நம்ம தொகுதி வந்தவாசி

நம்ம தொகுதி வந்தவாசி வந்தவாசி&தொகுதி வளர்ச்சிக்காக& விழிப்புணர்வுக்காக

மாண்புமிகுமுன்னாள் முதலமைச்சரும்அதிமுக பொதுச் செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான  #எ...
15/08/2025

மாண்புமிகு
முன்னாள் முதலமைச்சரும்
அதிமுக பொதுச் செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான #எடப்பாடி_பழனிச்சாமி அவர்களை #வந்தவாசி தொகுதி மக்கள் சார்பில் வரவேற்கிறோம்.

நீங்கள் ஆட்சியில் இருந்த போதும் வந்தவாசி தொகுதிக்கு வளர்ச்சி திட்டங்கள் எதுவும் வரவில்லை ஒரே ஒரு திட்டத்தை தவிர போளூர் செய்யூர் தொழிற் வழித்தடம் அதில் வந்தவாசி நகருக்கு புறவழிச் சாலை அது ஒன்று மட்டுமே அதற்கு உங்களுக்கு தொகுதி மக்கள் சார்பில் நன்றி.

மாண்புமிகு முதலமைச்சர் M. K. Stalin அவர்கள் எதிர் கட்சி தலைவராக இருந்தபோது ஆரணியில் நடைபெற்ற உங்கள் தொகுதியில் ஸ்டாலின் எனும் நிகழ்ச்சியில் வந்தவாசி தொகுதியின் அவல நிலையை அவர் எடுத்துக் கூறி ஆட்சி அமைந்த உடன் வந்தவாசி தனியாக சிறப்பு அதிகாரி நியமித்து சிறப்பாக கவனிக்கப்படும் என்று கூறினார்.
அது ஆட்சி முடிய சில மாதங்களே உள்ள நிலையில் இதுவரை எந்த வளர்ச்சி திட்டங்களும் இல்லை அது கேட்க காதுகளுக்கு மட்டுமே இனிமையாக இருந்தது
அதேபோல் திமுகவின் தேர்தல் வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை வந்தவாசி தொகுதி மக்களுக்கு தேர்தல் வாக்குறுதிகள் கேட்க மட்டுமே இனிமையாக இருக்கும் செயல் முறையில் நடைமுறையில் வராது

அதேபோல் எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் தாங்கள் இன்று வந்தவாசி தொகுதி மக்களுக்கு இனிமையான வாக்குறுதிகளை மட்டும் சொல்லிவிட்டு சென்று விடுவீர்களா இல்லை அந்த இனிமையான வார்த்தைகளும் வந்தவாசி தொகுதி மக்கள் அனுபவிக்க கூடாது என்று வெறுமனே அரசியல் மட்டும் பேசி விட்டு சென்று விடுவீர்களா பொறுத்திருந்து பார்ப்போம்.

ஆனால் மாற்றம் மட்டும் வந்தவாசி தொகுதியில் வராது என்ற ஏக்கத்தில் தொகுதி மக்கள் .
AIADMK's IT Wing All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK) Edappadi K. Palaniswami

நாட்டின் 79 வது ஆண்டு சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் நம்ம தொகுதி வந்தவாசி  #வந்தவாசி
15/08/2025

நாட்டின் 79 வது ஆண்டு சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்
நம்ம தொகுதி வந்தவாசி
#வந்தவாசி

 #வந்தவாசி சட்ட மன்ற தொகுதியின்  #பல்வேறு_கோரிக்கைகளை நமது சட்ட மன்ற உறுப்பினர் அண்ணன்  ்பேத்குமார் அவர்கள் திருவண்ணாமலை...
07/08/2025

#வந்தவாசி சட்ட மன்ற தொகுதியின்
#பல்வேறு_கோரிக்கைகளை
நமது சட்ட மன்ற உறுப்பினர்
அண்ணன் ்பேத்குமார் அவர்கள்
திருவண்ணாமலை மாவட்ட #ஆட்சியர் அவர்களை
சத்தித்து மனுக்களாக அளித்தார்.

