உதயம் FM & TV

உதயம் FM & TV இந்த பக்கத்தில் பாடல் நிகழ்ச்சிகள் , அறிவு சார்ந்த நிகழ்ச்சிகள் , செய்திகள் , நகைச்சுவைகள் இடம்பெரும்

12/11/2023

Urgent: Officially: A source for “Gaza Now”: We deny the assassination of the freed prisoner Ramzi Al-Ak, who was deported from the West Bank to Gaza, and he is fine. The source also called on the activists not to transmit the false news published by the occupation.

عاجل : رسميا : مصدر ل"غزة الآن" : ننفي اغتيال الاسير المحرر رمزي العك المبعد من الضفة الى غزة ، وهو بخير ، كما طالب المصدر النشطاء بعدم نقل ما ينشره الاحتلال من اخبار كاذبة .

10/11/2023

This night was the worst in terms of bombing civilian places that are considered internationally protected, according to the Gaza Now correspondent, as the Israeli occupation bombed “inside the courtyard of the Al-Shifa and Al-Awda and the Indonesian Hospital.”

For 35 days, the Israeli occupation army has continued its war on Gaza, during which it “destroyed residential neighborhoods along with their residents,” resulting in 10,812 martyrs, including 4,412 children and 2,918 women, according to the Ministry of Health in Gaza. .

10/11/2023

Scenes documenting the bombing of the Indonesian Hospital in the northern Gaza Strip 🇵🇸

10/11/2023

Even mosques were not spared from bombing by Israeli occupation aircraft.
The Israeli occupation has destroyed more than 60 mosques in Gaza so far, and a number of churches.

06/11/2023

பகுதிக்குள் நுழைந்த படையினரை விரட்டி அடிக்கும் காட்சி Alhamdhulillah

19/07/2023

News :- Globe Today News
Date :- 19.07.2023
&FM

17/07/2023

கிழக்கு கடற்பரப்பில் அக்கரைப்பற்று பிரதேசத்தில் தீப்பிடித்து எரிந்த படகு: தேடுதல் நடவடிக்கையில் கடற்படையினர் தீவிரம்*
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

அக்கரைப்பற்று கடற்பகுதியில் தீப்பிடித்து எரிந்த படகு ஒன்றை தேடும் விசேட நடவடிக்கையை கடற்படையினர் ஆரம்பித்துள்ளனர்.

அக்கரைப்பற்று கடற்பரப்பில் படகு ஒன்று தீப்பிடித்து எரிவதாக கடற்படையினருக்கு நேற்று இரவு (16.07.2023) தகவல் கிடைத்துள்ளது.

அதன்படி, திருகோணமலை கடற்படைத் தளத்துக்குச் சொந்தமான டோரா கப்பல் மூலம் குறித்த பகுதியில் தேடுதல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தொடரும் தேடுதல் நடவடிக்கை
கிழக்கு கடற்பரப்பில் தீப்பிடித்து எரிந்த படகு: தேடுதல் நடவடிக்கையில் கடற்படையினர் தீவிரம்

எனினும் நள்ளிரவு 1 மணிக்குப் பின்னரும் தீப்பிடித்த படகு தொடர்பில் எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், குறித்த பகுதியில் கடற்படையினர் தொடர்ந்தும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

*‼️ பலரும் பலன் பெற தகவல்களை Forward செய்து..... தெரியாதவர்களுக்கு தெரியப்படுத்துங்கள்...‼️*

13/07/2023

*கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பில் முக்கிய தீர்மானம் இன்று*
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பான விசேட சந்திப்பொன்று இன்றைய தினம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு நீதிமன்றத்தில் நீதவான் தலைமையில் இந்த சந்திப்பை நடத்த ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கொக்குத்தொடுவாய் மனித புதைக்குழியின் அடுத்த கட்ட அகழ்வு பணிகள் தொடர்பான தீர்மானம் இன்றைய தினம் எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்படும் சந்தர்ப்பத்தில் சர்வதேச நியதிகள் பின்பற்றுவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொக்குத்தொடுவாய் பகுதியில் கடந்த மாதம் 29ம் திகதி குழாய் பொருத்தும் பணிகளுக்கான அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில், அங்கிருந்து மனித எச்சங்கள் சில அவதானிக்கப்பட்டன.

இதையடுத்து, முல்லைத்தீவு நீதவானின் உத்தரவிற்கு அமைவாக கடந்த 6ம் திகதி பூர்வாங்க அகழ்வு பணிகளை நடத்தி மனித புதைக்குழியொன்று உள்ளதை உறுதிப்படுத்தியிருந்தனர்.

