Ponraj Pasumai Talks

Ponraj Pasumai Talks Founder – Pasumai Talks 🌱 உழவன் மகன் Graphic Designer | Weekend Youtuber
www.youtube.com/pasumaitalks

29/05/2026

கோவை 4ம் ஆண்டு விதைத்திருவிழா
வரும் ஜீன் 07 ஞாயிறு அன்று சிங்காநல்லூர் KSG Arts and Science Collegeல் சிறப்பாக நடைபெறவுள்ளது…

அனைவரும் கலந்துகொண்டு பயன்பெறுங்கள்

நிகழ்வு ஒருங்கிணைப்பு: தாய்மண் இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு

மேலும் தகவலுக்கு தாய்மண் மாரிமுத்து: 90807 39280

Follow Ponraj Pasumai Talks for more videos

https://youtu.be/AxZlHFOmbMg?si=Ds5j--8fqhXy5fdT
26/05/2026

https://youtu.be/AxZlHFOmbMg?si=Ds5j--8fqhXy5fdT

🌾 9ஏக்கரில் 8 வகையான பாரம்பரிய நெல் ரகங்களை இயற்கை முறையில் சாகுபடி செய்து அசத்தும் முன்னாள் பேராசிரியர் ராஜேஷ....

25/05/2026

பழமையான ராகிக்கல்லை இன்று என் மகள் (கவியாழினி பொன்ராஜ்) பயன்படுத்தக் கற்றுக்கொண்டாள் ❤️

முன்னோர் பயன்படுத்திய இந்த பாரம்பரிய கல் சாதனம் வெறும் சமையல் கருவி மட்டும் இல்லை…
இது ஒரு ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் பகுதி 🌾

ராகிக்கல் பயன்படுத்துவதால்:
• தானியங்களின் இயற்கை சத்து காக்கப்படும்
• மிக்சி போல அதிக வெப்பம் உருவாகாது
• உணவின் மணமும் சுவையும் இயற்கையாக இருக்கும்
• கை, தோள், மணிக்கட்டு போன்ற உடல் உறுப்புகளுக்கு இயற்கையான இயக்கம் கிடைக்கும்
• குழந்தைகள் உழைப்பின் மதிப்பையும் பாரம்பரிய வாழ்க்கையையும் அறிந்து கொள்வார்கள் 🍃

இன்றைய காலத்தில் எல்லாமே இயந்திரமாக மாறிக்கொண்டிருக்கிறது…
ஆனால் நம்ம பாரம்பரிய அறிவையும் இயற்கை வாழ்க்கை முறையையும் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக இப்படி சிறிய முயற்சிகள் அவசியம் ❤️

உங்க ஊர்ல இந்த கல்லுக்கு என்ன பெயர்னு Commentla சொல்லுங்க☺️

#தமிழர்_பாரம்பரியம் #இயற்கை_வாழ்க்கை

23/05/2026

🌾 9ஏக்கரில் 8 வகையான பாரம்பரிய நெல் ரகங்களை இயற்கை முறையில் சாகுபடி செய்து அசத்தும் முன்னாள் பேராசிரியர் ராஜேஷ்குமார்.

60க்கும் மேற்பட்ட மதிப்புக்கூட்டல் பொருட்கள் தயாரித்து நேரடியாக அவரது பருக்கை இயற்கை அங்காடியில் விற்பனையும் செய்து வருகின்றார்💚🌱

“Professor turned to Organic farmer” 🌿
பழனி அருகே அமைந்துள்ள பருக்கை இயற்கை வேளாண் பண்ணையில், முன்னாள் பேராசிரியர் ராஜேஷ் குமார் மற்றும் அவரது மனைவி கடந்த சில ஆண்டுகளாக 80க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் வகைகளை இயற்கை முறையில் பயிர்செய்து விதை சேகரிப்பு செய்கின்றனர். 🌱

இந்த ஆண்டில் மட்டும் 8க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் வகைகள் அறுவடைக்கு தயாராக உள்ளன.

தனது தோட்டத்திலேயே சிறிய அரிPasumai Talksு மதிப்புக்கூட்டி அரிசிகளாகவும், இட்லி மிக்ஸ், கஞ்சி மிக்ஸ், கொலுக்கட்டை மிக்ஸ் etc..
என 60+ பொருட்களை நேரடியாக அவரது உடுமலை பருக்கை இயற்கை அங்காடியின் மூலம் விற்பனை செய்கின்றார்..

