
05/09/2025
வடக்கு வங்ககடலில் வலுகுறைந்த சிஸ்டத்திற்கு சாதகமான வெப்பநிலை நிலவுகிறது..
இதன் காரணமாக இன்னும் ஒரிரு சிஸ்டங்கள் உருவாகி மேற்கு நோக்கி நகர வாய்ப்புள்ளதால் தென்மேற்கு பருவமழை செப்டம்பர் 15/20வரை தொடர வாய்ப்புள்ளது.. இதனால் நம் கொங்கு பகுதிக்கு பரவலான புரட்டாசிகால மழைத்திருவிழா சற்று தாமதமாக வாய்ப்பிருக்கிறது. எனினும் இன்னும் நாட்கள் இருப்பதால் மாற்றம் இருக்கலாம் வரும் நாட்களில் பார்ப்போம்..
இந்நிலையில் தற்போது பருவமழை மேற்கே வலுகுறைந்துள்ளதால் தமிழகத்தில் செப்டம்பர் 10/12 வரை வெப்பசலன மழை இருக்கும்.. குறிப்பாக டெல்டா, வட மாவட்டங்கள் மற்றும் அதன் உள் மாவட்டங்கள், மதுரை மண்டலம் மத்திய தமிழகம் போன்ற பகுதிகளில் ஆங்காங்கே மழை இருக்கிறது. சமயத்தில் பரவலான மழையாகவும் இருக்கும்.. ஒரிரு இடங்களில் கன மழை இருக்கும்..
நம் கொங்கு பகுதிகளில் காற்று பகுதியை தவிர காற்று மறைவு பகுதி& மலையோர பகுதிகளில் சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது... காற்று பகுதிகளில் புரட்டாசிகால மழை தொடங்கும் வரை வாய்ப்பு குறைவு.. சமயத்தில் மேற்கு திசை காற்று மிகவும் குறைவாக இருந்தால் மட்டும் ஒருசில இடங்களில் இருக்கலாம் உறுதியல்ல..
இதனால் காற்று பகுதிகளில் அறுவடை விவசாய்கள் அனேக அறுவடை பணிகளையும் தொடரலாம்.. மற்ற பகுதிகளில் கவனமாக தொடரலாம் அல்லது sept 15 முதல் மேல் அறுவடையை தொடரலாம்..
கொங்கு பகுதி மக்கள் புரட்டாசிகால மழையை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள். அதற்கான வாய்ப்பு உருவானால் முன்பே பதிவிடலாம்..