Kongunadu Weatherman

  • Home
  • Kongunadu Weatherman

Kongunadu Weatherman TN &Kongu belt ன் மழை நிலவரங்கள் பதிவிடப்படும். This page is not official. Official website is IMD

பற்றாக்குறையுடன் விடைப்பெற்ற பருவமழைநாம் நீண்டகால வானிலை பதிவில்  1. கணினி சார்ந்த மழைக்காரணிகள் மற்றும் 2. இயற்கை சார்ந...
01/01/2026

பற்றாக்குறையுடன் விடைப்பெற்ற பருவமழை

நாம் நீண்டகால வானிலை பதிவில் 1. கணினி சார்ந்த மழைக்காரணிகள் மற்றும் 2. இயற்கை சார்ந்த மழைக்காரணிகளின் அடிப்படையில் பதிவிட்ட பதிவில் நாம் எதிர்பார்த்ததும், நடந்ததும் பற்றி பார்ப்போம்..

புரட்டாசிகால மழை எதிர்பார்த்தது

புரட்டாசிகால மழையானது இந்தாண்டும் தமிழகத்தில் குறிப்பாக கொங்கு பகுதி, தென் உள் மாவட்டங்களில் இயல்பு/இயல்பை விட சற்று கூடுதலாக பதிவாக வாய்ப்புள்ளதாக பதிவிட்டு இருந்தோம்.

நடந்தது

கார்மழை (கோடை மழை) போல காற்று குவிதல் கொங்கு பகுதிக்கு சாதகமாக அமையாததால் டெல்டா முதல் வட மாவட்டங்கள் வரை புரட்டாசிகால ஒரிரு முறை பரவலாக நன்றாக இயல்பிற்கு மாறாக பெய்தது. ஆனால் கொங்கு பகுதிக்கு சற்று பற்றாக்குறையாககவே பதிவானது. ஆனால் நாம் எதிர்பார்த்தவாறு இயல்பை விட சற்று கூடுதலாக +36% அதிகம் பதிவாகியது..

வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்தது

நீண்டகால வானிலை பதிவின் படி தமிழகத்தில் இந்தாண்டு வடகிழக்கு பருவமழையானது இயல்பு/இயல்பை ஒட்டி பதிவாக வாய்ப்புள்ளதாக பதிவிட்டுருந்தோம்..

அதில் குறிப்பாக டெல்டா முதல் வட மாவட்டங்கள் வரை இயல்பான மழையை பெறும் என்று எதிர்பார்த்தோம்.

நடித்தது:

அதேபோல ஒரளவிற்கு இயல்பான மழையை பெற்றன. காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டம் மட்டும் பற்றாக்குறையாக இருக்கிறது..

நம் கொங்கு மண்டலம், தென் மாவட்டங்கள் இயல்பு/இயல்பை ஒட்டி பதிவாலாம் என்று எதிர்பார்த்தோம்.

நடந்தது:

நம் கொங்கு மண்டலங்களில் ஈரோடு மாவட்டம் மட்டும் இயல்பை ஒட்டி பதிவாகியுள்ளது.. மற்ற அனேக கொங்கு மாவட்டங்கள் நாம் எதிர்பார்த்தை விட மழை பற்றாக்குறை உள்ளது.. நீண்டகால பதிவில் கொங்கு பகுதிக்கு பருவமழை இயல்பு/இயல்பை ஒட்டி மழை பதிவானால் கூட சற்று பரவலாக மழை பற்றாக்குறையால் வறட்சி இருக்கும் என்றும், கால்நடைகளுக்கு தீவன பற்றாக்குறை இருக்கும் என்று பதிவிட்டுருந்தோம். அதேபோல கொங்கு பகுதிகளில் சற்று பரவலாக சற்று அதிக வறட்சி உள்ளது. சீரான மழை இல்லாததால் தீவனப்பயிர்கள் பல பகுதிகளில் சீரான வளர்ச்சி இல்லாமல் வறண்டு விட்டதால் கால்நடைகளுக்கு தீவனம் பற்றாக்குறையாக உள்ளது..

தென் மாவட்டங்களில் நாம் எதிர்பார்த்ததை விட இயல்பு/இயல்பை விட சற்று அதிகம் மழை பதிவாகியுள்ளது. க.குமரி, தேனி மட்டும் சற்று பற்றாக்குறையாக உள்ளது....

அதேபோல மத்திய மாவட்டங்களிலும் மழை பற்றாக்குறை இருக்கிறது..

ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் நாம் எதிர்பார்த்தவாறு இயல்பை ஒட்டி . அதாவது இயல்பான 442.8 மி.மி க்கு 428.9மிமி என்றளவில் இயல்பை ஒட்டி அதாவது -3% குறைவாக இயல்பு /இயல்பை ஒட்டி பதிவாகியிருக்கிறது. .

தமிழகத்தில் கொங்கு மண்டலம் தான் சற்று பரவலாக அதிக வறட்சி நிலவுகிறது.. ஏனெனில் தமிழகத்தில் மற்ற பகுதிகளில்(சில இடங்களை தவிர) கார்மழை(கோடை மழை), தென்மேற்கு பருவமழையின் போது வெப்பசலன மழை, புரட்டாசிகால மழை ஒரளவிற்கு தமிழகத்தில் பதிவானது.. ஆனால் கொங்கு பகுதிகளில் கார்மழை, வெப்பசலன, புரட்டாசிகால சொல்லும்படியாக பரவலான மழையே இல்லாத காரணத்தால் பருவமழையும் கொங்கு பகுதியை ஏமாற்றியதால் சில இடங்களில் நல்ல மழை இருந்தாலும் சற்று பரவலாக வறட்சி இருக்கிறது, அதுவும் சில பகுதிகள் கடும் வறட்சி உள்ளது...

