Tirupur News

Tirupur News திருப்பூர் செய்திகளை வாசிக்க இந்த ப?

We provide you all the hot news in and around Tirupur especially for the Tirupurians through Facebook.Our main motive is that all people of Tirupur must know whats happening in their City.If you have any suggestions please message me.

திமுக மாவட்ட செயலாளர் ராஜினாமா:சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வி எதிரொலியாக திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் க.செல்வர...
22/05/2016

திமுக மாவட்ட செயலாளர் ராஜினாமா:

சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வி எதிரொலியாக திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் க.செல்வராஜ் தனது மாவட்ட செயலாளர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதற்கான கடிதத்தை அவர் திமுக தலைவர் கருணாநிதிக்கு அனுப்பி வைத்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை பொறுத்தவரை கொங்கு மண்டலத்தில் திமுகவுக்கு பெரிய அளவில் வெற்றி கிடைக்கவில்லை. தேர்தலில் திருப்பூர் மாவட்டத்தில் தாராபுரம் (தனி), காங்கயம் தொகுதிகள் தவிர பிற திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, அவிநாசி (தனி), பல்லடம், உடுமலை, மடத்துக்குளம் ஆகிய ஆறு தொகுதிகளில் திமுக நேரடியாக வேட்பாளர்களை களமிறக்கியது.

தேர்தலுக்கு முன்னதாக, திமுக சார்பில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளரான க.செல்வராஜ் திருப்பூர் வடக்கு, தெற்கு, பல்லடம், அவிநாசி ஆகிய தொகுதிகளுக்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். பின்னாளில் அவரே திருப்பூர் தெற்கு தொகுதி வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டார். மேலும் திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன் தாராபுரம், உடுமலை, காங்கயம், மடத்துக்குளம் ஆகிய தொகுதிகளுக்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.

தவிர, அந்த கூட்டத்தில் ஒவ்வொரு பொறுப்பாளர்களும் தங்களின் கீழ் உள்ள தொகுதிகளில் இரண்டு தொகுதிகளில் வெற்றியைப் பெற்றுத் தர வேண்டும். இல்லையெனில் தங்களது கட்சி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கட்சி தலைமை சார்பில் தெரிவிக்கப்பட்டதாம்.

தேர்தல் முடிவில், திருப்பூர் மாவட்டத்தில் தாராபுரத்தில் காங்கிரஸ், மடத்துக்குளத்தில் திமுக வெற்றி பெற்றன. பிற தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். இதில் க.செல்வராஜ் உள்பட, அவர் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட நான்கு தொகுதிகளிலும் திமுக வேட்பாளர்கள் தோல்வியடைந்தனர்.

இந்நிலையில் ஏற்கனவே மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கட்சி தலைமை அறிவுறுத்தியபடி, தனது வடக்கு மாவட்ட செயலாளர் பதவியை அவர் ராஜினாமா செய்துள்ளதாகவும், தனது ராஜினாமா கடிதத்தை அவர் திமுக தலைவர் கருணாநிதி, பொதுச் செயலாளர் க.அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின், அமைப்பு செயலாளர் எஸ்.ஆர்.பாரதி ஆகியோருக்கு சனிக்கிழமை அனுப்பி வைத்துள்ளதாகவும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து க.செல்வராஜிடம் கேட்ட போது, ஒரு மாவட்ட செயலாளர் நான்கு தொகுதிகளில் வெற்றி பெற்றுத் தர வேண்டும் என்று கூறப்பட்டது. தேர்தலில் அவ்வாறு நடக்கவில்லை. அதன் காரணமாக ராஜினாமா கடிதத்தை கட்சி தலைமை உள்ளிட்டோருக்கு அனுப்பியுள்ளேன். அதை ஏற்பது குறித்து கட்சி தலைமையே முடிவு செய்யும், என்றார்.

திருப்பூர் ஈஸ்வரன் கோயில் தேரோட்டம்:திருப்பூரில் புகழ்பெற்ற ஈஸ்வரன் கோயில் தேரோட்டம் சனிக்கிழமை மாலை நடைபெற்றது.திருப்பூ...
22/05/2016

திருப்பூர் ஈஸ்வரன் கோயில் தேரோட்டம்:

திருப்பூரில் புகழ்பெற்ற ஈஸ்வரன் கோயில் தேரோட்டம் சனிக்கிழமை மாலை நடைபெற்றது.

