Pirai TV - பிறை TV

Pirai TV - பிறை TV Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Pirai TV - பிறை TV, Akkaraipattu.

சிறுவர்களின் உரிமையை பாதுகாப்பது அனைவரினதும். காட்டாய கடமை – சமூக செயற்பாட்டாளர் சிறுவர் தின வாழ்த்துச் செய்தி!சிறுவர்கள...
01/10/2025

சிறுவர்களின் உரிமையை பாதுகாப்பது அனைவரினதும். காட்டாய கடமை – சமூக செயற்பாட்டாளர் சிறுவர் தின வாழ்த்துச் செய்தி!

சிறுவர்களுக்கு முன்னுரிமையளித்து அவர்களது உரிமைகளைப் பாதுகாப்பது அனைத்து மனித வர்க்கத்தினரதும் கட்டாய கடமையாகும் என சர்வதேச சிறுவர் தின வாழ்த்துச் செய்தியில் சமூக செயற்பாட்டாளர்,அரசியல் செயற்பாட்டாளர் மர்ஷாத் தெரிவித்துள்ளார்.

இன்றைய சிறார்கள் எதிர்கொள்ளும் சவால்களாக பொருளாதாரம் மற்றும் போசாக்கின்மை போன்றன காணப்படுகின்ற போதிலும் இவற்றையும் தாண்டி போதைப்பொருள் பாவனையும் அதன் ஊடுருவலும் மிகப்பெரும் சவாலாக மாறியுள்ளமை யாவரும் அறிந்ததே. எனவே எதிர்கால தலைவர்களான இன்றைய சிறார்களை செப்பனிடவும் அவர்களுக்காக புதுயுகத்தைப் படைப்பதற்கும் நாம் அனைவரும் சமூக பொறுப்புடன் பணியாற்ற வேண்டியது காலத்தின் கட்டாயமாகவுள்ளது.

சிறுவர்களை நாளைய தலைவர்களாக உருவாக்கும் பொறுப்பு ஆசிரியர்களுக்கும், கல்விக்கூடங்களுக்கும் இருக்கின்றது. அதேபோல் பெற்றோர்இ இருக்கும் சூழல் குடும்ப நிலைமை நண்பர்கள் போன்ற இதர காரணிகளும் அதனை தீர்மானிக்கின்றன.

எனவே நாளைய தலைவர்களாக வரவேண்டிய இன்றைய இளம் சிறார்களை அவர்களைச் சுற்றியுள்ள பொறுப்புதாரர்கள் அனைவரும் தத்தமக்குரிய வகிபாகத்தை சரிவர நிறைவேற்றி ஊக்குவிப்பார்களாயின் நிச்சயமாக எதிர்காலத்தில் சிறந்ததொரு சந்ததியை எதிர்பாரக்கலாம்!

அது போன்றே எமது வாழ்வியலை செம்மைப்படுத்தி தமது வாழ்வின் பல அனுபவங்களை எமக்கான முன்னுதாரணங்களாக அன்பளிப்புச் செய்தவர்கள் முதியவர்கள். அவர்களை மதித்து, கனம்பண்ணி அவர்களின் இறுதிக்காலங்களை சந்தோசமாக மனமகிழ்வுடன் களிக்க எம்மாலான அனைத்தும் பணிகளையும் வீட்டிலும் சமூகத்திலும் முன்னெடுக்க அனைவரும் ஒன்றிணைவீரென கூறி ‘மகத்துவம் மிக்கதோர்சிறுவர்கள் சமுதாயத்தினை உருவாக்குவோம் என்று தெரிவித்துக் கொள்கின்றேன்.

இன்று (30) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் சில எரிபொருட்களின் விலைகளில் மாற்றம் செய்யப்படவுள்ளது. மாதாந்த எரிபொருள் வில...
30/09/2025

இன்று (30) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் சில எரிபொருட்களின் விலைகளில் மாற்றம் செய்யப்படவுள்ளது. மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் அடிப்படையில் இந்த விலைத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி, லங்கா வௌ்ளை டீசல் ஒரு லீற்றரின் விலை 6 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 277 ரூபாய் ஆகும்.

ஆதேபோல், ஒக்டேன் 95 ரக பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 6 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 335 ரூபாவாகும்.

மேலும், மண்ணெண்ணெய் ஒரு லீற்றரின் விலை 05 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 180 ரூபாவாகும்.

இதேவேளை, ஒக்டேன் 92 ரக பெற்றோல் மற்றும் லங்கா சூப்பர் டீசலின் விலைகளில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

MAKDO FOREIGN FOOD cheap and best      BIRIYANI FOR special order       Home delivery available Akkaraipattu and addalai...
30/09/2025

MAKDO FOREIGN FOOD
cheap and best
BIRIYANI FOR special order
Home delivery available
Akkaraipattu and addalaichanai 0778639263.0755397732

சவூதி அரேபியா - இலங்கை: வரலாற்றுத்தொடர்பும் வலுவான நட்புறவும்.எம்.என்.எம்.யஸீர் அறபாத் (BA) - ஓட்டமாவடி.சவூதி அரேபிய இரா...
30/09/2025

சவூதி அரேபியா - இலங்கை: வரலாற்றுத்தொடர்பும் வலுவான நட்புறவும்.

