Ghanaguru Publication

Ghanaguru Publication Ghanaguru Publication is a Virtual Network publication lead by veteran journalist Mr.S.K.Murugan, who is a former editor of Dinakaran and Junior Vikatan. S.K.

GhanaGuru Publication (Gyan Guru alias GG Publication) is a Virtual Network publication house lead by veteran journalist Mr.S.K.Murugan, who is former editor of Dinakaran and Junior Vikatan. Murugan is a great writer who has penned over 15 self-help, philosophical, spiritual books which has sold over 1 lakh copies around Tamil Nadu. GG Publication are stepping into the 10th year with the launch o

f this page. GG publication has well connected network of doctors, journalists, printers in and around Tamil Nadu. GhanaGuru Publication has published more than 15 books in Tamil for general reading for various doctors under their name. Our Journalist and Doctor combo make this unbelievable feat possible . Most of our published books are recognized by Tamil Nadu government and been awarded order for all over Tamil Nadu Libraries. We have helped nearly 10 writers on their self publication. We have telecasted numerous TV slots for doctors in Doordharsan and Phodigai. We give tailor made books for each customers which will differ in style, content and delivery. We are very cautious in providing authentic information by verifying the facts with highly knowledgeable doctors.We are very concerned about our clients valuable time and consume very less of it yet provide powerful output. Apart from writing books for Doctors, achievers etc., we also help them transforming it into a book and hard copy by printing. We are also involved in advertising in leading Tamil Magazines and doing live TV shows for doctors in Media.

விஜய் கட்சியின் முதல்வர் வேட்பாளர் சகாயம் ஐ.ஏ.எஸ்..?முதல்வர் நாற்காலியில் நடிகர் விஜய்யை உட்கார வைத்து அழகு பார்க்க அவரத...
20/10/2024

விஜய் கட்சியின் முதல்வர் வேட்பாளர் சகாயம் ஐ.ஏ.எஸ்..?

முதல்வர் நாற்காலியில் நடிகர் விஜய்யை உட்கார வைத்து அழகு பார்க்க அவரது ரசிகர்கள் துடிக்கிறார்கள். ஆனால், விஜய் தொடர்ந்து சகாயத்துடன் பேச்சுவார்த்தை நடத்திவருகிறார். ஆகவே, சகாயத்தை முதல்வர் வேட்பாளராக மாநாட்டு மேடையில் அறிவிக்கப் போவதாகச் சொல்கிறார்கள்.

விஜய்யும் சகாயமும் இணைந்தால் தமிழகத் தேர்தலில் வெற்றி கிடைக்குமா..? ஞானகுருவின் பதிலை ஞானகுரு மகிழ்ச்சி ஐப்பசி இதழில் படியுங்கள்.

இன்னமும் ரத்தன் டாட்டா, இறையன்பு ஐ.ஏ.எஸ்., கண்ணதாசன், புத்தர், பணம், வெற்றி, கவுன்சிலிங் என எக்கச்சக்க மகிழ்ச்சி தரும் கட்டுரைகள்.

லிங்க் தொட்டு இணையம் செல்லுங்கள்.

அட்டையைத் தொட்டதும் புத்தகம் விரியும். படியுங்கள், மகிழ்ச்சியைப் பரப்புங்கள்.

முதல்வர் நாற்காலியில் நடிகர் விஜய்யை உட்கார வைத்து அழகு பார்க்க அவரது ரசிகர்கள் துடிக்கிறார்கள். ஆனால், விஜய் ...

புன்னகையின் விலைஏர் ஹோஸ்டஸ் பெண்களின் போலிப் புன்னகை ரொம்பவே ஓவர் என்பதால் பெரிதாக ஈர்ப்பு ஏற்படுவதில்லை. லண்டனிலிருந்து...
16/10/2024

புன்னகையின் விலை

ஏர் ஹோஸ்டஸ் பெண்களின் போலிப் புன்னகை ரொம்பவே ஓவர் என்பதால் பெரிதாக ஈர்ப்பு ஏற்படுவதில்லை. லண்டனிலிருந்து திரும்பிய விமானப்பயணத்தில் புதிய அனுபவம் கிடைத்தது.

விமானத்தில் டிரிங்க்ஸ், டின்னர் முடித்து பெரும்பாலோர் நன்றாகக் கண்ணயர்ந்த நேரத்தில், எங்களுக்கு நாலைந்து ரோ தாண்டியிருந்த ஒரு வெள்ளைக்காரப் பயணி சத்தம்போட்டு பணிப்பெண்ணை அழைத்தார். வேகமாக வந்த பணிப்பெண் நிலைமையைப் பார்த்தவுடன் சக பணியாளரை வரவழைத்தார்.

சத்தம் போட்ட நபரை அமைதிப்படுத்தி.. அவரை மெதுவாக பாத்ரூம் பக்கம் ஒருவர் அழைத்துச்சென்றார். அவர் எழுந்த நேரத்தில் தான், பக்கத்து சீட் பயணி மது குடித்துவிட்டு அவர் மீது வாந்தி எடுத்திருப்பது தெரிய வந்தது.

