Hallaj Tv

Hallaj Tv Spiritual Media

குத்புல் அக்தாப், பஹ்ருல் இல்ஹாம்,  வலிய்யுல் காமில், குத்புனா அஸ்-ஸெய்யித் அஷ்-ஷெய்க் *ஹல்லாஜுல் மன்ஸூர்* நாயகம் காதிரி...
01/02/2026

குத்புல் அக்தாப், பஹ்ருல் இல்ஹாம், வலிய்யுல் காமில், குத்புனா அஸ்-ஸெய்யித் அஷ்-ஷெய்க் *ஹல்லாஜுல் மன்ஸூர்* நாயகம் காதிரி, ஜிஷ்தி, றிபாயி, நக்‌ஷபந்தி றழியள்ளாஹு அன்ஹு அன்னவர்களின் நினைவாக
*கந்தூரி வைபவம்*
இன்ஷா அல்லாஹ், நாளை *2026.02.02 திங்கட் கிழமை பகல்- ளுஹர் தொழுகையின் பின்னர்* அக்கரைப்பற்று ஸாவியத்துல் ஹல்லாஜிய்யா -துஹ்பா மன்ஸில்; கடற்கரைப் பள்ளிவாசலில் இடம்பெறும்.

கலீபத்துல் ஹல்லாஜ் அஸ்ஸெய்யித் அஷ்ஷெய்க் அல் குத்ப் அப்துல் மஜீத் மக்கத்தார் நாயகம் அவர்களின் தலைமையில் இடம்பெறும் நிகழ்வுகளில் முரீதீன்கள் முஹிப்பீன்கள் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ ஜனாஸா அறிவித்தல்அக்கரைப்பற்று 01 யூனியன் வீதியில் வசித்துவரும் றஹ்மதும்மா...
24/01/2026

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ

ஜனாஸா அறிவித்தல்

அக்கரைப்பற்று 01
யூனியன் வீதியில் வசித்துவரும் றஹ்மதும்மா அவர்கள் வபாத்தானார்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்

அன்னார்
மர்ஹும் முகம்மது இப்றாகீம் (தம்பி லெவ்வை) மாஸ்டர் அவர்களின் அன்பு மனைவியும்

மர்ஹும்களான முகம்மது அலியார் (*பயிலட்* பீடி )
நஃமதும்மா தம்பதியினரின் அன்பு மகளும்

சாஹிதா பானு
மாஜித் (Water board)
முப்தி
நுஸ்ரத் முபீன்
வஹிதா சகி ஆகியோரின் அன்பு தாயாரும்

அபுஉபைதா
லாபீர்
வாஹித்
சித்தி நிஹாரா
ஆரிபா
கரீமுன் நிஷா
தாஜுன் நிஷா ஆகியோரின் அன்புச் சகோதரியும்

ஆசாத்
இயாஸ்
அசாட் ஆகியோரின் மாமியாரும் ஆவார்

இன்ஷாஅல்லாஹ் மஹ்லரத்துல் காதிரியா ஜும்மா பள்ளி வாசலில் அஸர் தொழுகைக்கு பின் ஜனாசா தொழுவிக்கபட்டு பதுர் மைய்யவாடியில் நல்லடக்க செய்யப்படும்

அல்லாஹ், அன்னாருடைய நற்கிரிகைகளை ஏற்று
பாவங்களை மன்னித்து மேலான
#ஜன்னத்துல்_பிர்தௌஸ்
எனும் சுவர்க்கத்தை வழங்குவானாக.

அன்னாரின் குடும்பத்திற்கு மன வலிமையையும் பொறுமையையும் வழங்குவானாக.

மிஃராஜ் பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் வாழ்விலும், இஸ்லாத்தின் வளர்ச்சியிலும் மிஃராஜ் ஒரு முக்கிய இட...
16/01/2026

மிஃராஜ்

பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் வாழ்விலும், இஸ்லாத்தின் வளர்ச்சியிலும் மிஃராஜ் ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது. அடியானுக்கும், அல்லாஹ்வுக்குமிடையிலான நெருக்கத்தின் எல்லையையும் அன்நெருக்கத்தை அடைவதற்கான வழிமுறைகளையும் மிஃராஜ் விளக்குகிறது. ஆன்மீகப் பயணத்தின் யதார்த்தமான விளக்கமாகவும், ஆன்மாவின் ஆற்றலின் வெளிப்பாடாகவும் மிஃராஜ் நிகழ்வு அமைகிறது.

பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் நபிமார்களின் நாயகர் என்பதையும், மலக்குகள் அர்ஷ், குர்ஷ் அனைத்தையும் விட மேலானவர்கள் என்பதையும் மிஃராஜ் நிரூபித்துக்காட்டுகின்றது.

வேந்தர் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பிரபஞ்சத்தில் எதிலும் தேவையற்றவர்கள் என்பதையும், வல்ல நாயனான அல்லாஹ்விடத்தில் மாத்திரமே தேவையுள்ளவர்கள் என்பதையும் மிஃராஜ் சுட்டிக் காட்டுகின்றது. ஆன்மீகப் படித்தரங்களில் அடிமைத்துவமே மேலானது என்பதையும், அதன் மூலமே எஜமானான இரட்சகனை அடையலாம் என்பதையும் மிஃராஜ் விளக்கிக் காட்டுகின்றது. இவ்வாறு பல்வேறு தத்துவங்களை உள்ளடக்கியுள்ள மிஃராஜினை பின்வருமாறு ஆராயலாம்.

1. மிஃராஜ் பயணம் ஏன் விண்ணகத்தில் ஏற்பாடாகியது?

2. மிஃராஜில் பொதிந்துள்ள தத்துவம் என்ன?

3. மிஃராஜ் கூறும் படிப்பினை என்ன?

மிஃராஜ் பயணம் ஏன் விண்ணகத்தில் ஏற்பாடாகியது?

நபிமார்களிடத்தில் சிதறிக் காணப்பட்ட அனைத்து அற்புதங்களும் அஹ்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) யிடத்தில் முழுமையாகக் காணப்பட்டன. நபிமார்களுக்கெல்லாம் நாயகமானவர் நபியுல்லாஹ் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் என்பதை நிரூபித்துக் காட்டும் முக்கிய அம்சமாகவே மிஃராஜ் நிகழ்வு அமைகிறது. இதனை பின்வருமாறு நோக்கலாம்.

