29/01/2025
இனி அவரே நினைத்தாலும் தமிழக பாஜக தலைவர் பதவியிலிருந்து விலக முடியாது, அதுதான் உண்மை.
தமிழக பாஜகவில் வேறு யாரை யேனும் நியமித்தால் கட்சியில் மிகப்பெரிய அளவில் எதிர்ப்பிற்கு உள்ளாகும் என்பது கட்சி தலைமை இவ்வளவு நாளும் அவதானிக்காமலா இருந்திருக்கும்.
உலக நகர்வுகள் ஒவ்வொன்றையும் விரல் நுனியில் வைத்திருக்கும் பாஜக தலைவர்களுக்கு தன் கட்சி தொண்டர்களின் நாடி துடிப்பை அறிவதா கடினம்?
தமிழக பாஜகவை பொறுத்த மட்டில் அண்ணாமலைக்கு முன், அண்ணா மலைக்கு பின் என்று வகைப் படுத்தும் அளவிற்கு விஸ்வரூப வளர்ச்சியை கொண்டிருக்கிறது என்பது சின்ன குழந்தைக்கு கூட தெரியும்.
பாஜக என்னும் கட்சி மூலை முடுக்கெல்லாம் அறிமுகமாக அண்ணாமலையே காரணம். அண்ணாமலை கட்சி என்று கிராமத்து எளிய மக்கள் சொல்லும் அளவிற்கு அண்ணாமலை பாஜகவின் முகமாகி போனார்.
அவர் கட்சிக்கு கொடுத்திருக்கும் உழைப்பு ஏராளம். கட்சியை கடைகோடி தமிழன் வரை கொண்டு சென்றது அண்ணாமலை மட்டுமே.
கட்சிக்குள்ளும், கட்சி நிர்வாகத்திலும் ஆயிரம் சர்ச்சைகள் இருக்கலாம். அது நிர்வாக பிரச்சனை? எந்த கட்சிக்குள் தான் உள்கட்சி பிரச்சனை இல்லை சொல்லுங்கள் பார்க்கலாம்?
திராவிட கட்சிகளின் திருட்டுத் தனங்களை ஒவ்வொரு நாளும் விளாசிகொண்டிருக்கிறார் அண்ணாமலை. அண்ணாமலையை தமிழக பாஜகவினர் மட்டுமல்ல, தேசமெங்கும் இருக்கும் அனைத்து கட்சியினரும் கவனித்து கொண்டிருக்கிறார்கள்.
அண்ணாமலை என்றால் யார் என்று வடக்கில் இருக்கும் மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு கூட தெரியும். அவர் தேசிய முகம்.
திமுகவின் தகிடு தத்தங்களை தேசிய அளவில் கொண்டு சென்று இண்டி கூட்டணியில் இருந்து ஓரம் கட்ட செய்ததில் அண்ணாமலையின் பங்கு மிக அதிகம்.
சனாதன சர்ச்சை முதல் அண்ணா பல்கலைகழக பாலியல் கொடுமை வரை அனைத்தையும் வடக்கில் உள்ளவர்கள் கவனிக்கும் வகையில் அதை தோலுரித்தது அண்ணாமலை மட்டுமே.
அவரை தூக்கினால் திமுகவிற்கு மிகப்பெரிய சாதகமாகிவிடும். இதை அறியாதவர்கள் அல்ல மோடியும் அமித்ஷாவும், நட்டா ஜியும்.
அதற்காக பழைய தலைவர்களின் முந்தைய கால கட்சி பணிகளையும் அத்தனை சீக்கிரம் புறம் தள்ளி விடலாகாது.
இதுவரையிலும் எந்த கட்சியும் தன்னை வளர்த்துகொள்ள இவ்வளவு பலி தானிகளை தியாகம் செய்திருக்காது.
இந்து மதம் சார்ந்து பேசினாலோ, மதமாற்றத்தை தடுத்தாலோ, இந்து மத துவேஷங்களை தட்டி கேட்டாலோ அடுத்த நொடியே கொலைதான்.
அப்படி எத்தனை கொலைகளை இந்த தமிழகம் கண்டிருக்கிறது?
அந்த கொலைகளின் ரத்த துளிகளில் தானே பாஜக தமிழகத்தில் அஸ்திவாராம் இட்டது.
அப்படியான சூழலில் பாஜக என்னும் கட்சிக்காக குரல் கொடுக்க யார் வருவார்கள்? அதுவும் பெண்கள்?
பாஜவிற்கு செய்த பணிகளை திராவிட கட்சிகளில் இணைந்து செய்திருந்தால் பணம், பதவி, செல்வாக்கு என்று இன்று எப்படியோ இருக்கலாமே?
பாஜகவில் இருக்க வேண்டிய அவசியம் என்ன?
அவர்கள் இட்டது அஸ்திவாரம் என்றால் அண்ணாமலை செய்வது கட்டடம் எழுப்பும் பணி.
யாருடைய பணியும் ஒன்றிற்கு ஒன்று சளைத்தது அல்லது. தேசிய தலைமையை பொறுத்த மட்டில் யாரையும் விட்டு கொடுக்க முடியாது.
அண்ணாமலையை ஓரம் கட்டினால் என்னாகும் என்பதும் அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.
இப்போதைய முக்கிய நோக்கம் 2026 தேர்தலில் தமிழக சட்டமன்றத்தில் பாஜக சொல்லத்தகும் இடத்தில் மரியாதையுடன் அமர வேண்டும்.
அதற்கான வேலைகள் என்ன உண்டோ அதை செய்வதுதான் இப்போதைய உடனடி அவசியம். அதற்கான ஆலோசனையை தேசிய தலைமை செய்வதில் தவறே இல்லை.
அதுவரையிலும் பொறுமை காப்பது நல்லது. எதிர்மறை கருத்துக்களை சொல்லி கட்சி தொண்டர்களிடம் மனதளவில் தளர்ச்சியை உருவாக்காமல் கொஞ்சம் பொறுமை காப்பது நல்லது.
எல்லாம் நன்மைக்கே....
K.Annamalai
BJP Tamilnadu
Annamalai Fans H Raja Amar Prasad Reddy Ashvathaman Army Tamilisai Soundararajan Highlight BJP Followers Erode Dr.SG Suryah Vanathi Srinivasan Annamalai BJP