TMMK MEDIA

TMMK MEDIA this page was TMMK MMK page this page was trichy tmmk mmk .media page

தமிழ்நாட்டில் முஸ்லிம்கள் மக்கள் தொகைக்கு சமமாக அரசியல் பிரதிநிதித்துவம் இருக்கிறதா?வாருங்கள் மதுரைக்கு அரசியல் அதிகாரம்...
23/06/2025

தமிழ்நாட்டில் முஸ்லிம்கள் மக்கள் தொகைக்கு சமமாக அரசியல் பிரதிநிதித்துவம் இருக்கிறதா?

வாருங்கள் மதுரைக்கு அரசியல் அதிகாரம் மீட்டிட!
ஜூலை 6"

அழைக்கிறது
மனிதநேய மக்கள் கட்சி.

#மமகமாநாடு #மதுரைமாநாடு

திருச்சி கிழக்கு மாவட்ட ஆலோசனை கூட்டம்.தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்மனிதநேய மக்கள் கட்சி திருச்சி கிழக்கு மாவட்ட ஆல...
20/06/2025

திருச்சி கிழக்கு மாவட்ட ஆலோசனை கூட்டம்.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்
மனிதநேய மக்கள் கட்சி திருச்சி கிழக்கு மாவட்ட ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைவர் M.A.முகமது ராஜா அவர்கள் தலைமையில் மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

தமுமுக மாவட்ட செயலாளர் A.இலியாஸ்,மமக மாவட்ட செயலாளர் A.அஷ்ரப் அலி மற்றும் மாவட்ட பொருளாளர் M.A.காஜா மொய்தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தலைமை கழக பேச்சாளர் சகோதரர் கோவை சையது அவர்கள் கலந்து கொண்டு மாநாட்டின் நோக்கத்தை குறித்தும்,மாநாட்டின் வெற்றிக்கு மேற்கொள்ளும் பணிகள் குறித்தும் ஆலோசனை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

மேலும் இக்கூட்டத்தில் ஜூலை 6 அன்று மதுரையில் நடைபெற உள்ள இரட்டை கோரிக்கை மாநாடு சம்பந்தமாக ஆலோசிக்கப்பட்டு மாநாட்டின் விளம்பரங்களை மேம்படுத்தவும் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்தில் மாவட்ட துணை, அணி,பகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டு ஒருமனதாக தீர்மானங்களை நிறைவேற்றினர்.

#மமகமாநாடு #மதுரைமாநாடு

பதிவு நாள்: 20.06.25

மாவட்ட தலைமை அலுவலகத்தில் கொடியேற்றி நலத்திட்டங்களை வழங்கிய பொதுச் செயலாளர். மனிதநேய மக்கள் கட்சி 17 ஆம் ஆண்டு தொடக்கத்த...
07/02/2025

மாவட்ட தலைமை அலுவலகத்தில் கொடியேற்றி நலத்திட்டங்களை வழங்கிய பொதுச் செயலாளர்.

மனிதநேய மக்கள் கட்சி 17 ஆம் ஆண்டு தொடக்கத்தை தொடர்ந்து திருச்சி கிழக்கு மாவட்ட தலைவர் M..முஹம்மது ராஜா அவர்கள் தலைமையில் மாவட்ட தலைமை அலுவலகத்தில் கட்சி கொடி ஏற்றப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

கட்சியின் பொதுச் செயலாளர் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ப.அப்துல் சமது எம்.எல்.ஏ அவர்கள் கட்சிக்கொடியை ஏற்றி நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் துணைப் பொதுச்செயலாளர் தஞ்சை பாதுஷா மாநில தலைமை கழக பேச்சாளர் ரபிக் தகவல் தொழில் நுட்ப அணி மாநில துணைச் செயலாளர் நசீர் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மாவட்ட செயலாளர் A.அசரஃப் அலி, தமுமுக மாவட்ட செயலாளர் A.இலியாஸ் உள்ளிட்ட மாவட்ட துணை அணி நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

மேலும் இந்நிகழ்வில் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதி கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மனிதநேய மக்கள் கட்சியின் மகத்தான பணி!!! திருச்சி கிழக்கு மாவட்டத்தை சேர்ந்த லால்குடி நகரம் எலந்தக்குளம்  கிராமத்தைச் சேர...
04/02/2025

மனிதநேய மக்கள் கட்சியின் மகத்தான பணி!!!

