Anti-Caste Social Movement

  • Home
  • Anti-Caste Social Movement

Anti-Caste Social Movement சமூகத்தின் ஒற்றுமையே பலம் ✊💙✒️,.
சாதி வர்க்க ஒழிப்பே முதல் கொள்கை

டி எம். உமர் பாரூக் – ஒளிமிகு ஒரு சமூகப் புரட்சி வீரர்இன்னைக்கு நாம பாக்க போறவரு - சாதி ஒழிப்பு, சமத்துவம், மற்றும் மனித...
16/05/2025

டி எம். உமர் பாரூக் – ஒளிமிகு ஒரு சமூகப் புரட்சி வீரர்

இன்னைக்கு நாம பாக்க போறவரு - சாதி ஒழிப்பு, சமத்துவம், மற்றும் மனித மரியாதைக்காக தன் முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்த ஓர் அடையாள மனிதர் — த. எம். உமர் பாரூக் அவர்கள் பற்றியே ஆகும்.

📌 த. எம். உமர் பாரூக் அவர்கள், தஞ்சாவூர் மாவட்டத்தில் பிறந்தவர்.

📌 பிறப்பில் அவருடைய பெயர் த. எம். மணி.

📌 அவர் ஒரு மிகவும் எளிய தலித் குடும்பத்தில் பிறந்தார்.

📌 அவரது மூதாதையர்கள் கொத்தடிமை தொழிலாளர்கள்.

📌 கல்வி வாய்ப்பு அவருக்கு குறைவாக இருந்தபோதிலும், அவர் தமிழில் ஆழ்ந்த அறிவும், தத்துவ மரபில் அற்புதமான புரிதலும் பெற்றிருந்தார்.

📌 16 வயதில் இருந்தே சமூக சீர்திருத்தத்தில் ஈடுபட்டு, அம்பேத்கர் தத்துவத்தை தழுவினார்.

📌 “அம்பேத்கர் கல்வி மற்றும் மேம்பாட்டு நிறுவனம்” எனும் அமைப்பை தொடங்கியதன் மூலம், கல்வி மற்றும் விழிப்புணர்வை தலித் சமூகத்திற்குள் வேரூன்றி வளர்த்தார்.

📌 த. எம். உமர் பாரூக் அவர்கள் தமிழியல், அம்பேத்கரியம் ஆகியவற்றுடன் கூட, மார்க்சிய சிந்தனைகளையும் ஆழமாகப் புரிந்திருந்தார்.

📌 சமூக சமத்துவத்தின் நோக்கில் மார்க்சியத்தையும், சாதி ஒழிப்பு இயக்கத்தையும் இணைத்துப் பார்த்தார்.

📌 பின்னர் “நீல புலிகள் இயக்கம்” என்ற தலித் எழுச்சி இயக்கத்தை நடத்தினார். சாதி மேலாதிக்கத்துக்கு எதிராக வலியுறுத்திக் கூறினார்:
“சாதி ஒழியவில்லை என்றால், சமூகம் நிமிராது!”

📌 அவர் அரசியல் உரைகளிலும், எழுத்துக்களிலும், பொதுப் பேச்சுகளிலும் தலித் மக்களின் உரிமைகளை தெளிவாக முன்வைத்தார்.

📌 சாதியியல் பேதங்களை விமர்சித்து, அம்பேத்கரிய கோட்பாடுகளை பரப்பியவர்.

📌 அந்தக் காலகட்டத்தில், பல மாநில அளவிலான கட்சிகள், குறிப்பாக சில தமிழ் தேசிய கட்சிகள், சாதி பிரச்சனைகளை பேசினாலும், அவை ஹிந்து மத அடித்தளத்தின் கீழே தான் இயங்குவதாகத் த. எம். மணி கருதினார். எனவே, அந்த வகையான தமிழ் தேசிய அரசியலையும் அவர் திட்டவட்டமாக நிராகரித்தார்.

📌 அவர் தேர்தல் அரசியலை நிராகரித்தார், காரணம் இந்தியாவில் சாதி என்பது வெறும் சமூக அடையாளம் அல்ல; அது அதிகாரத்தின் அடிப்படை. எனவே தேர்தலில் வெற்றிபெற, நாம் பெரும்பான்மை தேவை படுகிறோம்.