வாந்தியெடுத்தவரும் ஒரு வெள்ளைக்காரப் பயணி. அரை மயக்கத்திலிருந்தவரை தட்டி எழுப்பி, கைத்தாங்கலாக வேறு பாத்ரூமுக்கு இன்னொருவர் அழைத்துச் சென்றார். என்னவோ, ஏதோவென்று நினைத்து எட்டிப் பார்த்த பயணிகளிடம், ‘டிரிங்ஸ் கொட்டிவிட்டது’ என்று மட்டும் அதே புன்னகையுடன் மென்மையாகச் சொன்னார்கள்.

அதற்குள் தள்ளுவண்டியுடன் வந்த ஒரு பெண் மாஸ்க், கையுறை அணிந்து, சீட்டுகளுக்கு இடையில் நுழைந்து அமர்ந்து, வாந்தி எடுத்த இடத்தை ஒரு தேர்ச்சி பெற்ற சுகாதாரப் பணியாளர் போன்று சரசரவென சுத்தம் செய்தார். டிஷ்யூக்கள், பவுடர், ஸ்ப்ரே என சில நிமிடங்களில் அந்த வேலையை முடித்துவிட்டார். அவர் எழுந்ததும் இன்னொரு பணிப்பெண் அதை மேற்பார்வையிட்டு திருப்தி தெரிவித்தார்.

வேறு சீட் வேண்டும் என்றபடி வந்த பயணி, அவரது இருக்கையை ஒரு கணம் உற்றுப் பார்த்தார். அதற்குள் வாந்தி எடுத்த பயணி வந்து, தலை வணங்கி மன்னிப்பு கேட்டார். இருவரும் மேற்கொண்டு எதுவும் பேசாமல் அதே சீட்டில் அமர்ந்துகொண்டனர். விழித்திருந்த ஒரு சிலர் தவிர மற்றவர்களுக்கு அப்படியொரு சம்பவம் நடைபெற்றதே தெரியாத அளவுக்கு சத்தமில்லாமல் காரியம் நடந்துமுடிந்தது.

ஏர் ஹோஸ்டஸ் தான் இந்த வேலையையும் செய்கிறார்கள் என்பதை ஜீரணிக்கவே நேரமானது. பயணம் முடிந்து வழியனுப்புகையில் அந்த ஏர் ஹோஸ்டஸ் வழக்கமான அதே புன்னகையுடன் வழியனுப்பி வைத்தார். பாராட்ட முயன்றதை கண்டுகொள்ளாமல் புன்னகைத்தார்.
அந்த புன்னகைக்குள் நிறைய அர்த்தம் தெரிந்தது.

பாலியல் கல்வி முக்கியமுங்கோ…பெற்றோர், ஆசிரியர், மருத்துவர் என யாரிடமிருந்தும் குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் அடிப்ப...
06/10/2024

பாலியல் கல்வி முக்கியமுங்கோ…

பெற்றோர், ஆசிரியர், மருத்துவர் என யாரிடமிருந்தும் குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் அடிப்படையாகத் தெரியவேண்டிய பாலியல் கல்வி கிடைப்பதே இல்லை. அதனாலே ஆண், பெண் என அத்தனை பேரும் தங்களுடைய அந்தரங்கம் குறித்து எக்கச்சக்க சந்தேகங்களுடன் இருக்கிறார்கள். தங்கள் உறுப்பை அவலட்சணமாகக் கருதுகிறார்கள். குற்றவுணர்வுடன் வாழ்கிறார்கள்.
இந்த பலவீனத்தைப் பயன்படுத்தி ஆணுக்குப் பெரிதாக்குதல் பெண்ணுக்குச் சிறிதாக்குதல் என பணம் கொள்ளையடிக்கும் மருத்துவக் கும்பல் அதிகரித்துவருகிறது. எந்த அவசியமும் இல்லாமல் லேபியோபிளாஸ்டி சிகிச்சை நிறைய இளம் பெண்களுக்குச் செய்யப்படுகிறது. தீயாகப் பரவும் சிகிச்சை குறித்து விழிப்புணர்வூட்டுகிறார் டாக்டர் பதூர் மொய்தீன்.
மேலும்,
* சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு நடந்த சிகிச்சையின் கம்ப்ளீட் ரிப்போர்ட்
* நடிகை தீபிகா படுகோன் தாய்மைக் கொண்டாட்டம்
* இயக்குனர் பேரரசுக்கு நடிகர் விஜய் சொல்லிக்கொடுத்த ஆரோக்கிய ரகசியம்
* தூக்கத்தைக் கடன் வாங்கினல் என்னவாகும் தெரியுமா?
* உடலுக்குள் ஒரு வெற்றிடம் இருப்பதாக நம்பிய பெண்ணுக்குக் கவுன்சிலிங்
* தசைப்பிடிப்புக்கு உடனடியாக என்ன செய்யக்கூடாது..?
இன்னும் நிறைய நிறைய சுவாரஸ்யங்களுடன் ஞானகுரு யாக்கை அக்டோபர் இதழ்
லிங்க் மூலம் அட்டையைத் தொடுங்கள். இதழ் விரியும்… படியுங்கள்… பரப்புங்கள்.

