Kongunadu Weatherman

  • Home
  • Kongunadu Weatherman

Kongunadu Weatherman TN &Kongu belt ன் மழை நிலவரங்கள் பதிவிடப்படும். This page is not official. Official website is IMD

வடக்கு வங்ககடலில் அடுத்தடுத்து உருவாகும் சற்று வலுகுறைந்த  தாழ்வு நிலை காரணமாக  இந்தாண்டு அவ்வப்போது பருவமழை  தீவிரமாக இ...
25/06/2025

வடக்கு வங்ககடலில் அடுத்தடுத்து உருவாகும் சற்று வலுகுறைந்த தாழ்வு நிலை காரணமாக இந்தாண்டு அவ்வப்போது பருவமழை தீவிரமாக இருக்கிறது..

கடந்த ஒரிரு நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மிதமான/கன மழை அவ்வப்போது பெய்வதால் தமிழக மேற்கு தொடர்ச்சி மலை சார்ந்த அணைகள் வேகமாக நிரம்பி வருவது மகிழ்ச்சியளிக்கிறது..

இந்நிலையில் இன்றும்/நாளையும் (June 26,27) பருவமழை கேரளா, கர்நாடக உள்ளிட்ட மேற்கு தொடர்சசி மலைப்பகுதிகளில் மிதமான/கன மழை இருக்கும்... சமயத்தில் சற்று மிக கன மழையும் இருக்கும். ஆனால் தீவிர மழை இருக்காது.. அதன்பிறகும் வலுகுறைந்த சிஸ்டங்களால் அவ்வப்போது பருவமழை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மிதமானளவில் தீவிரமாக இருந்துகொண்டு இருக்கும்.. அதே சமயம் தமிழகத்தில் காற்று பகுதியை தவிர சில இடங்களில் வரும் நாட்களில் வெப்பசலன மழை இருக்கும்.. பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, நெகமம் போன்ற சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான/ கன மழை வரை பருவமழை இருக்கும்.. அதை சார்ந்த அறுவடை விவசாய்கள் கவனமாக இருக்கவும்....

ஜூலை, ஆகஸ்ட்டிலும் அவ்வப்போது பருவமழை ஒரளவிற்கு தீவிரமாக இருக்கும் என்பதால் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை சார்ந்த பெரும்பாலான அணைகள் நிரம்ப வாய்ப்பிருக்கிறது..

கடந்த பல நீண்ட காலத்திற்கு பிறகு இந்தாண்டு தென்மேற்கு பருவமழையானது அவ்வப்போது சீராக பெய்து வருகிறது.. கடந்த ஒருசில ஆண்டுகள் தென்மேற்கு பருவமழையானது மத்தியில்(ஜூலை பாதிக்கு மேல் ஆகஸ்ட் 10 வரை) தீவிரமடைந்து 3 மாதம் பெய்ய வேண்டிய மழை 4,5 நாட்களிலையே பெரும் மழை பெய்துவிட்டு போனது.. ஆனால் இந்தாண்டு தென்னிந்தியாவில் பெரிதாக வெள்ள பாதிப்பு இல்லாமல் சீராக பெய்கிறது. இது வானிலையில் மாற்றம்.. முதல் சுற்று மழை மட்டும் தீவிரமாக இருந்தது.. ஜூலை இறுதி, ஆகஸ்ட்டில் தீவிரமாக இருக்குமா என்று பார்ப்போம்

அதேபோல இந்தாண்டு கார்மழை, தென்மேற்கு பருவமழையும் மிகவும் முன்கூட்டியே தொடங்கியதும் வானிலையில் மாற்றம் தான்.. இந்த மாற்றம் வரும் மழைக்காலங்களில் நல்ல மாற்றமாக இருக்கும் என்று இயற்கையை நம்புவோம்..

இவ்வாறு அவ்வப்போது தொடர்ந்து மேற்கே பருவமழை நீடிப்பதால் கொங்கு பகுதியில் காற்று பகுதி உட்பட ஆடி, ஆவணியில் வெப்பசலன மழை ஒரிரு சுற்றுவாது பரவலாக கிடைக்கலாம் அல்லது புரட்டாசிகால மழை முன்கூட்டிய தொடங்க வாய்ப்பிருக்கிறது.. இது ஒர் அனுமானம் மட்டுமே உறுதிபடுத்த இயலாது. வரும் வாரங்களில் பார்ப்போம் மக்களே...

தீவிரமடைகிறது தென்மேற்கு பருவமழை கடல் வெப்பநிலை  மற்றும் நம் கட்டத்தில் medium level ல் தொடரும் MJO போன்ற மழைக்காரணிகளால...
12/06/2025

தீவிரமடைகிறது தென்மேற்கு பருவமழை

கடல் வெப்பநிலை மற்றும் நம் கட்டத்தில் medium level ல் தொடரும் MJO போன்ற மழைக்காரணிகளால் வங்க கடல் & தென்சீனா கடலில் உருவாகியிருக்கும் வலுக்குறைந்த தாழ்வு நிலையானது சற்று மிக வலுவான ஈரப்பத மிகுந்த அரபிக்கடல் காற்றை ஈர்ப்பதால் தென்மேற்கு பருவமழையானது கேரளா, கர்நாடக உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் ஜூன் 13/14 முதல் 17/18வரை தீவிரமாக இருக்கும்..

