Kongunadu Weatherman

  • Home
  • Kongunadu Weatherman

Kongunadu Weatherman TN &Kongu belt ன் மழை நிலவரங்கள் பதிவிடப்படும். This page is not official. Official website is IMD

இன்று nov 12 சற்று வலுவான கிழக்கு திசை காற்றால் கொங்கு பகுதிகளில்  ஆங்காங்கே லேசான/மிதமான மழை இருக்கும்... மேற்கு கொங்கு...
12/11/2025

இன்று nov 12 சற்று வலுவான கிழக்கு திசை காற்றால் கொங்கு பகுதிகளில் ஆங்காங்கே லேசான/மிதமான மழை இருக்கும்... மேற்கு கொங்கு பகுதியில்(கோவை,ஈரோடு,திருப்பூர் ) ஏதாவது ஒரிரு இடங்களில் கன மழை வரை இருக்கும்... தென் மாவட்டங்களிலும் சற்று பரவலாக மழை இருக்கும்...ஒரிரு இடங்களில் கன மழை இருக்கும்..

நீண்ட இடைவெளிக்கு பிறகு திரும்பும் வடகிழக்கு பருவகாற்றால் பருவமழை ஆரம்பமாக இருக்கிறது அடுத்த Nov 15 வரை மழை எதிர்பார்க்க...
11/11/2025

நீண்ட இடைவெளிக்கு பிறகு திரும்பும் வடகிழக்கு பருவகாற்றால் பருவமழை ஆரம்பமாக இருக்கிறது

அடுத்த Nov 15 வரை மழை எதிர்பார்க்கப்படும் பகுதிகள்:

கிழக்கு திசை காற்று காரணமாக Nov 11 முதல் ஏறத்தாழ Nov 14-16 வரை தென் தமிழகத்தில் ஆங்காங்கே மழையும், சமயத்தில் பரவலான மழையும் பெய்ய இருக்கிறது.. ஒரிரு இடங்களில் கன மழையும் இருக்கும். .

அதேபோல கொங்கு பகுதியில் Nov 11 முதல் ஏறத்தாழ nov 14-16 வரை மேற்கு கொங்கு பகுதியான கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஆங்காங்கே சில, பல இடங்களிலும், ஒரிரு இடங்களில் கன மழை வரையும் இருக்கும் மற்றும் ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஆங்காங்கே ஒருசில இடங்களில் மழையும், ஏதாவது ஒரிரு இடங்களில் கன மழை வரையும் இருக்கும். மற்றும் அதற்கு கிழக்கே உள்ள பகுதிகளில் ஆங்காங்கே ஒரிரு இடங்களில் மழை இருக்கும்.. ஆனால் கொங்கு பகுதிகளில் பரவலான மழைக்கு தோரயமாக Nov 15,16 வரை வாய்ப்பு இருக்காது என்பதால் அதுவரை அதிக எதிர்பார்ப்பு வேண்டாம்..

கருகி வரும் பயிர்களை குளிர்விக்க வரும் மழை

Nov 16,17ல் முழுமையான வடகிழக்கு பருவகாற்று திரும்பி Nov 17,18 வாக்கில் தென்மேற்கு வங்ககடலில் ஒரு தாழ்வு நிலை உருவாகும். Nov 17,18 முதல் தமிழக கடலோர பகுதிகளில் பரவலான மழை ஆரம்பமாகும்..

அந்த தாழ்வு நிலையானது தென்மேற்கு வங்கடலிலிருந்து மேற்கு நோக்கி மன்னார் வளைகுடா அல்லது குமரிக்கடல் நோக்கி நகர்ந்தால் மட்டும் தமிழக மேற்கு மாவட்டங்களுக்கு(கொங்கு பகுதி, தென் உள் மாவட்டங்கள்) பரவலான மழை கிடைக்கும்... வடகிழக்கு பருவகாற்றின் முழுமையான ஈரப்பதம், லேசான MJO, ITCZ, கடல் சார்ந்த அலைவுகள், கடல் மேற்பரப்பு வெப்பநிலை சாதகமாக இருப்பது போன்ற சாதகமான மழை காரணிகளால் அத்தாழ்வு நிலை மேற்கு (மன்னார் வளைகுடா அல்லது குமரிக்கடல்) நோக்கி நகரவே அதிக வாய்ப்பிருக்கிறது.. அவ்வாறு நகர்ந்தால் வாடி வதங்கி வரும் கொறங்காடு, மானாவரி பயிர்களுக்கும் பரவலாக உயிர் மழை கிடைக்கும்.. இதை வரும் நாட்களில் உறுதிபடுத்தலாம்..

