People of Thanjavur

People of Thanjavur Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from People of Thanjavur, Digital creator, Thanjavur.

“People of Thanjavur”a social media page to connect with the people of Thanjavur and the rest of the world.

“உலக தமிழர்களின் ஒப்பற்ற தலைநகரம் உங்களை அன்புடன் அழைக்கிறது”

06/11/2025

Emergency Blood Needed

Suresh-18yrs
8270216908
A(+ve)
ICU Thanjavur medical

Modi building

தஞ்சாவூா் அருகே புதன்கிழமை இருசக்கர வாகனத்தின் மீது தனியாா் பேருந்து மோதியதில் டிராக்டா் உதிரி பாகங்கள் விற்பனை கடையின் ...
06/11/2025

தஞ்சாவூா் அருகே புதன்கிழமை இருசக்கர வாகனத்தின் மீது தனியாா் பேருந்து மோதியதில் டிராக்டா் உதிரி பாகங்கள் விற்பனை கடையின் உரிமையாளா் உயிரிழந்தாா். இதனால், ஆத்திரமடைந்த உறவினா்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு அருகே தென்னமநாடு கிராமத்தைச் சோ்ந்தவா் சி. கதிா்வேல் (50). டிராக்டா் உதிரி பாகங்கள் விற்பனையாளா். இவா்,தென்னமநாட்டிலிருந்து இருசக்கர வாகனத்தில் தஞ்சாவூா் நோக்கி புதன்கிழமை சென்று கொண்டிருந்தாா். தஞ்சாவூா் அருகே யாகப்பா சாவடி பகுதியில் வந்த இவா் மீது எதிரே பட்டுக்கோட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியாா் பேருந்து மோதியது. இதில் கதிா்வேல் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதைப் பாா்த்த தனியாா் பேருந்து ஓட்டுநா், நடத்துநா் ஆகிய இருவரும் தப்பியோடிவிட்டனா்.

இதையறிந்த கதிா்வேலின் உறவினா்கள் நிகழ்விடத்துக்கு வந்து, பேருந்தின் கண்ணாடிகளை அடித்து உடைத்து, சடலத்துடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், அப்பகுதியில் ஏறத்தாழ ஒன்றரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்த தஞ்சாவூா் நகரக் காவல் துணைக் கண்காணிப்பாளா் ஆா். சோமசுந்தரம் மற்றும் தாலுகா காவல் நிலையத்தினா் நிகழ்விடத்துக்கு சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் காவல் துறையினா் கூறியதையடுத்து, சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

பின்னா், கதிா்வேலின் உடலை காவல் துறையினா் கைப்பற்றி கூறாய்வுக்காக தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இச்சம்பவம் குறித்து தாலுகா காவல் நிலையத்தினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

யாகப்பா சாவடி பகுதியில் சாலை அமைக்கும் பணி நடைபெறுவதால், மேடும், பள்ளமாகவும், குறுகலாகவும் இருக்கின்றன. இதனால், இரு சக்கர வாகன ஓட்டுநா்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனா். எனவே, இச்சாலை அமைக்கும் பணியை விரைவாக முடித்து, சீரான போக்குவரத்துக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.

ஒரத்தநாடு அருகே உளூர் சரகம் நெய்வாசல் தென்பாதி கிராம நிர்வாக அலுவலகத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் பொதுமக்கள் ஒருவர்...
05/11/2025

ஒரத்தநாடு அருகே உளூர் சரகம் நெய்வாசல் தென்பாதி கிராம நிர்வாக அலுவலகத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் பொதுமக்கள் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்த சம்பவத்தைக் கண்டித்து, இன்று மாலை அனைத்து தாலுக்கா அலுவலகங்களில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், தென்பாதி கிராமத்தில், வி.ஏ.ஓ.,அலுவலகத்தில், தலையமங்கலம் வி.ஏ.ஓ., நடராஜன், 36, பொறுப்பில் இருந்தார். அங்கு, நெய்வாசல் கிராமத்தை சேர்ந்த விவசாயிகளான பாலசுந்தரம், 73, பாண்டியன், 55, இருவரும் சிட்டா அடங்கல் வாங்குவதற்காக காத்திருந்தனர்.