குறிப்பாக ஜூன் 14 to 16 வரை அல்லது ஜூன் 15 to 17வரை பருவமழை தீவிரத்தில் இருக்கும்..

இதனால் குமரி, நெல்லை, தென்காசி, வால்பாறை, நீலகிரி, வயநாடு, குடகு போன்ற பகுதிகளில் கன/மிக கன மழை மேலே குறிப்பிட்ட தேதிகளில் இருக்கும்..

நீலகிரி மலைப்பகுதியின் மேற்கு சரிவுகளில் அவலாஞ்சி போன்ற ஒரிரு இடங்களில் ஜூன் 15,16,17ல் ஒரு நாள் சற்று தீவிர மழைப்பொழிவு இருக்கலாம் உறுதியல்ல ...

இதனால் வால்பாறை, மூணாறு, நீலகிரி, வயநாடு, கோவா போன்ற மலைப்பிரதேசங்களுக்கு பயணம் செய்வதை ஜூன் 18வரை தவிர்ப்பது நல்லது...

இதனால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி சார்ந்த தமிழக அணைகளுக்கு நீர்வரத்து படிபடியாக அதிகரிக்கும்... அமராவதி, திருமூர்த்தி, ஆழியாறு, பில்லூர்- பவானி, சிறுவானி, காவேரி உட்பட.. ஒரிரு ஆறுகளில் வெள்ளப்பெருக்கும் ஏற்படலாம்.. பவானி, காவேரி நீர்பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை இருக்கும்.. இந்த சுற்றில் அமராவதி அணை நிரம்பி உபரி நீர் திறக்க வாய்ப்பிருக்கிறது..

கொங்கு பகுதியை பொருத்த வரை மேற்கு திசை காற்று வலுவாக ஈர்ப்பதை பொருத்து கோவை மாவட்டம் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, நெகமம் போன்ற பகுதிகளில் மிதமான/கன மழையும், கோவையில் மிதமான/சற்று கன மழையும் மற்றும் அதற்கு கிழக்கு உள்ள கொங்கு பகுதிகளில் சாரல்/லேசான மழை வரையும். சமயத்தில் மிதமான மழை வரை கூட கிடைக்க வாய்ப்பிருக்கிறது.. இதனால் வெங்காயம், சோளம் போன்ற அறுவடை விவசாய்கள் கவனமாக இருக்கவும்.. கொங்கு பகுதிகளில் மேற்கு திசை காற்று வலுப்பெற்றிருக்கும்... வெப்பநிலை குறைந்திருக்கும். தமிழகத்தில் மற்ற பகுதி உட்பட..

மேற்கு திசை காற்றின் வேகத்தை பொருத்து நாம் எதிர்பார்த்த மழையில் சற்று கூட/குறைய இருக்கும்..

தமிழகத்தில் ஜூன் 8/9 முதல் ஏறத்தாழ 12வரை வெப்பசலன மழை இருக்கும்.. குறிப்பாக வட மாவட்டங்கள், திருச்சி, மதுரை மண்டலம் மற்ற...
06/06/2025

தமிழகத்தில் ஜூன் 8/9 முதல் ஏறத்தாழ 12வரை வெப்பசலன மழை இருக்கும்.. குறிப்பாக வட மாவட்டங்கள், திருச்சி, மதுரை மண்டலம் மற்றும் நம் கொங்கு பகுதிகளில் காற்று பகுதியை தவிர வடக்கு மற்றும் வடகிழக்கு கொங்கு பகுதி, மேற்கு திசை காற்று குறைவாக இருந்தால் கரூர், திண்டுக்கல் மாவட்டம் போன்ற பகுதிகளில் மேலே குறிப்பிட்ட படி ஆங்காங்க வெப்பசலன மழை இருக்கும்.. ஒரிரு இடங்களில் கன மழை இருக்கும்.

தென் மாவட்டம் மற்றும் கொங்கு பகுதி காற்று பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு மிக குறைவு.... ஒருவேளை வடக்கு/வடமேற்கு கொங்கு பகுதியில் உருவாகும் மேகங்கள் தென்கிழக்கு(காற்று பகுதி) நோக்கி நகர்ந்தால் மட்டுமே மழை இருக்கும். இல்லாவிட்டால் இருக்காது...

இதனால் காற்று பகுதி விவசாய்கள் வெங்காயம், சோளம் போன்ற அறுவடை பணிகளை தொடரலாம்.. மற்ற பகுதி அறுவடை விவசாய்கள் சற்று கவனமாக இருக்கவும்..

மீண்டும் medium level MJO இந்தியா பெருங்கடலுக்கு வருகை தருவதால் கேரளா, கர்நாடக உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தோரயமாக ஜூன் 14/15 முதல் மீண்டும் பருவமழை தீவிரமடைய இருக்கிறது.. இதை வரும் நாட்களில் பார்ப்போம்...

