Ladder TV

Ladder TV We Ladder commercial solutions a well known advertisement agency with a full fledged production house

Happy
01/11/2025

Happy

சேலத்தின் பெருமைகள்⏩ 1859ல் சேலம் மாவட்டத்தில் காவல்துறை ஆரம்பிக்கப்பட்டது.⏩ சேலம் அரசு மருத்துவமனை 1858ம் ஆண்டு துவங்கப...
01/11/2025

சேலத்தின் பெருமைகள்

⏩ 1859ல் சேலம் மாவட்டத்தில் காவல்துறை ஆரம்பிக்கப்பட்டது.

⏩ சேலம் அரசு மருத்துவமனை 1858ம் ஆண்டு துவங்கப்பட்டது.

⏩ 1866 சேலம் நகராட்சி துவங்கப்பட்டது.

⏩ 1862ல் சேலம் சிறைச்சாலை கட்டப்பட்டது.

⏩ அலெக்சாண்டர் ரீடு என்பவர் சேலம் மாவட்ட முதல் கலெக்டர். ஆண்டு 1792.

⏩ காந்தி சேலத்தில் 1925ல் திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்தை திறந்து வைத்தார்.
இதுதான் அவரது முதல் வருகை.

⏩ 1911 சூரமங்கலம் டூ செவ்வாய்பேட்டை ரயில்வே லைன் அமைக்கப்பட்டது.

⏩ 1917 டவுன் ரயில்வே ஸ்டேஷன் கட்டப்பட்டது.

⏩ 1917 ராஜாஜி நகராட்சி சேர்மன் ஆனார்.

⏩ 1917 ஏற்காடு மான்போர்ட் பள்ளி கட்டப்பட்டது.

⏩ 1976 சேலம் மியூசியம் ஆரம்பிக்கப்பட்டது.

⏩ தரமான சேலம் தேனிரும்பிற்காக
1830ல் East India Iron and Steel Company ஆரம்பிக்கப்பட்டது. இங்கிருந்து உலக நாடுகள் அனைத்திற்கும் ஸ்டீல் ஏற்றுமதி செய்யப்பட்டது.

⏩ 1862ல் சேலம் அரசு கலைக்கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது.

⏩ அப்பர் கிபி 6ம் நூற்றாண்டில் சேலத்தில் உள்ள சைவ கோவில்களுக்கு வருகை புரிந்தார்.

⏩ கிபி 1311ல் மாலிக்கபூர் தென்னாட்டு செல்வங்களை கொள்ளை அடித்துக்கொண்டு சேலம் வழியாக தொப்பூர் கணவாயை கடந்தார். அதாவது அதியமான் பெருவழியில்.

⏩ 1862ல் ஏற்காடு - சேலம் சாலை அமைக்கப்பட்டது. இயக்கப்பட்ட முதல் பேருந்து NS.

⏩ சேலம் மாவட்ட முதல் தினசரி பத்திரிக்கை தினத்தாள்.

⏩ 1976ஆம் அரசு மகளிர் கலைக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது.

⏩ கிபி முதலாம் நூற்றாண்டில் ரோமானியர் சேலம் வருகை புரிந்தனர். இங்கிருந்து மிளகு சந்தனம், எஃகு (salem steel) ஆகியவற்றை வாங்கிக் கொண்டு சென்றனர்.

Happy Statehood Day of &

&
160th

தஞ்சை பெரிய கோயில கட்டினது யாரு?-ன்னு கேட்டா, எல்லோரும் யோசிக்காமல் "ராஜ ராஜ சோழன்னு" பதில் சொல்லிடுவாங்க.ஆனா, ராஜ ராஜ ச...
01/11/2025

தஞ்சை பெரிய கோயில கட்டினது யாரு?-ன்னு கேட்டா, எல்லோரும் யோசிக்காமல் "ராஜ ராஜ சோழன்னு" பதில் சொல்லிடுவாங்க.

ஆனா, ராஜ ராஜ சோழனோ, 'அந்த கோயில கட்டினது நான் இல்லை...'ன்னு சொல்றாரே!

தஞ்சை பெரிய கோயில் கட்டி முடிக்கப்பட்டு குடமுழுக்கு நாளும் குறிக்கப்பட்டு விட்ட நேரம் அது...

கோயில் எதிர்பார்த்தபடி நல்லபடியாய் கட்டி முடிக்க பட்ட சந்தோசத்துல ராஜ ராஜ சோழன் நிம்மதியா தூங்கும் போது... கனவுல இறைவன் ஆன பரமசிவன் அவன் முன்னே எழுந்தருளினார்.

'ராஜா ராஜா!' என்றழைக்க...

ராஜ ராஜ சோழன், "இறைவா என் பாக்கியம் என்னவென்று சொல்வது... தாங்கள் எனக்கு காட்சி தந்தது நான் செய்த பாக்கியம்... தங்களுக்கு நான் கட்டிய கோயில் எப்படி இருக்கிறது? இந்த ஊரிலே எல்லோரும் வியந்து பார்க்கும் மிக பெரிய கோயிலாக கட்டியுள்ளேன். அதற்குத் 'தஞ்சை பெரிய கோயில்' என்று பெயர் சூட்டப் போகிறேன்... மகிழ்ச்சி தானே தங்களுக்கு?" என்று ஆனந்தமாகக் கேட்டான்.

இறைவன் சிரித்து கொண்டே, "ம்ம்ம் மிகவும் ஆனந்தமாக இருக்கிறோம்... ஒரு இடைச்சி மூதாட்டியின் காலடி நிழலின் கீழ் யாம் மிகவும் ஆனந்தமாக இருக்கிறோம்..." என்று கூறி மறைந்தார்.

ராஜ ராஜனின் கனவும் கலைந்தது. விழித்தெழுந்த ராஜராஜன் தான் கண்ட கனவைப் பற்றி மறுநாள் அரசவையில் கூறி அந்தக் கனவுக்கு விளக்கம் கேட்டான். யாருக்கும் பதில் தெரியவில்லை.

பின் நேராக கட்டி முடிக்கப்பட்ட தஞ்சைப் பெரிய கோயிலுக்குச் சென்றான். கோயில் சிற்பியிடம் தான் கண்ட கனவைக் கூறி விளக்கம் கேட்டான்.

சிற்பி தயங்கியவாறே, "அரசே கடந்த மூன்று மாதங்களாக மோர் விற்கும் வயதான ஒரு ஏழை இடைச்சி மூதாட்டி தினமும் மத்திய வேளையில் இங்கு வருவார்... ஏழ்மை நிலையில் இருந்தாலும் தன் பங்குக்கு இந்தக் கோயிலுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்று எண்ணி தான் விற்கும் மோரில் பாதியை காசுக்காகவும், பாதியை இந்த கோயிலுக்காக வேலை செய்யும் எங்களுக்கு குடிக்க இலவசமாக கொடுப்பார். நாங்கள் காசு கொடுத்தாலும் வாங்க மறுத்து விடுவார். எதோ இந்த ஏழை இடைச்சியால் இந்த கோயிலுக்கு செய்ய முடிந்த தொண்டு என்று கூறி காசு வாங்க மறுத்திடுவார்.

