நியூஸ் நிஜம்

நியூஸ் நிஜம் நியூஸ் நிஜம்
(1)

வலையில் சிக்கியது ‘டூம்ஸ் டே’:தமிழகத்திற்கு பேரழிவா..?பாம்பன் மீனவர்கள் வலையில் சிக்கிய அரிய வகை மீனை பார்த்த மக்கள், ‘ப...
07/10/2025

வலையில் சிக்கியது ‘டூம்ஸ் டே’:
தமிழகத்திற்கு பேரழிவா..?

பாம்பன் மீனவர்கள் வலையில் சிக்கிய அரிய வகை மீனை பார்த்த மக்கள், ‘பேரழிவு வரும்’ எனக் கூறிச் சென்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், மீன்வளத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் அருகே உள்ள பாம்பனில் இருந்து கடந்த 5ம் தேதி, ஆயிரக்கணக்கான மீனவர்கள் விசைப்படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

அப்போது, ஒரு படகில் சென்ற மீனவர்களின் வலையில் சுமார் 5 அடி நீளமும், 10 கிலோ எடையும் கொண்ட அரிய வகை மீன் ஒன்று சிக்கியது.

மறுநாள் அந்த மீனை கரைக்கு கொண்டுவந்தபோது, பாம்பன் பகுதி மக்கள் அதை பார்த்து, ‘இந்த மீன் கரை ஒதுங்கினால் பேரழிவு வரும்’ எனக் கூறிச் சென்றனர்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டதை அடுத்து, மீன்வளத்துறை அதிகாரிகள் விரைந்து வந்து அந்த மீனை பார்வையிட்டனர்.

இதையடுத்து பேசிய அவர்கள், ‘நீளமான மற்றும் சதைப் பிடிப்பற்ற பட்டையான உடலமைப்புடன், ஆரஞ்சு நிற துடுப்புடன் கூடிய இது, துடுப்பு மீன் (Oarfish) இனமாகும்.

இவை, மித வெப்ப மண்டல கடல் பகுதிகளிலும் அரிதாகவே காணப்படும். இது, அதிகபட்சமாக 16 மீட்டர் நீளம் வரை வளரக்கூடியது.

இந்த மீன் கரை ஒதுங்கினால் பேரழிவு வரும் என்பது ஜப்பான் உள்ளிட்ட ஆசிய நாடுகளின் நீண்ட கால நம்பிக்கை ஆகும். அதனால் இதற்கு ‘டூம்ஸ் டே’ மீன் என்ற பெயர் ஏற்பட்டது.

ஆனால், இதற்கான அறிவியல் ரீதியான ஆதாரம் இப்போது வரை இல்லை. அதனால், துடுப்பு மீன் பிடிபடுவதோ அல்லது கரை ஒதுங்குவதால் பேரழிவு ஏற்படும் என்பதோ வெறும் மூட நம்பிக்கையே’ என்று கூறினர்.

|
| |
| |
| #நியூஸ்நிஜம் |

நண்பர்கள் அனைவருக்கும்இனிய நற்காலை வணக்கம்..!  |   | #காலைவணக்கம் |   |   |  |  #நியூஸ்நிஜம் |  #நிநி |
07/10/2025

நண்பர்கள் அனைவருக்கும்
இனிய நற்காலை வணக்கம்..!

| |
#காலைவணக்கம் | | |
| #நியூஸ்நிஜம் | #நிநி |

இன்றைய நாட்காட்டி..!  |  #காலண்டர் |  |  #நியூஸ்நிஜம் |
06/10/2025

இன்றைய நாட்காட்டி..!

| #காலண்டர் |
| #நியூஸ்நிஜம் |

நமக்கு சாப்பாடுதான் முக்கியம்:கூண்டுக்கு திரும்பியது சிங்கம்..!வண்டலூர் பூங்காவின் ‘லயன் சஃபாரி’ (சிங்கம் உலாவிடம்) பகுத...
06/10/2025

நமக்கு சாப்பாடுதான் முக்கியம்:
கூண்டுக்கு திரும்பியது சிங்கம்..!