கொங்கு பகுதிக்கு எதிர்வரும் கார்மழையை(கோடை மழை) பார்ப்போம். கார்மழையை பற்றி விரிவாக தை, மாசியில் விரிவாக பதிவிடலாம்... இந்தாண்டு எதிர்பார்த்தது போல மழை பற்றாக்குறையால் வறட்சி இருக்கிறது. நீண்டகால மழை காரணிகளின் படி அனேகமாக அடுத்தாண்டு 2026 தமிழகம் செழிக்கவே வாய்ப்புள்ளது. அதை தற்போது உறுதிபடுத்த இயலாது, வரும் மாதங்களில் பார்ப்போம்..

அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்💐

நீண்டகால வானிலை பதிவு 2025 ன் கணினி சார்ந்த மழைக்காரணிகள் : https://www.facebook.com/share/p/1C8ua5dfVi/ பாருங்கள்

இயற்கை சார்ந்த மழைக்காரணிகள்:
https://www.facebook.com/share/p/1ZMjqkesgb/

கருவோட்டம்(கரு ஓட்டம்) மழை லேசான ஈரப்பதமான கிழக்கு திசை காற்று காரணமாக தமிழகத்தில் Dec 31, Jan 2,3 வரை லேசான/மிதமான மழைக...
31/12/2025

கருவோட்டம்(கரு ஓட்டம்) மழை

லேசான ஈரப்பதமான கிழக்கு திசை காற்று காரணமாக தமிழகத்தில் Dec 31, Jan 2,3 வரை லேசான/மிதமான மழைக்கு வாய்ப்பு.

குறிப்பாக கடலோர பகுதிகளில் ஆங்காங்கே மிதமான/சற்று கன மழை வரை இருக்கும்.. தென் மாவட்டங்களில் ஆங்காங்க சில இடங்களில் லேசான/மிதமான மழையும், மலையோர, மலைப்பகுதிகளில் ஒரிரு இடங்களில் சற்று கன மழை வரை வாய்ப்பிருக்கிறது...

கொங்கு பகுதிகளில் இதே தேதிகளில் ஒருசில/சில இடங்களில் மேகமூட்டமாக சாரல்/லேசான மழை இருக்கலாம். ஏதாவது ஒரிரு இடங்களில் மிதமான மழை இருக்கலாம்..

சிஸ்டத்தின் நகர்வில் மாற்றம், கிழக்கு திசை காற்றின் ஈரப்பதத்தை பொருத்து மாற்றமிருந்தால் மழையானது நாம் எதிர்பார்த்தை விட சற்று கூட/குறைய கூட வாய்ப்புள்ளது..

இதனால் நெல், பருத்தி, சோளம், மக்காச்சோளம் அறுவடை விவசாய்கள் சற்று கவனமாக இருக்கவும்... jan 4 முதல் மீண்டும் அறுவடை பணிகளை தொடரலாம்..

குளிரானது ஒரிரு நாட்களுக்கு குறைந்து மீண்டும் Jan 3க்கு மேல் குளிரின் தாக்கம் அதிகரிக்கும்...

இயற்கையுடன் இசைந்து வாழ்வதே மனித வாழ்க்கையின் அடிப்படை என்ற உண்மையை வாழ்ந்து காட்டியவர் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வா...
30/12/2025

இயற்கையுடன் இசைந்து வாழ்வதே மனித வாழ்க்கையின் அடிப்படை என்ற உண்மையை வாழ்ந்து காட்டியவர் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார். தமிழ்நாட்டில் இயற்கை வேளாண் இயக்கத்தின் தந்தை எனப் போற்றப்படும் அவர், வேளாண்மை என்பது வெறும் உற்பத்தி அல்ல; அது மண், நீர், விதை, விவசாயி, நுகர்வோர்—எல்லோரின் நலனையும் ஒன்றிணைக்கும் வாழ்வியல் என்று எடுத்துரைத்தார்.

ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள் மனித உடலுக்கும் மண்ணுக்கும் செய்யும் தீமைகளை அறிவியல் ஆதாரங்களுடன் எளிய மொழியில் மக்களுக்கு விளக்கியவர் நம்மாழ்வார். “மண் உயிரோடு இருக்க வேண்டும்; அப்போதுதான் மனிதனும் ஆரோக்கியமாக இருப்பான்” என்பது அவரது மையக் கருத்து. நாட்டுவிதைகள், பசுமை உரம், கலப்பு பயிரிடல், மழைநீர் சேமிப்பு போன்ற பாரம்பரிய முறைகளை அவர் மீண்டும் உயிர்ப்பித்தார்.

விவசாயிகள் சுயமரியாதையுடன் வாழ வேண்டும் என்பதற்காக, ஊர் ஊராகச் சென்று பயிற்சிகள், உரைகள், களப்பணிகள் மேற்கொண்டார். நுகர்வோர் விழிப்புணர்வும் அவ்வளவே முக்கியம் எனக் கருதி, “உணவைத் தேர்வு செய்வது ஒரு சமூகப் பொறுப்பு” என்ற செய்தியை வலியுறுத்தினார். அவரது எழுத்துகள், உரைகள், பயணங்கள்—இன்றும் பல இளைஞர்களை இயற்கை வேளாண்மைக்கு ஈர்க்கின்றன.