இப்படி இருக்கும் போது போன வாரத்தில் ஒரு நாள், ஆலய சிற்பங்களின் எல்லா வேலையும் முடித்த எங்களுக்கு இறைவனின் கருவறையின் மேலிருக்கும் கல்லை மட்டும் சரி செய்யவே முடியவில்லை. நாங்களும் அதன் அளவை எவ்ளவோ முயற்சி செய்து அளவெடுத்து வைத்தாலும் ஒன்று கல் அளவு அதிகமாக இருந்தது அல்லது குறைவாக இருந்தது. எங்கே ஆலய பணி நடக்காமல் போய்விடுமோ என்று நாங்கள் கவலையுடன் இருந்தோம்...

அப்பொழுது இந்த மோர் விற்கும் இடைச்சி மூதாட்டி வந்து மோர் கொடுத்து கொண்டே, 'ஏன் கவலையாய் இருக்குறீர்கள்?' என்று கேட்டார்கள்.

நாங்களும் கல் சரி ஆகாத விசயத்தை சொன்னோம். அதற்கு அவர்கள் என் வீட்டு வாசற்படியில் பெரிய கல் ஒன்று உள்ளது... நான் அதைத்தான் என் வீட்டுக்கு வாசற்படி போல் வைத்துள்ளேன். அதை வேண்டுமானால் எடுத்துப் பொருத்திப் பாருங்கள் என்றார். நாங்களும் நம்பிக்கை இல்லாமல் அந்த இடைச்சி மூதாட்டி சொன்ன கல்லை எடுத்து வந்து பொருத்தினோம். என்ன ஆச்சிரியம்! கருவறையின் மேற் கூரைக்கு அளவெடுத்து வைத்தது போல் மிக சரியாக இருந்தது. அதைதான் இறைவன் தாங்களுக்கு உணர்த்தி இருப்பார் என்று அடியேன் நினைக்கிறன்” என்றான்.

இதைக் கேட்டதும் ராஜராஜனுக்கு எல்லாம் புரிந்தது. எவ்வளவு பொருள் செலவு செய்து கோயில் கட்டினாலும் இறைவன் நேசிப்பது அன்பான ஒரு ஏழையின் பக்தியை தான். ஆரவாரமாக பொருள் செலவு செய்து நான் கோயிலைக் கட்டினாலும், அமைதியாக ஏழ்மை நிலையிலும் அந்த இடைச்சி விற்க இருந்த மோரை கோயில் திருப்பணி செய்வோருக்கு அர்ப்பணித்தாரே... என்று கண்ணீர் மல்கினார்.

பின் தன் அமைச்சரை அழைத்து, "அமைச்சரே குடமுழுக்கு நடக்கும் நன்னாளில் அந்த இடையர்குல மூதாட்டியை அரண்மனைக்கு அழைத்து வாருங்கள். நான் வெண்குடை ஏந்தி அந்த அம்மையாரை வைத்து கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்யுங்கள். இந்தக் கோயில் கட்டியது அந்த மூதாட்டி இடைச்சி தான். நான் அல்ல... இதற்கு இறைவனே சாட்சி” என்றான்.

இடைச்சி கல்

தஞ்சைப் பெரிய கோயிலின் உச்சியில் இருக்கும் கல்லே "இடைச்சி கல்". தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் கட்டுமான பணி நடந்து கொண்டிருந்தது. அழகி என்னும் இடையர் குல மூதாட்டி சிவத்தொண்டு செய்ய விரும்பினார். ஏழை மூதாட்டி தன்னால் இயன்ற தொண்டாக கோவில் கட்டி முடிக்கும் வரை கோவில் கட்டும் சிற்பிகளின் தாகத்தைப் போக்கும் பொருட்டு தினமும் அவர்களுக்கு தயிர், மோர் வழங்கி வந்தார். இதனை அறிந்த மன்னர் அருள்மொழிவர்மன் (ராஜராஜ சோழன்) இடையர் குல மூதாட்டியின் சிவத்தொண்டை அனைவரும் அறியும் வண்ணம் 80 டன் எடை கொண்ட கல்லில் அழகி என்று பெயர் பொறித்து, அதனை ராஜகோபுரத்தின் உச்சியில் இடம் பெறச் செய்தார். அந்தக் கல் இடைச்சி கல் என்று அழைக்கப்படுகிறது. அந்த கல்லின் நிழலே பிரகதீஸ்வரர் மேல் விழுகிறது.

Commemorating Emperor on his 1040th Birth Anniversary
Sathaya Vizha
உள்ளாட்சி நாள் வாழ்த்துகள்!
எல்லைப் போராட்ட தியாகிகள் நாள், கன்னியாகுமரி தமிழ்நாட்டுடன் இணைந்த நாள் வாழ்த்துகள்!
Happy

"காய்கறி" குறள்தக்காளி எப்போதும் உட்கொண்டால் தரணியில்எக்காலும் நோயில்லை காண்.எலுமிச்சை புளித்தாலும் எடுத்ததை உட்கொள்வீர்...
01/11/2025

"காய்கறி" குறள்

தக்காளி எப்போதும் உட்கொண்டால் தரணியில்
எக்காலும் நோயில்லை காண்.

எலுமிச்சை புளித்தாலும் எடுத்ததை உட்கொள்வீர்
எலும்புக்கு சேர்த்திடுவீர் வலு.

வெங்காயம் இல்லாச் சாம்பார் எஞ்ஞான்றும்
தங்காதே நாவில் ருசி.

பொல்லாத பேரையும் நல்லவ ராக்குமே
புடலங்காய் போற்றிச் சுவை.

தள்ளாத வயதிலும் உள்ளே தள்ளுவாய்
முள்ளங்கி மூன்றினைத்தான்.

வெண்டைக்காய் இருக்கையில் சுண்டை எந்நாளும்
தொண்டையில் இறங்காது காண்.

வள்ளிக் கிழங்குண்ணார் வையத்தில் வாழ்ந்தும்
வாழாதார் என்பது வழக்கு.

கத்தரி உண்பாரே உண்பார் மற்றெல்லாம்
இத்தரையில் பித்தருக்குச் சமம்.

பூசணியைச் சேர்த்தாரே புண்ணியர் பூவுலகில்
புகழோடு வாழ்வார் அவர்.

காய்கறியைத் தின்னாதார் வாழ்க்கை எப்போதும்
நோய்நொடியில் வீழ்ந்து கெடும்.

முருங்கைக்காய் ருசித்தாரே ருசிக்கா மற்றோரெல்லாம்
வெறுங்கையில் முழம் போடுவர்.

காரிருளில் கண்தெரிய வேண்டுமெனில் தட்டில்
சேரீர் கரிசலாங் கண்ணி.

இரும்பைப் போல் இதயமது வேண்டுமெனில்
கரும்பைப் போய் விரும்பிச்சுவை.

உரிக்க உரிக்கத் தோல்தான் வெங்காயம்
செரிக்குமோ உரிக்கா விடில்.

பறித்தவுடன் உண்ணுவீர் பரங்கியை எப்போதும் பலனது வேண்டு மெனில்.

பாகற்காய் கசக்கும் என்பதால் சீண்டாதார் சோகத்தில் சோர்ந்து விழுவர்.

வெல்லத்தில் இரும்புண்டு ஆகையினால் சாப்பாட்டில்
ஒருதுண்டு சேர்த்துச் சமை.

வாழ்வதனால் ஆய பயனென்கொல் வாழைக்காய்
தாழ்வேனெவே எண்ணு பவர்.

கேரட்டைச் சேர்க்காத சமையல் கேணியுள்
தேரை வாழ்ந்த கதை.

பீடுநடை போடுதல் வேண்டுமெனின் தினமும் பீட்ரூட்டை உணவில் சமை.