வண்டலூர் பூங்காவின் ‘லயன் சஃபாரி’ (சிங்கம் உலாவிடம்) பகுதியில் இருந்து மாயமான ‘ஷெரியார்’ என்ற சிங்கம், மூன்று நாட்களுக்கு பிறகு இன்று கூண்டுக்கு திரும்பியுள்ளது.

சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் மொத்தம் 9 சிங்கங்கள் உள்ளன. இதில், 3 ஆண் மற்றும் 4 பெண் என மொத்தம் 7 சிங்கங்கள் ‘லயன் சஃபாரி’யில் பராமரிக்கப்படுகின்றன.

இதனிடையே, 2023ம் ஆண்டு பெங்களூரு பன்னேர்கட்டா உயிரியல் பூங்காவுடன் விலங்கு பரிமாற்ற திட்டத்தின் மூலம், ‘ஷெரியார்’ என்ற 5 வயது ஆண் சிங்கம் வண்டலூர் பூங்காவிற்கு கொண்டு வரப்பட்டது.

இந்த சிங்கம் ‘லயன் சஃபாரி’ பகுதிக்குள் தொடர்ந்து விடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த சிங்கம், கடந்த 3ம் தேதி இரவு அதன் தங்குமிடத்துக்கு திரும்பவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த பூங்கா நிர்வாகத்தினர், ட்ரோன் மூலம் அதை தேடும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

இதன்போது, மாயமான சிங்கம் ‘ஷெரியார்’ வனப்பகுதிக்குள் இருக்கும் இடத்தை கண்டறிந்தனர்.

மேலும், பூங்கா வளாகத்தை விட்டு சிங்கம் வெளியில் எங்கும் செல்லவில்லை. பூங்காவுக்குள்தான் அது இருக்கிறது என்பதை உறுதி செய்தனர்.

இந்நிலையில், மூன்று நாட்களாக உணவு எடுக்க வராமல், சஃபாரி பகுதியில் மறைவாக இருந்த சிங்கம், இன்று கூண்டுக்கு திரும்பியதாக பூங்கா நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

|
|
| |
| #நியூஸ்நிஜம் |

தென்காசி மாவட்ட மக்களின்கனிவான கவனத்திற்கு..!தென்காசி மாவட்டத்தில் இன்று (அக்.06) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்த...
06/10/2025

தென்காசி மாவட்ட மக்களின்
கனிவான கவனத்திற்கு..!

தென்காசி மாவட்டத்தில் இன்று (அக்.06) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் பெயர் மற்றும் செல்போன் எண்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது.

உங்கள் பகுதிகளில் ஏதேனும் குற்றச் சம்பவங்கள் நடந்தால், இதில் கொடுக்கப்பட்டுள்ள உங்கள் ஊர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் எண்ணுக்கு உடனே அழைத்து தெரியப்படுத்துங்கள்.

அல்லது, அவசர உதவி எண் 100 மற்றும் 04633-295455, 98840 42100 என்ற காவல் கட்டுப்பாட்டு அறை எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள் என, தென்காசி காவல் கண்காணிப்பாளர் செ.அரவிந்த் தெரிவித்துள்ளார்.

Tenkasi District Police |
|
|
| |
| #நியூஸ்நிஜம் |

தமிழகத்தின் 21 மாவட்டங்களில்இரவு 10 மணி வரை மழை..!தமிழகத்தில் இன்று இரவு 10 மணி வரை, 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்...
06/10/2025

தமிழகத்தின் 21 மாவட்டங்களில்
இரவு 10 மணி வரை மழை..!

தமிழகத்தில் இன்று இரவு 10 மணி வரை, 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக, தமிழகத்தின் 21 மாவட்டங்களில் இன்று (அக்.06) இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது.