உள்ளூர் விவசாயிகளுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் அவ்வப்போது பயிற்சிகளும் வழங்கிவருகின்றார்..

Watch full video on youtube:

https://youtu.be/AxZlHFOmbMg?si=b7dORO1TTXGLXqGL

Follow Pasumai Talks for more videos

ஏழு, எட்டு குழந்தைகள் பெற்றுக்கொண்ட சமூகம் எப்படி எல்லாம் சீர்கெட்டு, இன்று ஒரு குழந்தைக்குக் கூட வழியில்லாத சூழலுக்குள்...
22/05/2026

ஏழு, எட்டு குழந்தைகள் பெற்றுக்கொண்ட சமூகம் எப்படி எல்லாம் சீர்கெட்டு, இன்று ஒரு குழந்தைக்குக் கூட வழியில்லாத சூழலுக்குள் சென்றது?

சிறுநீரகத்தின் ஆற்றல் முழுமையாக இருந்தால், குழந்தை பெற்றுக்கொள்ளும் தன்மையில் இருப்பார்கள்.

சிறுநீரகத்தின் ஆற்றல் பாதிக்கப்பட்டால், குழந்தை பெற்றுக்கொள்ளும் தன்மையையும் ஆரோக்கியத்தையும் இழந்துவிடுவார்கள்.

எந்தெந்த விஷயங்கள் இனப்பெருக்க மண்டலமான சிறுநீரகத்தின் ஆற்றலை பாதிக்கின்றன?

ஒரு குழந்தை அம்மாவின் வயிற்றில் இருக்கும் போது, அம்மா எடுத்துக்கொள்ளும் மருந்து மாத்திரைகள் வயிற்றில் இருக்கும் குழந்தையின் இனப்பெருக்க மண்டலமான சிறுநீரகத்தின் ஆற்றலை பாதிக்கச் செய்கின்றன.

குழந்தை பிறந்த பின்பு போடப்படும் தடுப்பூசிகளில் கலந்துள்ள இரசாயனங்கள், அந்தக் குழந்தையின் இனப்பெருக்க மண்டலமான சிறுநீரகத்தின் ஆற்றலை பாதிக்கின்றன.

குழந்தைப் பருவத்திலிருந்து, குழந்தைகளுக்கு உடல்நலம் இல்லை என்று கொடுக்கப்படும் இரசாயன மருந்துகள், குழந்தையின் இனப்பெருக்க மண்டலமான சிறுநீரகத்தின் ஆற்றலை பாதிக்கின்றன.

துணை உணவுகள் என்ற பெயரில் குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் உணவுகள் கூட, குழந்தைகளின் இனப்பெருக்க மண்டலமான சிறுநீரகத்தின் ஆற்றலை பாதிக்கவே செய்கின்றன.

குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் செயற்கை உணவுகள், துரித உணவுகள் மற்றும் இரசாயனம் கலந்த உணவுகள் ஆகியவற்றிலிருந்து சரிவர ஆற்றல் கிடைக்காமல், குழந்தைகளின் இனப்பெருக்க மண்டலமான சிறுநீரகத்தின் ஆற்றல் குறைகிறது.

குழந்தைகள் வளரும் பருவத்தில், வீட்டில் பெற்றோருக்கு இடையே நடைபெறும் சண்டைகள் மற்றும் அதனால் ஏற்படும் பயமூட்டும் சூழல், குழந்தைகளின் இனப்பெருக்க மண்டலமான சிறுநீரகத்தின் ஆற்றலை வெகுவாக பாதிக்கிறது.

பெருமைக்காக தனியார் பள்ளிகளில் குழந்தைகளை சேர்த்து, பள்ளியின் தேர்ச்சி விகிதத்தை காட்டுவதற்காக கொடுக்கப்படும் மனஅழுத்தங்கள், குழந்தைகளின் உடல் மற்றும் மன வளர்ச்சியில் ஹார்மோன் பாதிப்புகளை ஏற்படுத்தி, இனப்பெருக்க மண்டலமான சிறுநீரகத்தின் ஆற்றலை பாதிக்கின்றன.