அதற்கடுத்த சிஸ்டம் தோரயமாக Nov 22-26 வாக்கில் தமிழக கரையை நெருங்கலாம்.. அந்த சிஸ்டம் வலுப்பெற MJO சாதகமாக இல்லததால் அந்த சிஸ்டம் வலுப்பெற வாய்ப்பு குறைவாக உள்ளது. இருப்பினும் அந்த சிஸ்டம் வலுப்பெற கடல் வெப்பநிலை சாதகமாக உள்ளது.. வலுப்பெறாமல் இருப்பதே தமிழகத்திற்கு நல்லது அதைபற்றி வரும் நாட்களில் பார்ப்போம்..

டிசம்பரிலும் கடல் மேற்பரப்பு வெப்ப நிலை, MJO, ITCZ, கடல் சார்ந்த அலைவுகள் வருகை என மழைக்காரணிகள் சாதகமாக இருப்பதால் தமிழகத்தில் ஒரளவிற்கு பரவலான நல்ல மழை இருக்கிறது.. இதனால் 2016, 2017போல கடும் வறட்சி வரும் என்ற கவலை வேண்டாம். .. ஆனால் மழை பற்றாக்குறையால் லேசான, மிதமான வறட்சி இருக்கும்.... சில இடங்களில் அதிக வறட்சியும் இருக்கும். . ஆனால் கடும் வறட்சி ஏற்படாமல் இருக்க நவம்பர் இறுதி, டிசம்பரிலும் பரவலான மழையும் இருக்கிறது.. நவம்பரில் அடித்த இயல்பிற்கு மாறான வெப்பநிலையும், இயல்பிற்கு மாறன மேற்கு திசை காற்றும், மழை இல்லாமல் நீண்ட இடைவெளியும் நவம்பர் இறுதி, டிசம்பரில் பரவலான மழைக்கு சாதகமாக அமையும்.. அதேபோன்று தமிழக அணைகளுக்கு ஒரளவிற்கு நல்ல நீர்வரத்தும் இருக்கும்.... அமராவதி அணையும் குறைந்தது ஒரு முறையாவது நிரம்ப வாய்ப்பிருக்கிறது.. இயற்கையை அதன் மழைக்காரணிகளை வைத்து ஒரளவிற்கே கணிக்க இயலும். அதற்கு மேல் இயற்கையானது நாம் எதிர்பார்த்தை விட கூடுதலாக பெய்வதும், குறைவாக பெய்வதும் இயற்கையின் கையில் தான் உள்ளது.. இயற்கையை நம்புவோம்..

கடந்த பதிவில் எதிர்பார்த்தது  போல இன்று முதல்  ஏறத்தாழ nov 9,10 வரை வட மாவட்டங்கள்,மத்திய மாவட்டங்கள், டெல்டா, புதுக்கோட...
05/11/2025

கடந்த பதிவில் எதிர்பார்த்தது போல இன்று முதல் ஏறத்தாழ nov 9,10 வரை வட மாவட்டங்கள்,மத்திய மாவட்டங்கள், டெல்டா, புதுக்கோட்டை மண்டலம் மற்றும் வடகிழக்கு கொங்கு பகுதி போன்ற தமிழக பகுதிகளில் ஆங்காங்க மழை இருக்கும்...