கொத்தவரை பீன்ஸ் முட்டைகோஸ் இவையெல்லாம்
சத்தேயென சரியாய் உணர்.

கறிவேப்பிலை மல்லி கடுகு சேராதோர்
சொறி பிடித்தோடுவார் காண்.

பொன்னிற மேனி வேண்டுமெனில் வேலி
பொன்னாங் கண்ணியைச் சேர்.

கண் இருந்தும் குருடரே காசினியில்
காய்கறியை உண்ணா தவர்.

Happy


&

கறிசுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்புவரை கூட மக்கள் கறிச்சோற்றுக்கு இப்படி ஆவலாய் ஆசைப்பட்டு பார்த்ததில்லை. இத்தனைக்கும் ...
01/11/2025

கறி

சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்புவரை கூட மக்கள் கறிச்சோற்றுக்கு இப்படி ஆவலாய் ஆசைப்பட்டு பார்த்ததில்லை. இத்தனைக்கும் அப்போது எல்லா வீடுகளிலும் ஆடு, கோழிகள் வளர்ப்பார்கள். இப்போது போல அப்போது இவற்றுக்கெல்லாம் பெரிய விலை மதிப்பும் கிடையாது.

கிராமங்களில் நிறைய வீடுகளில் ஆட்டுப்பட்டி இருக்கும். கோழிகளை அடைத்து வைக்கும் பெரிய பஞ்சாரம் இருக்கும். கூலி வேலை செய்பவர்கள் உட்பட வேலைக்குச்சென்று திரும்பும் வழியில், வேலிகளில் படர்ந்துள்ள கொடிகளை சேகரித்துக்கொண்டே செல்வார்கள் ஆடுகளுக்குத் தீவனம் போட.

அவர்கள் நினைத்திருந்தால் வாரம் ஒருமுறை என்ன, தினமும் கூட கறி சாப்பிட்டிருக்கலாம். ஆனால் அப்படிச்செய்ததில்லை. ஞாயிற்றுக்கிழமையானால் கறிச்சோறு தின்றே ஆகவேண்டும் என்று மக்கள் அலைந்ததில்லை. அசைவம் சாப்பிடுவதற்கான காரணங்கள் கூட மிக அரிதானவை.

வராத விருந்தாளிகள் (குறிப்பாக மருமகன்) வந்தால் கோழி அடித்து குழம்பு வைப்பார்கள். வீட்டில் குழந்தைகளுக்கு சளி பிடித்து இருந்தால் இளம் கோழிக்குஞ்சு சூப் வைத்துக் கொடுப்பார்கள். அவ்வளவே!

அய்யன் போன்ற சாமிகளுக்கு நேர்ந்துகொண்டு அவரவர் வீட்டிலேயே பொங்கல் வைத்து படையல் போடுவது உண்டு. சேவல் கட்டில் பலியாகும் சேவல் கறி... மற்றபடி ஆட்டுக்கறி சமையல் என்பது குலதெய்வம் அல்லது அவரவர் ஊரிலுள்ள சிறு தெய்வ வழிபாட்டின் போது கோவில்களுக்கு நேர்ந்து கொண்டு வளர்க்கப்படும் கிடாய் வெட்டும்போதுதான்.

உற்றார் உறவினர் எல்லோரும் வந்து சாப்பிட்டுவிட்டுப்போனது போக மீதமிருக்கும் கறியை (பெரும்பாலும் தொடைக்கறியை) தனியாக எடுத்து உப்புக்கண்டம் போட்டு, கம்பிகளில் கோர்த்து வெயிலில் காயவைத்து எடுத்து வைத்துக் கொள்வார்கள். மழைக் காலங்களில் ஆற்று மீன், கடல் மீன், குளத்து மீன் கிடைக்காதபோது அதுதான் பிரதான உணவு.

கொங்குப்பகுதியைப் பொறுத்தவரை அசைவ உணவு சமைப்பதும் உண்பதும் சற்று ஆச்சாரக்குறைவான விஷயமும் கூட... கல்யாணம், சீர், வளைகாப்பு இப்படி எந்த விசேஷத்திலும் அசைவ உணவு கிடையாது. துக்க வீடுகளிலும் அப்படித்தான். பதினாறாம் நாள் காரியம் உட்பட எதிலும் அசைவ உணவு கிடையாது.

அவ்வளவு ஏன், அசைவ உணவு சமைக்க தனியான பாத்திரங்கள் வைத்திருப்பார்கள். பெறால் சட்டி என்று அழைக்கப்படும் மேற்படி பாத்திரங்களைப் பிறநாள்களில் வீட்டுக்குள்ளேயே அனுமதிக்கமாட்டார்கள்... பொடக்காளி என்று அழைக்கப்படும் குளியல‌றையில் (வீட்டை ஒட்டி ஒரு ஓரமாக தென்னை அல்லது பனை ஓலைகளால் சுற்றிலும் மறைக்கப்பட்ட ஒதுக்கு அமைப்புதான் பொடக்காளி - புழக்கடை என்பதன் மரூஉ) ஒரு ஓரமாக கவிழ்த்து வைத்திருப்பார்கள். அசைவ சமையலுக்கு பயன்படும் அகப்பை அந்த ஓலைப்படலில் சொருகப்பட்டிருக்கும். அசைவம் சமைத்த அன்று இரவே சுத்தமாக கழுவி எடுத்துப்போய் பொடக்காளியில் வைத்துவிடுவார்கள். அடுத்த நாள் காலை எழுந்தவுடன் வீட்டை மாட்டுச்சாணம் போட்டு மெழுகிய (வளிச்சு உடறது) பிறகே அன்றைய வேலைகளை ஆரம்பிப்பார்கள்.

சமீபகாலமாக மக்கள் உணவுப்பழக்கத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்ற‌ம் வியக்கவைக்கிறது. ஞாயிற்றுக்கிழமையானால் கறி சாப்பிட்டே ஆகவேண்டும் என்பது தவிர்க்கவே முடியாத்தாகிவிட்டது. கறிக்கடைகளில் கூட்டம் நெறிபடுகிறது. திரும்பிய பக்கமெல்லாம் அசைவ ஹோட்ட‌ல்கள்.

பெரும்பாலான ஊர்களில் எங்காவது ஒரே ஒரு பிரியாணிக்கடை தான் இருக்கும். இன்று அதன் எண்ணிக்கை பலமடங்கு. கிராம மக்கள் நகரங்களை நோக்கி நகரும் இந்தக் காலத்தில் ஆடுவளர்ப்பு கணிசமாக குறைந்துவிட்டது.

திருப்பூர் மாவட்டம் - கன்னிவாடி ஆட்டுச்சந்தை தமிழ்நாட்டின் மிகப்பெரிய ஆட்டுச்சந்தைகளில் ஒன்று. இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை சந்தைக்கு வந்துகொண்டிருந்த ஆடுகளின் எண்ணிக்கையில் ஐந்தில் ஒருபங்கு கூட இப்போது வருவதில்லை. சென்னையைப் பொருத்த வரை ஆந்திராவிலிருந்து தான் ஆடுகள் வந்து கொண்டிருக்கிறது. அங்கு மட்டும் என்ன இதேநிலைதான் உற்பத்தி குறைவு. கோழிகளைப்போல ஆடுகளைப் பண்ணைகளில் வளர்க்கும் முறையும் இன்னும் அதிகரிக்கவில்லை.