அரபிக்கடலின் வறண்ட காற்று காரணமாக தமிழகத்தில் ஜூன் 10/12 வரை வெப்பநிலை உயர்ந்து காணப்படும். அதன்பின் குறையும்.

கேரளா, கர்நாடக உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி  மலைப்பகுதிகளில் கன/மிக கன மழை பதிவாகி வருகிறது.. இதனால் தமிழக மேற்கு தொடர்ச்சி...
28/05/2025

கேரளா, கர்நாடக உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கன/மிக கன மழை பதிவாகி வருகிறது.. இதனால் தமிழக மேற்கு தொடர்ச்சி சார்ந்த அணைகளுக்கு நீர்வரத்து சீராக வந்துகொண்டுள்ளது..

இந்நிலையில் இந்த மழையானது நாளை, நாளை மறுநாள்(மே 29,30) வரை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தீவிரமாக இருக்கும்..

குறிப்பாக நீலகிரி மலைப்பகுதி மேற்கு சரிவு, வால்பாறை, நெல்லை, தென்காசி, குமரி போன்ற பகுதிகளில் மே 30 வரை கன/மிக கன மழை தொடரும்.. மே 29,30ல் ஏதாவது ஒர் நாள் தீவிரத்தின் உச்சத்தில் இருக்கலாம்.. மே 31 முதல் மேற்கே பருவமழை படிபடியாக குறைந்துவிடும்.. ஜூன் 1-3 மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் லேசான/மிதமான மழையாக இருக்கும்.

இதனால் தமிழக அணைகளுக்கு சீரான நீர்வரத்து மே இறுதி வரை தொடரும்.. அதன்பின் படிபடியாக நீர்வரத்து குறையும்..

கொங்கு பகுதிகளில் நாளை, நாளை மறுநாள் கோவை மாவட்ட தெற்கு பொள்ளாச்சி, நெகமம், கிணத்துக்கடவு போன்ற பகுதிகளில் மிதமான/கன மழை இருக்கும்.. கோவை லேசான/மிதமான மழை இருக்கும்.. அதற்கு கிழக்கில் உள்ள கொங்கு பகுதிகளில் லேசான/மிதமான மழை இருக்கும்.. கொங்கு பகுதியில் அதற்கு பிறகு ஜூன் 1 முதல் லேசான/மிதமான மேற்கு திசை காற்றுடன் வெயில் வந்துவிடும்.. கடந்த 4,5 நாட்களாக குளுகுளு என்று climate நன்றாக இருந்தது..

கன & மிக கன மழைக்கான சிறப்பு பதிவுநாம் எதிர்பார்த்தவாறு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் கேரளாவில் மழை வெளுத்து வாங்க...
26/05/2025

கன & மிக கன மழைக்கான சிறப்பு பதிவு

நாம் எதிர்பார்த்தவாறு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் கேரளாவில் மழை வெளுத்து வாங்கி வருகிறது.. இன்று பருவமழை தீவிரத்தின் உச்சத்தில் இருந்தது.. ஒருசில ஆறுகளில் எதிர்பார்த்தவாறு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.. ஓரிரு இடங்களில் நிலச்சரிவும் இருந்தது.

இதுபோன்ற தொடர் கன மழைக்கும் மழைக்காரணிகள் சிறப்பாக இருந்ததே காரணம். குறிப்பாக கடல் மேற்பரப்பு வெப்பநிலை சாதகம், ஈரப்பதமான MJO அலைவு இதனால் அரபிக்கடல் சிஸ்டம்& வங்ககடலில் வலுகுறைந்த சிஸ்டம் என இரு சிஸ்டங்கள் மற்றும் அரபிக்கடல் சிஸ்டம் மும்பையை ஒட்டி கிழக்கு நோக்கி நகர்ந்து செல்வதும் இந்த நல்ல மழைக்கு காரணம். மும்பை உட்பட..

கடந்த முதல் பதிவில் நீலகிரியின் மேற்கு சரிவுகளின் அவலாஞ்சி போன்ற ஒரிரு இடங்களில் தீவிரமழைப்பொழிவும் இருக்கலாம்.. ஆனால் உறுதிபடுத்த இயலாது நிகழ்நேரத்தில் பார்க்கலாம்என்று பதிவிட்டுருந்தோம். சற்று மிக வலுவான மேற்கு திசை காற்றால் நீலகிரியின் மேற்கு சரிவில் தீவிர மழைப்பொழிவு பதிவாகியதை படத்தில் பாருங்கள். அவலாஞ்சி உட்பட... நாளை இந்த மழையளவு சற்று கூடியே இருக்கும்..

பில்லூர், நொய்யல் போன்ற ஒரிரு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.. இது மே 29/30க்குள் மேலும் ஒருசில ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது.. தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி அணை சார்ந்த கிட்டதட்ட அனேக அணைகளுக்கும் நீர்வரத்து ஒரளவிற்கு அதிகரிக்கலாம்.. ஒருசில அணைகளுக்கு நல்ல நீர்வரத்து இருக்கும்.