கொங்கு பகுதிகளில் இன்று nov 5 லேசான/மிதமான காற்று குவிதல், மிதமான ஈரப்பதம், வெப்பநிலை போன்ற மழைக்காரணிகள் சாதகமாக இருப்பதால் இன்று nov 5 வடகிழக்கு கொங்கு பகுதி, கிழக்கு கொங்கு பகுதி (தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம்,ஈரோடு, நாமக்கல், கரூர், திண்டுக்கல் கிழக்கு, திருப்பூர் கிழக்கு ஒருசில இடங்கள்)போன்ற கொங்கு பகுதிகளில் இன்று ஆங்காங்க சில இடங்களில் மழை இருக்கும்... பரவலான மழைக்கு வாய்ப்பில்லை... மத்திய மற்றும் மேற்கு கொங்கு பகுதிகளுக்கு வடக்கு, கிழக்கில் உருவாகும் மேகங்கள் தெற்கு, தென்மேற்க்காக நகரந்தால் மட்டும் சில இடங்களில் இன்று மழை இருக்கும்.. கொங்கு பகுதிக்கு அதிக எதிர்பார்ப்பு வேண்டும்.. மேலே எதிர்பார்க்கப்பட்ட பகுதிகளில் காற்று குவிதலை பொருத்து மழை சற்று மாறுபடும்.. இதுபோன்று வரும் நாட்களில் கொங்கு பகுதிகளுக்கு மழைக்கான வாய்ப்பு இருந்தால் இடையில் பதிவிடப்படும்.. கொங்கு பகுதியில் கொறங்காடுகளுக்கும், மானவரி பயிர்களுக்கும் உயிர் மழை கிடைக்க வேண்டும்...

நவம்பர் 15 க்கு மேல் வடகிழக்கு பருவகாற்று தமிழகத்தில் ஊடுறுவி மழையின் பரப்பளவு மெல்ல அதிகரித்து, நவம்பர் 20, 20க்கு மேல் டிசம்பர் 10/15 வரை கிட்டத்தட்ட அனேக மழைக்காரணிகள் சாதகமாக இருப்பதால் தமிழகத்தில் பரவலான மழை கிடைக்கும். கொங்கு பகுதி உட்பட... அந்த சமயத்தில் தமிழக அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரிக்கும்..

மேற்கு பசுபிக்பெருங்கடலில் கிழக்கு நோக்கி நகரும் MJO காரணமாக மேற்கு பசுபிக் பெருங்கடலில் அடுத்தடுத்த வலுவான சிஸ்டங்கள் க...
02/11/2025

மேற்கு பசுபிக்பெருங்கடலில் கிழக்கு நோக்கி நகரும் MJO காரணமாக மேற்கு பசுபிக் பெருங்கடலில் அடுத்தடுத்த வலுவான சிஸ்டங்கள் காரணமாக வடகிழக்கு பருவகாற்று தடைபட்டு மோந்தா புயலுக்கு பின் தென்மேற்கு பருவகாற்றை அந்த சிஸ்டங்கள் ஈர்ப்பதால் தமிழகத்தில் தொடர்ந்து மழை இல்லாமல் தொடர்ந்து வறண்ட வானிலேயே தொடர்கிறது...

இதனால் தமிழகத்தில் குறிப்பாக கொங்கு பகுதியில் வெப்பநிலை (வெயில்)இயல்பிற்கு மாறாக பங்குனி மாத வெய்யலையே மீறும் போல அந்தளவிற்கு வெயில் அடிக்கிறது.. மற்றும் தொடர்ந்து வறண்ட காற்றே வீசுகிறது. MJO இந்தியா பெருங்கடலில் இல்லாதது,

இதுபோன்ற சாதகமற்ற மழைக்காரணிகளால் தமிழகத்தில் நீண்ட நாட்கள் மழை இல்லாமல் உள்ளது...

தற்போதும் nov 3 to nov8-10 வரை காற்றின் குவிதல் மற்றும் கணினி சார்ந்த மாதிரிகளின் அடிபடையில் வட மாவட்டங்கள், மத்திய மாவட்டங்கள், டெல்டா போன்ற கடலோர மற்றும் அதன் உள் பகுதிகளுக்கு வெப்பசலன மழை சாதகமாக அமைகிறது...

ஆனால் மேற்கு மாவட்டங்களுக்கு ( கொங்கு பகுதி, தென் உள் மாவட்டங்களுக்கு) ஆங்காங்கே ஒருசில/சில இடங்களில் இந்த தேதிகளில் மழை பெய்யவே மழைக்காரணிகள் சாதகமாக இருக்கிறது.. ஆனால் வெப்பநிலையும் அவ்வப்போது ஒரிரு முறை ஈரப்பதமும் சாதகமாக இருக்கிறது பொருந்திருந்து பார்க்கலாம்.. வரும் நாட்களில் மழைக்காரணிகளில் ஏதாவது மாற்றம் வருமா என்று...