ஆலங்கட்டி மழை… பக்கிங்ஹாம் அரண்மனைலண்டன் பள்ளியின் கோடை விடுமுறையைக் கணக்கிட்டே பயணத்தைத் திட்டமிட்டோம். ஜூலை மாதம் இரவு...
26/09/2024

ஆலங்கட்டி மழை…
பக்கிங்ஹாம் அரண்மனை

லண்டன் பள்ளியின் கோடை விடுமுறையைக் கணக்கிட்டே பயணத்தைத் திட்டமிட்டோம். ஜூலை மாதம் இரவு 10 மணி வரை வெயில் அடித்து, காலை 5 மணிக்கே விடிந்தது. இந்த செப்டம்பரில் மழைக் காலம் தொடங்கிவிட்டது. இரவு 7 மணிக்கு இருட்டி காலை 7 மணிக்கு விடிகிறது. இது இன்னும் குறைந்து மாலை 3 மணிக்கே இருட்டிவிடும் என்கிறார்கள்.

ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய இரண்டு மாதங்கள் மட்டுமே பார்வையாளர்கள் அனுமதிக்கப்படும் பக்கிங்ஹாம் அரண்மனைக்குச் செல்ல திட்டமிட்டிருந்தோம். கிளம்பிய நேரத்தில் சடச்சடவென ஆலங்கட்டி மழை. பள்ளி வயதில் ஆலங்கட்டி மழையை நேரில் பார்த்தது. இப்போது கண் முன்னே பால்கனியில் பிரமிப்பான மழை அனுபவம். குட்டிக்குட்டி கற்கண்டாகத் தெறிந்த ஐஸ் துளிகளை எடுத்து வாயில் போடுவதற்குள் கரைந்து கரைந்து விளையாட்டு காட்டியது. லண்டனிலும் ஆலங்கட்டி மழை அபூர்வமாகவே பெய்கிறதாம்.

இந்த மழையில் அரண்மனைக்குச் செல்ல முடியாது, போட்ட டிக்கெட் பணம் வீண் என்றே நினைத்தேன். ஆனால், இன்னும் 10 நிமிடத்தில் வெயில் வந்துவிடும், கிளம்புங்கள் என்று மகன் சொன்னதை முதலில் நம்பவில்லை. ஆனால், அதுவே நடந்தது. மழை நின்றதும் சுள்ளென்று வெயில் அடித்தது. அரை மணி நேரத்துக்கு ஒரு முறை வானிலை மாறுகிறது என்றாலும், அத்தனை துல்லியமாகக் கணித்துத் தருகிறார்கள்.

இங்கிலாந்து அரசரின் அதிகாரபூர்வ இல்லமே பக்கிங்ஹாம் அரண்மனை. 1703ம் ஆண்டு பக்கிங்ஹாம் பிரபு கட்டத் தொடங்கிய அரண்மனையை அடுத்த 200 வருடங்கள் அடுத்தடுத்து வந்தவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக பிரமாண்டமாக மாற்றியிருக்கிறார்கள். 1837ம் ஆண்டு விக்டோரியா மகாராணி இங்கிருந்து ராணியாக ஆட்சி புரிந்திருக்கிறார்.

ராணியைச் சந்திக்க வரும் நபர்களின் அந்தஸ்துக்கு ஏற்ப தங்க வைப்பதற்கு ஏழெட்டு வகையில் வரவேற்பு அறைகள், தர்பார் ஹால், நடனமாடும் அறை, கேளிக்கை அறை, இசைக் கருவிகள் அறை, மார்பிள் சிலைகள் அறை என 19 பிரமாண்ட அறைகளும் 52 படுக்கையறைகளும் உள்ளன. இது தவிர பணியாளர்கள், அலுவலர்களுக்கு 250 அறைகள். நமது திருமலை நாயக்கர் மஹாலை விட 100 மடங்கு பெரிது என்று வேண்டுமானால் சுருக்கமாக சொல்லிக்கொள்ளலாம்.

இந்த அரண்மனை முழுக்கவே தங்கமுலாம் பூசப்பட்டுள்ள காரணத்தால் ஐந்து அடிக்கு ஒரு பாதுகாவலர் நிற்கிறார். சிலை மட்டுமின்றி சுவர், தூண்களையும் தொட்டுப் பார்க்க முடியாத அளவுக்கு கண்ணாடியால் அடைத்திருக்கிறார்கள். போட்டோ, வீடியோ எடுப்பது தடை செய்யப்பட்டிருக்கிறது. எங்கெங்கும் பாதுகாவலர்கள் முறைத்துக்கொண்டு நிற்பதால் பளிங்குச் சிலைகள், உலகப் புகழ் ஓவியங்கள், வித்தியாசமான கூரைகளை ரசிப்பதற்குத் தயக்கமாகவே இருக்கிறது. இங்கிருக்கும் சில படங்கள் இணையத்தில் எடுத்தவையே.

பொதுமக்களை உப்பரிகையில் இருந்து பார்க்கும் வகையில் மிகப்பெரிய மைதானம், மிகப்பெரிய புல்வெளி என்று எல்லாமே பிரமாண்டம். இந்த அரண்மனைக்கு முன்பாக ஆண்டு தோறும், ‘தி சேஞ்சிங் ஆஃப் கார்ட்ஸ்’ நிகழ்ச்சிக்காக 50 ஆயிரம் பேர் ஒன்று கூடுவது முக்கியமான நிகழ்வு என்கிறார்கள்.
அரண்மனையின் ஒவ்வொரு அங்குலத்தையும் சித்திரங்கள், கலைப்பொருட்கள், சிற்பங்கள் அலங்கரிக்கின்றன என்றாலும் ஏதோ ஜெயிலுக்குள் நுழைந்து திரும்பிய அனுபவமே கிடைக்கிறது.