அதன்படி கள்ளக்குறிச்சி, கடலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய 3 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதே வேளை, அரியலூர், செங்கல்பட்டு, சென்னை, கோயம்புத்தூர், திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், கரூர், மதுரை, ராணிப்பேட்டை, சேலம், நீலகிரி, திருவள்ளூர், திருப்பத்தூர், திருப்பூர், திருவண்ணாமலை, வேலூர் மற்றும் விருதுநகர் ஆகிய 18 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

|
|
|
| #நியூஸ்நிஜம் |

கவிஞர் புலமைப்பித்தன்பிறந்த நாள் இன்று..!  |   |  |  |  #நியூஸ்நிஜம் |
06/10/2025

கவிஞர் புலமைப்பித்தன்
பிறந்த நாள் இன்று..!

| |
|
| #நியூஸ்நிஜம் |

231 குழந்தைகளுக்கு புத்தாடை:நெகிழ வைத்த திமுக எம்எல்ஏ..!ஆதரவற்ற குழந்தைகள் 231 பேருக்கு தனது ஐந்து மாத சம்பளத்தை செலவழித...
05/10/2025

231 குழந்தைகளுக்கு புத்தாடை:
நெகிழ வைத்த திமுக எம்எல்ஏ..!

ஆதரவற்ற குழந்தைகள் 231 பேருக்கு தனது ஐந்து மாத சம்பளத்தை செலவழித்து புத்தாடைகள் வாங்கிக் கொடுத்த திமுக எம்எல்ஏவின் செயல் அனைவரிடமும் பாராட்டுகளை பெற்றுள்ளது.

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், புத்தாடைகள், பட்டாசுகள் என தங்கள் குடும்பத்தோடு தீபாவளியை கோலாகலமாக கொண்டாட நாடு முழுவதும் பலரும் தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில், ஆதரவற்ற 231 குழந்தைகளுக்கு புத்தாடை வாங்கிக் கொடுத்து, அவர்களும் தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாட உதவியுள்ளார் ராஜபாளையம் திமுக எம்எல்ஏ தங்கபாண்டியன்.

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் தொகுதி திமுக எம்எல்ஏவாக இருப்பவர் தங்கபாண்டியன். இவர் கடந்த 8 ஆண்டுகளாக, அப்பகுதிகளில் செயல்படும் காப்பகங்களில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கு புத்தாடைகள் வாங்கிக் கொடுத்து, அவர்கள் மகிழ்ச்சியாக தீபாவளியை கொண்டாட உதவி வருகிறார்.

அந்த வகையில் 9வது ஆண்டான (2025) இப்போதும், ஆதரவற்ற குழந்தைகள் 231 பேரை, ராஜபாளையம் காந்தி சிலை ரவுண்டானா அருகே உள்ள ‘ஆனந்தம் சில்க்ஸ்’ ஜவுளி கடைக்கு அழைத்துச் சென்றார்.

அங்கு, குழந்தைகளுக்கு பிடித்த ஆடைகளை வாங்கிக் கொடுத்தார். இதற்காக அவர், தனது 5 மாத சம்பளப் பணம் 5 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயை செலவு செய்துள்ளார்.

எம்எல்ஏ தங்கபாண்டியனின் இந்த செயலுக்கு, கட்சி வேறுபாடின்றி பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

S.Thangapandian MLA |
| |
| |
| |
| #நியூஸ்நிஜம் |

தென்காசி மாவட்ட மக்களின்கனிவான கவனத்திற்கு..!தென்காசி மாவட்டத்தில் இன்று (அக்.05) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்த...
05/10/2025

தென்காசி மாவட்ட மக்களின்
கனிவான கவனத்திற்கு..!

தென்காசி மாவட்டத்தில் இன்று (அக்.05) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் பெயர் மற்றும் செல்போன் எண்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது.

உங்கள் பகுதிகளில் ஏதேனும் குற்றச் சம்பவங்கள் நடந்தால், இதில் கொடுக்கப்பட்டுள்ள உங்கள் ஊர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் எண்ணுக்கு உடனே அழைத்து தெரியப்படுத்துங்கள்.

அல்லது, அவசர உதவி எண் 100 மற்றும் 04633-295455, 98840 42100 என்ற காவல் கட்டுப்பாட்டு அறை எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள் என, தென்காசி காவல் கண்காணிப்பாளர் செ.அரவிந்த் தெரிவித்துள்ளார்.

Tenkasi District Police |
|
|
| |
| #நியூஸ்நிஜம் |

Address

Tuticorin

Telephone

+919360399845

Website

Alerts

Be the first to know and let us send you an email when நியூஸ் நிஜம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to நியூஸ் நிஜம்:

Share