எம்.என்.எம்.யஸீர் அறபாத் (BA) - ஓட்டமாவடி.

சவூதி அரேபிய இராச்சியத்திற்கும் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசுக்குமிடையிலான உறவுகள் பழைமையான வரலாற்றையும் பல தசாப்த கால இராஜதந்திர உறவுகளையும் கொண்டவை.

இரு நாடுகளுக்குமிடையேயான வரலாற்றுத்தொடர்பு பிரதானமாக பொருளாதாரம், கலாசாரம் மற்றும் மனிதவள ஒத்துழைப்பை மையமாகக் கொண்டது. மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் சவூதி அரேபியா இலங்கையின் முக்கிய வர்த்தகப்பங்காளிகளில் ஒன்றாகும்.

வரலாற்று ரீதியாக, இஸ்லாமிய உலகிற்கும் தெற்காசியாவிற்குமிடையேயான வர்த்தகப்பாதைகளில் இலங்கை ஒரு முக்கிய மையமாக விளங்குகிறது. இப்பரிமாற்றங்கள் சவூதி அரேபியாவிற்கும் இலங்கைக்குமிடையிலான கலாசார மற்றும் சமயத் தொடர்புகளுக்கு அடித்தளமிட்டன.

1970 முதல் இரு நாடுகளும் இராஜதந்திர உறவுகளைப் பேணி வருகின்றன. குறிப்பாக, 2024/2025ம் ஆண்டு சவூதி அரேபியாவுக்கும் இலங்கைக்குமிடையிலான இராஜதந்திர உறவுகளின் 50வது ஆண்டு நிறைவு கொண்டாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் சவூதி அரேபியாவின் அபிவிருத்தித் திட்டங்கள்
சவூதி அரேபிய இராச்சியம், இலங்கையின் தேசிய அபிவிருத்தித் திட்டங்களுக்கு ஆதரவளிக்கும் ஒரு முக்கியமான அபிவிருத்திப் பங்காளியாகத் திகழ்கிறது.

சவூதி அரேபிய அபிவிருத்தி நிதியம் (Saudi Fund for Development - SFD) ஊடாக பல்வேறு துறைசார் அபிவிருத்தித் திட்டங்களுக்கு கணிசமான நிதியுதவிகளை வழங்கி வருகின்றது.

கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட மற்றும் தற்போதைய அபிவிருத்தித் திட்டங்களில் சில:

நிதியுதவிகள்:
இலங்கைக்கான சவூதி அரேபியாவின் மொத்த நிதியுதவி $455 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு அதிகமாகுமென தூதுவர் காலித் ஹமூத் அல்கஹ்தானி தெரிவித்துள்ளார்.

வீதி மற்றும் உட்கட்டமைப்பு
அபிவிருத்தி:
நாட்டின் பிரதான வீதி வலையமைப்புகளை மேம்படுத்துதல், கிராமப்புற சாலைகளை அபிவிருத்தி செய்தல்.
சுகாதாரம் மற்றும் கல்வி:
வைத்தியசாலைகள், கல்வி நிலையங்களின் கட்டுமானம் மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு ஆதரவளித்தல்.

நீர் வழங்கல் மற்றும் சுத்திகரிப்பு:
குடிநீர் விநியோகத் திட்டங்கள், நீர் சுத்திகரிப்பு ஆலைகளை அமைப்பதற்கு உதவியளித்தல்.

தூதுவர்களின் பங்களிப்பு:
இலங்கை வளர்ச்சியில் சவூதி அரேபியாவின் பிரதிநிதித்துவம்
இலங்கையிலுள்ள சவூதி அரேபியாவின் தூதுவர்கள், இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகளை வலுப்படுத்துவதில் அளப்பெரிய பங்காற்றியுள்ளனர்.

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவராலயம் அபிவிருத்தித் திட்டங்களை ஒருங்கிணைத்தல், பொருளாதார உறவுகளை மேம்படுத்துதல் மற்றும் கலாசாரப் பரிமாற்றங்களை வளர்ப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

தற்போதைய தூதுவரான காலித் ஹமூத் அல்கஹ்தானி, இந்த உறவுகளை மேலும் வலுப்படுத்துவதிலும் சவூதி அரேபியாவின் தொலைநோக்குத் திட்டமான 'விஷன் 2030' இன் அடிப்படையில் இலங்கையுடனான ஒத்துழைப்புக்களை புதிய பரிமாணத்திற்கு எடுத்துச் செல்வதிலும் தீவிரமாகப் பங்காற்றி வருகின்றார்.