பிறர் சொல்வதால் என்ன ஆகிவிடும்..?ஐஸ்வர்யா ராய்க்கு அழகிப் போட்டியில் நுழைவதற்கே தகுதி இல்லை என்று புறக்கணித்த உலகம் இது....
19/09/2024

பிறர் சொல்வதால் என்ன ஆகிவிடும்..?

ஐஸ்வர்யா ராய்க்கு அழகிப் போட்டியில் நுழைவதற்கே தகுதி இல்லை என்று புறக்கணித்த உலகம் இது. நடிகர் விஜய் முகத்தை நசுங்கிப் போன தகர டப்பா என்று கேலி செய்தார்கள். ஸ்டாலின் ஜாதகப்படியும் தகுதிப்படியும் முதல்வராகவே முடியாது என்று ஆருடம் சொன்னார்கள். இது போன்ற விமர்சனங்களைக் கண்டுகொள்ளாமல் தான் இவர்கள் முன்னேறினார்கள்.

விமர்சனம் செய்ய நினைப்பவர்களை மாற்ற நினைப்பதில் அர்த்தமே இல்லை. நீங்கள் கருப்பு நிறம் என்றால் அதை ஏற்றுக்கொள்ளுங்கள். மாற்ற முடியாத விஷயங்களில் நீங்கள் செய்வதற்கு எதுவும் இல்லை. ரஜினி, பி.டி.உஷா என்று கருப்பு நிறத்துடன் எத்தனை சாதனையாளர்கள் இருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டு உங்கள் வழியில் முன்னேறிச் செல்லுங்கள்.

இன்னும்…
• நம்முடன் வாழும் அவெஞ்சர்ஸ்
• ஆத்திகம் நாத்திகம் பிளஸ், மைனஸ்
• ஆசிரியர்களுக்கு பாத பூஜை..?
• சபலத்தின் சம்பளம் – கவுன்சிலிங்
• மோடியின் முதலாளி இவரா..?

இன்னும் நிறைய சுவாரஸ்யங்களுடன் புரட்டாசி ஞானகுரு மகிழ்ச்சி இதழ் வந்துவிட்டது.
லிங்க் மூலம் அட்டையைத் தொட்டதும் இதழ் விரியும். படியுங்கள், மகிழ்ச்சியைப் பரப்புங்கள்.

ஆப்பிள் தோட்டத்தில் ஒரு மேய்ச்சல்சீசன் காலத்தில் தக்காளி அடிமட்ட விலையில் கிடைப்பது போன்று, லண்டனில் ஒரு பவுண்டுக்கு தரம...
14/09/2024

ஆப்பிள் தோட்டத்தில் ஒரு மேய்ச்சல்

சீசன் காலத்தில் தக்காளி அடிமட்ட விலையில் கிடைப்பது போன்று, லண்டனில் ஒரு பவுண்டுக்கு தரமான 6 ஆப்பிள் வாங்கமுடிகிறது. சுவையும் அள்ளுகிறது. அதனாலே ஆப்பிள் தோட்டம் பார்க்கும் ஆசை வந்தது.

லண்டனுக்கு வெளியே ஒரு தோட்டத்துக்குப் போனோம். ஃபார்ம் சுற்றிப் பார்க்க டிக்கெட் என்றாலும் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிட்டுக் கொள்ளலாம். வீட்டுக்கு எடுத்துச்செல்வதற்கு மட்டும் விலை கொடுத்து வாங்க வேண்டும்.

நாங்கள் போன ஃபார்மில் ஆப்பிள், பேரிக்காய், பிளம்ஸ், ரோஸ்ஃபெரி, பிளாக்ஃபெரி இருந்தன. உள்ளே அனுப்பும்போதே, ’மரத்தை மட்டும் உலுக்க வேண்டாம், ஒன்றிரண்டு மட்டும் சாப்பிடுங்கள்’ என்று கண்டிப்புடன் சொல்லி அனுப்பினார்கள்.

இப்போதே சாப்பிடலாம், நாளை சாப்பிடலாம், அடுத்த வாரம் சாப்பிடலாம் என்று தெளிவாக ஒவ்வொரு வரிசை மரங்களுக்கும் போர்டு வைத்திருக்கிறார்கள். எல்லாமே கைக்கெட்டும் தூரத்தில் குட்டியூண்டு குண்டு மரங்கள். ஒவ்வொரு மரத்திலும் நூற்றுக்கணக்கில் ஆப்பிள் நிரம்பி வழிவதை பார்ப்பதே பேரானந்தம். ரகம் ரகமாக சாப்பிட்டோம்.