ஒருவேளை வெப்பநிலையும், ஈரப்பதமும் சாதகமாக அமைந்தாலோ அல்லது வட மாவட்டங்கள்/ வடகிழக்கு கொங்கு பகுதியை ஒட்டி உருவாகும் மேகங்கள் அவை தெற்கு, தென்மேற்க்காக நகர்ந்தால் மட்டும் கொங்கு பகுதிகளில் Nov 4,5 முதல் ஏறத்தாழ Nov 8/10வரை ஒரிரு முறை ஆங்காங்கே அல்லது பல இடங்களில் மழை இருக்கலாம்... இல்லாவிட்டால் நம்ம கொங்கு பகுதியில் சொல்லும்படியாக மழை இருக்காது... இதனால் அதிகம் எதிர்பார்ப்பு வைத்து ஏமாற வேண்டாம்.. நிகழ்நேரத்தில் மேகங்களின் நகர்வை பொருத்து பார்ப்போம்.. ஒருவேளை மேலே எதிர்பார்த்த தேதிகளில் மழை ஏமாற்றம் இருந்தால் கொங்கு பகுதிகளில் பரவலாக கொரங்காடும், மானாவரி பயிர்களும் கிட்டதட்ட சோழி முடிந்துவிடும்..... எனினும் இயற்கையை நம்புவோம்..

இயல்பிற்கு மாறான வெப்பநிலை உயர்வு, இயல்பிற்கு மாறான ஐப்பசியில் மேற்கு திசை காற்று என இயற்கை இயல்பாக இல்லை...

நவம்பர் 15 வாக்கில் மீண்டும் தமிழகத்தில் வடகிழக்கு பருவகாற்று வீச வாய்ப்புள்ளது, அது சற்று ஆறுதல் தகவல்... அப்போது வங்ககடலில் உருவாகும் சிஸ்டத்தால் எந்தளவிற்கு மேற்கு நோக்கி நகர்ந்து தமிழகத்திற்கு மழை இருக்கும் என்று வரும் நாட்களில் பார்ப்போம்...

ஐப்பசியில் தொடர்ந்து வீசும் இந்த மேற்கு காற்றும், வெப்பநிலை உயர்வும் பொய்யாகாது என்பதால் நவம்பர் 3வது வாரம் முதல் தோரயமாக டிசம்பர் 10/15 வரை இந்தியா பெருங்கடலுக்கு ஈரப்பதமிகுந்த MJO வருகை தரும் என்பதாலும் மற்றும் ITCZ ம் (வெப்பமண்டல காற்று குவிதலை ஒருங்கிணைக்கும் பகுதி) பருவமழைக்கு சாதகமாக இருக்கும் என்பதாலும் Nov 20, 20க்கு மேல் முதல் ஏறத்தாழ டிசம்பர் 10/15 வரை வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் ஒரளவிற்கு தீவிரமாக இருக்கவே அதிகம் வாய்ப்புள்ளது....

எனினும் நாம் நீண்ட கால பதிவில் சொன்னது போல கொங்கு பகுதிகளில் மழை பற்றாக்குறையால் சற்று பரவலாக லேசான/மிதமான வறட்சியை தவிர்க்க இயலாது... சில இடங்களில் எதிர்பார்த்ததை விட கூடுதல் வறட்சியும் இருக்கலாம்... அதேபோல தென் உள் மாவட்டங்களிலும் சில இடங்களில் வறட்சி இருக்கலாம்...

நாம் நீண்ட கால பதிவில் எதிர்பார்த்ததை போல புரட்டாசிகால மழை மற்றும் ஆரம்பம் நிலை வடகிழக்கு பருவமழையும் சேர்த்து தமிழகத்தில் இயல்பை விட 36% கூடுதல் மழை பதிவாகியுள்ளது...(படம் இணைக்கப்பட்டுள்ளது) ஆனால் இந்த மழை கொங்கு பகுதியில் பரவலாக பற்றாக்குறையாகத்தான் உள்ளது...

