Ladder TV

Ladder TV We Ladder commercial solutions a well known advertisement agency with a full fledged production house

"இறந்தும் வாழ்கிறார் அண்ணா" 1962ஆம் ஆண்டு, மே மாதம், ஒன்றாம் நாள்…அறிஞர் அண்ணா தனது முதல் உரையைப் பாராளுமன்றத்தில் நிகழ்...
03/02/2025

"இறந்தும் வாழ்கிறார் அண்ணா"

1962ஆம் ஆண்டு, மே மாதம், ஒன்றாம் நாள்…

அறிஞர் அண்ணா தனது முதல் உரையைப் பாராளுமன்றத்தில் நிகழ்த்துகிறார். அண்ணாவின் பேச்சு அங்கிருந்த அனைவரையும் திடுக்கிட வைத்தது..

"உங்களோடு ஒரு நாடாக இருக்கக் கூட ஆசைதான். ஆனால் ஆசை வேறு. உண்மைகள் வேறு" என்று தொடங்கிய அண்ணா,

"இந்த உலகத்திற்கு வழங்கத் திட்டவட்டமான, தெளிவான, மற்றவர்களிடம் இருந்து வேறுபட்ட சில செய்திகள் எங்களிடம் உண்டு. அதனால் எங்களுக்கு தன்னாட்சி உரிமை தேவை என்று விரும்புகிறோம்" என்று அண்ணா பேசியபோது நாடாளுமன்ற மேலவை அரண்டுதான் போனது.

தென்னகத்தில் கொதித்தெழும் புதிய தேசிய இனம் பற்றிக் குறிப்பிட்டு, விழிப்புற்றிருக்கும் அவர்களின் சார்பில் தான், தன் பேச்சு அமைந்திருப்பதாக அண்ணா கூறினார்.

"இந்தியா ஒரு நாடல்ல" என்றும், "ஏற்கனவே பிரிந்து இருந்த நாடுகள் ஒன்று சேர்ந்து இருக்கும் இந்தத் துணைக் கண்டம் ஒரு கூட்டாட்சியாகவோ அல்லது பிரிக்கப்பட்டோ சிறிய ஒரே மாதிரி மக்கள் வாழும் நாடுகளின் கூட்டமைப்பாக மாறுவது தவிர்க்க முடியாதது" என்று அண்ணா கூறினார்.

"எல்லாப் பகுதிகளும் கலந்து பழகி சமுதாய முன்னேற்றமும், பொருளாதார முன்னேற்றமும் இந்தக் கூட்டமைப்பில் கூட்டாட்சித் தத்துவமாகப் பெருகி வளரும்" என்றும் அண்ணா கூறினார்.

ஓர் ஒன்றிய அரசு கூடத் தேவைப்படாத கூட்டமைப்பைத்தான் அண்ணா உருவகமாகக் கட்டமைத்தார்.

"தமிழ்நாடு என்பது தேசம்; திராவிட நாடு என்பது ஒரு கூட்டரசு; இந்தியா என்பது ஒரு பாதுகாப்புக் கழகம்; தேசியத்தை இப்படிப் பார்க்கக் கற்றுக் கொள்ளுங்கள்" என்று அண்ணா பாராளுமன்றத்தில் பாடம் நடத்தினார்.

அண்ணா மறைந்து அரை நூற்றாண்டு கடந்து, 2022ஆம் ஆண்டில், இதே கருத்தைப் பாராளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் திரு. ராகுல் காந்தி பேசினார்.

"கூட்டாட்சித் தத்துவத்தை புரிந்து கொள்ள முடியாவிட்டால் தமிழ்நாட்டிற்குப் போய் அதைத் தெரிந்து கொள்ளுங்கள்" என்று ராகுல் காந்தி கூறியதன் பின்னால் அண்ணாவின் குரல் இருந்தது.

"எத்தனைக் காலம் ஆனாலும் தமிழ்நாட்டை, மதவாதம் ஆள முடியாது" என்று ராகுல்காந்தி முழங்கியதன் பின்னணியில் அண்ணாவின் குரல் இருந்தது.

நாடு, இனம், மொழி ஆகிய இன்றியமையாத உரிமைகளில், ஒன்றிய அரசு, காது கேளாதது போல் நடந்து கொண்டிருந்தால், அண்ணாவின் குரல் இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் பாராளுமன்றத்தில் தமிழினத்தின் உரிமைக் குரலாக, வேறு வேறு குரல்களாக ஒலித்துக் கொண்டேதான் இருக்கும்.