திருச்சி கிழக்கு மாவட்டத்தை சேர்ந்த லால்குடி நகரம் எலந்தக்குளம் கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளி விஜயகுமார் (33) அவர்கள் தொழிலாளியாக சிங்கப்பூரில் வேலை செய்து வந்தார்.

அவர் 28.2.25 கடந்த செவ்வாய்க்கிழமை சிங்கப்பூரில் கடலில் குளிக்க செல்லும் போது கடல் அலையில் இழுத்துச் சென்று மரணமடைந்தார்.

இதனை தொடர்ந்து திருச்சி கிழக்கு மாவட்ட தமுமுக மமக தலைவர் M.A. முகமது ராஜா அவர்களிடம் மரணம் அடைந்தவரின் உறவினர்கள் உடலைக் கொண்டு வர வேண்டுகோள் வைத்ததால், மாவட்டத் தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின்படி மமக துணை செயலாளர் லால்குடி ரம்ஜான் அலி அவர்களின் தலைமையில், நாகூர் தம்பி ஷா மற்றும் அய்யம்பேட்டை செல்லப்பா அவர்களின் உதவியுடன் சிங்கப்பூரில் உடலை வாங்கி பெற்றுக் கொண்டு இன்று (4.2.25)மதியம் 3.30 மணி அளவில் திருச்சி விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட அன்னாரின் உடலை பெற்று திருச்சி கிழக்கு மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் உறவினருடன் வீடு வரை சென்று உடலை ஒப்படைத்தனர்.

இந்நிகழ்வில் விளையாட்டு செயலாளர் A.இப்ராஹிம்,மு.சையது முஸ்தபா, , நியு செனையா செளதி ரியாத் தமுமுக து.செயலாளர் S. நஜிமுதீன், சாந்தி நகர் கிளை தலைவர் M.முஹம்மது ஆரிப் ஆகியோர் இருந்தனர்.

TMMK MEDIA official group TMMK MEDIA நாகை தெற்கு Manithaneya Makkal Katchi

மலைக்கோட்டை மாநகரில் மமக-வின் விழா.மனிதநேய மக்கள் கட்சியின் 17ஆம் ஆண்டு தொடக்க விழாவை தொடர்ந்து கிழக்கு மாவட்ட தலைவர் M....
27/01/2025

மலைக்கோட்டை மாநகரில்
மமக-வின் விழா.

மனிதநேய மக்கள் கட்சியின் 17ஆம் ஆண்டு தொடக்க விழாவை தொடர்ந்து கிழக்கு மாவட்ட தலைவர் M.A.முகமது ராஜா தலைமையில் மாவட்ட ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

மமக மாவட்ட செயலாளர் A. அஷ்ரப் அலி,தமுமுக மாவட்ட செயலாளர் A.இலியாஸ் மற்றும் மாவட்ட பொருளாளர் M.A. காஜா மொய்தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்வில் மனிதநேய மக்கள் கட்சி-யின் 17ஆம் ஆண்டு தொடக்கத்தை தொடர்ந்து பிப்ரவரி 07 ஆம் தேதி முதல் திருச்சி கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட கிளைகள் அனைத்திலும் இரத்த தானம், ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்,கட்சியின் சாதனைகளை கொண்டு பேனர்கள்,கல்வி உதவி,முதியோர் மற்றும் பார்வையற்றோர் இல்லங்களுக்கு உணவளித்தல்,பொதுக்கூட்டங்கள் என பலதரபட்ட நிகழ்வுகள் கட்சியின் மாவட்ட செயலாளர் அஷ்ரப் அலி தலைமையில் ஒருங்கிணைத்து நடத்துவது என இக்கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் இந்நிகழ்வில் மாவட்ட துணை,அணி நிர்வாகிகள் கலந்து கொண்டு தீர்மானங்களை நிறைவேற்றனர்.