மரத்தை உலுக்கக்கூடாது என்று கண்டிப்பு காட்டியது ஞாபகம் வரவே, ஒரு மரத்தை மட்டும் லேசாக உலுக்கிப் பார்த்தேன். மளமளவென அத்தனை பழங்களும் கொட்டிவிட்டன. சிசிடிவி பார்த்து காசு வசூல் செய்தாலும் ஆச்சர்யமில்லை என்று பயந்து, அப்படியே பேரிக்காய் பக்கம் ஜம்ப் அடித்தோம்.

இங்கேயும் குட்டிக் குட்டி மரங்களில் நூற்றுக்கணக்கில் பேரிக்காய் தொங்குகின்றன. பறித்துப் பறித்து சாபிட்டுக்கொண்டே பிளம்ஸ் மரங்களை நோக்கிப் போனோம். கருப்பு, சிவப்பு, இரண்டு நிறமும் கலந்த பிளம்ஸ் என்று விதவிதமான நிறத்தில் குண்டு தக்காளி போல் நம்மை சாப்பிட அழைக்கின்றன.

இதையும் சாப்பிட்டு விட்டு ரோஸ்ஃபெரி, பிளாக்ஃபெரி பக்கம் போனோம். எங்களுக்கு முன்னே போனவர்கள் பெரும்பாலும் மேய்ந்துவிட்டதால் நாங்கள் சாப்பிடுவதற்கு நிறையக் கிடைக்கவில்லை. இது சீசன் இல்லையாம். அதனால் பிளம்ஸ், ஆப்பிள், பேரிக்காய் மட்டும் வீட்டுக்கும் வாங்கிக்கொண்டு வந்தோம்.

மரங்கள் வளர்ப்பு முறை அத்தனை நேர்த்தி. ஒவ்வொரு மரத்தின் கீழும் ஒரு குழாய் பதித்து தண்ணீர் விரயமில்லாமல் பாய்ச்சுகிறார்கள். பிளம்ஸ் தோட்டத்துக்கு மட்டும் இரும்பு ஷெட் போட்டு பெரிய பிளாஸ்டிக் ஷீட் வைத்திருக்கிறார்கள். பெரிய காற்றடித்தால் மட்டும் மூடிவிடுவார்களாம். பழங்கள் பறிக்க, கிளைகள் வெட்ட, தேவையில்லாத பழங்களைப் பிரிக்க என எல்லாமே இயந்திரங்கள். மூன்று பேர் மட்டுமே கிட்டத்தட்ட 20 ஏக்கர் தோட்டத்தை பராமரிக்கிறார்கள்.
ஹோட்டலுக்குப் போய் சாப்பிட்டிருந்தால் கூட இப்படி வயிறு நிரம்பியிருக்க வாய்ப்பில்லை என்ற திருப்தியுடன் கிளம்பினோம்.

வரும் வழியில் டோவர் கடற்கரையை மேலே நின்று எட்டிப் பார்த்தோம். மலையை வெட்டி எடுத்தது போன்ற துறைமுகம். இங்கிருந்து ஃப்ரான்ஸ் நாட்டுக்கு கால் மணி நேரத்துக்கு ஒரு குட்டிக் கப்பல் போய் வருகிறது. காரில் துறைமுகத்துக்கு வருபவர்கள், காருடனே கப்பலுக்குள் ஏறுகிறார்கள். ஒன்றரை மணி நேரத்தில் பிரெஞ்சு நாட்டுக்குப் போய் விடலாம். இரவும் பகலுமாய் படு பிஸி போக்குவரத்து.

மூன்று பக்கம் கடல் இருந்தாலும் இன்னமும் இந்தியப் பெரு நகரங்களை இணைப்பதற்குக் கூட கடல் வழிப் பயணம் உருவாகவில்லை என்பது நம் இந்திய நாட்டின் வல்லரசு பரிதாபம்.

சசிகுமாரின் புதிய அவதாரம்இரா.சரவணன் இயக்கத்தில் வரும் 20ம் தேதி திரைக்கு வரயிருக்கும் ‘நந்தன்’ படத்தை பார்த்த நடிகர் சூர...
05/09/2024

சசிகுமாரின் புதிய அவதாரம்

இரா.சரவணன் இயக்கத்தில் வரும் 20ம் தேதி திரைக்கு வரயிருக்கும் ‘நந்தன்’ படத்தை பார்த்த நடிகர் சூரி, ‘இந்த படம் பார்த்து பல மணி நேரங்கள் ஆகிறது. நந்தன் தந்த பிரமிப்பு இன்னமும் அகலவில்லை’ என்று சசிக்குமாருக்கும் படக்குழுவினருக்கும் பாராட்டைத் தெரிவித்திருக்கிறார்.

இதை வழக்கமான பாராட்டு மட்டுமல்ல, அவரது ஆதங்கம். ஏனென்றால், இது சூரி நடிப்பதற்காக பிரத்யேகமாக இரா.சரவணன் எழுதிய கதை. வெற்றிமாறனின், ‘விடுதலை’ படத்தில் சூரிக்கு கிடைத்தது போன்று ஒரு நல்ல வாய்ப்பு. ஆனால், சினிமாவுக்கே உரித்தான சில நடைமுறைச் சிக்கல்களால் சூரியால் நடிக்க முடியவில்லை.