நம்மாழ்வார் உடலால் நம்மிடையே இல்லாவிட்டாலும், அவரது எண்ணங்கள் விதைகளாக முளைத்து பல வயல்களில் விளைகின்றன. அவரது 12 ம் ஆண்டு நினைவு தினத்தில், இயற்கையை காக்கும் உறுதியை மீண்டும் புதுப்பித்து, நிலம்–நீர்–மக்கள் நலனுக்காகச் செயல்படுவதே அவருக்கான உண்மையான அஞ்சலி.

🌾 “இயற்கையை மதிப்போம்; எதிர்காலத்தை பாதுகாப்போம்.”

நாங்களும் தற்போதைக்கு வீட்டு தேவைக்கு மட்டும் ஐய்யாவின் வழியில் இயற்கை வேளாண்மை செய்துவருகிறோம்... நீங்கள் யாரவது இயற்கை வேளாண்மை செய்கிறீர்களா ..?

#நம்மாழ்வார்
#விதை
Credit: #உழுது_உண் சுந்தர்

லேசான/மிதமான ஈரப்பதமிகுந்த கிழக்கு திசை பருவகாற்று காரணமாக தமிழகத்தில் Dec 16,17 ல் சில இடங்களில் லேசான, மிதமான மழை இருக...
15/12/2025

லேசான/மிதமான ஈரப்பதமிகுந்த கிழக்கு திசை பருவகாற்று காரணமாக தமிழகத்தில் Dec 16,17 ல் சில இடங்களில் லேசான, மிதமான மழை இருக்கும்.

குறிப்பாக கொங்கு பகுதிகளில் Dec 16 அன்று மேகமூட்டமாக ஒருசில/இடங்களில் சாரல்/லேசான மழை இருக்கும், மலைப்பகுதி,மலையோர(வால்பாறை, திண்டுக்கல் மலைப்பகுதி) பகுதிகளில் மிதமான மழை இருக்கும். அமராவதி நீர்பிடிப்பு பகுதிகளிலும் மிதமான மழை இருக்கலாம்... Dec 17 அன்று வறண்ட காற்று தமிழகம் நுழையாமல் இருந்தால் மேலே சொன்னது போல் கொங்கு பகுதிக்கு மழை இருக்கும், இதே சூழல் வட மாவட்டங்களுக்கும் பொருந்தும்.

டெல்டா, தென் மாவட்டங்களில் Dec 16,17 சில,பல இடங்களில் லேசான/ மிதமான மழை இருக்கும், ஒரிரு இடங்களில் சற்று கன மழை வரை இருக்கலாம்..

Dec 18,19 முதல் வட இந்தியாவின் வறண்ட குளிர் காற்று தமிழகத்தில் நுழையும் என்பதால் தொடர்ந்து வறண்ட வானிலேயே நிலவும், Dec 16,17 மட்டும் தமிழகத்தில் குளிரின் தாக்கம் குறைவாக இருக்கும், மீண்டும் Dec 18,19 முதல் மீண்டும் குளிரின் தாக்கம் அதிகரிக்கும்...

MJO சாதகமாக இல்லாதது, ITCZ தெற்கு(நிலநடுக்கோட்டை) நோக்கி நகர்ந்தது, வட இந்தியாவின் வறண்ட காற்று ஊடுருவல் போன்ற சாதகமற்ற மழைக்காரணிகளால் பருவமழை தொடர்ந்து தொய்வு நிலையில்(செயலிழந்து) உள்ளது.... தற்போதைக்கு மழைக்கான சூழல் இல்லை, வரும் நாட்களில் ஏதாவது மழைக்கான வாய்ப்பு உருவானால் மட்டும் அறுவடை விவசாய்களுக்காக பதிவிடலாம்.. நம் நீண்டகால பதிவில் எதிர்பார்த்தவாறு தமிழகத்தில் குறிப்பாக கொங்கு பகுதிகளில் ஏற்பட்டுள்ள மழை பற்றாக்குறையால் வறட்சி காரணமாக கால்நடைகளுக்கு தீவன பற்றாக்குறை இருக்கும், சில, பல இடங்களில் விவசாய பயிர்களுக்கு(சற்று நீண்டகால பயிர்களுக்கு) தற்போதே தண்ணீர் வாங்கி ஊற்றும் சூழல் உள்ளது...

நீண்டகால வானிலை  பதிவில்  பதிவிட்டதுபோல தமிழகத்தில் மழை பற்றாக்குறையாக தான் உள்ளது. குறிப்பாக அதில் கொங்கு பகுதி சில இடங...
12/12/2025

நீண்டகால வானிலை பதிவில் பதிவிட்டதுபோல தமிழகத்தில் மழை பற்றாக்குறையாக தான் உள்ளது.