திருப்பூரில் பழைய பேருந்து நிலையம் அருகே புகழ்பெற்ற ஈஸ்வரன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் வைகாசி விசாக தேர்த் திருவிழா கடந்த 14-ஆம் தேதி தேதி கிராம சாந்தியுடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து நாள்தோறும் சிறப்பு பூஜைகள், சுவாமி திருவீதியுலா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன.

இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஈஸ்வரன் கோயில் தேரோட்டம் சனிக்கிழமை மாலை நடைபெற்றது. நிலையிலிருந்து புறப்பட்ட தேர் சிவசிவ மந்திரம் முழங்க அரிசிக்கடை வீதி வழியாக சென்று மீண்டும் ஈஸ்வரன் கோயில் வீதி வழியாக நிலையை அடைந்தது.

தேர் திருவிழாவில் திருப்பூர் மாநகர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பலர் திரளாக கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேரோட்டத்தின் போது வாத்திய நிகழ்ச்சி, ஒயிலாட்டம், நாதஸ்வர இசை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் மேற்கொண்டனர்.

திருப்பூர், திருப்பூர் நெசவாளர் காலனியை சேர்ந்தவர் ராஜேந்திரன்(வயது 35). இவரும் அதே பகுதியை சேர்ந்த மாலா(37) என்பவரும் ச...
21/03/2016

திருப்பூர்,

திருப்பூர் நெசவாளர் காலனியை சேர்ந்தவர் ராஜேந்திரன்(வயது 35). இவரும் அதே பகுதியை சேர்ந்த மாலா(37) என்பவரும் சேர்ந்து பனியன் செகண்ட்ஸ் வியாபாரம் செய்து வந்தனர். தொழில் தேவைக்காக அப்பகுதியை சேர்ந்த ரவி(45) என்பவரிடம் 2 பேரும் சேர்ந்து ரூ.4 லட்சம் கடனாக வாங்கியதாக தெரிகிறது. ஆனால் இந்த பணத்தை ராஜேந்திரனும், மாலாவும் சேர்ந்து கொடுக்காமல் இழுத்தடித்ததுடன் ரவியை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து ரவி திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் நெல்சன் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் ராஜேந்திரன், மாலா இருவரும் சேர்ந்து இதுபோல் 10–க்கும் மேற்பட்டவர்களிடம் பணம் பெற்று கொடுக்காமல் ஏமாற்றி வந்தது தெரியவந்தது. இந்தநிலையில் ராஜேந்திரன், மாலா ஆகிய 2 பேரையும் திருப்பூர் வடக்கு போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

முத்தூர்,முத்தூர்– காங்கேயம் ரோட்டின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் லாரி மோதி விபத்துக்குள்ளானதில் டீசல் டேங்க் உடைந்து ரோட...
21/03/2016

முத்தூர்,

முத்தூர்– காங்கேயம் ரோட்டின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் லாரி மோதி விபத்துக்குள்ளானதில் டீசல் டேங்க் உடைந்து ரோட்டில் டீசல் ஆறாக ஓடியது.

தடுப்பு சுவரில் மோதியது
கேரளா மாநிலத்தில் இருந்து சென்னைக்கு பாலிதீன் கவர் தயாரிப்பதற்கான உதிரி பொருட்களை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி புறப்பட்டு வந்தது. இந்த லாரியை சேலம் மாவட்டம் ராசிபுரம் பகுதியை சேர்ந்த ஆனந்த் (வயது 30) ஓட்டி வந்தார். இந்த லாரி நேற்று முன்தினம் நள்ளிரவு திருப்பூர் மாவட்டம் முத்தூர்– காங்கேயம் மெயின் ரோட்டில் கணேசபுரம் அருகில் வந்து கொண்டிருந்தபோது திடீரென்று எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்து நடுரோட்டில் வைக்கப்பட்டிருந்த தடுப்புச்சுவரில்(டிவைடர்) வேகமாக மோதி விபத்துக்குள்ளானது.