சட்டமேதையை அவமதித்த அமித்ஷாவை கண்டித்து திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்.மனிதநேய மக்கள் கட்சி  திருச்சி மாவட்டம் சார்பாக ...
20/12/2024

சட்டமேதையை அவமதித்த அமித்ஷாவை கண்டித்து திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்.

மனிதநேய மக்கள் கட்சி திருச்சி மாவட்டம் சார்பாக சட்ட மேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களை அவமதித்து பேசிய அமித்ஷாவை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சி மாவட்டம் தபால் நிலையம் அருகில்மேற்கு மாவட்ட செயலாளர் இப்ராஹிம் தலைமையில் கிழக்கு மாவட்ட தலைவர் M.A.முகமதுராஜா முன்னிலையில் நடைபெற்றது.

மாநில தலைமை கழக பேச்சாளர் கோவை சையது மாநில இஸ்லாமிய பிரச்சார பேரவை துணைச் செயலாளர் முஹம்மது ரபிக் மற்றும் மகளிர் அணி மாநில பொருளாளர் ஷான்ராணி ஆலிமா ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினார்.

இந்நிகழ்வில் கிழக்கு மாவட்ட செயலாளர்கள் அஷ்ரப் அலி,இலியாஸ் மேற்கு மாவட்ட செயலாளர் இப்ராஹிம் சா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேலும் இந்நிகழ்வில் கிழக்கு மாவட்ட பொருளாளர் காஜா மொய்தீன் மேற்கு மாவட்ட பொருளாளர் ஹுமாயூன் சமூக நீதி மாணவர் இயக்க மாநில துணைச் செயலாளர் ஆபீஸ் கான் ஆகியோர் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இப் போராட்டத்தில் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட துணை அணி பகுதி கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர்.

#அம்பேத்கர்

திருச்சி துவாக்குடி காவல் நிலையம் முற்றுகை..செப்டம்பர் 16 அன்று மக்களின் குரலாக மனிதநேய மக்கள் கட்சி நடத்திய சுங்கச்சாவட...
17/09/2024

திருச்சி துவாக்குடி காவல் நிலையம் முற்றுகை..

செப்டம்பர் 16 அன்று மக்களின் குரலாக மனிதநேய மக்கள் கட்சி நடத்திய சுங்கச்சாவடி முற்றுகை போராட்டத்தில் நிர்வாகிகள் மீது பல பொய் வழக்குகளுடன் சேர்த்து திருடியதாக வழக்கு பதிவு செய்த காவல் நிலைய அதிகாரிகளை கண்டித்து மாபெரும் முற்றுகை.

அனைத்து மாவட்ட,நகர,பேரூர்,கிளை கழக நிர்வாகிகள் தாயார் நிலையில் இருக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்துகிறது.

திருச்சி கிழக்கு மாவட்டம்.

மலைக்கோட்டை மாநகரில் இளைஞர்களின் எழுச்சி...!!!தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், மனிதநேய மக்கள் கட்சி திருச்சி கிழக்கு ...
18/08/2024

மலைக்கோட்டை மாநகரில் இளைஞர்களின் எழுச்சி...!!!