அவர், வர்த்தகம், முதலீடு மற்றும் இலங்கையிலிருந்து சவூதியில் பணி புரியும் தொழிலாளர்களின் நலன்களைப் பேணுவதில் கவனஞ்செலுத்தி, இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தியுள்ளார்.

அண்மையில் சவூதி அரேபியாவின் 95வது தேசிய தினம் இலங்கையிலும் கொண்டாடப்பட்டது.

இத்தருணத்தில், இலங்கை மக்கள் சார்பில் சவூதி அரேபிய மக்களுக்கும், இரண்டு புனிதத்தலங்களின் பாதுகாவலர் மன்னர் சல்மான் பின் அப்துல் அசீஸ் ஆல் சவூத் மற்றும் பட்டத்து இளவரசரும் பிரதமருமான இளவரசர் முகம்மது பின் சல்மான் பின் அப்துல் அசீஸ் ஆகியோருக்கும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இத்தேசிய தினம், சவூதி அரேபிய இராச்சியத்தை மன்னர் அப்துல் அசீஸ் பின் அப்துல் ரஹ்மான் ஆல் சவூத் அவர்கள் 1932 இல் ஒருமைப்படுத்திய வரலாற்றுச் சிறப்புமிக்க நாளை நினைவூட்டுகிறது.

சவூதி அரேபியா ஒரு நூற்றாண்டின் மைற்கல்லை (100 ஆண்டுகள்) நெருங்கிக்கொண்டிருக்கும் இவ்வேளையில், அது அடைந்து வரும் புரட்சிகரமான முன்னேற்றங்களை இலங்கையராக வரவேற்கிறோம்.

'விஷன் 2030' இன் கீழ் சவூதி அரேபியா அடைந்து வரும் பிரமாண்டமான வளர்ச்சிக்கும், குறிப்பாக நியோம் போன்ற மெகா நகரத்திட்டங்கள், பொருளாதாரப் பன்முகப்படுத்தல் மற்றும் நிலையான வளர்ச்சித் திட்டங்களில் அதன் துரித முன்னேற்றங்களுக்கும் இலங்கையராக பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

சவூதி அரேபியாவிற்கும் இலங்கைக்குமிடையிலான பலமான நட்புறவு, ஒத்துழைப்பு, எதிர்காலத்தில் மேலும் வளர்ச்சியடைந்து, இரு நாடுகளின் மக்களுக்கும் வளமான, நிலையான எதிர்காலத்தை வழங்க வாழ்த்துகிறோம்.

அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்கே எ ஹமீட்  அம்பாறை மாவட்ட செயலாளர் சிந்தக அபேயவிக்கிரம அவர்களின் ஏற்பாட்டி...
30/09/2025

அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

கே எ ஹமீட்

அம்பாறை மாவட்ட செயலாளர் சிந்தக அபேயவிக்கிரம அவர்களின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவர் கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ அவர்களின் தலைமையில் இன்று (30.09.2025) அம்பாறை மாவட்ட செயலக ஏ.ஐ.விக்கிரம கேட்போர் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தேசிய அமைப்பாளர் எம்.எஸ்.உதுமாலெப்பை, எம்.எஸ்.அப்துல் வாசித், அஷ்ரஃப் தாஹிர், அபூபக்கர் ஆதம்பாவா, மஞ்சுல சுகத் ரத்நாயக, ஏ.எம்.எம்.எம். ரத்வத்தே, சட்டத்தரணி பிரியந்த விஜேரத்ன உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள், உறுப்பினர்கள், மற்றும் திணைக்களத் தலைவர்கள் , உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

சவூதி அரேபியாவிற்கும் இலங்கைக்கும்  இடையிலான நீண்டகால சிறப்பான உறவுகளை அடிப்பையாகக் கொண்டும் மற்றும் உலகெங்கிலும் உள்ள க...
30/09/2025