அப்போது லாரி தடுப்புச்சுவரில் மோதிய வேகத்தில் லாரியின் முன்புறத்தில் உள்ள இடதுபுற சக்கரம் தனியாக கழன்று விழுந்தது. மேலும் லாரியின் டீசல் டேங்க் தார் ரோட்டில் உரசியதால் உடைந்து டீசல்கள் நடுரோட்டில் ஆறாக ஓடியது. மேலும் லாரியின் அடியில் உள்ள என்ஜின் மற்றும் அதன் உதிரி பாகங்கள் பலத்த சேதமடைந்து கழன்று விழுந்தன. ஆனால் தார் ரோட்டில் லாரி மோதிய வேகத்தில் உராய்வினால் தீ விபத்து ஏதும் ஏற்படவில்லை.

உயிர் தப்பினர்
இந்த விபத்தில் லாரியை ஓட்டி வந்த டிரைவர் ஆனந்த் மற்றும் அருகில் அமர்ந்து வந்த கிளீனர் ஆகியோர் காயமின்றி உயிர் தப்பினார்கள். மேலும் இந்த விபத்தில் தமிழக நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான 4 தடுப்புச்சுவர்கள் பலத்த சேதமடைந்தன. இந்த லாரி விபத்துக்குள்ளாவதற்கு நடுரோட்டில் நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் வைக்கப்பட்டுள்ள தடுப்புச்சுவரே காரணமாகும். எனவே இந்த சுவரை உடனடியாக அகற்ற மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் - ஊத்துக்குளி ரோட்டில், டி.எம்.எப்., மருத்துவமனை பகுதியில், ரயில்வே சுரங்க பாலம் கட்டும் பணிமந்தகதியில் நடக்க...
21/03/2016

திருப்பூர் - ஊத்துக்குளி ரோட்டில், டி.எம்.எப்., மருத்துவமனை பகுதியில், ரயில்வே சுரங்க பாலம் கட்டும் பணிமந்தகதியில் நடக்கிறது. தேர்தல் பணியில் சுறுசுறுப்பாக செயல்படும் கலெக்டர், சுணங்கியிருக்கும்நெடுஞ்சாலைத்துறை பணிகளை முடுக்கி விட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

திருப்பூரில் ஆதார் அடையாள அட்டைக்கு புகைப்படம் எடுக்க நடமாடும் சிறப்பு பஸ் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்திருப்ப...
07/02/2016

திருப்பூரில் ஆதார் அடையாள அட்டைக்கு புகைப்படம் எடுக்க நடமாடும் சிறப்பு பஸ் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்

திருப்பூரில் ஆதார் அடையாள அட்டைக்கு புகைப்படம் எடுக்க சிறப்பு பஸ் விடப்பட்டுள்ளது. இந்த பஸ் சென்ற இடங்களில் ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு ஆதார் அடையாள அட்டைக்கு புகைப்படம் எடுத்தனர்.

கலெக்டர் தொடங்கி வைத்தார்
திருப்பூர் மாவட்டத்தில் ஆதார் அடையாள அட்டைக்கு புகைப்படம் எடுக்க ஒரு சிறப்பு பஸ் ஒன்று தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நடமாடும் பஸ் திருப்பூர் மாநகராட்சி முழுவதும் 20 நாட்கள் சுற்றி வர உள்ளது. இந்த பஸ்சை நேற்று திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலிருந்து கலெக்டர் ஜெயந்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த பஸ்சில் ஒரே நேரத்தில் 4 பேருக்கு ஆதார் அடையாள அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் வகையில் நவீன உபகரணங்கள் பொருத்தப்பட்டு உள்ளது. இதன்படி ஆதார் அடையாள அட்டை புகைப்படம் எடுக்க வருபவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டும், விரல் ரேகை, கருவிழிப்படலம் மற்றும் புகைப்படம் உள்ளிட்டவை கணினி மூலம் பதிவு செய்யப்படுகிறது.