குறிப்பாக அதில் கொங்கு பகுதி சில இடங்களில் நல்ல மழையும், இன்னும் ஒரிரு இடங்களில் கடுமையான வறட்சி இருக்கும் என்றும், சற்று பரவலாக லேசான/மிதமான வறட்சி இருக்கும் என்று எதிர்பார்த்தோம்,

அதேபோல ஈரோடு வடக்கு, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, உடுமலை போன்ற சில பகுதிகள் வறட்சி இல்லாமல் நல்ல மழையும் பெய்துள்ளது, தருமபுரி, கிருஷ்ணகிரி கடந்தாண்டு பெய்த தீவிர மழையால் இந்தாண்டு வறட்சியின் தாக்கம் குறைவாக இருக்கும்.. அதேபோல எதிர்பார்த்ததை விட சில இடங்களில் கடுமையான வறட்சியும் உள்ளது, எதிர்பார்த்தது போல கொங்கு பகுதிகளில் சற்று பரவலாக லேசான, மிதமான வறட்சி நிலவுகிறது...

டெல்டா, வட மாவட்டங்கள் இயல்பான மழை எதிர்பார்த்தோம், அதேபோல டெல்டா முதல் வட மாவட்டங்கள் வரை இயல்பான மழை பதிவாகியுள்ளது. டெல்டாவில் சற்று கூடுதல் மழையும் பதிவாகியுள்ளது.. அங்கு எதிர்பார்த்தவாறு வறட்சியின் தாக்கம் குறைவு... ஆனால் அங்கும் சில இடங்களில் மழை பற்றாக்குறை உள்ளது...

தென் மாவட்டங்களில் இயல்பான மழை இருக்கும் என்றும், சில, பல இடங்களில் பற்றாக்குறை இருக்கலாம் என்று பதிவிட்டு இருந்தோம்.. அதேபோல பரவலாக தென் மாவட்டங்களில் ஒரளவிற்கு நல்ல மழை இருந்தது, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் சில, பல இடங்களில் இன்னும் மழை பற்றாக்குறையாக தான் உள்ளது..

அதேபோல கால்நடைகளுக்கு தீவன பற்றாக்குறை வரும் என்றும் பதிவிட்டு இருந்தோம், அதேபோல மழை சீராக பெய்யாததால் சற்று பரவலாக கொங்கு பகுதிகளில் கொறங்காடுகள் ஒரளவிற்கு பில் வந்தாலும் தற்போது மீண்டும் வாடுகிறது, அதேபோல மானவரி பயிர்களும் வாடி வருகிறது..

இதுபோல் இந்தாண்டு தமிழகத்தில் பருவமழை பற்றாக்குறையால் வறட்சி இருக்கும் என்று தென்மேற்கு பருவமழையின் இறுதி வாக்கிலும் , செப்டம்பர் இறுதியில் நீண்டகால பதிவில் பதிவிட்டு இருந்தோம். ஆனால் அதை பலர் நம்பவில்லை , எல்லாரும்(பெரும்பாலானவர்கள்) நல்ல மழை(இயல்பை விட கூடுதல் மழை) பெய்யும் என்று சொல்லுகிறார்கள், நீங்கள் ஏன் மழை குறைந்து வறட்சி வரும் என்று சொல்கிறீர்கள் என்று ஏளனம் செய்தார்கள். அவை எம்மை வருத்தியது. ஆனால் நாம் எதிர்பார்த்தவாறு தற்போது வரை தமிழகத்தில் மழை பற்றாக்குறையாக தான் உள்ளது, அதுவும் கொங்கு பகுதி கூடுதல் மழை பற்றாக்குறை உள்ளது..

முதல் நீண்டகால வானிலை பதிவு - 1(கணினி சார்ந்த மழைக்காரணிகளின் படி) செப்டம்பர் இறுதியில் பதிவிட்டோம். அதன் லிங்க்👇 https://www.facebook.com/share/p/1Pui5iaLhv/

இயற்கை சார்ந்த மழைக்காரணிகளின் படி நீண்டகால வானிலை பதிவு -2 பதிவிட இருந்தபோது சிலர் ஏன் வறட்சி வரும் என்று சொல்லுகிறீர்கள் நல்ல மழை பெய்யும் Negative வாக பதிவிடாதீர்கள் என்றார்கள், அதனால் அந்த நீண்டகால பதிவு 2 பதிவிடாமல் கலர் நோட்டில்(Google color note) ல் save செய்து வைத்தேன்.. அது இப்போது screen சாட் எடுத்து போட்டோவாக இந்த பதிவில் பதிவிட்டு இருக்கிறோம் அந்த படங்களை பாருங்கள்..

தற்போதைய வானிலை அமைப்பு(மழை வருமா..?):

தற்போதைய மழைக்காரணிகளான கடல் மேற்பரப்பு வெப்பநிலை சிஸ்டத்திற்கு சாதகமாகவே உள்ளது, பசுபிக் பெருங்கடலில் லா நினா நிகழ்வும் நன்றாக உள்ளது. இருப்பினும், MJO சாதகமாக இல்லாதது, ITCZ(வெப்பமண்டல காற்று குவிதலை ஒருங்கிணைக்கும் பகுதி ) ஆனது இலங்கைக்கு தெற்கே நில நடுகோட்டை நோக்கி நகர்ந்துள்ளது. இதனால் சிஸ்டமும் இலங்கைக்கு தெற்கே இந்திய பெருங்கடலில் தான் மேற்கு வர வாய்ப்புள்ளதால் தமிழகத்தில் வலுவான மழை வருவதற்கு சாத்தியம் குறைவு. ஆனால் வரும் நாட்களில் இதில் ஏதாவது மாற்றமிருந்தால் பதிவிடலாம்.