நாள்தோறும் புற்றீசல் போல முளைக்கும் இத்தனை அசைவ ஹோட்டல்களுக்குத் தேவையான கறி எங்கிருந்து கிடைக்கும்? அத்தனையும் சுத்தமான, சுகாதாரமான ஆட்டுக்கறிதான் என்று உறுதி செய்ய யாரால் முடியும்?

அப்புறம் அவன் கிடைக்கும் எல்லாக் கறியையும் கலந்து விற்கத்தான் செய்வான். நோய்வாய்ப்பட்டு இறந்த ஆடுகள், கோமாரி நோயால் செத்த மாடுகள் மற்ற நாலுகால் பிராணிகள் கறி என இப்படி எல்லா இறைச்சிகளும் கலந்து விற்கத்தான் செய்வார்கள். கறியில் கலக்கப்படும் எக்கச்சக்கமான மசாலாக்கள், நிறமிகள், பிரிசர்வேட்டிவ்கள் கலக்கப்படுவதால் நம்மால் வித்தியாசம் கண்டுபிடிக்கவும் முடியாது.

தப்பிக்க ஒரே வழி... குறைந்தபட்சம் அசைவ உணவுகளைப் பொறுத்தவரைக்குமாவது நம் நம்பிக்கைக்குப் பாத்திரமான கடைகள் அல்லது நம் மரபு சார்ந்த பழக்க வழக்கங்களுக்குத் திரும்புவது மட்டும்தான்.

Happy

&

Happy  150th Birth Anniversary of  &41st Death Anniversary of
31/10/2025

Happy
150th Birth Anniversary of
&
41st Death Anniversary of

பசும்பொன் முத்துராமலிங்கனார் பிறந்தது மறவர் சமூகம்முத்துராமலிங்கனார் உயிரோடு இருக்கும் போதேஅவருக்கு சிலை வைத்தது கள்ளர்க...
30/10/2025

பசும்பொன் முத்துராமலிங்கனார் பிறந்தது மறவர் சமூகம்

முத்துராமலிங்கனார் உயிரோடு இருக்கும் போதே
அவருக்கு சிலை வைத்தது கள்ளர்கள்

முத்துராமலிங்கனாரைப் பற்றி முழுமையான வரலாற்றை எழுதியது அகமுடையார்கள்

முத்துராமலிங்கனாருக்குப் பாலுட்டிய அன்னை இஸ்லாமிய சமுகம்

முத்துராமலிங்கனார் படித்தது மற்றும் வளர்ந்தது கிறுத்துவ சமுகம்

முத்துராமலிங்கனார் சொற்பொழிவுகளைத் தொகுத்து முதன்முதலில் நூலாக வெளியிட்டது
நாயக்கர் சமூகம்

முத்துராமலிங்கனார் அரசியல் குரு அய்யர் சமூகத்தவர்

முத்துராமலிங்கனாரை முதன்முதலில் சொற்பொழிவு ஆற்ற வைத்தது செட்டியார் சமூகத்தவர்

முத்துராமலிங்கனார் பற்றி முதன்முதலில் பாடல்
எழுதியவர் நாடார் சமூகத்தவர்

முத்துராமலிங்கனார் இறந்தபிறகு முதன்முதலில் சிலை வைத்தது பிள்ளைமார் சமூகம்

முத்துராமலிங்கனார் வாழ்க்கை வரலாற்றை
முதன்முதலில் எழுதியவர் மீனவர் சமூகத்தவர்,

முத்துராமலிங்கனாருக்கு முதன்முதலில் பிறந்தநாள் கொண்டாடியது பர்மா மக்கள்

இம்மானுவேல் இறந்த பிறகு இம்மானுவேல்
கொலைக்கும் தேவருக்கும் துளியும்
சம்பந்தம் இல்லை என வீடுவீடாகத் துண்டு
பிரசுரம் கொடுத்தவர் பள்ளர் சமூகத்தவர்

முத்துராமலிங்கனார் திருஉருவ படத்தை சட்டசபையில் வைக்கச் சொன்னவர் வன்னியர் சமூகத்தவர்

பாராளுமன்றத்தில் முத்துராமலிங்கனார் சிலையை நிறுவ சொன்னவர் பிராமிணர் சமூகம்

வாழ்க முத்துராமலிங்கனார் புகழ்!
வாழ்க முத்துராமலிங்கனார் தந்த கொள்கைகள்!

சாதிக்காக வாழவில்லை...
சாதித்து வாழ்ந்து தெய்வமானவர் பசும்பொன் ஐயா!

சாதி மதத்திற்கெல்லாம் அப்பாற்பட்டு அனைத்து சமூகத்தினராலும் போற்றப்பட்ட உத்தமர் முத்துராமலிங்கனார்!

Commemorating on his 118th Birth Anniversary

அஞ்சறைபெட்டியும் அம்மாவின் சேமிப்பு வங்கியானதேஅப்பத்தா சுருக்கு பையில் சிதறியது என் உண்டியலானதேஅரிசிப் பானைக்குள் சேர்த்...
30/10/2025

அஞ்சறைபெட்டியும் அம்மாவின் சேமிப்பு வங்கியானதே
அப்பத்தா சுருக்கு பையில் சிதறியது என் உண்டியலானதே
அரிசிப் பானைக்குள் சேர்த்த காசு அக்காவின் காசு மாலையானதே
சேர்த்த பணம் சிலநேரம் சொந்தங்களுக்கென்றானதே
சிறுவாடு சேர்த்தாவது சிறுவீடு வாங்கிகொள்
குடிகார கணவன் களவாடாமல் பார்த்துக்கொள்
நாகரீகமென்று வீண்செலவு செய்யாதே
மெய் கெடுத்து பி‌ன் வருந்தி தவிக்காதே
அவா அடக்கி ஆஸ்தி நீயும் சேர்க்காதே
ஆண்டாண்டு சேவை செய்ய தயங்காதே
வருங்கால வைப்புநிதி இன்றே செய்
சந்ததிக்கு சேமிப்பு சேதி நன்றே சொல்

Happy

&

Happy &
30/10/2025

Happy

&

கிருஷ்ண கான சபா.. பெயரெல்லாம் பெரிதாகத் தான் இருக்கிறது. அப்போதைய சென்னையில் அது கீற்றுக்கொட்டகை தான். பனகல் பார்க் அருக...
29/10/2025

கிருஷ்ண கான சபா.. பெயரெல்லாம் பெரிதாகத் தான் இருக்கிறது. அப்போதைய சென்னையில் அது கீற்றுக்கொட்டகை தான். பனகல் பார்க் அருகே ஒரு ஓரத்தில் ஒளிந்துகொண்டிருந்த அந்த நாடக அரங்கம் அன்று பரபரப்பானது. காரணம் ஒரு பிரபலம் நாடகம் பார்க்க ஒப்புதல் தந்திருக்கிறது. நாடகத்தின் பெயர் கவிஞனின் காதலி. ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருப்பது மக்கள் திலகத்தை. அன்று அவர் புரட்சி நடிகர். நாடகத்தின் ஹீரோ பிற்காலத்தில் அமைச்சராக இருந்த திருச்சி சௌந்தரராஜன். அவர் தான் மெனக்கெட்டு எம்.ஜி.ஆரை அழைத்திருந்தார்.