இதேபோல் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் M. K. Stalin அவர்களையும் துறை சார்ந்த அமைச்சர்களையும் சந்தித்து வந்தவாசி தொகுதிக்கு செயல்படுத்த வேண்டிய வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கோரிக்கை மனுவை நமது பாராளுமன்ற உறுப்பினர் M.S. Tharanivendan MP., அவர்களுடன் இணைந்து கொடுத்து அழுத்தம் கொடுத்து செயல்படுத்த கோறுகிறோம் .
Chief Minister of Tamil Nadu Udhayanidhi Stalin CMOTamilNadu E.V Velu K.N.NEHRU DMK - Dravida Munnetra Kazhagam

தமிழ்நாட்டில் மோசமான நகராட்சிகளில் இதுதான் முதலிடம்நாகரெங்கும் குப்பை குளங்களாக இருக்கும் நகராட்சிநகராட்சி துப்புரவு பணி...
06/08/2025

தமிழ்நாட்டில் மோசமான நகராட்சிகளில் இதுதான் முதலிடம்

நாகரெங்கும் குப்பை குளங்களாக இருக்கும் நகராட்சி

நகராட்சி துப்புரவு பணியாளர்கள் ஓரிடத்தில் இருக்கும் குப்பையை வேறொரு இடத்தில் முக்கியமான சாலை சந்திப்புகளில் வீசி செல்லும் நகராட்சி

கழிவுநீர் கால்வாய்க்கால் பராமரிக்கப்படாமல் பல இடங்களில் தூர்ந்து போய் கழிவு நீர் குளங்களாக காட்சியளிக்கும் நகராட்சி

நகராட்சியில் உள்ள பல பகுதிகளில் தெருவிளக்குகள் முறையாக பராமரிக்கப்படாமல் இருள் சூழ்ந்து காட்சியளிக்கும் அதிலும் ஒரு சாலையே (புதிய பேருந்து நிலைய அணுகு சாலை மற்றும் புதிய பேருந்து நிலையம் எப்பொழுதும் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படும் நகராட்சி

பூங்காக்களும் முறையாக பராமரிக்கப்படாத அவல நிலை உள்ள நகராட்சி

நகருக்கு வெளியூர்களில் இருந்து வரும் பொது மக்களுக்கு இயற்கை உபாதையை போக்கிக் கொள்ள பொது கழிப்பறைகள் இல்லாத அவல நிலை உள்ள நகராட்சி

மொத்தத்தில் நகராட்சிக்கு உண்டான எவ்வித அடிப்படை வசதிகளும் கட்டமைப்புகளும் இல்லாத பேரூராட்சியாக இருக்க கூட தகுதி இல்லாத ஒரு நகராட்சி

ஆனால் ஒரு விஷயத்தில் மட்டும் அதிரடியாக இறங்கி வசூல் வேட்டை அதுதான் வரி வசூல் வீடு தோறும் கடைகள் தோறும் அதிரடியாக இறங்கி மிரட்டல் தோனியிலும் அதிகார திமிர் பேச்சுகள் மூலமும் அதிரடி வரி வசூல் செய்து அந்தப் பணத்தில் என்ன வளர்ச்சி பணிகள் செய்கிறார்கள் என்று ஒரு புரியாத புதிராகவே உள்ள ஒரு நகராட்சி எது??

சரியான பதில் அளிப்பவர்களுக்கு அந்த நகராட்சியின் சிறப்பான சிறப்பான சிறப்பான #தலைவர் மூலம் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்.

M. K. Stalin Chief Minister of Tamil Nadu CMOTamilNadu Udhayanidhi Stalin E.V Velu K.N.NEHRU M.S. Tharanivendan MP., #வந்தவாசி

04/08/2025

#வந்தவாசியில் வெளுத்து வாங்கும் கனமழை

 #வந்தவாசியில் கோரைப்பாய் நெசவு பூங்கா அமைக்கப்படும் என்பது திமுகவின் தேர்தல் அறிக்கை  ஆனால் அதை செயல்படுத்த முடியாது என...
30/07/2025

#வந்தவாசியில் கோரைப்பாய் நெசவு பூங்கா அமைக்கப்படும் என்பது திமுகவின் தேர்தல் அறிக்கை ஆனால் அதை செயல்படுத்த முடியாது என்று சட்டமன்றத்திலேயே கைவிரித்துவிட்டது திமுக அரசு இது முழுக்க முழுக்க மாநில அரசே செய்து முடிக்க வேண்டிய திட்டம்

ஆனால் இதில் கண் துடைப்பு நாடகமாக மத்திய அரசிடம் வந்தவாசியில் பாய் நெசவு பூங்கா அமைக்கப்பட வேண்டும் என எழுத்து பூர்வமாக கோரிக்கை வைப்பது எந்த வகையில் நியாயம்

இதே ஆரணி தொகுதிக்கு கொடுக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதி படி பட்டு நெசவு பூங்கா அமைக்க நமது பாராளுமன்ற உறுப்பினர் அண்ணன் M.S. Tharanivendan MP., அவர்களின் முழு முயற்சியால் தமிழ்நாடு அரசின் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் மாண்புமிகு காந்தி அவர்கள் மூலம் ரூபாய் 44 கோடியே 69 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளன .

ஆனால் வந்தவாசி தொகுதியில் பாய் நெசவு பூங்கா தமிழ்நாடு அரசின் சிறு தொழில் கைத்தறி மற்றும் நெசவுத் தொழில் அல்லது ஒரு சிறப்பு திட்டத்தின் மூலம் பாய் நெசவு பூங்கா அமைக்க முடியாதா ஏன் வந்தவாசிக்கு மட்டும் இந்த ஓரவஞ்சனை 😭

நிச்சயம் இது மத்திய அரசால் நிறைவேற்றி தர முடியாது இந்த திட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் M. K. Stalin அவர்கள் வந்தவாசி சுற்றுப்பயணத்தின் போது நேரடியாக அத்தொழிலைச் சேர்ந்தவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கொடுத்த வாக்குறுதியாகும் மேலும் தேர்தல் நேரத்தில் கொடுத்த தேர்தல் வாக்குறுதி ஆகும் வாக்குறுதி கொடுத்தவர்களே நடைமுறைப்படுத்த மனதில்லாத நிலையில் மத்திய அரசிடம் கோரிக்கை வைப்பது வந்தவாசி மக்களை வஞ்சிக்கும் கபட நாடகமே
https://www.facebook.com/share/v/19Pkvpbtt2/
Chief Minister of Tamil Nadu Udhayanidhi Stalin CMOTamilNadu E.V Velu DMK - Dravida Munnetra Kazhagam Ranipet R.Gandhi

22/07/2025

Link in comment: இந்தியாவில் ஐரோப்பிய வல்லரசுகளின் விதியை தீர்மானித்த 'வந்தவாசி போர்' - என்ன நடந்தது?

 #வந்தவாசி தொகுதியில் மீண்டும் மூன்றாம் முறை திமுக வெல்லுமா கூறுங்கள் மக்களே ?முதல் ஐந்தாண்டு ஆட்சி அதிமுக உடையது அதனால்...
19/07/2025

#வந்தவாசி தொகுதியில் மீண்டும் மூன்றாம் முறை திமுக வெல்லுமா கூறுங்கள் மக்களே ?

முதல் ஐந்தாண்டு ஆட்சி அதிமுக உடையது அதனால் எதுவும் செய்ய இயலவில்லை என்று கூறினார் சட்டமன்ற உறுப்பினர்?

கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன் திமுக வந்தவாசிக்கு கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள்
1,வந்தவாசி தொகுதியில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி அமைக்கப்படும்
2,வந்தவாசி தொகுதிகள் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்படும்
3,வந்தவாசியில் பாய் நெசவு பூங்கா அமைக்கப்படும்
4,திருவண்ணாமலை மாவட்டம் முழுமைக்கும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் நிறைவேற்றப்படும்
5,இதேபோல் சட்டமன்ற உறுப்பினரும் பல தேர்தல் வாக்குறுதிகளை அளித்தார் அதில் வெண்குன்றம் மலையை சுற்றி கிரிவலப் பாதை அமைக்கப்படும் மேலும் பல

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் M. K. Stalin அவர்களும் கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக ஆரணியில் நடைபெற்ற உங்கள் தொகுதியில் ஸ்டாலின் எனும் நிகழ்ச்சியில் கோரிக்கை மனுக்களைப் பெற்ற போது வந்தவாசி தொகுதியின் மனுக்களையே அதிகம் பிரித்து படித்தார் அப்போது பேசிய அவர் வந்தவாசி தொகுதி மிகவும் பின்தங்கி தான் உள்ளது என்றும் பொறுத்ததுதான் பொறுத்தீர்கள் இன்னும் இரண்டு மூன்று மாதங்கள் பொறுத்துக் கொண்டால் கழக ஆட்சி அமைந்த உடன் வந்தவாசி தொகுதிக்கு தனியாக ஒரு அட்டென்ஷன் கொடுத்து கவனிக்கப்படும் அத்துணை வளர்ச்சி திட்டங்களும் கொண்டு வரப்படும் என்று நேரடியாக வாக்குறுதி அளித்தார்

இதில் எத்தனை வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன கடந்த ஐந்து ஆண்டுகளில் வந்தவாசி தொகுதிக்கு வந்த வளர்ச்சித் திட்டங்கள் என்ன பட்டியலிடுமா DMK - Dravida Munnetra Kazhagam

திருவண்ணாமலை மாநகரின் அசுர வளர்ச்சியை மாவட்ட அமைச்சர் E.V Velu அவர்கள் கண்ணும் கருத்துமாய் பார்த்துக் கொள்கிறார்.

