விக்கிரவாண்டி-பக்கம்

விக்கிரவாண்டி-பக்கம் எண்ணங்களில் புதுமை..
எழுத்தில் நேர்மை..
பொதுவாழ்வில் தூய்மை...
(1)

25/06/2025

இணையத்தில் தென்பட்டது...

உடனடி ஆட்கள் தேவை .!!சென்னை பாடியில் இயங்கி வரும் துணிக்கடைக்கு ஆட்கள் தேவை.* தேவைப்படும் நபர்கள் -10 பேர். * உணவு மற்று...
22/06/2025

உடனடி ஆட்கள் தேவை .!!

சென்னை பாடியில் இயங்கி வரும் துணிக்கடைக்கு ஆட்கள் தேவை.

* தேவைப்படும் நபர்கள் -10 பேர்.
* உணவு மற்றும் தங்குமிடம் இலவசம்.

தொடர்புக்கு: 9941861686

இவ்வளவுதான் வாழ்க்கை....Cast Away  திரைப்படத்தில், டாம் ஹாங்ஸும் அவரது சகாக்களும் சென்ற விமானம் எதிர்பாராத விதமாக கடலில்...
02/06/2025

இவ்வளவுதான் வாழ்க்கை....

Cast Away திரைப்படத்தில், டாம் ஹாங்ஸும் அவரது சகாக்களும் சென்ற விமானம் எதிர்பாராத விதமாக கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகிறது.

தனது சகாக்கள் அனைவரும் விபத்தில் இறந்து போக, டாம் ஹாங்கஸ் மாத்திரம் அதிஷ்டவசமாக உயிர் தப்புகிறார்.
கடல் அவரை மனித நடமாட்டம் எதுவுமே இல்லாத ஒரு தொலைதூர தீவில் கொண்டு வந்து
கரை ஒதுக்குகிறது.

ஆம்... யாருமில்லாத தீவு.... வாழ்வதா...? அல்லது சாவுக்கு சரணடைவதா? என்ற மனப் போராட்டம் ஹாங்கிஸிடம் ஆரம்பிக்கிறது. சாவுக்கு சரணடைய மறுக்கிறார். தன் மனைவி, பிள்ளைகள் நண்பர்கள் மற்றும் தான் வாழ்ந்த உலகம் மீண்டும் கிடைக்கும் என்ற நம்பிக்கை அவரிடம் பிறக்கிறது.

உயிர் வாழ வேண்டுமென்ற உள்ளுணர்வு
ஏற்படுகிறது. ஆனால் மனித நடமாட்டம் அற்ற தீவில் எப்படி உயிர் பிழைத்து வாழ்வது...?
மரங்களில் ஏறி இருந்த கனிகளை சாப்பிடுகிறார். கடலில் இறங்கி கிடைத்த மீன்களை பிடித்து பசியை போக்குகிறார்.

தன் பார்ஸிஸ் இருந்த மனைவி, பிள்ளை குட்டிகளின் படத்தை எடுத்து அவ்வப்போது பார்த்துக்கொள்கிறார். ஒரு கைப்பந்தில் ஒரு முகத்தை வரைந்து அதற்கு "வில்ஷன்" என்று பெயரிட்டு அதனை தனது உற்ற நண்பனாக்கி, அவருடன் பேசி மகிழ்கிறார்.

அங்கே மலை உச்சியில் ஏறி ஒரு கொடியை நாட்டுகிறார். நெருப்பை மூட்டிப் பார்க்கிறார்
வருகின்ற, போகின்ற கப்ல்கள் அவரை அடையாளம் கண்டு, அவரை காக்க வரும் என்று நம்புகிறார்.

நாட்கள் உருண்டோடுகின்றன. இப்படியே அங்கே சில வருடங்களைக் கழிக்கிறார். ஆனாலும் நம்பிக்கை இழக்க வில்லை. அன்பு மனைவி, பாசமான பிள்ளைகள் உயிர் நண்பர்கள் மறு பக்கத்தில் தனக்காக இருப்பார்கள் என்ற நம்பிக்கை அவரை உற்சாகப் படுத்துகிறது.