மனைவிக்கு சுகமில்லாத நேரம். அருகிலிருந்து கவனிக்க ஓடிக்கொண்டிருக்கிறார். இருக்கிற இடைவெளியில் வந்து தலைகாட்டிவிட்டு அப்படியே ஓடிவிடுவேன். சம்மதமா? ஆகட்டுங்க. நீண்ட நேரம் உங்களை காக்க வெக்கமாட்டேன் என்ற உறுதிமொழியை வாங்கிக்கொண்டு தான் வரச் சம்மதித்தார். ஆனால் மூன்று மணி நேரம் சோகத்தை மறந்து அப்படியே அவர் ஒன்றிவிட்டார். காரணம் அந்த நாடக வசனங்கள் அவரை அப்படியே ஈர்த்திருந்தது. முடிவில் மைக்கைப் பிடித்து அதை அப்படியே கொட்டியும்விட்டார். யாரப்பா ரைட்டர்? முடிவில் சௌந்தரராஜனிடம் கேட்டேவிட்டார். எங்க ஊர்க்காரர் தாங்க. வாலின்னு பேரு. அந்தப் பெயரை அப்போது தான் முதன் முறையாக கேள்விப்பட்டார் எம்.ஜி.ஆர்.

பாரதிதாசனின் கவிதையைப் படிப்பது போல் இருக்கிறது நாடக வசனங்கள். மைக்கைப் பிடித்த எம்.ஜி.ஆருக்கு வாலியைப் பிடிக்கக் காரணம் அவரது தமிழ் என்று புரிந்தது. தமிழ் மீது எனக்கு அளவில்லாத காதலால் தான் எனது மனைவியின் உடல் நிலையையும் மறந்து மூன்று மணி நேரம் பிரமித்துப் போய் உட்கார்ந்துவிட்டேன். விசாரித்தேன். வாலி என்றார்கள். ஸ்ரீரங்கத்தில் இருக்கிறாராம். அவர் எப்போது மெட்ராஸ் வந்தாலும் என்னை வந்து பார்க்கலாம். கொட்டை எழுத்துக்களில் மறுநாள் தென்றல் திரை ஏட்டில் அவரது முழு பேச்சும் வந்தது. வாங்கிப் படிக்கிறார் வாலி. சொல்லி வெச்ச மாதிரி மூன்றாம் நாள் எம்.ஜி.ஆர். அலுவலகத்திலிருந்து ஒரு லெட்டர். அதே தான் சென்னை வந்தால் சந்திக்கவும். ஆனால் மெட்ராஸ் போக வாலியிடம் சில்லறையில்லை. திசை தெரியாமல் சுற்றிக்கொண்டிருந்த அந்த இளைஞனிடம் இருந்தது தமிழ் மட்டும் தான். வாலியின் பிறந்த நாளில் அந்த மகத்தான கவிஞனைக் கொஞ்சம் நினைவு கூரலாமே.

வாலி என்ற ஸ்ரீரங்கத்து ரங்கராஜனை நிறையத் தடவை பேசி விட்டோம். இருந்தாலும் அந்த மகத்தான மனிதன் தமிழ்த் திரையுலகிற்கு நிறையவே செய்துவிட்டுப் போயிருக்கிறார். திருவரங்கத்துத் திருப்பராயத்துறைதான் வாலியை நமக்கு அடையாளம் காட்டிய மண். காவிரியின் தென்கரையும் கொள்ளிடத்தின் வடகரையும் சங்கமிக்கும் செழிப்பான மண். எங்கு திரும்பினாலும் இயற்கை எழில் கொஞ்சும் பூமி. சாப்பாட்டிற்குப் பஞ்சமில்லை. அப்பா வாங்கல் ஸ்ரீனிவாச ஐயங்காருக்கு கரூர் தான் சொந்த ஊர். அம்மா பொன்னம்மாள். அன்பான இல்லத்தரசி. பையன் படிக்காமல் கொள்ளிடக் கரை கழுதை மண்டபத்தில் சதா பொழுதைக் கழிக்கிறானே என சங்கடம். கூடப் படிக்கும் ரங்கராஜன் புத்தகமும் கையுமாக இருக்க எனக்கு வாய்த்தது பேப்பரை வைத்துக்கொண்டு எதையோ கிறுக்கிக் கொண்டிருக்கிறதே என்ற சங்கடம். வாலிக்கு படிப்பை விட வரைவதில் இஷ்டம். அப்படித்தான் எட்டாம் வகுப்புப் படிக்கும்போது நண்பன் பாபு அவரை முதன் முதலாக வாலி என்று அழைத்தான். அப்போதெல்லாம் விகடனில் மாலியின் கார்ட்டூன் பிரசித்தம். அங்கொரு மாலி என்றால் இங்கொரு வாலி. நண்பர் கூட்டம் அவரை வாலி என்றே அழைக்க எங்க ஊரு ஆட்டுக்குட்டிக்குக் கூட அந்தப் பெயர் தெரியும் என பிற்காலத்தில் எழுதினார் வாலி.

வரைந்து தள்ளிக்கொண்டே கழுதை மண்டபத்தில் அமர்ந்துகொண்டு கவிதை புனைவதிலும் ஆர்வம். அந்த மண்டபத்தில் தான் கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன் பிறந்தது. ஒரு கார்டில் எழுதிப்போட்ட பாடல் டி.எம்.எஸ்ஸைக் கவர்ந்தது. தண்ணீலே இருந்தா எருமை எப்படி விலை போகும். மெட்ராஸ் வாய்யா. ரயிலடியில் டி.எம்.எஸ்.அழைத்தது ஞாபகத்திற்கு வந்தது. இப்படி பிரபலங்கள் அழைத்த சென்னை பிற்காலத்தில் அவரை கடுப்பேற்றியது வேறு விஷயம். அன்னைத் தமிழ் என்னை வாழ வைக்கும் என்ற இறுமாப்போடு வண்டியேறிய வாலிக்கு வலிகள் தான் மிஞ்சியது. முட்டி மோதிய வாழ்க்கையில் சோகத்தின் சுவடுகள் தான் மிச்சம்.

இளமையில் நேதாஜி என்ற கையெழுத்துப் பத்திரிகை போக நாடகங்கள் நடத்த வானொலி அழைப்புகள். ஆனால் திரைத் துறை மட்டும் கதவை பலமாக அடைத்துக்கொண்டது. தி.நகர் க்ளப் ஹவுஸில் நான்காண்டு கால நரக வாழ்க்கையில் நல்ல நண்பர்கள் கிடைத்தது தான் ஒரே ஆறுதல். 58ல் அழகர் மலைக் கள்ளனில் அத்தி பூத்தாற்போல் ஒரு வாய்ப்பு. தேவராஜ் அர்ஸின் தம்பி கெம்பராஜ் படமிது. ஜெயலலிதா அம்மா சந்தியாவை அவர் தான் சினி ஃபீல்டுக்கு கொண்டு வந்தவர். நிலவும் தாரையும் நீயம்மா உலகம் ஒரு நாள் உனதம்மா. தனக்காகப் போட்ட பல்லவி. அந்த உலகம் எப்போது வாய்க்கும்? சுத்தமாகத் தெரியாது. 61ல் தான் மீண்டும் எம்.ஜி.ஆரை சந்தித்தார். அது நல்லவன் வாழ்வான் படத்திற்காக.