சவூதி அரேபியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால சிறப்பான உறவுகளை அடிப்பையாகக் கொண்டும் மற்றும் உலகெங்கிலும் உள்ள குறைந்த வருமானம் பெறும் மக்கள் மற்றும் பாதிக்கப்பட்ட சமூகங்களின் துன்பத்தைத் துடைக்கும் நோக்கில், இரு புனிதஸ்த்தலங்களின் பாதுகாவலர் மன்னர் சல்மான் பின் அப்துல் அசீஸ் ஆல் ஸுஊத் மற்றும் பட்டத்து இளவரசரும் பிரதம மந்திரியுமான இளவரசர் முஹம்மத் பின் சல்மான் ஆல் ஸுஊத் அவர்களின் தலைமையிலான சவூதி அரேபிய அரசு மேற்கொள்ளும் முயற்சிகளின் அடிப்படையிலும், மன்னர் சல்மான் நிவாரணம் மற்றும் மனிதாபிமான உதவிகளுக்கான மையம் (KSrelief) வழங்கி வரும் மனிதாபிமானப் பணிகளின் தொடர்ச்சியாக, இம் மையம் பார்வையின்மை மற்றும் பார்வையின்மையோடு தொடர்பான நோய்களை எதிர்த்துப் போராடுவதற்கான சவூதி நூர் தன்னார்வத் திட்டத்தை நிறைவு செய்ததது. இத்திட்டமானது, கிழக்கு இலங்கையில் சம்மாந்துறை மற்றும் சப்ரகமுவ மாகாணத்தில் எம்பிலிபிட்டிய போன்ற பகுதிகளில் உள்ள இரண்டு அரச மருத்துவமனைகளில் செப்டம்பர் 15 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை செயல்படுத்தப்பட்டது. இந்தத் திட்டம் நோயாளிகளுக்கு மருத்துவ சேவைகளை வழங்குவதில் வெற்றி கண்டுள்ளது. இந்தத்தன்னார்வாத் திட்டத்தின் போது பின்வரும் அறுவை சிகிச்சை மற்றும் மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டன:

கிழக்கு மாகாணம், சம்மாந்துறை பகுதியில் உள்ள தள வையத்தியசாலையில் வழங்கப்பட்ட மருத்துவ சேவைகள் பின்வருமாறு:மருத்துவ பரிசோதனைகள்: 4,336
• லென்ஸ் பொருத்துதல்கள்: 416
• மூக்குக் கண்ணாடி விநியோகம்: 1,028
• அறுவைச்சிகிச்சைகள்: 428

சப்ரகமுவ மாகாணம், எம்பிலிபிட்டிய பகுதியில் உள்ள தள வையத்தியசாலையில் வழங்கப்பட்ட மருத்துவ சேவைகள் பின்வருமாறு::
• மருத்துவ பரிசோதனைகள்: 4,300
• லென்ஸ் பொருத்துதல்கள்: 407
• மூக்குக் கண்ணாடி விநியோகம்: 1,010
• அறுவைச் சிகிச்சைகள்: 410

இந்த மனிதாபிமான முயற்சியானது, கண் பார்வையை மீட்டெடுக்க உதவுவது மட்டுமல்லாமல், பயனாளிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இம்முயற்சியானது, அவர்களை தமது இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பவும், சமூக செயற்பாடுகளில் பங்கேற்கவும் உதவுகிறது.
இந்த முயற்சியானது மருத்துவ அம்சத்துடன் மட்டும் நின்றுவிடாமல், கண் நோய்களைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்ட விழிப்புணர்வு திட்டங்கள் மூலம் உள்ளூர் சமூகங்களிடையே சுகாதார விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் நிலையான சுகாதாரப் பராமரிப்புக்கு ஏதுவான சூழலை ஏற்படுத்துதல் போன்றவற்றையும் உள்ளடக்கியுள்ளது. இந்த முயற்சிகள் இலங்கைக் குடியரசின் ஆயிரக்கணக்கான பயனாளிகளிடத்தில் உறுதியான நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது மட்டுமல்லாமல், அவர்களிடத்தில் மீளவும் நம்பிக்கையை ஏற்படுத்தி அவர்களின் பார்வைக் குறைபாடுகளால் ஏற்படும் சவால்களை சமாளிக்கவும் இது உதவியுள்ளது.

மன்னர் சல்மான் நிவாரணம் மற்றும் மனிதாபிமான உதவிகளுக்கான மையத்தின் (KSrelief) புள்ளிவிவரங்களின்படி, இந்த மையம் இதுவரையில் இலங்கையில் 25 திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. இதன் மொத்தச் செலவு $15 மில்லியன் அமெரிக்கா டொலர்களுக்கும் அதிகமாகும்.

இரு புனிதஸ்த்தலங்களின் பாதுகாவலர் மன்னர் சல்மான் பின் அப்துல் அசீஸ் ஆல் ஸுஊத் மற்றும் பட்டத்து இளவரசரும் பிரதம மந்திரியுமான இளவரசர் முஹம்மத் பின் சல்மான் ஆல் ஸுஊத் ஆகியோரின் தலைமையில், சவூதி அரேபியா, தனிநபர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு பங்களிக்கும் மனிதாபிமான முயற்சிகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்துவருகிறது. குறிப்பாக சுகாதாரத் துறையில், "சவூதி நூர் " திட்டம் இலங்கை உட்பட உலகெங்கிலும் உள்ள கண் நோயாளிகளுக்குத் தேவையான மருத்துவ சேவையை வழங்குவதன் மூலம் இந்த உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது.

AS Rafeek sir அவர்களின் ஜனாஸாதாறுஸ்ஸுப்பான் Tutory க்கு அருகில் உள்ள அவரது வீட்டிற்கு வந்து சேர்ந்துவிட்டது.*ஜனாஸா நல்லட...
29/09/2025

AS Rafeek sir அவர்களின் ஜனாஸா
தாறுஸ்ஸுப்பான் Tutory க்கு அருகில் உள்ள அவரது வீட்டிற்கு வந்து சேர்ந்துவிட்டது.