நமது பாராளுமன்ற உறுப்பினர் அண்ணன் M.S. Tharanivendan MP., அவர்கள் ஆரணி தொகுதியின் வளர்ச்சியில் கவனம் செலுத்துகிறார்.

செய்யாறு தொகுதியின் வளர்ச்சியில் அரசும் அந்த சட்டமன்ற உறுப்பினர் அவர்களும் கவனம் செலுத்துகின்றனர்.

வந்தவாசி தொகுதியை பொறுத்தவரை (அனாதையாக) யாருடைய கடைக்கண் பார்வையும் இல்லை 50 ஆண்டுகாலம் பின்தங்கிய இந்தப் பகுதி வளர்ச்சி அடைய எவ்வித முன்னெடுப்பும் முயற்சியும் இல்லாமல் பின்தங்கியே உள்ளது தேர்தல் வாக்குறுதிகள் பல தொகுதியில் நடைமுறைப்படுத்தப்பட்டாலும் வந்தவாசி தொகுதியில் அது கானல் நீராகவே உள்ளது

மீண்டும் மூன்றாம் முறை திமுகவிற்கு வாக்களிக்கும் நிலையில் நீங்கள் உள்ளீர்களா என்பதை கூறவும்
Chief Minister of Tamil Nadu Udhayanidhi Stalin CMOTamilNadu K.N.NEHRU

18/07/2025

நாளை சனி(19:7:2025) வந்தவாசி பகுதியில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை அறிவிப்பு

 #வந்தவாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெளுத்து வாங்கும் கனமழை இது மேலும் நான்கு நாட்கள் நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் ...
16/07/2025

#வந்தவாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெளுத்து வாங்கும் கனமழை இது மேலும் நான்கு நாட்கள் நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
உங்கள் பகுதியில் மழை நிலவரம் என்ன?

13/07/2025

#வந்தவாசி நகரில் பொது நூலகம் மற்றும் அறிவு சார்ந்த மையம் அமைக்கப்பட வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ள சூழலில்
நூலகம் பல இடங்களில் மாறுதலாகி தற்போது புதிய பேருந்து நிலையத்தில் இயங்கி வருகிறது

அது நகரின் மையப் பகுதி கிடையாது பல இடங்கள் நூலகம் அமைக்க பார்க்கப்பட்டதாக சொல்லி வந்த நிலையில் அது முழுவதுமாக கைவிடப்பட்டுள்ளது ஆளும் திமுக அரசால் வந்தவாசி தொகுதி முழுவதுமாக கை விரிக்கப்பட்டு முழுமையாக புறக்கணித்து விட்டது

திமுக இந்த முறையும் வந்தவாசி தொகுதியை நன்றாக வச்சி செய்தது

இரண்டாவது முறையாக வாக்களித்து நம்பி ஏமாந்த வந்தவாசி தொகுதி மக்கள்

அடிப்படை வசதிகளான கழிவுநீர் கால்வாய் சுகாதார வசதிகளில் மோசமான நிலையில் தரமற்ற வந்தவாசி நகராட்சி நகரெங்கும் குப்பை கூலங்கள்

மக்கள் விளங்கிக் கொண்டார்கள் நிச்சயம் வரும் தேர்தலில் எதிரொலிக்கும் மக்களின் எண்ண ஓட்டம்.

கீழே உள்ள காணொளி #குடியாத்தம் நகரில் அமைக்கப்பட்டுள்ள நூலகம் மற்றும் அறிவு சார்ந்த மையம்
M. K. Stalin CMOTamilNadu Chief Minister of Tamil Nadu Udhayanidhi Stalin E.V Velu K.N.NEHRU M.S. Tharanivendan MP., Ambethkumar Mla

27/06/2025

#கூமாபட்டியின் தலைநகரமே நம்ம #வந்தவாசி தான்

Address

Vandavasi

Website

Alerts

Be the first to know and let us send you an email when நம்ம தொகுதி வந்தவாசி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share