1. நபி மூஸா (அலைஹிஸ்ஸலாம்) தூர்சீனா மலையில் அல்லாஹ்வுடன் பேசினார்கள். நபி ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் நான்காம் வானம் உயர்த்தப்பட்டார்கள். எனவே பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) நான்காம் வானம் தாண்டிச் சென்று அல்லாஹ்வை தரிசிக்க வேண்டியதால் விண்ணகம் சென்றார்கள்.

2. அர்ஷிலிருந்து பர்ஷ் வரையிலான அனைத்தும் பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் ஒளியிலிருந்து அவர்களுக்காகவே படைக்கப்பட்டன. படைப்பினங்களின் முதலானவரான பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் படைப்பினங்களின் அவசியத் தேவைகள் எதிலும் படைப்பினங்கள் பால் தேவையற்றவர்கள் என்பதையும் படைத்தவனிடம் மட்டுமே அவர்கள் தேவையுள்ளது என்பதையும் எடுத்துக் காட்டவேண்டி ஏற்பட்டதால் அர்ஷுக்கும் மேலால் செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டதால் விண்ணகம் சென்றார்கள்.

3. நபிமார்கள் அனைவரும் வானவர் தூதர் ஜிப்ரீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் மூலமே அல்லாஹ்வைப் பற்றியும், சொர்க்கம், நரகம் பற்றியும் அறிந்து மக்களுக்கு விளக்கம் கூறினார்கள். ஆனால் பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் ஏனைய நபிமார்களைப் போன்று இரண்டாம் தரப்பு செய்திகளைக் கூறாமல் நேரடியாகவே அல்லாஹ்வையும், சொர்க்கம், நரகம் முதலியவற்றையும் நேரில் கண்டு கூறும் ‘ஷாஹிதாக’ இருக்க வேண்டும் என்று அல்லாஹ் விரும்பினான். அதனால் விண்ணகம் நோக்கிய பயணத்திற்கு ஏற்பாடு செய்தான்.

“எனக்கு நான்கு அமைச்சர்கள் உள்ளனர் இருவர் மண்ணுக்கும் மற்றுமிருவர் விண்ணுக்கும்” என பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் நவின்றுள்ளார்கள்.

மண்ணுக்கான அமைச்சர்கள்.

அபூபக்கர் (ரழியல்லாஹு அன்ஹு)
உமர் (ரழியல்லாஹு அன்ஹு)

விண்ணுக்கான அமைச்சர்கள்.

ஜிப்ரீல் (அலைஹிஸ்ஸலாம்)
மீக்காயில் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களுமாவர். (மிஷ்காத்)

மன்னரின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளின் நிர்வாகத்தை கண்காணிப்பது அமைச்சர்களின் கடமை. மன்னகத்தின் நிர்வாகத்தை நேரில் அவதானித்துக் கொண்டிருக்கும் பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களை வின்னகத்தின் நிர்வாகத்தையும் ஒருமுறை நேரில் வந்து பார்த்துவிட்டுச் செல்லுமாறு விண்ணகத்திற்குப் பொறுப்பான இரு அமைச்சர்களையும் நேரில் அனுப்பி அழைப்பு விடுத்தான் அகிலத்தை ஆளும் வல்ல நாயன் அல்லாஹ்வின் அழைப்பை ஏற்று விண்ணகம் சென்றார்கள் வேந்தர் நபியவர்கள் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்).

“ஒவ்வொன்றும் அதன் அஸலை நாடிச் செல்லும்” என்பது நபிமொழி. இந்த வகையில் கஃபதுல்லாஹ் அமைந்துள்ள புனித இடமே பூமியின் அடிப்படை நிலமாகும். அதனால் பூமியின் எப்பகுதியிலும் சரி வாழும் மனிதர்கள் தாய் நிலமாகிய மக்கமா நகர சென்று ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்றுகின்றனர். அனைத்துப் பள்ளிவாசல்களுக்கும் தாய்ப்பள்ளி மக்கமா நகரில் இருக்கும் கஃபாவுகும். அதனால் தாய்ப் பள்ளியாகிய கஃபாவை கிப்லாவாக ஆக்கி உலக முஸ்லிம்கள் தொழுகின்றனர். ‌

ஆணின் விலா எலும்பிலிருந்து பெண் படைக்கப்பட்டதால், பெண்ணுக்கு ஆண் அடிப்படையாக இருக்கின்ற காரணத்தினால் ஆணுக்கு வழிப்பட்டவளாக ஆணின் துணையை நாடிச் செல்கிறாள். படைப்பினங்கள் அனைத்துக்கும் பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் ஒளியே அடிப்படையாக இருப்பதால் அனைத்துப் படைப்பினங்களும் அஹ்மது நபியை (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) விசுவாசிக்கின்றன. அன்னாரின் வேதமே இறுதி வேதமாகவும், முழுமையான வேதமாகவும் அங்கீகரிக்கப்பட்ட வேதமாகவும் அமைந்திருக்கிறது. அனைத்து நபிமார்களும் அஹமது நபியைப் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) பற்றி அன்னவர்களின் உம்மத்தினருக்கு உபதேசித்து வந்தனர். அன்னாரிடமே மறுமையில் அபயம் தேடி நபிமார்கள் உட்பட அனைத்து மக்களும் செல்வர்.

அஹமது நபியின் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) ஒளிக்கு அல்லாஹ்வின் ஒளியே அடிப்படையாக இருப்பதனால் அதனை இடம், காலம் என்ற படைப்பின் எல்லைகளை தாண்டிச் சென்று சந்திக்க வேண்டி ஏற்பட்டது. அதனால் விண்ணகம் சென்றார்கள்.

மிஃராஜின் படிப்பினை

1. மிஃராஜ் பயணத்தின் ஆரம்பத்தில் பெருமானாரின் உடல் பிளக்கப்பட்டு இதயம் வேறாக்கப்பட்டு இதயத்தில் சில பகுதிகள் நீக்கப்பட்ட பின் புதிதாக சில பகுதிகள் இதயத்துள் வைத்து பொருத்தப்பட்ட நிகழ்ச்சி புகாரி, முஸ்லிம் போன்ற நூற்களில் காணப்படுகின்றது.

