அன்பின் வாசலே

  • Home
  • அன்பின் வாசலே

அன்பின் வாசலே ........The waves of imaginative.......

04/12/2024

கதைகளோடு கதைகளாக சேர்ந்து கதைப்பதை விட

காலையிலே கனவுகளோடு கண்விழித்தால்
காலம் நம்மிடமும் சற்று நின்று பேசும்

என்றும் அன்புடன்
P.கோபாலகிருஷ்ணன்

20/11/2024

சரணம் ஐயப்பா

சரணம் சரணம் ஐயப்பா..
எங்கள் சரண கோஷம் ஐய்யப்பா..

வரணும் வரணும் ஐய்யப்பா
இருமுடி எந்தி வரணும் ஐய்யப்பா

இரு கை.. இரு கண் என யாவும் உன்னிடமே சரணம் ஐயப்பா

உடன் இருப்பது போலவே உள்ளுணர்வு
உண்மையாகுது ஐயப்பா..

உருகி பாடும்
ஒவ்வொரு நொடியும் ..
சந்தோஷம் கொடுப்பது
உன் சரணம் ..

உலகம் எதுவென்று நான் அறிய
உன்
மலை குன்றில் ஒரு பயணம் என்னை அழைத்தது ஐய்யப்பா

சரணம் சரணம் ஐயப்பா
உன் சரண கோஷமே ஐயப்பா...

என்றும் அன்புடன்
P.கோபாலகிருஷ்ணன்

சாமியேசரணம்

நீலவானமில்லா இடத்தில் மேகம் கூட நிழல் இல்லா இடத்தில் கானல் ஒதுங்கநிஜமில்லா இடத்தில் நிம்மதி அரும்ப நீ இல்லா தடத்தில் நான...
19/11/2024

நீலவானமில்லா இடத்தில் மேகம் கூட
நிழல் இல்லா இடத்தில் கானல் ஒதுங்க

நிஜமில்லா இடத்தில் நிம்மதி அரும்ப
நீ இல்லா தடத்தில் நான் என்ன செய்வேன்

நலமறியா கனவுகளும்
நாளமில்லாதா நினைவுகளுமே
நடப்பதை ரசிக்கின்றது

என்றும் அன்புடன்,
P.கோபாலகிருஷணன்

அன்பின்வாசலே

06/09/2024

பிறையும் - பிழையும்

எல்லா வானத்திலும் பிறையாய் பிரகாசிக்கும் நாட்கள் முடிந்து

பிழையாகி பின்னுக்கு தள்ளி பிரித்து வைக்கபடும் பிதற்று பொம்மை நான் .

என்றும் அன்புடன்,
P.கோபாலகிருஷ்ணன்

05/06/2024

மழையிலும் வேற்க்கின்றது

உன்னுடைய ஓவ்வொரு நகர்வையும் ரசித்து ரசித்து படம் பிடித்த என்னால்

உன்னுடைய இந்த நகர்வு என்னை திடம் குறைய வைக்கிறது ..

காரணம் - என்னுடன் முழு நாளையும் கழித்த முதல் மகன் என்பதாலோ என்னவோ

மழையோ வெயிலோ ( அய்யோ..அங்க பாரு பாரு என்ன fast ah மின்னல் போச்சு தெரியுமா...இடி வேற என் காதுல வந்து வெடிச்ச மாதிரி வந்துச்சு அப்படினு நீ சொல்லும் டயலாக்) கடைசியில் அங்க தூரல் தான் வந்து இருக்கும் .

03/03/2024

பதில் என்ன சொல்லும்

உன்னை மட்டும் இருக பற்றி கொள்ளுதே என் இதயம் ..

ஏன் எதற்கு என்று காரணம் கேட்டால் பதில் என்ன சொல்லும்...

உன் பார்வை அது தானோ...

உன் உதட்டு புன்னகை அது தானோ...

புரியாத உன் உளறல் மொழி தானோ...

உள்ளங்கை கிறுக்களில் என் உருவத்தை பதிக்கிறாய்...

உள்ளொன்று இல்லாமல் உவமையில் சொல்கிறாய்..

இதை விட பேரன்பு
பெரிதளவில்
என்னிடம் கொடுத்திட
வேறு யார் இந்த உலகில்...

உன்னை மட்டும் இருக பற்றி கொள்ளு தே என் இதயம் ...

ஏன் எதற்கு என்றால் காரணம் கேட்டால் பதில் என்ன சொல்லும்....

என்றும் அன்புடன்,
P.கோபாலகிருஷ்ணன்

24/02/2024

......உள்ளும் வெளியும்...

இப்படி இடைவிடாது என்ன ஒரு நெருக்கம்

இன்னும் என்ன சொல்லுமோ இந்த இரு விரல் சீண்டிடும் இறுக்கம்..