படத்திற்குப் பாடல் எழுதும் திறமை அவரிடம் கொட்டிக் கிடப்பதை ஆரம்பத்தில் கண்டறிந்தவர்கள் இரு பாடகர்கள் தான். ஐயா டி.எம்.எஸ்ஸூம் ஐயா பி.பி.எஸ்ஸூம். திருச்சி வானொலி நிலையத்திற்கு மெல்லிசை நிகழ்ச்சிகளுக்கு ஏகப்பட்ட வாலியின் பாடல்களை அவர்கள் பாடியிருக்கிறார்கள். அப்போதும் அதே பல்லவி தான். வாய்யா மெட்ராஸூக்கு. படத்துறை தான் அவரை பாடாய்படுத்தியது. இதே மெல்லிசை மன்னர் நண்பர் கோபியிடம் காதோரம் இவரை ஊரைப் பார்த்து போகச் சொல்லுங்க என்ற வரலாறும் வாலிக்கு உண்டு. அதே மன்னர் தான் அடடா! எங்க இருந்தீங்க இவ்வளவு நாளும் என்ற கதையும் நடந்தது. பூ வரையும் பூங்கொடியே பூ மாலை சூடவா பாடலோடு வாலியின் பாமாலை பட்டி தொட்டியெங்கும் பட்டையைக் கிளப்பக் காரணமும் இதே மன்னர் தான். ஒரு பாட்டுத் தான் தருவேன். ஆரம்பத்தில் கன்டிஷன் போட்ட இயக்குநர் திலகம் மொத்த பாட்டும் அவரே எழுதட்டும் என பச்சைக்கொடி காட்ட வாலியின் காடெல்லாம் பச்சை பசேலென மாறிப் போன வரலாறு உலகறியும். மக்கள் திலகத்தின் கடைக்கண் பார்வை பட்டதும் வாலி விண்ணைத் தொட்ட வரலாறும் நமக்கெல்லாம் தெரிந்தது தான்.

கவிஞர்கள் எப்போதுமே கற்பனையில் மிதப்பவர்கள். இப்படிச் சொல்லலாமா அப்படிச் சொல்லலாமா என யோசிக்கும் கவிஞர்களுக்கு மத்தியில் அருவியாய்க் கொண்டும் கவியரசு கோலோச்சிய காலத்தில் தான் வாலியின் திரைப் பிரவேசம். உடுமலையார், தஞ்சையார், பட்டுக்கோட்டையார் காலம் முடிந்து கவியரசு தான் என்றிருந்த நேரத்தில் வந்து நின்றவர் வாலி. கப்பலுக்கு நடுவே கட்டு மரமாக வந்து நின்றேன் என அவரே ஒரு முறை சொல்லியிருக்கிறார். அப்படிப்பட்ட கவிஞரே குழம்பிப்போய் இதை நான் எப்பய்யா எழுதினேன் என யோசித்த நேரங்களும் உண்டு. கவிஞரே இது வாலி எழுதிய பாட்டு. அதானே பார்த்தேன். என்னமா யோசிச்சிருக்காரு. போகப்போக அது அதிகமானதே தவிர குறையவே இல்லை. வாலி! உம் பாட்டைக் கேட்டேன்யா அருமையா எழுதியிருக்கே. உனக்குப் புடிச்ச வாட் 69 அனுப்பியிருக்கேன். எதிரே கடை விரித்தாலும் எப்போதுமே அந்த நெஞ்சில் குரோதமில்லை. இப்படித்தான் பட்டுக்கோட்டையை உச்சி முகர்ந்திருக்கிறார் கவிஞர். அப்படிப்பட்ட கவிஞரோடு எத்தனை ஆண்டுகள் போட்டி போட்டு எழுதித் தள்ளினார் வாலி.

வற்றாத அருவியாய் கொட்டும் வார்த்தைகள். காலம் மாற மாற கற்பனையில் மாற்றமில்லை. மூன்று தலை முறைகள் கடந்தபோதும் புத்தம் புதிதாக புத்துணர்வோடு வந்து நின்றார் வாலி. அன்புள்ள மான் விழியே ஆசையில் ஓர் கடிதம் கைகளில் எழுதவில்லை கண்ணீரில் எழுதுகிறேன். எவ்வளவு காலத்திற்கு முன்பு எழுதியது. இறப்பதற்கு ஓராண்டு முன்பு அதே கற்பனை. ஆனால் இன்றைய தலைமுறைக்காக.

விழியல்ல விரலது ஓர் மடல் தான் வரைந்தது
உயிரல்ல உயிலது உனக்குத் தான் உரியது. இமைகளின் இடையில் நீ
இமையாது நான் தவிக்கிறேன்.

லீலைக்காக ஷ்ரேயா கோஷல் பாடியது. ஏன் வாலியை வாலிபக் கவிஞர் என அழைக்கிறோம் என்றால் இதற்காகத் தான். 80 வயது உடலில் 18 வயது மனதோடு அவரால் மட்டுமே வலம் வர முடிந்தது. லேசா லேசா பாடலில் ஒரு வரி வரும். தனிமையில் இருக்கையில் எரிகிறதே
பனி இரவும் அனல் மழையாய் பொழிகிறதே.

கற்பனையில் எப்போதும் அவர் புத்தம் புது மலராகவே வந்து நின்றார். மாணிக்கம் என்ற மீனவனின் மனதில் குடி புகுந்த முத்தழகி காணிக்கையாக தன்னைத் தர நாணத்தோடு ஓடி வருகிறாள். கேரளக் கரையோரம் அந்த தென்னை மரத் தோப்பில்
சுட்டால் பொன் சிவக்கும்
சுடாமல் கண் சிவந்தேன்
என சுத்த தன்யாசியில் வந்த சத்தான வரிகளை இப்போதும் இளைஞர் கூட்டம் அசை போடக் காரணம் காதல் எப்போதுமே கொண்டாடப்படுவதால் தான். அம்பிகாபதி காலத்து அதே காதல் அஜீத் காலத்திலும் வாலியிடம் வதைபட்டது மறுக்க முடியாத உண்மை.

பாவலன் மறந்த பாடலில் ஒன்று பாவையின் வடிவில் பார்த்ததும் இன்று. இப்போது கூட அருமையான கவிதையிது. பூரண நிலவையும் புன்னகை மலரையும் இப்போதும் ரசிக்கலாம். காய் பழுத்து கனிந்துவிட்டால் கிளையில் தங்குமா? கைகளிலே விழுந்திடாமல் பசியடங்குமா? வார்த்தைகளின் கோர்வையில் ஒரு ஓஹோ போடத் தோன்றும். அறுபதுகளின் வாலி. அப்படியே கொஞ்சம் 80களில் அதே கற்பனை துள்ளாட்டம் போட்டிருக்கும். தேயிலைத் தோட்டம் நீ தேவதையாட்டம் துள்ளுவதென்ன நெஞ்சை அள்ளுவதென்ன? நதியோரம் நாணல் ஒன்று நாணம் கொண்டு நாட்டியம் ஆடும் அழகை அப்படியே அள்ளித் தந்திருப்பார். சோகத்திலும் சுகமான வரிகள் வாலியின் சொத்து. விதியே உன் கை நீட்டி வலை வீசலாம் ஊரார்கள் எனைப் பார்த்து விலை பேசலாம். வலையும் விலையும் அலங்காரமல்ல. அந்த அபலையின் அழு குரல். இளம் பெண்ணின் கண்ணீரை யார் மாற்றுவார் எரிகின்ற நெஞ்சத்தை யார் தேற்றுவார். ஆண்டவனைத் தேடுகிறேன் வா வா என அழைத்த பாடல் இப்போதும் சாகா வரத்தோடு அப்படியே நிற்கிறது.