தென்மேற்கு பருவகாற்று 2.0வங்ககடலில் வடக்கு நோக்கி நகரும் மோந்தா புயல் காரணமாக தமிழகத்தில் பெரிதாக மழை இல்லை... வட மாவட்ட...
27/10/2025

தென்மேற்கு பருவகாற்று 2.0

வங்ககடலில் வடக்கு நோக்கி நகரும் மோந்தா புயல் காரணமாக தமிழகத்தில் பெரிதாக மழை இல்லை... வட மாவட்டங்களில் மட்டும் சில பகுதிகளில் மிதமான/சற்று கன மழை இருக்கும்... மற்ற தமிழக பகுதிகளில் பெரிதாக மழை இருக்காது... பரவலாக சாரல் இருக்கலாம்..

இந்த வலுவான இரு சிஸ்டங்கள் தென்மேற்கு பருவகாற்றை ஈர்ப்பதால் கேரளா, கர்நாடக உள்ளிட்ட மேற்கு தொடரச்சி மலைப்பகுதிகளில் மிதமான/ சற்று கன மழை வரை பதிவாகிறது... நாளையும் oct 28 இந்த பகுதிகளில் மழை தொடரும்.. சமயத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கன மழை வரை கூட இருக்கலாம் உறுதியல்ல....

இதனால் கொங்கு பகுதிகளில் சற்று வலுவான மேற்கு திசை காற்றால் இன்று மேகமூட்டமாக சாரல் இருந்தது.. மேற்கு கொங்கு பகுதிகளில் மிதமான மழை இருந்தது... நாளையும் சற்று வலுவான காற்றால் மேகமூட்டமாக கொங்கு பகுதியில் சாரல்/லேசான மழை இருக்கலாம்.. மேற்கு கொங்கு பகுதிகளில் மிதமான மழை இருக்கலாம்... நாளை சிஸ்டம் வடக்கு நோக்கி நகரும் என்பதால் நாளை மேற்கு திசை காற்றின் வேகம் சற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது...

இதனால் நாளை (oct 28) வரை நிலக்கடலை, வெங்காயம் போன்ற அறுவடை விவசாய்கள் சற்று கவனம்... ஆனால் அறுவடையை பாதிக்கும் அளவிற்கு மழை இருக்காது... ஆனால் மேற்கு கொங்கு பகுதி விவசாய்கள் கவனமாக இருக்கவும்..

நாளை மறுநாள் (oct 29) முதல் சிஸ்டம் வட இந்தியா, வடகிழக்கு இந்தியாவை நோக்கி நகரும் என்பதால் தமிழகத்தில் மேற்கு திசை காற்று oct 29 முதல் படிப்படியாக குறைந்துவிடும்..

தமிழகத்திற்கு அடுத்த சுற்று மழையானது இந்த வலுவான சிஸ்டம் வடக்கே கரையை கடந்து, அது மேலும் வடக்கு,வடகிழக்கு நோக்கி நகரும்போது மேலும் வலுவிழந்த பிறகு தான் வலுவான சிஸ்டத்தை நோக்கி சென்ற அரபிக்கடல், வங்கககடல் காற்று திசை மாறி நமக்கு சாதகமாக மாறும்... அதாவது ஏறக்குறைய nov 2,3க்கு மேல் Nov 4,5வாக்கில் தான் நமக்கு மழை இருக்கும்... மீண்டும் வடகிழக்கு பருவகாற்று தமிழகத்தில் ஊடுருவ nov 6,7வரை ஆகலாம்.. அதைபற்றி வரும் நாட்களில் பதிவிடலாம்...

22/10/2025

பொறுத்தார் பூமி ஆள்வார்.
ஒரு மாதமாக போக்கு காட்டிய வருணர் இரண்டு நாட்களாக சிறப்பாக கருணை காட்டிக்கொண்டு உள்ளார்.