இந்த நிலையிலேயே, இன்றைய தினம் விசேட கலந்துரையாடல் நடத்தப்படவுள்ளது.

*‼️ பலரும் பலன் பெற தகவல்களை Forward செய்து..... தெரியாதவர்களுக்கு தெரியப்படுத்துங்கள்...‼️*

12/07/2023

*காலிக்கு அருகில் மீன்பிடி கப்பல் விபத்து*
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

தென்கடலில் ஏற்பட்ட விபத்தினால் தீக்காயங்களுடன் நெடுநாள் மீன்பிடி படகில் இருந்த மீனவர் ஒருவரை கரைக்கு கொண்டு வந்து சிகிச்சைக்காக அனுப்ப கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

காலியில் இருந்து சுமார் 431 கடல் மைல் தொலைவில் இலங்கைக்கு தென்மேற்கே ஆழ்கடல் பகுதியில் ஏற்பட்ட விபத்தில் மீனவர் தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

குறித்த மீனவர் காலி கராபிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நீர்கொழும்பு மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து கடந்த ஜூன் மாதம் 22 ஆம் திகதி ஐந்து மீனவர்களுடன் “சசிந்த புதா” என்ற நெடுநாள் மீன்பிடி படகு கடலுக்கு சென்றதாக கடற்படை தெரிவித்துள்ளது.

காலியிலிருந்து இலங்கையின் தென்மேற்கு பகுதியில் உள்ள ஆழ்கடலில் வெளிநாட்டு படகு ஒன்றும் குறித்த நெடுநாள் படகும் மோதி விபத்து ஏற்பட்டது.

இதன்போது அந்த வௌிநாட்டு படகில் இருந்தவர்களால் நடத்தப்பட்ட தாக்குதலில் இலங்கையின் நெடுநாள் படகில் இருந்த மீனவர் ஒருவர் தீக்காயங்களுக்கு உள்ளாகியதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் கடற்படைக்கு அறிவித்துள்ளது.

இதன்படி, கடற்படையின் “ஸ்பார் மிரா” என்ற வணிகக் கப்பல் ஊடாக தீக்காயமடைந்த மீனவரை சிகிச்சைக்காக கரைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுத்ததாக கடற்படையினர் தெரிவித்தனர்.

*‼️ பலரும் பலன் பெற தகவல்களை Forward செய்து..... தெரியாதவர்களுக்கு தெரியப்படுத்துங்கள்...‼️*

*இது போன்ற செய்திகளை அறிய எமது முகநூல் பக்கத்துடன் இணைந்திருங்கள் 👇*

https://www.facebook.com/profile.php?id=100094459785390&mibextid=ZbWKwL

இந்த பக்கத்தில் பாடல் நிகழ்ச்சிகள் , அறிவு சார்ந்த நிகழ்ச்சிகள் , செய்திகள் , நகைச்சுவைகள் இடம்பெரும்

11/07/2023

*மைத்திரியின் பிச்சைப் படலம் தொடருமா..? 15 மில்லியன் ரூபா நட்டஈடு செலுத்திய மைத்ரி*

•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்க நடவடிக்கை எடுக்காததன் காரணமாக அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டமைக்காக உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 15 மில்லியன் ரூபாவை செலுத்தியுள்ளார்.

100 மில்லியன் ரூபா நட்டஈடு வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதிக்கு உச்ச நீதிமன்றம் வழங்கிய உத்தரவின் பிரகாரம், இந்த தொகை (15 மில்லியன் ரூபா) நட்டஈடாக வழங்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி என்ற ரீதியில் ஓய்வூதியமாக 97,500/- ரூபாவையும், பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் கொடுப்பனவுகள் நீங்கலாக 54,285 ரூபாவையும் வருமானமாகப் பெறுவதாக மைத்திரிபால தனது சட்டத்தரணிகள் ஊடாக உச்ச நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கடந்த ஜூன் 28ஆம் திகதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட 100 மில்லியன் ரூபாவில், தலா 10 மில்லியன் ரூபா மற்றும் 5 மில்லியன் ரூபா வீதம், 15 மில்லியன் ரூபா ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் நிதிக்கு வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், எஞ்சிய 85 இலட்சம் ரூபா இழப்பீட்டுத் தொகையை அடுத்த வருடம் ஜூன் மாதம் 30 ஆம் திகதி முதல் 10 தவணைகளாக வழங்குவதற்கு அனுமதி வழங்குமாறும் முன்னாள் ஜனாதிபதி கோரியுள்ளார்.

