம்) பயங்கர சத்தத்துடன் விபத்து. பட்டாசு ஆலையாக இருக்க வாய்ப்புகள் அதிகம். 5கி.மீ சுற்றளவில் அமைந்துள்ள கிராமங்களில் வீடுகள் குலுங்கும் அளவிற்கு 3 முறை பயங்கர அதிர்வுடன் சத்தம் கேட்டதால் பொதுமக்கள் பதற்றம். விருதுநகர் மாவட்டத்தில் புதிய பட்டாசு ஆலைகள் அமைக்க கடும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டு வரும் நிலையில் தூத்துக்குடி மாவட்ட எல்லைகளான வைப்பாற்றுப் படுகையில் அமைந்துள்ள கருப்பூர், இனாம் அருணாசலபுரம், வடக்கு முத்துலாபுரம், சக்கிலிபட்டி, அயன் ராசாப்பட்டி கிராமங்களில் புதிதாக பட்டாசு ஆலைகள் அமைய வேலைகள் நடந்து வருவதும், கடந்த 02/10/2024 காந்தி ஜெயந்தி அன்று மாவில்பட்டி ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் பட்டாசு ஆலைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

காணொளி இணைப்பு : வடக்கு முத்துலாபுரம் கிராமத்தில் இருந்து எடுக்கப்பட்டது

13/06/2025

மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் மேலக்கரந்தை என்ற இடத்தில் சாலை விபத்து.

லாரியின் பின்னால் கார் மோதி விபத்து எனவும், 1 காவலர் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு எனவும் தகவல்.

மேலக்கரந்தை சாலை விபத்துக்கு உள்ளான கார் தஞ்சாவூர் நீதிபதி அவர்களின் கார் எனவும், காரில் நீதிபதி, அவரது (Gun man) மெய்க்காவலர், ஓட்டுநர் மற்றும் ஒருவர் பயணம் செய்ததாகவும், அதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே மரணம் எனவும் தகவல்.

#சாலையில்_கவனம்
#சீட்பெல்ட்_அணிந்து_வாகனம்_இயக்குவீர்

|
| |
| | | | |

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழகம் மதுரை கோட்டம் விருதுநகர் மண்டலத்தின் கீழ் இயங்கும் அருப்புக்கோட்டை பணிமனைப் பேருந்த...
23/05/2025

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழகம் மதுரை கோட்டம் விருதுநகர் மண்டலத்தின் கீழ் இயங்கும் அருப்புக்கோட்டை பணிமனைப் பேருந்து புதூர் - கோவில்பட்டி ( வழி: செங்கோட்டை, மேலக்கரந்தை, தாப்பாத்தி, முத்துலாபுரம், எட்டயபுரம்) வழித் தடத்தில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வந்தது. இந்தப் பேருந்து மூலம் கோவில்பட்டியில் வசிக்கும் புதூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் மற்ற அரசுப் பணியாளர்களும், புதூரில் வசிக்கும் எட்டயபுரம், கோவில்பட்டி பகுதிகளில் பணிபுரியும் பணியாளர்களும், பல பொதுமக்களும் பயனடைந்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த 4 தினங்களாக இந்த பேருந்து சேவை நிறுத்தப்பட்டு விட்டது. அருப்புக்கோட்டை பணிமனை மேலாளரிடம் விசாரித்ததில் கலெக்சன் இல்லாததால் இந்த பேருந்து சேவை நிரந்தரமாக நிறுத்தப்படுவதாக தெரிவித்தார்.
புதூரில் இருந்து இன்னும் சில காலங்களில் மாவட்டத் தலைநகராக மாறவிறுக்கும் கோவில்பட்டி நகருக்கு புதூரில் இருந்து பல தனியார் பேருந்து சேவை இருந்தாலும் அவை அனைத்தும் விளாத்திகுளம் வழியாக செல்வதால் கோவில்பட்டி சென்றடைய குறைந்தது 2 மணி நேரத்திற்கும் மேல் ஆகிவிடுகிறது. இந்த அரசுப்பேருந்து மட்டுமே புதூரில் இருந்து 1 மணி 15 நிமிடத்தில் கோவில்பட்டி சென்றுவிடுகிறது. இப்படி இருக்கையில் எந்த வித முன்னறிவிப்பும் இன்றி இந்த பேருந்து சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டது புதூர் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது...

|
| |
| | |

புதூர்  நகரில் இயங்கிவரும் அரசு பொது நூலகத்தில் இணைய வசதிகளுடன் கூடிய கணிணி அறிமுகப்படுத்தப்பட்டு பலமாதங்கள் ஆகிவிட்டது....
15/12/2024

புதூர் நகரில் இயங்கிவரும் அரசு பொது நூலகத்தில் இணைய வசதிகளுடன் கூடிய கணிணி அறிமுகப்படுத்தப்பட்டு பலமாதங்கள் ஆகிவிட்டது.எனவே,மாணவர்கள், அரசு போட்டி தேர்வுக்கு பயில்பவர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.