2. மிஃராஜ் பயணம் மக்காவிலிருந்து சித்ரத்துல் முன்தஹா வரையிலும் ‘புராக்’ என்ற வாகனத்திலே மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. “புராக்” என்பது “பர்க்” – மின்னல் என்ற பொருளைக் கொடுக்கும் சொல். இதனை மின்சாரத்தில் இயங்கும் ஒளிவேகங்கொண்ட வாகனம் என்றும் எடுத்துக்கொள்ள முடியும்.

3. காற்று மண்டலம், நெருப்பு மண்டலம் ஆகிய அனைத்து மண்டலங்களையும் தாண்டியதாக இப்பயணம் அமைந்திருக்கின்றது.

4. காலம், இடம், திசை இல்லாத அந்தர வெட்ட வெளியில் பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் இறுதிப் பயணம் அமைந்திருக்கின்றது.

சிந்திக்க வேண்டியவை

1. பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் உடலின் யதார்த்தம் மண்ணின் கூறிய கத்தியால் உடல் கிழிக்கப்பட்டிருக்க வேண்டும். அது நடக்கவில்லை. ஜிப்ரீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் சுட்டுவிரலினாலே உடல் கிழிக்கப்பட்டது. அப்போது குருதி கொப்பளித்திருக்க வேண்டும். இதுவும் நடக்கவில்லை. ஒரு சொட்டு குருதியும் வெளியேறவில்லை. இதயம் வேறாக்கப்பட்ட போதும் அதன் அடிப்பகுதிகள் நீக்கப்பட்ட போதும் அவர்கள் உணர்விழந்திருக்க வேண்டும். மாறாக முழு உணர்வுடன் நடந்தவற்றை பார்த்துக் கொண்டுமிருக்கின்றார்கள். இச்செய்கை மூலம் பின்வரும் படிப்பினைகளை பெருகின்றோம்.

பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களிடத்தில் கீழ்வரும் மூன்று நிலைகளும் காணப்பட்டிருக்கின்றன.

1. யுத்தத்தில் காயப்பட்ட போது உடலிலிருந்து குருதி வந்தபோதும், அகழி தோன்றும் போது பசியின் கடுமையால் மணிவயிற்றில் கல்லைக் கட்டிய போதும் உடலியல் (பஷரிய்யத்) மிகைத்தவர்களாக இருந்தார்கள். அதனால் மனிதத்துவ நிலை அவர்களில் மேலோங்கிக் காணப்பட்டது.

2. மிஃராஜ் பயணத்தின் முன் உடல் கிழிக்கப்பட்ட போதும், தொடர் நோன்பு நோற்றபோதும், தூக்கமின்றி விடியவிடிய வணங்கிய போதும், வின்னகப் பயணத்தில் காற்று, நெருப்பு மண்டலங்களை கடக்கும் போதும் மலக்கானியத் மிகைத்துக் காணப்பட்டார்கள்.

3. ‘இதற்கப்பால் ஒரு நூல் அளவு தாண்டினால் எரிந்து சாம்பலாகிவிடுவேன்’ என்று கூறி ஜிப்ரீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் பின்வாங்கிய போது அச்சமோ, ஆயாசமோயின்றி அடக்கமாகவே முறுவலித்தவர்களாக பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் மேற்கொண்ட பயணத்தின் யதார்த்தத்தை ஹக்கானியத் என்று சொல்லப்படும். அல்லாஹ்வும், அவனது ஹபீபும் தான் அறிவர். ஆனால் ஒன்று மட்டும் சர்வ நிச்சயம். இம்மூன்று பயணங்களிலும் பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் “அப்தாக” அடியாராகவே இருந்துள்ளார்கள். படைப்பினங்களின் சகல தரப்பையும் சுட்டும் பொதுவான சொல் ‘அப்து’ என்பதை தவிர வேறொன்றில்லை. ஆதலால் ‘தனது அப்தை இராவழி நடத்திய நாயன் தூயவன்’ என்று அல்லாஹ் கூறுகின்றான்.

“இராவழி நடாத்திய நாயன் தூயவன்” என்ற கூற்று இப்பயணம் அல்லாஹ்வின் விருப்பத்தின் அடிப்படையில் அவனது தனிப்பெரும் ஆற்றலால் நிகழ்ந்தது என்பதை சுட்டிக் காட்டுகிறது.

மிஃராஜ் பயணம் அல்லாஹ்வினுடனான சந்திப்பின் ஒழுக்கத்தை எடுத்துக் காட்டும் அம்சமாகவே அமைந்திருப்பதை இவ்வாறு அறியலாம்.

1. பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் இதயம் பரிசுத்தமாக்கப்பட்டு ஈமான் நிரப்பப்பட்ட விடயம்.

பரிசுத்தமான உள்ளமுடையவர்கள் மாத்திரமின்றி நிரப்பமான தூய ஈமான் உள்ளவர் மாத்திரமே அல்லாஹ்வின் திருக்காட்சியை காணும் தகுதி பெற்றவராவார் என்பதை உணர்த்திக் காட்டப்படுகின்றது. இதனையே ‘பரிசுத்தமான உள்ளமுடையவரே வெற்றி பெற்றார்’ என்ற திருவசனம் நமக்கு உணர்த்துகின்றது.