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், மனிதநேய மக்கள் கட்சி திருச்சி கிழக்கு மாவட்டத்தில் சமூகம் மற்றும் அரசியல் பணிகளால் கவரப்பட்டு சமஸ்பிரான் தெரு,காமராஜ் நகர்,காட்டூர் கிளையை சார்ந்த இளைஞர்கள் தன்னெழுச்சியாக மாவட்ட தலைவர் M.Aமுஹம்மது ராஜா தலைமையில்

மாநிலத் தலைவர் பேராசிரியர் M.H.ஜவாஹிருல்லா MLA, பொதுச் செயலாளர் ப.அப்துல் சமத் MLA மற்றும் மாநில பொருளாளர் பொறியாளர் சபியுல்லாகான் மற்றும் மாவட்ட செயலாளர் அஷ்ரப் அலி முன்னிலையில் இளைஞர்கள் தமுமுக,மமகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

இந்நிகழ்வில் மாநில து.பொதுச்செயலாளர் தஞ்சை பாதுஷா,மாநில அமைப்பு செயலாளர் புழல் ஷேக், மாவட்டத் துணைத் தலைவர் முஸ்தபா, மாவட்ட துணை செயலாளர் ரஹ்மத்துல்லாஹ்,மாவட்ட விளையாட்டு அணி செயலாளர் இப்ராஹிம், இளைஞர் அணி செயலாளர் முஜீப், மாவட்ட விழி அணி செயலாளர் ஜின்னா மற்றும் மாவட்ட துணை அணி பகுதி கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பதிவு நாள் : 18.08.24

திருச்சியில் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு..!!!தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் திருச்சி கிழக்கு மாவட்டம் துறையூர் நகரம் சித...
17/01/2024

திருச்சியில் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு..!!!

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் திருச்சி கிழக்கு மாவட்டம் துறையூர் நகரம் சித்திரைப்பட்டி கிளை சார்பாக மாவட்ட தலைவர் M.A.முஹம்மது ராஜா தலைமையில் 17.01.24) மாலை 7.00 மணிக்கு நடைபெற்றது.

தமுமுக மாவட்ட செயலாளர் A.இலியாஸ்,மமக மாவட்ட செயலாளர் அஷ்ரப் அலி,மாவட்ட பொருளாளர் காஜா மொய்தீன் மற்றும் துணை அணி நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மருத்துவ உதவி, இரத்த தானம்,ஆம்புலன்ஸ்கள் சேவை மற்றும் கொரோனா நோய் தொற்று காலங்களிலும் பணிகள் செய்ததை அறிந்து துறையூரில் வசிக்கும் தருண்குமார் அவர்களின் தகப்பனார் T.மகாலிங்கம் Ex.Army அவர்களும் அவர்கள் குடும்பத்தார்களும் அனைத்து சமுதாய மக்களும் பயன்பெறுவதற்காக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்திடம் ஆம்புலன்சை வழங்கினார்கள்.அது பொதுமக்கள் பயன்பாட்டிற்கு துறையூர் சித்திரை பட்டி கிளையில்மமக பொதுச் செயலாளர் ப.அப்துல் சமத் MLA அவர்கள் அனைத்து சமுதாய மக்களும் பயன் பெறுவதற்காக ஆம்புலன்ஸை அர்ப்பணித்து சிறப்புரை ஆற்றினார்.

மேலும் மாநில துணை பொதுச் செயலாளர் தஞ்சை பாதுஷா,தலைமை கழக பேச்சாளர் முகமது ரபீக்,மாநில செயற்குழு உறுப்பினர் ஃபாருக் மஹாராஜா சிறப்புரை ஆற்றினார்கள்.

இந்நிகழ்வில் துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார்,ஊராட்சி ஒன்றிய பிரதிநிதிகள் உட்பட துணை,அணி நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

மலைக்கோட்டை மாநகரின் செயல்வீரர்கள் கூட்டம்...!!!தமுமுக,மமக திருச்சி கிழக்கு மாவட்டத்தின் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் மா...
10/10/2023

மலைக்கோட்டை மாநகரின் செயல்வீரர்கள் கூட்டம்...!!!