இடம் திருப்பூர் மாவட்ட தென்கிழக்கு பகுதி மயில்ரங்கம். மற்றும் கரூர் மேற்கு, சி.தாராபுரம், வெள்ளகோவில், முத்தூர், வள்ளியரச்சல்,வேடசந்தூர் to அரவக்குறிச்சி இடைப்பட்ட பகுதி போன்ற சில/பல இடங்களில் இரு நாட்களாக நல்ல மழை... 2ல் இருந்து 6உழவு மழை வரை பதிவாகியுள்ளது..

உரிமை: Maha Raja

22/10/2025
டெல்டா ஒட்டி வடக்கு நோக்கி நகர்ந்த தாழ்வு பகுதியானது வலுவவிழந்தது. சென்னை முதல் ராமேஸ்வரம் வரை கடலோர பகுதிகள் மற்றும் அத...
22/10/2025

டெல்டா ஒட்டி வடக்கு நோக்கி நகர்ந்த தாழ்வு பகுதியானது வலுவவிழந்தது. சென்னை முதல் ராமேஸ்வரம் வரை கடலோர பகுதிகள் மற்றும் அதன் உள் பகுதிகளில் பரவலாக மழை பதிவாகியுள்ளது.. அதில் பல இடங்களில் நல்ல மழை பதிவாகியுள்ளது.

கொங்கு பகுதியில் தெற்கு கொங்கு பகுதி(காற்று பகுதியில்) ஒரளவிற்கு சற்று பரவலான மழை பதிவாகியுள்ளது.. குறிப்பாக தென்கிழக்கு கொங்கு பகுதிகளில் சில/பல இடங்களில் நல்ல மழை பதிவாகியுளளது. குறிப்பாக கரூர் மாவட்ட தெற்கு, திருப்பூர் மாவட்ட தென்கிழக்கு, திண்டுக்கல் மாவட்ட வடகிழக்கு பகுதிகளில் ஒருசில இடங்களில் 13-15cm அளவிற்கு கன/மிக கன மழை பதிவாகியுள்ளது.. சமவெளி பகுதிக்கு 15cm என்பதே மிக கன மழை தான்.. அதே தென்கிழக்கு கொங்கு பகுதியில் மழைமானிகள் இல்லாத பகுதிகளில் சில இடங்களில் கன/மிக கன மழை பதிவாகியதாக தகவல்.. வடகிழக்கு கொங்கு பகுதியில் ஒரளவிற்கு மழை பதிவாகியுள்ளது.. மற்ற கொங்கு பகுதியில் பெரிதாக மழை இல்லை.. லேசான மழை பதிவாகியுள்ளது...

இந்நிலையில் இன்று oct22 காற்று வேக மாறுபாடு காரணமாக மத்திய கொங்கு பகுதி, கிழக்கு , வடகிழக்கு கொங்கு பகுதிகளில் ஆங்காங்கே மழை பதிவானது.. தருமபுரி மாவட்டம் கன/மிக கன மழை பதிவாகியது

இந்நிலையில் தமிழகத்தில் Oct 23,24 ஆங்காங்கே மழை இருக்கும்...

கொங்கு பகுதியில் காற்று பகுதியை தவிர சில இடங்களில் oct 23,24 மழை இருக்கும். காற்று பகுதியில் நாளை, நாளை மறுநாள் மேற்கு திசை காற்று வீசும் என்பதால் காற்று பகுதிகளில் oct 23/24 முதல் ஏறத்தாழ 7 to 10 நாட்களுக்கு பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும். மற்ற தமிழக, கொங்கு பகுதிகளில் oct 25,26 முதல் ஏறத்தாழ ஒரு வாரத்திற்கு பெரிதாக மழை இருக்காது.. சில இடங்களில் மட்டும் மழை இருக்கலாம்... மற்றும் மத்திய வங்ககடலில் oct 24 வாக்கில் உருவாகும் வலுவான சிஸ்டம் வட மாவட்டத்தை ஒட்டிய வடக்கு நோக்கி நகர்ந்தால் மட்டும் வட மாவட்டங்களில் மட்டும் வரும் நாட்களில் மழை இருக்கும். மற்ற தமிழக பகுதிகளுக்கு வாய்ப்பு குறைவு... ஒருவேளை சிஸ்டத்தின் நகர்வில் மாற்றமிருந்தால் மட்டும் மழையிலும் மாற்றம் இருக்கும்.. அவ்வாறு இடையில் சிஸ்டத்தின் நகர்வில் ஏதாவது மாற்றமிருந்தால் பதிவிடலாம்..