2. மஸ்ஜிதுல் அக்ஸாவில் நபிமார்களுடனான சந்திப்பு,

புனிதப் பயணங்கள் நல்லவர்களின் ஆசியுடன் அல்லது நல்லவர்களின் ஸியாரத்துடன் அமைதல் வேண்டும் என்பதை புலப்படுத்துகிறது. புராக்கிலான பயணமும், ஜிப்ரீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வழித்துணையும் இறைவழிப் பயணம் சடநிலையில் அல்லாமல் ஆன்மீக நிலையில் ஏற்கனவே வழியறிந்த, தெரிந்த காமிலான ஷெய்கின் துணையுடனே அடக்கமாக அமைதல் அவசியம் என்பதையும் சுட்டிக் காட்டுகிறது. ஜிப்ரீல் (அலைஹிஸ்ஸலாம்) புராக், ஆகியவற்றின் பின்வாங்குதலும், றப் றப் பின் வருகையும், அதற்கப்பால் உள்ள பயணமும், மனித முயற்சியும், வழிகாட்டுதலும் குறிப்பிட்ட எல்லை வரையிலும்தான் என்பதையும் அதற்கப்பால் உள்ள பயணம் அதாவது முக்தி என்பது அல்லாஹ்வின் தனிப்பெரும் கருணையில் “நிஃமத்தில்” – அருளில் தான் தங்கியிருக்கிறது என்பதையும் அவன் நாடியவர்களை மட்டுமே நேர்வழி காட்டி முக்தி பெறச்செய்வான் என்பதையும் காட்டுகிறது.

கப்ரில் தொழுகை

பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் மக்காவிலிருந்து மஸ்ஜிதுல் அக்ஸா செல்லும் வழியில் மூஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் கப்ரில் தொழுது கொண்டிருப்பதை கண்டதாகவும், மஸ்ஜிதுல் அக்ஸா சென்றடைந்த போது பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களை வரவேற்க மூஸா (அலைஹிஸ்ஸலாம்) தயார் நிலையில் நின்றதாகவும் ஹதீஸ் கிரந்தங்களில் காணமுடிகிறது.

ஆன்மாவின் வேகம்

மேலும் கூடவே மஸ்ஜிதுல் அக்ஸாவில் தொழுத நபிமார்கள் பெருமானாரை வழியனுப்பிய பின்பே பிரிந்தார்கள். ஆனால், புராக் விண்ணகம் செல்லும் முன்பே நபிமார்கள் அங்கு சென்று விட்டார்கள்.

இது, நபிமார்களுடைய ஆன்மாவின் வேகம் உச்ச ஒளி வேகங்கொண்ட புராக்கின் வேகத்தை விட வேகமானது என்பதை எடுத்துக் காட்டுகின்றது.

மரணித்தவர் உதவுதல்

அல்லாஹ்வை தரிசித்து உரையாடிய பின் ஐம்பது வேளை தொழுகையை பரிசாக கொண்டுவந்த போது மூஸா (அலைஹிஸ்ஸலாம்) ஐந்தாக குறைக்கும் வரை வாதாடியது.

“தொழுகை முஃமினின் மிஃராஜ்” அல்லாஹ்வை காண்பது மிஃராஜின் பூரணம். பெருமானாரை தவிர்த்து ஏனையோர் கலப்பால் அல்லாஹ்வை காணும் பாக்கியத்தை பெறுவார் என்பதனால்.

ஊசிக்காதளவு அல்லாஹ்வுடன் வசநித்து மதிமயங்கிய அனுபவத்தை பெருமானாரிடம் எடுத்துக்கூறி தினமும் ஐம்பது வேளை இறைவனை தரிசிக்கும் ஆற்றல எல்லா உள்ளங்களுக்கும் கிடையாது. எனவே குறைத்து வாருங்கள் என்று கூறியதிலிருந்து........

1. மரணித்தவர்கள் உயிருள்ளவர்களின் பலம், பலவீனம் ஆகியவற்றை அறிந்திருக்கின்றார்கள்.

2. உயிருள்ளவர்களின் நடவடிக்கைகளில் மரணித்தவர்கள் அக்கறை கொண்டுள்ளார்கள்.

3. உயிருள்ளவர்களுக்காக மரணித்தவர்கள் உதவி செய்ய முடியும் என்பது தெளிவாகின்றது.

விஞ்ஞான தத்துவம்

மிஃராஜ் பயணம் சிலேடையாகவும், இஸ்ராப் பயணம் வெளிப்படையாகவும் அல்குர்ஆனில் கூறப்பட்டிருப்பதானது தெரிந்த உண்மைகளை கொண்டே தெரியாத உண்மைகள் விளக்கப்பட வேண்டும் என்ற விஞ்ஞானத் தத்துவம் எடுத்துக் காட்டப்படுகிறது. பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட பௌதீக அதீத விடயங்களான மறைஞானங்கள் பகிரங்கமாக பாமரர்கள் மத்தியில் பேசக்கூடியதல்ல என்பதனால்தான் அறிவுள்ளவர்கள் மாத்திரம் அறிந்து கொள்ளும் அமைப்பில் அல்குர்ஆன் சிலேடையாக எடுத்துக் கூறுகின்றது.

மிஃராஜ் நிகழ்வு நபித்துவ 11 ½ ல் ரஜப் திங்கள் இரவின் பிற்பகுதியில் நடந்தேறியதிலிருந்து..... பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் மார்க்கம் நடுநிலையானது என்பதையும் நடுநிலை – மத்திமமானதே – மேலானது என்பதையும் காட்டுகின்றது அதாவது.

நடுநிலை

1. நபித்துவத்தின் முளுக்காலம் 23 ஆண்டுகள். இதன் சரிபாதி 11 ½ ஆண்டுகள்.

2. நுபுவ்வத்தின் ஆரம்பம் நல்ல கனவுகலாகும். இக்கனவு ரபியுல் அவ்வலில் தொடங்கியது. இதனை நுபுவ்வத்தின் தொடக்கம் என கணக்கிட்டால் ரஜப் வருடத்தின் மத்தியாகும்.

3. ஷரீஅத்தினடிப்படையில் வெள்ளிக்கிழமை முதல் நாளாகும். இதன்படி கிழமையின் மத்தி திங்களாகம்.