நட்சத்திரங்கள் எல்லாம் நடு இரவில் கூடி ,

எங்கிருந்து என் நிலவை அழைத்து வந்தது தேடி,

ஆகாய தாமரை போன்ற அதன் வெளிவட்ட பாதையில் உலவ
ஒரு முழு நாளை முழுவதும் நான் தொலைத்தேன்...

அந்தி வானத்து வெள்ளி போன்ற அதன் உள்வடதில் மருவி போக
மழை காலத்து பனி காற்றாய் நான் மாறி போனேன்...

உள்ளும் ,வெளியும் ஒரு புறம் இருக்க
அந்த தெள்ள தெளிந்த இதய கூட்டில் ஒளிந்து கிடக்க
இந்த ஒற்றை பிறவியும் வேண்டும் என்று ஒன்றிணைய நான் பழகி கொண்டேன்...

என்றும் அன்புடன்,
P.கோபாலகிருஷ்ணன்

22/02/2024

இன்று இது புதிது

மாலை...
இந்த வேளை..

மஞ்சள் வெயிலோடு,
மெழுகாய் உருகி போகிறேன்..
என்ன இது கனவு.

இந்த சாலை பயணம் ஏனோ
சட்டென்று முடிந்தது எதற்காக இன்று...

நிழல் சோலை அதை நிஜமாக

கண்முன்னே காண்கின்றேன்
இது இங்கு புதிது....

என்றும் அன்புடன்,
P.கோபாலகிருஷ்ணன்

13/02/2024

அன்பிற்கு அலைகடல் வாழ்த்து

இளன்மதியே இன்னும் இசை அளந்தாயோ கொஞ்சம் ..

இதழ் வழியே ஒரு வார்த்தை ..
இதமாக்கியதே இதயமதை இன்று வரை...

கனல் பொழிந்தாலும் - கரம் பிடிக்கின்றாய்

தினம் நகர்ந்தாலும் - திசையாகின்றாய்

திரும்பிய பார்வை ..
அரும்பிய போது..
திகைப்பில் நானே
உன் முகப்பில் இருப்பேனே...

என் முழு உலகத்தில் முதல் ஒளிக்கு
முப்ப்பது இரண்டாம் அகவையில் அலாதி அன்பில் அளவில்லாத வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கோப்ஸ்

P.கோபாலகிருஷ்ணன்

28/01/2024

வாழ்த்துக்களுடன் "36"

இந்த ஒரு நாள் மீண்டும் உனக்கு..
இன்று வந்ததே எப்படி இருக்கு,

கண்கள் அறியாத கவிதைகள் போல..
கணக்கில்லாத உந்தன் கவலை..
காற்றில் உளவும் தூசியை போல
கையில் படறாமல் கலைந்து போக

கடல் தூரம் அது போல தாண்டியிருந்தாலும் ..

நீரலை தேடல் போல நினைத்து வேண்டிக்கொள்வேன்...

என்றும் அன்புடன்,
P.கோபாலகிருஷ்ணன்

14/01/2024

....மனமே சற்று நில்...

கோபபட்டு எறிந்தாலும்,
கொஞ்சம் மட்டும் மகிழ்ந்தாலும்.

மனமே சற்று நில்.....

கோடை வெயில் வந்தாலும் ,
குவளை தண்ணீர் இருந்தாலும் .

மனமே சற்று நில்

சாசனம் எதை தந்தாலும் ,
சாதனை எத்துணை படைத்தாலும் .

மனமே சற்று நில்....

மேகங்கள் கொஞ்சம் வெளுத்தாலும்...

விண்மீன் வீதியில் நடந்தாலும் .

மனமே சற்று நில்....

மறதியே கொஞ்சம் ஆனாலும்...
மறந்ததை நினைவு கூர்ந்தாலும்.

மனமே சற்று நில்....

மணல் ஓவியம் வரைந்தாலும்,
மழை வெள்ளம் அதை கலைத்தாலும்.

மனமே சற்று நில்.....

உன்னுள் உன்னை உருவாக்கி,
உயர பறந்து, வியப்பிக்க

மனமே சற்று நில்...

என்றும் அன்புடன்,
P.கோபாலகிருஷ்ணன்

07/01/2024

ஐந்து எழுத்து மந்திரம்

என் சிந்தையில் உதித்தை என்னென்று நானும் சொல்ல...

என் அப்பன் ஈசன் அடிபோற்றும்-
ஐந்து எழுத்து அன்றி ஏதும் இல்ல...

இன்றைய நாள் பொழுதை உனக்குள்ளே நீ நிறுத்து...

எப்பொழுதும் என் வாய்பாட்டில் உன் பெயர் இருக்கு..

ஓம் நமசிவாய 🙏🏻

என்றும் அன்புடன்,
P.கோபாலகிருஷ்ணன்

Address


Telephone

+919840984824

Website

Alerts

Be the first to know and let us send you an email when அன்பின் வாசலே posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to அன்பின் வாசலே:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share