
19/05/2024
58 கிராம பாசன கால்வாய்க்கு தண்ணீர் கேட்கும்போது,
*புதிய பாசன பகுதிகளுக்கு தண்ணீர் கொடுக்ககூடாது என* *ஒரு சட்டம்இருப்பதாக சொன்னார்கள்.*
நமக்கு தண்ணி கொடுக்ககூடாதுன்ற சட்டத்தில கூடுதலா இன்னொரு
சட்டமா..ன்னு ஒரு நிமிட திகில் பரவும்.
முதலாவதாக,
அந்த சட்டத்தை அப்படி புரிந்துகொள்ள வேண்டியதில்லை. அணையின் தண்ணீரை பிரிக்கும் சூழ்நிலையில் அன்று உள்ள பாசன கால்வாய்காரர்களுக்கு பகிர்ந்த பின் வேறு யாரையும் புதிதாக சேர்க்ககூடாது விதி எழுதுவது நடைமுறை தான்.
இரண்டாவதாக,
மாற்ற முடியாத சட்டம் என்று ஒன்று இல்லை. காலத்திற்கேற்ப...மக்களின் தேவைகேற்ப மாற்றி கொள்வது தான் சட்டம்.
நம் நிலத்தை பாதுகாக்க தான் அரசு என்ற ஏற்பாட்டினை நாம் ஏற்படுத்தி கொண்டுள்ளோம். நம்மையும்,நிலத்தையும் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை.
அப்படிப்பட்ட அரசு..அதன் தலைவர் நாடு..நாடாக சென்று எங்கள் நிலத்தில் தொழிற்சாலை அமையுங்கள்.முதலீடு்செய்யுங்கள்.அதற்கான நிலத்தை அரசே குறைந்த விலையில் பெற்று தரும் என கூறி,விவசாயம் செய்வோரை, எத்தனை எதிர்த்தாலும்,நாட்டின் நலன் என கூறி, ஒரு விவசாய நிலத்தை ஒரு தொழிற்பேட்டையாக மாற்ற முடியும்.
ஆனால்,
விவசாயபரப்பை அதிகரிக்கபோகிறோம். எனவே வீடுகளை இடித்து விவசாய நிலமாக மாற்ற போகிறோம் என ஒரு அரசு சொல்லாது.
அதேபோல் நாமும் இன்னைக்கு இடம் விக்கிற விலையில...இன்றைக்கு சாதாரணமாக போக்குவரத்து,மின்வசதி உள்ள ஒருநிலத்தில் ஒரு செண்ட் ஆறு லட்சத்திற்க்கு குறைவில்லாமல் ஒரு ஏக்கரை ஆறுகோடி போட்டா நாம் விவசாயபரப்பை அதிகரிக்க போகிறோம்.
மனிதனுக்கு உணவுதேவையை பூர்த்திசெய்ய விவசாயம் அவசியம்.மனித குல பெருக்கத்திற்கேற்ப உள்ள விவசாய உற்பத்தி போதாமையால், உணவு உற்பத்தி செய்ய ஹைபிரிட் வகைகள்,யூரியா என அறிமுகப்படுத்தப்பட்டது. என்ற போதும் விவசாயம் செய்ய நிலம் அவசியம்.அதற்கு நீர் முக்கியம்.
நாங்கள் விவசாய நிலங்களை புதிதாக உருவாக்கவில்லை...செவ்வாய்கிரகத்தில் நிலம் வாங்கி்அங்கு பாசன தண்ணீர் கேட்கவில்லை.நாங்கள் தலைமுறை தலைமுறையாக விவசாயம் செய்த நிலங்களுக்கு தான் தண்ணீர் கேட்கிறோம்.
ஏற்கனவே அணையில் இருந்து பாசனம் பெறும் பகுதிகளில் உள்ள
விவசாயநிலங்கள் வீட்டடி மனைகளாக மாறியுள்ளன. அதை கணக்கெடுத்து,
அரசு முடிவெடுத்து 100 கோடி செலவு செய்த 58 பாசன கால்வாய்க்கு தண்ணீர் தர நிரந்தர விதியை உருவாக்குங்கள் என்பது தான் .
தேசம் காக்க அவர் அழைக்கிறார்...
இவர் அழைக்கிறார் என அழைக்கிறீர்கள்.
சந்தோசமாக வருகிறோம்...
ஆனால் ஒன்றை உணர்ந்து கொள்ளுங்கள்.
எங்களுக்கும் பசிக்கும்ல...