📌 ஆனால் தலித் மக்கள் மற்றும் பிற நிர்ணயிக்கப்பட்ட சாதியினரின் எண்ணிக்கை குறைவாக உள்ளதால் மேல் சாதியினருடன்னும், பெரும்பான்மையினர் சார்ந்த கட்சிகளுடன் கூட்டனி அமைக்க வேண்டி வரும்.

📌 அவர்கள் தங்களின் எண்ணிக்கையை வைத்து, தலித் பிரச்சினைகள் மீது குரல் கொடுக்க விடமாட்டார்கள், அவர்கள் செய்கிற "சாதி ஒழிப்பு" தேர்தலுக்கான நடிப்பு மட்டுமே என உணர்ந்தார்.

📌 " இது ஒரு சூழ்ச்சி, வெல்லவே முடியாத ஒரு போட்டியில் ஏன் நாமே எப்போதும் தோற்க வேண்டும்?" என அவர் தேர்தல் அரசியலை விட்டுவிட்டு, சமூக மாற்ற இயக்கங்களை விழிப்புணர்வை ஏற்படுத்தும் இயக்கங்களைத் தேர்ந்தெடுத்தார்.

📌 அம்பேத்கர் பௌத்த மதத்தை தேர்ந்தெடுத்தார், ஆனால் த. எம். உமர் பாரூக், தலித் சமூகத்துக்குத் தேவையான மனித மரியாதை இஸ்லாத்தில் இருக்கிறது என்ற நம்பிக்கையுடன், 2007-ல் குடும்பத்துடன் இஸ்லாத்தைத் தழுவினார்.

📌 அது வெறும் மதமாற்றம் அல்ல, சாதி மறுப்புக்கான ஓர் எதிர்ப்பு வழியாகவும் விளங்கியது.

📌 அவர் எழுதிய “தீண்டாமைக்கு தீர்வு”, “சாதி ஒழிந்தது” போன்ற நூல்கள், சாதியை விமர்சிக்கும் மட்டுமல்லாமல், மாற்றுமுகங்களை சிந்திக்கச் செய்கின்றன.

📌 த. எம். உமர் பாரூக் அவர்கள் 2015 ஆம் ஆண்டு ஜூன் 5-ஆம் தேதி காலமானார்.

🧿 அவரது எண்ணங்கள், எழுத்துக்கள், இயக்கங்கள் இன்னும் நம்முடன் வாழ்கின்றன.🧿

🧿 த. எம். உமர் பாரூக் அவர்கள், தலித் சமூகத்தின் மரியாதைக்காக தம் வாழ்நாளையே அர்ப்பணித்த ஒரு சுடரொளி.

🧿 அவரை நினைவுகூர்வதும், அவரின் வழியை தொடர்வதும் நம் சமூக பொறுப்பாகும்.

நிவேதாகிருஷ்ணன்
பதிவு. Nivedha Krishnan

அயோத்திதாசர் 175: அயோத்திதாசரை தேடி சென்ற அம்பேத்கர்================நான் முதன் முதலாக பவுத்தர்களை சந்தித்தது கோலார் தங்க...
14/05/2025

அயோத்திதாசர் 175: அயோத்திதாசரை தேடி சென்ற அம்பேத்கர்
================
நான் முதன் முதலாக பவுத்தர்களை சந்தித்தது கோலார் தங்கவயலில் தான். அவர்களை பார்த்ததும் கடும் அதிர்ச்சி. அதுவரை பவுத்தர்கள் என்றால் திபெத்தியர்களைப் போல இருப்பார்கள். காவி உடை உடுத்தி, மொட்டை அடித்திருப்பார்கள் என எல்லாரையும் போல நம்பிக் கொண்டிருந்தேன்.

