SHIVA Stills

SHIVA Stills photo l video l id cards l invitation l all designing works

58 கிராம பாசன கால்வாய்க்கு தண்ணீர் கேட்கும்போது,*புதிய பாசன பகுதிகளுக்கு தண்ணீர் கொடுக்ககூடாது என* *ஒரு சட்டம்இருப்பதாக ...
19/05/2024

58 கிராம பாசன கால்வாய்க்கு தண்ணீர் கேட்கும்போது,

*புதிய பாசன பகுதிகளுக்கு தண்ணீர் கொடுக்ககூடாது என* *ஒரு சட்டம்இருப்பதாக சொன்னார்கள்.*
நமக்கு தண்ணி கொடுக்ககூடாதுன்ற சட்டத்தில கூடுதலா இன்னொரு
சட்டமா..ன்னு ஒரு நிமிட திகில் பரவும்.

முதலாவதாக,
அந்த சட்டத்தை அப்படி புரிந்துகொள்ள வேண்டியதில்லை. அணையின் தண்ணீரை பிரிக்கும் சூழ்நிலையில் அன்று உள்ள பாசன கால்வாய்காரர்களுக்கு பகிர்ந்த பின் வேறு யாரையும் புதிதாக சேர்க்ககூடாது விதி எழுதுவது நடைமுறை தான்.

இரண்டாவதாக,
மாற்ற முடியாத சட்டம் என்று ஒன்று இல்லை. காலத்திற்கேற்ப...மக்களின் தேவைகேற்ப மாற்றி கொள்வது தான் சட்டம்.

நம் நிலத்தை பாதுகாக்க தான் அரசு என்ற ஏற்பாட்டினை நாம் ஏற்படுத்தி கொண்டுள்ளோம். நம்மையும்,நிலத்தையும் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை.

அப்படிப்பட்ட அரசு..அதன் தலைவர் நாடு..நாடாக சென்று எங்கள் நிலத்தில் தொழிற்சாலை அமையுங்கள்.முதலீடு்செய்யுங்கள்.அதற்கான நிலத்தை அரசே குறைந்த விலையில் பெற்று தரும் என கூறி,விவசாயம் செய்வோரை, எத்தனை எதிர்த்தாலும்,நாட்டின் நலன் என கூறி, ஒரு விவசாய நிலத்தை ஒரு தொழிற்பேட்டையாக மாற்ற முடியும்.

ஆனால்,
விவசாயபரப்பை அதிகரிக்கபோகிறோம். எனவே வீடுகளை இடித்து விவசாய நிலமாக மாற்ற போகிறோம் என ஒரு அரசு சொல்லாது.
அதேபோல் நாமும் இன்னைக்கு இடம் விக்கிற விலையில...இன்றைக்கு சாதாரணமாக போக்குவரத்து,மின்வசதி உள்ள ஒருநிலத்தில் ஒரு செண்ட் ஆறு லட்சத்திற்க்கு குறைவில்லாமல் ஒரு ஏக்கரை ஆறுகோடி போட்டா நாம் விவசாயபரப்பை அதிகரிக்க போகிறோம்.

மனிதனுக்கு உணவுதேவையை பூர்த்திசெய்ய விவசாயம் அவசியம்.மனித குல பெருக்கத்திற்கேற்ப உள்ள விவசாய உற்பத்தி போதாமையால், உணவு உற்பத்தி செய்ய ஹைபிரிட் வகைகள்,யூரியா என அறிமுகப்படுத்தப்பட்டது. என்ற போதும் விவசாயம் செய்ய நிலம் அவசியம்.அதற்கு நீர் முக்கியம்.

நாங்கள் விவசாய நிலங்களை புதிதாக உருவாக்கவில்லை...செவ்வாய்கிரகத்தில் நிலம் வாங்கி்அங்கு பாசன தண்ணீர் கேட்கவில்லை.நாங்கள் தலைமுறை தலைமுறையாக விவசாயம் செய்த நிலங்களுக்கு தான் தண்ணீர் கேட்கிறோம்.

ஏற்கனவே அணையில் இருந்து பாசனம் பெறும் பகுதிகளில் உள்ள
விவசாயநிலங்கள் வீட்டடி மனைகளாக மாறியுள்ளன. அதை கணக்கெடுத்து,

அரசு முடிவெடுத்து 100 கோடி செலவு செய்த 58 பாசன கால்வாய்க்கு தண்ணீர் தர நிரந்தர விதியை உருவாக்குங்கள் என்பது தான் .

தேசம் காக்க அவர் அழைக்கிறார்...
இவர் அழைக்கிறார் என அழைக்கிறீர்கள்.
சந்தோசமாக வருகிறோம்...
ஆனால் ஒன்றை உணர்ந்து கொள்ளுங்கள்.
எங்களுக்கும் பசிக்கும்ல...