இந்த நம்பிக்கை அவரை உயிர் வாழ ஊக்குவிக்கிறது. கடைசியாக பல நாள் பாடுபட்டு மரக்கட்டைகளால் ஒரு படகு செய்கிறார். அதில் ஏறி நம்பிக்கையோடு கடலில் குதிக்கிறார். கடல் அலைகள் தரும் மரண பயத்தை மீறிப் பயணிக்கிறார். பிறகு அதிஷ்டவசமாக வந்த ஒரு கப்பல் அவரை இனங்கண்டு பாதுகாத்து மீட்கிறது. மட்டற்ற மகிழ்ச்சியுடன் தான் வாழ்ந்த உலகம் நோக்கிச் செல்கிறார்.

ஆனால் அங்கே அவருக்கு ஏமாற்றம் காத்திருந்தது. அவரது அன்பு மனைவி கொஞ்ச காலம் அழுது விட்டு, அவர் இறந்ததாக நினைத்து மறு மணம் செய்துகொண்டிருப்பதைக் காண்கிறார். அவரது பிள்ளைளும், நண்பர்களும் அவர் இறந்ததாக நினைத்து சில நாட்கள் துக்கம் அனுஷ்டித்துவிட்டு, மறந்து வாழ்வதைப் பார்க்கிறார்.

யாரும் அவரை அங்கே தேடிக்கொண்டோ, நினைத்துக்கோண்டோ இருக்கவில்லை.
உலகம் அதன் பாட்டில் ஆரவாரமின்றி
ஓடிக்கொண்டிருப்தைக் காண்கிறார்.

◼ நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்!
நீங்கள் பல்லாண்டுகளாக படும் கஷ்டங்கள்
இன்னல்கள்.பலவற்றக்கும், இவ்வளவு பாடுபடத் தேவையில்லை என்பதை ஒரு நாள் தெரிந்து கொள்வீர்கள்

◼ நீங்கள் உலகை விட்டும் மறைந்த பிறகு உங்கள் முயற்சிகள் பலவற்றுக்கு மதிப்போ மரியாதையோ இருக்காது.

◼ முதலில் நீங்கள் உங்களுக்காகவும், உங்கள் ஆத்தும நலனுக்காகவும் வாழப் பழகுங்கள்.

◼ நீங்கள் மறைந்த பிறகு இந்த உலகம் அதன் ஓட்டத்தை நிறுத்தாது.

கேரளாவில் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாய் விளங்கும்  நுழைவு வாயில்..!!பாதி பள்ளிவாசலுக்கு - மீதி கோயிலுக்கு...!!த...
16/05/2025

கேரளாவில் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாய் விளங்கும் நுழைவு வாயில்..!!
பாதி பள்ளிவாசலுக்கு - மீதி கோயிலுக்கு...!!

திருவனந்தபுரத்தை அடுத்த வெஞ்ஞாறமூடு-க்கு அருகே அமைந்துள்ளது மேலேகுற்றிமூடு கிராமம். மெயின் ரோட்டில் இருந்து மேலேகுற்றிமூடு சாமூண்டீஸ்வரி கோயிலுக்கும், பாறையில் பள்ளிவாசலுக்கும் சாலையில் அமைக்கப்பட்டுள்ள ஒரே நுழைவுவாயில், மதநல்லிணக்கத்தை பறைசாற்றுவதாக அமைந்திருக்கிறது.

