22/11/2024
தாண்டவமாடும் பன்றிகள் இரையாகும்விவசாயிகள், கண்டு கொள்ளாத மாவட்ட நிர்வாகம் :
தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் வட்டம் அயன்கரிசல் குளம் கிராமத்தை சேர்ந்தவர் போகன் ராஜ் த/பெ ஆண்டிக் கோனார் (62) இன்று காலை ஊருக்கு வடபுறம் உள்ள தனது மக்காச் சோளம் பயிரிட்ட நிலத்திற்கு இரண்டு தினங்களுக்கு முன் பெய்த மழைக்கு நிலத்தில் ஈரப்பதம் எப்படி உள்ளது என்பதை சுற்றிப்பார்த்து உள்ளார். திடீரென அங்கு மக்காச் சோளம் பயிருக்குள் மறைந்திருந்துசேதப்படுத்தி கொண்டிருந்த பன்றியை சத்தம் போட்டு விரட்டி உள்ளார். அதை கண்டவுடன் கோபத்துடன் சீறி வந்து மோகன்ராஜை தாக்கியுள்ளது. கையில் காயமடைந்தவர் அக்கம்பக்கத்து விவசாயிகளுக்கு போன் செய்துள்ளர். சண்முகராஜ் (54) த/பெ சுப்பா ரெட்டியார், ராமசாமி (62) த/பெ சின்னு கோனார் ஆகியோர் அங்கு விரைந்து வந்துள்ளனர். மூவரும் சேர்ந்து பன்றியை விரட்டியுள்ளனர். மீண்டும் கோபத்துடன் திருப்பி தாக்கியுள்ளது. இதனால் ராமசாமி மற்றும் சண்முகராஜை கை, கால், உடல் முழுவதும் பன்றி கடித்து குதறியது. தகவல் தெரிந்த அயன் கரிசல்குளம் கிராமத்தை சேர்ந்தவர்கள் மேற்கண்ட மூவரையும்அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு அவசர பிரிவில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு புதூர் அருகே கம்பத்துபட்டி கிராமத்தை சேர்ந்த அய்யரப்பன் என்ற விவசாயி ஆடு மேய்த்து கொண்டிருந்த நிலத்தில் பன்றி கடித்ததில் படுகாயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை செய்யப்பட்டார். பயிரிட்ட நிலங்களில் களை பறிக்கவோ, உரமிடவோ, பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கவோ காட்டுப் பன்றிகளின் அட்டூழியத்தால் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 2019 முதல் காட்டுப் பன்றிகள் விவசாய நிலங்களை பெரும் சேதப்படுத்தி வருகிறது. முற்றிலும் கட்டுப்படுத்த தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இது வரை நடவடிக்கை எடுக்கவில்லை. பன்றிகளின் அட்டூழியத்தால் விவசாய நிலங்களுக்கு செல்வதற்கும், சாகுபடி செய்வதற்கும் முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பன்றிகளின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், பன்றிகளால் விவசாய நிலங்களில் ஏற்பட்ட சேதத்திற்கும் அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.