கடல் மேற்பரப்பு வெப்பநிலை, லா-நினா சாதகமாக உள்ளதால் Dec 16,17 வாக்கில் முதல் தமிழகத்தில் கருவோட்டம் மழை(லேசான/மிதமான மழை ) ஆரம்பமாக வாய்ப்பிருக்கிறது, அதை வரும் நாட்களில் உறுதிபடுத்தலாம்... கொங்கு பகுதி உட்பட மிதமான மழையாவது கிடைத்தால் தான் மானவரி, கொறங்காடு தப்பிக்கும், இல்லாவிட்டால் வறண்டு விடும்.. நாம் எதிர்பார்த்தவாறு கால்நடைகளுக்கு தீவன பற்றாக்குறை இருக்கும்... தமிழகத்தில் குறிப்பாக கொங்கு பகுதிகளில் சற்று பரவலாக மழை பற்றாக்குறையால் சற்று அதிகம் வறட்சி இருக்கும் என்பதால் அதற்கேற்றார்போல விவசாய்கள் திட்டமிடுங்கள்... வறட்சியை எதிர்கொண்டு தான் ஆக வேண்டும். அடுத்தது கார்மழையை தான் பரவலான நல்ல மழையை எதிர்பார்க்க இயலும். அதைப்பற்றி வரும் மாதங்களில் பார்ப்போம்..

இதில் ஏதாவது சந்தேகம் இருந்தால் comment செய்யுங்கள்...

நாம் எதிர்பார்த்தவாறு வலுகுறைந்த டித்வா புதுச்சேரி அருகே கரையை கடந்து மேற்கு நோக்கி மெல்ல நகர்கிறது.. இதன் காரணமாக வட மா...
03/12/2025

நாம் எதிர்பார்த்தவாறு வலுகுறைந்த டித்வா புதுச்சேரி அருகே கரையை கடந்து மேற்கு நோக்கி மெல்ல நகர்கிறது..

இதன் காரணமாக வட மாவட்டங்களில் பரவலாக மழை பதிவாகி வருகிறது..

கொங்கு பகுதியை நோக்கி மதியத்திற்கு மேல் மாலை, இரவு, நள்ளிரவு ஆங்காங்க, சற்று பரவலாக மழை கிடைக்கலாம்.. சிஸ்டம் வட மாவட்டங்கள், வடகிழக்கு கொங்கு பகுதியை ஒட்டி மேலும் வலுகுறைந்து காற்று சுழறுசியாக மேற்கே சென்றாலும் கொங்கு பகுதிக்கு காற்று குவிதல் காரணமாக மழை இருக்கலாம்.. நிகழ்நேரத்தில் அதை உறுதி செய்வோம்.. தற்போதைக்கு அதிக எதிர்பார்ப்பு வேண்டாம்..

அரபிக்கடல் வெப்பநிலை சாதகமாக உள்ளதால் வலுகுறைந்த சிஸ்டம் அரபிக்கடலில் இறங்கினால் மீண்டும் வலுப்பெற வாய்ப்புள்ளது... அவ்வாறு வலுப்பெற்றால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகள் மற்றும் அதனையொட்டிய மலையோர பகுதிகளில் ஒரிரு /ஒருசில இடங்களில் கன/ மிக கன மழை கூட இருக்கலாம் நிகழ்நேரத்தில் உறுதி செய்யலாம்..

நாளை Dec 3 மழைக்கார்த்திக்கை என்று கிரமாத்தில் சொல்வதுண்டு, (பெரும்பாலான ஆண்டுகளில் மழைக்கார்த்திகையின் போதும் மழை இருக்...
02/12/2025

நாளை Dec 3 மழைக்கார்த்திக்கை என்று கிரமாத்தில் சொல்வதுண்டு, (பெரும்பாலான ஆண்டுகளில் மழைக்கார்த்திகையின் போதும் மழை இருக்குமாம், சில ஆண்டுகள் மட்டும் மழை இருக்காதாம் என்று கிரமத்து பெரியவர்கள் சொல்வதுண்டு) மற்றும் கார்த்திகை தீபம் என்பதாலும், டித்வா சிஸ்டம் மேலும் வலுவிழந்து இரவு முதல் தோரயமாக புதுச்சேரி அருகே கரையை கடந்து வட மாவட்டங்கள் வழியாக நாளை மேற்கு நோக்கி நகரும் போது மேலும் வலுவிழந்த நிலையில் கிருஷ்ணகிரி வழியாக மேற்கு, வட மேற்கில் நகர வாய்ப்பு இருப்பதால். கொங்கு பகுதிக்கு நேரடியாக மழை இல்லாமல் ஈரப்பதமான காற்று குவிதல் காரணமாக நாளை Dec 3 மட்டும் கொங்கு பகுதிக்கு ஆங்காங்கே வெப்பசலன மழை இருக்கிறது... மேக உற்பத்தி, காற்று குவிதல் பொருத்து சற்று பரவலான மழை கூட இருக்கலாம்.. ஆனால் அதிக எதிர்பார்ப்பும் வேண்டாம்... கொங்கு மலைப்பகுதி, மலையோர பகுதிகளில் கன மழை இருக்கும்... ஏதாவது மாற்றம்(சிஸ்டத்தின் நகர்வில்) இருந்தால் எதிர்பார்த்த மழையிலும் கூட/குறைய இருக்கும்

அதன்பிறகு Dec 5,6 வரை கொங்கு பகுதிகளில் ஆங்காங்க சில,பல இடங்களில் மழை இருக்கலாம். பரவலாக இருக்காது...