தமிழகத்தில் நீலகிரி மேற்கு சரிவுகள் மற்றும் வால்பாறை கன/மிக கன மழை ஏறத்தாழ மே 28,29வரை தொடரலாம்.. நீலகிரியின் அவலாஞ்சி போன்ற மேற்கு சரிவு பகுதிகளில் ஒரிரு இடங்களில் தீவிர மழைப்பொழிவு இருக்கலாம். அதேபோல நெல்லை, தென்காசி, குமரி போன்ற பகுதிகளில் மே 28,29 கன/மிக கன மழை இருக்கலாம்.. இதனால் ஆற்றங்கரையோரம் இருப்பவர்கள் கவனமாக இருக்கவும்.. அதேபோல மேற்கு தொடர்ச்சி மலைப்பிரதேசங்களுக்கு மே இறுதி பயணத்து தவிர்க்கவும். கேரளா மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் சில இடங்களில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட வாய்ப்புள்ளது.

இந்த மழையானது 2019,2021ல் பெய்த பெரும் மழையில் ஏறத்தாழ பாதியளவு பெய்துவிட வாய்ப்புள்ளது ஆனால் உறுதியல்ல..

ஜூன் மாதம் பெய்ய வேண்டிய மழை இந்த ஒர் முதல் சுற்றிலையே கிடைத்து விட வாய்ப்புள்ளது.. மே மாதத்தில் இது அரிதான பருவமழை ..

கொங்கு பகுதி

நம் கொங்கு பகுதிகளில் கோவை மாவட்டத்தில் தெற்கு பகுதியான பொள்ளாச்சி, நெகமம், கிணத்துக்கடவு போன்ற சுற்று வட்டார பகுதிகளில் மிதமான/கன மழையும், வடக்கு பகுதிகளில் மிதமான/சற்று கன மழையாக இருக்கும்.. திருப்பூர் மாவட்ட தென்மேற்கு பகுதியான உடுமலை சுற்று வட்டாரம், திருமூர்த்தி மலை போன்ற பகுதிகளிலுள்ள மிதமான/கன மழை இருக்கும்... அதற்கு கிழக்கே உள்ள பகுதிகளில் லேசான/மிதமான மழை இருக்கும்.. கொங்கு பகுதிகளில் இதுபோன்ற பரவலாக லேசான/மிதமான மழை 2019ல் தென்மேற்கு பருவமழையின் போது பெய்தது குறிப்பிடத்தக்கது..

மே 27 to 29 வரை அவ்வப்போது பருவமழை மேற்கே தீவிரமாக இருக்கும். மே 30 சற்று குறைந்தும், மே 31ல் இருந்து படிபடியாக மேற்கே மழை குறைந்துவிடும். மாற்றமிருந்தால் இடையில் பதிவிடலாம்.

தொடர்ந்து தீவிரத்தில் இருக்கும் பருவமழை...இரு சிஸ்டமும் அரபிக்கடலின் ஈரப்பதத்தை  வலுவாக கேரளா, கர்நாடக மற்றும் மேற்கு தொ...
25/05/2025

தொடர்ந்து தீவிரத்தில் இருக்கும் பருவமழை...

இரு சிஸ்டமும் அரபிக்கடலின் ஈரப்பதத்தை வலுவாக கேரளா, கர்நாடக மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி நோக்கி குவிக்கப்படுவதால் மேலே சொன்ன பகுதிகளில் அவ்வப்போது பரவலான வலுவான மேகங்கள் உருவாகி கன/மிக கன மழை பதிவாகி வருகிறது..

இந்த மழையானது மே இறுதி வரை தொடரும், ஜான் 1-3 லேசான/மிதமான மழையாக இருக்கலாம்..

மே 25/26 முதல் ஏறத்தாழ மே 28/29வரை பருவமழை மேற்கே தீவிரமாக இருக்கும்..

இதனால் நீலகிரியின் மேற்கு சரிவு பகுதிகள்(அவலாஞ்சி, பந்தலூர், தேவால,கூடலூர்,முக்கூர்த்தி, அப்பர் பவானி), வால்பாறை,சின்னக்கல்லாறு, வயநாடு, குடகு போன்ற பகுதிகளில் கன மழை இருக்கும்... சமயத்தில் ஒரிரு இடங்களில் மிக கன மழை இருக்கும். அவலாஞ்சி உட்பட...

இதனால் தமிழக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்கும்.. காவேரி, பவானி, சிறுவானி, அமராவதி, பரம்பிக்குளம், சோலையாறு உட்பட.. ஒரிரு ஆறுகளில் சிறு வெள்ளப்பெருக்கும் ஏற்படலாம் ...

இதே போல வரும் நாட்களில் நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, வால்பாறை பகுதிகளுக்கு கன/மிக கன மழை இருக்கும்.. இதனால் அதை சார்ந்த அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்கும்..

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கன/மிக கன மழை தொடரும் என்பதால் சில இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் நீலகிரி மலைப்பகுதி மேற்கு சரிவு, வால்பாறை, மூணாறு, வயநாடு, கோவா, வெள்ளிங்கிரி மலை, குற்றாலம், குமரி போன்ற மேற்கு தொடர்ச்சி மலைபிரதேசங்களுக்கு செல்வதை இம்மாத இறுதி வரை தவிர்க்கவும்.