சுருக்கம்:
காற்று பகுதிகளில் oct 23,24 முதல் ஏறத்தாழ 7 to 10 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும். ஏதாவது ஒரிரு இடங்களில் மழை இருக்கலாம்.. கொங்கு பகுதி மற்றும் தமிழகத்தின் மற்ற பகுதிகளில் oct 25,26 முதல் ஏறத்தாழ ஒரு வாரத்திற்கு வறண்ட வானிலை நிலவும். சில இடங்களில் மழை இருக்கலாம்..

இதனால் விவசாய்கள் இந்த மழை இடைவெளியை பயன்படுத்தி மருந்து தெளித்தல், களையெடுத்தல்,வெங்காயம், கடலை அறுவடை செய்வது போன்ற அனேக வேளாண்பணிகளையும் மேற்கொள்ளலாம்... இடையில் பரவலாக மழைக்கான வாய்ப்பு உருவானால் பதிவிடப்படும்...

நிகழ்நேர வானிலை  பதிவுகன/மிக கன மழைக்கான சிறப்பு பதிவுசிஸ்டமானது வட இலங்கை ஒட்டி டெல்டா முனை அருகே நீடிப்பதால் அதன்  காற...
21/10/2025

நிகழ்நேர வானிலை பதிவு

கன/மிக கன மழைக்கான சிறப்பு பதிவு

சிஸ்டமானது வட இலங்கை ஒட்டி டெல்டா முனை அருகே நீடிப்பதால் அதன் காற்றின் குவிதல் வட மாவட்டங்களில் வலுவாக குவிக்கப்படுவதால் வட மாவட்டங்களில் பரவலாக நல்ல மழை பதிவாகிறது...சில பகுதிகள் கன மழையும், ஒருசில இடங்களில் மிக கன மழையும் இருக்கலாம்.. சில,பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம்..

அதே போல டெல்டா முனையில் நீடிக்கும் தாழ்வு பகுதியானது அதன் காற்றின் திசை, காற்றின் குவிதல் கொங்கு பகுதிக்கும் சாதகமாக இருக்கிறது.. எப்போதெல்லாம் டெல்டா ஒட்டி அல்லது டெல்டா முனை யில் சிஸ்டம் நீடிக்கும் போது அதன் காற்று குவிதலானது கொங்கு பகுதிக்கு சாதகமாக இருந்திருக்கிறது. அந்தவகையில் தற்போது சிஸ்டம் டெல்டா முனை அருகே வடக்கு/வடமேற்கில் நகர்வதால் அதன் காற்று குவிதலும், அரபிக்கடலில் நீடிக்கும் சிஸ்டத்தின் காற்று குவிதலும் கொங்கு பகுதிகளில் ஒரளவிற்கு வலுவாக குவிக்கப்படுவதால் கொங்கு பகுதிகளில் பரவலாக லேசான/மிதமான மழையும், சில இடங்களில் கன மழையும், ஒரிரு இடங்களில் மிக கன மழை வரை பதிவாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.. குறிப்பாக காற்று பகுதி உட்பட..

அதேபோல் சிஸ்டத்தின் காற்று குவிதல் திண்டுக்கல் மலைப்பகுதிகளிலும் குவிக்கப்படுவதால் அமராவதி அணை மற்றும் அதை சார்ந்த துணை நதிகளுக்கு(பாலாறு, சண்முக நதி, வரதமா நதி,குதிரையாறு) நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது..அதேபோல மேற்கு தொடர்ச்சியிலும் கன மழை இருக்கலாம்.. அதேபோல ஒட்டன்சத்திரம், வேடசந்தூர், தொப்பம்பட்டி, கள்ளிமந்தயம், சத்திரப்பட்டி,பழனி போன்ற பகுதிகளிலும் ஒருசில இடங்களில் கன மழை இருக்கலாம்..