இன்று 04.01.2024 அன்று 58 கிராம பாசன கால்வாயில் இடதுபிரிவு கால்வாயில் உள்ள பாறைப்பட்டி கண்மாயில் இருந்து லிங்கப்பநாயக்கன...
04/01/2024

இன்று 04.01.2024 அன்று 58 கிராம பாசன கால்வாயில் இடதுபிரிவு கால்வாயில் உள்ள பாறைப்பட்டி கண்மாயில் இருந்து லிங்கப்பநாயக்கனூர் புதுக்குளம் கண்மாய்க்கு காலை 8 மணியளவில் நீர் திறக்கப்பட்டது. இதில் லிங்கப்பநாயக்கனூர் கண்மாய் சங்க பொறுப்பாளர்களான ஒச்சு மற்றும் லோகு. சுளிஒச்சான்பட்டி தெய்வம். விஸ்வா நகை கடை பாபு ஆகியோர் சங்கசெயலாளர் சிவப்பிரகாசம். பொருளாளர் வலையபட்டி செந்தில்குமார் , ஊராட்சி மன்ற தலைவர் கோஸ்மீன் ஆகியோருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.

31/12/2023
நாளை 58 ல் தண்ணீர்.அரணு குறிப்பாணை பிறப்பித்தது.
22/12/2023

நாளை 58 ல் தண்ணீர்.அரணு குறிப்பாணை பிறப்பித்தது.

தென்மாவட்டங்களில் அதி கனமழை.வெள்ளம், மக்கள் தவிப்பு..அப்படின்னு சொல்லும்போது, எங்களையும் ஏண்டா..சேத்து சொல்றீங்க...நாங்க...
18/12/2023

தென்மாவட்டங்களில் அதி கனமழை.வெள்ளம், மக்கள் தவிப்பு..
அப்படின்னு சொல்லும்போது,

எங்களையும் ஏண்டா..சேத்து சொல்றீங்க...நாங்க மண்ணை காக்கிற மானஸ்தங்க...ஒரு சொட்டு்தண்ணி எங்க மேலே படாம ஒரு வாழ்க்கை வாழுறோம்.

இனிமேல் அறிவிக்கும் போது...
உசிலம்பட்டி தவிர்த்த தென்மாவட்டங்கள்..னு சொல்லி் பழகுங்க...

வெல்லம் திங்கிறது ஒருத்தன்.விரல் சூப்பரது இன்னொருத்தனா..?

உதவிபொறியாளர் என்ற நிலையில் பணியாற்றி சப்டிவிசனல் அலுவலர் (SDO) பதவி உயர்வில் செல்லும் திரு. இராதா கிருஷ்ணன் அவர்களை மனத...
13/12/2023

உதவிபொறியாளர் என்ற நிலையில் பணியாற்றி சப்டிவிசனல் அலுவலர் (SDO) பதவி உயர்வில் செல்லும் திரு. இராதா கிருஷ்ணன் அவர்களை மனதார வாழ்த்துகிறோம்.

தன் இளமைக்காலத்தில், ஆரம்ப கால 58 கிராம பாசனகால்வாய் போராட்டங்களில் தான் சார்ந்த இயக்கத்தின் மூலமாக போராடி,அதே திட்டத்தில் உதவிபொறியாளாராக பணியாற்றியதோடு, மிகப்பெரிய தொட்டிப்பாலத்தை கட்டியதில் பெரும்பங்கு வகித்தவர்.

58 பாசன கால்வாயில் தண்ணீர் வரும் நாட்களில் அந்ததந்த கண்மாய்காரர்களை பொறுப்பாக்கி, அதை முறைப்படுத்தி, நடைமுறைப்படுத்த வழிகாட்டியவர்.சாதனை நிகழ்வாக 35 கண்மாய்களில் 80 நாட்கள் தண்ணீர் பெற்றபோது,இவரின் வழிகாட்டுதலும்,தூண்டுதலுமே மக்களின் கனவை நனவாக்க உதவியது.
58 கிராம பாசன கால்வாய் கட்டிய காலத்தில் இருந்து இன்று வரை உள்ளவற்றை புள்ளிவிபரங்களோடு,துல்லியமாய் கூறுபவர்.58 கிராம பாசன கால்வாயில் உள்ள இடையூறுகளை இனம்கண்டு களைந்தவர்.

இந்த திட்டத்தின் முழுமையான பயனை அரசின் உதவியோடு அடைய உள்ள வழிமுறைகளை பின்பற்ற வழிகாட்டுதலாக இருந்தவர். தவறுகளை கண்டிப்புடன் சுட்டி காட்டுபவர்.
மர்மதேசமாய் இருந்த 58 கிராம பாசன கால்வாயின் இருட்டுகளை வெளிச்சம் போட்டு காட்டி,நம்பிக்கை ஊட்டியவர்.

இங்கிருந்து நீங்கள் செல்வது எங்களுக்கு இழப்பே, எனினும், உங்களின் உயரம் எங்களுக்கு உதவும்.

நாங்கள் உங்களோடு என்றும் இருப்போம்.நீங்கள் எங்கிருந்தாலும் எங்களோடு இருப்பீர்கள்.

வாழ்த்துக்களுடன்.
58 கிராம பாசன விவசாயிகள் சங்கம்.

Address

Tb Road, Samy Lathe Near
Usilampatti
625532

Opening Hours

8am - 8pm

Telephone

+919944666833

Website

Alerts

Be the first to know and let us send you an email when SHIVA Stills posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share