கொங்கு பகுதியை பொருத்த வரை மேற்கு கொங்கு பகுதியான கோவையில் மிதமான மழையும், பொள்ளாச்சி, நெகமம், கிணத்துக்கடவு போன்ற பகுதிகளில் அவ்வப்போது மிதமான/கன மழை வரை கிடைக்கலாம்.. அதற்கு கிழக்கே உள்ள கொங்கு பகுதிக்கு அவ்வப்போது லேசான/மிதமான மழை இருக்கும்.. மேற்கு திசை காற்று வலுப்பெற்றுருக்கும் ...

ஏதாவது மாற்றமிருந்தால் இடையில் பதிவிடலாம்..

தீவிரமடைகிறது தென்மேற்கு பருவமழை(சற்று நீண்ட பதிவு முழுமையாக படிக்கவும்) MJO ஈரப்பத அலைவு இந்தியா பெருங்கடலில் இருப்பது,...
23/05/2025

தீவிரமடைகிறது தென்மேற்கு பருவமழை

(சற்று நீண்ட பதிவு முழுமையாக படிக்கவும்)
MJO ஈரப்பத அலைவு இந்தியா பெருங்கடலில் இருப்பது, கடல் மேற்பரப்பு வெப்பநிலை மற்றும் அரபிக்கடல் மற்றும் வங்ககடலில் உருவாகி வடக்கு நோக்கி நகரும் சிஸ்டங்களால் பருவகாற்றை வலுவாக கிழக்கு நோக்கி ஈர்ப்பதால் கேரளா, கர்நாடக உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் சற்று மிக வலுவான ஈரப்பதம் குவிக்கப்படுகிறது..

இதனால் 10 நாட்கள் முன்கூட்டியே தென்மேற்கு பருவமழை தொடங்கியது. மே 23 இரவு முதல் மே இறுதி வரை பருவமழை கேரளா முதல் ஏறத்தாழ மும்பை வரை தீவிரமாக இருக்கும்... ஜான் 1-3 வரை லேசான/மிதமான பருவமழையாக இருக்கும். சாதகமற்ற மழைக்காரணிகளால் ஜூன் மாதத்தில் ஏறத்தாழ 10/15 வரை பருவமழை குறைந்திருக்க வாய்ப்புள்ளது..அப்போது தமிழகத்தில் வெப்பசலன மழை இருக்கலாம்.

மே 25/26 முதல் ஏறத்தாழ மே 28/29 வரை பருவமழை மேற்கே தீவிரமாக இருக்கும்..

இதனால் கேரளா, கர்நாடக மற்றும் தமிழக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இன்று மாலை/இரவு முதல் படிப்படியாக பருவமழை அதிகரிக்கும்.. கேரளா, கர்நாடகவில பரவலாக நல்ல மழை இருக்கும்.. சில இடங்களில் வெள்ளப்பெருக்கு கூட ஏற்பட வாய்ப்புள்ளது. அதை நிகழ்நேரத்தில் தான் மேக உற்பத்தியை பொருத்து உறுதிபடுத்த இயலும்..

நீலகிரி, வால்பாறை, மூணாறு, நெல்லை, வயநாடு போன்ற இன்னும் ஒரிரு மேற்கு மேற்கு தொடச்சி மலைப்பகுதிகளில் கன/மிக கன மழை வரை இருக்கும்.. அவலாஞ்சி போன்ற ஏதாவது ஒரிரு இடங்களில் தீவிர மழையும் இருக்கலாம். ஆனால் தற்போது உறுதிபடுத்த இயலாது. நிகழ்நேரத்தில் பார்ப்போம்..

இதனால் தமிழக அணைகளுக்கு நீர்வரத்து படிபடியாக அதிகரிக்கும். காவேரி, பவானி, அமராவதி, சிறுவானி, பரம்பிக்குளம், சோலையார் போன்ற ஏறத்தாழ அனேக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்கும்.

கொங்கு பகுதிகளி்ல் அவ்வப்போது சாரல்/லேசான மழை இருக்கும்.. மிக வலுவான காற்றை ஈர்ப்பதை பொருத்து லேசான/மிதமான மழை இருக்கலாம்.. கோவை தெற்கு பொள்ளச்சி சுற்று வட்டாரங்களில் மிதமான/கன மழை வரை இருக்கலாம்.. கொங்கு பகுதிகளில் இன்று இரவு முதல் மேற்கு திசை காற்று வலுப்பெற்று இருக்கும்..

இதனால் சுற்றுலா பயணிகள் மேற்கு தொடர்ச்சி மலைப்பிரதேசங்களுக்கு (வெள்ளியங்கிரி, நீலகிரி மேற்கு, மூணாறு, வால்பாறை, கேரளா ) போன்ற பகுதிகளுக்கு செல்வதை மே இறுதிவரை தவிர்ப்பது நல்லது.

கணினி சார்ந்த மாதிரிகள் மேற்கு தொடர்ச்சியில் தீவிர மழைப்பொழிவை காட்டுகிறது. ஆனால் எந்தளவிற்கு இருக்கும் என்று நிகழ்நேரத்தில் தான் தெரியவரும்.