பலரும் பலன் பெற தகவல்களை Forward செய்து..... தெரியாதவர்களுக்கு தெரியப்படுத்துங்கள்..

இது போன்ற செய்திகளை அறிய எமது முகநூல் பக்கத்துடன் இணைந்திருங்கள்

https://www.facebook.com/profile.php?id=100094459785390&mibextid=ZbWKwL

இந்த பக்கத்தில் பாடல் நிகழ்ச்சிகள் , அறிவு சார்ந்த நிகழ்ச்சிகள் , செய்திகள் , நகைச்சுவைகள் இடம்பெரும்

11/07/2023

திருமணமாகி மூன்று வருடமாக குழந்தை இல்லாததால் உள்ளூர் மருந்தை உட்கொண்டு யுவதியொருவர் உயிரிழப்பு..!
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

பிரசவம் தாமதமானதால் மருந்து உட்கொண்ட யுவதியொருவர் உயிரிழந்துள்ளதாக மின்னேரியா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

#சிகிரியா பிரதேசத்தில் வசிக்கும் 23 வயதுடைய திருமணமான பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த யுவதிக்கு மூன்று வருடங்களுக்கு முன்பு திருமணமாகி, இதுவரை குழந்தை இல்லாத காரணத்தால்,

அவர் தன் தந்தை வழி உறவினர் ஒருவர் நடத்தும் கோவிலுக்குச் சென்று மூன்று நாட்கள் உள்ளூர் மருந்தைக் உட்கொண்டுள்ளார்.

இந்நிலையில் குறித்த யுவதி உடல்நலக்குறைவு காரணமாக இன்று ஜெயந்திபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்,

அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பலரும் பலன் பெற தகவல்களை Forward செய்து..... தெரியாதவர்களுக்கு தெரியப்படுத்துங்கள்..

இது போன்ற செய்திகளை அறிய எமது முகநூல் பக்கத்துடன் இணைந்திருங்கள் 👇

https://www.facebook.com/profile.php?id=100094459785390&mibextid=ZbWKwL

இந்த பக்கத்தில் பாடல் நிகழ்ச்சிகள் , அறிவு சார்ந்த நிகழ்ச்சிகள் , செய்திகள் , நகைச்சுவைகள் இடம்பெரும்

11/07/2023

*சரத் வீரசேகரவின் பேச்சுக்கு எதிர்ப்பு வெளியிட்டு வடக்கில் இன்று சட்டத்தரணிகள் போர்க்கொடி*
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
வட மாகாணத்திலுள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் இன்று முன்னிலையாகாமல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதென வடக்கு மாகாண சட்டத்தரணிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.

முல்லைத்தீவு, குருந்தூர்மலையில் தமிழ் பெளத்த வழிபாட்டு எச்சங்களின் மீது, சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள சிங்கள பெளத்த கட்டுமானங்களை பார்வையிட முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜா அண்மையில் சென்றிருந்தார்.

அப்போது தனது குழுவினருடன் அங்கு வந்திருந்த பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர, தேவையில்லாமல் மூக்கை நுழைத்து வாங்கிக் கட்டினார். அரசியல்வாதிகள் நீதிமன்ற விசாரணையில் மூக்கை நுழைக்கக் கூடாது என எச்சரித்து வீரசேகரவை அங்கிருந்து நீதிபதி அகற்றினார்.

இதனால் கொதிப்படைந்த வீரசேகர, அண்மையில் பாராளுமன்ற சிறப்புரிமையை பயன்படுத்தி, நீதித்துறையிலுள்ள தமிழர்களுக்கு மிரட்டல் விடுக்கும் பாணியில் பேசியிருந்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக இன்று வட மாகாணத்திலுள்ள அனைத்து நீதிமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் விலகியிருக்க வடமாகாண சட்டத்தரணிகள் சங்கம் தீர்மானித்துள்ளது. அத்துடன், இன்று காலை 9.30 மணிக்கு வடக்கிலுள்ள சட்டத்தரணிகள் முல்லைத்தீவு நீதிமன்றத்துக்கு எதிரில் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டமொன்றிலும் ஈடுபடவுள்ளனர்.

பலரும் பலன் பெற தகவல்களை Forward செய்து..... தெரியாதவர்களுக்கு தெரியப்படுத்துங்கள்..

*இது போன்ற செய்திகளை அறிய எமது முகநூல் பக்கத்துடன் இணைந்திருங்கள் 👇*

Address

Addalachenai

Website

Alerts

Be the first to know and let us send you an email when உதயம் FM & TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category