பொதுமக்கள் ஆர்வம்
இந்த முகாமின் முதல் நாளான நேற்று நடமாடும் சிறப்பு பஸ் 21–வது வார்டுக்கு உட்பட்ட பகுதியான கஞ்சம்பாளையம், அறிவொளிநகர், ராதா நகர், ரோஜாநகர், தொட்டியமண்ணரை, ஆர்.கே.ஜி.நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்றது. அந்த பகுதியை சேர்ந்த 100–க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வரிசையில் நின்று இந்த சிறப்பு பஸ்சை பயன்படுத்தி புகைப்படம் எடுத்தனர்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரசன்ன ராமசாமி, திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் அசோகன், ஆர்.டி.ஓ. முருகேசன், நேர்முக உதவியாளர் கணேச சேகரன், மாநகராட்சி உதவி ஆணையாளர் சந்தான நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

16/12/2015

அதிகாரிகளின் அலட்சிய போக்கால் சுரங்கப்பாலம் பணி 5 ஆண்டாக இழுபறி

திருப்பூர், : நிலம் கையகப்படுத்துவதில் அதிகாரிகள் காட்டும் அலட்சியத்தால், திருப்பூர் பார்்க் ரோட்டில் சுரங்கப்பாலம் அமைக்கும் பணி, 5 ஆண்டுகளுக்கும் மேலாக இழுபறியாகி வருகிறது. திருப்பூர் குமரன் ரோடு, காமராஜர் ரோடு மற்றும் யூனியன் மில் ரோட்டில் இருந்து பார்க் ரோடு, எம்.ஜி.ஆர்., சிலை அருகே சந்திக்கின்றன. அபரிமிதமான வாகன போக்குவரத்து இருப்பதால், நான்கு ரோடு சந்திப்பில் உள்ள சிக்னல் இருபுறமும், வாகனங்கள் காத்திருக்க வேண்டியுள்ளது.

காலை, மாலை நெரிசல் நேரங்களில், சிக்னலின்போது, குமரன் ரோட்டில் ஒரு கி.மீ., தூரம் வரை, வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. போக்குவரத்து நெரிசல், காலவிரையம் உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு, 9 கோடி ரூபாய் செலவில் எம்.ஜி.ஆர்., சிலை அருகே, பார்க் ரோட்டில் இருந்து, யுனிவர்சல் ரோடு வரை, நொய்யல் ஆற்றங்கரையில் சுரங்கப்பாலம் அமைக்க, 5 ஆண்டுகளுக்கு முன் நிதி ஒதுக்கப்பட்டது.

பாலம் அமையும்போது, குமரன் ரோட்டில் இருந்து பழைய பஸ் ஸ்டாண்ட், பல்லடம் ரோடு, தாராபுரம் ரோடு செல்லும் வாகனங்கள், எந்த தடையுமின்றி, எளிதாகச் செல்ல முடியும். யூனியன் மில் ரோட்டில் இருந்து அவிநாசி ரோடு, பி.என்., ரோடுகளுக்கு செல்லும் வாகனங்கள், சுரங்கப்பாலம் வழியாக, தடையின்றி செல்ல முடியும். பாலத்துக்காக, வெள்ளி விழா பூங்கா பகுதியில், கான்கிரீட் சுரங்கப்பாலம் அைமக்கும் பணி துவங்கியது. வாகனங்கள் பயன்பாட்டுக்காக, பூங்கா பகுதியில், 12 மீட்டர் நீளம் நிலத்தை, நெடுஞ்சாலைத்துறையிடம் மாநகராட்சி ஒப்படைத்தது.

ஒரு பகுதியில் சுரங்கப்பாலம் பணி முடிந்து மூன்று ஆண்டாகியும், யுனிவர்சல் ரோடு பகுதியில், பணிகள் துவங்கவில்லை. நிலத்தை கையகப்படுத்தி, நெடுஞ்சாலைத்துறை வசம் ஒப்படைப்பதில் வருவாய்த்துறை அதிகாரிகள் அலட்சியமாக உள்ளனர். இதனால், சுரங்கப்பாலத்தின் ஒரு பகுதி பணி, பாதியில் நிற்கிறது. மாவட்ட நிர்வாகம், வருவாய்த்துறை, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளின் அலட்சியத்தால், சுரங்கப்பாலம் பணி கிடப்பிலேயே உள்ளது. பல கோடி ரூபாய் செலவழிக்கப்பட்ட கட்டுமானமும், வீணாகி வருகிறது. சுரங்கப்பாலத்தின் எஞ்சியுள்ள பணிகளை உடனடியாக துவங்கி, வாகன நெரிசல் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

திருப்பூரில் பரிதாபம்: பாட்டில் மூடியை விழுங்கிய 11 மாத குழந்தை மூச்சுத்திணறி சாவு:திருப்பூரில், பாட்டில் மூடியை விழுங்க...
13/12/2015

திருப்பூரில் பரிதாபம்: பாட்டில் மூடியை விழுங்கிய 11 மாத குழந்தை மூச்சுத்திணறி சாவு:

திருப்பூரில், பாட்டில் மூடியை விழுங்கிய 11 மாத குழந்தை மூச்சுத்திணறி நேற்று பரிதாபமாக இறந்தது.