ஆனால் தங்கவயல் பவுத்தர்கள் என்னைப் போல இருந்தார்கள். அதிகம் படித்தவர்களாக இருந்த போதும் அழகுத் தமிழ் பேசினார்கள். அதை விட அழகாக ஆங்கிலம் பேசினார்கள். அவர்கள் அம்பேத்கரைப் பின்பற்றி மதம் மாறியவர்கள் இல்லை. பூர்வீக பவுத்தர்கள். அவர்களின் மூதாதையரும் பவுத்தர்கள். என்னால் நம்பவே முடியவில்லை. அவர்களின் நடை உடை தோரணையை பார்த்து அதிர்ச்சி அடையாமலும் இருக்க முடியவில்லை.

'நீங்க எப்படி புத்திஸ்ட் ஆனிங்க?'னு கேட்ட போது அவர்கள் மிகுந்த மதிப்போடு உச்சரித்த பெயர், 'துரையார்'. பண்டிதமணி ஜி.அப்பாத்துரையாரை தங்கவயல் பெரியவர்கள் இன்றும் உயிர் சிலிர்க்க அப்படி தான் அழைக்கிறார்கள். அது அன்பு, நன்றி, பெருமிதம், உச்சபட்ச மரியாதையின் வெளிப்பாடு.

தென்னிந்திய பவுத்த சங்கத்தில் அயோத்திதாசருக்கு அடுத்த நிலையில் இருந்தவர் ஜி.அப்பாத்துரையார். பண்டிதருக்கு பின் தமிழன் இதழை தொடர்ந்து நடத்தியதிலும், பவுத்தத்தை பரப்பியத்திலும் இவருக்கு முக்கிய பங்கு இருக்கிறது. தனித்துவம் மிக்க ஆளுமை. தமிழ் பண்டிதர், சிந்தனையாளர், சித்தமருத்துவர், எழுத்தாளர், பேச்சாளர், பன்மொழி வித்தகர் என பல முகங்கள் கொண்டவர். நவீன தமிழ் சமூகத்தின் சீர்திருத்தவாதிகளின் பட்டியலில் முதல் வரிசையில் இடம்பெற வேண்டியவர் ஜி.அப்பாத்துரையார்.

1914ல் அயோத்திதாசர் மறைந்த பின் தான் வசித்த சாம்பியன் ரீஃப் பகுதியில் பவுத்த சங்கம் நிறுவினார். நான் முதன் முதலாக பார்த்த பவுத்த சங்கம் அது தான். அரச மரத்தின் நிழலில் பராமரிப்பு இல்லாமல் இருந்தது. புத்தர், அப்பாத்துரையார், அம்பேத்கர் படங்கள் வைக்கப்பட்டிருந்தன.
நூற்றாண்டுகளை கடந்த நிலையில், சில ஆண்டுகளுக்கு முன் அந்த சங்கம் பெரிய கட்டிடமாக உருமாற்றப்பட்டிருக்கிறது. எழுதப்படாத வரலாறை சுமந்து நிற்கும் அக்கட்டிடத்தில் போய் நின்றாலே மனம் கணமாகி விடுகிறது.

ஏறக்குறைய 10 ஆண்டுகளுக்கு முன் நானும் பிரபுவும் தேடி அலைந்து, முதல் முறையாய் இந்த பார்த்த கணம் கண் கலங்கி நின்றேன். கடந்த ஆண்டு அதை பார்த்த ஆய்வாளர் ஸ்டாலின் ராஜாங்கமும் கண் கலங்கி நின்றார். வகுப்பெடுத்து பழக்கப்பட்ட அவருக்கு வார்த்தைகள் வரவில்லை.
அதுவொரு லட்சிய பேரியக்கத்தின் சாதனைகள் நிகழ்த்தும் உன்னதமான உணர்வு. அதை வார்த்தைகளில் விவரிக்க முடியாது.

சாம்பியன் ரீஃப் சங்கத்தை பண்டிதர் பாணியிலே பள்ளி, படிப்பகம் என விரிவாக்கினார் அப்பாத்துரையார். பிற கிளைகளில் இல்லாத பவுத்த இளைஞர் கழகம், மகளிர் அமைப்பு உள்ளிட்டவற்றையும் உருவாக்கினார். தன் நண்பர் பி.எம்.ராஜரத்தினத்தின் சித்தார்த்தா அச்சகம் வாயிலாக, அயோத்திதாசரின் நூல்கள் மட்டுமல்லாமல் புத்தர் அருளறம் உள்ளிட்ட வெளியீடுகளையும் கொண்டுவந்தார்.