அரசியல் கட்சிகள், அமைப்புகள் ரீதியாக பின்னிப்பிணைந்தவர்கள் கேரள மக்கள். அரசியல் ரீதியாக பல மோதல்கள் நடைபெற்றாலும் மத நல்லிணக்கத்துக்காக பல முன்னெடுப்புகளை செய்துவருகின்றனர். தி கேரளா ஸ்டோரி என்ற சினிமா மூலம் கேரளா மாநிலத்தில் மதங்களுக்குள் பிரச்னை இருப்பதாக காட்டப்பட்டது. ஆனால், உண்மையான கேரளா ஸ்டோரி அதுவல்ல என உணர்த்தும் வகையில் பல நிகழ்வுகள் அம்மாநிலத்தில் நடந்துவருகின்றன. அதற்கு ஒரு ஆச்சர்ய எடுத்துக்காட்டுதான் மேலேகுற்றிமூடு கிராமம். மேலேகுற்றிமூடு சாமூண்டீஸ்வரி ஆலயம் மற்றும் பாறையில் பள்ளிவாசல் ஆகியவற்றுக்கு ஒரே நுழைவு வாயில் அமைக்கப்பட்டுள்ளது. இரும்பால் அமைக்கப்பட்டுள்ள ஆர்ச்சின் ஒரு பாதியில் சிவப்பு வண்ணத்தில் மேலேகுற்றிமூடு ஸ்ரீ சாமூண்டேஸ்வரி கோயில் என எழுதப்பட்டுள்ளது. மறு பாதியில் பச்சை வண்ணத்தில் பாறயில் மஸ்ஜித் மேலகுற்றிமூடு எனவும் எழுதப்பட்டுள்ளது. கோயிலுக்கும், பள்ளிவாசலுக்கும் ஒரே நுழைவு வாயில் அமைக்கப்பட்டுள்ளது வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்குதான் ஆச்சர்யமான காட்சி. ஆனால், இதெல்லாம் இங்கு சாதாரணம் என கடந்துபோகிறார்கள் மேலேகுற்றிமூடுவாசிகள்.

மேலேகுற்றிமூடு நுழைவு வாயில் வழியாக கிராமத்துக்குள் பயணப்பட்டோம். முதலில் எதிர்பட்டது சாமூண்டீஸ்வரி கோயில். சாமூண்டீஸ்வரி அம்மனை பிரதான தெய்வமாககொண்ட அந்த கோயிலில், கணபதி, நாகர் உள்ளிட்ட சன்னதிகள் அமைந்துள்ளன. அம்மனை வழிபட்டுவிட்டு வெளியேவந்த கோயில் செயலாளர் சரத்திடம் பேச்சுகொடுத்தோம், "எங்கள் மூதாதையார் காலத்தில் இருந்தே சாமூண்டீஸ்வரி கோயில் உள்ளது. இங்கு சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பு கண்ணாடியும், வாளும் கருவறையில் வைத்து வழிபட்டனர். எங்கள் மூதாதையரான தாத்தா ஒருவர் பயன்படுத்திய தடிக்கம்பு (ஊன்றுகோல்) ஒன்றும் கோயிலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளது. அந்த காலத்தில் ஓலை கூரை வேயப்பட்டு கோயில் அமைக்கப்பட்டிருந்தது. பின்னர் ஓடு வேயப்பட்டது. இப்போது நாங்கள் கோயிலை புனரமைத்து கடந்த அஅண்டு ஜனவரி மாதம் கும்பாபிஷேகம் நடத்தினோம். எங்கள் கோயிலுக்கு பக்கத்திலேயே பாறையில் மஸ்ஜித் அமைந்துள்ளது.
சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு அந்த இஸ்லாம் பள்ளிவாசலுக்காக கிராமத்தின் தொடக்கத்தில் ஒரு ஆர்ச் அமைக்கப்பட்டது. அந்த ஆர்ச்சில் பள்ளிவாசலின் பெயர் மட்டுமே எழுதப்பட்டிருந்தது. இதற்கிடையே சாமூண்டீஸ்வரி கோயில் கும்பாபிஷேகம் சமயத்தில் பள்ளிவாசல் கமிட்டி நிர்வாகிகள் எங்களிடம் வந்து 'கோயிலுக்கு ஆர்ச் அமைக்க இடம் இல்லை என்பதால் பள்ளிவாசலுக்காக வைக்கப்பட்ட ஆர்ச்சில் பாதி-யை கோயில் நுழைவு வாயிலாக பயன்படுத்திக்கொள்ளுங்கள்' என்றனர். நாங்களும் மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டு அவர்கள் பள்ளிவாசலுக்காக அமைத்த ஆர்ச்சின் பாதியில் சாமூண்டீஸ்வரி கோயில் நுழைவு வாயில் என எழுதினோம். மீதி பாதியில் பள்ளிவாசலின் பெயரை அவர்கள் எழுதி உள்ளனர்.

