03/04/2023
ஸாலிஹான மனைவியின் அடையாளங்கள் :
♦ தீனுடய விஷயத்தில் கணவருக்கு உதவி செய்தல்
♦ கணவன் மனைவியை பார்தால் அவர்களுடய குணங்களால் பார்வையால் சந்தோஷப்படுவார்கள்
♦ கணவனுக்கு கட்டுபடுவாள்
♦ தனது மானத்தையும், மரியாதையும் , கணவருடைய பொருள்களையும் பாதுகாப்பாள்
♦ அல்லாஹ்வை புகழ்ந்த வண்ணமாக சமைப்பாள்
♦ வீட்டை எப்பொழுதும் சுத்தமாக வைத்துக்கொள்வாள்
♦ மற்ற பெண்களை பற்றி (நல்லதும், கெட்டதும்) கணவரிடம் சொல்லமாட்டாள்
♦ கணவரை வீட்டின் வாசல் வரை வந்து (பர்தாவுடன், துஆவுடன் வழியனுப்புவாள்)
♦ கணவர் வீட்டிற்கு வருவதற்கு முன் தன்னையும், வீட்டையும் சுத்தமாக வைத்திருப்பாள்
♦ உறவினர் வீட்டிற்கும், மற்ற வெளி இடங்களுக்கு செல்லுகையில் பர்தாவை பேணுவாள்
♦ நல்ல விஷயங்களை செய்வதற்கு முன் சதகா கொடுப்பதற்கு கணவருக்கு ஆர்வமூட்டுவாள்
♦ வீட்டில் தொழுகைக்காக ஒரு இடத்தை ஓதுக்கிவைப்பாள்
♦ கணவருடய பார்வையில் தனது மதிப்பை தாழ்த்தி விடமாட்டாள்
♦ குழந்தைகளின் விஷயத்தில் ஒவ்வொன்றையும் கணவரிடம் ஆலோசனை செய்வாள்
♦ கணவருடய தேவையை பூர்த்தி செய்வதில் தாமதிக்கமாட்டாள்
♦ கணவரின் கஷ்டமான நேரத்தில் ஆறுதலாக இருப்பாள்
♦ தன்னுடய தப்பை ஓப்புக்கொள்வாள்.
♦ கணவருடய உறவினர் இடத்தில் நல்ல முறையில் நடந்துகொள்வாள்
♦ அல்லாஹ்வுக்கு மாற்றமான விஷயத்தில் யாருக்கும் கட்டுபடமாட்டாள்
♦ கணவரை கண்ணியமான வார்த்தைகளை கொண்டு அழைப்பாள்
♦ எந்த கஷ்டத்திலும், சிரமத்திலும் அல்லாஹ்வுக்காக பொறுமையாக இருப்பாள்
♦ போதும் என்ற வார்த்தையை அதிகமாக பயன்படுத்துவாள்
♦ ஒவ்வொரு நிலையிலும் கணவருக்கு உதவியாக இருப்பாள்
♦ கணவர் விஷயத்தில் அல்லாஹ்வை பயந்து நடப்பாள்
♦ எப்போதும் முகம் சுழிக்கமாட்டாள்
♦ கணவர் எந்த பொருளை (மட்டமானதும்) கொடுத்தாலும் அதை மதிப்பாள்
♦ கணவனின் முன்னால் எப்போதும் Fresh ஆக இருப்பாள்
♦ கணவரை தீனுடய விஷயத்தில் ஆர்வமூட்டுவாள்
♦ கணவரிடத்தில் மட்டும் தன்னை அலங்கரித்துகொள்வாள்
♦ கணவருடய குறைகளை பார்க்காமல் நிறைகளை மட்டுமே பேசுவாள்
♦ கணவரின் உத்தரவு இல்லாமல் எங்கும் செல்லமாட்டாள்
♦ கணவரின் வருமானத்திற்கு ஏற்ற படி தனது வாழ்கையை சிக்கனமான முறையில் நடத்தாட்டுவாள்
♦ எபொழுதும் தன்னுடய குணத்தாலும் உடல் மற்றும் உடையில் சுத்தமாக இருப்பாள்
♦ கணவரை விட எவ்வகையிலும் தன்னை சிறப்பாக , உயர்வாக நினைக்கமாட்டாள்
♦ கெட்ட நடத்தை உள்ள பெண்களிடம் எந்த தொடர்பும் வைத்துகொள்ளமாட்டாள்
♦ இல்லம் எப்பொழுதும் சந்தோஷத்துடன் இருக்கவேண்டும் என்று நினைப்பாள்
ஆகவே அல்லாஹ்வின் அருள் வேண்டும், பெற்றோர்களின் துஆ வேண்டும் இவை இரண்டும் இல்லாத திருமணமும், மனைவியும் நறுமணம் இல்லாத வாழ்வுதான் என்பதை நீங்கள் உணர வேண்டும். ஒரு நல்ல ஸாலிஹான மனைவிக் கிடைக்க அல்லாஹ்விடம் எப்பொழுதும் துஆச் செய்ய வேண்டும்.
அதே போல ஒரு பெண்ணுக்கு ஒரு நல்ல கணவர் கிடைக்க அல்லாஹ்விடம் பிரார்த்தனைச் செய்ய வேண்டும். மார்க்கப்பெணுதல் உள்ள மனைவி அமைய வேண்டும். மார்க்க பேணுதல் உள்ள கணவர் அமைய வேண்டும். மேலே கொடுக்கப்பட்டுள்ள விஷயத்தில் சரியான முறையில் இருக்கிரோமா என்று சிந்தித்து நாமும் ஸாலிஹானவர்களாக மாறுவதற்கு எல்லாம் வல்ல கிருபையாளன் நல்லுதவி புரிவானாக! ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்.