4. முந்திய மார்க்கங்களில் சில ஜவாலியத் – (தீவிரம்) ஆகவும், வேறுசில ஜமாலியத் (சாத்வீகம்) ஆகவும் அமைந்துள்ளன. ஆனால் இறுதி வேதமான இம்மார்க்கம் இரண்டையும் உள்ளடக்கிய சமநிலையான மத்திய மார்க்கமாக இருப்பதனால்,

“ இந்த உம்மத் நடுத்தரமான உம்மத்” என்று அல்லாஹ் குறிப்பிடுகிறான். “நடுத்தரமானதே சிறந்தது” என்ற அடிப்படையில் “இதுவரை தோற்றுவிக்கப்பட்ட உம்மத்துகளில் இந்த உம்மத்தே சிறந்த உம்மத்” என சிறப்பித்துக் குறிப்பிட்டுள்ளான். இதனால், மிஃராஜ் நிகழ்வு, மத்திமத்தில் நிகழ்ந்திருப்பதால் இஸ்லாம் நடுநிலையையே போதிக்கிறது. அதுவே அழகானது. அழகையே அல்லாஹ் விரும்புகிறான் என்பதனை புலப்படுத்திக் காட்டுகிறது.

மிஃராஜ், ஹபீப், மஹ்பூபை நாடிச்செல்லும் பயணமாகும். இப்பயணத்தின் இன்பம் (விஸாவில்) சந்திப்பில் தங்கியிருக்கிறது. இச்சந்திப்பு அடக்கமான இரவு நேரத்தில் நிகழ்வதால் பூரண இன்பத்தை பெற முடியும் என்பதை மறைமுகமாக எடுத்துக் காட்டுகின்றது.

எனவே மிஃராஜ் பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் யதார்த்த நிலையை வெளிப்படுத்தும் ஒரு முக்கிய நிகழ்வாகவும் ஆன்மீகப் பயணத்தின் ஒழுக்கத்தை விளக்கும் ஒரு செயல்முறை பயிற்சியாகவும் அமைந்திருப்பது புலனாகின்றது.

தொழுகை மிஃராஜின் பரிசாகும். இது முஃமினீன் மிஃராஜாகும். அதனால், தொழுகையின் அசைவுகள் அடிமைத்துவத்தின் வெளிப்பாடாக அமைந்திருக்கின்றன. “அடிமைத்துவத்தின் பலன் வெற்றியாகும். இதனை அத்திய்யாத்தில் பெறமுடியும். அத்தஹிய்யாத் இறைவனுக்கு முன்னாள் நபி ﷺ அவர்கள் உரையாடியதை நினைவுப்படுத்துகின்றது. அதனால், தொழும்போது நாம் நேரே அல்லாஹ்வுடன் வசனிப்பதாகவும், நபி ﷺ அவர்களுக்கு ஸலாம் கூறுவதாகவும் கருதிக்கொள்ள வேண்டும். அதனால் நபி ﷺ அவர்களை நேரில் பார்ப்பதாக கற்பனை செய்துகொண்டு ஸலாம் கூறினால் நபி ﷺ அவர்கள் பதில் கூறுவார்கள் என்று ஹஜ்ஜதுல் இஸ்லாம் இமாம் கஸ்ஸாலி (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்கள் இஹ்யாவில் குறிப்பிட்டுள்ளார்கள்.

தமிழ் பகுதி - இஸ்லாமிய கட்டுரைகள்

பிஸ்மில்லாஹ்அல்ஹம்துலில்லாஹ்அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்.❤️❤️சங்கைக்குரிய ஷெய்குனா அஸ்ஸெ...
16/01/2026

பிஸ்மில்லாஹ்
அல்ஹம்துலில்லாஹ்
அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்.

❤️❤️சங்கைக்குரிய ஷெய்குனா அஸ்ஸெய்யித் அஷ்ஷெய்க் அல்குத்ப் கலீபத்துல் ஹல்லாஜ் அப்துல் மஜீத் பின் அப்துஸ் ஸமத் ஆலிம் மக்கத்தார் (றஹ்) (காதிரிய்யி, ஜிஷ்திய்யி,ரிபாஇய்யி, நக்ஸபந்திய்யி, தஃபஹாத்திய்யி , ஐதரூஸிய்யி) அவர்களின் 87 வது பிறந்த தினம் ரஜப் பிறை 27, ஹிஜ்ரி 1447 மிஃராஜ் தினம் ஆகும்.❤️❤️

🌹🌹🌹

ஹிஜ்ரி 1360 றஜப் மாதம் மிஹ்ராஜ் தினம் திங்கட்கிழமை,
_வலிகட்கரசர் குத்புல் அக்தாப் கெளதுல் அஃலம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (றழி)_ அவர்களின் சிறப்புமிகு பரம்பரையில்
அஸ்ஸெய்யித் முஹல்லம் அப்துஸ் ஸமத் ஆலிம் மெளலானா ஸபீதிய்யி
அல்-யெமானி (றஹ்) அவர்களுக்கும் அஸ்ஸெய்யிதா துஹ்பா உம்மா வலி அன்னவர்களுக்கும் அன்பு மகனாக இப்பூவுலகில்
பிறந்த🌹🌹🌹

*அதி சங்கைக்குரிய ஷெய்குனா அஸ்ஸெய்யித் அஷ்ஷெய்க் அல்குத்ப் கலீபத்துல் ஹல்லாஜ் அப்துல் மஜீத் பின் அப்துஸ் ஸமத் ஆலிம் மக்கத்தார் (றஹ்) (காதிரிய்யி, ஜிஷ்திய்யி,ரிபாஇய்யி, நக்ஸபந்திய்யி, தஃபஹாத்திய்யி* , *ஐதரூஸிய்யி)*🌹🌹🌹 அவர்களின் 87 வது பிறந்த தினம் ரஜப் பிறை 27, ஹிஜ்ரி 1447 மிஃராஜ் தினம் ஆகும்.

🌹🌹🌹

16/01/2026 வெள்ளிக் கிழமை பின்னேரம் சனிக் கிழமை இரவு இஷாத் தொழுகையின் பின்னர்* _அக்கரைப்பற்று கடற்கரையில் அமைந்துள்ள ஸாவியத்துல் ஹல்லாஜிய்யா துஹ்பா மன்ஸில்_ இல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விழாவுக்கு உங்கள் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறோம்.

