21/12/2025
💥💥💥யார் இந்த #தேசிய #கபாடி #வீரர் AZ R. #ரவிச்சந்திரன்* அவர்கள்?
💫இந்தியாவின் தென்முனை, கபாடியையும், இந்த மண்ணையும் பிரிக்க முடியாது என்று சொன்னால் மிகையாகாது, இயற்கை கொஞ்சும், தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்றாக திகழும் கன்னியாகுமாரி மாவட்டம், இராஜாக்கமங்கலம்,
அளத்தங்கரையில் 1965 ஆம் ஆண்டு பிறந்தவர்.
💫💫தேசிய கபாடி வீரர், சிறந்த பயிற்சியாளர், நல்ல பண்பாளர், ஆன்மீகப் பற்றாளர் என பன்முக தன்மை கொண்டவர்...
💥💥💥தற்போது, நாகர்கோவில்,
தமிழ்நாடு மின்சாரவாரியத்தில் AO RIS வாக பணிபுரிகிறார்..
💥💥💥இவர் இராஜாக்கமங்கலம்,
அளத்தங்கரை அரசு பள்ளியில், பள்ளிப்படிப்பை முடித்தவர்..
சுமார் 18 வயதில் இருந்து கபாடி விளையாட ஆரம்பித்தவர்...
🔥🔥🔥இந்திய கபாடியின் நாயகன், அர்ஜூனா விருது, டைகர் ராஜரத்தினம் அவர்கள், இவரின் மாமா என்பது குறிப்பிடத்தக்கது..
💥💥இவர்
ஆரம்ப கபாடியை கணபதிபுரம், திருநைனார்குறிச்சி அணிகளுக்காக விளையாடியவர்..
🔥🔥இவர்
சிறந்த ரைட் ரைடர் (ஆல்ரவுண்டர்)
பாடிச் செல்லும்போது உதைத்து, (kick) புள்ளிகள் எடுப்பதிலும், கையை வைத்து Rotation செய்து வெளியே வந்து புள்ளிகள் எடுப்பதையும், யுக்தியாக கொண்டவர் என்பது சிறப்பு👍🏻
💥💫💫தன்னுடைய கல்லூரி படிப்பை லட்சுமிபுரம் கல்லூரியில் படித்தவர்.
இவர், மதுரை காமராசர் பல்கலைகழக விளையாட்டு வீரர்...
💪🏻💪🏻✌️அந்த அணிக்காக விளையாடி, அகில இந்திய பல்கலை
கழகங்களுக்கான போட்டியில், (1985-86 இருக்கலாம் )இரண்டாம் இடம் பெற்று தந்தவர் என்பது சிறப்பு👌..
✌️✌️இந்த அணியில் விளையாடிய, கண்ணன், மாரியப்பன் உட்பட 12 வீரர்களும், விளையாட்டுதுறை ஒதுக்கீட்டில் வேலை வாய்ப்பு பெற்றது ...தனிச் சிறப்பு....👍🏻👍🏻
💫💫முதலில், 1988 ஆம் ஆண்டு, பாண்டியன்
டிரான்ஸ்போர்ட்-ல்
விளையாட்டு துறை ஒதுக்கீட்டின் மூலமாக வேலை பெற்றார்..
💥💥பின்பு 1989ம் ஆண்டில் தமிழ்நாடு மின்சார வாரியத்தில்,
விளையாட்டு துறை ஒதுக்கீட்டின் மூலமாக வேலை பெற்றார்..
🔥🔥🔥வேலை வாய்ப்பு பெற்ற பிறகு
1989 ஆம் ஆண்டுதான், பல சிறந்த வீரர்களை தமிழகத்திற்கு கொடுத்த அளத்தங்கரை, A-Z அணியை தொடங்கினார்.
💥💥💥 அண்ணார் அவர்கள் விளையாடிய, தமிழ்நாடு மின்வாரிய கபாடி அணி, 10 ஆண்டுகளுக்கு மேல் அகில இந்திய மின்வாரிய போட்டியில் முதலிடம் பெற்றார்கள்..
அந்த அணியில், இந்தியாவின் தலைசிறந்த வீரர்களான, அர்ஜூனா விருது மணத்தி கணேசன், புலவேந்திரன்,மனோகரன், ரவிசுந்தர்,
சூசை, மணல்மேடு பழனி, ராஜசேகரன், என பலரும் இடம் பெற்று இருந்தனர்..