மூடியை விழுங்கிய குழந்தை
திருப்பூர் தாராபுரம் ரோடு கே.என்.பி. காலனியை சேர்ந்தவர் அப்துல்ரசாக் (வயது28). பனியன் நிறுவன தொழிலாளி. இவருடைய மனைவி நூர்பானு(24). இவர்களுக்கு 11 மாதத்தில் அலீமாசாபியா என்ற பெண் குழந்தை இருந்தது. இந்த நிலையில் நேற்று அப்துல்ரசாக் வேலைக்கு சென்றுவிட்டார். நூர்பானு வீட்டு வேலைகளை கவனித்து கொண்டிருந்தார். குழந்தை அலீமாசாபியா வீட்டில் விளையாடி கொண்டிருந்தாள். அப்போது அருகில் கிடந்த குளிர்பான பாட்டிலின் மூடியை எடுத்து விழுங்கியதாக தெரிகிறது.

விளையாடி கொண்டிருந்த குழந்தை அலீமாசாபியாவின் சத்தம் கேட்கவில்லையே என்ற சந்தேகத்தில் தாய் நூர்பானு குழந்தையை வந்து பார்த்துள்ளார். அப்போது விளையாடி கொண்டிருந்த குழந்தை கண்களை மூடிய நிலையில் தரையில் படுத்திருந்தது. குழந்தை தூங்குவதாக நினைத்த தாய் நூர்பானு குழந்தையை எழுப்ப முயன்றார். அப்போத குழந்தையின் உடல் முழுவதும் குளிர்ந்த நிலையில் அசைவற்று இருந்ததால் சந்தேகம் அடைந்த அவர், அங்கு கிடந்த பாட்டில் மூடியை தேடிப்பார்த்தார். ஆனால் மூடியை காணவில்லை.

மூச்சுதிணறி சாவு
இதனால் சந்தேகமும் அதிர்ச்சியும் அடைந்த நூர்பானு, தனது உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் குழந்தையை திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள், குழந்தை மூச்சுத்திணறி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும், குளிர்பான பாட்டிலின் மூடியை விழுங்கியதாலேயே குழந்தை அலீமாசாபியா மூச்சுத்திணறி இறந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, ஆஸ்பத்திரியில் கூடிய குழந்தையின் உறவினர்கள் குழந்தையை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தாமல் ஒப்படைக்க வேண்டும் என்று கூறினார்கள். சம்பவம் அறிந்து அங்கு வந்த திருப்பூர் தெற்குபோலீசார் மற்றும் ஆஸ்பத்திரி நிர்வாகிகள் குழந்தையின் உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதையடுத்து குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குளிர்கால "சாம்பிள்' ஆடை தயாரிப்பு துவங்கியது! ஏற்றுமதி நிறுவனங்கள் "ஜெட்' வேகம்திருப்பூர்: திருப்பூர் பின்னலாடை ஏற்றுமத...
12/12/2015

குளிர்கால "சாம்பிள்' ஆடை தயாரிப்பு துவங்கியது! ஏற்றுமதி நிறுவனங்கள் "ஜெட்' வேகம்

திருப்பூர்: திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்களில், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கான குளிர்கால "சாம்பிள்' ஆடை உற்பத்தி துவங்கியுள்ளது. "ஆர்டர்' அதிகரித்துள்ளதால், செயற்கை நூலிழை, துணி இறக்குமதி வரியினங்களை, மத்திய அரசு குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை, தொழில் துறையினர் மத்தியில் எழுந்துள்ளது.

திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள், ஆண்டுதோறும், கோடை, குளிர், இளவேனில் காலத்துக்கான ஆடைகளை தயாரித்து, உலகளாவிய நாடு களுக்கு ஏற்றுமதி செய்கின்றன. வெளிநாட்டு "பையர்'கள், ஆடைகளின் விலை, தரம் ஆகியவற்றை ஆராய்ந்து, அதற்கேற்ப "ஆர்டர்' வழங்குகின்றனர். திருப்பூர் தொழில் துறைக்கு, வங்கதேசம், வியட்நாம், பாகிஸ்தான் நாடுகள் போட்டியாக உள்ளன. இந்நாடுகளை எதிர்கொண்டு, பின்னலாடை துறையினர் "ஆர்டர்' பெறு கின்றனர். தீபாவளி பண்டிகைக்குபின், தொழிலாளர் வருகை சிறப்பாக உள்ளதால், ஆடை உற்பத்தி நிறுவனங்களில் பணி வேகமெடுத்துள்ளது. கோடை காலத்துக்கு தேவையான ஆடைகள் உற்பத்தி செய்து, அனுப்பப்பட்டு வருகின்றன.

அதேநேரம், அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளில் இருந்து, குளிர்கால ஆடை உற்பத்தி "ஆர்டர்' வரத்துவங்கி உள்ளது. தொப்பியுடன் கூடிய ஸ்வெட்டர், போலோ சர்ட், லூப்நெட் உள்ளிட்ட ஆடை தயாரிப்பு "ஆர்டர்', ஒப்பந்தமாகி வருகின்றன. முழுமையான ஆடை உற்பத்தியை துவங்குவதற்கான "பையர்' ஒப்புதல் பெறுவதற்காக, குளிர்கால ஆடை "சாம்பிள்' உற்பத்தியில், நிறுவனங்கள் தீவிரம் காட்டி வருகின்றன.

கோடை கால ஆடைகள், பருத்தி நூலிழையில் தயாரிக்கப்படுகின்றன. குளிர்கால ஆடைகள், பாலியஸ்டர், பாலி விஸ்கோஸ் போன்ற செயற்கை இழையில் தயாரிக்கப்படுகிறது. பருத்தி நூலிழை உற்பத்தியில் தமிழகம் சிறப்பிடம் வகிப்பதால், ஆடை உற்பத்தி நிறுவனங்கள், கோடை கால ஆடை உற்பத்தி மூலப்பொருட்களை, உள்நாட்டிலேயே கொள்முதல் செய்கின்றன. ஆனால், குளிர்கால ஆடை உற்பத்திக்கான செயற்கை நூலிழை, துணி ரகங்கள், சீனா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.

இளம் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் குமார் கூறியதாவது: திருப்பூர் ஏற்றுமதி நிறுவனங்கள், குளிர்கால "ஆர்டர்' பெறுவதற்கான "சாம்பிள்' ஆடை உற்பத்தியில் ஈடுபட் டுள்ளன. ஒவ்வொரு ஆண்டும், குளிர்கால ஆடை உற்பத்தியில், தொய்வு ஏற்படுகிறது. பிற நாடுகளில் இருந்து செயற்கை இழை, துணி இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது; செயற்கை நூலிழை, துணிகளுக்கு, 10 சதவீதம் சுங்க வரியோடு, கலால் வரி, விற்பனை வரி என, 30 சதவீதம் வரை வரி விதிக்கப்படுகிறது. அதிகபட்ச வரியினங்களால், பிற நாடுகளுடன் போட்டியிட்டு, "ஆர்டர்' பெறுவது சிக்கலாகிறது.

ஏற்றுமதி ஆடை உற்பத்திக்காக இறக்குமதி செய்யப்படும் செயற்கை நூலிழை, துணி இறக்குமதி வரியினங்களை குறைக்க வேண்டும் என, மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம். வரியினங்கள் குறைந்தால், குளிர்கால ஆடை உற்பத்திக்கு அதிகளவு "ஆர்டர்' பெற முடியும். இவ்வாறு, அவர் கூறினார்.