#கொங்கு பகுதியை மே மாதத்தில் ஏமாற்றி விடைப்பெற்ற கார்மழை

ITCZ, MJO, கடல் மேற்பரப்பு வெப்பநிலை, சிஸ்டத்தின் ஈரப்பதம் என அனேக மழைக்காரணிகளும் சாதகமாக இருந்தும் நம் கொங்கு பகுதி, தென் உள் மாவட்டத்தை மே மாதத்தில் ஏமாற்றியது..

இவ்வளவு மழைக்காரணிகளும் சாதகமாக இருப்பதால் தான் கொங்கு பகுதிக்கு கடந்த பதிவில் இறுதிகட்ட கார்மழை பரவலாக நல்ல மழை கிடைக்கும் என்றும், தீவிரமாக இருக்கும் என்றும், மேகங்கள் நீண்ட தூரம் பயணிக்கும் என்றும் கூறியிருந்தோம்... அதேபோல தீவிரமாகவும் இருந்தது, மேகங்களும் நீண்ட தூரம் பயணித்து பெய்தது.(திருவண்ணா மலை, வேலூரில் உருவான மேகங்கள் டெல்டாவையும் தாண்டி தெற்கு/தென்கிழக்கில் நகர்நது பெய்தது.) ஆனால் நமக்கு பரவலாக இல்லை.. மத்திய மாவட்டங்கள், கடலோரம், கடலோர உட்பகுதி, டெல்டா, வட மாவட்டங்கள், வட உள் மாவட்டங்கள் என பரவலாக 3 முறை பரவலாக நல்ல மழை கிடைத்தது..

கொங்கு பகுதிக்கு இறுதிகட்ட கார்மழை ஏமாற்றியது எப்படி

மே மாதத்தில் பெரும்பாலும் மேற்கு திசை காற்று வலுவாக வீசும். இதனால் காற்று குவிதலானது வட உள் மாவட்டங்களில் தான் குவியும்.. அவ்வாறு வட உள் மாவட்டங்களில் குவிந்து வலுவான பரந்த மேகங்கள் உற்பத்தியாகி அந்த வலுவான மேகங்கள் கொங்கு பகுதியை நோக்கி மேற்கு, தென்மேற்கில் நகர்ந்து கொங்கு பகுதிகளில் பரவலான மழை கிடைக்கும். கடந்த காலங்களிலும் இதுபோன்று தென்மேற்கில் நகர்ந்து பரவலாக நல்ல மழையை கொடுத்திருக்கிறது.

இந்தாண்டும் காற்று குவிதல் வட மாவட்டங்களில் குவிந்து வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் பரவலான வலுவான மேகங்கள் உற்பத்தியாகி மேற்கு/தென்மேற்கு பதிலாக வங்க கடல் சிஸ்டம் காரணமாக கொங்கு பகுதிக்கு வரவேண்டிய மேகங்கள் திசை மாறி தெற்கு/தென்கிழக்கு நோக்கி 3 முறை நகர்ந்து டெல்டா வரை பரவலாக நல்ல மழை இருந்தது..

பொதுவாக கார்மழையானது தமிழகத்தில் நம் கொங்கு பகுதி, மத்திய மாவட்டங்கள், தென் உள் மாவட்டங்களுக்கே அதிகம் பொருந்தும்.. கார்மழை காலத்தில் கடலோர பகுதி மற்றும் அதன் உள் மாவட்டங்களுக்கு பெரிதாக மழை இருக்காது. ஒரிரு முறை மட்டுமே மழை இருக்கும்... ஆனால் இந்த முறை தலைகீழா மாறியது.. கொங்கு பகுதி, தென் உள் மாவட்டத்திற்கு மே மாத மிக குறைவு.. கிழக்கே அதிக மழையை பெற்றது.. சில நண்பர்கள் மேற்கு திசை காற்று காரணமாகவே கொங்கு பகுதிக்கு மழை இல்லை என்று கூறுகிறார்கள். ஆனால் வேலூர், திருவண்ணாமலை போன்ற சுற்று வட்டார மாவட்டங்களில் உருவாகும் மேகங்கள் மேற்கு திசை காற்றை எதிர்த்து மேற்கு, தென்மேற்கு திசையில் மேற்கு திசை காற்றை கிழித்து கொண்டு தென்மேற்கில் நகர்ந்து கொங்கு பகுதியில் நல்ல மழையை தரும். கடந்த காலங்களில் அவ்வாறே நடந்துள்ளதை படத்தில் காணலாம். ஆனால் இந்தாண்டு வங்ககடலின் சிஸ்டத்தின் காற்றின் திசை மழைமேகங்களை தெற்கு/ தென்கிழக்கா நகர செய்தது.. மே மாதத்தில் தமிழக கிழக்கு பகுதிகளில் 5முறை பரவலான மழையும் அதில் 3 முறை மிக பரவலான மழையும் இருந்தது. இதனால் தான் இயல்பை விட மிக அதிக மழை. இதே கொங்கு பகுதிக்கு மே மாதத்தில் ஒர் பரவலான மழை தான் இருந்தது. இதனால் தான் மே மாதத்தில் கொங்கு பகுதிக்கு பற்றாக்குறை.