சூரிக்குப் பதிலாக சசிகுமார் நடிக்கப்போகிறார் என்று சரவணன் கூறியபோது கொஞ்சம் நெருடலாக இருந்தது. ஏனென்றால், இரா.சரவணன் கதையைப் படித்து அத்தனை தூரம் நெகிழ்ந்து போயிருந்தேன். நடுத்தர வர்க்கத்து சராசரி நண்பராக நடிப்பதற்கு சசிகுமாரை விட நல்ல சாய்ஸ் யாரும் இல்லை என்றாலும், ஒடுக்கப்பட்ட மக்களில் ஒருவராக அவரால் மாற முடியுமா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால், சசிகுமார் அந்த கேரக்டராகவே மாறி நின்றதைப் பார்த்ததும், சூரியை விட பொருத்தமான சாய்ஸ் என்று சொல்ல வேண்டியதாயிற்று. இன்னொரு நல்ல விஷயமாக, ‘தங்கலான்’ போன்று இதுவும் ஸ்டார் வேல்யூ படமாக மாறிப் போனது.

சமீபத்தில் வாழை படத்தின் வெற்றியைப் பார்க்கும் போது அத்தனை மகிழ்ச்சியாக இருந்தது. மக்கள் அழுத்தமான கதைக்கும் உண்மையான வாழ்வுக்கும் சிறப்பாகவே வரவேற்பு கொடுக்கிறார்கள். இது, தமிழ் சினிமாவுக்கு நல்ல செய்தி. இந்த நேரத்தில் மாரி செல்வராஜின் வாழை படத்தை விட அழுத்தமான கதையுடனும், ஒடுக்கப்பட்ட மக்களின் உண்மையான குரலாகவும் நந்தன் வருவது ரொம்பவே பொருத்தம்.
எளிய மக்களின் வலியைச் சொல்லவரும் நந்தன் படத்தில் இரா.சரவணனின் வழக்கமான அரசியல் நையாண்டியும், யூகிக்க முடியாத ட்விஸ்ட்களும் நிறைந்த கலகலப்பு அனுபவத்தை மிஸ் பண்ணிட்டீங்களே சூரி.



நந்தன் படத்தில் இரா.சரவணனின் வழக்கமான அரசியல் நையாண்டியும், யூகிக்க முடியாத ட்விஸ்ட்களும் நிறைந்த கலகலப்பு அ.....

பிள்ளைகளுக்கும் உண்டு மன அழுத்தம்..!பள்ளி, கல்லூரி வயதினருக்கு என்ன கவலை? எந்தப் பொறுப்பும் இல்லாமல் ஜாலியாகத் திரிகிறார...
02/09/2024

பிள்ளைகளுக்கும் உண்டு மன அழுத்தம்..!

பள்ளி, கல்லூரி வயதினருக்கு என்ன கவலை? எந்தப் பொறுப்பும் இல்லாமல் ஜாலியாகத் திரிகிறார்கள் என்று தான் நிறைய பெற்றோர் நினைக்கிறார்கள். இதில் கொஞ்சமும் உண்மை இல்லை. மிகவும் நன்றாகப் படிக்கும் மாணவி கூட, நீட் அனிதா போன்று தீவிர மன அழுத்தத்திற்கு ஆளாவது உண்டு. எனவே, கண்ணாடிப் பாத்திரம் போன்று பிள்ளைகளைக் கையாள்வதற்கு வழி காட்டும் ஒரு கவுன்சிலிங் சம்பவம்.

• நூறாண்டுகள் வாழ்வேன் என்று நம்பிக்கையுடன் வழி காட்டுகிறார் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம்.

• பயிற்சி மருத்துவ மாணவி பாலியல் கொலைக்கு யார் பொறுப்பு?

• சுன்னத் எனும் மூட நம்பிக்கை

• கிச்சன் மசாலா பாக்கெட்களில் விஷம்

• தெரு நாய்களிடம் திடீர் மாற்றம் ஏன்?

இன்னும் நிறைய ஆரோக்கியத் தகவல்களுடன் செப்டம்பர் ஞானகுரு யாக்கை வந்துவிட்டது.
இந்த லிங்க் மூலம் இணையம் சென்று அட்டையைத் தொடுங்கள். யாக்கை இதழ் விரியும். படித்து ஆரோக்கியம் பரப்புங்கள்.

இதையெல்லாம் பார்க்காம செத்துப் போயிட்டியே, வான் காஒரு பெண்ணுக்கு தன் காது அறுத்துக் கொடுக்கும் மனப்பிறழ்வு அல்லது காதல் ...
27/08/2024

இதையெல்லாம் பார்க்காம செத்துப் போயிட்டியே, வான் கா

ஒரு பெண்ணுக்கு தன் காது அறுத்துக் கொடுக்கும் மனப்பிறழ்வு அல்லது காதல் பித்தன் என்பதாலே நெஞ்சுக்கு நெருக்கமாக மாறிப்போன ஓவியன் வான் கா தரிசனம் லண்டனில் கிடைத்தது. வான்கா வாழ்ந்த 19ம் நூற்றாண்டின் இருட்டு நிறத்தில் செட் போட்டு 21ம் நூற்றாண்டு டெக்னாலஜியில் அவரது ஓவியங்களின் ஒவ்வொரு புள்ளியையும் பிரித்தெடுத்து வர்ண மழை பொழிய வைக்கிறார்கள்.