வீரியம் இல்லாத, மலட்டுத்தன்மை கொண்ட உணவுகள் கொடுத்து வளர்க்கப்படும் குழந்தைகளின் இனப்பெருக்க மண்டலமான சிறுநீரகத்தின் ஆற்றல் பாதிக்கப்படுகிறது.

மேற்கல்வி படிக்கும் காலத்தில் குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் கல்வி அழுத்தமும், அதனால் ஏற்படும் பய உணர்வும், அவர்களின் இனப்பெருக்க மண்டலமான சிறுநீரகத்தின் ஆற்றலை பாதிக்கின்றன.

கல்வியை முடித்து வேலைக்குச் செல்லும் இடங்களில் கொடுக்கப்படும் அழுத்தங்களும், அதனால் ஏற்படும் மனஅழுத்தமும், இனப்பெருக்க மண்டலமான சிறுநீரகத்தின் ஆற்றலை பாதிக்கச் செய்கின்றன.

வங்கிக் கடனில் வீடு, கார் போன்றவற்றை வாங்கி, அந்தக் கடன்களை செலுத்திக்கொண்டிருக்கும் நிலையும், இனப்பெருக்க மண்டலமான சிறுநீரகத்தின் ஆற்றலை குறைக்கிறது.

சூழ்நிலை காரணமாக மது, புகையிலை மற்றும் போதைப் பழக்கங்களுக்கு அடிமையாக இருந்தாலும், அது இனப்பெருக்க மண்டலமான சிறுநீரகத்தின் ஆற்றலை குறைக்கிறது.

தாமதமான திருமணமும் இனப்பெருக்க மண்டலத்தை பாதிக்கச் செய்கிறது.

மேலே கூறப்பட்ட விஷயங்கள் எதுவும் இல்லாத காலகட்டங்களில், மக்கள் ஏழு, எட்டு குழந்தைகள் பெற்றுக்கொண்டிருந்தார்கள்.

அவர்களுக்கு சிறுநீரகத்தின் ஆற்றல் சிறப்பாகவே இருந்தது.

— கு. நா. மோகன்ராஜ்
Founder of Happy and Healthy Life Solutions

Follow Pasumai Talks

மாலை சூரியன் மெதுவாக தென்னை மரங்களுக்கு பின்னால் மறைந்து கொண்டிருந்த நேரம்… 🌾மண் தூசி பறக்கும் அந்த கிராமத்து தெருவில்,ச...
15/05/2026

மாலை சூரியன் மெதுவாக தென்னை மரங்களுக்கு பின்னால் மறைந்து கொண்டிருந்த நேரம்… 🌾
மண் தூசி பறக்கும் அந்த கிராமத்து தெருவில்,
சிறுவர்கள் குண்டு விளையாடிக் கொண்டிருந்தார்கள்…
சிரிப்பு சத்தம் மட்டும் முழு தெருவையும் நிரப்பியிருந்தது…

தெருவோர வீட்டின் வாசலில் அமர்ந்திருந்த அம்மா,
குழந்தைகள் விளையாடுவதை பார்த்துக்கொண்டே
“இருட்டாகுது… தூரம் போகாதீங்க…” என்று அன்போடு சொல்லிக் கொண்டிருந்தார்…

தொலைவில் சைக்கிள் மணி சத்தம் கேட்டதும்,
“அப்பா வந்துட்டாரு…” என்று குழந்தைகள் சந்தோஷமாக ஓடினார்கள்…

நாள் முழுக்க வயலில் உழைத்து,
வெயிலும் மண்ணும் வியர்வையும் சுமந்து வீடு திரும்பும் அப்பா…
கையில் பெரிய பணம் இல்லாமல் இருந்திருக்கலாம்…
ஆனால் மனசில் குடும்பத்துக்கான அன்பு மட்டும் நிறைய இருந்தது… 🤍

உள்ளூரிலேயே உழைத்து…
உள்ளூர் மக்களின் வாழ்க்கைக்கு பயன்பட்டு வாழ்ந்தவர்கள் தான் நம்ம அப்பாவும் அம்மாவும்…
ஒருவர் வயலில் விதை போட்டார்…
ஒருவர் வீட்டில் அன்பை விதைத்தார்…
அவர்களின் வியர்வையில் தான்
ஒரு குடும்பமும்… ஒரு கிராமமும் வாழ்ந்தது… 🌱