கிழக்கே கடலோர பகுதி மற்றும் அதன் உள் பகுதிகளில் தற்போது மழை பெரிதாக இருக்காது மாறாக ஆனி, ஆடி, ஆவணியில் மேற்கே பருவமழை தீவிரம் குறைவாக இருக்கும்போது தமிழக கிழக்கு பகுதிகளில் அவ்வப்போது பரவலாக நல்ல மழை இருக்கும்.. அந்த சமயத்தில் நமக்கு பெரிதாக மழை இருக்காது.. ஆவணிக்கு பின் தான் அங்கு மழை குறைந்து நமக்கு புரட்டாசிகால மழை ஆரம்பமாகும்.. ஆனால் இந்த முறை கார்மழையும் நன்றாக பெய்துள்ளது. இனி ஆனி முதல் ஆவணி வரை அங்கு மழை இருக்கும்.. ஆனால் கொங்கு பகுதி மக்கள் பரவலான மழைக்கு புரட்டாசிகால மழை வரை காத்திருக்க வேண்டியுள்ளது..

கொங்கு பகுதிக்கு இயல்பான கார்மழை பதிவாகியுள்ளது. ஆனால் மார்ச், ஏப்ரலில் ஒரிரு முறை பரவலாக பதிவானதே தற்போது இயல்புக்கு வந்துள்ளது.. மே மாதத்தில் கொங்கு பகுதிகளில் சில/பல இடங்களை தவிர்த்து பரவலாக பற்றாக்குறை நிலவுகிறது.. ஆனால் வடகிழக்கு கொங்கு பகுதி, மத்திய மாவட்டங்களில் ஒரளவிற்கு நல்ல மழை பதிவானது.

இந்தாண்டு மேற்கே பருவமழை தீவிரம் மிகவும் குறைந்து இருக்கும்போது. கொங்கு பகுதியில் காற்று பகுதி உட்பட ஒரிரு மழையாவது கிடைக்க வாய்ப்பிருக்கிறது ஆனால் உறுதிபடுத்த இயலாது.. தமிழகத்தில் இந்தாண்டு கார்மழை இயல்பை விட 92% அதிகமாக பெய்துள்ளது.

இந்தாண்டு கார்மழையும், தென்மேற்கு பருவமழையும் முன்கூட்டியே தொடங்கியுள்ளதால் புரட்டாசிகால மழையும் இந்தாண்டு முன்கூட்டியே தொடங்க வாய்ப்பிருக்கிறது..

16/05/2025

சிஸ்டத்தின் முழு ஈரப்பதமும் கிடைப்பதால் கொங்கு பகுதியில் மே 17 to 20/22 வரை கார்மழை தீவிரமாக இருக்கும். பெரும்பாலான தமிழகம் உட்பட.

தீவிரமடையும் இறுதிகட்ட கார்மழைமுன்கூட்டியே தொடங்க இருக்கும் தென்மேற்கு பருவமழைமே 14 இன்று முதல் ஏறத்தாழ  மே 20/23 வரை கா...
14/05/2025

தீவிரமடையும் இறுதிகட்ட கார்மழை

முன்கூட்டியே தொடங்க இருக்கும் தென்மேற்கு பருவமழை

மே 14 இன்று முதல் ஏறத்தாழ மே 20/23 வரை கார்மழை(கோடை மழை) தமிழகத்தில்(கொங்கு பகுதி உட்பட) தீவிரமாக இருக்கும்.

குறிப்பாக நம் கொங்கு மண்டலம், மத்திய மாவட்டங்கள், வட உள் மாவட்டங்கள் மற்றும் தென்மாவட்டங்களில் மேலே குறிப்பிட்ட தேதிகளில் ஆங்காங்கே மழையும், சமயத்தில் பரவலான மழையாகவும், ஒரிரு இடங்களில் கன மழையும், ஏதாவது ஒரிரு இடங்களில் மிக கன மழையும் இருக்கும்.. சில/பல இடங்களை ஒதுக்கவும் செய்யும்.

கார்மழையானது இறுதிகட்டத்தில் இருப்பதால் மே 14 to 20/22வரை ஒரிரு நாட்கள் பரவலாக, தீவிரமாகவும் இருக்கலாம்..

இதனால் சோளம்,எள், வெங்காயம் போன்ற அறுவடை விவசாய்கள் கவனமாக இருக்கவும்..

#தென்மேற்குபருவமழை

இந்தாண்டு தென்மேற்கு பருவமழையானது மே மூன்றாவது வாரத்திலேயே தொடங்குகிறது. அதாவது தற்போதைய சூழலின் படி மே 23 to 27க்குள் கேரளா, கர்நாடக மற்றும் தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்க சாதகமான மழைக்காரணிகள் உருவாகி வருகிறது.. தோரயமாக மே 24/25வாக்கில் தொடங்க வாய்ப்புள்ளது(மாற்றமிருந்தால் இடையில் பதிவிடலாம்)... இதைப்பற்றி விரிவாக வரும் நாட்களில் பார்ப்போம்..