ஒவ்வொரு ஓவியம் உருவான கதையும் அட்டகாச டாக்குமெண்டரி. வான் கா ஓவியங்களின் அவுட்லைன் கொடுத்து, கலர் கொடுக்கச் செய்து நம்மையும் ஓவியராக்குகிறார்கள். ஒவ்வொரு ஓவியத்தின் முன்பும் சிலர் கால் மணி நேரம் நின்று ரசிக்கிறார்கள்.

வான் கா வரைந்து வைத்திருந்த அவனது அறை, அப்படியே நிஜமாக உருவாக்கப்பட்டுள்ளது. அந்த நாற்காலியில் அமர்வது, வான் கா முதுகைத் தொட்டுப் பார்க்கும் சிலிர்ப்பு தருகிறது. பிரமாண்ட 360 ஸ்டூடியோவில் வான் கா ஓவியங்கள் நம் உடல் மீதும் படர்ந்து ஓடுகிறது. ரயில் நம்மைச் சுற்றி நான்கு பக்கமும் ஓடுகிறது. பூக்கள், பறவைகள் லட்சக்கணக்கில் பறக்கின்றன. ஓவியங்களுக்கு ஏற்ப மாறும் இசைக் கோர்வை அத்தனை சுகம்.

நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்களுக்கு உருளைக் கிழங்கு மட்டுமே உணவாக வழங்கப்பட்ட அவலத்தைக் கண்டு, மனம் பதைத்து, அந்த காட்சியை ஆவணமாக்கியதே வான் கா முதல் ஓவியம்.
மனசுக்குப் பிடித்த மகிழ்வான காட்சிகளை கற்பனையில் வரைவதே சிறந்த ஓவியம் என்று கருதப்பட்ட காலத்தில் கண்ணுக்கு எதிரே தென்படும் சாதாரண காட்சிகளை எல்லாம் ஓவியமாக்கினான்.

ஓவியர்களால் விலக்கப்பட்ட கருப்பு, மஞ்சள் மற்றும் அடர் நிறங்களை அதிகம் பயன்படுத்தினான்.
தன்னுடைய 30 வயதில் ஓவியனாக மாறி 37 வயதுக்குள் கிட்டத்தட்ட 900 ஓவியங்கள் வரைந்தான். ஆனால், ஒரே ஒரு ஓவியம் கூட விற்கவில்லை.

வருமானமும் அங்கீகாரமும் கிடைக்காமல், துப்பாக்கியால் நெஞ்சில் சுட்டு தற்கொலைக்கு முயன்றான். மரணம் கூட இரண்டு நாட்கள் போராட்டத்துக்குப் பிறகே கிடைத்தது.

இன்று அவனது ஒரே ஓர் ஓவியம் மட்டுமே 38 மில்லியனுக்கு ஏலம் போயிருக்கிறது. வாழும் காலத்தில் மதிக்கப்படாத ஒரு மனிதனை இப்போது இத்தனை சிறப்பாகக் கொண்டாடினாலும், வெளியே வரும்போது மனசு வலிக்கிறது.

கிடுகிடு நடுக்கத்துடன் ஷேக்ஸ்பியர் நாடகம்நாடகம் என்றாலே நம்மூர் மக்கள் தலை தெறிக்க ஓடும் நிலையில், லண்டனில் இன்னமும் நிற...
21/08/2024

கிடுகிடு நடுக்கத்துடன் ஷேக்ஸ்பியர் நாடகம்

நாடகம் என்றாலே நம்மூர் மக்கள் தலை தெறிக்க ஓடும் நிலையில், லண்டனில் இன்னமும் நிறைய நாடகங்கள் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக அரங்கேறுகின்றன.

லயன் கிங் நாடகத்துக்கு ஆசைப்பட்டு டிக்கெட் தேடினால், 200 டாலராம். அதனால், ராயல் பாடனிக் கார்டனில் ஷேக்ஸ்பியரின், ‘மிட் சம்மர் நைட்ஸ் டிரீம்’ நாடகம் 10 ஆண்டுகளுக்கும் மேல் நடப்பதை அறிந்து ஆளுக்கு 50 பவுண்ட் கொடுத்துப் போனோம்.

திறந்தவெளி அரங்கம். 7:30 மணி நாடகத்துக்கு முன்கூட்டியே வந்து பெட்ஷீட் விரித்து, குட்டி நாற்காலியில் இடம் பிடித்து வெள்ளையர்கள் காத்திருக்கிறார்கள். எல்லோருடைய கைகளிலும் சரக்கு பாட்டில், சைஷீஸ் நிரம்பிவழிகிறது. ஜிலுஜிலு காற்றைத் தாங்க முடியாமல் நாங்கள் மட்டும் ஜெர்கின் போட்டும் நடுங்கிக் கொண்டிருந்தோம்.

துல்லியமாக ஒலிப்பதிவு செய்யப்பட்ட நாடகத்துக்கு மிரட்டலான லைட்ஸ் அண்ட் சவுண்ட்ஸ் கொடுத்து, நிஜம் போன்று நடிகர்கள் வாயசைத்து அசத்துகிறார்கள். தொழில்நுட்பத்தை மிகச்சரியாக பயன்படுத்தி நாடகத்தை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுவந்திருக்கிறார்கள். இரவு 9 மணி வரை இங்கு வெயில் அடிப்பதால் வெளிச்சத்தில் தொடங்கி இருட்டிலும் நாடகம் ஜொலிக்கிறது.