கேரளாவின் மத ஒற்றுமையை பறைசாற்றி நிற்கிறது இந்த ஆர்ச். எங்கள் பகுதியில் இந்துக்களும், இஸ்லாமியர்களுக்கும் ஒற்றுமையாக வாழ்ந்துவருகிறோம். ரம்ஜான் உள்ளிட்ட பண்டிகைகளின்போது நாங்கள் பாறையில் பள்ளிவாசலில் செல்வோம். ஓணம் பண்டிகை, கோயில் விழாக்களிலும் இஸ்லாமியர்கள் கலந்துகொள்வார்கள். கோயில் விழாவுக்காக இஸ்லாமியர்கள் நன்கொடை வழங்குவார்கள், கோயிலுக்கு வந்து ஊதுபத்தி ஏற்றிவைத்து பிரார்த்தனை செய்வார்கள். முன்பு எங்கள் கோயில் கமிட்டி செயலாளராக இஸ்லாமியரான நெளஷாத் உள்ளிட்ட பலர் இருந்துள்ளனர். இப்போதும் கோயில் திருவிழாவின்போது அவர்களும் பங்களிப்பு செய்யும் அளவுக்கு நாங்கள் ஒற்றுமையாக இருந்துவருகிறோம்" என பெருமிதத்துடன் கூறினார் சரத்.

கோயிலைத் தாண்டி சுமார் 50 அடி தூரம் நடந்து சென்றாலே பாறையில் மஸ்ஜித் பள்ளிவாசலை அடைந்துவிடலாம். பள்ளிவாசலை ஒட்டி அரச மரம், வில்வ மரம், கனிக்கொன்றை மரங்கள் நிற்கின்றன. பாறையில் மஸ்ஜித் செயலாளர் ரஷீத் சுளிமானூர் நாம் செல்லும்போது பள்ளிவாசலில் அமர்ந்திருந்தார். நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டு ஆர்ச் குறித்த தகவலை அவரிடம் கேட்டோம். உற்சாகமாக பேசத் தொடங்கினார் ரஷீத் சுளிமானூர், "75 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதி கள்ளிக்காடாக இருந்தது. பள்ளிவாசல் அமைந்துள்ள பகுதி முன்பு பாறையாக இருந்தது. அப்போது அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களும் இங்கு விளக்கேற்றி வழிபடுவதை வழக்கமாக கொண்டிருந்தனர். இஸ்லாமிய துறவியர் இரண்டு பேர் இங்கு வந்து வாழ்ந்ததாகவும், அவர்கள் அடக்கம் செய்யப்பட்ட பகுதி இங்கு இருப்பதாகவும் தெரியவந்தது. அதன் பின்னர் இங்கு பள்ளிவாசல் அமைக்கப்பட்டது. அதன் பிறகும் அனைத்து சமயத்தவர்களும் இங்கு வந்து பிரார்த்தனை செய்வார்கள். சாமூண்டீஸ்வரி கோயில் புனர் பிரதிஸ்டையின்போது அர்ச்சகர் வந்து பூஜைகள் செய்தார். அப்போது பூஜையில் ஏதோ குறைபாடு உள்ளதாக அர்ச்சகர் மனதில் தோன்றியுள்ளது. ஏதோ யோசித்தவர் இந்த பள்ளிவாசலில் பட்டும், பூஜை பொருட்களும் வழங்கும்படி அங்குள்ள மக்களிடம் கூறினார். அதன்பிறகு கோயிலில் பூஜைகள் நிறைவாக நடத்தப்பட்டன.

சாமூண்டீஸ்வரி கோயில் புனர் நிர்மானம் செய்யப்பட்ட பிறகு அவர்களுக்காக ஆர்ச் அமைக்க இடம் இல்லையே என நான் யோசித்தேன். ஒரே பகுதியில் இரண்டு ஆர்ச் அமைக்கமுடியாது. எனவே, பள்ளிவாசலுக்காக அமைக்கப்பட்டுள்ள ஆர்ச்சின் பாதியை கோயிலுக்காக கொடுக்கலாம் என எனது ஆசையை மஸ்ஜித் கமிட்டியினரிடம் வெளிப்படுத்தினேன். கமிட்டியினரும் கைதட்டி வரவேற்று தீர்மானம் நிறைவேற்றினர். பின்னர் சாமூண்டீஸ்வரி கோயில் கமிட்டியினரிடம் நான் எங்கள் தீர்மானத்தைச் சொன்னதும் அவர்கள் மகிழ்ச்சியடைந்தனர். பின்னர் நுழைவுவாயிலை பங்கிட்டுக்கொண்டோம். இது மதநல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டு என அனைவரும் பாராட்டுகிறார்கள். பாராட்டுக்காக நாங்கள் இதைச் செய்யவில்லை. மதம் எதுவாக இருந்தாலும் மனிதம்தான் முக்கியம் என்பது எங்கள் கொள்கை" என்று புன்னகைத்தார்.