நீண்ட கால பதிவில் பதிவிட்டதுபோல இந்தாண்டும் மழைக்காரணிகள் பருவமழைக்கு சாதகமாக இருப்பதால் கேரளா, கர்நாடக உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இயல்பு/இயல்பை விட சற்று கூடுதல் மழை என்றளவில் இருக்கலாம்.. இதனால் தமிழக அணைகளுக்கு இயல்பான நல்ல நீர்வரத்து எதிர்பார்க்கப்படுகிறது..

அரபிக்கடலின் வறண்ட காற்று காரணமாக கடந்த ஒருசில நாட்களாக தமிழகத்தில்(கொங்கு பகுதி உட்பட)மழை குறைந்திருந்தது.இந்நிலையில் வ...
11/05/2025

அரபிக்கடலின் வறண்ட காற்று காரணமாக கடந்த ஒருசில நாட்களாக தமிழகத்தில்(கொங்கு பகுதி உட்பட)மழை குறைந்திருந்தது.

இந்நிலையில் வலுகுறைந்த சிஸ்டத்தால் மிதமான ஈரப்பத காற்று குவிதல் / காற்று சந்திப்பு காரணமாக மே 13/14 முதல் மீண்டும் தீவிரமடைய இருக்கிறது கார்மழை.. ஈரப்பதத்தை பொருத்து எதிர்பார்த்தை விட 1or2 நாட்கள் முன்/பின் மழை இருக்கும்..

கார்மழை(கோடை மழை) இறுதி கட்டத்தை நெருங்கி வருவதால் அவ்வப்போது பரவலான மழையாகவும், தீவிரமாகவும் இருக்கும்..மழைமேகங்கள் நீண்ட தூரம் பயணிக்கவும் வாய்ப்புள்ளது..

இதனால் சோளம், வெங்காயம், எள் போன்ற அறுவடை விவசாய்கள் கவனமாக இருக்கவும்.. விரிவாக மே 12/13ல் பதிவிடலாம்.

தீவிரமடையும் கார்மழைகுறையும் வெப்பநிலை இருதிசை காற்று குவிதலும் நம் கொங்கு மண்டலம், மத்திய மாவட்டங்கள், தென் மாவட்டங்களி...
02/05/2025

தீவிரமடையும் கார்மழை

குறையும் வெப்பநிலை

இருதிசை காற்று குவிதலும் நம் கொங்கு மண்டலம், மத்திய மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் குவிந்து காற்று முறிவு/காற்றில் நிலையற்ற தன்மையை (LWD: Line of Wind Discontinuity) நிலவுவதால் நாம் முந்தைய பதிவுகளில் சொன்னது போல் மே முதல் வாரம் முதல் (மே 4/5 முதல்) கார்மழை (கோடை மழை) தீவிரமடைய இருக்கிறது..

மே 4/5 முதல் நம் கொங்கு மண்டலம், தென் மாவட்டங்கள் , மத்திய மாவட்டங்கள், வட மாவட்டங்கள் என தமிழகத்தில் ஆங்காங்கே மழை இருக்கும்.. சமயத்தில் ஒரிரு நாட்களில் பரவலான மழையாகவும் இருக்கும்.. ஒருசில இடங்களில் கன மழையும், ஏதாவது ஒரிரு இடங்களில் மிக கன மழை வரை இருக்கலாம்.. சில/பல இடங்களை ஒதுக்கவும் செய்யும். மே 1-3 கொங்கு பகுதிகளில் சில இடங்களில் மழை இருக்கும்.

இந்த மழையானது தமிழகத்தில் தொடர்ந்து இருக்காது... ஒரிரு நாட்களில் பரவலான மழை பதிவானால் ஒருசில நாட்களுக்கு மழை குறைந்து சில இடங்கள் என மாறி மாறி இருக்கும்.. ஒரு சில நாட்கள்/சில நாட்கள் இடைவெளி விட்டு விட்டு மே இறுதி வரை மழை இருக்கும்...

வரும் நாட்களில் தமிழகத்தி்ல் (கொங்கு பகுதிஉட்பட) கார்மழை தீவிரமடைய இருப்பதால் வரும் நாட்களில் கொங்கு பகுதி, தென் உள் மாவட்டங்களில் வெப்பநிலை ஒரளவிற்கு குறைந்துவிடு.. ஆனால் இருதிசை காற்று குவிவதால் புழுக்கம் இருக்கும்..

கடல் மேற்பரப்பு வெப்பநிலை, ITCZ, லேசான MJO என மழைக்காரணிகள் கார்மழைக்கு சாதகமாக உள்ளது..

இடையில் ஏதாவது மாற்றமிருந்தால் பதிவிடப்படும். .

29/04/2025

மே 3 or 4 முதல் நம் கொங்கு பகுதி, மத்திய மாவட்டங்களில் கார் மழை ஒரளவிற்கு தீவிரமடைய இருக்கிறது. விரிவாக மே 1or 2ல் பதிவிடலாம்...

Address


Alerts

Be the first to know and let us send you an email when Kongunadu Weatherman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share