நியூஸ் நிஜம்

நியூஸ் நிஜம் நியூஸ் நிஜம்
(1)

நண்பர்கள் அனைவருக்கும்இனிய நற்காலை வணக்கம்..!  |   | #காலைவணக்கம் |   |   |  |  #நியூஸ்நிஜம் |  #நிநி |
03/11/2025

நண்பர்கள் அனைவருக்கும்
இனிய நற்காலை வணக்கம்..!

| |
#காலைவணக்கம் | | |
| #நியூஸ்நிஜம் | #நிநி |

இன்றைய நாட்காட்டி..!  |  #காலண்டர் |  |  #நியூஸ்நிஜம் |
03/11/2025

இன்றைய நாட்காட்டி..!

| #காலண்டர் |
| #நியூஸ்நிஜம் |

02/11/2025

VIDEO: சீறிப் பாய்ந்தது ‘பாகுபலி’..!

‘பாகுபலி' என்று செல்லமாக கூறப்படும் பிரமாண்டமான LVM​3-M5 ராக்கெட், இன்று (நவ.02) மாலை 5:26 மணிக்கு CMS-03 என்ற இந்தியாவின் மிகப்பெரிய தகவல்தொடர்பு செயற்​கைக்​கோளை சுமந்துகொண்டு விண்ணில் சீறிப் பாய்ந்தது.

|
| |
| |
#நியூஸ்நிஜம் |

02/11/2025
LVM-M5 ராக்கெட் இன்றுவிண்ணில் பாய்கிறது..!ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2வது ஏவ...
02/11/2025

LVM-M5 ராக்கெட் இன்று
விண்ணில் பாய்கிறது..!

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2வது ஏவுதளத்தில் இருந்து, ‘பாகுபலி' என்று செல்லமாக அழைக்கப்படும் LVM-M5 ராக்கெட் இன்று மாலை விண்ணில் ஏவப்படுகிறது.

இதில், 4,410 கிலோ எடை கொண்ட ‘ஜிசாட்-7 ஆர்' என்று அழைக்கப்படும் ‘சி.எம்.எஸ்-03' என்ற கடற்படைக்கு தேவையான தகவல் தொடர்புகளை வழங்கும் செயற்கைக்கோள் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த செயற்கைக்கோளை திட்டமிட்ட இலக்கில் கொண்டு சேர்ப்பதற்கான 24 மணி நேர கவுன்ட்டவுன் நேற்று (நவ.01) மாலை 5:26 மணிக்கு தொடங்கியது.

தற்போது, ராக்கெட்டுக்கான எரிபொருள் நிரப்பும் பணிகள் நிறைவடைந்துள்ளன.

தொடர்ந்து, ராக்கெட் மற்றும் செயற்கைக்கோளின் செயல்பாடுகளை விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

24 மணி நேர கவுன்ட்டவுனை முடித்துக் கொண்டு, இன்று (நவ.02) மாலை 5:26 மணிக்கு ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

|
| |
#நியூஸ்நிஜம் |

01/11/2025

உங்கள் வேலை முக்கியமில்லை;
செய்யும் விதம்தான் முக்கியம்..!

நீங்கள் எந்த வேலையை
செய்தாலும் பரவாயில்லை…

அதை, மகிழ்ச்சியுடனும்
மரியாதையுடனும் செய்யுங்கள்...

அதை பார்ப்பவர்களின் கண்களும் மனமும்
நிறைந்து விடும்.

| #நியூஸ்நிஜம் |

திமுக ஆட்சியில் துன்பமில்லை:சபாநாயகர் அப்பாவு பெருமிதம்!“திமுக ஆட்சியில் யாரும் துன்பமாக இல்லை; எல்லோருக்கும் நன்மை அளிக...
01/11/2025

திமுக ஆட்சியில் துன்பமில்லை:
சபாநாயகர் அப்பாவு பெருமிதம்!

“திமுக ஆட்சியில் யாரும் துன்பமாக இல்லை; எல்லோருக்கும் நன்மை அளிக்கிறது இந்த ஆட்சி” என்று, சபாநாயகர் அப்பாவு பெருமிதத்துடன் கூறினார்.

திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக் குறிச்சி பகுதியில், ரூ.65.99 கோடி மதிப்பில் 6 கிமீ தூரத்துக்கு, 10 மீட்டர் அகலத்தில் புறவழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சாலையை, சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக இன்று (நவ.01) திறந்து வைத்தார்.

இதைத்தொடர்ந்து, இந்த சாலையை பார்வையிட்ட தமிழக சபாநாயகர் அப்பாவு, நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர், “பிற மாநிலங்களைச் சேர்ந்த பெண்கள் தமிழக பேருந்துகளில் கட்டணம் இல்லாமல் பயணிக்கின்றனர்.

பிற மாநில மாணவ, மாணவிகளுக்கும் பாரபட்சமின்றி முதல்வர் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குகிறார்.

பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறும் பீகாரில், அவர்கள் தரும் துன்பத்தை தாங்க முடியாத மக்கள் தமிழகத்துக்கு வந்து இன்பமாக வாழ்கின்றனர்.

இந்த (திமுக) ஆட்சியில் யாரும் துன்பமாக இல்லை; எல்லோருக்கும் நன்மையை அளிக்கிறது இந்த ஆட்சி” என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.

| |
| |
| #நியூஸ்நிஜம் |

ஆறு மாவட்ட மக்களுக்குதென்காசி வெதர்மேன் அலர்ட்!“நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் உட்பட தமிழகத்தின் 6 மாவட்டங்களில் வரலாற...
01/11/2025

ஆறு மாவட்ட மக்களுக்கு
தென்காசி வெதர்மேன் அலர்ட்!

“நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் உட்பட தமிழகத்தின் 6 மாவட்டங்களில் வரலாறு காணாத வெப்பநிலை பதிவாக வாய்ப்பு உள்ளது” என, தென்காசி வெதர்மேன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து, தென்காசி மாவட்ட வெதர்மேன் (வானிலை ஆய்வாளர்) T.ராஜா தனது முகநூல் பக்கத்தில், “தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை காலம்.

ஆனால், கிழக்கு திசை காற்று முற்றிலும் தடைபட்டு வறண்ட மேற்கு திசை காற்று வீசுகிறது.

மேலும், கடல் காற்று உள் நுழைவதும் தடைபட்டதன் காரணமாக, தமிழக கடலோர மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரித்துள்ளது.

எனவே, இன்று (நவ.01) முதல் தமிழகத்தின் வெப்பநிலை இயல்பை விட 4°© வரை உயரும் என கணிக்கப்படுகிறது.

குறிப்பாக சென்னை முதல் கன்னியாகுமரி வரை உள்ள அனைத்து கடலோர மாவட்டங்களிலும் வெப்பநிலை அதிகரிக்கும்.

இதன் காரணமாக, அடுத்த 5 நாட்களுக்கு சென்னை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி, விருதுநகர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் வரலாறு காணாத வெப்பநிலை பதிவாக வாய்ப்புள்ளது.

நவம்பர் மாத வரலாற்றில், இதுவரை இல்லாத அளவுக்கு தமிழகத்தில் இந்த மாதம் வெப்பநிலை உயர உள்ளது.

எனவே, பொதுமக்கள் பகல் நேரங்களில் அத்தியாவசிய தேவையின்றி வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்” என, எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tenkasi Weatherman
|
|
|
| #நியூஸ்நிஜம் |

Address

Tuticorin

Telephone

+919360399845

Website

Alerts

Be the first to know and let us send you an email when நியூஸ் நிஜம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to நியூஸ் நிஜம்:

Share