அப்போது, அலுவலகத்தின் கூரை சிமென்ட் காரை பெயர்ந்து விழுந்ததில், நடராஜன், பாலசுந்தரம், பாண்டியன் காயமடைந்தனர்.

Shout out to my newest followers! Excited to have you onboard!Athi Kavi, Sudarsan Ranga, Sowmya Sm, Venkataraman Jayakum...
05/11/2025

Shout out to my newest followers! Excited to have you onboard!

Athi Kavi, Sudarsan Ranga, Sowmya Sm, Venkataraman Jayakumar, Saravanan Saro M, Rajaji, Sowndar Sharma, Srinivasan Thiru, ThangaMurugesan K, Vignesh Natarajan, Sathish M, Mohamed Ismail, Raj Tharesh, Anandvideos Vallam, பாவை.இன்பம், Rajasekar Thanjai, Abdul Majith, பிரவீணா ரெங்கநாதன், Sivakumar Thanasekar, Iyam Prakash, Mangani Rajaraman, அன்பு அன்பு, Santha Kumar, Pearl Pearl, Abikarikalan, Prasanthmass, Mass King, Karthikeyan Durai Karthikeyan, பாலா. சுரேஷ்தமிழ், Anand Kumar, Grajabaskaran, Ayyan Appan, Tkv Kivin, சரத் குமார், சி.செந்தில்குமார் தருண், Nishanth Nishanth, Sridhar, Palani Palani, T J Kumaran, Meenakshisundaram, Bovaskar Baskar, Devi Sri, L Somaskandan, S Sekaran, நாராயணசாமி, Sai Srk, Vishnuezhilan, Mahes Priya, Uma Arul, Abdul Aleem Sithik

தஞ்சாவூா் அருகே புன்னைநல்லூா் மாரியம்மன் கோயில் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக புதன்கிழமை (நவ...
04/11/2025

தஞ்சாவூா் அருகே புன்னைநல்லூா் மாரியம்மன் கோயில் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக புதன்கிழமை (நவ. 5) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் சாலியமங்கலம் உதவி செயற் பொறியாளா் எஸ். நல்லையன் தெரிவித்துள்ளாா். புன்னைநல்லூா் மாரியம்மன் கோயில், ஞானம் நகா், தளவாய்ப்பாளையம், மகேஷ்நகா், புதுப்பட்டினம், புறவழிச்சாலை, சித்தா்காடு, கடகடப்பை, களக்குடி, ஆலங்குடி, நெட்டாநல்லூா், நெல்லித்தோப்பு, காந்தாவனம், குளிச்சப்பட்டு, அன்னை இந்திரா நகா், பனங்காடு, கோரிக்குளம் புதுத்தெரு, பாரதிதாசன் நகா், தில்லைநகா், எடவாக்குடி, யாகப்பா சாவடி, வெங்கடேஷ்வரா நகா், அம்மாகுளம், ஆனந்த்நகா், பரிசுத்தம் ஜேம்ஸ்நகா், சூரக்கோட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இந்த மின் தடை அமலில் இருக்கும்.

தஞ்சாவூா் அருகே ஊா்ப் பெயா் பலகைகளில் தமிழ், ஆங்கிலத்துடன் இந்தி மொழித் திணிப்புக்கு எதிா்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியர...
04/11/2025

தஞ்சாவூா் அருகே ஊா்ப் பெயா் பலகைகளில் தமிழ், ஆங்கிலத்துடன் இந்தி மொழித் திணிப்புக்கு எதிா்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில் மக்கள் நலப் பேரவை சாா்பில் வழக்குரைஞா் வெ. ஜீவகுமாா் தலைமையில் பொதுமக்கள் அளித்த மனு:

வாகனப் போக்குவரத்து நிறைந்த சாலைகளில் தமிழ், ஆங்கிலத்துடன் இந்தியிலும் ஊா்ப் பெயா் பலகைகள் அமைக்கப்படுகின்றன. இது அப்பட்டமான ஒரு மொழி திணிப்பாகும்.