Commemorating Former Chief Minister of Tamil Nadu on his 56th Death Anniversary

Happy   &
02/02/2025

Happy &

Happy 49th
01/02/2025

Happy 49th

Happy
01/02/2025

Happy

Happy  &
01/02/2025

Happy


&

அன்பைப் போதித்து அனைத்துயிரையும் நேசிக்க வைத்த வள்ளலார்ஆன்மா நெறியே ஆன்மிகம் என்று உணர்த்திய வள்ளலார்இன்பத்தமிழில் அருட்...
30/01/2025

அன்பைப் போதித்து அனைத்துயிரையும் நேசிக்க வைத்த வள்ளலார்

ஆன்மா நெறியே ஆன்மிகம் என்று உணர்த்திய வள்ளலார்

இன்பத்தமிழில் அருட்பாக்களை அருளிய வள்ளலார்

ஈசனடியே சரணமென்றிருந்த வள்ளலார்

உள்ளத் தூய்மையை போதித்த உத்தமரான வள்ளலார்

ஊனமான மனதிற்கு ஊன்றுகோலாய் இருந்த வள்ளலார்

என்றென்றும் எங்கள் நெஞ்சினில் நிறைந்த மகானான வள்ளலார்

ஏணியாக நின்று அன்பென்ற சிகரத்தை அடைய வழிகாட்டிய வள்ளலார்

ஐயமில்லா கொள்கைகளை அனைவருக்கும் விதைத்த வள்ளலார்

ஒவ்வொரு உயிரும் இன்பமாய் வாழ இறைவனை வேண்டிய வள்ளலார்

ஓங்கி நிற்கும் அருட்பெருஞ்சோதி தனிப்பெரும் கருணை அருளிய அருட்பிரகாச வள்ளலார்

அஃதே அணையா விளக்கை ஏற்றி பசி எனும் இருளை அகற்ற பாடுபட்ட இராமலிங்க சாமியான வள்ளலார்
Commemorating on his Death Anniversary

Commemorating   78th on his Death Anniversary தீண்டாமை ஒழிப்பு உறுதி ஏற்பு நாள் &
30/01/2025

Commemorating 78th on his Death Anniversary

தீண்டாமை ஒழிப்பு உறுதி ஏற்பு நாள்

&

தை அமாவாசை • நம் ஊரில் உள்ள கோவில்களில் அமாவாசை அன்று சிறப்பாக பூஜை செய்யக் காரணம், அன்று தெய்வங்கள் மற்ற நாட்களில் சக்த...
29/01/2025

தை அமாவாசை

• நம் ஊரில் உள்ள கோவில்களில் அமாவாசை அன்று சிறப்பாக பூஜை செய்யக் காரணம், அன்று தெய்வங்கள் மற்ற நாட்களில் சக்தியுடன் இருப்பதை காட்டிலும் அதிக சக்தியுடன் அமானுஷ்ய விஷயங்களிருந்து ஊரைக் காக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் அன்று சிறப்பாக பூஜை செய்யப்படுகிறது.

• நம்மைப் பெற்று வளர்த்து ஆளாக்கி மறைந்த தாய், தந்தையரையும், முன்னோர்களையும் நினைத்து ஒவ்வொரு அமாவாசையும் நினைவுகூர்ந்து தர்ப்பண சடங்கு நிறைவேற்றுவது மிகவும் புண்ணிய காரியமாக சொல்லப்படுகிறது. மூதாதையரை நினைத்து காகத்திற்கு உணவளித்து சாதம் வைத்து வழிபட்டால் மிகுந்த நன்மைகள் கிடைக்கும்.

அமாவாசை அன்று குலதெய்வ வழிபாடு செய்வது மிகவும் நல்லது.

Happy

&

Happy  குடும்ப எழுத்தறிவு நாள் வாழ்த்துகள்!
27/01/2025

Happy
குடும்ப எழுத்தறிவு நாள் வாழ்த்துகள்!

மனிதகுல வரலாற்றில் திகிலூட்டும் ஒரு பெயர் “ஆஷ்விச்”. இரண்டாம் உலகப்போரில் போலந்தில் நாஜிக்கள், யூதர்களைக் கொன்று குவிப்ப...
27/01/2025

மனிதகுல வரலாற்றில் திகிலூட்டும் ஒரு பெயர் “ஆஷ்விச்”. இரண்டாம் உலகப்போரில் போலந்தில் நாஜிக்கள், யூதர்களைக் கொன்று குவிப்பதற்குத் தேர்ந்தெடுத்த இடம்தான் ஆஷ்விச்…

நெற்றிப்பொட்டில் வைத்து சுட்டுக் கொல்வது, சாகப்போவதற்கு முன் யூதர்களையே சவக்குழியை தோண்ட வைப்பது, விஷவாயுக் கிடங்கில் நுழைவதற்கு முன் குழந்தைகளுக்கு சாக்லேட் கொடுத்து அனுப்பியது, ஆயிரம் கன்னிப் பெண்களை ஒரே நேரத்தில் பலாத்காரம் செய்து கொன்றது, வகைவகையான ரசாயனங்கள் மூலம் கொன்றது, சிம்பொனி இசையை ஆயிரம் டெசிபலில் அலறவிட்டுக் கொன்றது, பட்டினிப்போட்டு கொன்றது என ஹிட்லர் நாஜிப்படைகளின் கொலைக்கலை நடுநடுங்க வைக்கும். இந்தப்போரில் 75 லட்சம் யூதர்கள் கொல்லப்பட்டார்கள். இதில் 15 லட்சம் பச்சிளம் குழந்தைகள். ஆஷ்விச்சில் கொல்லப்பட்டவர்கள் மட்டும் 20 லட்சம்.