ஆன்மீகத்தை அப்படியே கரைத்துக் குடித்தவர் வாலி. வெறும் கவிஞரல்ல. சங்கீத சுர ஞானம் உள்ளவர். எழுதும்போதே இது இந்த ராகத்தில் இருந்தால் எடுப்பாக இருக்கும் என்பதை முன் கூட்டியே கணிப்பவர். பெரும்பாலும் அந்தப் பாடல் அதே ராகத்தில் தான் அமையப்பெற்றிருக்கும். காது கொடுத்துக் கேட்டேன்
ஆஹா குவா குவா சத்தம்
ஆனந்த பைரவியை அப்படியே தந்தது.

சந்த்ரோதயம் ஒரு பெண்ணானதோ
செந்தாமரை இரு கண்ணானனதோ
அழகான பெஹாக்கில் வரும்படி எழுதினார்.

மூன்று தமிழ் தோன்றியதும் உன்னிடமோ
நீ மூவேந்தர் வழி வந்த மன்னவனோ
சாருகேசியில் அம்சமாக வந்து உட்கார்ந்த வரிகள். எப்போதுமே அவரது எழுத்துக்களில் எளிமையோடு கலந்த இலக்கியம் இருக்கும்.

அஞ்சு விரல் பட்டால் என்ன
அஞ்சுகத்தை தொட்டால் என்ன?
கொத்து மலர் செண்டா என்ன
கொஞ்சும் மன்னன் வண்டா என்ன?
வெக்கம் வரும் வந்தால் என்ன
வேண்டியதை தந்தால் என்ன?
வியக்க வைக்கும் அவரது வரிகள். மக்களுக்கான மெஸ்ஸேஜை அப்படியே உள்ளே இறக்கிவிடுவார்.

உன்னைக் கேட்டு என்னைக் கேட்டு எதுவும் நடக்குமா அந்த ஒருவன் நடத்தும் நாடகத்தை நிறுத்த முடியுமா? நெருக்கடி நேரத்தில் பாடிப் பாருங்கள் கச்சிதமாக பொருந்தும். நேற்று வரை நடந்ததெல்லாம் இன்று மாறலாம் நாம் நேர்வழியில் நடந்து சென்றால் நன்மையடையலாம். எந்த நாடு என்ற கேள்வியில்லை எந்த ஜாதி என்ற பேதமில்லை மனிதர்கள் அன்பின் வழி தேடி இயற்கையை வணங்குகிறார். எப்போதுமே பொருந்தும் வரிகள். இல்லாமை நீக்க வேண்டும் தொழில் ஆக்கம் வேண்டும் இங்கு எல்லோரும் வாழ வேண்டும் என்ற வரிகளில் இன்றும் வாழ்கிறார் வாலி. முன்னேற்றம் என்பதெல்லாம் உழைப்பவர் உழைப்பதனாலே கடமைகளை புரிவதெல்லாம் விடுதலை வேண்டுவதாலே.

ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை
நான் என்ற எண்ணம் கொண்ட மனிதன் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை என்கிறார் வாலி.

மனத்தாலே மனித குலம் மேம்பாடெய்தும் நல்ல மனங்கெட்டால் மாநுடம் தான் மெல்லச் சாகும். திரைக்கு வெளியிலும் அவர் மாநுடம் பேசினார். விலங்கு மனம் கொண்டிருந்தான் இலங்கை வேந்தன் அந்த விலங்கு இனம் தன்னாலே வீழ்ச்சியுற்றான். ராமாயணம் அவரது கவிதை வழியே அழகாகப் புரிந்தது. கேரக்டர்களை அவ்வளவு அழகாக உள் வாங்குவார். இலங்கை வேந்தனை இவ்வளவு அழகாக எடுத்துப் போடும் வாலி தனது பாண்டவர் பூமியிலும் பட்டையைக் கிளப்பியிருப்பார். திரையிலும் அந்த வித்தையில் அவர் கெட்டிக்காரர். ஸ்ரீதரின் இளமை ஊஞ்சலாடுகிறது படத்தில் கமலின் காதல் கை கூடாத சோகம். மேடையின் எதிரே காதலி. வெறுத்துப் போய் அவன் பாரதியை துணைக்கழைக்கிறான். வார்த்தை தவறிவிட்டாய் அடி கண்ணம்மா… அந்த ஆணுக்காக வாலி வரிந்துகட்டுகிறார். அடிக்கடி மனம் மாறும் வஞ்சியின் நெஞ்சத்தை வாலி வார்த்தையால் குதறுகிறார். ஒரு நூலில் ஆடுகின்ற ஊஞ்சல் போன்றதடி நாளும் மாறுகின்ற உன் மனம். எனக்கின்று தெரிந்தது. நெஞ்சம் துடித்திடும் நாழி நீயோ அடுத்தவன் தோழி. அப்படியே பின்னோக்கிப் போனால் உறவு என்றொரு சொல்லியிருந்தால் பிரிவு என்றொரு பொருளிருக்கும் என எழுதியிருப்பார். இதயம் என்றொரு இடமிருந்தால் ஏக்கம் என்றொரு நிலையிருக்கும். அவ்வளவு அசத்தலான வரிகள்.

கவிஞரின் சாயலில் தோன்றினாலும் சில இடங்களில் வாலியின் குறும்பு அழகாக வெளிப்பட்டு நம்மை அட போட வைக்கும். புத்தகம் பையிலே புத்தியோ பாட்டிலே என தன்னையே அந்த பாத்திரத்தில் கொண்டு போய் வைத்திருப்பார். நித்தமும் நாடகம் நினைவெல்லாம் காவியம் கடமையும் வந்தது கவலையும் வந்தது. அந்த நாள் ஞாபகம் அத்தனையும் அவருக்கானது. ஆனால் காதலென்று வந்துவிட்டால் வாலிபம் அங்கே விளையாடும். அலை போல் குழலசைய சிலை போல் நடை பயில வளையோசை இசை கொடுக்க வாகாக வந்து நிற்பார். புருவம் வில்லாக பார்வை கணையாக பவளமென விரல் நகம் பசுந்தளிர் போல் வளைக்கரம் என பட்டையைக் கிளப்புவார். தாளக்கட்டில் அவரது வரிகள் எப்போதுமே தளிர் நடம் புரியும். தத்தை போல தாவும் பாவை பாதம் நோகுமென்று மெத்தை போல பூவைத் தூவும் வாடைக் காற்றும் உண்டு. மீட்டருக்குள் மேட்டரை கச்சிதமாக கொண்டு வருவார். நான் அள்ளி கொள்ள அவள் பள்ளி கொள்ள சுகம் மெல்லவே புரியும். பூவை என்பதோர் பூவைக் கண்டதும் தேவை தேவை என வருவாள் என புளகாங்கிதம் அடைய வைப்பார்.