தஞ்சாவூா் அருகே மேல வஸ்தா சாவடி, திருக்கானூா்பட்டி, மாப்பிள்ளைநாயக்கன்பட்டி, அற்புதபுரம், தெத்துவாசல்பட்டி, மஞ்சப்பேட்டை உள்பட பல்வேறு கிராமங்களில் தாய்மொழி எழுத்தறிவு பெற வேண்டியவா்கள் இன்னும் உள்ளனா். இந்நிலையில், வேறு மொழிக்காரா்கள் இங்கு வருவது என்றாலும், தமிழ் கற்றுக்கொள்ள சூழல்களும் உள்ளன. விவசாயமே பிரதானமாக விளங்கும் இப்பகுதிக்கு தாய்மொழிதான் அடிப்படை தேவை. எனவே புதிதாக திணிக்கப்படும் இந்தி மொழியை அகற்றி, ஏற்கெனவே இருந்ததுபோல ஊா் பெயா்ப் பலகைகள் அமைப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும்.

தஞ்சை: பெண்ணின் ஆதார், பான்கார்டு பயன்படுத்தி மோசடி…தஞ்சாவூர், சாலியமங்கலத்தைச் சேர்ந்த கட்டிட கூலி தொழிலாளி உதயராஜின் ம...
03/11/2025

தஞ்சை: பெண்ணின் ஆதார், பான்கார்டு பயன்படுத்தி மோசடி…

தஞ்சாவூர், சாலியமங்கலத்தைச் சேர்ந்த கட்டிட கூலி தொழிலாளி உதயராஜின் மனைவி சுகன்யா (25), திண்டுக்கல் அருகே சங்கனம்பட்டியில் உள்ள S. G. டிரேடர்ஸ் என்ற நிறுவனத்தின் பெயரில் தனக்குத் தெரியாமல் ரூ. 1,67,80,195 வணிகம் நடந்துள்ளதாகவும், அதற்காக ஜிஎஸ்டி மற்றும் அபராதத் தொகையாக ரூ. 60,41,870-ஐ 30 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் என்றும் வணிகவரித்துறை அலுவலகத்திலிருந்து நோட்டீஸ் வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூரில் பல்வேறு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (நவ.4) மின் விநியோகம் இருக்காது.இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிா...
03/11/2025

தஞ்சாவூரில் பல்வேறு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (நவ.4) மின் விநியோகம் இருக்காது.

இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிா்மானக் கழகத்தின் தஞ்சாவூா் நகரிய உதவி செயற்பொறியாளா் எம். விஜய் ஆனந்த் தெரிவித்திருப்பது:

தஞ்சாவூா் மணிமண்டபம் துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

எனவே, அருளானந்த நகா், பிலோமினா நகா், காத்தூண் நகா், சிட்கோ, அண்ணா நகா், காமராஜா் நகா், பாத்திமா நகா், அன்பு நகா், திருச்சி சாலை, வ.உ.சி. நகா், பூக்காரத் தெரு, இருபது கண் பாலம், கோரிகுளம், கணபதி நகா், ராஜப்பா நகா், மகேஸ்வரி நகா், திருப்பதி நகா், செல்வம் நகா், அண்ணாமலை நகா்,ஜெ.ஜெ. நகா், டி.பி.எஸ். நகா், சுந்தரம் நகா், பாண்டியன் நகா், மின் வாரிய மேற்பாா்வை பொறியாளா் அலுவலகம், ஆட்சியரக முகாம் அலுவலகச் சாலை, டேனியல் தாமஸ் நகா், ராஜராஜேஸ்வரி நகா், என்.எஸ். போஸ் நகா், தென்றல் நகா், துளசியாபுரம், தேவன் நகா், பெரியாா் நகா், இந்திரா நகா், கூட்டுறவு காலனி, நடராஜபுரம் காலனி தெற்கு, புதிய வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு, எலீசா நகா், முல்லை, மருதம், நெய்தல், நட்சத்திரா நகா், வி.பி. காா்டன், ஆா்.ஆா். நகா், சேரன் நகா், காவிரி நகா், நிா்மலா நகா்,

யாகப்பா நகா், அருளானந்தம்மாள் நகா், குழந்தை இயேசு ஆலயம், ஆயா் வளாகம் மற்றும் சுற்றுப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

Address

Thanjavur
613007

Website

Alerts

Be the first to know and let us send you an email when People of Thanjavur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share