|
|
| |

12/12/2024

அதிகனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை(Red Alert) விடுக்கப்பட்டுள்ளதன் காரணமாக நாளையும் (13/12/2024) நமது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவு

|
|
|
| |

கனமழை காரணமாக இன்று (12/12/2024) ஒரு நாள் மட்டும் நமது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு மட்டும் விடும...
12/12/2024

கனமழை காரணமாக இன்று (12/12/2024) ஒரு நாள் மட்டும் நமது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை - மாவட்ட ஆட்சியர்.

|
|
|
| |

11/12/2024

2023-2024 ஆம் ஆண்டிற்கான பயிர் காப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தி நமது புதூர் பேருந்து நிலையம் முன்பு புதூர் வட்டார விவசாயிகள் ஆர்ப்பாட்டம்.

|
|
| |

என்று தணியும் இந்த கோரிக்கை ஏக்கம்....😴பல ஆண்டுகளாக வைக்கப்படும் கோரிக்கை...    |    |    |   |
10/12/2024

என்று தணியும் இந்த கோரிக்கை ஏக்கம்....😴

பல ஆண்டுகளாக வைக்கப்படும் கோரிக்கை...



|
|
| |

ஆமா நம்ம புதூர் தான்...😏😏பல ஆண்டுகளாக வைக்கப்படும் கோரிக்கை...     |    |    |   |
08/12/2024

ஆமா நம்ம புதூர் தான்...😏😏
பல ஆண்டுகளாக வைக்கப்படும் கோரிக்கை...



|
|
| |

தாண்டவமாடும் பன்றிகள் இரையாகும்விவசாயிகள், கண்டு கொள்ளாத மாவட்ட நிர்வாகம் :தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் வட்டம் அயன்...
22/11/2024

தாண்டவமாடும் பன்றிகள் இரையாகும்விவசாயிகள், கண்டு கொள்ளாத மாவட்ட நிர்வாகம் :
தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் வட்டம் அயன்கரிசல் குளம் கிராமத்தை சேர்ந்தவர் போகன் ராஜ் த/பெ ஆண்டிக் கோனார் (62) இன்று காலை ஊருக்கு வடபுறம் உள்ள தனது மக்காச் சோளம் பயிரிட்ட நிலத்திற்கு இரண்டு தினங்களுக்கு முன் பெய்த மழைக்கு நிலத்தில் ஈரப்பதம் எப்படி உள்ளது என்பதை சுற்றிப்பார்த்து உள்ளார். திடீரென அங்கு மக்காச் சோளம் பயிருக்குள் மறைந்திருந்துசேதப்படுத்தி கொண்டிருந்த பன்றியை சத்தம் போட்டு விரட்டி உள்ளார். அதை கண்டவுடன் கோபத்துடன் சீறி வந்து மோகன்ராஜை தாக்கியுள்ளது. கையில் காயமடைந்தவர் அக்கம்பக்கத்து விவசாயிகளுக்கு போன் செய்துள்ளர். சண்முகராஜ் (54) த/பெ சுப்பா ரெட்டியார், ராமசாமி (62) த/பெ சின்னு கோனார் ஆகியோர் அங்கு விரைந்து வந்துள்ளனர். மூவரும் சேர்ந்து பன்றியை விரட்டியுள்ளனர். மீண்டும் கோபத்துடன் திருப்பி தாக்கியுள்ளது. இதனால் ராமசாமி மற்றும் சண்முகராஜை கை, கால், உடல் முழுவதும் பன்றி கடித்து குதறியது. தகவல் தெரிந்த அயன் கரிசல்குளம் கிராமத்தை சேர்ந்தவர்கள் மேற்கண்ட மூவரையும்அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு அவசர பிரிவில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு புதூர் அருகே கம்பத்துபட்டி கிராமத்தை சேர்ந்த அய்யரப்பன் என்ற விவசாயி ஆடு மேய்த்து கொண்டிருந்த நிலத்தில் பன்றி கடித்ததில் படுகாயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை செய்யப்பட்டார். பயிரிட்ட நிலங்களில் களை பறிக்கவோ, உரமிடவோ, பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கவோ காட்டுப் பன்றிகளின் அட்டூழியத்தால் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 2019 முதல் காட்டுப் பன்றிகள் விவசாய நிலங்களை பெரும் சேதப்படுத்தி வருகிறது. முற்றிலும் கட்டுப்படுத்த தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இது வரை நடவடிக்கை எடுக்கவில்லை. பன்றிகளின் அட்டூழியத்தால் விவசாய நிலங்களுக்கு செல்வதற்கும், சாகுபடி செய்வதற்கும் முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பன்றிகளின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், பன்றிகளால் விவசாய நிலங்களில் ஏற்பட்ட சேதத்திற்கும் அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

20/11/2024

தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை காரணமாக தொடர்ந்து இரண்டாவது நாளாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் திரு.இளம் பகவத் அறிவிப்பு.

|
| |
| |

Address

Pudur

Website

Alerts

Be the first to know and let us send you an email when நம்ம புதூர். posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share