*ஜனாஸா நல்லடக்கம்*
நாளை காலை 6.30 மணிக்கு
ஜனாஸா தொழுகைக்காக பட்டின ஜும்ஆ பள்ளிக்கு கொண்டு செல்லப்பட்டு,
தைக்கா நகர் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

29/09/2025

#மாவனெல்லையில் சரிந்து வீழ்ந்த மண்மேடு

🔴 மலை உச்சியில் பாதையைவிட்டு விலகி அதிர்ஷ்டவசாமக சிக்கி நின்ற சுற்றுலா பஸ்!யாழ் நோக்கி பயணித்த சுற்றுலா பஸ்ஸே இவ்வாறு வி...
29/09/2025

🔴 மலை உச்சியில் பாதையைவிட்டு விலகி அதிர்ஷ்டவசாமக சிக்கி நின்ற சுற்றுலா பஸ்!

யாழ் நோக்கி பயணித்த சுற்றுலா பஸ்ஸே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. பாரிய காயங்கள் இன்றி பயணிகள்
உயிர் தப்பியதாக சொல்லப்படுகிறது.

🚀 Future Engineers, Get Ready!🌟 𝐍𝐈𝐒𝐓 𝐂𝐚𝐦𝐩𝐮𝐬,The 𝐨𝐧𝐥𝐲 𝐂𝐢𝐭𝐲 & 𝐆𝐮𝐢𝐥𝐝𝐬 𝐚𝐜𝐜𝐫𝐞𝐝𝐢𝐭𝐞𝐝 𝐢𝐧𝐬𝐭𝐢𝐭𝐮𝐭𝐢𝐨𝐧 𝐢𝐧 𝐒𝐫𝐢 𝐋𝐚𝐧𝐤𝐚’𝐬 𝐄𝐚𝐬𝐭𝐞𝐫𝐧 𝐏𝐫𝐨𝐯𝐢𝐧𝐜...
29/09/2025

🚀 Future Engineers, Get Ready!
🌟 𝐍𝐈𝐒𝐓 𝐂𝐚𝐦𝐩𝐮𝐬,
The 𝐨𝐧𝐥𝐲 𝐂𝐢𝐭𝐲 & 𝐆𝐮𝐢𝐥𝐝𝐬 𝐚𝐜𝐜𝐫𝐞𝐝𝐢𝐭𝐞𝐝 𝐢𝐧𝐬𝐭𝐢𝐭𝐮𝐭𝐢𝐨𝐧 𝐢𝐧 𝐒𝐫𝐢 𝐋𝐚𝐧𝐤𝐚’𝐬 𝐄𝐚𝐬𝐭𝐞𝐫𝐧 𝐏𝐫𝐨𝐯𝐢𝐧𝐜𝐞, is excited to launch its Engineering courses.
💡 With a commitment to international standards and hands-on learning, NIST offers aspiring engineers a unique opportunity to gain globally recognized qualifications—right from the heart of the Eastern Province.
NIST Campus proudly presents Advanced Diplomas in:
📗 Civil Engineering
📗 Electrical & Electronic Engineering
📗 Quantity Surveying
📗 Mechanical Engineering
✅ Fully Attested By:
* British Council
* Ministry of Foreign Affairs
* Saudi Council of Engineers
* Gulf Country Embassies
💡 Why Choose NIST?
✔ Globally Recognized Qualifications
✔ Experienced & Qualified Lecturer Panel
✔ Easy Installment Payment Options
✔ Physical & Online Batches
✔ Industry-Relevant Curriculum
✔ Expert Faculty with Hands-On Practical Training
📞 Enroll Now – Limited Seats Available!
📱 ‪‪‪+94 77 2575 751‬‬‬ | ‪‪‪+94 77 4834 549‬‬‬
📧 [email protected]
🌐 ‪‪www.nistcampus.lk‬‬
📲 Join Our WhatsApp Group for Updates:
🔗 ‪‪https://chat.whatsapp.com/JYQbIL7wPi61OchouNIB8K

🎓 𝐇𝐍𝐃 𝐢𝐧 𝐐𝐮𝐚𝐧𝐭𝐢𝐭𝐲 𝐒𝐮𝐫𝐯𝐞𝐲𝐢𝐧𝐠 🎓🎯 இதோ கட்டிட நிர்மாணத்த… See more🎓 𝐇𝐍𝐃 𝐢𝐧 𝐐𝐮𝐚𝐧𝐭𝐢𝐭𝐲 𝐒𝐮𝐫𝐯𝐞𝐲𝐢𝐧𝐠 🎓🎯 Here's a great opportunity ...
29/09/2025