தமுமுக,மமக திருச்சி கிழக்கு மாவட்டத்தின் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் மாவட்ட தலைவர் M.A.முகமது ராஜா அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

தமுமுக மாவட்ட செயலாளர் இலியாஸ்,மமக மாவட்ட செயலாளர் அஷ்ரப் அலி மற்றும் மாவட்ட பொருளாளர் காஜா மொய்தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில பொருளாளர் N. சபியுல்லா கான்,மாநில துணை பொதுச் செயலாளர் தாம்பரம் யாக்கூப் MC,திருச்சி மாவட்ட பொறுப்பாளரும்,மாநில து.பொதுச் செயலாளருமான தஞ்சை பாதுஷா,தலைமை பிரதிநிதி மண்டலம் ஜெய்னுளாபுதீன் தலைமை கழக பேச்சாளர் முகமது ரபீக் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை நிகழ்த்தினர்.

மேலும் இந்நிகழ்வில் மாநில துணை நிர்வாகிகள்,மாவட்ட துணை, அணி நிர்வாகிகள்,கிளை கழக நிர்வாகிகள் உட்பட உறுப்பினர்கள் பெருவாரியாக கலந்து கொண்டனர்.

TMMK MEDIA official group

அநீதிக்கு எதிராய் ஆர்ப்பரித்த தமுமுக...!!!திருச்சி மேற்கு மாவட்டம் உறையூர் பகுதியில் மமக கொடி கம்பங்களை அகற்றிய காவல் து...
13/02/2023

அநீதிக்கு எதிராய் ஆர்ப்பரித்த தமுமுக...!!!

திருச்சி மேற்கு மாவட்டம் உறையூர் பகுதியில் மமக கொடி கம்பங்களை அகற்றிய காவல் துறை மற்றும் மாநகராட்சி நிர்வாகிகளை கண்டித்து சாலை மறியல் நடைபெற்றது.

கிழக்கு மாவட்ட தலைவர் முகமது ராஜா தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட தமுமுக,மமக நிர்வாகிகள் கலந்து கொண்டு அகற்றிய கொடி கம்பங்களை அகற்றிய இடத்திலேயே அமைத்து தரவேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

கோரிக்கையின் பெயரில் கொடி கம்பங்களை அமைத்து தருவோம் என உறுதியாக கூறிய நிலையில் மறியல் முடித்து களைந்தனர்.

எல்லா புகழும் இறைவனுக்கே....!!!

தமுமுக சார்பாக காவல் துறைக்கு நன்றிகள்..!!!திருச்சி சுற்றுலாத்தலமான நத்தர்ஷா  பள்ளிவாசல்(தர்கா) பகுதியில் டீ கடை மற்றும்...
04/02/2023

தமுமுக சார்பாக காவல் துறைக்கு நன்றிகள்..!!!

திருச்சி சுற்றுலாத்தலமான நத்தர்ஷா பள்ளிவாசல்(தர்கா) பகுதியில் டீ கடை மற்றும் உணவகங்களை இரவு 10மணிக்கு அடைக்க கூறி ஒரு வாரமாக காவல் துறை அதிகாரிகள் கெடிபுடியாக நடந்துகொண்டார்.

இதை தொடர்ந்து தமுமுக, மமக கிழக்கு மாவட்ட தலைவர் முகமது ராஜா அவர்கள் தலைமையில் மாவட்ட செயலாளர் அஷ்ரப் அலி,மாவட்ட பொருளாளர் காஜா உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் காவல் துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு இரவு நேரங்களில் கடைகளை நடத்த அனுமதி கோரினர்.

கோரிக்கையை ஏற்று இரவு 12மணி வரை கடைகளை திறந்து வைக்க அனுமதி அளித்த மாநகர காவல் ஆணையர்,உளவுத்துறை அதிகாரிகள் மற்றும் கோட்டை காவல் நிலைய காவளர்களுக்கும் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள்

Address

PALAKKARAI
Villupuram
620008

Telephone

+919025300389

Website

Alerts

Be the first to know and let us send you an email when TMMK MEDIA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share