ஜனாஸா அறிவித்தல்அக்கரைப்பற்று நகர் பிரிவு 01தெற்கு வீதியைச் சேர்ந்த சுல்தான் வீ வி (வி வீ ராத்தா) ஜனாஸா அறிவித்தல்அக்கரை...
04/01/2026

ஜனாஸா அறிவித்தல்

அக்கரைப்பற்று நகர் பிரிவு 01
தெற்கு வீதியைச் சேர்ந்த சுல்தான் வீ வி (வி வீ ராத்தா) ஜனாஸா அறிவித்தல்

அக்கரைப்பற்று நகர் பிரிவு 01
தெற்கு வீதியைச் சேர்ந்த
#வீவி அவர்கள் வஃபாத்தனார்

#إِنَّا_لِلّهِ_وَإِنَّا_إِلَيْهِ_رَاجِعُونَ

இவர்
கண்ணாடி இப்ராஹிம் ஹாஜியாரின் சகோதரியும்

பியாஸ்
ஆசாத் (Mechanic)
மர்சூக் (base hospital)
பௌமி (Water board)
மர்லியா
ஆகியோரின் தாயாரும் ஆவார்

நல்லடக்க விபரம் இன்ஷாஅல்லாஹ் பின்னர் அறிவிக்கப்படும்

அல்லாஹ், அன்னாருடைய நற்கிரிகைகளை ஏற்று
பாவங்களை மன்னித்து மேலான
#ஜன்னத்துல்_பிர்தௌஸ்
எனும் சுவர்க்கத்தை வழங்குவானாக.🤲

அன்னாரின் குடும்பத்திற்கு மன வலிமையையும் பொறுமையையும் வழங்குவானாக.🤲

🌹🌹கிலாஃபத் தின கொடியேற்ற விழா🌹🌹2025 டிசம்பர் 25
26/12/2025

🌹🌹கிலாஃபத் தின கொடியேற்ற விழா🌹🌹

2025 டிசம்பர் 25

மக்கத்தார் நாயகம் அன்னவர்கள் கலீபாவாக முடிசூட்டப்பட்ட அன்றைய நாளிரவில்,(2004.12.25) இறைஞான மகான் ஹல்லாஜ் மன்ஸூர் நாயகமவர...
26/12/2025

மக்கத்தார் நாயகம் அன்னவர்கள் கலீபாவாக முடிசூட்டப்பட்ட அன்றைய நாளிரவில்,(2004.12.25) இறைஞான மகான் ஹல்லாஜ் மன்ஸூர் நாயகமவர்கள் உலகறிந்த மாபெரும் தீர்க்க தரிசனமொன்றைக் கூறினார்கள்

அதாவது "இந்த ஆத்மீக கிலாபத் மாற்றத்தினால் உலகில் பெரும்பகுதிகளை நீர் தொடுவதுடன், அதனால் உலகில் பாரியளவு மாற்றங்கள் ஏற்படும்! மக்கத்தார் மஜீதின் கிலாபத் காலப்பகுதியில் உலகின் காலநிலை, அரசியல், பொருளாதாரம் மற்றும் கலாசாரம் போன்ற துறைகளில் மாபெரும் மாற்றங்கள் நிகழும்" என்று கூறியிருக்கின்றார்கள்! எவ்வளவு உண்மை!!! அடுத்த நாள் காலையே (2004.12.26) சுமாத்திரா தீவுகளை அண்மித்ததாக சக்திவாய்ந்த பூகம்பம் ஏற்பட்டு சுனாமிப்பேரலைகள் தெற்காசியாவைத் தாக்கியழித்தன!! 🌊 அதன் பின்னர் உலகில் ஏற்பட்ட மாற்றங்களை யாவருமே அறிவோம்!!

இறைநேசர்களின் தீர்க்க தரிசனங்கள் எந்தளவிற்கு உண்மையானது என்பதனை மேற்கூறிய மகான் ஹல்லாஜ் மன்சூர் நாயகத்தின் தீர்க்க தரிசனத்தில் காணலாம்!!

25/12/2025

கிலாஃபத் தின கொடியேற்ற விழா

2025 டிசம்பர் 25

கிலாஃபத் தின கொடியேற்ற விழா2025 டிசம்பர் 25ம் திகதி மாலை 05.00 மணியளவில் அக்கரைப்பற்று, சேர் றாஸீக் பரீத் வீதியில் அமைந்...
24/12/2025

கிலாஃபத் தின கொடியேற்ற விழா

2025 டிசம்பர் 25ம் திகதி மாலை 05.00 மணியளவில் அக்கரைப்பற்று, சேர் றாஸீக் பரீத் வீதியில் அமைந்துள்ள ஸாவியத்துல் ஹல்லாஜியா மத்ரஸத்துல் ஆயிஷாவில் சங்கைக்குரிய கலீஃபத்துல் ஹல்லாஜ் அப்துல் மஜீத் மக்கத்தார் வாப்பா றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் அவர்களின் தலைமையின் கீழ் கிலாஃபத் தின கொடியேற்றம் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

சங்கைக்குரிய குத்ஃபுல் அக்தாஃப், ஷெய்க் ஹல்லாஜுல் மன்ஸுர் அந்ரோத்தி றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களால் இந்தியா, கேரளா மாநில திருவானந்தபுர மாவட்ட பதிமங்களத்துக்கு சங்கைக்குரிய கலீஃபத்துல் ஹல்லாஜ் அப்துல் மஜீத் மக்கத்தார் வாப்பா றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் அழைக்கப்பட்டு கி.பி 2004 டிசம்பர் 25ம் திகதி இரவு 08.00 மணியளவில் ஆத்மீக பிரகாரங்ளையும் தரீக்காக்களின் வழிமுறை உத்தரவுகளையும் அதிகாரபூர்வமாக கையளித்து கிலாஃபத் ஹிர்கா அணிவித்து சாட்சிகளோடும் எழுத்தாவணத்தோடும உத்தியோகபூர்வமாக வெளிப்படுத்தினார். இந்நிகழ்வில் இலங்கையை சேர்ந்த பலரும், இந்தியா, அந்ரோத்தீவை சேர்ந்த ஷெய்குனா அவர்களின் குடும்பத்தாரும். கேரளா ஷகாவத்துஸ் ஸுன்னி அறபு கலாசாலை மார்க்க அறிஞர்களும், விரிவுரையாளர்களும், இந்தியா பிற பிரதேசங்களை சேர்ந்தவர்களும் சுமார் 300 மேற்பட்டோர்கள் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

காதிரிய்யி, ஜிஷ்திய்யி, நக்ஸபந்திய்யி, தஃபஹாத்திய்யி, ஐதரூஸிய்யி தரீக்காக்களின், கிலாஃபத் உத்தரவுகளும் றிஃபாஇய்யி தரீக்கா இஜாஸத்தும் றிஃபாஇய்யி கிலாஃபத் பெறுவீர் என்ற முன்னறிவிப்பும் முஹிப்பீன்கள், முரிதீன்களை வழி நடத்துவதற்கான நஸீஹத், இஜாஸத், பையத், முஷாஹதாக்களுக்கான ஏகோத்தரவுகளும் கலீஃபத்துல் ஹல்லாஜ் அப்துல் மஜீத் மக்கத்தார் வாப்பா றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களுக்கு வழங்கப்பட்டன.