வடக்கு நோக்கி நகர்ந்த புயல் வலுவிழந்து சென்னை அருகே நீடித்து சென்னைக்கு பரவலாக நல்ல மழை பதிவாகிறது.. இந்தமழை அங்கு தொடரு...
01/12/2025

வடக்கு நோக்கி நகர்ந்த புயல் வலுவிழந்து சென்னை அருகே நீடித்து சென்னைக்கு பரவலாக நல்ல மழை பதிவாகிறது.. இந்தமழை அங்கு தொடரும்.. சென்னைக்கு மிக கன மழைக்கான வாய்ப்பு உருவாகியுள்ளது... நாட்களுக்கு பிறகு அந்த சிஸ்டம் வலுவிழக்கலாம் ...

இந்நிலையில் கொங்கு பகுதியில் காற்று குவிதல் மற்றும் மிதமான ஈரப்பதமிகுந்த வடகிழக்கு பருவகாற்று நுழைதல் மற்றும் இந்தியா பெருங்கடல் காற்று மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் Dec 3 முதல் 5,6 வரை ஆங்காங்க மழை தொடரும்..

கொங்கு பகுதிகளில் வடக்கு,வடகிழக்கு காற்று குவிதலால் தென்மேற்கு கொங்கு பகுதிகளில் இன்று ஒருசில இடங்களில் மழை இருந்தது... நாளையும் கொங்கு பகுதிகளில் சில இடங்களில் மழை இருக்கும்..
Dec 3 முதல் Dec 5,6 வரை கொங்கு பகுதிகளில் ஆங்காங்கே சில,பல இடங்களில் வெப்பசலன மழை இருக்கும்...ஆனால் பரவலான மழைக்கு வாய்ப்பு குறைவு.... இதில் ஏதாவது மாற்றமிருந்தால் இடையில் பதிவிடலாம்...

திருப்பூர் மாவட்ட தெற்கு பகுதிகளில் கடலை விதைப்பவர்கள் /போடுவபவர்கள் கடந்த மழையின் ஈரத்தை பயன்படுத்தி போடலாம் அல்லது இந்த Dec 5,6 வரை உள்ள மழையை பார்த்துவிட்டு போடுபவர்களும் போடலாம். ஆனால் ஆங்காங்கே சில,பல இடங்களில் தான் வாய்ப்புள்ளது. MJO தற்போது கிழக்கு நோக்கி நகர்ந்துவிட்டதால் பரவலான மழைக்கு வாய்ப்பு குறைவு..

மீண்டும் இந்தியா பெருங்கடலுக்கு டிசம்பர் 10/15 முதல் 20/25 வரை MJO நகர உள்ளதால் பருவமழைக்கு சாதகமாக இருக்கும்...

புயல் டெல்டா ஒட்டி வடக்கு,சற்று வடமேற்கில் நகர்கிறது... புயல் வங்ககடல் ஈரப்பதம் கிடைக்காமல் மெல்ல வலுவிழந்து வருகிறது.. ...
30/11/2025

புயல் டெல்டா ஒட்டி வடக்கு,சற்று வடமேற்கில் நகர்கிறது...

புயல் வங்ககடல் ஈரப்பதம் கிடைக்காமல் மெல்ல வலுவிழந்து வருகிறது.. கடலோர பகுதிகள் ஆகட்டும், மற்ற தமிழக பகுதிகளில் உட்பட மேக உற்பத்தி மிகவும் குறைவாக உருவாகிறது..(நேற்றே மேக உற்பத்தி குறைவாக இருக்கிறது என்று பதிவிட்டு இருந்தோம்)

இதனால் வட மாவட்டங்களுக்கு மிக கன மழை ஆபத்து குறைகிறது.. சிஸ்டம் வடக்கு நோக்கி நகர்வதால் கொங்கு பகுதிகளில் காலை வரை அல்லது சிஸ்டத்தின் லேசான மேக உற்பத்தி தென்மேற்கு பகுதிகளில் உருவானால் மட்டும் தோரயமாக மதியம் வரை மழை இருக்கும்... அதன் பிறகு கொங்கு பகுதிகளில் அடுத்த ஒரிரு நாட்களுக்கு மிதமான ஈரப்பதம் காரணமாக ஆங்காங்க சில,பல இடங்களில் வெப்பசலன மழை இருக்கும்...

இரு நாட்களாக கடலோர பகுதிகளில் ஒரளவிற்கு நல்ல மழை பதிவாகியுள்ளது. டெல்டா பகுதிகளில் பரவலாக மிக நல்ல மழை பதிவாகியுள்ளது.. கொங்கு பகுதிகளில் சற்று பரவலாக லேசான மழை பதிவாகியுள்ளது... சிஸ்டத்தின் தென்மேற்கு பகுதிகளில் சற்று கன மழை பதிவாகியுள்ளதை படங்கள் மூலம் பார்க்க முடிகிறது...

இலங்கை வரை வலுவான ஈரப்பதம் கிடைத்தது,டெல்டாவிற்கு கூட ஒரளவிற்கு நல்ல ஈரப்பதம் கிடைத்தது..