🏆🏆தமிழக கபாடியின் பொற்காலம் என நினைவு கூறப்படும் ஆண்டுகளில் ஒன்றான 1994 ஆம் ஆண்டு, மகாராஷ்டிரா, அகோலா-வில் நடைபெற்ற,
தேசிய சீனியர் கபாடி போட்டியில் முதலிடம் பிடித்து, தமிழகத்திற்கு தங்கம் பெற்று கொடுத்த தங்க மகன்...🥇🥇👏🏻
🔥🔥🔥இந்த அணியில் இந்திய கபாடி வீரர்கள், அர்ஜூனா விருது ராஜரத்தினம், மணத்தி கணேசன், சேலம் சாமியப்பன், தஞ்சை பாஸ்கரன், ஒட்டன்சத்திரம் முருகானந்தம், மற்றும் ஈரோடு சுப்பிரமணியன், மெய்ஞானபுரம் ரவிசுந்தர், வெங்கரை கமலகண்ணன் என கபாடி ஜாம்பவான்கள் இடம் பெற்று இருந்தனர்..( சிலர் பெயர் விடுபட்டு உள்ளது)
💪🏻💪🏻இதே சாம்பியன் தமிழக அணி, 1994 ஆம் ஆண்டு, இந்தியா மற்றும் ஜப்பான் அணிகளுக்கு இடையே, கல்கத்தாவில் நடைபெற்ற காட்சி போட்டியில், இந்தியா சார்பாக பங்கேற்றது..
💥💥அளத்தங்கரை மைதானத்தில், தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து வந்து சுமார் பல ஆயிரக்கணக்கான வீரர்கள், இலவசமாக கபாடி பயிற்சி பெற்று உள்ளனர்..
💥💥இளம் தலைமுறை, புதிய வீரர்களே, அளத்தங்கரையில், அண்ணார் அவர்களிடம், பயிற்சி பெற, வரும் கோடைகால பயிற்சி முகாமில் கலந்து கொண்டு, உங்கள் ஆர்வத்தையும், விளையாட்டையும், வெளிப்படுத்துங்கள்.. தேர்வு செய்யப்பட்டால், உங்களுக்கு, தொடர் பயிற்சி பெற வாய்ப்பு உண்டு...
💥💥தலைசிறந்த தடுப்பாட்டக்காரர், இந்திய கபாடி வீரர் ஜீவாகுமார்(எ) ரவி A-Z கபாடி அணியைச் சேர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது..
💥💥💥35 வருட கபாடி பாரம்பரியம் மிக்க A-Z அணியின் கபாடி வீரர்கள் தான்,
விளையாட்டு துறை ஒதுக்கீட்டில் தமிழகத்தில், அதிக வேலை வாய்ப்பு பெற்றவர்கள்..
அதாவது ஓர் கிளப் அணியில் இருந்து அதிக எண்ணிக்கையில் வேலை வாய்ப்பு பெற்றவர்கள்...
தேசிய, மாநில, பல்கலைகழகம் மற்றும் புரோ கபாடி என பலவற்றில் இவர்களின் பங்களிப்பு சிறப்பானது....
🔥🔥தமிழகத்தில், இல்லை இல்லை, இந்தியாவிலேயே, அதிகப் போட்டிகள்,அதிக புதிய மைதானங்களில் களம் கண்ட, பெருமைக்கு உரிய அணி A-Z அளத்தங்கரை என்பது தனிச் சிறப்பு...
🔥🔥🔥இத்தனை வீரர்களை உருவாக்கிய பெருமைக்குச் சொந்தக்காரர், மரியாதைக்கும், போற்றுதலுக்கும் உரிய பயிற்சியாளர் R. ரவிச்சந்திரன் அவர்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது... 🙏🏻
தனது கபாடி பயணத்தில் வியக்க வைத்த கபாடி வீரர்களுக்கும், கற்றுக் கொடுத்த ஆசான்களுக்கும், பயிற்சி களத்தில் உறுதுணையாக இருக்கும் நல்உள்ளங்களுக்கும், நல்வழிகாட்டிய இறைவனுக்கும் நன்றிகள் தெரிவித்தார்..
அதில் குறிப்பாக ராஜரத்தினம், மனோகரன், EB Coach ஜெயபால், சிட்டம்பட்டி ராமமூர்த்தி, ராஜசேகரன் என பலரையும் நினைவு கூர்ந்தார்...
💫💫💫இளம் தலைமுறை கபாடிவீரர்கள் , கடும் பயிற்சி, ஒழுக்கம், நேர்மை, மற்றும் இறை உணர்வுடன், அணுகினால், விளையாட்டு மற்றும் வாழ்வில் வெற்றியடையலாம் என அறிவுறுத்தினார்..
👍🏻👍🏻உங்களை போன்றோருக்கு, இந்தியாவின் சிறந்த பயிற்சியாளர்களுக்கு வழங்கப்படும் துரோணச்சார்யா விருது கொடுத்தாலும் தகாது...
🔥🔥கபாடி உலகத்திற்கு, உங்களை அடையாளப்படுத்த வேண்டியது இல்லை.. உங்களின் செயலை ஆவணப்படுத்த வேண்டும்....🙏🏻✌️
🔥🔥இறைவனுக்கு பணி செய்து கிடப்பதும், கபாடிக்கு பணி செய்து கிடப்பது உங்கள் இரண்டு கண்கள் போல்... என உங்கள் பேச்சின் போது நான் அறிந்தேன்...
💐💐💐அண்ணார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்💐💐💐.. வாழ்க வளமுடன்.....
உங்கள் வருங்கால கபாடி பணி சிறக்க, வாழ்த்தி வணங்குவது...
கபாடியில் ஒருவன்
உங்கள் DR 🙏...