"ஸ்மார்ட் சிட்டி' அறிக்கைதிருப்பூர்: "ஸ்மார்ட் சிட்டி' குறித்த அறிக்கையை, இம்மாத இறுதியில் வழங்க, திருப்பூர் மாநகராட்சி ...
12/12/2015

"ஸ்மார்ட் சிட்டி' அறிக்கை

திருப்பூர்: "ஸ்மார்ட் சிட்டி' குறித்த அறிக்கையை, இம்மாத இறுதியில் வழங்க, திருப்பூர் மாநகராட்சி திட்டமிட்டுள்ளது; நான்கு தலைப்புகளில் அறிக்கை தயாராகி வருகிறது.
மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம், திருப்பூரை, "ஸ்மார்ட் சிட்டி' பட்டியலில் சேர்த்துள்ளது. இதுதொடர்பாக, மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள், தொழில்துறை, பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டது. நகரில் உள்ள, 39 இடங்களில், ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. "பேஸ்புக்', "டிவிட்டர்' உள்ளிட்ட சமூக வலைதளங்கள் வாயிலாகவும், "ஸ்மார்ட் சிட்டி' திட்டம் குறித்த கருத்துகள் பதிவேற்றம் செய்யப்பட்டு, பொதுமக்களின் ஆலோசனை பெறப்பட்டது.
"ஸ்மார்ட் சிட்டி' பட்டியலில் இடம் பெற்றுள்ள நகரங்கள், இம்மாதம், 15க்குள், அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்கேற்ப, இம்மாத இறுதிக்குள், அறிக்கையை அரசிடம் வழங்க, திருப்பூர் மாநகராட்சி தயாராகி வருகிறது. தற்போதைய நிலையை மேம்படுத்துதல், மறுஅபிவிருத்தி, பசுமை நகரம் உட்பட, நான்கு தலைப்புகளில் அறிக்கை தயாராவதாக, மாநகராட்சி உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

உடுமலை அரசு கலைக்கல்லூரி மாணவர்களின் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்:உடுமலை அரசு கலைக்கல்லூரி மாணவர்களிடம் நடந்த பேச்சுவா...
11/12/2015

உடுமலை அரசு கலைக்கல்லூரி மாணவர்களின் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்:

உடுமலை அரசு கலைக்கல்லூரி மாணவர்களிடம் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்
உடுமலை அரசு கலைக்கல்லூரியில் சுமார் 2 ஆயிரத்து 900 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். தினமும் முற்பகல், பிற்பகல் என 2 ஷிப்டுகளாக வகுப்புகள் நடத்தப்படுகிறது. தற்போது வகுப்புகளை நடத்துவதற்குத் தேவையான பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ள போதிலும் வகுப்பறைகள் பற்றாக்குறையாக உள்ளது.

இதனால் நடைமுறையில் இருந்து வரும் வகுப்புகளுக்கு ஷிப்டு முறையில் சில மாற்றங்களை செய்து கல்லூரி நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு கல்லூரி மாணவ, மாணவிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து மாணவ, மாணவிகள் கூறும்போது, ‘‘ஷிப்டு முறையில் கல்லூரிக்கு வரும் மாணவ, மாணவிகளில் பலர் கல்லூரி நேரம்போக மீதி நேரங்களில் பகுதி நேர வேலைக்கு சென்று வருகின்றனர். ஷிப்டு முறையில் மாற்றம் செய்வதால் வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்படும். இதனால் நடைமுறையில் உள்ள ஷிப்டு முறையையே பின்பற்ற வேண்டும்’’ என்றனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி மாணவ, மாணவிகள் நேற்று 3–வது நாளாக வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை
நேற்று காலையில் செமஸ்டர் தேர்வு எழுதி வரும் மாணவ, மாணவிகள் மற்றும் சில மாணவ, மாணவிகள் மட்டும் கல்லூரிக்கு சென்றனர். ஆனால் பெரும்பாலான மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து விட்டு கல்லூரி முன்பு திரண்டனர். இது பற்றிய தகவல் அறிந்ததும் போலீசார் குவிக்கப்பட்டனர்.

பின்னர் கல்லூரி முதல்வர் கிறிஸ்டினாள்மேரி சுகுணவதி தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. பேச்சுவார்த்தையில் கல்லூரி மாணவர் பேரவை நிர்வாகிகள், பேராசிரியர்கள் கலந்துகொண்டனர். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து மாணவ, மாணவிகள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

Address

Tirupur

Alerts

Be the first to know and let us send you an email when Tirupur News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share