🎓 𝐇𝐍𝐃 𝐢𝐧 𝐐𝐮𝐚𝐧𝐭𝐢𝐭𝐲 𝐒𝐮𝐫𝐯𝐞𝐲𝐢𝐧𝐠 🎓
🎯 இதோ கட்டிட நிர்மாணத்த… See more
🎓 𝐇𝐍𝐃 𝐢𝐧 𝐐𝐮𝐚𝐧𝐭𝐢𝐭𝐲 𝐒𝐮𝐫𝐯𝐞𝐲𝐢𝐧𝐠 🎓
🎯 Here's a great opportunity to enter your industry with world class qualifications in the building industry!
🏭🏗 IPHS Campus, Excelling in Architectural Education, launches new batch of stone policies.
📌 Hurry up for your registration!!!
🔵 𝐌𝐚𝐣𝐨𝐫 𝐂𝐨𝐧𝐭𝐞𝐧𝐭𝐬;
✳️ 𝐂𝐀𝐃 & 𝐁𝐒 (𝐀𝐮𝐭𝐨𝐂𝐀𝐃 + 𝐁𝐮𝐢𝐥𝐝𝐢𝐧𝐠 𝐒𝐭𝐮𝐝𝐢𝐞𝐬)
✳️ 𝐐𝐒 𝐏𝐫𝐚𝐜𝐭𝐢𝐜𝐞
✳️ 𝐂𝐢𝐯𝐢𝐥 𝐐𝐒 (𝐌𝐢𝐝𝐝𝐥𝐞 𝐄𝐚𝐬𝐭 𝐏𝐫𝐨𝐣𝐞𝐜𝐭)
✳️ 𝐈𝐧𝐟𝐫𝐚𝐬𝐭𝐫𝐮𝐜𝐭𝐮𝐫𝐞 (𝐌𝐢𝐝𝐝𝐥𝐞-𝐄𝐚𝐬𝐭 𝐏𝐫𝐨𝐣𝐞𝐜𝐭)
✳️ 𝐌𝐄𝐏 𝐐𝐒 𝐏𝐫𝐚𝐜𝐭𝐢𝐜𝐞 (𝐌𝐢𝐝𝐝𝐥𝐞 𝐄𝐚𝐬𝐭 𝐏𝐫𝐨𝐣𝐞𝐜𝐭)
𝐕𝐚𝐥𝐮𝐞 𝐀𝐝𝐝𝐢𝐭𝐢𝐨𝐧𝐚𝐥....
✳️ 𝐄𝐧𝐠𝐥𝐢𝐬𝐡 (𝐁𝐚𝐬𝐢𝐜 + 𝐓𝐞𝐜𝐡𝐧𝐢𝐜𝐚𝐥 𝐄𝐧𝐠𝐥𝐢𝐬𝐡)
✅ 𝐁𝐞𝐧𝐞𝐟𝐢𝐭𝐬
✔ Globally Recognized
✔ International Qualification (UK)
✔ Interview Guidelines
✔ Gulf Oriented
✔ 100 % Practical Session
🎯 𝐅𝐚𝐬𝐭 𝐓𝐫𝐚𝐜𝐤
🎯 𝐄𝐱𝐩𝐞𝐫𝐢𝐞𝐧𝐜𝐞𝐝 𝐋𝐞𝐜𝐭𝐮𝐫𝐞 𝐏𝐚𝐧𝐞𝐥𝐬
🎯 𝐏𝐚𝐫𝐭 𝐓𝐢𝐦𝐞 𝐁𝐚𝐭𝐜𝐡
✳𝐀𝐩𝐩𝐫𝐨𝐯𝐞𝐝 𝐁𝐲
👉🏼 𝐁𝐫𝐢𝐭𝐢𝐬𝐡 𝐂𝐨𝐮𝐧𝐜𝐢𝐥
👉🏼 𝐌𝐢𝐧𝐢𝐬𝐭𝐫𝐲 𝐨𝐟 𝐅𝐨𝐫𝐞𝐢𝐠𝐧 𝐀𝐟𝐟𝐚𝐢𝐫𝐬 (𝐌𝐎𝐅𝐀)
👉🏼 𝐒𝐚𝐮𝐝𝐢/𝐐𝐚𝐭𝐚𝐫/𝐃𝐮𝐛𝐚𝐢/𝐎𝐦𝐚𝐧 𝐄𝐦𝐛𝐚𝐬𝐬𝐲
👉🏼 𝐒𝐚𝐮𝐝𝐢 𝐂𝐨𝐮𝐧𝐜𝐢𝐥 𝐨𝐟 𝐄𝐧𝐠𝐢𝐧𝐞𝐞𝐫𝐬 (𝐒𝐂𝐄)
📌IPHS Campus,
142, Main Street, Akkaraipattu
➡𝐈𝐧𝐪𝐮𝐢𝐫𝐲 / 𝐑𝐞𝐠𝐢𝐬𝐭𝐫𝐚𝐭𝐢𝐨𝐧➡
📱 +𝟗𝟒 𝟕𝟕 𝟐𝟔𝟕𝟔 𝟑𝟒𝟓 / +𝟗𝟒 𝟕𝟕 𝟏𝟏𝟒 𝟗𝟗𝟏𝟐
📧 𝐢𝐧𝐟𝐨@𝐢𝐩𝐡𝐬.𝐥𝐤
🌐 𝐰𝐰𝐰.𝐢𝐩𝐡𝐬.𝐥𝐤
Chat on WhatsApp : https://api.whatsapp.com/send?phone=94772676345