அப்பாத்துரையாரின் துணிச்சலான சமூக அரசியல் நடவடிக்கைகளால் தங்கவயலில் மட்டுமல்லாமல் தமிழகத்திலும் புதிய எழுச்சி உருவானது. அதனால் ஈர்க்கப்பட்ட பெரியார் அவருக்கு நெருக்கமானார். அம்பேத்கர் 'இந்துவாக சாக மாட்டேன்' என அறிவித்த போது, அதை வரவேற்று பவுத்தம் தழுவுமாறு தந்தி அனுப்பினார்.

1954ல் அம்பேத்கர் தங்கவயல் வந்த போது அப்பாத்துரையாரை தேடி சாம்பியன் ரீஃப் பவுத்த சங்கத்துக்கு போனார். வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டு சங்கம், பள்ளி, படிப்பகம் ஆகியவற்றை சுற்றி பார்த்தார். சுமார் 2 மணி நேரம் அப்பாத்துரையாருடன் பவுத்தம் குறித்தும், தென்னிந்திய சாக்கிய பவுத்த சங்க செயல்பாடு குறித்தும் பேசினார்.

குறிப்பாக சங்கத்தை உருவாக்கிய அயோத்திதாசர் குறித்து நிறைய கேள்விகள் எழுப்பி இருக்கிறார். அப்போது தான் அப்பாத்துரையாருக்கு புரிந்தது.
அம்பேத்கர் தன்னை மட்டும் தேடிவரவில்லை. தன் குரு அயோத்திதாசரையும் தேடி வந்திருக்கிறார் என்று. அம்பேத்கரின் பணிகள் மீதான நம்பிக்கையின் காரணமாக, அப்பாத்துரையார் சித்தார்த்தா பதிப்பகம் வெளியிட்ட அயோத்திதாசரின் நூல்களை கொடுத்திருக்கிறார்.

அதனை மகிழ்வோடு பெற்றுக்கொண்ட அம்பேத்கர், 'நிறைய பேச வேண்டி இருக்கிறது. நான் மீண்டும் ஒருமுறை வருகிறேன்' என சொல்லி விடைபெற்றார். உடல் உபாதை, தங்கவயல் மக்களின் அறியாமை ஆகியவற்றால் அம்பேத்கர்
கடுப்பாக காணப்பட்டார். அந்த நிலையிலும் அவர் கூடுதல் மரியாதையுடனும், பொறுமையாகவும் நடந்து கொண்டது அப்பாத்துரையாரிடம் தான் அருகில் இருந்தவர்கள். அது அயோத்திதாசரை நேருக்கு நேர் எதிர்கொண்டதன் விளைவாக தான் இருக்கும்.

உண்மையில், அம்பேத்கருக்கு இதற்கும் முன்பே அயோத்திதாசரை நன்றாக தெரிந்திருந்தது. தன்னோடு நெருக்கமாக இருந்த தந்தை சிவராஜ், அன்னை மீனாம்பாள் மூலமாக அறிந்திருந்தார். இருவரும் பூர்வீக பவுத்தர்கள். பண்டிதரை நன்கு அறிந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள்.

அதே போல அயோத்திதாசரோடு இணைந்து செயல்பட்ட பேராசிரியர் லட்சுமி நரசுவை அம்பேத்கர் அறிந்திருந்தார். அவரின் 'Essence of Buddhism' படித்து வியந்த அம்பேத்கர், அந்நூலுக்கு புதிய முன்னுரை எழுதி மறுபதிப்பும் செய்திருக்கிறார். மேலும் லட்சுமி நரசு கடைசியாக எழுதிய ' Religion of the Modern Buddhist' என்ற நூலின் கையெழுத்து பிரதியை பெற்று சென்று பதிப்பிக்க முயற்சித்தார். அதற்குள் அம்பேத்கரின் மரணம் நிகழ்ந்துவிட்டது.
இதை அம்பேத்கரின் உதவியாளராக இருந்த வசந்த் மூன்னிடம் பெற்று 50 ஆண்டுகளுக்கு பின் ஞான அலாய்சியஸ் மீண்டும் பதிப்பித்திருக்கிறார்.