ஷெய்குனாவின் முன்னறிவிப்புப் பிரகாரம் 2007 ஆம் ஆண்டு கல்முனை மீரா ஸாஹிபு நாயகத்தின் கடற்கரை பள்ளியின் வைத்து 40 பக்கீர்மார்கள் சேர்ந்து கலீஃபத்துல் ஹல்லாஜ் அப்துல் மஜீத் மக்கத்தார் றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களுக்கு கிலாஃபத் பேட்டா அணிவித்து அவர்களின் தலைமையில் றிஃபாஇய்யி றாத்திஃப் நடத்தி வைத்தனர். ஷெய்குனா, குத்ஃபுனா ஹல்லாஜ் மன்ஸுர் றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் உத்தரவுப்படி அவர்கள் உயிரோடு இருக்கும்போது விஷம் நீக்கும் கற்களை ஓதி அம்பலத்தாரு மஸ்ஜிதிலும் மற்றும் மஹ்ழறத்துல் காதிரியா மஸ்ஜிதிலும் வைக்க செய்து அதிகமான விஷம் மற்றும் நோய்களை சுகமடைய செய்தார். இவ்வருடம் இரண்டு விஷம் நீக்கும் கல் ஓதப்பட்டு குருநாகல், தொரணகெதர என்ற ஊரில் வைக்கப்பட்டு நோய்கள் மற்றும் விஷம் எல்லாம் சுகமடைந்து பிரபல்யமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு காமில் 'ஷெய்க்' தமக்குப் பின் ஸூஃபித்துவ தரீக்காக்களில் மக்களை வழி நடத்துவதற்கு அவரால் பயிற்றுவிக்கப்பட்ட கலீஃபாவுக்கு தமது வஃபாத்துக்கு முன் தமக்கு வழங்கப்பட்டிருக்கும் தத்துவங்கள், அதிகாரங்கள், வரபிரசாதங்களை உத்தியோகபூர்வமாக பொறுப்புக்களை கலீஃபாவுக்கு ஒப்படைக்கும் நிகழ்வே கிலாஃபதாகும். இம்முடி சூட்டும் நிகழ்வு இஸ்லாமிய தரீக்கா மரபு வழிமுறையில் முக்கியத்துவமிக்கதாக விளங்குகிறது.

கிலாஃபத் வழங்கிய பிற்பாடு குத்ஃபுல் அக்தாஃப், ஷெய்க் ஹால்லஜுல் மன்ஸுர் றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் உரையாற்றினார். அவ்வுரையில் கடந்த 7 வருடங்களாக கிலாஃபத்தை பொறுப்பேற்குமாறு மஜீதை பலமுறை வேண்டிய போதிலும் அவர் அதற்கு உடன்படவில்லை. உலகில் பலவிடங்களிலும் கிலாஃபத்தை
ஒப்படைக்க பொருத்தமானவரை தேடி யலைந்தேன். இதற்கு தகுதி பெற்றவர்கள் எவரும் கிடைக்கவில்லை. இதற்கு தகுதியானவராக மஜீத் மாத்திரமே உள்ளார். எனது ஷெய்குனா குத்ஃபுல் அக்தாஃப் ஜலாலுதீன் ஷெய்குனா அறிவித்த படியும் குத்ஃபுல் மஜீத் ஷாஹுல் ஹமீத் நாகூரி றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் அறிவித்தல் படியும் இன்னும் பல குத்ஃபுமார்களின் அறிவித்தல் படியும் மஜீதே காட்டிச் சொன்ன படியாலும். ஒரு ஷெய்குக்கு இருக்கும் அதிகாரத்தை கொண்டு பலாத்காரமாக மஜீதுக்கு கிலாஃபத்தை வழங்கியுள்ளேன். இவர் மாத்திரமே கலீஃபாவாகவும் எனக்குப் பின் எனது லௌகீக, ஆத்மீக வாரிஸாகவும் விளங்குவார். ஏழு வருடங்களாக மன வேதனையுடனும் துன்பப்பட்டுக்கொண்டிருந்தேன். இன்று தான் துன்பத்திற்கான தீர்வு கிடைத்திருக்கின்றது.

எனது உடல் நோய்வாய்ப்பட்டிருக்கலாம். ஆனால் எனது மூளை நோய்வாய்ப்பட்டிருக்கவில்லை. மிகத்தெளிவாக இருக்கின்றேன். என்னிடம் எவை எவைகளுக்காக யார் யாரோ வந்தார்கள். அவர்களின் தேவைகள் எல்லாவற்றையும் அவர்களின் மேலாக எதிர்பார்ப்புகளுக்கு நிறைவேற்றியுள்ளேன். அதற்கு நீங்களே சாட்சி எனக்காக வந்தவர் மஜீத் மாத்திரமே! அவர் எனக்குச் செய்த உதவிக்கு என்னால் பிரதியுபகாரம் செய்ய முடியவில்லை. அதற்காக மஜீதுக்கு அல்லாஹ் வாரிவழங்க போதுமானவன்!

28 வருடமாக மஜீதை சோதித்தும் துன்பப்படுத்தியும் பலர் மத்தியில் ஏசியும் அவமானப்படுத்தியுள்ளேன். பொறுமையோடு அத்தனையும் சகித்து என்னோடு இதுவரை இருந்து வந்துள்ளார். அவரை ஏசியது போல் உங்களில் எவரையாவது ஏசியிருந்தால் 10 நிமிடம் கூட எவரும் என்னோடு இருக்கமாட்டீர்கள். அந்தளவு மிக கடுமையாக நடந்து கொண்டேன்.