அந்த நாட்களில் வீடுகள் சிறியதாக இருந்திருக்கலாம்…
ஆனால் உறவுகள் பெரியதாக இருந்தது…
வசதிகள் குறைவாக இருந்திருக்கலாம்…
ஆனால் மன நிம்மதி அதிகமாக இருந்தது…

இன்று எல்லாம் வளர்ந்து கொண்டிருக்கிறது…
ஆனால் மண்ணோடு இணைந்த அந்த வாழ்க்கை மட்டும் மெதுவாக மறைந்து கொண்டிருக்கிறது…

நம்ம குழந்தைகளுக்கு சொத்து மட்டும் சேர்க்க வேண்டாம்…
மண் வாசனையையும் சேர்த்து வைப்போம்…
இயற்கையையும் காப்போம்…
கிராமங்களையும் காப்போம்…
ஏனென்றால்…
ஒரு கிராமம் வாழ்ந்தால் தான்
நம்ம வாழ்க்கையும் உயிரோடு இருக்கும்… 🌾🤍

- Ponraj DS(Pasumai Talks)

Follow for more!

#பசுமைTalks #கிராமம் #தமிழகம் #இயற்கை #விவசாயம் #நம்_மண் #தமிழர்_வாழ்க்கை #தமிழ் #பசுமை

13/05/2026

🐇💰 இலாபம் தரும் இறைச்சி முயல் வளர்ப்பு! 💰🐇

குறைந்த முதலீட்டில் அதிக வருமானம் பெற விரும்புகிறீர்களா?

இறைச்சி முயல் வளர்ப்பு இன்று வேகமாக வளர்ந்து வரும் சிறந்த தொழிலாக மாறியுள்ளது.

✅ வேகமான இனப்பெருக்கு
✅ குறைந்த பராமரிப்பு செலவு
✅ அதிக சந்தை தேவை
✅ ஆரோக்கியமான இறைச்சி உற்பத்தி

விவசாயத்துடன் சேர்த்து கூடுதல் வருமானம் பெற சிறந்த வாய்ப்பு!

📍 Boopathi's Integrated Farm, Perundurai
தரமான முயல் கன்றுகள் | வளர்ப்பு ஆலோசனை | முழுமையான வழிகாட்டுதல்

📞 மேலும் தகவல்களுக்கு தொடர்புகொள்ளுங்கள்!
Boopathi (Organic Farmer): 99429 31300
Follow Pasumai Talks for More farming videos

#விவசாயம் #முயல்வளர்ப்பு #இலாபம்தரும்_தொழில்

08/05/2026

ஈஸ்வரமூர்த்தி அவர்கள், ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி பகுதியில் அமைந்துள்ள மருதவனம் பண்ணையை நடத்தும் ஒரு முன்னோடி இயற்கை விவசாயி. 🌱
இவர் ஒரு விதை சேமிப்பாளர் (Seed Saver), மரங்களை நேசிப்பவர் (Tree Lover), இயற்கை விவசாயி. தாயக (நாட்டு) மரங்களை வளர்த்து ஒரு வளமான Food Forest (உணவு காடு) உருவாக்கி வருகிறார்.
🌾 அவரது பண்ணையில் நடைபெறும் முக்கிய செயல்கள்:
🌳 பல்வேறு நாட்டு மரங்கள் வளர்ப்பு
🍃பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படும் 200+ மூலிகை பொடிகள்
🍃15+ வகையான இயற்கை மூலிகை சோப்புகள் தயாரிப்பு
🍃பாரம்பரிய நெல் வகைகள் (Traditional Rice) பாதுகாப்பு
🍃நாட்டு எண்ணெய்கள் மற்றும் value-added products தயாரிப்பு
🛒 இவை அனைத்தும் அவரது பண்ணை கடையான
👉 **“தமிழர் மரபு சந்தை”**யில் கிடைக்கின்றன.

🎥முழு வீடியோ Pasumai Talks யூடியுப் சேனலில் பார்க்கவும்!

01/05/2026

திண்டுக்கல் கீரணூர் கொண்டரங்கி மலையில் சித்ரா பௌர்ணமி சிறப்பு வழிபாடு

Address

855, Karatholuvu
Tirupur
642203

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ponraj Pasumai Talks posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ponraj Pasumai Talks:

Share