இதே நாளில் ஸ்டாலின் சோவியத் ரஸ்ய ராணுவம் ஆஷ்விச்சில் நுழைந்து கைப்பற்றி எஞ்சி இருந்தவர்களைக் காப்பாற்றியது. இந்த நாள் ஆஷ்விச் நினைவு நாளாக உலகம் முழுவதும் நினைவுகூரப்படுகிறது. இன்று 81வது ஆண்டு நினைவு நாள்.

நாஜிகளின் கொலைவெறித் தாண்டவம் மற்றும் ஆஷ்விச் படுகொலைகள் பற்றி எண்ணற்ற நூல்கள், திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. அதில் இருவரின் படைப்புகள் மிக முக்கியமானவை. யூதரான ப்ரைமோ லெவி விஷவாயுக்கிடங்கின் வாயிலில் அவர் ஒரு விஞ்ஞானி என அறிந்து அவரை நாஜிக்கள் ரசாயனத் தொழிற்சாலைக்கு அனுப்பினார்கள். அதாவது யூதர்களைக் கொல்வதற்கு வகைவகையான ரசாயனங்களைக் கண்டுபிடிக்க அவரை நியமித்தனர். ஏராளமான புனைவுகளை அபாராமாக எழுதியவர், பின்னாளில் மன உளைச்சலில், மன அழுத்தத்தில் 70 வயதில் தன்னை மாய்த்துக் கொண்டார்.

பல திரைப்படங்கள் வெளிவந்தாலும் ரோமன் போலன்ஸ்கியின் The Pianist என்ற திரைப்படம் பார்க்க நெஞ்சுரம் தேவை. கலவரமூட்டும் படம்…

ஆஷ்விச் கொலைகளைப் பார்த்த ஃப்ராங்பர்ட் மார்க்சிய சிந்தனைப் பள்ளியின் முக்கிய சிந்தனையாளர் அடார்னோ, "இனிமேல் கவிதை சாத்தியமில்லை" என அறிவித்தார். வக்கிரம், வன்மம், காழ்ப்பு, பகை, வெறுப்பின் சின்னமாக ஆஷ்விச் வரலாற்றில் இடம்பெற்றுள்ளது.

இந்தப் புகைப்படத்தில் காணப்படும் குவியல் குவியலான மோதிரங்களின் பின்னணி கலங்க வைக்கும். இளம் யூத தம்பதிகளை, கொல்லப்படுவதற்கு முன் அவர்கள் விரல்களில் அணிந்திருந்த wedding rings கழட்டப்பட்டு சேகரிக்கப்பட்டது. ஒவ்வொரு வளையத்திற்கும் பின் எவ்வளவு அற்புதமான கனவுகள் இருந்திருக்கும்…

பன்னாட்டு இன அழிப்பு நிகழ்வுகளில் பாதிப்படைந்தவர்களை நினைவுகூரும் நாள்
International Day of Commemoration in Memory of the Victims of the Holocaust

Happy & பன்னாட்டு சுங்கத்துறை நாள் வாழ்த்துகள்!
26/01/2025

Happy

&

பன்னாட்டு சுங்கத்துறை நாள் வாழ்த்துகள்!

குடிமக்களுக்காககுடிமக்களேபிரதிநிதிகளாகி ஆட்சி செய்திடும்குடியாட்சியின் அடித்தளம் குடியரசுகுடியரசு நாடுகள்தனக்கான சட்டங்க...
26/01/2025

குடிமக்களுக்காக
குடிமக்களே
பிரதிநிதிகளாகி
ஆட்சி செய்திடும்
குடியாட்சியின்
அடித்தளம் குடியரசு

குடியரசு நாடுகள்
தனக்கான
சட்டங்களை
குடிமக்களின்
பிரதிநிதிகளைக்
கொண்டு
தாங்களே
உருவாக்கி
ஜனநாயகத்தை
தழைக்கச்
செய்கின்றது

குடியரசு நாடு
மக்களாட்சி நாடு

இந்திய தேசம்
தனது 76வது
குடியரசு நாளை
26.01.2025ல்
கொண்டாடுவதில்
பெருமை கொள்கிறது!

இந்திய
குடிமக்களாகிய
நாம் அனைவரும்
இந்தக் குடியரசு நாளில்
பெருமிதம் கொள்வோம்!!

குடியரசு நாள் வாழ்த்துகள்!!!
Happy

தமிழ் மொழி தியாகிகள் நாள் வாழ்த்துகள்!மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்க நாள்
25/01/2025

தமிழ் மொழி தியாகிகள் நாள் வாழ்த்துகள்!
மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்க நாள்

Address

18/35, Neelakanda Metha Street
T. Nagar
600017

Alerts

Be the first to know and let us send you an email when Ladder TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ladder TV:

Share

Category