எப்போதோ எழுதிய வரிகளைக் காலம் கடந்தும் பயன்படுத்தியிருக்கிறார். 58ல் எழுதிய வரிகளை எம்.பி.சீனிவாசனிடம் சான்ஸ் கேட்டுப் போகும்போது காட்டினார். நல்லாயிருக்கு ஆனா சிச்சுவேஷனுக்கு சூட்டாகாதே என ரிஜெக்ட் ஆன பாடல் 67ல் அழகாக சூட்டானது. அது தான் கொடுத்ததெல்லாம் கொடுத்தான் அவன் யாருக்காக கொடுத்தான்? அவரது வெற்றி வேண்டுமா போட்டுப் பாரடா எதிர்நீச்சல் போட்ட உடனே சூடாக விற்ற பாடல். அறிஞர் அண்ணாவிற்கு பிடித்தமான பாடல். என்ன எதிர் நீச்சல் சௌக்கியமா என கேட்கிற அளவிற்கு அவரைப் பாதித்த பாடல். கே.பிக்குப் பிடித்தது அந்த கொத்து மலர்க் குழல் பாதம் அளந்திடும் சித்திரமோ. நண்பர் குமார் அருமையாக மெட்டமைக்க கே.பி.அனுபவித்து எடுத்த பாடல். ஆலிலை மேலொரு கண்ணனைப் போல் இவன் வந்தவனோ நூலிடை மேலொரு நாடகம் ஆடிட நின்றவனோ சுமை கொண்ட பூங்கொடி என ஜெயந்தியை அட்டகாசம் செய்திருப்பார். சுவை கொண்ட தேன் கனி உடை கொண்டு மூடும்போது உறங்குமோ உன்னழகு. அடடா! கலக்கலான கற்பனையில் வந்து விழுந்த வார்த்தைகள்.

வாலி தனது துணையை மனதில் வைத்து வரைந்த கவிதை தான் நான் பாடிய முதல் பாட்டு அவள் பேசிய தமிழ் கேட்டு. 69ல் அவர் எழுதியது. இவள் காலடி நிழல் படும் நேரம் மலர் போல முள்ளும் மாறும். சுப்பையா நாயுடு அருமையாக மெட்டுப் போட்டிருப்பார். ரமண திலகத்தை அவர் நாடகத்தில் தான் சந்தித்தார். ஏ.வி.எம்.ராஜனுக்கு நாயகியாக வந்தவரை தனது நாயகியாக மாற்ற அவர் படாத பாடுபட்டார். பத்மினியும் ஈ.வி.சரோஜாவும் தைரியம் தர திருப்பதிக்கு இழுத்துக்கொண்டு ஓடினார். வழுவூர் ராமையா பிள்ளையிடம் பரதம் பயின்ற காலத்துப் பழக்கம் அந்த நடிகைகளோடு.எம்.ஜி.ஆருக்குக் கூட சொல்லாமல் ஒரு அவசரத் திருமணம். கண்ணனின் சந்நிதியில் எந்தன் கண்மணி புன்னகையில் இனி மேல் காலங்கள் உள்ளவரை எந்தன் பொண்மணிக்கென்ன குறை என அழகானதொரு குடும்ப வாழ்க்கையில் ஒரு ஆண் வாரிசு. தாலாட்டச் சொன்னால் பாட்டொன்று சொல்வேன் பாலூட்டச் சொன்னால் நானெங்கு போவேன் என பம்பரமாக வாலி சுழன்ற காலங்கள். மூன்றாம் பிறையில் தொட்டில் கட்டியதிலிருந்து தொடங்கிய ஓட்டம். அன்றோர் கோயிலை தூக்கி வைத்தேன் அதில் அம்பிகையாய் உனை ஆக்கி வைத்தேன் என ஆடிப் பாடிய காலங்கள் சட்டென மறைந்தபோது கவிஞர் தளர்ந்து தான் போனார். ஆயிரம் அழகியர் பார்த்ததுண்டு ஆனால் அவள் போல் பார்த்ததில்லையே. ஆதரவான வார்த்தையைப் பேசி அருமை மிகுந்த மனைவியை நேசி என பலருக்கும் பாடமெடுத்த வாலியின் வாழ்வில் வசந்தம் தொலைந்தது. அப்படியே அதிகம் பொது வாழ்வில் தன்னைக் கரைத்தார்.

இயல் இசை நாடக மன்றத்தின் தலைவராக வாலி இருந்திருக்கிறார். ராஜீவ் காந்தி தொடங்கிய சௌத் ஜோன் கல்ச்சரல் சென்ட்ரலில் உறுப்பினராக இருந்திருக்கிறார். அதன் பொருட்டு பல மாநிலங்களுக்கும் பறந்திருக்கிறார். 66ல் மணி மகுடம் ஷூட்டிங்கில் எஸ்.எஸ்.ஆர்.தான் கலைஞரை அவருக்கு அறிமுகப்படுத்தினார். அன்று முதல் கலைஞரோடு அவ்வளவு நெருக்கம். இருவரையும் இணைத்தது தமிழன்னை. மாநிலத்தில் கவியரங்கம் எங்கு நடந்தாலும் வாலி நீங்களும் உண்டு என வலிய இழுத்துப்போட்டது கலைஞர் தான். ஆரம்பத்தில் தடுமாறினாலும் போகப்போக வாலியின் இலக்கிய விருந்தை எல்லோரும் பருகக் காரணம் கலைஞர் தான். எம்.ஜி.ஆரோடு நெருக்கத்தில் இருந்தாலும் கலைஞரை அவர் விட்டுத் தந்ததில்லை. மூன்று தமிழ் தோன்றியது அவன்கிட்டேயா? மக்கள் திலகம் கிண்டலடித்தாலும் வாலி முத்துவிற்காக அருமையான பாடல்களைத் தந்தார். எவ்வளவு ஆண்டுகள் கடந்தும் அந்த கவிக்குயில் பாட்டுக் கோட்டைகளை கட்டிக்கொண்டேயிருந்தது. ஹீரோக்களை தூக்கிப் பிடிக்க அனைவரும் வாலியிடம் தான் வந்தார்கள். பண விஷயத்தில் அவர் நண்பர் நாகேஷ். தசாவதாரத்திற்குப் பாட்டு ரெடியாண்ணே? கேஷூ ரெடியாண்ணே? அதெல்லாம் கரெக்டா இருக்கு. ஐம்பதாயிரம் வாங்கி பாக்கெட்டில் போட்டு விட்டு அப்படியே எழுதியதைத் தர லட்ச ரூபாய் தரலாமே என ஆனந்தமானார் கமல். அஷ்ட அட்சரம் ஏற்கும் நெஞ்சு பஞ்ச அட்சரம் பார்க்காது. சைவத்தை விட வைணவம் பிரமாண்டம் எனக் காட்ட வைணவ வாலிபர் வரைந்த வரிகளில் அவரது மேதமை தெரிந்தது. கதைப்படி முக்கியமான பாடல். கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது கடவுள் மட்டும் கண்டால் கல்லைத் தெரியாது. அதே கற்சிலை என்றாலும் கற்பனை என்றாலும் தான். ஆனால் வளர்ந்து நின்ற வாலி இப்போது வானளாவ நின்றிருந்தார். சின்னச் சின்ன கம்பெனிகளுக்கு கண்டு கொள்ளவேமாட்டார். பெரிய பட்ஜெட் என்றால் விடவும் மாட்டார். ஹீரோக்களை எங்கேயோ கொண்டு செல்வார். இதே பாடலில் கமலை அவர் அழகாக காட்டியிருப்பார். அவரது பெற்றோரை அட்டகாசமாக கொண்டு வந்து ஒட்ட வைத்திருப்பார். ராஜலட்சுமி நாயகன் சீனிவாசன் தான். சீனிவாசன் சேய் இந்த விஷ்ணு தாஸன் தான். சைவம் என்று பார்த்தால் தெய்வம் கிடையாது தெய்வம் என்று பார்த்தால் சமயம் கிடையாது. அது தான் வாலி. அவரது புகழ் என்றென்றும் நீடூழி வாழி!

Commemorating Lyricist on his 94th Birth Anniversary

Address

18/35, Neelakanda Metha Street
T. Nagar
600017

Alerts

Be the first to know and let us send you an email when Ladder TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ladder TV:

Share

Category