நன்றி - விகடன்

அப்ப நீ ஓணர் இல்லையா ...
15/05/2025

அப்ப நீ ஓணர் இல்லையா ...

28/04/2025

தமிழ்நாடு பாஜகவின் லேட்டஸ்ட் ஊழல் அம்பலம்..?!செமி கண்டக்டர் துறையில் எந்த முன் அனுபவமும் இல்லாத முருகப்பா குழுமத்தின்......
26/04/2025

தமிழ்நாடு பாஜகவின் லேட்டஸ்ட் ஊழல் அம்பலம்..?!

செமி கண்டக்டர் துறையில் எந்த முன் அனுபவமும் இல்லாத முருகப்பா குழுமத்தின்... செமி கண்டக்டர் ஆலைக்கு... மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசின் அமைச்சரவை... ஒப்புதல் வழங்கிய உடனே... ஒரே தவணையில்... 125 கோடி "நன்கொடை நிதி"(?!)யை... தமிழ்நாடு பாஜகவுக்கு முருகப்பா குழுமம் வழங்கியது தற்போது அம்பலமாகி உள்ளது.

நன்றி : Mohammed Ashik

இது.... ஊழலா... ஊறுகாயா..?!

#பாஜக #மோடி #ஊழல் #செமிகண்டக்டர் #125கோடி

சோவியத் யூனியன் எனும் ரஷ்யா 1979 முதல் 1989 வரை ஆப்கானிஸ்தான் மீது கடுமையாக போர் புரிந்தது,மிகவும் இலகுவாக வென்று விடலாம...
16/03/2025

சோவியத் யூனியன் எனும் ரஷ்யா 1979 முதல் 1989 வரை ஆப்கானிஸ்தான் மீது கடுமையாக போர் புரிந்தது,

மிகவும் இலகுவாக வென்று விடலாம் என போரிட்ட ரஷ்யா,
ஆப்கானிய வீரர்களை சமாளிக்க முடியாமல் 10 ஆண்டுகள் திணறி வந்தது,

போரின் போது ரஷ்ய படையினர் ஆப்கானிய பெண்களை கும்பல் கும்பலாக கற்பழித்து கொன்று குவித்தது..

போர் நீண்ட காலம் நீடிக்க அங்க உள்ள ரஷ்ய இராணுவ அதிகாரிகள் தங்கள் மனைவி மக்களை பார்க்க வேண்டும் என ரஷ்ய அதிபர் கோர்பசேவ்விடம் கோரிக்கை விடுத்தனர்,

அவரும் அவர்களின் கோரிக்கைகளை ஏற்று அவர்கள் மனைவிமார்களை பல இராணுவ டிரக்கில் ஏற்றி அனுப்பினார்...

டிரக்குகள் எதிர்பாராத விதமாக ஆப்கான் படையினரிடம் சிக்க, அவர்களை கடத்தி சென்று பாதுகாப்பான இடங்களில் அடைத்து வைத்து, ரஷ்யாவிடம் பல கோரிக்கை விடுத்தனர்,

கிட்ட தட்ட 3 மாதம் நடந்த பேச்சு வார்த்தையில் ஒரு சில கோரிக்கை ஏற்கப்பட்டது,
இதை அடுத்து அந்த பெண்களை ரஷ்ய முகாம்களில் ஒப்படைக்க சென்ற போது,
அந்த டிரக்குகளை ஒட்டி வந்த ஆப்கன் வீரர்களை ரஷ்ய படையினர் துப்பாக்கிகள் மூலம் சல்லடையாக ஆக்கி கொன்று விட்டனர்,

இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த ரஷ்ய இராணுவ வீரர்களின் மனைவிகள் ஏன் அவர்களை கொன்றீர்கள்,
அவர்கள் எங்களை மிகவும் கண்ணியமான முறையில் நடத்தினர்,
அவர்கள் நிழல்கள் கூட எங்கள் மீது பட வில்லை என்று சொல்லி கதறி கதறி அழுதனர்,

இதைக்கேட்ட ரஷ்ய இராணுவ அதிகாரிகள் வெட்கி தலை குனிந்தனர்,

பின் நாட்களில் ஆப்கானில் போர் புரிந்த அத்தனை ரஷ்ய இராணுவ வீரர்களும் இஸ்லாமியர்கள் ஆனார்கள்,

போர் முடிந்து ரஷ்யா திரும்பிய இராணுவ அதிகாரிகள் ரஷ்யாவை துண்டு துண்டாக்கினர்,

ஆம் 1991ல் உலக வல்லரசான சோவியத் ரஷ்யா சிதறி போனது...

பிரிந்த சென்ற நாடுகள் அனைத்து நாடுகளும் இஸ்லாமிய நாடுகாளக மாறின,

உஸ்பெகிஸ்தான்,
தஜிகிஸ்தான்,
அஜர்பைஜான்,
ஆர்மீனியா,
பொலரஸ்,
எஸ்தினியா,
உக்ரைன்,
ஜார்ஜியா,
கஜகஸ்தான்,
கிர்கிஸ்தான்,
லாத்வியா,
லித்துவேனியா,
மால்டவோ,
துர்க்மெனிஸ்தான்,
போன்ற 15 நாடுகளாக பிரிந்தன,

இதில் பத்துக்கு மேற்பட்ட நாடுகள் இஸ்லாமிய நாடுகளாய் மாறின,

இது அப்போதைய சோவியத் ரஷ்ய அதிபர் கோர்பசேவ் தன்னுடைய சுய சரிதையில் எழுதியது...

சரி விஷயத்துக்கு வருவோம்..

*எந்த ஒரு மதத்தையோ, அல்லது ஒரு இனத்தையோ சிறுமைப்படுத்தி, இழிவுபடுத்தி, பயமுறுத்தி எந்த மதமும், இனமும் நீண்டகாலம் அரசியல் செய்து நிலைத்து வாழ்ந்ததாக வரலாறு இல்லை...*

(From Facebook)

புரூஸ்லி, ஜாக்கிசான் ஆகியோர் நடித்த சீன படங்களையும் தமிழில் டப் செய்கிறார்கள்.. ஆகையால் தமிழர்கள் சீன மொழியை கற்க வேண்டி...
15/03/2025

புரூஸ்லி, ஜாக்கிசான் ஆகியோர் நடித்த சீன படங்களையும் தமிழில் டப் செய்கிறார்கள்.. ஆகையால் தமிழர்கள் சீன மொழியை கற்க வேண்டிய கட்டாயமா என்ன.?

சினிமாவைத் தவிர அடிப்படை விசயங்களை கூட தெரியாத முட்டாள்கள் எல்லாம் துணை முதல்வர் ஆகும் தேசத்தில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்...

01/03/2025

.

இந்த இடத்தின் பெயர் RIDGE POINT. கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் உள்ளது. இங்கே பொழியும் மழை நீரானது மேற்கு திசையில் வ...
28/02/2025

இந்த இடத்தின் பெயர் RIDGE POINT. கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் உள்ளது.
இங்கே பொழியும் மழை நீரானது மேற்கு திசையில் விழுந்தால் நேத்ராவதி ஆறு வழியாக அரபிக் கடலில் கலந்துவிடும்.
கிழக்கு திசையில் விழுந்தால் ஹேமாவதி ஆறு மூலமாக வங்காள விரிகுடாவில் கலந்துவிடும்.
இயற்கையின் விந்தை..

(from facebook)

Address

Villupuram
605652

Website

Alerts

Be the first to know and let us send you an email when விக்கிரவாண்டி-பக்கம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

யார் இந்த அலாவுதீன் கில்ஜி?

இந்த பதிவை படிக்க... https://www.facebook.com/446790395370582/photos/a.448359498547005/1592181310831479/?type=1&theater