ஷேக்ஸ்பியர் படைப்புகளில் இது முழு நகைச்சுவை. தேவதைகளின் ராணிக்கு காட்டுக்குள் திருமணம் நடக்கும் நிலையில், மேலும் இரண்டு ஜோடி காதலர்கள் வந்து சேர்வதால் உருவாகும் குழப்பம் கும்மாளத்தைக் கண்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் வாய் விட்டு சிரிக்கிறார்கள். கிடுகிடுவென குளிரில் நடுங்கிக்கொண்டு, வசனத்தைப் புரிந்துகொள்ள முடியாமல் தவித்தபோது, கால் மணி நேரம் பிரேக் கொடுத்தார்கள். நைசாக நழுவினோம்.

1990களில் மதுரை சுண்ணாம்புக்காரத் தெருவில் வயதான நடிகர்கள் உதவித் தொகைக்கு சண்டை போட்ட காட்சி ஏனோ ஞாபகம் வந்தது.

நீங்களும் கடவுள் ஆகலாம்மண்ணில் இருந்து பானை செய்யலாம். பானை உடைந்து மீண்டும் மண்ணாகிவிடும். விதையில் இருந்து மரத்தை உருவ...
20/08/2024

நீங்களும் கடவுள் ஆகலாம்

மண்ணில் இருந்து பானை செய்யலாம். பானை உடைந்து மீண்டும் மண்ணாகிவிடும். விதையில் இருந்து மரத்தை உருவாக்கலாம். மரத்தை எரித்து சாம்பலாக்கலாம். சாம்பலை தண்ணீரில் கரைக்கலாம். எதையும் முற்றிலுமாக அழிக்க முடியாது.

ஒன்று மற்றொன்றாக மாறும், ஒன்றும் இல்லாததில் இருந்து எதையும் உருவாக்க முடியாது. இந்த வகையிலே பிரபஞ்சமும் பூமியும் உருவாகி இருப்பதால், கடவுளுக்கு இங்கு எந்த வேலையும் இல்லை என்கிறது அறிவியல்.
ஆம், கடவுள் மனிதருக்கு எதுவும் கொடுத்ததில்லை, எந்த ஒரு மனிதரின் உயிரை காப்பாற்றியதும் இல்லை.

அதேநேரம், கடவுளால் முடியாததை மனிதரால் செய்ய முடியும். கவலையில் இருப்பவர் மனதில் அன்பை உருவாக்கலாம். உங்களிடம் எதுவும் இல்லை என்றாலும் பிறருக்கு ஆறுதல் தரலாம். அந்த வகையில் நீங்கள் இறைவன் ஆகலாம்.

இன்னும்…
இசைராஜாவின் பேச்சு ஏன் இனிக்கவில்லை?
வயநாடு நிலச்சரிவுக்கு ஐயப்பன் கோபமே காரணமா?
கோழி தவம் செய்தால் நீங்கள் என்ன வரம் கொடுப்பீர்கள்?
உசேன் போல்ட் ரிலாக்ஸ் மந்திரம்,
சிற்றின்பமே பேரானந்தம்
இன்னும் நிறைய நிறைய மகிழ்ச்சி பெற, இங்குள்ள லிங்க் தொட்டுச்சென்று ஞானகுரு ஆவணி மகிழ்ச்சி இதழ் அட்டையைத் தொடுங்கள்..
இதழ் விரியும்.
படியுங்கள். மகிழ்ச்சியைப் பரப்புங்கள்.

https://gyaanaguru.com/index.php/magizchi-aug-2024/

வீட்டில் தொடங்கட்டும் வெற்றிகார் வாங்குவது, வீடு கட்டுவது, நிரந்தர முதலீடு, தொழில் தொடங்குவது என எதையெதையோ வெற்றி என்றும...
14/08/2024

வீட்டில் தொடங்கட்டும் வெற்றி

கார் வாங்குவது, வீடு கட்டுவது, நிரந்தர முதலீடு, தொழில் தொடங்குவது என எதையெதையோ வெற்றி என்றும் சாதனை என்றும் மனிதர்கள் நம்பி ஓடிக்கொண்டு இருக்கிறார்கள்.

நம் அருகில் இருக்கும் மனிதர்களை வெற்றி கொள்வதில் தான் உண்மையான மகிழ்ச்சி இருக்கிறது. குடும்பத்திலிருக்கும் நான்கு நபரை ஜெயிக்கும் முன்பு மற்ற சாதனைகளுக்கு ஆசைப்படாதீர்கள்.

வழி காட்ட விரைவில் வருகிறது.
ஆகஸ்ட் ஞானகுரு மகிழ்ச்சி.
படியுங்கள், பகிருங்கள்.

Address

Ranga Apartments, 2nd Main Road, Vengeeswar Nagar
Vadapalani
600026

Alerts

Be the first to know and let us send you an email when Ghanaguru Publication posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ghanaguru Publication:

Share