இலங்கை - சவுதி அரேபியா நேரடி விமான சேவையினை ஆரம்பிக்குமாறு  கோரிக்கை.கே எ ஹஙபாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை வரையறுக்கப...
29/09/2025

இலங்கை - சவுதி அரேபியா நேரடி விமான சேவையினை ஆரம்பிக்குமாறு கோரிக்கை.

கே எ ஹங

பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை

வரையறுக்கப்பட்ட விமான நிலைய, விமான சேவைகள், ஶ்ரீலங்கா(தனியார்) கம்பனி தொடர்பாக அரசாங்க பொறுப்பு, முயற்சிகள் பற்றிய குழுவின் அறிக்கை தொடர்பாக 26.09.2025ல் நடைபெற்ற பராளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு உறையாற்றிய அம்பாறை மாவட்ட ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை சவுதி அரேபியாவில் பணிபுரியும் 3 இலட்சம் இலங்கையர்கள், ஒவ்வொரு வருடமும் ஹஜ்,உம்ரா கடமை நிறைவேற்றச் செல்லும் 85 ஆயிரம் மக்களின் நலன்கருதி 2020ல் இடைநிறுத்தப்பட்ட இலங்கை - சவுதி அரேபியா நேரடி விமான சேவையினை ஆரம்பிக்குமாறு கோரிக்கை விடுத்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்…

2020ஆம் ஆண்டு கொரோனா தொற்றுடன் இலங்கை - சவுதி அரேபியாவுக்கான நேரடி விமான சேவையை வழங்கி வந்த சவுதியா, எதிஹாத், கட்டார், எமிரேட்ஸ் ஆகிய விமான சேவைகள் இடைநிறுத்தப்பட்டன. தற்போது மிக உயர்ந்த கட்டணத்தில் மட்டுப்படுத்தப்பட்ட விமான சேவையை ரியாத், தமாம் ஆகிய விமான நிலையங்களுக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் வழங்கி வருகிறது.
அதேவேளை சவுதி அரேபியாவில் சுமார் 3 இலட்சம் பேர் எமது நாட்டைச் சேர்ந்தோர் பணிபுரிந்து வருவதுடன், நமது நாட்டிலிருந்து வருடாந்தம் சுமார் 3500 ஹஜ்ஜாஜிகளும், 50,000 ற்கும் அதிகமான முஸ்லிம்கள் உம்ரா யாத்திரை நிமிர்த்தம் சவுதி செல்கின்றனர். இடைத்தரகர்கள் அற்ற ஒரு ஒழுங்கான நியாயமான நேரடி சவுதியா (SAUDIA) விமான சேவையை சவுதி அரசுடன் இணைந்து எமக்கு ஆரம்பிக்க முடியுமாக இருப்பின் ஹஜ், உம்ரா கட்டணங்களை ஒரு இலட்சம் ரூபாவினால் குறைக்க முடிவதுடன், சவுதி அரேபியா நாட்டில் தொழில் புரியும் சுமார் 3 இலட்சம் இலங்கையர்கள் நன்மை அடைவார்கள்.
அதேவேளை சவூதி அரேபியா நாட்டிலிருந்து இலங்கைக்கு வரும் உல்லாசப் பயணிகளின் தொகை அதிகரிப்பதுடன், இலங்கையின் உள்நாட்டு ஏற்றுமதியை பல மடங்கு அதிகரித்து தேசிய வெளிநாட்டுச் செலாவணி வருவாயை பல மடங்கு அதிகரிக்க முடியும்.