ஒருவேளை புயல் (வண்டி) வடக்கே போகமல் மேற்கு தென் மாவட்டம்/நம்மை நோக்கி வந்திருந்தால் அதற்கு தேவையான ஈரப்பதம் (டீசல்) அரபிக்கடலில் இருந்து கிடைத்திருக்கும். வண்டியும் நன்றாக ஓடியிருக்கும்(எங்களுக்கு மழை கிடைத்திருக்கும்) புயல் (வண்டி) வடக்கே போவதால் அரபிக்கடலின் டீசல்(ஈரப்பதம்) கிடைக்காமலும், வங்க கடலில் டீசல் ( ஈரப்பதம்) இல்லாததால் வண்டி (புயல்) வலுவிழந்து வடக்கு மாவட்டங்களுக்கு பெரிதாக பிரயோசனம்இல்லாமல் போகிறது.. இதற்கு பேசாம வண்டி மேற்கேயே வந்திருக்கலாம்...😁

புயல் வட இலங்கையில் வடமேற்கு/வடக்கு நோக்கி நகர்ந்து வருவதால் டெல்டாவை நோக்கி வலுவான மேகங்கள் பதிவாகிறது..சிஸ்டம் வலுவிழக...
29/11/2025

புயல் வட இலங்கையில் வடமேற்கு/வடக்கு நோக்கி நகர்ந்து வருவதால் டெல்டாவை நோக்கி வலுவான மேகங்கள் பதிவாகிறது..

சிஸ்டம் வலுவிழக்காததால் டெல்டா ஒட்டி வடக்கு, சற்று வடமேற்கில் நகர வாய்ப்புள்ளது.. இதனால் டெல்டா முதல் சென்னை வரை மழை கன/மிக கன மழை இருக்கும்...ஒரிரு இடங்களில் சற்று தீவிர மழைப்பொழிவும் இருக்கும்...

கொங்கு பகுதியை பொருத்த வரை கிட்டத்தட்ட டெல்டா ஒட்டி செல்ல வாய்ப்புள்ளதால் கொங்கு பகுதிக்கு இன்று (nov 29) சற்று பரவலாக/பரவலாக லேசான மழையும், சில இடங்களில் மிதமான மழையும், வடகிழக்கு கொங்கு பகுதிகளில் ஒரிரு இடங்களில் சற்று கன/கன மழை இருக்கலாம்.. இது கிழக்கு கொங்கு பகுதியான கரூருக்கும் பொருந்தும்..

சிஸ்டம் வடக்கே சென்று வலுவிழந்த பிறகு (மழைக்கார்த்திகை)கார்த்திகை தீபம் வரை Dec 3வரை கொங்கு பகுதிகளில் ஆங்காங்க சில,பல இடங்களில் மழை இருக்கும்... ஒரிரு இடங்களில் மிதமான/சற்று கன மழை வரை இருக்கலாம்... இந்த தேதிவரை தமிழகத்தின் மற்ற பகுதிகளுக்கும் மழை இருக்கும்...

வடக்கு இலங்கையில் இருந்து வடக்கு/வடமேற்கில் நகரும்போதே கொங்கு பகுதியை நோக்கி லேசான/மிதமான மேகங்கள் நகர்ந்து வருகிறது.... அமராவதி அணை , அதை சார்ந்த துணை நதிகளுக்கும் மிதமான மழை இருக்கலாம்..

இந்த சிஸ்டம் வடக்கு நோக்கி நகரும் போது வலுவிழந்தால் டெல்டாவிற்கு வடக்கே- சென்னைக்கு இடையே கரையை கடக்கவும் வாய்ப்புள்ளது ஆனால் உறுதியல்ல...

புயலானது வடக்கு இலங்கையில் வலுவிழக்காமல் வடக்கு/வடமேற்கு திசையில் மெல்ல நகர்ந்தது வருகிறது... நாம் நேற்று பதிவிட்ட பதிவி...
28/11/2025

புயலானது வடக்கு இலங்கையில் வலுவிழக்காமல் வடக்கு/வடமேற்கு திசையில் மெல்ல நகர்ந்தது வருகிறது...

நாம் நேற்று பதிவிட்ட பதிவில் புயலானது வலுவிழக்காவிட்டால் சிஸ்டம் வடக்கு நோக்கி நகர்ந்து டெல்டா முதல் வட மாவட்டங்கள் வரை பரவலாக நல்ல மழை இருக்கும் என்றும் சிஸ்டம் வலுவிழந்தால் மன்னார் வளைகுடா அல்லது டெல்டா வில் கரையை கடந்து மேற்கு நோக்கி நகர்ந்தால் கொங்கு பகுதிக்கு சற்று அதிக வாய்ப்புள்ளதாக பதிவிட்டு இருந்தோம்... (உறுதியான தகவல் அல்ல மழைக்காரணிகளின் படி தோரயமான எதிர்பார்ப்பு என்று பதிவிட்டு இருந்தோம்)

புயலுக்கு வங்ககடலின் வலுவான ஈரப்பத காற்று கிடைக்காததாலும், இலங்கை நிலப்பரப்பு வழியாக வடக்காக நகரும்போது புயல் வலுவிழக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது...

ஆனால் இதுவரை பெரிதாக சிஸ்டம் வலுவிழக்காமல் வடக்கு/வடமேற்கில் நகர்ந்துவருகிறது.. இவ்வாறே தொடர்ந்து சிஸ்டம் நகர்ந்தால் டெல்டா முதல் சென்னை வரை நல்ல மழைக்கு வாய்ப்புள்ளது...

