30/10/2025
வடசென்னை என்றாலே கொச்சையான தமிழும், போதைப்பொருள் கடத்தல் ரவுடிகளின் கூடாரமாகத் தவறாகக் காட்டக்கூடாதுன்னு சொல்ல தெரிஞ்ச புரட்சி பேசுற லூசு பயலுக்களுக்கு, தென்மாவட்டத்தை ஒட்டுமொத்தமாகத் தவறாகச் சித்தரிக்கக்கூடாதுன்னு சொல்ல வாய் வராது.
கதைகளம் சென்னையாக இருந்தாலும், காதலுக்கு எதிரியாக சாதி பார்க்கும் அப்பாவாக ஒரு கதாபாத்திரம் தேவையா? உடனே சென்னையில் வசித்து வரும் தென்மாவட்டத்தை சேர்ந்த குடும்பத்தினரைப் போலத்தான் பெரும்பாலும் தமிழ் சினிமா இயக்குனர்கள் படமெடுக்குறாங்க. அதற்கென இவங்க பெரிதாக மெனக்கெடுவதில்லை ஒரு சில குறியீடுகள் போதும் — கிடா மீசை கிழவனுங்க, பாம்படம் தொங்கட்டம் அணியும் கிழவிகள். மேலும் அங்குள்ள வாழ்வியலை, சாதாரண பழக்கவழக்கங்களை, பண்பாடு, கலாச்சாரங்களை, ஏன் கிராமத்து சாமி பெயர்களைக் கூட ஏளனம் செய்யும் விதமாக நகைச்சுவை காட்சிகள் மூலம் தாழ்வு மனப்பான்மையை விதைக்க நினைக்கிற இவர்களின் தவறான சிந்தனை நமக்கு வெளிப்படையாகவே தெரிகிறது.
ஏதோ! நீங்கெல்லாம் சாதியே பார்க்காத யோக்கிய மயிரா சென்னையில் வாழ்ந்துட்டிருக்காங்க போல! அம்புட்டு நல்லவங்களா டா நீங்க எல்லாம்? நிச்சயமா இல்ல. சென்னையிலும் நடக்கும் உங்க சாதி ஒழிப்பு “காதோல்” திருமணங்களை விட அதிகமாக, ஹிந்துக்கள் அவனவன் சாதியில்தான் திருமணம் செய்றாங்க. கிறிஸ்தவர்களும் அவன் மதத்தில்தான் செய்றாங்க; இல்லனா அவர்கள் மதத்திற்கு மாறச் சொல்லி திருமணம் செய்றாங்க. இசுலாமியர்கள் — அவங்க “ஊதவே வேணாம்.”
பின்ன எதுக்கு ? எப்ப பாரு இந்த சினிமாக்கார பயலுக, மேற்கத்திய கலாச்சாரத்தை முற்றிலும் ஏற்க விரும்பாத, பழமை மாறாத, குறிப்பா ஆன்மீகத்திற்கு எதிரான உங்க அவுசாரிதனத்தை புரட்சின்னு நம்பாத எங்களை “சாதி வெறியனா” முத்திரை குத்தப் பாக்குறீங்க? கொலையில் முடிந்த ரெண்டு குடும்பம் சம்பந்தப்பட்ட சில காதல் விவகாரம் மட்டும் தான் உங்களுக்கெல்லாம் தெரியுது. ஆனா சுயநலமில்லாத, சாதி பேதம் இல்லாத நண்பர்களாக பழகுற ஆரோக்கியமான சூழல் தான் தெக்க எப்பவுமே இருந்திருக்கு.
சென்னை வாசிகள் வேலை செய்யுற இடத்துல கூட, எவ்ளோ நாசூக்காக உங்க சாதி பாசத்தை காட்டுவீங்கனு, எங்களுக்கு தெரியும் உங்க மனசாட்சிக்கும் தெரியும். உங்க கூறுகெட்ட லாஜிக்குப் படி, ஒரு கொலையில் பாதிக்கப்பட்டவர் தலித் சமுதாயமாக இருந்தால் மட்டுமே அது ஆணவக்கொலை; அதுவே கொலை செய்தவர் தலித்தாக இருந்தால் அது வெறும் கொலை. அரசியல், தொழில் ரீதியான கொலையோ அல்லது சாதி ரீதியான பழிக்கு பழி வாங்கும் கொலையோ — எல்லா கொலையும் ஆணவத்தின் வெளிப்பாடுதான் டா வெண்ணைங்களா! நீங்க பேசுற பெரியாரிய புரட்சிய Experiment'a செய்ய உங்க வீட்டு பொம்பளைங்களையே அனுமதிக்க முடியாத நீங்க, எடுக்குற புரட்சி படத்துல என்னத்தான் டா சொல்ல வரீங்க? பெத்த அப்பனுக்கு தெரியாம, புருசன் இருக்கும் போதே காதலனுடன் பெத்துக்கிட்ட ஒரு குழந்தைய — அதாவது illegitimate child-a — குறைந்தபட்ச மானம், ரோஷம், கோவம் கூட இல்லாம, அந்த அப்பங்காரன் தன்னோட வாரிசா ஏத்துக்கனுமாம், திருந்தனுமாம். என்ன கண்றாவி புரட்சிடா இது! “Baadu” என்கிற மெட்ராஸ் பாஷை வார்த்தைக்கு இனிமேல் “Dude” என ஆங்கிலத்தில் அர்த்தம் கொள்ளலாம்.