அதேபோல ஏனைய விமான நிலையங்களை தொட்டுச் செல்லும் விமான சேவையினால் நமது இலங்கை மக்கள் 15-20 மணித்தியாலங்கள் கொழும்பு - அபுதாபி, கொழும்பு - டுபாய், கொழும்பு - பஹ்ரைன், கொழும்பு- சார்ஜா, கொழும்பு - கத்தார், கொழும்பு - ஓமான் ஆகிய விமான நிலையங்களில் தாமதித்து தங்கி சவுதி அரேபியாவுக்கு செல்லும் நிர்ப்பந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
எனவே, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்னாயக்க அவர்கள் சவுதி அரேபியாவில் தொழில் புரியும் எமது இலங்கை நாட்டைச்
சேர்ந்த 3 இலட்சம் பேரின் நன்மை கருதியும் தொடர்ச்சியாக “உம்ரா”, “ஹஜ்” கடமைகளை நிறைவேற்றச் செல்லும் 85 ஆயிரம் முஸ்லிம்
மக்களின் நன்மை கருதியும் இடைநிறுத்தப்பட்டுள்ள இலங்கை – சவுதி அரேபியாவுக்கான நேரடி விமான சேவையை (சவுதியா, எதிஹாத், கட்டார், எமிரேட்ஸ் ஆகிய விமான சேவைகளை) மீண்டும் ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதுடன் நீண்டகாலமாக இரத்மலானை விமான நிலையத்திலிருந்து அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் பலாலி பிரதேசங்களுக்கான உள்ளூர் விமான சேவைகள் ஒரு வாரத்தில் 3 தடவைகள் சேவைகளில் ஈடுபடுத்தப்பட்டு வந்தன. இதனால் வடக்கு, கிழக்கு மாகாண மக்கள் நன்மையடைந்து வந்தனர்.

எனவே, வடக்கு, கிழக்கு மாகாண மக்களின் நன்மை கருதி மீண்டும் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான உள்ளூர் விமான சேவைகளை ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

கடந்த காலங்களில் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு, பொத்துவில் - அருகம்பே பிரதேசங்களில் வரையறுக்கப்பட்ட விமான நிலைய சேவைகள் ஶ்ரீறிலங்கா (தனியார்) கம்பனிகள் சீ பிளேன் சேவையினை நடாத்தி வந்தன. இச்சேவையும் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளது. எனவே, இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ள சீ பிளேன் சேவையினை மீள ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். நான் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசன அமைச்சராக பதவி வகித்த காலத்தில் நீர்ப்பாசன திணைக்களத்திற்கு சொந்தமான அட்டாளைச்சேனை கோணாவத்தை ஆற்றினை அகலப்படுத்தி சீ பிளேன் சேவையினை ஆரம்பிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டேன். அதேபோன்று அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று பிரதேசங்களில் அமைந்துள்ள சம்புக்களப்பு ஆற்றில் சீ பிளேன் விமான சேவை ஒன்றை ஆரம்பிப்பதற்கான வளங்கள் அமைந்துள்ளன. எனவே, அட்டாளைச்சேனை சம்புக்களப்பில் சீ பிளேன் சேவை ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகளை தனியார் (விமான) கம்பனிகள் ஆரம்பிப்பதற்கான செயற்பாடுகளை விமான சேவைகள் அமைச்சு மேற்கொள்ள வேண்டும்.

எமது நாட்டின் பாராளுமன்ற வரலாற்றில் 10வது பாராளுமன்றம் மிக முக்கியமானதாகும். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்கள் தான் ஜனாதிபதியாக வருவேன் என நினைத்திருப்பாரா? அல்லது அமைச்சர்கள், சபாநாயகர், பிரதி அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் நினைத்திருப்பார்களா? இல்லை இறைவனின் நாட்டத்தினால் 225 பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளோம் என்பதனை மறந்து விடாதீர்கள். நமது நாட்டின் அரசியல்வாதிகளில் 150ற்கும் மேற்பட்ட பெருந்தலைவரக்ள், அரசியல் தலைவர்கள் எல்லாம் கோடிக்கணக்கான பணத்தை செலவு செய்தும் மக்களினால் நிராகரிக்கப்பட்டனர். எனவே, பாராளுமன்ற செயற்பாடுகளில் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் கௌரவமான முறையில் செயற்பட வேண்டும். இன்று காலையில் பாராளுமன்ற அமர்வின் போது பாராளுமன்ற பொதுசன கலரியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள், ஆசிரியர்கள் அமர்ந்து கொண்டு சபை நடவடிக்கைகளை பார்த்துக் கொண்டிருக்கும் போது பாராளுமன்றத்தில் ஆளும்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் அநாகரிகமான முறையில் பேசுகிறார்கள் இது மிகவும் மோசமான செயற்பாடாகும். பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்பதனை நாம் எல்லோரும் சிந்தித்து செயற்பட வேண்டும். எனவே, எதிர்காலத்தில் இவ்வாறான முறையற்ற செயற்பாடுகளுக்கு சபாநாயகர்/ தலைமை தாங்கும் உறுப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். என அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை கேட்டுக் கொண்டார்.

Address

Akkaraipattu
32400

Opening Hours

Monday 07:00 - 22:00
Tuesday 07:00 - 22:00
Wednesday 07:00 - 22:00
Thursday 07:00 - 22:00
Friday 07:00 - 22:00
Saturday 07:00 - 22:00
Sunday 07:00 - 22:00

Telephone

+94760978505

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pirai TV - பிறை TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Pirai TV - பிறை TV:

Share