ஒருவேளை சிஸ்டம் சற்று வலுவிழந்தால் டெல்டா அல்லது டெல்டாவிற்கு வடக்கே கரையை கடக்க வாய்ப்பிருக்கிறது... இவ்வாறு சூழல் உருவானால் கொங்கு பகுதிக்கு சில இடங்களில் லேசான/மிதமான மழை இருக்கும்... வடகிழக்கு , கிழக்கு கொங்கு பகுதிகளில் சற்று கன மழை வரை இருக்க வாய்ப்புள்ளது... ஒருவேளை சிஸ்டம் வலுவிழக்காமல் வடக்கே நகர்ந்தால் டெல்டா முதல் சென்னை வரை மட்டுமே மழைக்கு சாதகமாக இருக்கும்... அதிக எதிர்பார்ப்பு வேண்டாம்.. முழுமையான வங்ககடல் பருவ காற்றை பசுபிக் பெருங்கடல் சிஸ்டம் தடுப்பதால் மேக உற்பத்தி குறைவாக உள்ளது... சிஸ்டம் டெல்டா ஒட்டி வடக்கு/வடமேற்கில் நகர்ந்தாலும் கொங்கு பகுதிகளில் லேசான/மிதமான மழை இருக்கலாம்...

நாளை சிஸ்டத்தின் நகர்வு, கரையை கடக்கும் இடம் தெளிவாக தெரியும்... சிஸ்டத்தின் நகரும் பாதை மதில் மேல் பூனையை போல உள்ளது.. நாளை சிஸ்டம் வலுவிழக்குமா, வலுவிழக்காத என்று பார்ப்போம்..

திருப்பூர் மாவட்ட தெற்கு பகுதி விவசாய நண்பர்கள் கடலை விதைக்க/போட கேட்டீருந்தீர்கள்.... சிஸ்டம் வலுவிழக்காவிட்டால் கொங்கு பகுதிக்கு சாதகமாக இருக்காது... இதனால் கடைலையை போடுவதே நல்லது... ஒருவேளை சிஸ்டம் வலுவிழந்தால் மட்டும் அதன் நகரும் பாதையை பொருத்து கொங்கு பகுதிக்கு மழை இருக்கும், வலுவிழக்காவிட்டால் இருக்காது.. இதனால் கடலை விதைப்பது உங்கள் முடிவு...... நாளை மாலை,இரவு உறுதிபடுத்தலாம்..

சிஸ்டம் யாருக்கு...? அரபிக்கடல் வெப்பநிலை உயர்வு,MJO,wd, hpa போன்ற மழைக்காரணிகளின் படி மத்திய இலங்கையில் வடக்கு/ வடமேற்க...
27/11/2025

சிஸ்டம் யாருக்கு...?


அரபிக்கடல் வெப்பநிலை உயர்வு,MJO,wd, hpa போன்ற மழைக்காரணிகளின் படி மத்திய இலங்கையில் வடக்கு/ வடமேற்கு நோக்கி நகரும் புயலானது இலங்கை நிலப்பரப்பின் மீது மேல் பயணித்து வடக்கு/வடமேற்கில் நகர்ந்தால் புயலானது சற்று வலுவிழக்க வாய்ப்புள்ளது.. அவ்வாறு வலுவிழந்தால் சிஸ்டமானது மன்னார் வளைகுடா அல்லது டெல்டா நோக்கி வடமேற்கில் நகர சற்று அதிக வாய்ப்புள்ளது..

ஒருவேளை புயல் வலுவிழக்காமலே வடக்கு, சற்று வடமேற்கில் நகர்ந்தால் டெல்டா ஒட்டி/டெல்டாவிற்கு சற்று கிழக்கே வட மாவட்டங்களை நோக்கி நகரவும் வாய்ப்பிருக்கிறது..

அதவாது மத்திய இலங்கையிலிருந்து சிஸ்டம் வடக்கு/வடமேற்கில் நகரும் போது வலுவிழந்தால் மன்னார் வளைகுடா, டெல்டா மாவட்டங்களை கடந்த வடமேற்கில் நகரவும் வாய்ப்புள்ளது... சிஸ்டம் வலுவிழக்காவிட்டால் டெல்டா முதல் வட மாவட்டங்களுக்கே சாதகமாக இருக்கும்..

இது கணினி சார்ந்த தோரயமான மதிப்பீடு மட்டுமே... உறுதியான தகவல் இல்லை... ஆனால் கொங்கு பகுதிக்கும் சாதகமாக அமையவே சற்று அதிக வாய்ப்பிருக்கிறது.. சிஸ்டம் கடக்கும் பாதை சற்று மாறிக்கொண்டே உள்ளது...

நாளை அதன் கடக்கும் பாதை நன்றாக/தெளிவாக தெரியும்... அப்போது விரிவாக பதிவிடலாம்..

மழைக்காரணிகளின் படி கொங்கு பகுதிக்கும் சாதகமாக சற்று அதிக வாய்ப்பு தெரிகிறது.. அவ்வாறு கொங்கு பகுதிக்கும் சிஸ்டம் சாதகமாக அமைந்தால் சற்று பரவலாக கடும் வறட்சி வராதளவிற்கு ஒரளவிற்கு பரவலாக நல்ல மழை கிடைக்கலாம்... இதை இப்போது உறுதிபடுத்த இயலாது... நாளை உறுதிபடுத்தலாம்.. இயற்கை கொங்கு பகுதியை முற்றிலும் ஏமாற்றாது என்று நம்போம்.. அதற்கு மேல் இயற்கையின் கையில் ...

Address


Alerts

Be the first to know and let us send you an email when Kongunadu Weatherman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share