அம்பேத்கருடன் இருந்த வசந்த் மூன் எழுதிய 'பாபாசாகேப் அம்பேத்கர்' வரலாற்று நூலில், சென்னையை சேர்ந்த 'ஆபாதி தாஸ்' என்பவரின் பவுத்தம் தொடர்பான நூலை பற்றி எழுத அம்பேத்கர் திட்டமிட்டிருந்தார் என்ற தகவல் வருகிறது. சென்னையில் அந்த காலக்கட்டத்தில் ஆபாதி தாஸ் என்று யாரும் இருக்கவில்லை. அயோத்திதாஸ் என்பதையே வசந்த் மூன் தவறாக எழுதி இருக்கலாம் என்கிறார் ஆய்வாளர் ஸ்டாலின் ராஜாங்கம்.

இது தவிர அயோத்திதாசரின் கிளைகள் இருந்த ராயப்பேட்டை, பள்ளிக்கொண்டா, ரங்கூன் எல்லா இடங்களுக்கும் அம்பேத்கர் சென்றிருக்கிறார். கடைசியில் அவர் பவுத்தம் தழுவ தேர்வு செய்த நாக்பூரில் கூட அயோத்திதாசரின் கிளை இருந்திருக்கிறது. அதையும் அவர் அறிந்திருக்க வாய்ப்பு இருக்கிறது.

இதுவரை அயோத்திதாசர் குறித்த அம்பேத்கரின் நேரடி எழுத்துகள் கிடைக்கவில்லை. அதே வேளையில் அவர் மராட்டியத்தில் எழுதி தொகுக்கப்படாமல் இருப்பவற்றை தொகுத்தால் அவை கிடைக்கலாம் என்கிறார் அறிஞர் ஆனந்த் டெல்டும்ப்டே.

ஆக, அம்பேத்கரின் பவுத்தம் நோக்கிய பயணத்தில் அயோத்திதாசர் கலங்கரை விளக்காக இருந்திருக்கிறார் என்பது பல வகைகளிலும் புலனாகிறது.

பண்டிதர் மட்டுமல்ல அவரை பின்தொடர்ந்தவர்களும் தம் லட்சிய பயணத்தை கைவிடாத சாம்பியன்களாக இருந்திருக்கிறார்கள் என்பதற்கு வாழும் சாட்சி 'சாம்பியன் ரீஃப் பவுத்த சங்கம்!'

இரா.வினோத்
படம்: சந்திரசேகரன் சீதாராமன்

பதிவு. பத்திரிகையாளர்
பதிப்பாளர் வழக்கறிஞர்
அண்ணன் Ra Vinoth

மதுரை மேலூரில் உள்ள ஆண்டிபட்டி கிராமத்தில் பட்டியல் சமூக இளைஞர்கள் நேற்று திருவிழாவில் எல்லோரையும் போல பாடல்களுக்கு நடனம...
06/05/2025

மதுரை மேலூரில் உள்ள ஆண்டிபட்டி கிராமத்தில் பட்டியல் சமூக இளைஞர்கள் நேற்று திருவிழாவில் எல்லோரையும் போல பாடல்களுக்கு நடனம் ஆடி இருக்கிறார்கள் .அவர்களை அப்பொழுதே கள்ளர் சமூகத்தை சேர்ந்த இளைஞர்கள் தடுத்து ,சாதி ரீதியாக திட்டி இருக்கிறார்கள் .

இன்று முளைப்பாரி எடுக்கும் நேரத்தில் பட்டியல் சமூக இளைஞர்களை வெட்டியும் ,தலித் குடியிருப்புகளில் புகுந்து பெண்களையும் தாக்கி இருக்கிரார்கள்.

தற்பொழுது தான் பாதிக்கபட்ட சகோதரி ஒருவருடன் பேசினேன்.

Shalin Maria Lawrence

              ✊💥சாபுவி முனைவர் சாபுவி
06/05/2025



✊💥
சாபுவி முனைவர் சாபுவி

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Anti-Caste Social Movement posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share