அதாவது மேலே குறிப்பிட்ட கொங்கு பகுதி, மலைசார்ந்த பகுதிக்கு எதிர்பார்த்த கன/மிக கன மழையானது சிஸ்டத்தின் அமைவிடம், காற்றின் திசை மற்றும் இரு திசை காற்றின் குவிதல் மற்றும் கணினி சார்ந்த மாதிரிகளின் அடிப்படையில் எதிர்பார்க்கப்படுகிறது... ஒருவேளை காற்றின் திசையில் மாற்றம் இருந்தால் எதிர்பார்த்த மழையில் குறைவாக கூட பெய்யலாம். இதனால் இது ஒர் அனுமானம் மட்டுமே .. காற்று குவிந்தது போல மழை இருந்தால் கொங்கு பகுதியில் இதுவரை பெரிதாக மழை இல்லாத காற்று பகுதிகளுக்கு ஒரளவிற்கு நல்ல மழை கிடைக்கலாம்... ஆனால் காற்றின் திசையில் ஏதாவது மாற்றம் இருந்தால் பெரிதாக இருக்காது.. இந்த சிஸ்டத்தின் மழை கொங்கு பகுதிகளில் ஏறத்தாழ Oct 22 காலை அல்லது மதியம் வரை விட்டு விட்டு நீடிக்கலாம்... Oct 23 முதல் ஏறத்தாழ 4-6 நாட்களுக்கு பெரிதாக மழை இருக்காது.. சில இடங்களை தவிர..

முழுமையான வடகிழக்கு பருவமழை அடை மழை தென்மேற்கு வங்ககடலுக்கு (வட இலங்கை ஒட்டி) நகர்ந்திருக்கும் தாழ்வு பகுதி மற்றும் அரபி...
21/10/2025

முழுமையான வடகிழக்கு பருவமழை

அடை மழை

தென்மேற்கு வங்ககடலுக்கு (வட இலங்கை ஒட்டி) நகர்ந்திருக்கும் தாழ்வு பகுதி மற்றும் அரபிக்கடலில் நீடிக்கும் பழைய தாழ்வு பகுதி காரணமாக முழு வடகிழக்கு பருவகாற்று தமிழகத்தில் ஊடுருவல் காரணமாக இன்றே தொடங்கியது முழுமையான வட கிழக்கு பருவமழை..

இதன் காரணமாக தமிழக கடலோர பகுதிகளில் பரவலாக மழை தொடரும்... சில இடங்களில் கன மழையும், ஒரிரு இடங்களில் மிக கன மழை வரை இருக்கும்... கடலோர உட்பகுதிக்கும் இதே பொருந்தும்..

தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் லேசான மழை இருக்கும் .. சில இடங்களில் மிதமான மழை இருக்கும்.. ஒருசில இடங்களில் கன மழை வரை இருக்கும்..

நம் கொங்கு மண்டலத்தில் பரவலான லேசான மழையும், சில இடங்களில் மிதமான மழையும் , ஒரிரு இடங்களில் கன மழை வரை இருக்கும்...

தாழ்வு பகுதியின் நகர்வை பொருத்தே அடுத்த மழை(இன்று,நாளை) தமிழகம், கொங்கு பகுதியில் மழை இருக்கும்... இன்று தமிழகத்தில் ஏறத்தாழ தொடர் மழை இருக்கலாம்... தாழ்வு பகுதியின் நகர்வை பொருத்தே மேற்கு மாவட்டங்களுக்கு(கொங்கு பகுதி, தென் உள் மாவட்டங்கள்) நாளை எவ்வாறு மழை இருக்கும் என்று தெரியும்...

19/10/2025

ஈரோடு மாவட்ட வடக்கு பகுதியான சத்தியமங்கலம் பெரியூர் பகுதி

19/10/2025

ஈரோடு மாவட்ட வடக்கு பகுதியான சத்தியமங்கலம் பெரியூர் பகுதிகளில் நல்ல மழை ...

ஏரி,குளங்கள் நிரம்பி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது... இந்த ஈரோடு மாவட்ட வடக்கு பகுதிகள் கடந்தாண்டு பெரிதாக மழை இல்லாமல் ஒதுக்கிய பகுதியாகும்.. இதுபோன்று சில பகுதிகளில் நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது..

Address


Alerts

Be the first to know and let us send you an email when Kongunadu Weatherman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share