ஆத்மீக கிலாபஃத் மாற்றமென்றால் இயற்கையையும் பிரபஞ்சத்தையும் ஆதிக்கம் செலுத்தி நிற்றலாகும். இஸ்லாமிய ஆன்மீக கிலாஃபத்தின் மாற்றங்களின் போது இயற்கை அனர்த்தம் ஏற்பட்டு வந்திருக்கின்றன. என் கிலாஃபத்தின் போது எனது ஊரான அந்தரோத் தீவு நாலடி நீரால் மூழ்கியது. இந்நிகழ்வின் பின் பலவிடங்கள் நீரால் மூழ்கும். நம் பிள்ளைகள் நம்மை சார்ந்தோர் பாதுகாக்கப்படும். அரசியல், பொருளாதார, பண்பாட்டு கலாசார, வானிலை, காலநிலை, புவியியல் போன்ற பல மாற்றங்கள் இதன் பின் உலகில் நிகழும். இவ்வாறான இன்னோரன்ன விடயங்களை பேசி உரையை நிறைவு செய்து விருந்துபசாரம் அனைவருக்கும் வழங்கி கௌரவித்தனர்.

இலங்கையர் ஒருவர் வெளிநாட்டொன்றுக்கு அழைத்து ஆத்மீக கிலாஃபத் வழங்கி சிறப்பிக்கப்பட்டது இதுவே இலங்கையில் முதல் நிகழ்வாக உள்ளதால் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக என்றும் எடுத்தாளப்படும் என்பதில் எவ்வித ஐயத்திற்குமிடமில்லை.

இப்புனித இஸ்லாமிய தரீக்கா மரபியல் கிலாஃபத்தை ஞாபகப்படுத்து முகமாகவே இக்கொடியேற்ற வைபவம் வருடா வருடம் நடைபெற்று வருகின்றது. இவ்வருட இருபதாவது ஆண்டு நிறைவும் 21வது ஆண்டு கிலாஃபத் கொடியேற்றத்தில் கலந்து அருள்பெற்றேகுமாறு வினயமாக அழைக்கின்றோம்.

'நன்றி'

السلام عليكم ورحمه الله وبركاته              *ஜனாஸா_அறிவித்தல்* இலங்கை நாட்டில் அதிகமான அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் ஆலிம்...
05/11/2025

السلام عليكم ورحمه الله وبركاته
*ஜனாஸா_அறிவித்தல்*

இலங்கை நாட்டில் அதிகமான அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் ஆலிம்களை உருவாக்கிய இந்தியா நாட்டைச் சேர்ந்த சங்கைக்கும் பெரும் மரியாதைக்குமுரிய அல்ஆலிமுல் பாழில் *நூருல்_உலமா அல்உஸ்தாத் ானுல்லாஹ்_நூரி_ஹழ்ரத்_கிப்லா* பெருந்தகை அவர்கள் இவ்வுலகை விட்டும் பிரிந்து விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.

🌹🌹இவர் 5 சேகு மார்களை நேரடியாக பார்த்தவர்🌹🌹

1. குத்புனா ஷாஹ் முஹம்மது அப்துல் காதிர் ஷுபி ஹைதரபாதி ஹத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ் அவர்கள்
2. குத்புனா ஷாஹ் முஹம்மது கூத்தாரி (ரஹ்) அவர்கள்
3. குத்புனா முஹம்மது ஜலாலுதீன் (ரஹ்) அவர்கள்
4. குத்புனா ஹல்லாஜ் மன்ஸுர் (ரஹ்) அவர்கள்.
5. குத்புனா அப்துல் மஜீத் மக்கத்தார் (ரஹ்) அவர்கள்

❤️கலீபத்துல் ஹல்லாஜ்_ _அஸ்ஸெய்யித் அஷ்ஷெய்க் அல் குத்ப் அப்துல் மஜீத் மக்கத்தார் (ரஹ்) ❤️ அவர்களின் தலைமையில்❤️குவலயம் ப...
26/09/2025

❤️கலீபத்துல் ஹல்லாஜ்_ _அஸ்ஸெய்யித் அஷ்ஷெய்க் அல் குத்ப் அப்துல் மஜீத் மக்கத்தார் (ரஹ்) ❤️ அவர்களின் தலைமையில்

❤️குவலயம் போற்றும் குருநாதர் விலாயத்தின் அரசர் ஷேஹ் முஹ்யித்தீன்_அப்துல்_காதிர்_ஜீலானி கத்தஸல்லாஹூ_சிர்ரஹூல்_அஸீஸ் நாயகம்❤️ அன்னவர்களின் கொடி ஏற்றம்

புதன் கிழமை (2025.09.24)
அஸருக்கு பின் ஸாவியத்துல் ஹல்லஜியா (பஸ்லூன் உம்மா பள்ளி) வாசலில் கொடி ஏற்றப்பட்டது

❤️கலீபத்துல் ஹல்லாஜ்_ _அஸ்ஸெய்யித் அஷ்ஷெய்க் அல் குத்ப் அப்துல் மஜீத் மக்கத்தார் (ரஹ்)  அவர்களின் தலைமையில்❤️🌹🌹ஹிழுர் (அ...
15/09/2025

❤️கலீபத்துல் ஹல்லாஜ்_ _அஸ்ஸெய்யித் அஷ்ஷெய்க் அல் குத்ப் அப்துல் மஜீத் மக்கத்தார் (ரஹ்) அவர்களின் தலைமையில்❤️

🌹🌹ஹிழுர் (அலை) அவர்களின் கொடி ஏற்றமும்
🌹🌹ஹிழுருல் வாஹிதிய்யா குர் ஆன் மத்ரஸா ஆரம்பமும்

✅️ இடம் :- ஹிழுர் நகர்
✅️காலம் :- 2025.09.15

Address

Hallaj Road Akkaraipattu 01
Akkaraipattu
32400

Alerts

Be the first to know and let us send you an email when Hallaj Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category